search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்சரிக்கை"

    நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    பொன்னேரி:

    பொன்னேரி வருவாய் கோட்டத்தில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.

    அப்போது, மக்கள் நேரடியாக கலெக்டரிடம் மனு அளித்து, அதற்கான தீர்வுகளை உடனடியாக பெற்று கொள்ள வலியுறுத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட மனுதாரர்கள், தங்களது குறைகளை மனுவாக அளித்தனர்.

    இதில் பெரும்பாலான மனுக்களுக்கு அங்கேயே தீர்வு காணப்பட்டது. மேலும், பயனாளிகளுக்கு பட்டா மற்றும் விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் மகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தாலோ, நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

    இந்த முகாமில் பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார் தாசில்தார்கள் புகழேந்தி சுரேஷ்குமார், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    புதுவையில் மழை பெய்து வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    கஜா புயலையொட்டி புதுவையில் கடந்த 15-ந்தேதி முதல் மழை கொட்டியது. புயல் கரையை கடந்த 15-ந்தேதி இரவு முதல் 16-ந்தேதி காலை வரை 6.5 செ.மீ. மழை பதிவானது.

    இந்நிலையில் மீண்டும் வங்கக்கடலில் தென் கிழக்கில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்மேற்கு பகுதிக்கு நகர்ந்துள்ளது. இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம் என்பதால் புதுவை, காரைக்காலில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது.

    இதன்படி புதுவையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 12 மணிக்கு மேல் மழை கொட்டி தீர்த்தது. நேற்று இரவும் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது.

    இன்று காலை முதல் வானம் கருத்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான தூறலுடன் மழை பெய்து வருகிறது. இன்று மாலை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களிடம் கேரள போலீசார் கெடுபிடி செய்தது தொடர்பாக கேரள ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. #SabarimalaProtest #KeralaHighCourt #Police
    கொச்சி:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களிடம் கேரள போலீசார் கெடுபிடி செய்து வருகிறார்கள். அதை எதிர்த்து போராட்டம் நடத்திய 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, கேரள ஐகோர்ட்டில் நீதிபதிகள் ராமச்சந்திர மேனன், அனில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, 144 தடை உத்தரவை மீறியதால், போலீசார் நடவடிக்கை எடுத்ததாக அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். அதை ஏற்காத நீதிபதிகள், போலீசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.



    அவர்கள் கூறியதாவது:-

    எந்த அதிகாரத்தின் கீழ், பக்தர்கள் சன்னிதானத்துக்குள் நுழைவதை போலீஸ் தடுக்கிறது? தரையில் தண்ணீரை ஊற்றி பக்தர்களுக்கு இடையூறு செய்யுமாறு யார் சொன்னது? இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், போலீஸ் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்.

    அங்கு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் பட்டியலையும், அவர்களின் செயலையும் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். கட்டுப்பாடுகள் விவரத்தை டி.ஜி.பி. தெரிவிக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது. உண்மையான பக்தர்களை வழிபட அனுமதிக்க வேண்டும். நெய் அபிஷேகத்துக்கு டிக்கெட் எடுத்த பக்தர்கள், இரவில் தங்கி இருந்து பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    அடுத்தகட்ட விசாரணை, 23-ந் தேதி நடக்கிறது. 
    காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்தால் வேறு விதமான பதிலடி தரப்படும் என்று பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி பிபின் ராவத் கடும் எச்சரிக்கை விடுத்தார். #ArmyChief #BipinRawat
    புதுடெல்லி:

    காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரும் விதமாக பாதுகாப்பு படையினர் மீது இளைஞர்கள் தினமும் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த கல்வீச்சில் 22 வயது ராஜேந்திர சிங் என்னும் படை வீரர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதையடுத்து ராணுவ தளபதி பிபின் ராவத் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இப்படி கல்வீசி தாக்குதல் நடத்துவதால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. இதுபோல் தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்வீச்சில் ஈடுபடுவோர் மீது ராணுவம் வழக்கும் பதிவு செய்யும்.

    அதேபோல் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதை இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்) நிறுத்திக்கொள்ளவேண்டும். 1971-ம் ஆண்டு நம்மிடம் போரில் தோற்றதன் காரணமாக நமது அண்டை நாடு தொடர்ந்து பனிப்போரில் ஈடுபட்டு வருகிறது.


