என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 103897"
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாமல் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக் கோரி இன்று கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.
இந்த போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட தோழமை கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
அதன்படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கவர்னர் மாளிகையின் அருகே சைதாப்பேட்டை சின்னமலை அருகே இன்று காலை ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், மே-17 இயக்க நிர்வாகிகள், இயக்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். விடுதலை செய், விடுதலை செய், 7 பேரையும் விடுதலை செய் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் வைகோ மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர். #MDMK #Vaiko #RajivCase #Vaikoarrested #Rajivmurder #Rajivmurderconvicts
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாமல் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக் கோரி இன்று கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.
இந்த போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட தோழமை கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
அதன்படி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் சைதாப்பேட்டை சின்னமலை அருகே ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்த போராட்டத்துக்கு தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., மாவட்டச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, தாயகம் கவி எம்.எல்.ஏ., நிர்வாகிகள் சைதை குண சேகரன், பாலவாக்கம் விசுவநாதன், சோமு, மணிமாறன், ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா உள்ளிட்ட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மே-17 இயக்க நிர்வாகிகள், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். விடுதலை செய், விடுதலை செய், 7 பேர்களை விடுதலை செய் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.
போட்டி அரசாங்கம் அமைத்து செயல்படுவது போன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் செயல்பாடு இருக்கிறது. எங்களின் அடுத்த போராட்டம் என்ன என்பதை இப்போது சொல்ல மாட்டேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எல்லோரிடமும் கலந்து பேசி அடுத்த போராட்டத்தை அறிவிப்பேன். அடுத்த போராட்டம் இதைவிட வேகமாக இருக்கும். தமிழ்நாட்டுக்குள் எங்கும் கவர்னரை நுழைய விடமாட்டேன். இதற்கு முன்பு தி.மு.க. மட்டும் தான் போராடியது. இனி எல்லோரும் சேர்ந்து போராடுவோம். தமிழ்நாட்டுக்குள் எந்த ஊருக்குள்ளும் ஆய்வு நடத்த அவரை நுழைய விடமாட்டோம். எந்த ஊர் அதிகாரிகளையும் பார்க்க விடமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-
7 பேரின் விடுதலையை அனைவரும் எதிர்நோக்கி உள்ள நேரத்தில் கவர்னர் இன்னும் மவுனமாக இருக்கிறார். சிறையில் உள்ள 7 பேரும் நம் சகோதரர்கள். நமது ரத்தங்கள். நமது உணர்வுகள். தேவையில்லாமல் உள்ளே வாடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை உடனே விடுதலை செய்ய தேவையான நடவடிக்கையை கவர்னர் எடுக்க வேண்டும் என்றார்.
போராட்டத்தையொட்டி ஏராளமான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. #MDMK #Vaiko #RajivCase
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த அனைத்து கட்சி கூட்டம் 24 மணி நேரத்துக்குள் கூட்டப்பட்ட கூட்டம். ஏற்கனவே ஒத்த கருத்துடைய கட்சிகளை அணுகி இந்த கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கலந்து பேசிய நேரத்தில் உடனடியாக இந்த கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.
மற்ற கட்சிகளை ஏன் அழைக்கவில்லை? என்ற ஒரு கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது.
எனவே மற்ற கட்சிகளை எல்லாம் அழைக்க கூடிய அளவுக்கு நேரம் இல்லாத காரணத்தால் நாங்கள் அழைக்க முடியாத நிலை ஏற்பட்டது. நாங்கள் ஏற்கனவே ஒருங்கிணைந்து பல்வேறு நிலைகளில் ஒன்று சேர்ந்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி கொண்டிருக்க கூடிய கட்சிகளோடு சேர்ந்து இந்த கூட்டத்தை கூட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.
நியாயமாக இந்த ஆர்ப்பாட்டத்தை டெல்டா பகுதியில்தான் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரியும்.
எனவேதான் திருச்சியில் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி பேதங்களை மறந்து கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரும் பங்கேற்க வேண்டும்.
