search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ஜுன்"

    அன்பரசன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு வால்டர் என்று தலைப்பு வைத்துள்ளனர். அர்ஜுன், ஜாக்கி ஷெராப் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். #Walter #VikramPrabhu
    அர்ஜுன், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரிக்கும் படத்தின் தலைப்பு, படத்தின் கதாநாயகன் பெயரை இயக்குனரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி அறிவிப்பார் என கூறி இருந்தார்கள்.

    அதன்படி லிங்குசாமி அந்த படத்தின் தலைப்பு வால்டர் என்றும் படத்தின் கதாநாயகன் விக்ரம் பிரபு என்றும் அறிவித்தார்.

    அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்க உள்ள இந்த படத்தை 'பேராண்மை', 'பூலோகம்' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். கிருஷ்ணா, பிந்துமாதவி நடிப்பில் உருவாகும் ‘கழுகு-2’ படத்துக்கு பிறகு சிங்காரவேலன் தயாரிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. #Walter #VikramPrabhu

    சிங்கார வேலன் தயாரிப்பில் அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கும் படத்தில் ஹீரோ என்பதை சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்கள். #Arjun
    'கழுகு - 2' படத்திற்கு பிறகு மிக பிரமாண்டமாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளார் சிங்காரவேலன். இந்த படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராஃப்,  'கோட்டா' சீனிவாசராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள்.

    அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்க உள்ள இந்த படத்தை 'பேராண்மை', 'பூலோகம்', 'மீகாமன்' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். 'க்ரைம் நாவல்' மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுத, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார். 



    பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்க உள்ள கதாநாயகன் யார் என்பது விநாயகர் சதுர்த்தி அன்று அறிவிக்க இருக்கிறார்கள். 
    நடிகர் விஷால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர் மன்றங்களை அனைத்தையும் மக்கள் நல இயக்கமாக மாற்றி இருக்கிறார். #Vishal #HappyBirthdayVishal
    விஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மித்ரன் இயக்கத்தில் வெளியான இப்படம் வெற்றிகரமாக 100 வது நாளை கடந்து இருக்கிறது. இதில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். வில்லனாக அர்ஜுன் நடித்திருந்தார்.

    விஷாலின் பிறந்தநாளான இன்று, பிறந்தநாள் விழா, இரும்புத்திரை படத்தின் 100வது நாள் விழாவையும் சேர்த்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் கொண்டாடினார். இதில் விஷால், இயக்குனர் மித்ரன், நடிகை சமந்தா, அர்ஜுன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். 



    இதில் தன்னுடைய ரசிகர் மன்றத்தை ‘மக்கள் நல இயக்கம்’ ஆக மாற்றி இருக்கிறார். இவ்விழாவில் இதற்கான கொடியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதில் விவேகம், வித்தியாசம், விடா முயற்சி எனவும், அணி சேர்வோம் அன்பை விதைப்போம் என்று அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
    ஆண்ட்ரூ இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் `கொலைகாரன்' படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. #Kolaikaran #VijayAntony
    `காளி' படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி தற்போது ‘திமிரு பிடிச்சவன்’ மற்றும் ‘கொலைகாரன்’ படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கொலைகாரன்’ படத்தை ஆண்ட்ரூ இயக்குகிறார். படத்தில் விஜய் ஆண்டனியுடன், நடிகர் அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம், ரசிகர்களை கவர்ந்து விட்ட அர்ஜுன், இந்த படத்திலும் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

    தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.



    தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆஷிமா நர்வால் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    முகேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரிச்சர்டு கெவின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். #Kolaikaran #VijayAntony #Arjun

    விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் கொலைக்காரன் திரைப்படம் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக செல்ல இருக்கிறார்கள். #Kolaikkaran
    இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி, தற்போது நடிகர் அர்ஜுனுடன் இணைந்து "கொலைக்காரன்" எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக பி.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார்.

    ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான ஆயுத்த வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.



