search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103803"

    ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி வரும் டிசம்பர் 11ஆம் தேதி வேலை நிறுத்தம் அதைத்தொடர்ந்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு சுகாதார நிலைய துப்புரவு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் கூறியதாவது:

    அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு செய்துள்ள தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை தமிழகம் முழுவதும் 2,500 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள் இவர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    தினசரி 12 மணி நேரம் பணியாற்றி வரும் இவர்களுக்கு வாரவிடுமுறையயோ பண்டிகை கால விடுமுறையோ வழங்கப்படுவதில்லை. அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் பணியாற்றிவரும் துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டில் டிசம்பர் 11ஆம் தேதி வேலை நிறுத்தம் மற்றும் அதைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது இதுகுறித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பிரச்சார கூட்டங்கள் நடத்தி வருகிறோம்.

    இவர் அவர் கூறினார். #tamilnews
    போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் குறித்த முடிவை நாளை பல்லவன் இல்லம் முன்பு நடைபெறும் வாயிற் கூட்டத்தில் அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். #TNBusStrike #TNBus
    சென்னை:

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.6,800 கோடி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், தீபாவளி முன்பணம் கொடுக்க வேண்டும், ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும், பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட வழக்குகளை காரணம் காட்டி, தற்காலிக பணி நீக்கம், இடமாற்றம் செய்யப்பட்ட 86 தொழிலாளர்களின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை தீர்ப்பது தொடர்பாக தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த மாதம் 22, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடந்தது.

    இதில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 3-வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று தேனாம்பேட்டையில் நடந்தது. இதில் சுமூக தீர்வு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.


    இதைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் குறித்த முடிவை நாளை பல்லவன் இல்லம் முன்பு நடைபெறும் வாயிற் கூட்டத்தில் அறிவிக்கப் போவதாக தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம், சி.ஐ.டி.யு. சவுந்தரராஜன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    இதுபற்றி சவுந்தரராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இந்த அரசு போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் நோக்குடன் நடந்து கொள்கிறது. ரூ.7 ஆயிரம் கோடி நிலுவை தொகையில் ரூ. 1000 கோடி தருவதாக கூறுகிறது. அப்படியானால் ரூ. 6 ஆயிரம் கோடி பணம் எங்களுக்கு எப்போது தருவார்கள்?

    தீபாவளி முன்பணம் கூட தர மறுக்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு கேட்டதை கொடுக்கின்றனர். மின் வாரிய தொழிலாளர் உள்பட பல்வேறு ஊழியர்களுக்கு பிரச்சனை இல்லாமல் வழங்குகிறார்கள்.

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மட்டும் பணத்தை வழங்காமல் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். இதனால்தான் நாங்கள் வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாக நாளை அறிவிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNBusStrike #TNBus
    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டமும் நடந்தது.
    நாமக்கல்:

    ரேஷன்கடை பணியாளர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யும்வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். மருத்துவ படியை ரூ.300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 4 ஆயிரம் பணியாளர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் பகுதிநேர மற்றும் முழுநேர ரேஷன்கடைகள் மொத்தம் 919 உள்ளது. இவற்றில் 591 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 32 பேர் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் 32 ரேஷன்கடைகள் நேற்று மூடப்பட்டு இருந்தன. எனவே அவற்றில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காண முடிந்தது. மீதமுள்ள ரேஷன்கடைகள் வழக்கம்போல் இயங்கின.

    இதையொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். #tamilnews
    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மணல் லாரிகள் உரிமையாளர் சங்கத்தினர் அறித்தபடி இன்று முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.
    செங்குன்றம்:

    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மணல் லாரிகள் உரிமையாளர் சங்கத்தினர் இன்று முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் குவாரி திறக்க வேண்டும். ஆந்திராவில் இருந்து கொண்டு வரும் மணலை பறிமுதல் செய்யக் கூடாது, டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

    இதையடுத்து பாடியநல்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்தில் மணல் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஆயிரம் மணல் லாரிகள் இயங்கவில்லை. இந்த தொழிலை நம்பி பிழைப்பு நடத்தும் 10 ஆயிரம் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம், நாமக்கல் மாவட்டத்தில் இன்று லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர்.
    சேலம்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

    இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்தது. இதனால் அந்த சங்கத்தின் கீழ் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் 4.5 லாரிகளில் பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை.

