search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103897"

    ஒரு ஆண்டுக்கும் மேலாக வேலைவாய்ப்பை இழந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு ரூ.5 ஆயிரம் வழங்க கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    மணல் பிரச்சினையால் ஒரு ஆண்டுக்கும் மேலாக வேலைவாய்ப்பை இழந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பீட்டு நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

    மணல் பிரச்சினையை தீர்த்திட புதுவை அரசே மணல் விற்பனை செய்ய வேண்டும். அக்டோபர் மாதம் வரை உறுப்பினர் விண்ணப்பம் கொடுத்த அனைவருக்கும் தீபாவளி பணம் வழங்க வேண்டும். தீபாவளி பரிசு கூப்பனுக்கு பதிலாக ரொக்கமாக வங்கியில் செலுத்த வேண்டும். தீபாவளி உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி புதுவை மாநில கட்டிடக்கலை தொழிலாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பெரியார் சிலை அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு சங்க தலைவர் அய்யம்பெருமாள், பொதுச்செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊர்வலம் காமராஜர் சாலை, நேருவீதி, மி‌ஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலையை அடைந்தது. அங்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், ஏ.ஐ.டி.யூ.சி. செயல் தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச்செயலாளர் சேது செல்வம், பொருளாளர் ஜெயபாலன், செயலாளர் நளவேந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். #tamilnews
    தஞ்சையில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் சுப்பிரமணியன், இணைச்செயலாளர் ராமலிங்கம், வருவாய்த்துறை அலுவலர் சங்க செயலாளர் தரும.கருணாநிதி, துணைச்செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    பொது வினியோகத்திட்டத்திற்கு என தனித்துறை அமைக்கப்படவேண்டும். கூட்டுறவுத்துறை, ரேஷன்கடை பணியாளர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்கப்படவேண்டும். ரேஷன்கடைகளில் பணியாளர்களின் முன்பு கட்டுப்பாட்டுப் பொருட்கள் அனைத்தும் எடையிட்டு வழங்க வேண்டும்.

    பயோமெட்ரிக் டிஜிட்டல் ரேஷன் கார்டு உள்ளிட்ட பொது வினியோகத்திட்டப்பணிகள் அனைத்தும் 100 சதவீதம் கணினி மயமாக்க வேண்டும். பணி வரன்முறை செய்யப்படாத பணியாளர்களை எவ்வித நிபந்தனையுமின்றி பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    தஞ்சை மாவட்டத்தில் 762 ரேஷன்கடைகள் உள்ளன. இதில் 141 கடைகளில் உள்ள பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த கடைகளில் தற்காலிக பணியாளர்களை கொண்டு பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன. #tamilnews
    போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அரசு ராஜா உள்பட 18 பேர் மீது திசையன்விளை போலீசார் வழக்குப்பதிந்தனர்.
    திசையன்விளை:

    இந்து தெய்வங்களை பற்றி அவதூறாக பேசிய மோகன் சி.லாசரசை கண்டித்தும், அவரை கைது செய்யக்கோரியும் திசையன்விளை நேரு திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா, திசையன்விளை நகர பொதுச்செயலாளர் கணேச மூர்த்தி, நகர தலைவர் விக்னேஷ், ராதாபுரம் ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் ராஜன், விஸ்வ இந்து பரி‌ஷத் மாநில செயற் குழு உறுப்பினர் முருகையா, நகர செயலாளர் நாகராஜன், இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் ரெங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அரசு ராஜா உள்பட 18 பேர் மீது திசையன்விளை போலீசார் வழக்குப்பதிந்தனர். #tamilnews
    ஊத்துக்கோட்டையில் சாதிச்சான்றிதழ் உடனே வழங்க கோரி வேம்பேடு பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் மெய்யூர் ஊராட்சிக்கு உள்பட்ட வெம்பேடு பகுதியில் 45 இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாதி சான்று இல்லாததால் தமிழக மற்றும் மத்திய அரசுகளின் சலுகைகள் பெற முடியவில்லை.

    இதனை கருத்தில் கொண்டு சாதி சான்று வழங்ககோரி இப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி திருவள்ளூர் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கோட்டாட்சியர் ஊத்துக்கோட்டை தாசில்தாருக்கு இது குறித்து பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் ஊத்துக்கோட்டை தாசில்தார் சாதி சான்று வழங்காமல் விசாரணை என்ற பெயரில் அலைக் கழிக்கிறார் என்று வேம்பேடு பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதனை கண்டித்தும், சாதி சான்று உடனே வழங்க கோரியும் வேம்பேடு பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் பூண்டி ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட பொருளாளர் குமரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழரசு, தலைவர் சின்னதுரை, ஒன்றிய துணைத் தலைவர் முருகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #indiacommunistparty #hydrocarbonproject