டெல்டா பகுதியில் உள்ள மக்களும் விவசாயிகளும் இதில் பங்கேற்க உள்ளனர். முதற்கட்டமாக இந்த ஆர்ப்பாட்டத்தை அறிவித்து உள்ளோம். அனைத்து கட்சி தலைவர்களும் அதில் பங்கேற்க இருக்கிறார்கள்.
கே:- சிறிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுமா?
ப:- அரசியலுக்கு அப்பாற்பட்டு யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இப்போது உங்கள் மூலமாகவும் மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
கே:- பாரதிய ஜனதா கட்சி, அ.ம.மு.க. போன்ற கட்சிக்கு அழைப்பு விடுப்பீர்களா?
ப:- வந்தால் வரவேற்கிறோம்.
(வைகோ குறுக்கிட்டு) மேகதாது விஷயத்தில் கேடு செய்ததே பாரதிய ஜனதா அரசுதான். அவர்களை எப்படி அழைப்பது? என்றார். #MekedatuDam #DMK #MKStalin
கொருக்குப்பேட்டை நேரு நகர் முதல் எழில் நகர் வரை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கூறி தே.மு.தி.க. சார்பில் இன்று கொருக்குப்பேட்டை கே.என்.எஸ். டிப்போ அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் மதிவாணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் செந்தில்குமார் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினார்கள். தகவல் அறிந்ததும் ஆர்.கே.நகர் போலீசார் விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களில் 200 பேரை கைது செய்தனர். அவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #DMDK
கடலூர்:
புயல், மழையால் பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்ட செயலாளர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மணிவண்ணன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை:
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஓசூரில் நடந்துள்ள ஆணவப்படுகொலைகளைக் கண்டித்து வருகிற 20-ந்தேதி காலை 10 மணிக்கு எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெறும்.
ஓசூருக்கு அருகே உள்ள சூடகொண்டபள்ளியைச் சேர்ந்த நந்தீஸ்-சுவாதி ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர். தலித் சமூகத்தைச் சார்ந்த இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதற்கு சுவாதியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஓசூர் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த நந்தீஸ்- சுவாதி ஆகிய இருவரையும் கடந்த பத்தாம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே நந்தீஸ்- சுவாதி ஆகியோரின் சடலங்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாண்டியா மாவட்டம் சிவனசமுத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கம்பியால் கைகள் பின் புறமாக வைத்து கட்டப்பட்டுள்ள நிலையில் அந்த சடலங்கள் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சுவாதியின் தந்தை மற்றும் சில உறவினர்களைப் போலீஸ் கைது செய்துள்ளது. ஆனால், கொலை நடந்திருப்பதைப் பார்க்கும் போது திட்டமிட்ட முறையில் கூலிப்படையினரின் உதவியோடு இக்கொலை நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
எனவே, இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து வழக்கு முடியும் வரை அவர்களுக்கு ஜாமீன் வழங்காமல் விரைவு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்து அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல் துறையை வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டில் கூலிப்படை கலாச்சாரம் பெருகி விட்டதாகவும், மகராஷ்டிரா கர்நாடகா முதலான மாநிலங்களில் அதற்கெனக்கடுமையாக சட்டம் இருப்பதைபோல தமிழ் நாட்டிலும் சட்டம் இயற்றப்படவேண்டும் எனவும் சில நாட்களுக்கு முன்னால் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய குற்றங்களுக்கு சிலர் அரசியல் லாபம் கருதி செய்து வரும் வெறுப்பு பிரச்சாரமே காரணம். அதுமட்டுமில்லாமல் தமிழக அரசு இதில் காட்டி வரும் மெத்தனம் அப்படியானவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.
2016 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் வழங்கிய தீர்ப்பில் தமிழ் நாட்டில் நடைபெற்ற 47 ஆணவக்கொலைகளை தேதிவாரியாகப்பட்டியலிட்டுக் காட்டியிருந்தார். ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கு தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் ஒன்பது கட்டளைகளையும் அவர் பிறப்பித்திருந்தார்.
