search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாப்"

    ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன் என்பதற்கு கேப்டன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.#IPL2018 #kxip #Ashwin
    புனே:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனேயில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை தோற்கடித்தது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் (0), லோகேஷ் ராகுல் (7 ரன்) சோபிக்காத நிலையில் கருண் நாயர் அரைசதம் அடித்து (54 ரன், 3 பவுண்டரி, 5 சிக்சர்) சரிவில் இருந்து காப்பாற்றினார். பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 153 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

    அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து 9-வது வெற்றியை ருசித்தது. துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா 61 ரன்களுடனும், கேப்டன் டோனி 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை அணியை 100 ரன்களுக்குள் மடக்கினால் மட்டுமே பிளே-ஆப் சுற்று வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் பஞ்சாப் அணி தோல்வியுடன் (மொத்தம் 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளி) பரிதாபமாக வெளியேறியது.

    தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறியதாவது:-

    இந்த ஆட்டத்தில் எங்களது பேட்டிங் சரியில்லை. ‘பவர்-பிளே’யிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. கருண் நாயர் நன்றாக ஆடினாலும் 20 முதல் 30 ரன்கள் குறைவாகவே எடுத்து விட்டோம். ஏப்ரல் மாதத்தில் நாங்கள் ஓரளவு சிறப்பாக விளையாடினோம். ஆனால் மே மாதம் (கடைசி 7 ஆட்டங்களில் 6-ல் தோல்வி) மோசமாக அமைந்து விட்டது.

    இந்த தொடரை எடுத்துக் கொண்டால் தொடக்க கட்ட லீக் ஆட்டங்களில் அபாரமாக ஆடினோம். ஆனால் பிற்பகுதியில் ஒருங்கிணைந்த ஆட்டம் இல்லாமல் போய் விட்டது. தொடக்க வீரர்கள் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் மட்டுமே அணியில் கணிசமான ரன்களை குவித்து இருக்கிறார்கள். மிடில் வரிசை பேட்டிங் எதிர்பார்த்தபடி ‘கிளிக்’ ஆகவில்லை. அது தான் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

    இதே போல் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஏற்பட்ட மோசமான தோல்வி (88 ரன்னில் சுருண்டது) எங்களது முன்னேற்றத்தை கெடுத்து விட்டது என்று சொல்லலாம். அந்த தோல்வியால் ரன்ரேட் குறைந்ததோடு, வீரர்களின் மனஉறுதியும் வெகுவாக சீர்குலைந்து போனது.

    இவ்வாறு அஸ்வின் கூறினார். #IPL2018 #kxip #Ashwin
    பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்க மாகாண அரசு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. #Pakistan #KrishnaTemple
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் ரவல்பிந்தி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய இரு நகரங்களுக்கும் சேர்த்து ஒரே இந்து கோவிலாக கிருஷ்ணர் கோவில் இயங்கி வருகிறது. இந்த கோவில் 1897-ம் ஆண்டு கட்டப்பட்ட சிறிய கோவில் ஆகும். தற்போது இந்த கோவிலை புதுப்பிக்க அரசு முன்வந்துள்ளது.

    இதுதொடர்பாக அந்நாட்டின் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த அறக்கட்டளை சொத்து வாரியத்தின் முதன்மை நிர்வாகி முகமது ஆசிப் கூறுகையில், ‘கிருஷ்ணா கோவிலை புதுப்பிக்க வேண்டி, மாகாண சபை உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று, அரசு ரூ.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. கோவில் புணரமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், புதுப்பிக்கும் பணி நிறைவடைந்தவுடன், அதிக அளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வர இயலும் எனவும் குறிப்பிட்டுள்ளார். #Pakistan #KrishnaTemple 
    பஞ்சாப் மாநிலத்தில் முழுக்க பெண்களால் இயங்கும் முதல் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய மந்திரி விஜய் சம்ப்லா இன்று தொடங்கி வைத்தார். #PostOfficePassportSevaKendra

    சண்டீகர்:

    பஞ்சாப் மாநிலத்தின் பக்வாரா நகரில் தலைமை அஞ்சல் அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய மந்திரி விஜய் சம்ப்லா இன்று தொடங்கி வைத்துள்ளார்.

    நாட்டின் 192வது அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் ஆக செயல்படும் இதற்கு ஒரு சிறப்பம்சம் உள்ளது. இந்த சேவை மையம் முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்பட உள்ளது. இங்கு அனைத்து ஊழியர்களும் பெண்களாக பணியாற்றுகின்றனர்.  இதுபற்றி மந்திரி விஜய் சம்ப்லா கூறுகையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக இது இருக்கும் என கூறியுள்ளார்.



    இதுகுறித்து ஜலந்தர் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கில் கூறுகையில், பாஸ்போர்ட் துறையின் ஆய்வு அதிகாரி மாதுரி பவி தலைமையில் பக்வாரா மையம் இயங்கும்.  அஞ்சலக உதவியாளர்களாக இரு பெண்  ஊழியர்கள் செயல்படுவர் என கூறியுள்ளார்.  ஜலந்தர் அலுவலகத்தில் பாஸ்போர்ட்டுகள் பிரிண்ட் செய்யப்பட்டு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். #PostOfficePassportSevaKendra
    பஞ்சாப் மாநிலத்தில் கோவில் பணிகளை பார்வையிட சென்ற மந்திரி சித்து, மாடு முட்டுவதில் இருந்து அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். #Sidhu #BullAttack
    ஜெய்ப்பூர்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள துர்கை கோவிலில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பார்வையிட மாநில மந்திரி சித்து இன்று சென்றார். பணிகளை பார்வையிட்ட பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்.



    அப்போது கோவிலை நோக்கி ஒரு காளை மாடு தறிகெட்டு ஓடிவந்தது. இதைக்கண்டதும் செய்தியாளர்கள் மற்றும் மந்திரி சித்து அங்கிருந்து ஓடினர்.

    ஆனாலும் மாடு முட்டியதில் 2 செய்தியாளர்கள் லேசான காயமடைந்தனர். இந்த தாக்குதலில் மந்திரி சித்து அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Sidhu #BullAttack
    ஆப்கானிஸ்தான் - கஜகஸ்தான் எல்லைப்பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட 6.2 ரிக்டர் நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி, பஞ்சாப், அரியானா, காஷ்மீரிலும் நிலநடுக்கமும், நில அதிர்வும் உண்டானது. #DelhiEarthquake
    புதுடெல்லி:

    ஆப்கானிஸ்தான் - கஜகஸ்தான் எல்லைப்பகுதியில் இன்று மாலை சுமார் 4.15 மணியளவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி, பஞ்சாப், அரியானா, காஷ்மீர் மாநிலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் நிலநடுக்கமும், நில அதிர்வும் உண்டானது. இதனால் ஏற்பட்ட இழப்பு மற்றும் சேதம் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #DelhiEarthquake
    ×