search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103803"

    டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். ஆனாலும் நேற்று ஏராளமான லாரிகள் வழக்கம்போல ஓடின.
    சென்னை:

    தினசரி டீசல் விலை உயர்வு, 3-ம் நபர் காப்பீட்டு தொகை கட்டணம் 30 சதவீதம் அதிகரிப்பு, சுங்க கட்டணம் ஆண்டுதோறும் உயர்வு போன்றவற்றை வாபஸ் பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என பிரதமர் மற்றும் போக்குவரத்து-பெட்ரோலியத்துறை மத்திய மந்திரிகளுக்கு அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ‘நோட்டீசு’ வழங்கியது.

    அதன்படி லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இதையடுத்து நகரில் ஏராளமான லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. சென்னையில் கோயம்பேடு, மாதவரம், வானகரம், நெற்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. லாரிகள் இயங்காத காரணத்தால் டிரைவர்கள் மற்றும் பணியாளர்கள் லாரிகளிலேயே உணவு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

    லாரி உரிமையாளர்கள் போராட்டத்தால் தினசரி மத்திய அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.ராஜேந்தர் சிங், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் ஆகியோர் கூறியதாவது:-

    லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் பங்கேற்க உள்ளன. தமிழகத்தில் முதற்கட்டமாக 2 லட்சம் லாரிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த எண்ணிக்கை ஓரிரு நாட்களில் 5 லட்சத்தை தாண்டிவிடும். இதுதவிர வெளிமாநில லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இதனால் மத்திய அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.5 ஆயிரம் கோடியும், தமிழகத்தில் ரூ.50 கோடியும் இழப்பு ஏற்படும். லாரி உரிமையாளர்களுக்கு ரூ.10 கோடி இழப்பு ஏற்படும்.

    இது முறையாக, முன்கூட்டியே நோட்டீசு வழங்கி நடத்தப்படும் போராட்டம் ஆகும். இந்த போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியாக வேறு போராட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது ஒட்டுமொத்த லாரி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரச்சினை. எனவே இதில் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் சரக்கு லாரிகளும் எங்கள் போராட்டத்தில் கைகோர்க்க உள்ளன. எனவே மக்கள் பாதிப்பை கருத்தில்கொண்டு நியாயமான எங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற போராட்டம் நேற்று அறிவிக்கப்பட்டாலும், நேற்று ஏராளமான லாரிகள் வழக்கம்போல ஓடின. சென்னையில் நேற்று லாரிகள் செல்வதை பார்க்க முடிந்தது. இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது:-

    தமிழகத்தில் பெரும்பாலான லாரிகள் வழக்கம்போலவே இயக்கப்பட்டு வருகின்றன. போராட்டத்தை முதலில் அறிவித்ததே அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட்டு காங்கிரஸ் அமைப்பு தான். அதன் அங்கீகாரம் பெற்ற தலைவர்கள் தான் குமாரசாமி, சண்முகப்பா, கோபால் நாயுடு போன்றவர்கள். இந்த கூட்டமைப்பில் 129 சங்கங்களும், 6 மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் அங்கம் வகிக்கிறது. எனவே திட்டமிட்டப்படி ஜூலை 20-ந்தேதி போராட்டத்தில் களமிறங்குவோம். கோரிக்கைகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அரசுக்கு உரிய கால அவகாசமும் அளித்திருக்கிறோம். போராட்டத்தை திசை திருப்புவது எங்கள் நோக்கமல்ல, சிக்கலான சூழ்நிலையை அரசுக்கு அளித்திட கூடாது என்பதுதான்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் வேலைநிறுத்தம் நேற்று 16-வது நாளாக நீடித்ததால் மாவட்டத்தில் சுமார் 8 லட்சம் தபால்கள் தேக்கம் அடைந்தன.
    நாமக்கல்:

    அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 16-வது நாளாக நீடித்தது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 342 தபால் நிலையங்களில் 252 கிளை தபால் நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளன. எனவே கிராமபுறங்களில் தபால் பட்டுவாடா, அஞ்சலக பண பரிவர்த்தனை உள்ளிட்ட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நாமக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத் தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய, கோட்ட செயலாளர் செந்தில் கூறியதாவது :-