    வேகமாக படப்பிடிப்பை முடித்து, பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
    ராய் லட்சுமியுடன் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என்று காட்சிகள் கொடுத்த போது, பயந்த எனக்கு ராய் லட்சுமி தான் உற்சாகம் கொடுத்து கட்டிப்பிடிக்க வைத்தார் என்று நடிகர் அர்ஜுன் கூறியிருக்கிறார். #Arjun #RaaiLakshmi
    சமீபத்தில் வெளியான ’எக்ஸ் வீடியோஸ்’ படத்தில் ரோகன் என்கிற வில்லன் வேடத்தில் நடித்து கவனிக்க வைத்தவர் நடிகர் அர்ஜுன். புழல் என்கிற படத்தில் நடிகராக உள்ளே நுழைந்த இவர் ஆர்யா, பாபி சிம்ஹா கூட்டணியில் உருவான ‘பெங்களூரு நாட்கள்’ படத்தில் ராய் லட்சுமியின் காதலராக நடித்தவர். தனது சினிமா அனுபவம் பற்றி அர்ஜுன் பேசும் போது, 

    ’எனக்கு இயல்பிலேயே கூச்ச சுபாவம் அதிகம். என்னுடைய நண்பர்கள் கேமரா முன்பு நின்று நடிக்கும்போது கூச்சம் போய்விடும் என சொல்லி என்னை மாடலிங்கிற்கு அனுப்பி வைத்தார்கள். நடனம் மற்றும் நடிக்க தெரிந்த ஆள் வேண்டும் என்பதால் ‘புழல்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 



    அடுத்து பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் ‘பெங்களூர் நாட்கள்’ பட வாய்ப்பு கிடைத்தது. பெங்களூர் நாட்கள் படத்தில் நடிக்கவேண்டும் என சொன்னபோது எனக்கு சிறிது பயமாகத்தான் இருந்தது. நான் நடிப்புக்கு புதியவன். அதிலும் ராய்லட்சுமியுடன் கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது என்று காட்சிகள் இருந்தது. ஆனால் ராய் லட்சுமி தான் எனக்கு உற்சாகம் கொடுத்து கட்டிப்பிடிக்க வைத்தார்’ என்றார். #Arjun #RaaiLakshmi 

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான `இரும்புத்திரை' படத்தின் தெலுங்கு பதிப்பான `அபிமன்யுடு' படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படக்குழுவை பாராட்டியுள்ளார். #Irumbuthirai Vishal
    சமீபகாலமாக தமிழ் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உருவாகி வருகிறது. சூர்யா, விஷால், கார்த்தி, விஜய் ஆண்டனி ஆகியோரது படங்கள் இரண்டு மொழிகளையும் குறி வைத்தே எடுக்கப்படுகின்றன. கடந்த மாதம் வெளியான விஷாலின் `இரும்புத்திரை' படத்திற்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்து. 

    அதேபோல `அபிமன்யுடு' என்ற பெயரில் தெலுங்கில் இந்த படம் வெளியானது. தெலுங்கு ரசிகர்களிடையேயும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தெலுங்கில் நேரடியாக வெளியான படங்களைவிட `அபிமன்யுடு' படத்திற்கு நல்ல வசூல் கிடைத்திருப்பதாக தெலுங்க வட்டாரத்தில் பேசப்படுகிறது. 



    இந்த நிலையில், `அபிமன்யுடு' படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகஷே் பாபு படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இதுகுறித்து மகேஷ் பாபு அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

    `அபிமன்யுடு படத்தை பார்த்து வியந்தேன். பி.எஸ்.மித்ரன் தனது நோக்கத்தை திரையில் அறிவுப்பூர்வமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். விஷால் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்' இவ்வாறு கூறியிருக்கிறார். 

    இந்த படத்தில் அர்ஜுன், சமந்தா, ரோபோ சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். #Irumbuthirai Vishal

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தின் தெலுங்கு பதிப்பான அபிமன்யடு படத்தின் வசூல் ரூ.10 கோடியை தாண்டிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Irumbuthirai Vishal
    சமீபகாலமாக தமிழ் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உருவாகி வருகிறது. சூர்யா, விஷால், கார்த்தி, விஜய் ஆண்டனி ஆகியோரது படங்கள் இரண்டு மொழிகளையும் குறி வைத்தே எடுக்கப்படுகின்றன. கடந்த மாதம் வெளியான விஷாலின் இரும்புத்திரை தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    படத்தில் அர்ஜுன், சமந்தா, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்து இருந்தார்கள். அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார். தமிழில் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற இரும்புத்திரை தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் கடந்த வாரம் வெளியானது.



