என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 103855
நீங்கள் தேடியது "slug 103855"
பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்தியவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க படை வீரர்கள் முயற்சித்தபோது அவர் தப்பினார். #France #ChristmasMarket #Shooting
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்குள்ள ஸ்டிராஸ்பர்க் நகர கிறிஸ்துமஸ் சந்தையில் நேற்று முன்தினம் மாலையில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.
இரவு 8 மணி அளவில் அங்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மர்ம நபர், மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்த மக்கள் நாலாபுறமும் பதறியடித்தவாறு ஓட்டம் எடுத்தனர்.
இருப்பினும் துப்பாக்கிச்சூட்டில் குண்டு பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் அங்கு விரைந்தனர். துப்பாக்கிச்சூட்டை தடுத்து நிறுத்த அவர்கள் முயற்சித்தனர். ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், அவர்கள் சொல் கேட்டு துப்பாக்கிச்சூட்டை நிறுத்துவதாக இல்லை.
ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் அவர் காயம் அடைந்தாலும், சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை சுட்டும், பிடிக்க முடியாமல் போனது படை வீரர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
துப்பாக்கிச்சூடு பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், கண்காணிக்கப்பட்டு வந்த சந்தேக நபர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர், 29 வயதான அவரது பெயர் ஷெரீப் என தகவல்கள் கூறுகின்றன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தைகள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர். பல உணவு விடுதிகளிலும், ‘பார்’களிலும் கதவுகளை இழுத்து மூடினர். அங்கிருந்த மக்கள் அங்கேயே அடைக்கலம் தேடினர்.
இதற்கிடையே தாக்குதல் நடத்தி விட்டு தப்பிய நபர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து, அங்கு படையினர் சென்று சுற்றி வளைத்தனர். ஆனால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து, அந்த நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றம் மூடப்பட்டது. தாக்குதலில் பலியானவர்களுக்கு சபாநாயகர் ஆன்டனியோ தஜானி இரங்கல் தெரிவித்தார்.
அந்த நாட்டின் அதிபர் மெக்ரான் மந்திரிசபை அதிகாரிகளைக் கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்ட மெக்ரான், நடந்த சம்பவத்துக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார். நாட்டு மக்களுடன் இணைந்து நிற்பதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய நபரை தேடிப்பிடித்து கைது செய்வதற்காக அந்த நகரில் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 2 ஹெலிகாப்டர்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. #France #ChristmasMarket #Shooting
பிரான்ஸ் நாட்டில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்குள்ள ஸ்டிராஸ்பர்க் நகர கிறிஸ்துமஸ் சந்தையில் நேற்று முன்தினம் மாலையில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.
இரவு 8 மணி அளவில் அங்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மர்ம நபர், மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்த மக்கள் நாலாபுறமும் பதறியடித்தவாறு ஓட்டம் எடுத்தனர்.
இருப்பினும் துப்பாக்கிச்சூட்டில் குண்டு பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் அங்கு விரைந்தனர். துப்பாக்கிச்சூட்டை தடுத்து நிறுத்த அவர்கள் முயற்சித்தனர். ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், அவர்கள் சொல் கேட்டு துப்பாக்கிச்சூட்டை நிறுத்துவதாக இல்லை.
ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் அவர் காயம் அடைந்தாலும், சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை சுட்டும், பிடிக்க முடியாமல் போனது படை வீரர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
துப்பாக்கிச்சூடு பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், கண்காணிக்கப்பட்டு வந்த சந்தேக நபர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர், 29 வயதான அவரது பெயர் ஷெரீப் என தகவல்கள் கூறுகின்றன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தைகள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர். பல உணவு விடுதிகளிலும், ‘பார்’களிலும் கதவுகளை இழுத்து மூடினர். அங்கிருந்த மக்கள் அங்கேயே அடைக்கலம் தேடினர்.
இதற்கிடையே தாக்குதல் நடத்தி விட்டு தப்பிய நபர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து, அங்கு படையினர் சென்று சுற்றி வளைத்தனர். ஆனால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து, அந்த நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றம் மூடப்பட்டது. தாக்குதலில் பலியானவர்களுக்கு சபாநாயகர் ஆன்டனியோ தஜானி இரங்கல் தெரிவித்தார்.
