என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 103897"
திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. இந்திய தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல், மாவட்ட பொருளாளர் பாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர் நல சட்டங் களை அமல்படுத்த வேண்டும். தொழிற்சங்கங்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும். இந்திய, பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். போராட்டம் நடத்தும் தொழிற்சங்கத்தோடு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தீர்வு காண வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் 55 மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில், கடலூர் மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.க்கும் நாகை மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 1-ந்தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் டெல்லியில் நடந்தது.
தமிழகத்தை பொறுத்தவரை 3 மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக தெரிகிறது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் தீவிரமாகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தி.மு.க. சார்பில் இன்று (3-ந்தேதி ) திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு திருவாரூர் பஸ் நிலையம் அருகில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் அமைச்சர் மதிவாணன், முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ். பழநிமாணிக்கம், முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன், நாகை மாவட்ட செயலாளர் கவுதமன், நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, திருத்துறைப்பூண்டி ஆடலரசன், திருவையாறு துரை.சந்திரசேகரன், கும்பகோணம் அன்பழகன், ஒரத்தநாடு ராமச்சந்திரன், திருவிடைமருதூர் கோவி.செழியன் மற்றும் தஞ்சை நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள், மகளிரணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் எரிவாயு, எண்ணை திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திக்கூடாது என்று கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில் இன்று பிற்பகலில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், திருவாரூக்கு சென்று மக்களை சந்தித்து மனுக்களை பெறுகிறார்.
மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் அனைவரும் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.
அதன்படி திருவாரூருக்கு வரும் வழியில் கவர்னருக்கு பிற்பகலில் விளமல் கிராமம் பகுதியில் கருப்பு கொடி காட்டப்பட உள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
கவர்னர் வருகையையொட்டி திருவாரூர் செல்லும் வழி நெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #Hydrocarbon #DMK
தேனி:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு பலமான ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பெண்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் கைகளில் விளக்குகள் ஏந்தி கோர்ட்டு உத்தரவிற்கு எதிராக கோஷமிட்டனர்.
அதன்பிறகு தங்கள் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை குடியரசு தலைவருக்கு வழங்கும் வகையில் கலெக்டரிடம் அளித்தனர். அந்த கடிதத்தில் மத வழிபாட்டு பிரச்சினையில் கோர்ட்டு தலையிடக்கூடாது.
பல ஆண்டுகளாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆகம விதிகளின்படி 5 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதில்லை. தற்போது அனைத்து வயதினரும் கோவிலுக்கு செல்லலாம் என கோர்ட்டு உத்தரவிட்டிருப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். #Sabarimala #Womendemonstrated
எச்.ராஜாவை கைது செய்யக்கோரியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வற்புறுத்தியும் மூலக்கடை சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கட்சியின் பெரம்பூர் தொகுதி செயலாளர் கல்தூண் ரவி தலைமை தாங்கினார். திருமாவளவனின் தனி செயலாளர் இளஞ்சேகுவாரா, வட சென்னை மாவட்ட பொறுப்பாளர் விடுதலை செழியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். #ViduthalaiChiruthaigalKatchi
10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு உறுப்பு கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் கிளை சார்பில் நேற்று குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் கிளையின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் நீலவேணி, பொருளாளர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சங்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில்குமார், 10 அம்ச கோரிக்கைகளை விரிவாக எடுத்து கூறி பேசினார்.
முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் 1.6.2018 அன்று 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளையும் அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அந்த அரசு ஆணையை விரைவாக வெளியிட்டு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியை அரசு கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும். அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை தகுதி அடிப்படையில் சிறப்பு தேர்வு மூலம் பணி நியமனம் செய்யப்பட உள்ள நிலையில், அதில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த தகுதியான கவுரவ விரிவுரையாளர்களை சிறப்பு தேர்வில் அரசு இணைத்து கொள்ள வேண்டும். பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி ஆசிரியர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப். மற்றும் மகளிர் பேறுகால விடுப்பு போன்ற நலத் திட்டங்களை வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முன்னதாக பெரம்பலூர் கிளையின் துணைத் தலைவர் அரங்கவளவன் வரவேற்றார். முடிவில் துணைச் செயலாளர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 13-ந் தேதி இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கல்வீச்சு, தடியடி சம்பவங்களும் நடந்தன. கடைகள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து செங்கோட்டையில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை அனைத்தும் குண்டாற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது.
கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்தி குமார் மற்றும் அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் செங்கோட்டை பகுதியில் அமைதி திரும்பியது. எனினும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க செங்கோட்டை சுற்றுப்பகுதியில் வருகிற 30-ந் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டித்து கலெக்டர் உத்தர விட்டார்.
செங்கோட்டை நகரை சுற்றி 7 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கபட்டு வருகின்றன. இந்நிலையில் பா.ஜ.க. சார்பில் செங்கோட்டையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் அறிவித்திருந்தார். இதற்காக இன்று மதியம் அவர் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
செங்கோட்டையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அங்கு எவ்வித ஆர்ப்பாட்டமும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழிசை சவுந்தர்ராஜன் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்ய போலீசார் திட்ட மிட்டுள்ளனர்.