    இதில் சேலம் மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் 34 ஆயிரம் லாரிகளும் அடங்கும். இதில் பெரும்பாலான லாரிகள் சேலம் லாரி மார்க்கெட் மற்றும் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதே போல தமிழகம் முழுவதும் இயக்கப்படும் 70 ஆயிரம் மணல் லாரிகளில் பெரும்பாலான லாரிகள் இயங்கவில்லை.

    வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வெளியூர், வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் துணிகள், இரும்பு கம்பிகள், மஞ்சள், தேங்காய், மரவள்ளி கிழங்கு மாவு, காய்கறிகள், அரிசி, நெல் மூட்டைகள் உள்பட பல்வேறு பொருட்கள் தேங்கி உள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் கூறியதாவது:- டீசல் விலை உயர்வால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாடகை நிர்ணயம் செய்யும் போது டீசல் ஒரு விலையும், பொருட்கள் கொண்டு இறக்கும் போது டீசல் விலை உயர்வும் ஏற்படுவதால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து தொழிலை நடத்த முடியாத நிலை உள்ளதால் டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதோடு 3 மாதங்களுக்கு ஒரு முறை டீசல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றனர்.

    நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினமும் 3.25 கோடி முட்டைகள் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் ஏற்றுமதி செய்யப்படும். முழு அடைப்பு போராட்டத்தில் முட்டை லாரி உரிமையாளர்களும் பங்கேற்றுள்ளதால் 3 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேங்கி உள்ளன.

    வேலை நிறுத்த போராட்டத்தால் ஒரே நாளில் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்க தலைவர் சின்ராஜ் கூறி உள்ளார்.
    இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பாலமுருகன் உள்பட 6 பேர் சென்றனர்.

    அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், செந்தில்குமாருக்கு சொந்தமான விசைப்படகில் மோதினர். இதில், விசைப்படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. இதனால் விசைப்படகில் இருந்த பாலமுருகன் உள்பட 6 பேரும் கடலில் தத்தளித்தனர். அவர்கள் 6 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

    இலங்கை கடற்படையினரின் இந்த செயலை கண்டித்தும், அவர்கள் பிடித்து சென்ற 6 மீனவர்களை விடுவிக்க கோரியும், மீன்பிடிக்கும்போது கடலில் தவறி விழுந்து இறந்த ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடந்த 23-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று3-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதன் காரணமாக விசைப்படகுகள் மீன்பிடி தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
    மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மோட்டார் வாகன தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல லட்சம் வாகனங்கள் ஓடவில்லை. #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill
    சென்னை:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தைக் கண்டித்தும், சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரியும் நாடு முழுவதும் மோட்டார் வாகன தொழிற்சங்கங்கள் 24 மணி நேர வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. நேற்று நள்ளிரவு தொடங்கிய இப்போராட்டம் இன்று நள்ளிரவு வரை நீடிக்கிறது.

    முக்கிய தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வேன்கள் இயக்கப்படவில்லை. அரசுப் போக்குவரத்து கழகங்களில் உள்ள சில தொழிற்சங்கங்களும் வாகனங்களை இயக்காததால் பொது போக்குவரத்து சேவை  பாதிக்கப்பட்டுள்ளது.