அந்த நாட்டின் அதிபர் மெக்ரான் மந்திரிசபை அதிகாரிகளைக் கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்ட மெக்ரான், நடந்த சம்பவத்துக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார். நாட்டு மக்களுடன் இணைந்து நிற்பதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய நபரை தேடிப்பிடித்து கைது செய்வதற்காக அந்த நகரில் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 2 ஹெலிகாப்டர்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. #France #ChristmasMarket #Shooting
ஜம்மு - காஷ்மீரில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அடிக்கடி ஊடுருவ முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தி சுட்டுக்கொன்று வருகிறார்கள்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு காஷ்மீரின் அனந்த் நாக் மாவட்டம் சிகிபோரா என்ற இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டம் ஹிபுரா படாகன்ட் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு பாதுகாப்புப்படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்புப்படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்புப்படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.
பாதுகாப்பு படையினர் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் யார்? எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதேபோல தீவிரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவரும் பலியானார். எனகவுண்டர் நடந்த இடத்தில் இருந்து பாதுகாப்புப்படையினர் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
அந்த பகுதியில் மொபைல் மற்றும் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு காஷ்மீரின் அனந்த் நாக் மாவட்டம் சிகிபோரா என்ற இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டம் ஹிபுரா படாகன்ட் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு பாதுகாப்புப்படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்புப்படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்புப்படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.
பாதுகாப்பு படையினர் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் யார்? எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதேபோல தீவிரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவரும் பலியானார். எனகவுண்டர் நடந்த இடத்தில் இருந்து பாதுகாப்புப்படையினர் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
அந்த பகுதியில் மொபைல் மற்றும் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கென்யாவில் வணிக மையத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் காயமடைந்தனர். மேலும் இத்தாலி பெண் ஊழியரை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். #Kenya #ItalianWomanKidnap
நைரோபி:
ஆப்பிரிக்க நாடான கென்யாவில், கிலிப்பி நகரில் ஒரு வர்த்தக மையம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 3 பேர் குழந்தைகள்.
அவர்களை சுட்டு வீழ்த்திய அந்த நபர்கள், அங்கிருந்து 23 வயதான ஒரு பெண்ணை துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்றனர். அந்தப் பெண், இத்தாலியை சேர்ந்தவர் என்றும், தொண்டு அமைப்பு ஒன்றில் சேர்ந்து பணியாற்றி வந்தார் என்று தகவல்கள் கூறுகின்றன. தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் படையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதின் பின்னணி என்ன, தாக்குதல் நடத்திய நபர்கள் யார் என்பது பற்றி உடனடியாக எதுவும் தெரியவரவில்லை. ஆனால் இதை பயங்கரவாத தாக்குதல் என்று கருதி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில், கிலிப்பி நகரில் ஒரு வர்த்தக மையம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 3 பேர் குழந்தைகள்.
