search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103897"

    திருச்சியில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு அனுமதி அளித்த மத்திய அரசின் முடிவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருச்சி:

    திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு அனுமதி அளித்த மத்திய அரசின் முடிவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு  தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில தலைவர் தில்லை மெடிக்கல் மனோகரன் தலைமை தாங்கினார்.

    திருச்சி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் கிருபானந்த மூர்த்தி, செயலாளர் சொக்கலிங்கம், பொருளாளர்   சின்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மருத்துவர் பரிந்து ரையின் மட்டுமே தற்போது மருந்துகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் முறை நடைமுறைபடுத்தப்பட்டால் தவறான மருந்துகள் எளிதில் வாங்க  முடியும். இதனால் இளைய தலைமுறையினர் வாழ்க்கை சீரழியும் நிலை உருவாகும்.

    ஆன்லைன் மருந்து விற்பனை பாதிக்கும் உருவாகும் பட்சத்தில் சிறிய கிராமங்கள் மற்றும் சிறிய அளவிலான நகரங்களில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைப்பது அரிதாகி விடும். போலி மருந்துகள் நடமாட்டம் மற்றும் தரம் குறைந்த மருந்துகள் நடமாட்டமும் இதனால் அதிகரிக்கும். ஊக்க மருந்துகள், கருத்தடை மாத்திரை மற்றும் அறுவை சிகிச்சையின்  போது பயன்படுத்தப்படும் வலிநிவாரணி மருந்துகளை இளைஞர்கள் தவறான முறையில் பயன்படுத்துவதோடு, கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும்.

    இந்த தொழிலை நம்பி 8 லட்சம் உறுப்பினர்கள் நேரடியாகவும்,  40 லட்சம் பேர் மறைமுகமாகவும் மற்றும் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். மேலும் மருந்து ஆளிநர்களுக்கான பட்டயப்படிப்புகளை படித்து கொண்டிருக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    திருச்சி மாவட்ட மொத்த மருந்து வியாபாரிகள் சங்க தலைவர் கூறுகையில், ஆன்லைன் மூலம் பிற பொருட்களை   வாங்குவதில் எந்த பிரச்சினைகளும் இல்லை. மருந்துகளை ஆன்லைனில் வினியோகம் செய்வதால் எவ்விதமான மருந்துகளை யார் வேண்டுமானாலும் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். தவறான மருந்துகளை வாங்கி இளைய சமுதாயம் சீரழியும் சூழ்நிலை உருவாகும். இதை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறினார்.
    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ், சங்க புரவலர் பெரியசாமி, ஸ்ரீரங்கம் மண்டல தலைவர் சரவணன் உள்ளிட்ட 200&க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் திருச்சி மாவட்ட  கலெக்டர் ராசா மணியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. #tamilnews
    ராணிப்பேட்டை சிப்காட் பெல் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிற்சங்கத்தினர் பொது வேலை நிறுத்தம் முன்னிட்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து பெல் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை சிப்காட் பெல் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிற்சங்கத்தினர் பொது வேலை நிறுத்தம் முன்னிட்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து பெல் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் புதிய பணி நியமனம் செய்திட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுபடுத்திட வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்கிட வேண்டும், வேலையின்மையை போக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், குறைந்தபட்ச மாத பென்சன் ரூ.3000 வழங்க வேண்டும், பொதுதுறைகளை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, தொழிலாளர் நலசட்டங்களை திருத்தாதே உள்ளிட்ட 12அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்தனர்.

    இதில் தொழிற்சங்கத்தினர் பாண்டியன், சிவகுமார், கணேஷ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #tamilnews
    மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் இன்று அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #WinterSession #ADMKMPsProtest
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ரபேல் ஒப்பந்த விவகாரம் மற்றும் மாநிலம் சார்ந்த பிரச்சினைகனை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் பாராளுமன்ற மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை விடுத்தார். அதன்பின்னரும் அமளி நீடித்ததால், அதிமுக உறுப்பினர்கள் 24 பேர் 5 நாட்களுக்கு கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.