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் பால சுப்பிரமணியன், துணை செயலாளர்கள் கல்யாண சுந்தரம், காசிநாதன், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஹைட்ரோ கார்பன் திட்டம் காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டம் ஆகும். 4 ஆயிரம் சதுரகிலோ மீட்டர் நிலபரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிட்டுள்ளனர். உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து விரட்டிய நிலையில் வேதாந்தா நிறுவனம் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அரசின் அனுமதியை பெற்றுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஆதரவளித்து அமைதியாக உள்ளனர். உயிரே போனாலும் இந்த திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம். அதன் ஒரு கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #indiacommunistparty #hydrocarbonproject

    பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோஜியோ கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #JactoGeo
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஜாக்டோஜியோ கூட்டமைப்பு சார்பாக  ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதியக்குழு முரண்பாடுகள் களையப்பட வேண்டும், சத்துணவு, ஊராட்சி செயலாளர், அங்கன்வாடி மையப்பணியாளர்கள், வனக்காவலர் முதலிய ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்பட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு சார்பாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இந்தநிலையில்  பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தயாளன், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரிகள் ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ராமர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் அருள்ஜோதி ஆகியோர்  தலைமை வகித்தனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட தலைவர் மரியதாஸ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் குமரிஅனந்தன், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்க மாநில துணை தலைவர் கணேசன்,  தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சிலம்பரசன், தமிழ்நாடு கூட்டுறவு அலுவலர்கள் சங்க மாநில துணை தலைவர் சிவக்குமார் மற்றும் பலர் கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கொளஞ்சியம்மாள் நன்றி கூறினார்.

    துறையூரில்  ஜாக்டோ ஜியோ அமைப்பினர் துறையூர் பஸ் நிலையம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில்  ஜாக்டோ ஜியோ வட்டார தலைவர் தியாகராஜன் , ஒருங்கிணைப்பாளர் அசோகன்,  கிருஷ்ணமூர்த்தி, அருணகிரி, பழனிச்சாமி, சந்திர சேகரன, நேரு உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளார் செபஸ்தியான் தலைமை வகித்தார்.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  ராஜேந்திரன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மணியன், சத்துணவு மாவட்ட பொருளாளர் அன்னப்பூரணி  ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.  அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ரமாநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். #JactoGeo
    திருவாரூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் சகாயராஜ் தலைமை தாங்கினார். திட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன், திட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணைச்செயலாளர்கள் வைத்தியநாதன், பழனிவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    தொழிற்சங்க உரிமைகளை நிலை நாட்ட வேண்டும். தொழிலாளர்கள் சட்டங்களை அமல்படுத்த வேண்டும். இந்திய பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

    போராடும் தொழிற்சங்கத்தோடு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பல்வேறு தனியார் வாகன நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் திட்ட துணைத்தலைவர்கள் ராமசாமி, கண்ணன், கோட்ட செயலாளர் தமிழரசன், கோட்ட தலைவர் முரளிதரன், மன்னார்குடி கோட்ட செயலாளர் வீரபாண்டியன், திட்ட துணை செயலாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மத்திய மாவட்ட பா.ம.க. சார்பில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அக்னி சுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் பரசுராமர் வரவேற்று பேசினார்.

    இதில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் சுப.குமார் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ள அரசு பெட்ரோல், டீசலை ஏன் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவில்லை. இதில் மத்திய அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிப்பதோடு, தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    இதில், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் கணேசன், உழவர் பேரியக்க மாநில துணைத் தலைவர் சிவக்குமார், சட்ட பாதுகாப்பு தலைவர் இளங்கோ, மாவட்ட பொருளாளர் மாதேஸ்வரி, மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறுபான்மை மாவட்ட செயலாளர் ஜார்ஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பயாஸ் அகமது வரவேற்றார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கந்தசாமி, மாவட்ட இளைஞரணி சோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. மாநில அமைப்பு செயலாளர் மாதேஸ்வரன், பசுமைதாயக மேற்கு மாவட்ட தலைவர் துரைசாமி மற்றும் நிர்வாகிகள் விஜயகுமார், முருகன் சங்கீதா, உஷா, ரஞ்சிதா மேரி, ராமகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், பால்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். இதில் கட்சி, நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். #tamilnews
    5 மாநில தேர்தலுக்காக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். #PetrolDieselPrice #AnbumaniRamadoss
    சென்னை :

    பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடந்தது.

    இதில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தின் போது டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 15 மாதங்களில் பெட்ரோல் விலை 32 சதவீதமும், டீசல் விலை 38 சதவீதமும் அதிகரித்துள்ளது. இவ்வாறு எந்த நாட்டிலும் அதிகரிக்கவில்லை. கச்சா எண்ணெய் விலை குறைந்தும், மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்கவில்லை.

    நமது அண்டை நாடான பாகிஸ்தான் ரூ.51-க்கும், பர்மா ரூ.44-க்கும், பூட்டான் ரூ.57-க்கும் விற்பனை செய்கின்றன. பூட்டானுக்கும், இந்தியாவுக்கும் ஒரே நிறுவனம் தான் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்கிறது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல் அதிக விலையில் விற்பனை செய்கிறது.

