என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 103517
நீங்கள் தேடியது "பஞ்சாப்"
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரின் அருகே இன்று ராவணன் கொடும்பாவி எரிப்பை வேடிக்கை பார்த்தவர்கள் மீது ரெயில் மோதிய விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். #Dussehra #Amritsar #TrainAccident
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய பொற்கோயில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரின் அருகேயுள்ள சவுரா பஜார் பகுதியில் இன்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.
இவ்விழாவின் இறுதிக்கட்டமாக ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டது. பல அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ராவணன் கொடும்பாவி கொளுந்துவிட்டு எரியும் காட்சியை மூடப்பட்டிருந்த 27-ம் எண் ரெயில்வே கேட்டின் தண்டவாளத்தின் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்தனர்.
அப்போது, அந்த தண்டவாளத்தின் வழியாக இரு ரெயில்கள் எதிர் எதிர் திசையில் வந்தன. உற்சாக மிகுதியில் இருந்த மக்கள் சுதாரித்து கொள்வதற்குள் ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற ரெயில் மக்கள் கூட்டத்தின்மீது மோதியது.
இந்த கோர விபத்தில் 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அமிர்தசரஸ் நகர துணை மாஜிஸ்திரேட் ராஜேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்த அசம்பாவிதத்துக்கு தசரா விழா குழுவினரின் அஜாக்கிரதையே காரணம் என கூறப்படுகிறது. அந்த பகுதியை கடந்துபோகும் போது ரெயிலின் வேகத்தை குறைக்குமாறு அவர்கள் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட ரெயில் நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்திருக்க வேண்டும். அல்லது, ரெயில் வரும் நேரம் தொடர்பாக அங்கு குழுமி இருந்த மக்களிடம் ஒலிபெருக்கி மூலமாக எச்சரித்திருக்க வேண்டும் என சிலர் கருதுகின்றனர்.
இந்த விழாவை காங்கிரஸ் கட்சியினர்தான் நடத்தினார்கள். நவ்ஜோத் சித்துவின் மனைவி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார். மக்கள் ரெயிலில் அடிபட்டு இறந்தும்கூட அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். எனவே, இந்த விபத்துக்கு காங்கிரஸ் கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும் என இன்னொரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.
சுமார் 50 உயிர்களை பறித்த இந்த கோர விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #Dussehra #Amritsar #TrainAccident
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ரெயில் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #FarmersProtest #Punjab
சண்டிகர்:
நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் ரெயில்வே போலீசார் முயற்சித்து வருகின்றனர். #FarmersProtest #Punjab
நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் படாலா பகுதியில் உள்ள ரெயில்வே பாதையை ஆக்கிரமித்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்க்கரை ஆலைகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் ரெயில்வே போலீசார் முயற்சித்து வருகின்றனர். #FarmersProtest #Punjab
லஞ்சம் கொடுப்பதிலும், வாங்குவதிலும் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 52 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர். #TamilnaduCorruption
புதுடெல்லி:
இந்தியாவில் எந்த மாநிலத்தில் லஞ்சம், ஊழல் அதிகமாக உள்ளது என்று சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
வடகிழக்கு மாநிலங்கள் சிக்கிம், காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர், மாநிலங்கள் தவிர 15 மாநிலங்களில் மட்டும் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்தியாவில் லஞ்சம் அதிகமாக வாங்கப்படும் உத்தரபிரதேச மாநிலத்தில் சொத்துப்பதிவு, வரித்துறை, போக்குவரத்து, மின்சாரத்துறை போன்றவைகளில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் 59 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
லஞ்சம் கொடுப்பதிலும், வாங்குவதிலும் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 52 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் சொத்துப்பதிவுக்கு தான் அதிகம் லஞ்சம் பெறப்படுவது தெரியவந்துள்ளது.
போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது தேசிய அளவில் குறைந்து இருப்பது சர்வேயில் தெரியவந்துள்ளது. அதே சமயத்தில் சொத்துப்பதிவுக்காக லஞ்சம் வாங்குவது பலமடங்கு அதிகரித்து விட்டது.
2017-ல் காவல்துறையினர் லஞ்சம் பெறுவது 30 சதவீதமாக இருந்தது. அது 25 சதவீதமாக குறைந்துவிட்டது. ஆனால் சொத்து பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் எண்ணிக்கை 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்ந்து இருப்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. #TamilnaduCorruption
இந்தியாவில் எந்த மாநிலத்தில் லஞ்சம், ஊழல் அதிகமாக உள்ளது என்று சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
வடகிழக்கு மாநிலங்கள் சிக்கிம், காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர், மாநிலங்கள் தவிர 15 மாநிலங்களில் மட்டும் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்தியாவில் லஞ்சம் அதிகமாக வாங்கப்படும் உத்தரபிரதேச மாநிலத்தில் சொத்துப்பதிவு, வரித்துறை, போக்குவரத்து, மின்சாரத்துறை போன்றவைகளில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் 59 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 56 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்த பிறகே தங்களுக்கு வேலைகள் முடித்துத் தரப்படுவதாக கூறியுள்ளனர். பஞ்சாப்பில் போலீசாருக்கு தான் அதிகம் லஞ்சம் கொடுக்க வேண்டி இருப்பதாக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர்.
போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது தேசிய அளவில் குறைந்து இருப்பது சர்வேயில் தெரியவந்துள்ளது. அதே சமயத்தில் சொத்துப்பதிவுக்காக லஞ்சம் வாங்குவது பலமடங்கு அதிகரித்து விட்டது.
2017-ல் காவல்துறையினர் லஞ்சம் பெறுவது 30 சதவீதமாக இருந்தது. அது 25 சதவீதமாக குறைந்துவிட்டது. ஆனால் சொத்து பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் எண்ணிக்கை 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்ந்து இருப்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. #TamilnaduCorruption
பஞ்சாப் முன்னாள் துணை முதல் மந்திரி சுக்பீர் சிங் பாதல் சென்ற வாகனத்தின் மீது அதிருப்தியாளர்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. #SukhbirSinghBadal
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் துணை முதல் மந்திரியாக பதவி வகித்தவர் சுக்பீர் சிங் பாதல். சிரோண்மணி அகாலி தளம் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் நேற்று நன்கியானா சாஹிப் குருத்வாராவுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது பாதுகாப்பு வாகனத்தை அதிருப்தியாளர்கள் சிலர் சூழ்ந்தனர். அவர்கள் சுக்பீர் சிங் பாதலுக்கு கருப்பு கொடி காட்டினர். அதில் ஒருவர் சுக்பீர் சிங் பாதல் இருந்த வாகனத்தின் மீது ஷூவையும், கல்லையும் எறிந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதலுக்கு சிரோண்மணி அகாலி தளம் கண்டனம் தெரிவித்தது. போலீசார் உதவியுடன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியது.
முன்னாள் துணை முதல் மந்திரி சென்ற வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியது பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது. #SukhbirSinghBadal
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியினர் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். #Punjab #LocalBodyElection #Congress
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 22 ஜில்லா பரிஷத்களில் மொத்தமுள்ள 353 மண்டலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 331 இடங்களிலும், சிரோன்மனி அகாலிதளம் 18 இடங்களிலும், பாஜக மற்றும் பிற கட்சிகள் தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதேபோல், 150 பஞ்சாயத்து சமிதிகளில் மொத்தமுள்ள 2899 மண்டலங்களில் நடைபெற்ற தேர்தலுக்கு 2351 இடங்களில் காங்கிரசும், சிரோன்மனி அகாலி தளம் 353 இடங்களிலும், பாஜக 63 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தகவல்களை மாவட்ட தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது தொடர்பாக பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர் சிங் கூறுகையில், எங்களுக்கு வாக்களித்த வாக்காளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இந்த வெற்றி போய்ச்சேரும். விவசாயிகள் கடன் தள்ளுபடி, போதை மருந்துக்கு எதிரான நடவடிக்கை என அனைத்து விஷயங்களிலும் மக்கள் எங்களுக்கு உறுதுணையாக உள்ளனர் என்பதேயே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என தெரிவித்துள்ளார். #Punjab #LocalBodyElection #Congress
பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் காவல் நிலையத்தில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Blast
சண்டிகர் :
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் மக்சுடான் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. சுமார் மாலை 5 மணியளவில் இந்த காவல் நிலையத்தை குறிவைத்து சிலர் வெடிகுண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் போலீசார் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பயங்கரவாதிகள் தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். #Blast
பஞ்சாப்பில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். #WallaCollapse
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் லக்கன்பூர் கிராமத்தில் கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்தது. இன்று காலை 15க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென கட்டப்பட்ட சுவர் சரிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு அலறினர்.
இந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். மேலும் 5 தொழிலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் பலியான் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இம்ரான் கான், வரும் 18-ம் தேதி அந்நாட்டின் பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு இந்திய கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். #Pakistan #ImranKhan #NavjotSinghSidhu
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீப் இ இன்சாப் கட்சி பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வரும் 18-ம் தேதி பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதலில் பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பிறகு அந்த முடிவு மாற்றப்பட்டு, இம்ரான் கானின் முக்கிய நண்பர்களை மட்டுமே அழைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், கபில் தேவ் உள்ளிட்ட இந்திய வீரர்கள் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுபோக தனது நெருங்கிய நண்பர்களை இம்ரான் கான் தொலைப்பேசி மூலமும் அழைப்பு விடுத்து வருகிறார்.
அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தனிப்பட்ட முறையில் இம்ரான் கான் செல்போன் மூலம் அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. #Pakistan #ImranKhan #NavjotSinghSidhu
பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீப் இ இன்சாப் கட்சி பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வரும் 18-ம் தேதி பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதலில் பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பிறகு அந்த முடிவு மாற்றப்பட்டு, இம்ரான் கானின் முக்கிய நண்பர்களை மட்டுமே அழைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், கபில் தேவ் உள்ளிட்ட இந்திய வீரர்கள் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுபோக தனது நெருங்கிய நண்பர்களை இம்ரான் கான் தொலைப்பேசி மூலமும் அழைப்பு விடுத்து வருகிறார்.
அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தனிப்பட்ட முறையில் இம்ரான் கான் செல்போன் மூலம் அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. #Pakistan #ImranKhan #NavjotSinghSidhu
பஞ்சாப் மாநிலத்தில் ஓடும் ரெயிலின் முன் செல்பி எடுக்க முயன்ற இரு சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர். #SelfieinTrain
சண்டிகர் :
பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் - லூதியானா வழித்தடத்தில் கத்னா சாஹிப் ரெயில்வே பாலம் உள்ளது.
இன்று விடுமுறை என்பதால் நண்பர்களுடன் பொழுதை கழிக்க 3 சிறுவர்கள் இந்த ரெயில்வே பாலத்துக்கு வந்தனர். ஏழாம் வகுப்பு படிக்கும் அவர்கள் அந்த வழியாக வந்த ரெயில் முன் செல்பி எடுக்க முயற்சித்தனர்.
அப்போது, ராம்புரா மாவட்டத்தை சேர்ந்த யுவராஜ், கவுரவ் என்ற இரு சிறுவர்கள் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
செல்பி எடுக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு இரு சிறுவர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் டசுயா நகரத்தில் 5 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காந்திநகர்:
பஞ்சாப் மாநிலம் டசுயா நகரில் நேற்று இரவு 5 வய்து சிறுமி காணாமல் போனதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காலை அப்பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தின் அருகே சிறுமி இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மிகவும் மோசமான நிலையில் இருந்த சிறுமியை, டசுயா சிவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி ராஜேஷ் பக்காரி, சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் சண்டிகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் 5 வயது சிறுமியை கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் டசுயா நகரில் நேற்று இரவு 5 வய்து சிறுமி காணாமல் போனதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காலை அப்பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தின் அருகே சிறுமி இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மிகவும் மோசமான நிலையில் இருந்த சிறுமியை, டசுயா சிவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி ராஜேஷ் பக்காரி, சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் சண்டிகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் 5 வயது சிறுமியை கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் ஹெராயின் கடத்திய முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து சுமார் 74 கோடி ரூபாய் அளவிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. #Heroinceased
காந்திநகர்:
பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாக இந்தியாவுக்கு ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து காவல்துறையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சுமார் 14.8 கிலோ அளவிலான ஹெராயினை கடத்திய முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் போலீசார் வசம் சிக்கினர். இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், எல்லை பாதுகாப்பில் ஈடுபடும் வீரர் ஒருவர் தங்களுக்கு உதவி வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெராயினின் மதிப்பு சுமார் 74 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற போதைப்பொருட்கள் கடத்தல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #Heroinceased
பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாக இந்தியாவுக்கு ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து காவல்துறையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சுமார் 14.8 கிலோ அளவிலான ஹெராயினை கடத்திய முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் போலீசார் வசம் சிக்கினர். இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், எல்லை பாதுகாப்பில் ஈடுபடும் வீரர் ஒருவர் தங்களுக்கு உதவி வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெராயினின் மதிப்பு சுமார் 74 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற போதைப்பொருட்கள் கடத்தல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #Heroinceased
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலரை பைக்கிள் வந்த இரு மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Punjab #municipalcouncillor #shotdead #Amritsar
அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர் குர்தீப் பெஹல்வான். இவர் அமிர்தசரசில் உள்ள கோல் பாக் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் நேற்று நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த குர்தீப் பெஹல்வானை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மீது 7 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடி வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு ஜக்கு பாக்வான் பூரியா என்ற ரவுடிக்கும், கவுன்சிலருக்கும் இடையேயான முன்விரோதம் காரணமாக இருக்காலாம் என போலீசார் தெரிவித்துள்ளது.
ஜக்கு பாக்வான் பூரியா தற்போது அமிர்தசரஸ் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். மாநகராட்சி கவுன்சிலர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Punjab #municipalcouncillor #shotdead #Amritsar
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X