27.03.2018 அன்று அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில்,“கலப்புமணத் தம்பதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக வரும் புகார்களைப் பெறவும் விசாரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்பி, மாவட்ட சமூகநல அதிகாரி, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்கவேண்டும்; இந்த சிறப்புப் பிரிவுகளில் 24 மணி நேர ஹெல்ப்லைன் வசதி இருக்கவேண்டும்; ஆணவக் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அதற்கென உருவாக்கப்படும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படவேண்டும்” என உத்தரவிடப்பட்டது.
ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் வழங்கிய வழி காட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு இதுவரைப் பின் பற்றவில்லை.
இனிமேலாவது அவற்றைப் பின்பற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறஉள்ள ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சக்திகளும் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #HonourKilling #Thirumavalavan
பணமதிப்பிழப்பு செய்த மத்திய அரசை கண்டித்து நாகை தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். நகர தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சந்தானமாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் துணை தலைவர் பன்னீர், வட்டார தலைவர்கள் சுப்பிர மணியன், செய்யதுபிக்கின் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பணமதிப்பிழப்பு செய்த மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நாகூர் நகர தலைவர் அப்துல் காதர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியமும், சட்ட ரீதியான ஓய்வூதியமும் அரசு வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் பணிக்கொடை வழங்க வேண்டும். ஒரு மாணவருக்கு உணவு கட்டணமாக ரூ.5 தர வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் மாநில அளவில் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.
ஆனால், அவர்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததால் கடந்த 29-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்திலும் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் செய்தனர்.
சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அதன் சங்க நிர்வாகிகளை அழைத்து அரசு தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படாததால் நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆனாலும் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. இதனால், நேற்றும் சத்துணவு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆனந்தராசு தலைமை தாங்கினார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சத் துணவு ஊழியர்கள் கையில் குடை பிடித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினர்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுதந்திரமாக செயல்பட்டு குற்ற வழக்குகளை நேர்மையோடு விசாரித்து வந்து நீதியை நிலைநாட்டிய சி.பி.ஐ. துறையை அரசின் சுயலாபத்திற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
தங்களின் கைப்பாவையாக மாற்றி ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆணைப்படி புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.
மேலும், புதுவை மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், அனைத்து பிரிவு நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு நமச்சிவாயம் கூறியுள்ளார்.
போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணமான ரூ.7 ஆயிரம் கோடியை திருப்பி கொடுக்க வேண்டும். போக்குவரத்து கழகத்தில் இருந்து ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு அன்றே பணப்பலனை முழுமையாக வழங்க வேண்டும். 2003-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும். ரிசர்வ் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். விடுப்பு சம்பளம், டி.ஏ. நிலுவையை உடனே வழங்க வேண்டும். அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பெரம்பலூர் கிளை முன்பு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் குமார், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் துணை தலைவர் சிங்கராயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் கிளை செயலாளர் நடராஜ், அம்பேத்கர் தொழிற்சங்கத்தின் கிளை தலைவர் கலியபெருமாள் உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பூதலூர்:
பூதலூரில் அனைத்து கட்சிகள் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் என்.வி.கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆண்டு அனைத்து விவசாயிகளுக்கும்பாரபட்சமின்றி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்கடன் வழங்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில்விவசாயிகள் வைத்துள்ள நகைகளை ஏலம் விடக் கூடாது. விவசாய உரங்களின் விலை உயர்வைரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன்.டாக்டர் அம்பேத்கார்,தந்தை பெரியார் சமுக நீதி பாசறை பொதுச்செயலாளர் அருண் மாசிலாமணி, அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பு. தி.மு.க.வின் ஆல்பர்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், தமிழ்தேசிய பேரியக்க ஒன்றிய செயலாளர் தென்னவன். பூதலூர் வடக்கு ஒன்றிய விவசாய சங்க செயலாளர் உதயகுமார் மற்றம் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார காங்கிரஸ் தலைவர் அறிவழகன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்