    சட்ட ரீதியாக காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம். அதை யாரும் எடுத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம்.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவலை பாகிஸ்தான் ஆதரிக்கிறது. அதை நாமும் முறியடிக்கிறோம். அதேநேரம் பாகிஸ்தான் தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வந்தால் வேறு விதமான பதிலடி தரவேண்டியது வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் அது எந்த மாதிரியான நடவடிக்கையாக அமையும் என்பது பற்றி ராணுவ தளபதி நேரடியாக குறிப்பிடவில்லை.

    எனினும் 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து நடத்திய துல்லிய தாக்குதல் நடத்தியது போன்ற நடவடிக்கையாக அது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. #ArmyChief #BipinRawat

    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காவிட்டால், அவர்களை பொறுப்பேற்க வைப்போம் என அமெரிக்க வெளியுறவு மந்திரி கூறியுள்ளார். #Pakistan # MikePompeo
    வாஷிங்டன்:

    பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. பயங்கரவாதிகளை அந்த நாடு பாரபட்சமின்றி ஒடுக்குவதில்லை. இது குறித்து அமெரிக்கா, பல முறை சுட்டிக்காட்டியும், பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடும் அதிருப்தியில் உள்ளது.இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி     வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், “பாகிஸ்தான் தனது மேற்கு எல்லையில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காவிட்டால், அவர்களை பொறுப்பேற்க வைப்போம். கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் சென்று, அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கானை சந்தித்துப் பேசியபோது, இதை தெளிவுபடுத்தினேன்” என்று குறிப்பிட்டார்.

    “தெற்கு ஆசியாவுக்கும், மத்திய ஆசியாவுக்குமான அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்பதையும் பாகிஸ்தான் பிரதமரிடம் தெளிவுபடுத்தி விட்டேன். மேற்கு எல்லையில் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளேன்” என்றும் மைக் பாம்பியோ கூறினார்.

    மேலும், “எல்லா பயங்கரவாதிகளையும் பாரபட்சம் இல்லாத வகையில் ஒழித்துக்கட்ட பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரையில், அந்த நாட்டுக்கான நிதி உதவியை நிறுத்தி வைக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவில் மாற்றம் இல்லை” எனவும் மைக் பாம்பியோ கூறினார். 
    சீன பட்டாசுகளை விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். #ADMK #TNMinister #KCKaruppannan #ChinaCrackers
    அந்தியூர்:

    தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் அந்தியூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க பெருவாரியான இடத்தில் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் செயல்படுவது எப்படி என்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையை புகையில்லா தீபாவளியாக கொண்டாட அனைத்து நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. சீன பட்டாசுகளை அரசு கட்டுப்படுத்தியிருக்கிறது. தெரியாமல் யாரும் விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னையை பொருத்தவரை நடமாடும் காற்று கண்காணிப்பு மையம் உள்ளது. இதன் மூலம் மாசு மற்றும் புகையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும், அரசு சார்பில் விபத்தில்லா தீபாவளிக்காக கொடுக்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்களுக்கு இது குறித்து தொடர்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #KCKaruppannan #ChinaCrackers
    இந்தியா எங்கள் நாட்டின் மீது ஒரு முறை துல்லிய தாக்குதல் நடத்தினாலும் பதிலுக்கு 10 துல்லிய தாக்குதல்கள் நடத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. #PakistanWarns #SurgicalStrikes
    இஸ்லாமாபாத்:

    பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 30ந்தேதி வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசும்பொழுது, நமது நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சி சூழலுக்கும் பங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளில் யார் இறங்குகிறார்களோ, நமது ராணுவத்தினர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பார்கள் என பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.

    இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி குவாமர் ஜாவித் பஜ்வா பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  அவருடன் சென்றுள்ள அந்நாட்டு ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரியான ஆசிப் கபூர் லண்டன் நகரில் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, பாகிஸ்தான் மீது இந்தியா ஒரு முறை துல்லிய தாக்குதல் நடத்தினாலும் பதிலுக்கு 10 துல்லிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று கூறினார்.

    எங்களுக்கு எதிராக செயல்படலாம் என நினைக்கும் எவருக்கும், எங்களின் வலிமை மீது சந்தேகம் வர வேண்டாம் என்றும் அவர்  கூறினார்.

    நாட்டில் ஜனநாயகத்தினை வலுப்படுத்த ராணுவம் விரும்பியது. பாகிஸ்தானின் வரலாற்றில் பொதுத் தேர்தல் மிக வெளிப்படையாக நடந்தது என அவர் கூறினார்.

