search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ஜுன்"

    பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கத்தில் உருவாகி இருக்கும் குருஷேத்திரா படத்தின் டீசர் வெளியாகி இருக்கும் நிலையில், சினேகா இந்த படத்தில் திரவுபதியாக நடித்திருக்கிறார்.
    அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும் நடித்துள்ள குருஷேத்திரா என்ற கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மகாபாரத புராணத்தை அடிப்படையாக கொண்ட மெகா பட்ஜெட் படம் இது. 

    துரியோதணனை கதாநாயகனாக காட்டும் இந்த படத்தில் தர்‌ஷன் அந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும், வி.ரவிச்சந்திரன் கிருஷ்ணராகவும், அம்பரீஷ் பீஷ்மராகவும், சோனு சூத் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர். நிகில் குமார், பி.ரவி ஷங்கர், ஹரிப்பிரியபா, பாரதி விஷ்ணுவர்தன், மேக்னா ராஜ், பிரக்யா ஜெய்ஸ்வால், ரம்யா நம்பீசன், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


     
    பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கியிருக்கும் இந்த படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் ஹீரோ படத்தில் ஒரு முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க நடிகர் விவேக் ஒப்பந்தமாகி இருக்கிறார். #HERO #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர். லோக்கல் படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார்.

    இதில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா, கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்து தயாரிக்கின்றனர். `ஹீரோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அர்ஜூன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்கின்றனர்.



    இந்த நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காமெடி நடிகர் விவேக் ஒப்பந்தமாகி இருக்கிறார். அவருக்கு இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் மூலம் முதல்முறையாக சிவகார்த்திகேயன் - விவேக் கூட்டணி சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதவிர பாண்டிராஜ் இயக்கத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #HERO #Sivakarthikeyan #PSMithran #Vivekh

    விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொலைகாரன்’ படத்தின் தலைப்பை யார் தேர்வு செய்தார்கள் என்பதை இயக்குனர் கூறியிருக்கிறார். #Kolaigaran
    இசையமைப்பாளராக இருந்து முன்னணி நடிகராகி இருக்கும் விஜய் ஆண்டனி அடுத்து அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் படம் கொலை காரன். படம் பற்றி ஆண்ட்ரூ லூயிஸ் அளித்துள்ள பேட்டியில் ’நகரத்தில் அடுத்து அடுத்து கொடூரமான கொலைகள் நடக்கின்றன.

    கொலை வழக்கை காவல்துறை அதிகாரி அர்ஜுன் விசாரிக்கிறார். விஜய் ஆண்டனி தான் சைக்கோ கொலைகாரன் என்பது தெரிய வருகிறது. காரணம் என்ன? என்பதே கதை. கிரைம் திரில்லரான இது ஹாலிவுட் படத்துக்கு சவால் விடும் வகையில் திரைக்கதை இருக்கும். படம் பார்ப்பவர்கள் இதை உணர்வார்கள்.



    விஜய் ஆண்டனி படத்துக்கு முதன் முறையாக வெளி இசையமைப்பாளர் சைமன் இசையமைக்கிறார். பிஎஸ். வினோத்தின் உதவியாளர் முகேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஆஷிமா, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆஸ்திரேலியாவில் 2012ஆம் ஆண்டு இந்திய ஆஸ்திரேலிய அழகியாக தேர்வானவர். அங்கு பல அழகி போட்டிகளில் பட்டம் வென்றவர். இந்த டைட்டிலை விஜய் ஆண்டனிதான் தேர்வு செய்தார்’. இவ்வாறு அவர் கூறினார்.
    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் - அர்ஜூன் - கல்யாணி பிரியதர்ஷன் - இவானா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு `ஹீரோ' என்று தலைப்பு வைத்துள்ளனர். #SK15 #HERO #SK15ShootFromToday
    `மிஸ்டர்.லோக்கல்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார்.

    இதற்கிடையே சிவகார்த்திகேயனின் 15-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்த படத்திற்கு `ஹீரோ' என்று தலைப்பு வைத்துள்ளனர். 

    இந்த படத்தில் சிவகார்த்திகேனுடன் இணைந்து அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்க, ரோபோ சங்கர், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அரசியல் கலந்த த்ரில்லர் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். 