    பெட்ரோல் மற்றும் டீசலின் இந்த விலை உயர்வால் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்கள் ரூ.12 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மதுவுக்கு 82 சதவீதமும், புகையிலைக்கு 28 சதவீதமும் வரி விதிக்கும் அரசு, பெட்ரோலுக்கு 118 சதவீதம் விதிக்கின்றது.

    ஜி.எஸ்.டி. வரிக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கொண்டுவந்தால், 28 சதவீதத்துக்கு மேல் வரி விதிக்க முடியாது. இதனால் பெட்ரோல் விலை மிக அதிக அளவில் குறைய வாய்ப்பு உள்ளது. நேற்று முன்தினம் பெட்ரோல் விலையில் ரூ.2.50 மத்திய அரசு குறைத்துள்ளது. இதில் மத்திய அரசு வரியில் ரூ.1.50, எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1 குறைத்துள்ளன.

    5 மாநில சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் தான் மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைத்துள்ளது. கர்நாடக தேர்தலின் போது அங்கு பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யவில்லை. ஆனால் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் பெட்ரோல் விலையை உயர்த்தியது.

    பெட்ரோலுக்கு ரூ.45 வரி விதிப்பதில், ரூ.30 மாநில அரசுக்கும், ரூ.15 மத்திய அரசுக்கும் செல்கிறது. இதில் மாநில அரசு ரூ.20-ம், மத்திய அரசு ரூ.5 குறைத்து பெட்ரோலை விற்பனை செய்ய வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் பா.ம.க. மீண்டும் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PetrolDieselPrice #AnbumaniRamadoss
    நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கொட்டும் மழையிலும் குடைபிடித்தப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவக்குமார், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் சித்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக கல்வி மாவட்ட செயலாளர் புஷ்பராஜ், ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் அந்துவன்சேரல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜம்ருத் நிஷா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு முறையான ஊதிய விகிதம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும். 5 ஆயிரம் அரசுப்பள்ளிகளை மூடும் செயலை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக நாகை தாசில்தார் அலுவலகம் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேபோல கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் புகழேந்தி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட இணை செயலாளர் சத்தியசீலன், தமிழக ஆரம்பப்பள்ளி மாநில துணை பொதுச்செயலாளர் அருள்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி தேவதாஸ் நன்றி கூறினார். ஜாக்டோ- ஜியோ தற்செயல்விடுப்பு போராட்டத்தின் காரணமாக கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெரும்பாலான அலுவலர்கள் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. #tamilnews
    கோவில்பட்டி-சங்கரன்கோவிலில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்
    கோவில்பட்டி:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் விடுப்பு எடுத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் சுப்பிரமணியன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் சகாயராஜ், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணை தலைவர் முத்துமாரி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க தலைவர் மைதீன் பட்டாணி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க மாவட்ட பொருளாளர் பால்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். ஓய்வூதியர் சங்க நிர்வாகி பாலுச்சாமி ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.

    ஆர்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் இளங்கோகண்ணன், ராஜ், ரத்தினம், மனோகரன், சங்கரநாராயணன், பசுபதி, வெங்கடாச்சலம், தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

    அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கற்பகம் நிறைவுரை ஆற்றினார். முடிவில் அரசு ஊழியர் சங்க வட்டச்செயலாளர் வேல்ராஜன் நன்றி கூறினார். #tamilnews
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய-மாநில அரசை கண்டித்து ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #PMK #Ramadoss #FuelPrice #BJP
    திண்டிவனம்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய-மாநில அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி திடலில் பா.ம.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ரமேஷ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை 118 சதவீதம் உயர்ந்து விட்டது. தினமும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணை உற்பத்தியாளர்கள் நிர்ணயித்து கொள்ளலாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்ததே இதற்கு காரணம்.

    2014-16-ம் ஆண்டில் உலகளவில் கச்சா எண்ணை விலை குறைவாகத்தான் இருந்தது. அப்போதாவது பெட்ரோல், டீசல் விலையை குறைத்து இருக்கலாம். மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஒவ்வொரு முறையும் பெட்ரோல், டீசல் விலை குறையும் என கூறுகிறார். ஆனால், இதுவரை குறையவில்லை.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் வரும் காரணத்தினால் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.


    பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அதிகமாக கொள்ளையடிப்பது தமிழக அரசுதான். கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் விற்பனையில் தமிழக அரசுக்கு ரூ.470 கோடியில் இருந்து ரூ.900 கோடி வரை கிடைத்திருந்தது. இந்த ஆண்டு ரூ.4 ஆயிரம் கோடி கிடைக்கும். மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைத்து பொதுமக்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நகர தலைவர் குமார் நன்றி கூறினார். #PMK #Ramadoss #FuelPrice #BJP
    ×