    தொடர்ந்து, ஊடகங்களுக்கு கட்டுப்பாடு என்ற தகவல்களை மறுத்துள்ள கபூர், ‘நாட்டில் அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் மோசம் நிறைந்த விசயங்களை விட பல நல்ல முன்னேற்றங்கள் உள்ளன. இந்த விசயங்களையும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக் காட்ட வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். #PakistanWarns #SurgicalStrikes
    கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக நிர்வாகிகளுக்கு மேலிட பார்வையாளர் சஞ்சய் தத் எச்சரிக்கை விடுத்துள்ளார். #Congress
    கரூர்:

    கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம் கரூரில் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டம் தொடங்கியதும் சஞ்சய்தத், மாவட்ட தலைவர் சின்னசாமி, பேங்க் சுப்பிரமணி, ஸ்டீபன் பாபு ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென கீழே இருந்த சில நிர்வாகிகள் ஆளுக்கொரு நாற்காலியை தூக்கி கொண்டு மேடை நோக்கி வந்தனர். இதற்கு மேடையில் இருந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து நிர்வாகிகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ந்த சஞ்சய்தத் அனைவரையும் அமைதி காக்கும்படி எச்சரித்தார். ஆனால் கூச்சல் நின்ற பாடில்லை. இதனால் வெறுத்து போனஅவர் நானே கீழே போய் அமருகிறேன் என பார்வையாளர் இருக்கையில் விறுவிறுவென சென்று உட்கார்ந்துவிட்டார்.

    இதனை சற்றும் எதிர்பாராத நிர்வாகிகள் வேறு வழி தெரியாமல் நாற்காலிகளை அங்கேயே போட்டுவிட்டு நேராக சஞ்சய்தத்தின் பின்னால் போய் இடம் பிடித்தனர். பின்னர் சஞ்சய்தத், மைக்கில் பேசுபவர்கள் மட்டும் ஒவ்வொருவராக மேடை ஏறி பேசுங்கள் என்றார். பின்னர் ராகுல் பாணியில் தன்னந்தனியாக பேசி சென்றனர்.

    அதன்பின்னர் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் பேசும்போது, 50 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியாத சூழலில் இருக்கிறோமே என்கிற கவலை வேண்டாமா? இதை விடுத்து மேடையில் உட்காருவதற்காக போட்டி போடலாமா என சாடினார். மேலும் கட்சி கட்டுப்பாட்டினை மீறி ஒழுக்கக்கேடாக நடப்பவர்கள் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்புவேன் என எச்சரித்தார்.

    பின்னர் நிருபர்களிடம் சஞ்சய்தத் கூறும்போது, 2014 தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை கூட மோடி நிறைவேற்றவில்லை. நடைபெற இருக்கும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இனி நமக்கு ஏறுமுகம் தான் என மகிழ்ச்சி தெரிவித்தார்.  #Congress

    விலைவாசி உயர்வை விரைவில் கட்டுப்படுத்தாவிட்டால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும் என ராம்தேவ் எச்சரிக்கை விடுத்து உள்ளார். #Ramdev #FuelPriceHike
    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற யோகா குரு ராம்தேவ், இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-

    மோடி அரசின் கொள்கைகளை ஏராளமானோர் பாராட்டி உள்ளனர். ஆனால் சில கொள்கைகளை திருத்தியமைக்க வேண்டிய தேவை இருக்கிறது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் விலைவாசி, மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது. எனவே இதை மோடி உடனடியாக சரிசெய்ய வேண்டும்.



    பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை உடனே தொடங்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து, அதற்கு குறைவான வரி விதிக்க வேண்டும்.

    இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறினால் மோடி அரசு மிகப்பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும்.

    நான் வலதுசாரியும் இல்லை, இடதுசாரியும் இல்லை. மாறாக ஒரு நடுநிலைவாதி. வலுவான தேசியவாதியும் கூட. முக்கியமான பிரச்சினைகள் பலவற்றில் நான் மவுனம் சாதித்ததால், நான் யாருக்கும் தேவையில்லை.

    2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். ஆனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்யப்போவது இல்லை. அரசியலில் இருந்து விலகிவிட்டேன். அனைத்து கட்சிகளுடனும் நான் இருக்கிறேன். நான் சுதந்திரமாக இருக்கிறேன்.

    ‘தூய்மை இந்தியா’ போன்ற திட்டங்களை செயல்படுத்தியும், பெரிய ஊழல் எதுவும் நடக்க அனுமதிக்காமலும் பிரதமர் மோடி சிறப்பாக செயலாற்றுகிறார். எனினும் அவரை விமர்சிப்பது மக்களின் அடிப்படை உரிமை ஆகும்.