    24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா, கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்த இந்த படத்தை தயாரிக்கின்றனர். #SK15 #Sivakarthikeyan #PSMithran #KalyaniPriyadharsan #Ivana

    பி.எஸ்.மித்ரன் இயக்கும் எஸ்.கே.15 படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமான நிலையில், மற்றொரு நடிகையும் ஒப்பந்தமாகி இருக்கிறார். #SK15 #Sivakarthikeyan #KalyaniPriyadharsan
    `மிஸ்டர்.லோக்கல்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார். 

    அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அரசியல் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சிவகார்த்திகேயனின் 15-வது படமாக உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில், இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவானா ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் ஏற்கனவே நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவானாவின் பிறந்தநாளான இன்று இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அர்ஜூன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். #SK15 #Sivakarthikeyan #PSMithran #KalyaniPriyadharsan #Ivana

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே.15 படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி ஒப்பந்தமாகி இருக்கிறார். #SK15 #Sivakarthikeyan #KalyaniPriyadharsan
    `மிஸ்டர்.லோக்கல்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார். 

    அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அரசியல் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சிவகார்த்திகேயனின் 15-வது படமாக உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கவிருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். தற்போது அந்த தகவலை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி தமிழில் அறிமுகமாகிறார் என்று படக்குழு நேற்று அறிவித்தது.


    கல்யாணி பிரிதர்ஷன் ஹலோ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழில் `ரா' கார்த்திக் இயக்கத்தில் துல்கர் சல்மானுடன் `வான்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

    24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அர்ஜூன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். #SK15 #Sivakarthikeyan #PSMithran #KalyaniPriyadharsan

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே. 15 படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் ஒருவரின் மகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #SK15 #Sivakarthikeyan #PSMithran
    ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் `மிஸ்டர்.லோக்கல்' படத்தின் டீசர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளான நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசர் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்திருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

    சிவகார்த்திகேயன் தற்போது `மிஸ்டர்.லோக்கல்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இதுதவிர ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் ரவிக்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.



    அதேநேரத்தில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் எஸ்.கே.15 படப்பிடிப்பிலும் விரைவில் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் கல்யாணி நடிப்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கல்யாணி பிரியதர்ஷன் ஹலோ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழில் `ரா' கார்த்திக் இயக்கத்தில் துல்கர் சல்மானுடன் `வான்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

    24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கலந்த த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகுவதாக கூறப்படுகிறது. #SK15 #Sivakarthikeyan #PSMithran #KalyaniPriyadharsan

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே. 15 படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. #SK15 #Sivakarthikeyan #PSMithran
    சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ்.எம் இயக்கத்திலும், ரவிக்குமார் இயக்கத்திலும் பிசியாக நடித்து வருகிறார், இதில் ராஜேஷ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. படத்தை கோடையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கிடையே பாதியில் நிற்கும் ரவிக்குமாரின் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட படத்தை சிவகார்த்திகேயன் விரைவில் முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்த நிலையில், சிவகார்த்திகேயன் - பி.எஸ்.மித்ரன் இணையும் எஸ்.கே.15 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாவது பாதியில் துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

    24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கலந்த த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகுவதாக கூறப்படுகிறது. #SK15 #Sivakarthikeyan #PSMithran

    மீடூ இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கொடுத்த ஸ்ருதி ஹரிஹரன், என்னுடன் இணைந்து பணியாற்ற தயங்குகிறார்கள் என்று கூறியிருக்கிறார். #SruthiHariharan #MeToo
    நிபுணன் படத்தில் நடித்த போது படப்பிடிப்பு தளத்தில் தவறாக நடந்து கொண்டார் என அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் குற்றம் சாட்டினார். இதற்கு அர்ஜுன் மறுப்பு தெரிவித்ததோடு அவர் மீது வழக்கு தொடர்ந்தார். இதனால் ஸ்ருதி ஹரிஹரனுக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்துள்ளன.

    இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “இது என்னைக் காயப்படுத்தினாலும் பெருமை கொள்ளவும் செய்கிறது. நான் துன்பப்பட்டாலும் எதிர்காலத்தில் சில பெண்களாவது பயப்படாமல் துணிந்து பேசுவார்கள். இதை நடைமுறையில் எப்படி எதிர்கொள்வது என்பதைப் பார்க்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு வரை வாரத்திற்கு மூன்று பட வாய்ப்புகளாவது எனக்கு வரும்.

