search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103897"

    பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறையை கண்டித்து திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக எம்.பி கனிமொழி கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். #PollachiAbuseCase #DMK #Kanimozhi
    கோவை:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள்-பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பொள்ளாச்சி மாக்கினாம் பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. 

    இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்முறையை கண்டித்து திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி கனிமொழி கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். 

    பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறையைக் கண்டித்து திருவள்ளுவர் திடலில் திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது.



    அப்போது பேசிய கனிமொழி, பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தமிழகத்தையே தலைகுனியச் செய்துள்ளது. ஏழு ஆண்டுகளாக ஒரு நெட்வொர்க் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது. ஆனால் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    காவல்துறை யாருக்கு வேலை செய்கிறார்கள்...? பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளிவரும் அளவிற்கு காவல் துறையினர் நடந்து கொண்டுள்ளனர் என கண்டனம் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி. கனிமொழியை போலீசார் கைது செய்தனர். சிறிது நேரத்தில்
    கைதான அவரை போலீசார் விடுவித்தனர். #PollachiAbuseCase #DMK #Kanimozhi 
    மாற்றுத்திறனாளிகளை சித்தரித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதை கண்டித்து கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்கம் சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கடலூர்:

    மாற்றுத்திறனாளிகளை சித்தரித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதை கண்டித்து கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்கம் சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகம், மாவட்ட பொருளாளர் தட்சிணா மூர்த்தி, பண்ருட்டி தலைவர் தனுஷ் பத்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் விருத்தாச்சலம் தலைவர் அமரேசன், மாவட்ட மகளிரணி தலைவர் சித்ரா, நிர்வாகிகள் பாலமுருகன், கொளஞ்சிநாதன், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    புல்வாமா தாக்குதலைக் கண்டித்து அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #PulwamaAttack #IndianCommunityProtest
    நியூயார்க்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி பிற நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். போராட்டம், கடையடைப்பு என தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.



    அவ்வகையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று புல்வாமா தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.

    பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கக் கூடாது, பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும், சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசாரை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். #PulwamaAttack #IndianCommunityProtest
    3-வது நாளாக நேற்று பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. இதில் கடலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    15 சதவீதம் ஊதிய நிர்ணய பலனுடன் 3-வது ஊதியமாற்றத்தை அமல்படுத்த வேண்டும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும், அரசு விதிகளின்படி மட்டுமே நிறுவனத்திடம் இருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும், பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கடந்த 18-ந் தேதி மு தல் தொடர் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதன்படி கடலூரில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊழியர் அன்பழகன் தொடக்க உரையாற்றினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சேகர், ஒப்பந்த ஊழியர்கள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ஆனந்தன், தனியார் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகி குருராமலிங்கம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள்.

    போராட்டம் நடத்திவரும் எங்களை நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதனால் எங்களது போராட்டம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமாக நடைபெற வாய்ப்பு உள்ளது. அப்படி போராட்டம் நடந்தால் பி.எஸ்.என்.எல். சேவைகள் முற்றிலும் பாதிக்கப்படும் என பி.எஸ்.என்.எல். ஊழியர் ஒருவர் தெரிவித்தார். 
    மகாத்மா காந்தி உருவப்படத்தை அவமதிப்பு செய்த இந்து மகாசபை கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    உடன்குடி:

    மகாத்மா காந்தி உருவப்படத்தை அவமதிப்பு செய்த இந்து மகாசபை கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், உ.பி. அரசை கண்டித்தும் உடன்குடி வட்டார, நகர காங்கிரஸ் சார்பில் உடன்குடி பேரூராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர தலைவர் முத்து முன்னிலை வகித்தார். வட்டார தலைவர் துரைராஜ் ஜோசப் தொடங்கி வைத்தார். இதில் தெற்கு மாவட்ட பொருளாளர் நடராஜன், துணைத்தலைவர் ஆதிலிங்கம், வட்டார துணைத்தலைவர் ரகுமத்துல்லா, பொருளாளர் அருள்ராமச்சந்திரன், மாவட்ட இலக்கிய பிரிவு தலைவர் முத்துகுமார், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹென்றி, வட்டார செயலாளர் பிரபாகரன், ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் சிவநேசன், முன்னாள் வட்டார தலைவர் வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




    திருவாரூர்:

    ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திருவாரூர் பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார்.

    இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் பழனிவேல், கலைமணி, குமாரராஜா, கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதேபோல் வேலை வாய்ப்பு வழங்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருவாரூர் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். இதில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    பெரம்பலூர்:

    அரசு மற்றும் பொதுத்துறைகளில் உள்ள காலிப்பணி இடங்களை நிரப்பிட வேண்டும். ரெயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும். அரசுப்பணியிடங்களை ஒழிக்கும் அரசாணை 56-ஐ ரத்துசெய்திட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் உற்பத்தி பொருட்களை பயன்படுத்தி புதிய தொழிற்சாலைகள் உருவாக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பரசன், மாவட்டக்குழு உறுப்பினர் கலைச்செல்வி உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். 
    திருவெள்ளறையில் பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    மண்ணச்சநல்லூர்:

    திருவெள்ளறை ஊராட்சிக்கு உட்பட்ட தென்றல் நகர் பகுதியில் குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது. அதேபோல் ,எம்.ஜி.ஆர்.நகர், நேதாஜி நகரில் தார் சாலைகள் அமைக்க வேண்டும், திருவெள்ளறை பேருந்து நிறுத்தம் அருகே நவீன கழிப்பிடம் கட்ட வேண்டும் என்பன மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாக இருந்து வருகிறது.