    நாமக்கல் மாவட்டத்தில் 16 நாட்களாக கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 570 பேர் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் கிராமபுறங்களில் உள்ள தபால் நிலையங்களில் சுமார் 8 லட்சம் தபால்கள் தேங்கி உள்ளன. எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    போக்குவரத்து கழக ஊழியர்கள் வருகிற 19-ந் தேதி அல்லது அதற்கு பிறகு ஏதாவது ஒரு தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அதிகாரிகளிடம் நோட்டீசு வழங்கியுள்ளனர். #transportworkers #strike
    சென்னை:

    சென்னை, பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலகத்தில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் நேற்று நடந்தது. தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். பொருளாளர் நடராஜன், தொழிற்சங்க நிர்வாகிகள் ஆறுமுகநயினார், சுப்பிரமணியன், வேணுராம், திருமலைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், அரசு போக்குவரத்து கழகங்களை சீரமைக்க நிதி வழங்குவதோடு வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத்தை அரசு வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைவதுடன், சமனற்ற ஊதிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். ஊழியர்களுக்கு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வின்போதே ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஜனவரி மாதம் இதுவரை இல்லாத அளவு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதால் 30 லட்சம் பயணிகள் வேறுவிதமான பயண முறைக்கு மாறிவிட்டனர். சட்டவிரோதமான ஷேர்ஆட்டோக்கள், ஆம்னி பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் போக்குவரத்து கழகங்கள் கடும்போட்டியை சமாளிக்க வேண்டியுள்ளது. எனவே பேருந்து கட்டணத்தை முறைப்படுத்தி பொதுபோக்குவரத்தை விரிவுபடுத்த வேண்டும்.



    போக்குவரத்து கழகங்களில் 20 ஆயிரம் காலி பணியிடங்கள் காரணமாக 2 ஆயிரம் பேருந்துகளை இயக்க முடியவில்லை. சென்னையில் 450 பேருந்துகள் இயக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பஸ் கட்டண உயர்வுக்கு முன்பு ரூ.8 கோடியாக இருந்த நஷ்டம் தற்போது ரு.9 கோடியாக உயர்ந்துள்ளது.

    எனவே போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீசு அளித்துள்ளோம். அரசின் நடவடிக்கையை பொறுத்து 19-ந் தேதி அல்லது அதற்கு பிறகு ஏதாவது ஒரு தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே சம்பள உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் சில மாதங்களுக்கு முன்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.  #transportworkers #strike
    வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஊட்டியில் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    ஊட்டி:

    வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நீலகிரி முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் 2-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வங்கி ஊழியர்கள் பணிக்கு செல்ல வில்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள வங்கி கிளைகள் பூட்டு போட்டு இருந்தன.

    நீலகிரி மாவட்டத்தில் தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் 95 உள்ளன. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 125 ஏ.டி.எம்.கள் உள்ளன. வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்பட வில்லை. வங்கிகளில் இருந்தும் பணத் தை எடுக்க முடியவில்லை. பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும், தேயிலை விவசாயிகள் பச்சை தேயிலைக்கான பணத்தை வங்கியில் இருந்து பெற முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். கிராமப்பகுதிகளில் விளையும் மலைக்காய்கறிகளை ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள், தங்களது விளைபொருட்களை வியாபாரிக ளுக்கு விற்று விட்டு முழுதொகையை பெற முடியாமல் குறிப்பிட்ட செலவுக்கான தொகையை மட்டும் பெற்று செல்கின்றனர். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு இருப்பதால் ஊட்டி வர்க்கி, சாக்லெட், நீலகிரி தைலம் போன்ற பொருட்களை சுற்றுலா பயணிகள் தேவையான அளவுக்கு வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் நீலகிரி மாவட்டத்தில் வங்கிகள் மூலம் நடைபெறும் ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளது. 
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இன்று கன்னியாகுமரி பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தற்போது மீன் பிடித் தடைகாலம் உள்ளதால் ஏற்கனவே விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் உள்ளனர். வள்ளம் மற்றும் கட்டுமரங்களில் சென்று மீன்பிடிப்பவர்கள் மட்டும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்தனர்.

    அவர்கள் இன்று துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்தனர். கோவளம், ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், கன்னியாகுமரி, வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவை நகர் பகுதி மீனவர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.


    ×