search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103912"

    களியக்காவிளை அருகே தங்களுக்கு எதிராக சாட்சி கூறக்கூடாது என வாலிபரை கம்பியால் அடித்து கொல்ல முயற்சி செய்த சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    களியக்காவிளை அடுத்த அயக்கோடுவிளை பகுதியை சேர்ந்தவர் எட்வின்ராஜ் (வயது 35).

    இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் அவரது அண்ணன் பெனட் டிக்ராஜ் என்பவருடன் வந்து கொண்டிருந்தார். களியக்காவிளையை அடுத்து ஒற்றா மரம் அருகே வரும்போது அவர்களை 2 பேர் வழி மறித்து தகராறில் ஈடுபட்டனர். மேலும் எங்களுக்கு எதிராக சாட்சி கூறக்கூடாது என மிரட்டினர்.

    இதில் அவர்களுக்குள் தகராறு முற்றியது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கம்பியால் எட்வின்ராஜை சரமாரி தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தினர்.

    இதுகுறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சொர்ண லதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் எட்வின்ராஜை கம்பியால் தாக்கியது அதே பகுதியை சேர்ந்த ஜெயன் (30), சஜின் (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். #tamilnews
    மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. #dharmapurigirlstudent #girlmolested
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிட்லிங் மலைகிராமாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்தார்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷ், சதீஷ் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட சதீசுக்கு மருத்துவ பரிசோதனை எடுக்க போலீசார் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றனர்.

    இதைத்தொடர்ந்து சதீசை நேற்று தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மருத்துவ குழுவினர் செய்தனர்.

    இந்த நிலையில் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவ குழுவினர், விசாரணை அதிகாரியான அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்து அங்குள்ள தடயங்களை ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.

    மேலும் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் சரணடைந்த மற்றொரு குற்றவாளி ரமேஷை காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல் துறை திட்டமிட்டு உள்ளனர். இந்த வழக்கை சேலம் நீதிமன்றம் தருமபுரி மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு அனுப்பியவுடன் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். #dharmapurigirlstudent #girlmolested
    ஓடும் ரெயிலில் ஏற முயன்று தவறி விழுந்த வாலிபரை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
    சென்னை:

    ராமேசுவரத்தில் இருந்து அரியானா மாநிலம் பரிதாபாத்துக்கு நேற்று முன்தினம் சர்க்கார் சேது எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. இந்த ரெயில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நடைமேடை 5-ல் வந்தடைந்தது.

    பின்னர் பரிதாபாத் நோக்கி புறப்பட்ட ரெயிலில், வாலிபர் ஒருவர் ஏற முயன்றார். அப்போது அந்த வாலிபரின் கால் தடுமாறி அவர் ஓடும் ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் சுமன் விரைந்து செயல்பட்டு, ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்ட வாலிபரை உடனே பிடித்து வெளியே இழுத்து மீட்டார்.

    இதையடுத்து அந்த வாலிபருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பயணிகள் விரைந்து செயல்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் சுமனை பாராட்டினர்.

    மார்த்தாண்டம் அருகே பட்டதாரி பெண்ணை ஏமாற்றி கற்பழித்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள எஸ்.டி. மங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுஜித் (வயது 30). எம்.டெக். பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    இவர் மீது திருவட்டார் ஆற்றூரைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் கற்பழிப்பு புகார் கூறி உள்ளார். மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் எம்.இ. படித்து விட்டு சென்னையில் பணியாற்றி வருகிறேன். அப்போது அங்கு வேலை பார்த்து வரும் சுஜித்துடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. என்னை அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். நானும் அவரை நம்பி என்னையே கொடுத்தேன். ஒருமுறை வீட்டில் நான் தனியாக இருந்தபோது சுஜித் என்னுடன் உல்லாசமாக இருந்தார்.

    சென்னை, வேளாங்கண்ணி, பெங்களூர் என பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று அவர் கற்பழித்தார். இப்போது என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியபோது அவர் மறுப்பு தெரிவிக்கிறார்.