    தமிழகத்தில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தில் பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வாகன உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் பல லட்சம் வாகனங்கள் ஓடவில்லை. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    புதுச்சேரியில் அரசு, தனியார் பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள், வேன்கள் இயக்கப்படவில்லை. குறைந்த எண்ணிக்கையில் தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill
    வேலை நிறுத்த போராட்டம் எதிரொலி காரணமாக கரூரில் 2,600 லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன. இதனால் ஜவுளி, கொசுவலை உள்ளிட்ட உற்பத்தி பொருட்கள் தேக்கம் அடைந்ததால் வர்த்தகர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    கரூர்:

    டீசல் விலை உயர்வு, சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூல் உள்ளிட்டவற்றால் லாரித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பெட்ரோல்- டீசல் விலையை குறைத்து ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பிரிமியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும். சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை குறைத்து ஆண்டுக்கு ஒரு முறை செலுத்துவது போல் வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுடெல்லி ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்கள் ஜூலை 20-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தன. அந்த வகையில் நேற்று நாடு முழுவதும் லாரிகள் ஓடாததால் வர்த்தகம் பாதிப்படைந்தது.

    இந்த போராட்டத்திற்கு கரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்டவையும் ஆதரவு தெரிவித்து இருந்ததால் கரூரில் நேற்று 2,000 லாரிகள், 600 மினி லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் தொழில் நகரம் என பெயர் பெற்ற கரூரில் ஜவுளிகள், கைத்தறி துணிகள், கொசுவலை, பஸ்பாடி, சிமெண்டு, சர்க்கரை ஆலையிலிருந்து அனுப்பப்படும் சர்க்கரை மூட்டைகள் உள்ளிட்ட உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் பெருமளவில் தேக்கம் அடைந்தன. இதனால் கோடிக்கணக்கிலான வர்த்தகம் முடங்கியதால் வர்த்தகர்கள் உள்ளிட்டோர் பாதிப்படைந்தனர். மேலும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றையும் வெளியிடங்களிலிருந்து லாரிகளில் கொண்டுவர முடியாததால் சில நிறுவனங்களில் பணி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது.

    எனினும் சிலர் கரூர் ரெயில் நிலைய பார்சல் சேவை, பஸ் உள்ளிட்டவை மூலம் உற்பத்தி பொருட்களை அனுப்பி வைத்ததையும் காண முடிந்தது. லாலாபேட்டை, குளித்தலை உள்ளிட்ட இடங்களில் வாழைத்தார் உள்ளிட்டவற்றை வெளியிடங்களுக்கு விற்பனைக்காக அனுப்ப முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். இது போல் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தேக்கம் அடையும் சூழல் ஏற்படுவதால் அதன் விலைவாசி உயர வாய்ப்புள்ளது என தெரிகிறது. கரூரில் பொதுமக்களுக்கு காய்கறி, பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு லாரி வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி பொருளாதார ரீதியிலான சரிவை ஏற்படுத்தும் நோக்கில் பதுக்கல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் யாரும் ஈடுபடுகின்றனரா? என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக கரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வக்கீல் ராஜூவிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:-

    மத்திய- மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று கொண்டு நிறைவேற்றி தரும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்பதில் மாற்றம் இல்லை. கரூரில் வர்த்தகர்கள், வணிகர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்படும் சிரமங்களுக்காக வருந்துகிறோம். எனினும் வேலை நிறுத்த போராட்டத்தால் லாரி டிரைவர்கள், கிளனர்கள், உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கும் பாதிப்பு இருக்க தான் செய்கிறது என்று கூறினார்.

    லாரி ஓடாததன் காரணத்தால் ஏற்பட்டள்ள ஜவுளி தேக்கம் குறித்து கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் ஸ்டீபன்பாபு கூறுகையில், கரூரில் தயாராகும் போர்வை, திரைசீலை உள்ளிட்ட ஜவுளி பொருட்கள் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. அந்த வகையில் ஜவுளி உற்பத்தி பொருட்களை லாரி மூலம் சென்னை, தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு சென்று தான் ஏற்றுமதி செய்கிறோம். அந்த வகையில் கரூரில் லாரிகள் இயக்கப்படாததால் ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி வரையிலான ஜவுளி தேக்கம் அடைந்திருக்கிறது. இதனால் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதனை டெலிவரி செய்ய முடியாததால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் ஜவுளி தயாரிப்புக்கு தேவையான உதிரி பொருட்களை வெளியிடங்களிலிருந்து லாரிகளில் கொண்டுவர முடியாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே லாரி வேலை நிறுத்தத்தில் மத்திய-மாநில அரசுகள் விரைவில் தீர்வு காண வேண்டும் என்று கூறினார். 
    தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்ததுறை சார்ந்த அலுவலகங்களில் பணிகள் முடங்கின. அலுவலகங்களும் வெறிச்சோடின.