அவர்களை சுட்டு வீழ்த்திய அந்த நபர்கள், அங்கிருந்து 23 வயதான ஒரு பெண்ணை துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்றனர். அந்தப் பெண், இத்தாலியை சேர்ந்தவர் என்றும், தொண்டு அமைப்பு ஒன்றில் சேர்ந்து பணியாற்றி வந்தார் என்று தகவல்கள் கூறுகின்றன. தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் படையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதின் பின்னணி என்ன, தாக்குதல் நடத்திய நபர்கள் யார் என்பது பற்றி உடனடியாக எதுவும் தெரியவரவில்லை. ஆனால் இதை பயங்கரவாத தாக்குதல் என்று கருதி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
சிகாகோவில் உள்ள மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பெண் ஊழியர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். #ChicagoHospitalShooting
சிகாகோ:
இந்த துப்பாக்கி சூட்டில் மருத்துவமனையின் இரண்டு பெண் ஊழியர்கள், ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமி என 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 3.00 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், ஒரு பெண்ணை குறிவைத்தே தாக்குதலை நடத்தியுள்ளார். அந்த பெண்ணுக்கும் அவருக்கும் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. ஆனால் கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் துப்பாக்கி சூட்டில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #ChicagoHospitalShooting
அமெரிக்காவின் சிகோகா நகரில் உள்ள மெர்சி மருத்துவமனையின் கார் பார்க்கிங் பகுதியில் நேற்று புகுந்த ஒரு மர்ம நபர் திடீரென அங்கிருந்த ஒரு பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனைப் பார்த்த போலீசார் அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் மருத்துவமனையின் இரண்டு பெண் ஊழியர்கள், ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமி என 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 3.00 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், ஒரு பெண்ணை குறிவைத்தே தாக்குதலை நடத்தியுள்ளார். அந்த பெண்ணுக்கும் அவருக்கும் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. ஆனால் கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் துப்பாக்கி சூட்டில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #ChicagoHospitalShooting
சத்தீஸ்கரில் நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மாவோயிஸ்டுகள் இன்று தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். #Chhattisgarh
ராய்ப்பூர், நவ. 11-
90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு நாளையும், 2-வது கட்டமாக 72 தொகுதிக்கு 20-ந்தேதியும் தேர்தல் நடக்கிறது.
நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் சத்தீஸ்கரில் இன்று மாவோயிஸ்டுகள் 7 இடங்களில் வெடிகுண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
கான்கர் மாவட்டத்தில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் எல்லை பாதுகாப்புப்படை சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரசிங் காயம் அடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காட்கல்- கோம் கிராமத்துக்கு இடையே உள்ள காட்டுப் பகுதியில் மாவோயிடுஸ்கள் வெடிகுண்டுகளை வீசி தாக்கினர்.
பிஜப்பூர் பகுதியில் பாதுகாப்பு படைவீரர்களுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கி சண்டையில் மாவோயிஸ்டு ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் கைப்பற்றப் பட்டன.
இதன் காரணமாக சத்தீஸ்கரின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. தேர்தலை புறக்கணிக்க மாவோயிஸ்டுகள் ஏற்கனவே அழைப்பு விடுத்து இருந்தனர். கடந்த 15 தினங்களில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடத்தப்பட்ட 4-வது வெடிகுண்டு தாக்குதல் இதுவாகும். இதில் 13 பேரும் பலியாகி இருந்தனர்.
90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு நாளையும், 2-வது கட்டமாக 72 தொகுதிக்கு 20-ந்தேதியும் தேர்தல் நடக்கிறது.
நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் சத்தீஸ்கரில் இன்று மாவோயிஸ்டுகள் 7 இடங்களில் வெடிகுண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
கான்கர் மாவட்டத்தில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் எல்லை பாதுகாப்புப்படை சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரசிங் காயம் அடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காட்கல்- கோம் கிராமத்துக்கு இடையே உள்ள காட்டுப் பகுதியில் மாவோயிடுஸ்கள் வெடிகுண்டுகளை வீசி தாக்கினர்.
பிஜப்பூர் பகுதியில் பாதுகாப்பு படைவீரர்களுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கி சண்டையில் மாவோயிஸ்டு ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் கைப்பற்றப் பட்டன.
இதன் காரணமாக சத்தீஸ்கரின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. தேர்தலை புறக்கணிக்க மாவோயிஸ்டுகள் ஏற்கனவே அழைப்பு விடுத்து இருந்தனர். கடந்த 15 தினங்களில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடத்தப்பட்ட 4-வது வெடிகுண்டு தாக்குதல் இதுவாகும். இதில் 13 பேரும் பலியாகி இருந்தனர்.
காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவத்தினருக்கு போர்ட்டராக பணியாற்றியவர் உயிரிழந்தார். #Porterkilled #ceasefire
ஜம்மு:
காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள பர்க்வால் எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் பாகிஸ்தான் படையினர் இந்திய நிலைகளின்மீது துப்பாக்கிளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டுசென்று சேர்க்கும் போர்ட்டராக பணியாற்றியவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த நபர் ஜம்மு மாவட்டம், பல்வால் பாரத் பகுதியை சேர்ந்த தீபக் குமார் என தெரியவந்துள்ளது.