    இந்த படம் தெலுங்கில் நேரடியாக வெளியான படங்களைவிட வசூலில் முந்தி இதுவரை 12 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அபிமன்யுடு வெளியான திரையரங்குகளில் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருப்பதால் படம் அங்கும் பிளாக்பஸ்டர் வெற்றி அடையும் என நம்புகிறார்கள். எல்லா மொழிகளிலும் சேர்த்து மொத்தமாக இதுவரை 60 கோடியை வசூலித்துள்ளது இரும்புத்திரை. #Irumbuthirai Vishal
    `இரும்புத்திரை' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக இருக்கும் `கொலைகாரன்' படத்தில் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க நடிகர் அர்ஜுன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Kolaikaran #VijayAntony #Arjun
    விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான காளி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், விஜய் ஆண்டனி தற்போது கணேசா இயக்கத்தில் ‘திமிரு பிடிச்சவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 

    இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ‘கொலைகாரன்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். ஆண்ட்ரூ இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்க இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். தற்போது படக்குழு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கும் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். 



    விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான `இரும்புத்திரை' படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜுன் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    விஜய் ஆண்டனி, அர்ஜுன் இரண்டு பேரில் வில்லன் யார்? என்பது தான் படத்தின் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்த பிறகு விஜய் ஆண்டனி `மூடர்கூடம்' நவீன் இயக்கத்தில் ஒரு படத்திலும், `திருடன்' என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். #Kolaikaran #VijayAntony #Arjun

    நடிகர் அர்ஜுன் இரும்புத்திரை படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்திருந்த நிலையில், அடுத்ததாக விஜய் ஆண்டனி படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறாராம். #Kolaikaran #VijayAntony #Arjun
    விஜய் ஆண்டனி நடிப்பில் நாளை திரைக்கு வரவிருக்கும் படம் காளி. கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் நாயகிகளாக நடித்துள்ளனர். 

    காளி படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது கணேசா இயக்கத்தில் ‘திமிரு பிடிச்சவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ‘கொலைகாரன்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

    விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான இரும்புத்திரை படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜுன் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 



    விஜய் ஆண்டனி, அர்ஜுன் இரண்டு பேரில் வில்லன் யார்? என்பது தான் படத்தின் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்த பிறகு விஜய் ஆண்டனி மூடர்கூடம் நவீன் இயக்கத்தில் ஒரு படத்திலும், திருடன் என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Kolaikaran #VijayAntony #Arjun
    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் - அர்ஜுன் - சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் `இரும்புத்திரை' படத்தின் விமர்சனம்.
    ராணுவத்தில் உயரிய பொறுப்பில் இருகிறார் நாயகன் விஷால். கிராமத்தில் வசிக்கும் தன் அப்பா டெல்லி கணேஷ், அம்மா, தங்கை என யாரிடமும் அதிக தொடர்பு இல்லாமல் தன்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

    டெல்லி கணேஷ் ஊர் முழுவதும் கடன் வாங்கி பல செலவுகள் செய்கிறார். கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான விஷாலின் அம்மா உயிரிழக்கிறார். 

    இதற்கிடையே சென்னையில் விஷால் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பக்கத்து வீட்டில் உள்ளவரின் வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் பணம் காணாமல் போகிறது. இதனால், அவர் தற்கொலை செய்துவிடுகிறார். அவருக்கு பணம் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து மனைவி மட்டும் மகளிடம் பணம் கேட்பது போல் தவறாக நடந்துக் கொள்கிறார்கள். இதைப் பார்க்கும் விஷால் அவர்கள் மீது கோபப்பட்டு அடித்து விடுகிறார்.



    இது போலீஸ் நிலையம் வரை சென்று விஷாலின் வேலைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. விஷாலின் உயரதிகாரி, மன அழுத்தம் சரியாக இருக்கிறதா அறிந்துக் கொண்டு சான்றிதழ் பெற்று வரும் படி அனுப்புகிறார்.

    அதன்படி மருத்துவர் சமந்தாவை சந்திக்க செல்கிறார் விஷால். சமந்தாவோ உங்கள் குடும்பம் மீது அக்கறை காட்டுங்கள். அவர்களுடன் பழகுகள் என்று அறிவுரை கூறி அனுப்ப, கிராமத்திற்கு சென்று குடும்பத்தினருடன் நேரம் செலவிடுகிறார். 