    நான் வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பேன். வழக்கமாக நமது படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றால் தான் அடுத்த வாய்ப்புகள் வரும். செப்டம்பர் மாதம் எனது பெரிய படம் ஒன்று வெளியானது. ஆனால் அதன் பின் வாய்ப்புகள் வருவது நின்றுவிட்டது. படவாய்ப்புகள் மிகவும் குறைந்துவிட்டன. என்னுடன் இணைந்து பணியாற்ற தயங்குகிறார்கள்.



    ஆனால் இயக்குனர்கள் நம்பிக்கையளிக்கும் விதமாக எனக்காக எழுதுகிறார்கள். இதன் மூலம் எனக்கு சில எதிரிகள் உருவாவார்கள் என்பது தெரியும். அதனால் இதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து போராடுவேன்’ என்றார்.
    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் எஸ்.கே 15 படத்தில் அர்ஜுன், யுவன் ஷங்கர் ராஜா என இரும்புத்திரை படத்தில் பணியாற்றிய பலரும் இணைந்துள்ளனர். #SK15 #Sivakarthikeyan #PSMithran
    `சீமராஜா' படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக `இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

    இந்த படத்தின் மூலம் இரும்புத்திரை கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது. இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடித்த ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

    24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் துவங்க இருக்கிறது.

    `இரும்புத்திரை' படத்தில் சமூக கருத்தை முன்வைத்த மித்ரன், இந்த படத்தில் அரசியல் கலந்த த்ரில்லர் கதையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. #SK15 #Sivakarthikeyan #PSMithran

    நடிகர் அர்ஜுன் மீது கொடுத்த பாலியல் புகாரால் நடிகை ஸ்ருதியின் ரகசியம் வெளியாகி இருக்கிறது. #Arjun #SruthiHariharan #MeToo
    நிபுணன் படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இரவு விருந்துக்கு அழைத்ததாகவும் நடிகை ஸ்ருதி ஹரிகரன் பரபரப்பு புகார் கூறினார். மீடூ இயக்கம் மூலம் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அர்ஜுன் ஸ்ருதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இருவரும் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்துள்ளனர்.

    ஸ்ருதி போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் தான் திருமணமானவர் என்றும் கணவர் பெயர் ராம்குமார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காரணம் ஸ்ருதி தான் திருமணமானவர் என்று இதுவரை வெளிப்படுத்தியதே இல்லை. ஸ்ருதிக்கு திருமணம் முடிந்துவிட்டதாக கடந்த ஆண்டே ஊடகங்களில் செய்தி வந்தது. ஆனால் ஸ்ருதி அதை மறுத்து வந்தார். போலீசில் புகார் செய்ததன் மூலம் ஸ்ருதி ரகசியத்தை வெளியிட வேண்டியதாகிவிட்டது.

    பொதுவாக நடிகைகளுக்கு திருமணமானால் வாய்ப்புகள் குறைந்துவிடும். வாய்ப்புகளுக்காக ஸ்ருதி பொய் கூறியிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

    சுருதி பொய் சொன்னது வெளிப்பட்டிருப்பதால் இந்த விவகாரத்தில் சுருதிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேரியருக்காக பொய் சொன்னவரை இந்த வி‌ஷயத்தில் எப்படி நம்புவது? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோபத்துடன் பதிவிட்டு வருகிறார்கள்.
    நிபுணன் படத்தில் தன்னுடன் நடிக்கும் போது அர்ஜுன் தவறாக நடந்துக்கொண்டார் என்று ஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுத்துள்ளார். #Arjun
    இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து ‘மீ டூ’ இயக்கம் மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. திரையுலகம் உட்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் வருகின்றன.

    சமீபத்தில் குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சினி உள்ளிட்டோரும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இந்த நிலையில், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பிரபல நடிகர் அர்ஜுன், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பாலியல் குற்றச்சாட்டை கூறினார். 



    இதற்கு நடிகர் அர்ஜுன் தனது இணையதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தாம் எந்த பெண்ணிடமும் இதுவரை தவறாக நடந்ததில்லை எனவும், ஸ்ருதியின் குற்றச்சாட்டின் பின்னணியில் யாரோ இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
    ×