இதேபோல், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிம்பெர்காலி எல்லைக்கோட்டு பகுதியிலும் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.
உத்தம்பூர் பகுதியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Porterkilled #ceasefire
சர்வதேச எல்லையில் இந்திய படைகள் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் தனது கண்டனத்தை பதிவு செய்தது. #Pakistan #Summon #India
இஸ்லாமாபாத்:
காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு இந்திய வீரர்களும் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று முன்தினம் அங்கு இந்திய படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தானின் பிம்பர் பகுதியை சேர்ந்த முனாசா பிபி (வயது 22) என்ற இளம்பெண் உயிரிழந்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணை தூதர் ஜே.பி.சிங்குக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல், அவரிடம் நேரிலும் கண்டனத்தை பதிவு செய்தார்.
பாகிஸ்தான் எல்லையில் மக்களின் குடியிருப்பு பகுதிகளில் இந்திய வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாகவும், இது சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானது எனவும் பைசல் கூறினார். இந்தியாவின் அத்துமீறிய தாக்குதல்கள் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதாகவும் அவர் தெரிவித்தார். #Pakistan #Summon #India
காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு இந்திய வீரர்களும் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று முன்தினம் அங்கு இந்திய படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தானின் பிம்பர் பகுதியை சேர்ந்த முனாசா பிபி (வயது 22) என்ற இளம்பெண் உயிரிழந்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணை தூதர் ஜே.பி.சிங்குக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல், அவரிடம் நேரிலும் கண்டனத்தை பதிவு செய்தார்.
பாகிஸ்தான் எல்லையில் மக்களின் குடியிருப்பு பகுதிகளில் இந்திய வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாகவும், இது சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானது எனவும் பைசல் கூறினார். இந்தியாவின் அத்துமீறிய தாக்குதல்கள் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதாகவும் அவர் தெரிவித்தார். #Pakistan #Summon #India
எகிப்து நாட்டின் மத்திய பகுதியில் உள்ள மின்யா மாகாணத்தில் காப்டிக் கிறிஸ்தவர்கள் சென்ற பேருந்தின் மீது ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். #CopticChristians #7deadinEgypt
கெய்ரோ:
காப்டிக் எனப்படும் பழைமைவாத கிறிஸ்தவர்கள் எகிப்து உள்ளிட்ட சில நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எகிப்து நாட்டில் மிக அதிகமாக உள்ளனர்.
இந்நிலையில், எகிப்து நாட்டின் மத்திய பகுதியில் உள்ள மின்யா மாகாணத்தில் காப்டிக் கிறிஸ்தவர்கள் சென்ற பேருந்தின் மீது ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் மேலும் சிலர் காயமடைந்ததாகவும் எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #CopticChristians #7deadinEgypt
துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அமெரிக்க கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிட அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். #PittsburghShooting #US
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ‘ட்ரீ ஆப் லைப்’ என்ற யூத வழிபாட்டு தலம் அமைந்துள்ளது. வழிபாட்டுக்கு என அப்பகுதியில் மக்கள் கூடியிருந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்து சரமாரியாக சுட தொடங்கினான்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவன் ராபர்ட் பவர்ஸ் என்பது தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அத்துடன் வருகிற 31-ந்தேதி வெள்ளை மாளிகை, பொது மைதானங்கள், ராணுவ தளங்கள், கப்படற்படை நிலையங்கள் மற்றும் கப்பல்களில் அமெரிக்க கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவன் ராபர்ட் பவர்ஸ் என்பது தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அத்துடன் வருகிற 31-ந்தேதி வெள்ளை மாளிகை, பொது மைதானங்கள், ராணுவ தளங்கள், கப்படற்படை நிலையங்கள் மற்றும் கப்பல்களில் அமெரிக்க கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் வழிபாட்டு தலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியாகி உள்ளனர். #PittsburghShooting #US
வாஷிங்டன்:
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ட்ரீ ஆப் லைப் என்ற யூத வழிபாட்டு மையம் அமைந்துள்ளது.
வழிபாட்டுக்கு என அப்பகுதியில் மக்கள் கூடியிருந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்து சரமாரியாக சுட துவங்கினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 3 காவல்துறை அதிகாரிகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.