    இது போல் பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருச்சி மாவட்டத் துணைத்தலைவர் முருகேசன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    கட்சியின் கிளைச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சிதம்பரம், சுப்பிரமணியன், லிங்கராணி, ரவிச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் டைபி அமைப்பின் மாவட்ட பொருளாளர் ஆனைமுத்து நன்றி கூறினார்.
    அரசு கண்டக்டரை தாக்கிய செக்கிங் இன்ஸ்பெக்டரை கண்டித்து அரசு டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டல கரூர் கிளையில் அரசு பஸ் கண்டக்டராக மோகன் குமார் பணியாற்றி வருகிறார். இவரை இன்று காலை ஈரோடு அரசு போக்குவரத்து கழகத்தின் செக்கிங் இன்ஸ்பெக்டர் பிரபு கலையரசன் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக டெப்போ முன்பு இன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு நிர்வாகி சரவணன் தலைமை வகித்தார்.

    தொழிற்சங்கத்தை சேர்ந்த ரவி, சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்று காலை 45 நிமிடங்கள் டெப்போவில் இருந்து அரசு பஸ்கள் ஏதுவும் எடுக்கப்படவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தாலுகா போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். #tamilnews
    ஜாக்டோ-ஜியோஅமைப்பினரின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பெரும்பாலான அரசு பணிகள் முடங்கின. இதன் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
    ராமநாதபுரம்:

    தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்றவற்றை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அடங்கிய ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மாநிலம் முழுவதும் நேற்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    அதன்படி மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா தலைநகரங்களிலும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிவபாலன், முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    பரமக்குடியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் சாமிஅய்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். ராமேசுவரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொருளாளர் புதுராஜா முன்னிலை வகித்தார்.

    கீழக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக தமிழாசிரியர் கழக அமைப்பாளர் குமாரவேல் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் ராமு முன்னிலை வகித்தார். திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய தாலுகாக்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டதால் மாவட்டத்திலுள்ள ஆயிரத்து 244 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் செயல்படாமல், பள்ளிகள் பூட்டிக் கிடந்தன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.

    இதேபோல் மாவட்டத்திலுள்ள 64 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அந்த பள்ளிகளிலும் கல்வி பணி பாதிக்கப்பட்டது. மாவட்ட காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் தலைவர் துரைராஜ், செயலாளர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் முழுமையாக போராட்டத்தில் கலந்து கொண்டதால் தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம் உள்ளிட்டவைகள் பூட்டப்பட்டிருந்தன. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் இந்த அலுவலகங்களை நாடி வந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    மாவட்டத்தில் 9 இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டதால் ஒட்டுமொத்தமாக அரசு பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. அரசு தரப்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 36 துறைகளில் பணியாற்றிவரும் 15 ஆயிரத்து 748 பேரில், 11 ஆயிரத்து 182 பேர் பணியில் ஈடுபட்டதாகவும், 281 பேர் விடுமுறையில் உள்ளதாகவும், 4 ஆயிரத்து 285 பேர் மட்டும் எவ்வித விடுமுறை அறிவிப்புமின்றி வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மக்களின் அரசு சார்ந்த பணிகள், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டன.

    கடலாடி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் முருகேஸ்வரி தலைமை தாங்கினார். துணை தாசில்தார் செந்தில்வேல்முருகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் முனியசாமி, செயலாளர் ஆனந்தராஜ், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணை தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இணை செயலாளர் குருசாமி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட துணை செயலாளர் தாமஸ் இமானுவேல் ஜேம்ஸ், தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் பாலமுருகன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கண்ணகி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் வட்டார தலைவர் முத்துவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    மானாமதுரை யூனியன் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மானாமதுரை பகுதி ஒருங்கிணைப்பாளர் ஜீவா முன்னிலை வகித்தார். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    ஊத்தங்கரை அருகே கோதண்டராமர் சிலை கொண்டுசெல்ல எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை பகுதியில் கடந்த 5 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கோதண்டராமர் சிலை ஊத்தங்கரை நான்கு முனைசந்திப்பு வழியாக பெங்களூரு கொண்டு செல்ல இருக்கிறது.

    இந்த நிலையில் சிலையை கொண்டுசெல்ல ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உள்ள அண்ணாசிலை ரவுண்டானா இடையூறாக இருப்பதாக கூறி அதனை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றி கொண்டிருந்தனர். தகவல் அறிந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமையில், மாவட்ட செய்தி தொடர்பாளர், மாவட்ட பொருளாளர், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தண்ணீர் கொடுக்காத கர்நாடகாவிற்கு தமிழ்நாட்டின் கனிமவளம் மட்டும் வேண்டுமா? என முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை செய்து அனுப்பி வைத்தனர். 

    பின்னர் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஊத்தங்கரை டி.எஸ்.பி.யிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
    சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோஅமைப் பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    அங்கன்வாடி பணிக்கு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இதில் மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களை மூடக்கூடாது.

    புதிதாக தொடங்கப்பட உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கூடாது. மாண்டிச்சோரி ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.

    மாவட்டம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், நாகேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில், ஜாக்டோ-ஜியோவின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக் குமார், முத்துசாமி, ரவிச்சந்திரன், மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சங்கர், இளங்கோவன், ஜோசப் சேவியர், மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அன்பரசு, பிரபாகர், ராஜா, செல்வக்குமார், தமிழரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    ×