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தப்போராட்டம் தொடங்கியது. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு பதிவறை எழுத்தருக்கு இணையான ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். அதற்கான அரசாணையை உடனடியாக தமிழகஅரசு வெளியிட வேண்டும். ஊரகவளர்ச்சித்துறையில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை பல்வேறு நிலைகளில் பணிபுரியும் அலுவலர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் உயரதிகாரிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து நடந்தது. போராட்டத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி அலுவலகங்கள், 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் ஊரகவளர்ச்சி துறை சார்ந்த பல்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் பெரும்பாலான அலுவலர்கள், ஊழியர்கள் நேற்று பணியை புறக்கணித்தனர். இதனால் மேற்கண்ட அலுவலகங்கள் நேற்று அலுவலர்களின்றி வெறிச்சோடின. பெரும்பாலான ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த அலுவலகங்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. இந்த அலுவலகங்களில் வழக்கமான பணிகள் முடங்கின. இந்த அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகள் மற்றும் சான்றிதழ்கள் பெறுவதற்காக வந்த பொதுமக்கள், அலுவலகங்கள் மூடப்பட்டிருந்ததால் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்து வரும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிகள் முற்றிலும் முடங்கியது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்கள் யாரும் இல்லாமல் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது. பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். 
    நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராமப்புறங்களில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டது.
    நாமக்கல்:

    ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வு கூட்டம் நடத்துவதை நிறுத்த வேண்டும். ஊழியர்களை எவ்வித விளக்கமும் கோராமல், பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும்.

    முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.

    நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் மொத்தம் உள்ள 1,033 பணியாளர்களில் 282 பேர் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். மீதமுள்ள 751 பேர் வேலைக்கு வந்து இருந்ததால் நகர்புறங்களில் பணிகளில் பாதிப்பு ஏற்படவில்லை.

    இருப்பினும் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட 282 பேரில் பெரும்பாலானவர்கள் ஊராட்சி செயலாளர்கள் என்பதால் நாமக்கல், எருமப்பட்டி என மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களில் ஊராட்சி மன்ற அலுவலகங்கள் மூடி கிடந்தன. கிராமப்புறங்களில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என ஊராட்சி செயலாளர்கள் தெரிவித்தனர். 
    27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின.
    ஊட்டி:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பது உள்பட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் நேற்று பணிக்கு வராமல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊராட்சி செயலர்களுக்கு அரசு ஏற்றுக்கொண்ட பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர், குந்தா ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும், ஒன்றிய பணி மேற்பார்வையாளருக்கு அளவீடு மற்றும் மதிப்பீடு ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும், கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளருக்கும் பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், இளநிலை பொறியாளர்களுக்கும் முறையான ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

    ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அலுவலர்கள் பணிக்கு வராததால், அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கிராம ஊராட்சி பிரிவு, வளர்ச்சி பிரிவு உள்ளிட்ட பிரிவு அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சி முகமை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடின.

    ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. 
    டெல்லி மெட்ரோ ரெயில் ஊழியர்கள் நள்ளிரவு முதல் அறிவித்திருந்த வேலை நிறுத்தத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #DelhiHighCourt
    புதுடெல்லி:

    டெல்லி மெட்ரோ ரெயில் ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்ககோரி கோரிக்கை வந்தனர். பின்னர் அவர்களது கோரிக்கை நிறைவேறாததையடுத்து நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.

    பின்னர் இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஊதிய உயர்வு வழங்க கோரி டெல்லி மெட்ரோ ரெயில் ஊழியர்கள் நள்ளிரவு முதல் அறிவித்திருந்த வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்துள்ளது.

    மெட்ரோ ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை டெல்லி அரசு ஏற்கும் என அம்மாநில போக்குவரத்து மந்திரி தெரிவித்துள்ளார்.
    ×