    இந்நிலையில் அதிமுக உறுப்பினர்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், எம்பிக்கள் அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் அவையை 12 வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். #WinterSession #ADMKMPsProtest
    திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருச்சி:

    திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அமைச்சர் அறிவித்தபடி தினக்கூலியாக ரூ.380 வழங்கிட வேண்டும், கஜா புயல் பாதித்த பகுதிகளில் பராமரிப்பு பணிகள் செய்பவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற அமைச்சர் உத்தரவினை நிறைவேற்ற வேண்டும், பணியின் போது ஏற்படும் விபத்து செலவினை வாரியம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் நாகை ராஜராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

    இதில் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராளமான தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் சுமார் 350க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    பீகார் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதை கண்டித்து முதல் மந்திரி நிதிஷ்குமார் வீட்டின் முன்னர் காங்கிரஸ் இளைஞர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #YouthCongress #BiharCM #NitishKumar
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் பெருகி வருகின்றன.

    காவல்துறையை தனது முக்கிய இலாகாவாக வைத்திருக்கும் முதல் மந்திரி நிதிஷ்குமார், அதிகரித்துவரும் இந்த குற்றங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

    இந்நிலையில், அம்மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள முதல் மந்திரி நிதிஷ்குமார் வீட்டின் முன்னர் இன்று காங்கிரஸ் இளைஞர் அணியை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். முதல் மந்திரியை கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் நிதிஷ்குமார் வீட்டை நோக்கி முன்னேறி சென்றனர்.



    போலீசார் லேசான தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் அவர்களை கட்டுப்படுத்தி தடுக்க முயன்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. #YouthCongress #BiharCM #NitishKumar
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் இன்று காலை கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். உட்பிரிவு பட்டா மாறுதல் கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் கல்வித்தகுதியை பட்டப் படிப்பாக உயர்த்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயனுள்ள கணினி மற்றும் இணைய தள வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

    இதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார்.

    மாவட்ட இணைச் செயலாளர் சுரேஷ், மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகரன், பெரிய தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட போராட்டக்குழு தலைவர் ராமன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மண்டல செயலாளர் ஜெயராமன், கடலூர் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் புஷ்ப காந்தன், மாவட்ட தலைவர் பெரியபிள்ளை, மாநில விவசாய சங்க செயலாளர் குமரகுரு, மாவட்ட அமைப்பு செயலாளர் இந்திரகுமார், மாவட்ட பொருளாளர் சிவக்குமார், மாவட்ட இணைச்செயலாளர் கண்ணதாசன், மூர்த்தி ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். இதில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பயணப்படி அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திருமாவளவன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் செந்தில்நாதன், மாவட்ட துணைத்தலைவர் அய்யப்பன், மாவட்ட துணை செயலாளர் சங்கர், மாவட்ட இணைச்செயலாளர் சிவலிங்கம், மாவட்ட செய்தி தொடர்பாளர் குமாரசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதில் கடலூர் மாவட்டம் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் கமல்ராஜ் நன்றி கூறினார்.
    மன்னார்குடியில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சுந்தரக்கோட்டை:

    பணியிடங்களை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். அலுவலகங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இணையதளம் மூலம் சான்றிதழ்களை வழங்க வசதியாக கணினி வழங்க வேண்டும். இணையதள பணிகளுக்கு ஆகும் செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    பணிபுரியும் கிராமத்தில் தங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையொட்டி தமிழ்நாடு கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சற்குணம் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் ராஜ்குமார், கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகள் 164 பேர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
    தஞ்சையில் ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர். #Sterlite
    தஞ்சாவூர்:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதுடன் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் ஆலையைத் திறப்பதற்கான வழிமுறைகளை வகுத்து, ஆலை இயங்குவதற்கான அனுமதியை மூன்று வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று தஞ்சை ரெயில் நிலையம் முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பினர் பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் காளியப்பன் தலைமை தாங்கினார். அனுமதியின்றி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 40 பேரை தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் போலீசார் கைது செய்தனர். #Sterlite

    உடன்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    உடன்குடி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி உடன்குடி, சாத்தான்குளம் ஒன்றிய குழு சார்பில் உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில்  உடன்குடி பகுதியில் பழுதடைந்த ரோடுகளை புதுப்பிக்க கோரியும், நிறுத்தப்பட்ட மினி பஸ்களை மீண்டும் இயக்க கோரியும், மணப்பாடு மீனவர்களுக்கு தூண்டில் வளைவு அமைக்க உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். 