    அப்படியே உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் ரூ.15 லட்சம் ரொக்கம், 150 பவுன் நகை, ஒரு கார், பாங்கியில் ரூ.25 லட்சம் பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என வரதட்சணை கேட்கிறார். மேலும் இந்த பிரச்சினையை பெரிதாக்கினால் நாம் இருவரும் உல்லாசமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் எனவும் மிரட்டுகிறார்.

    எனவே என்னை கற்பழித்து ஏமாற்றிய சுஜித் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

    இதையடுத்து சுஜித் மீது கற்பழிப்பு, பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சுஜித் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். சுஜித் மீது கற்பழிப்பு புகார் கூறிய பெண்ணை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். #tamilnews
    தாரமங்கலத்தில் மது வாங்கித்தர கேட்டதால் வாலிபரை பிராந்தி பாட்டிலால் குத்திய கூலிதொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). கூலி தொழிலாளி.

    இவர் நேற்று பிராந்தி குடிப்பதற்காக தாரமங்கலம் 4 ரோடு பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்றார். அங்கு காலையில் மதுக்கடை திறந்த உடனே மது வாங்கி குடித்தார். போதை தலைக்கேறியதால் மதுக்கடை இருக்கும் வளாகப் பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது மது வாங்க வருவோர், போவோரிடம் அவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று இரவு தாரமங்கலம் அருகே உள்ள கத்திமாறன்வளவு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி குமார்(45) என்பவர் மது குடிக்க அங்கு வந்தார். அப்போது அங்கு நின்ற மணிகண்டன் தனக்கு இலவசமாக மது வாங்கி கொடு என்று கூறி குமாரிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.

    இதனால் குமார் நான், மது வாங்கி குடித்து விட்டு வந்து, உன்னிடம் பேசுகிறேன் என்று கூறி விட்டு டாஸ்மாக் கடைக்கு சென்று பிராந்தி வாங்கி குடித்தார்.

    பின்னர் டாஸ்மாக் பாரில் இருந்து வெளியே வந்த அவர் நேராக மணிகண்டனிடம் என்னிடம் நீ எப்படி மது வாங்கி கேட்கலாம்? என்று கூறினார்.

    இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் போதையில் மாறி மாறி ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.

    அப்போது ஆத்திரம் அடைந்த குமார், தான் மது குடித்து விட்டு மறைத்து வைத்திருந்த காலி பிராந்தி பாட்டிலை உடைத்து மணிகண்டனின் வயிற்றில் ஓங்கி குத்தினார். இதனால் அவரது வயிற்றில் இருந்து ரத்தம் மளமளவென பீறிட்டு வெளியேறியது. இதை பார்த்த மற்ற குடிக்காரர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

    ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் மது கடை வளாகத்தில் சரிந்து விழுந்தார். அவரை சிகிச்சைக்காக அழைத்து செல்ல யாரும் முன்வரவில்லை.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தாரமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குமாரை தேடி வருகிறார்கள். #tamilnews
    கோவையில் அரசு பள்ளி ஆசிரியரை பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
    கோவை:

    மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராஜபிரவீன் (வயது 25). பட்டதாரி.

    இவருக்கு சமூகவலைதளமான ‘பேஸ்புக்’ மூலமாக கோவை சிங்காநல்லூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அந்த ஆசிரியையிடம் ராஜபிரவீன் நட்பாக பேசி பழகினார்.

    அப்போது நான் குரூப்-2 தேர்வு எழுத உள்ளேன், அதற்கு பணம் தேவைப்படுகிறது என ராஜ பிரவீன் கேட்டுள்ளார்.அதற்கு ஆசிரியை நான் உனக்கு உதவி செய்கிறேன் என கூறினார்.

    இதையடுத்து ராஜபிரவீன் கோவை வந்து ஆசிரியையை சந்தித்து பேசினார். அப்போது ராஜபிரவீனுக்கு ஆசிரியை ரூ.38 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் காசோலைகளை கொடுத்தார். பின்னர் ஆசிரியையை ஓட்டலுக்கு அழைத்து சென்ற ராஜபிரவீன் தண்ணீரில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார்.