    அங்கு தங்கைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். இதற்கு 10 லட்சம் தேவைப்படுகிறது. இதற்காக தன் அம்மாவின் சொத்தை விற்று 4 லட்சம் ஏற்பாடு செய்கிறார். மீதமுள்ள 6 லட்சத்திற்கு வங்கி சென்று கடன் வாங்க முயற்சி செய்கிறார். ஆனால், ராணுவ வீரர் என்பதால் கடன் கொடுக்க மறுத்து விடுகிறார்கள். 



    பின்னர், புரோக்கர் மூலமாக போலி ஆவணங்களை வைத்து வங்கியில் கடன் வாங்குகிறார் விஷால். சொத்தை விற்று 4 லட்சம், லோன் 6 லட்சம் ஆக 10 லட்சம் பணத்தை வங்கி வைத்திருக்கிறார். ஆனால் திடீரென 10 லட்சம் பணமும் காணாமல் போகிறது. அதிர்ச்சியடையும் விஷால், எப்படி காணாமல் போனது என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதுபோல் பலருடைய வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் பணம் காணாமல் போகிறது என்பதை தெரிந்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அர்ஜுன் தான் இதற்கு காரணம் என்று கண்டறிகிறார்.

    இறுதியில் அர்ஜுனை விஷால் எப்படி நெருங்கினார்? பணம் எப்படி காணாமல் போகிறது? பணம் அவருக்கு திரும்ப கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகன் விஷால், அவருக்கே உரிய பாணியில் திறமையாக நடித்திருக்கிறார். இராணுவ அதிகாரியாக கம்பீரமாகவும், தங்கைக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் அண்ணனாகவும், பணம் பறிபோன பிறகு, கண்டுபிடிக்க அசுர வேகத்தில் முயற்சி செய்வது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஷால்.



    நாயகியாக நடித்திருக்கும் சமந்தாவின் நடிப்பு அருமை. துறுதுறுவென ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

    வில்லனாக நடித்திருக்கும் அர்ஜுனின் நடிப்பு மிரள வைத்திருக்கிறது. மாடர்ன் வில்லனாக நடித்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார். விஷாலின் அப்பாவாக வரும் டெல்லி கணேஷ், வெகுளித்தனமாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதில் நிற்கும் கதாபாத்திரம்.

    வித்தியாசமான திரைக்கதையை கையில் எடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மித்ரன். தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் கதைக்களத்தை உருவாக்கி, தெளிவான திரைக்கதை அமைத்திருக்கிறார். டிஜிட்டல் இந்தியாவில் ஏற்படும் விளைவுகளை அழகாக பதிவு செய்திருக்கிறார். நம்மளுடைய தகவல்களை இன்டர்நெட்டில் பதிவு செய்து வைத்தால், என்னென்ன விளைவுகள் வரும் என்பதை காண்பித்திருக்கிறார். கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து, அவர்களிடம் சரியாக வேலை வாங்கி இருக்கிறார்.

    யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘இரும்புத்திரை’ அசைக்க முடியாது. 

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் `இரும்புத்திரை' படத்தின் முன்னோட்டம். #Irumbuthirai #Vishal
    விஷால் பிலிம் பாக்ட்ரி சார்பில் விஷால் தயாரித்துள்ள படம் `இரும்புத்திரை'.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நாயகனாகவும், சமந்தா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டெல்லி கணேஷ், கோபி, ரோபோ ஷங்கர், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 

    ஒளிப்பதிவு - ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒலி வடிவமைப்பு - டபாஸ் நாயக், பாடல்கள் - கபர் வாசுகி, விக்னேஷ் சிவன், விவேக், கலை - உமேஷ் குமார், ஸ்டன்ட் - திலீப் சுப்பராயன், எடிட்டிங் - அந்தோணி எல்.ரூபன், தயாரிப்பு - விஷால், எழுத்து, இயக்கம் - பி.எஸ்.மித்ரன்.



    சமூகத்தின் முக்கிய பிரச்னை ஒன்றை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கிறது. வருகிற மே 11-ஆம் தேதி (நாளை) ரிலீசாக இருக்கிறது. #Irumbuthirai #Vishal

    ×