    இவ்வாறு ராம்தேவ் கூறினார். #Ramdev #FuelPriceHike
    திருவாரூர் மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
    திருவாரூர்:

    வடகிழக்கு பருவமழை முன்ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க பயன்படுத்தப்படும் “வயர்லெஸ்” கருவிகளை போலீசார் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம் ஆகும். தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏற்ற பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், சமுதாய கூடங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    ஆறுகளில் நீர் வரத்தை கண்காணிக்க அந்தந்த பகுதிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். இந்த கட்டுப்பாட்டு அறையில் அனைத்து தகவல் தொடர்பு கருவிகளையும் வைத்திருக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் நீர்வரத்து, வெளியேற்றப்படும் நீர் அளவு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆறுகள், வாய்க்கால் கரைகளின் உடைப்பு ஏற்பட்டால் அதனை அடைப்பதற்கு போதுமான மணல் மூட்டைகளை தயாராக வைத்திருக்க வேண்டும்.

    திருவாரூர் மாவட்டத்தில் 214 தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டு அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மண்டல அளவில், வட்டார அளவில் அலுவலர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
    அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதிகளில் நாளை கடுமையான புயல் தாக்கும் என அந்நாட்டு சூறாவளி ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #US
    நியூயார்க்:

    உலகின் பல்வேறு பகுதியில் சமீப காலங்களில் அதிக அளவில் நில நடுக்கங்களும், சூறாவளி, கனமழை என தாக்கிய வண்ணம் உள்ளன. அதன் படி, தென்கிழக்கு அமெரிக்காவை நாளை ஒரு சக்தி வாய்ந்த புயல் தாக்க உள்ளதாக தேசிய புயல் ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த எச்சரிக்கையில், நாளை ஃப்ளோரென்ஸ் பகுதியை இந்த புயல் கடுமையாக தாக்க உள்ளதாகவும், அதையடுத்து, பெர்முடா பகுதி வழியே நகர்ந்து வியாழனன்று வடகிழக்கு அமெரிக்க கடற்பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

    இதையடுத்து, ஃப்ளோரென்ஸ் மற்றும் புயலால் பாதிக்கும் என கணிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேசிய மீட்பு படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. #US
    தாஜ்மகால் அழிந்து போய்விட்டால் அதை பாதுகாப்பதற்கு அதிகாரிகளுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எச்சரித்தனர். #TajMahal #SupremeCourt
    புதுடெல்லி:

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை பாதுகாப்பது குறித்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகுர், அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தாஜ்மகால் அழிந்து போய்விட்டால் அதை பாதுகாப்பதற்கு அதிகாரிகளுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என எச்சரித்தனர்.



    “தாஜ்மகாலை பாதுகாப்பதற்கான பல்வேறு விஷயங்களை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்; பசுமை திட்டத்தின் கீழ் கொண்டு வருதல், தாஜ்மகால் பகுதியில் இயங்கிவரும் தொழிற்சாலைகள், ஓட்டல்கள், உணவுவிடுதிகள் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிட்டனர். உத்தரபிரதேச மாநில அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வக்கீல் ஐஸ்வர்யா பதி ஆகியோர் வாதிடும்போது, “ தாஜ்மகால் பாதுகாப்பு குறித்த தொலைநோக்கு ஆவணத்தை டெல்லியில் உள்ள திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை கல்லூரி தயாரித்து வருகிறது. அனைத்து பிரச்சினைகளையும் உள்ளடக்கிய விரிவான திட்டத்தையும் அவர்கள் பரிசீலித்து வருகின்றனர்” என குறிப்பிட்டார்.

    மத்திய அரசின் சார்பில் ஆஜரான மற்றொரு சொலிசிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ். நட்கர்னி வாதிடும்போது, “சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, ஆகா கான் பவுண்டேசன், கலை மற்றும் கலாசாரத்துக்கான இந்திய தேசிய அறக்கட்டளை, நினைவுச்சின்னங்கள், தலங்களுக்கான சர்வதேச கவுன்சில் போன்ற நிபுணத்துவம் வாய்ந்த அமைப்புகளிடம் இருந்து தாஜ்மகால் பாதுகாப்புக்கு ஆலோசனைகள் பெறப்பட்டு உள்ளன. தாஜ்மகால் அமைந்து உள்ள ஆக்ரா நகரத்தை கலாசார நகரமாக அறிவிப்பது குறித்து ஒரு திட்டம் தீட்டி அனுப்புமாறு உத்தரபிரதேச மாநில அரசை கேட்டு இருக்கிறோம்” என குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நீதிபதிகள் அடுத்த மாதம் 25-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #TajMahal #SupremeCourt 
    ×