காவல்துறையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் காயமடைந்த மர்ம நபர், போலீசாரிடம் சரணடைந்தார். 11 பேரை கொலை செய்தது, போலீசாரை துப்பாக்கியால் தாக்கியது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பிட்ஸ்பர்க் பகுதிக்கு சென்று பார்வையிட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. #PittsburghShooting #US
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ட்ரீ ஆப் லைப் என்ற யூத வழிபாட்டு மையம் அமைந்துள்ளது.
வழிபாட்டுக்கு என அப்பகுதியில் மக்கள் கூடியிருந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்து சரமாரியாக சுட துவங்கினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 3 காவல்துறை அதிகாரிகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.
காவல்துறையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் காயமடைந்த மர்ம நபர், போலீசாரிடம் சரணடைந்தார். 11 பேரை கொலை செய்தது, போலீசாரை துப்பாக்கியால் தாக்கியது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பிட்ஸ்பர்க் பகுதிக்கு சென்று பார்வையிட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. #PittsburghShooting #US
சவூதி அரேபியா கடற்பகுதியில் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்படை ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். #TNFisherman #IranNavy
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சவூதி அரேபியாவின் கடல்பகுதியில் மீன்பிடித்துவிட்டு திரும்பிய போது ஈரான் கடற்படை ராணுவம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இந்த துப்பாக்கிச்சூடு அரங்கேறியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மீனவர்கள் ஆரோக்கிய ராஜ், விவேக், இளஞ்செழியன் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். #TNFisherman #IranNavy
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சவூதி அரேபியாவின் கடல்பகுதியில் மீன்பிடித்துவிட்டு திரும்பிய போது ஈரான் கடற்படை ராணுவம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இந்த துப்பாக்கிச்சூடு அரங்கேறியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மீனவர்கள் ஆரோக்கிய ராஜ், விவேக், இளஞ்செழியன் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். #TNFisherman #IranNavy
ஈரான் ராணுவ அணிவகுப்பில் 24 பேரை பலி கொண்ட பயங்கரவாத தாக்குதல் வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #Iran #MilitaryParade #TerroristAttack
டெக்ரான்:
ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன், 1980-ம் ஆண்டு ஈரானை ஆக்கிரமித்ததால் இரு நாடுகளுக்கு இடையே நடந்த போரின் தொடக்கத்தை நினைவுகூர்ந்து ஈரானில் உள்ள அவாஸ் நகரில் கடந்த 22-ந் தேதி ராணுவ அணிவகுப்பு நடந்தது. அப்போது அணிவகுப்பு மைதானம் அருகே உள்ள ஒரு பூங்காவில் இருந்து அணிவகுப்பில் கலந்துகொண்ட வீரர்களையும், பார்வையிட வந்திருந்த பொதுமக்களையும் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 24 பேர் கொல்லப்பட்டனர். 69 பேர் படுகாயம் அடைந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய 4 பேரில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.ஈரானை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை ஈரான் உளவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இது தொடர்பாக அந்த அமைச்சகம் கூறும்போது, “கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ஆயுதங்களும், தகவல் தொடர்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.இந்த தாக்குதலுக்கு அரபு பிரிவினைவாதிகளும், ஐ.எஸ். பயங்கரவாதிகளும் போட்டி போட்டுக்கொண்டு பொறுப்பேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன், 1980-ம் ஆண்டு ஈரானை ஆக்கிரமித்ததால் இரு நாடுகளுக்கு இடையே நடந்த போரின் தொடக்கத்தை நினைவுகூர்ந்து ஈரானில் உள்ள அவாஸ் நகரில் கடந்த 22-ந் தேதி ராணுவ அணிவகுப்பு நடந்தது. அப்போது அணிவகுப்பு மைதானம் அருகே உள்ள ஒரு பூங்காவில் இருந்து அணிவகுப்பில் கலந்துகொண்ட வீரர்களையும், பார்வையிட வந்திருந்த பொதுமக்களையும் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 24 பேர் கொல்லப்பட்டனர். 69 பேர் படுகாயம் அடைந்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X