search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறுப்பு"

    தோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து (30). தமிழகத்தை சேர்ந்த இவர் சமீபத்தில் தோகாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 800 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார்.

    இந்தப் போட்டியின்போது இவரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், ஸ்டெராய்டு என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக தெரிகிறது. இவர் தற்காலிகமாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    கோமதியின் 'பி' மாதிரியிலும் ஊக்கமருந்து கலந்திருப்பது தெரியவந்தால், இவர் நான்கு ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம். ஆசிய சாம்பியன்ஷிப்பில் வென்ற பதக்கமும் பறிபோகலாம். 

    ஆனால் இச்செய்தியை கோமதி தரப்பினர் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக, கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி கூறுகையில், கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி. இந்திய தடகள கூட்டமைப்பிடமிருந்து எங்களுக்கு எந்த வித தகவல்களும் வரவில்லை என தெரிவித்துள்ளார். 
    தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் சென்னையில் அம்பேத்கார் கல்லூரி எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் 17-ந்தேதி உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். #Vetriivel #HungerStrike
    சென்னை:

    பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் ஒருவர் ஆவார்.

    கடந்த 1 வருடத்துக்கும் மேலாக தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பணியாற்ற முடியாத காரணத்தால் மக்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்ய முடியவில்லை என்று அரசு மீது குற்றம் சுமத்தி வந்தனர்.

    இதைத் தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் அ.தி.மு.க. அரசை கண்டித்து தங்களது தொகுதியில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர்.



    ஆண்டிப்பட்டி தொகுதியில் இன்று தங்க தமிழ்ச் செல்வன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

    இதேபோல் சென்னையில் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வெற்றிவேல் அம்பேத்கார் கல்லூரி எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் 17-ந்தேதி உண்ணாவிரதம் இருக்க போலீசில் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் அந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீசார் அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர்.

    இதுகுறித்து வெற்றிவேல் கூறுகையில், இதற்கு முன்பு புரட்சித்தலைவி அம்மா கைதானபோது இந்த இடத்தில் நான் உண்ணாவிரதம் இருந்துள்ளேன். எனவே இப்போது போலீசார் எனக்கு அனுமதி கொடுக்க மறுப்பது வியப்பாக உள்ளது. எனவே நான் நீதிமன்றம் சென்று முறையிடுவேன். இதே இடத்தில் மீண்டும் அனுமதி பெற்று உண்ணாவிரதம் இருப்பேன் என்றார். #Vetriivel  #HungerStrike

    உத்தரப்பிரதேச மாநிலம் சாஜஹான்பூர் பகுதியில் தன்னை கற்பழித்தவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததால் மனமுடைந்த பெண் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டார். #UttarPradesh
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வர்கிறது. உ.பி. மட்டுமன்றி இந்தியா முழுவதும் இந்த அவலநிலை உருவாகி வருவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்கள் பாதுகாப்பின்மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    அதே சமயம், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளில் சிலர், தங்கள் பணியை முறையாக செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. அதன் ஒருபகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம் சாஜஹான்பூர் பகுதியில் தன்னை கற்பழித்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுத்ததுடன், குற்றவாளியுடன் சமரசம் செய்துகொள்ள அறிவுறுத்தியதால் மனமுடைந்த பெண் காவல்நிலையத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

    இதையடுத்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, 3 காவலர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #UttarPradesh
    அடியலா சிறையில் இருந்து சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாறிச்செல்ல நவாஸ் ஷெரீப் மகள் மரியம் மறுத்து விட்டதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன. #NawazSharif #Maryam
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் பணத்தில் லண்டன் அவென்பீல்டு சொகுசு வீடுகளை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பான வழக்கில் அவருக்கு 10 ஆண்டு, அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டு, மருமகன் கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

    தண்டனையை எதிர்த்து 3 பேரும் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளனர்.

    தற்போது அவர்கள் உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களையொட்டி நவாஸ் ஷெரீப்பையும், மரியத்தையும் கிளைச்சிறையாக மாற்றப்பட்டு உள்ள சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாற்ற சிறைத்துறை பரிசீலித்து வருகிறது என தகவல்கள் வெளியாகின.

    ஆனால் மரியம், அடியலா சிறையில் இருந்து சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாறிச்செல்ல மறுத்து விட்டதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.

    தனது தந்தை நவாஸ் ஷெரீப், கணவர் கேப்டன் சப்தார் ஆகியோருடன் தான் அடியலா சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதைத்தான் விரும்புவாக அதிகாரிகளிடம் மரியம் தெரிவித்து விட்டார் என அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

    நவாஸ் ஷெரீப்பும், மரியமும் காவலில் வைக்கப் படுவதற்காக சிஹாலா போலீஸ் கல்லூரி வளாகத்தில் உள்ள ஓய்வு இல்லம் ரூ.20 லட்சம் செலவில் கிளைச்சிறையாக மாற்றப்பட்டு உள்ளதாக தெரிய வந்து உள்ளது.  #NawazSharif #Maryam #tamilnews 
    பாலியல் பலாத்கார வழக்கில் பாதிரியார்களுக்கு முன்ஜாமீன் வழங்க இயலாது என கேரள ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார். #KeralaHighCourt #KeralaPriests
    கொச்சி:

    கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தின் மலங்கரா மரபுவழி திருச்சபையில் பாவ மன்னிப்பு கேட்க வந்த ஒரு பெண்ணை கற்பழித்த 4 பாதிரியார்கள் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்களில் சோனி வர்கீஸ், மேத்யூஸ், ஜெய்ஷ் கே ஜார்ஜ் ஆகிய மூவரும் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    அதில் அரசியல் நெருக்கடி காரணமாக தங்கள் மீது இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்று அவர்கள் கூறி இருந்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி ராஜா விஜயராகவன், “இந்த புகார் மிகவும் தீவிரமானது. இதுபோன்ற நிலையில் இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை கடுமையாக பாதிக்கும். ஏனென்றால் விசாரணை தற்போது தொடக்க நிலையில்தான் உள்ளது. எனவே முன் ஜாமீன் வழங்க இயலாது” என்று குறிப்பிட்டார்.  #KeralaHighCourt #KeralaPriests #tamilnews

    பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் மின்னலை பார்த்து மணமகன் பயந்ததால் மணமேடையிலேயே மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா:

    பொதுவாக, வடமாநிலங்களில் சில திருமணங்கள் வினோத காரணங்களுக்காக மேடையிலேயே நின்றுபோகும் நிகழ்வு அவ்வப்போது நடக்கிறது. உதாரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு ரசகுல்லா இல்லை என்பதற்காக நிறுத்தப்பட்ட கல்யாணம், ஐஸ் கிரீம் வைக்காததால் ஏற்பட்ட தகராறில் மண்டை உடைப்பு என திருமணம் நிறுத்தப்படுவதற்கான காரணங்கள் நீள்கின்றன.

    இந்த வரிசையில், பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த திருமணத்தின்போது மணமேடையில் இருந்த மாப்பிள்ளை மின்னலை பார்த்து பயந்து, வினோதமாக நடந்து கொண்டார். இதனைக் கண்ட மணப்பெண்ணோ மேடையிலேயே மாப்பிள்ளை வேண்டாம் எனக்கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

    இதனால் இரு வீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, மாப்பிள்ளை வீட்டார் சிலர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. சில வினாடிகள் தோன்றி மறைந்த மின்னல் மணமகனுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியா நினைவாக மாறிவிட்டது. 
    ×