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆண்டி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராமசாமி,  ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், உதவி செயலாளர்கள் கணபதி, முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சங்கர், ராஜேஷ், பாலன், பூங்காவனம் உட்பட பலர் பேசினர். 
    முடிவில் உடன்குடி ஒன்றிய பொருளாளர் நாராயணன் நன்றி கூறினார்.
    அறந்தாங்கியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    அறந்தாங்கி: 

    அறந்தாங்கியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் முத்தமிழன் நாகமுத்து தலைமை தங்கினார். கலைமுரசு முன்னிலை வகித்தார். திருமாறன் வரவேற்றார். 

    ஆர்ப்பாட்டத்தில் கஜா புயல் காற்றில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு முறையாக நிவாரணம் வழங்க வேண்டும். புயல் காற்றில் வீடு, ஆடு, மாடு இழந்த பொதுமக்களுக்கு நிவாரண மதிப்பை முறையாக எடுத்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். காற்றில் சேதம் அடைந்த மின்மாற்றி கம்பங்களை சரி செய்து உடனே மின்சார வசதி ஏற் படுத்தி கொடுத்து மின்சார கட்டணத்தில் விலக்கு அளித்து, பயிர் காப்பீடுகளை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

    இதில் திலீபன் ராஜா, தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜெய்சங்கர் நன்றி கூறினார். 
    தளி மற்றும் ஜவளகிரி பகுதிகளில் யானைக்கூட்டம் தினந்தோறும் வந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருவதால் அதனை கட்டுப்படுத்தாத வனத்துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    தேன்கனிக்கோட்டை:

    கர்நாடக மாநிலத்தில் இருந்து தேவர்பெட்டா வழியாக தளி மற்றும் ஜவளகிரி பகுதிகளில் தமிழக எல்லைக்குள் நுழைந்த யானைக்கூட்டம் தினந்தோறும் விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது. 

    இந்த யானை கூட்டத்தை கட்டுப்படுத்தாத வனக துறையினரை கண்டித்தும், யானைகள் ஊருக்குள் வராதவாறு அகழிகள் வெட்டி யானை கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பயிர் சேதாரங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கக்கோரியும் தேன்கனிக்கோடடை பழைய பஸ் நிலையம் பக்கத்தில் உள்ள வனச்சரக அலுவலகத்தின் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் பூதட்டியப்பா முன்னிலை வகித்தார்.
    மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி இன்று திருச்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #MekedatuDam #DMK #MKStalin #Congress
    திருச்சி:

    கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது.

    இதற்கான வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு தமிழக அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார் . மேலும் தமிழக அரசு இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளது.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டினால் தமிழகத்திற்கு காவிரி நீர் வருவது ஒட்டுமொத்தமாக தடுத்து நிறுத்தப்பட்டுவிடும். இதனால் டெல்டா மாவட்டங்களில் ஒருபோக நெல் சாகுபடி கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்பதால் தமிழகத்தில் இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு விவசாய அமைப்புகளும் மத்திய அரசை கண்டித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    இதற்கிடையே மேகதாது பிரச்சனை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கடந்த 29-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டியது.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் 9 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய அணை கட்டும் கர்நாடகாவின் விரிவான திட்ட மதிப்பீட்டறிக்கை தயாரிப்பதற்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், இது போன்று தன்விருப்பம் போல் புதிய அணை கட்டி தமிழகத்தின் விவசாயத்தையும், குடிநீர்த் தேவையையும் வஞ்சிக்கும் முயற்சிகளில் கர்நாடக மாநில அரசு ஈடுபடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.

    மேலும் மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி இன்று (டிசம்பர் 4-ந்தேதி, செவ்வாய்கிழமை) அன்று காலை 10 மணியளவில் திருச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.


    அதன்படி தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பார்வர்டு பிளாக் கட்சி மாநில துணைப்பொது செயலாளர் வெங்கடேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தி.முக. தோழமை கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    மேலும் இந்த போராட்டத்தில் விவசாய சங்க தலைவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். #MekedatuDam #DMK #MKStalin #Congress
    ×