மேலும் செங்கோட்டைக்கு செல்லவும் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர் தூத்துக்குடியில் இருந்து நெல்லை வரும் வழியில் பாளை கே.டி.சி.நகரில் வைத்து கைது செய்யப்படலாம் என பரபரப்பு ஏற்பட்டது.
இதற்காக கே.டி.சி.நகரில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தலைமையில் 500- க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர் ஆலங்குளம் வழியாக செல்லும் பட்சத்தில் அங்குவைத்தும் அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இதையடுத்து ஆலங்குளத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
பா.ஜனதா போராட்ட அறிவிப்பை தொடர்ந்து செங்கோட்டையில் மீண்டும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏ.டி.எஸ்.பி.க்கள் மங்களீஸ்வரன், முகமது அஸ்லாம் ஆகியோர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மணிகண்டன், ஞானராஜ், பழனிகுமார் மற்றும் 12 இன்ஸ்பெக்டர்கள், 16 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே மதியம் விமானநிலையத்தில் வந்து இறங்கிய தமிழிசை சவுந்தராஜனிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மற்றும் போலீஸ் அதிகாரிகள் செங்கோட்டையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அங்கு நீங்கள் செல்ல அனுமதியில்லை என்றனர்.
தொடர்ந்து தமிழிசை சவுந்தர்ராஜன் செங்கோட்டை செல்வதில் உறுதியாக இருந்ததால் அவரிடம் விமான நிலையத்திலேயே போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது.
இதனிடையே தமிழிசை சவுந்தரராஜன் செங்கோட்டை செல்லாமல் ஆலங்குளத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து பா.ஜனதா தொண்டர்கள் ஆலங்குளத்தில் குவிந்துள்ளனர். #tamilisai #bjp
ஈரோடு காளைமாட்டு சிலை அருகே தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.க. மண்டல தலைவர் பிரகலாதன் தலைமை தாங்கினார்.
பெரியார் சிலைகளை அவமதிப்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். குண்டர் சட்டத்தில் அவர்களை கைது செய்ய வேண்டும். கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், தி.க. மண்டல அமைப்பு செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருமுக்குளம். ஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான இந்த குளத்தில் தண்ணீர் இருந்தால், நகரின் நிலத்தடி நீர் நன்றாக இருக்கும்.
இதனால் திருமுக்குளத்தில் எப்போதும் தண்ணீர் இருக்க வேண்டும் என நகர மக்கள் விரும்புவார்கள். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குளத்தின் வடபக்க சுற்றுச்சுவர் இடிந்தது. அங்கு தற்காலிகமாக மணல் மூடைகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.
இதனால் குளத்தின் நீர் வெளியேறவில்லை என்றாலும், நிரந்தர சுவர் கட்ட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய மாதர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இணைந்து குளத்தின் படிக்கட்டுகளில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாலிபர் சங்க நிர்வாகி சசிகுமார் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். #tamilnews
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய சம்மேளனம் சார்பாக வணிகர்களை பெரிதும் பாதிக்கின்ற சட்டங்களை மாற்றியமைக்க கோரி வருகிற 28-ந்தேதி இந்தியா முழுவதும் கடை அடைப்பு நடத்துவது என அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு காரணங்களுக்காக இந்த ஆண்டு பலமுறை கடை அடைப்புகள் நடத்தப்பட்டதை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நலன் கருதியும் தமிழகத்தில் கடை அடைப்புக்கு மாற்றாக கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை மண்டல அளவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 28-ந்தேதி சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 10 மணிக்கு சென்னை-காஞ்சி மண்டலம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா ஆர்ப்பாட்ட விளக்க உரை ஆற்ற உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குட்கா ஊழல் தொடர்பாக தமிழக அரசை கண்டித்தும், அதில் தொடர்புடைய அனைவரும் பதவி விலக வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் அண்ணாசிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மத்திய மந்திரியும், மாவட்ட பொறுப்பாளருமான காந்திசெல்வன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் தமிழகத்தில் எந்தெந்த துறைகளில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது என்பது குறித்தும், ஊழலில் தொடர்புடைய அனைவரும் பதவி விலக வலியுறுத்தியும் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர பொறுப்பாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வினர் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட அவைத்தலைவர் உடையவர், மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் ராணி, சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார். இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.ராமசாமி, பொன்னுசாமி, பழனியம்மாள், சரஸ்வதி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மோகன் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
7 சி.பி.சி. பரிந்துரைத்த ரூ.18 ஆயிரம் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும், சம்பள நிர்ணய பார்முலாவை உயர்த்தி வழங்க வேண்டும், ரெயில்வே நிர்வாகத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வாரிசுகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு எஸ்.ஆர்.எம்.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மூர்த்தி தலைமையில் 50 பேரும், சுசிதரன் தலைமையில் 40 பேரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.திண்டுக்கல் ரெயில் நிலையம், பணியாளர்கள், ஆர்ப்பாட்டம்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்