    சிறிது நேரத்தில் ஆசிரியை மயங்கியதும் அறைக்கு அழைத்து சென்று பலவந்தப்படுத்தி உல்லாசம் அனுபவித்துள்ளார். மேலும், ஆசிரியையை ஆபாசமாக வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த வீடியோவை காட்டி மேலும் 3 முறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜபிரவீன் ஆசிரியையை திருமணம் செய்ய வேண்டுமானால் ரூ.2 லட்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு ஆசிரியை மறுத்துள்ளார். எனினும் ராஜபிரவீன் நைசாக பேசி ஆசிரியையிடம் இருந்து 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை வாங்கி சென்று தலைமறைவானதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஆசிரியை சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜபிரவின் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    உத்தர பிரதேசத்தில் 3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Diwali #DiwaliCrackers #UPGirl #SuttliBomb
    மீரட்:

    உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் மில்லக் கிராமத்தில் திங்கட்கிழமை இரவு சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சசிகுமார் என்பவரின் 3 வயது மகள்  பட்டாசு விபத்தில் பலத்த காயமடைந்தார். அவரது வாய் சிதைந்த நிலையில் அலறித் துடித்தாள். அவளது வாயில் ஒரு வாலிபர் பட்டாசு வைத்து வெடித்ததாக கூறப்படுகிறது.



    உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையின் வாய்ப்பகுதியில் 50 தையல்கள் போடப்பட்டுள்ளன. தொண்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவளது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது.

    விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் வாயில், அதே பகுதியைச் சேர்ந்த ஹர்பால் என்ற வாலிபர் பட்டாசை வைத்து வெடிக்க செய்ததாக காவல்நிலையத்தில் அவளது தந்தை புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஹர்பாலை தேடி வருகின்றனர்.

    குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Diwali #DiwaliCrackers #UPGirl #SuttliBomb

    கொடைக்கானலில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். #pocso
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகில் உள்ள பெருமாள்மலை கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் சிலம்பரசன் (வயது24). இவர் வெள்ளிநீர் வீழ்ச்சி அருகே கைவினை பொருட்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.

    கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது இவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    அதே குடியிருப்பில் வசித்து வந்த 12 வயதான தனது சித்தி மகளுடன் சிலம்பரசன் நெருக்கமாக பழகி வந்தார். அவரது பெற்றோர்களும் அண்ணன் உறவுமுறை என்று கண்டுகொள்ளவில்லை. இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட சிலம்பரசன் சம்பவத்தன்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். அவரது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை வைத்து பெற்றோர்கள் அவர் கர்ப்பம் அடைந்திருந்ததை உறுதி செய்தனர்.

    மேலும் இதற்கு காரணமான சிலம்பரசன் மீது கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சிலம்பரசன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். #tamilnews
    ஆத்தூர் அருகே பாலியல் அத்துமீறலுக்கு பணிய மறுத்த 13 வயது சிறுமியை கொன்ற கொடூரனை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #Ramadoss #PMK
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பாலியல் அத்துமீறலுக்கு பணிய மறுத்த 13 வயது சிறுமியை அவரது அண்டை வீட்டுக்காரன் கொடூரமான முறையில் தலையை அறுத்து படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. குழந்தையாகவும், சகோதரியாகவும் பார்க்க வேண்டிய சிறுமியை சிதைக்க முயன்றதுடன், படுகொலையும் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

    சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த சுந்தரபுரத்தில் வசிக்கும் விவசாயி சாமிமுத்து. அவரது மனைவி சின்னப்பொண்ணு. அவர்களுக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கு மணமாகி விட்ட நிலையில் மகனும், இளைய மகளும் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். அவர்களில் மகள் ராஜலட்சுமி அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 8-ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.

    இவர்களுக்கு அடுத்த வீட்டில் தினேஷ்குமார் என்ற 27 வயது இளைஞன் அவரது மனைவி சாரதாவுடன் வாழ்ந்து வந்துள்ளார். கதிர் அறுக்கும் இயந்திரத்தை வாடகைக்கு இயக்கும் தினேஷ்குமாருக்கு 4 வயதில் ஆண்குழந்தை உள்ளது. இரு குடும்பத்தினரும் நட்புடன் பழகிவந்துள்ளனர்.

    குழந்தையுடன் விளையாடவும், பூப்பறிக்கவும் தினேஷ்குமார் வீட்டுக்கு சிறுமி ராஜலட்சுமி அடிக்கடி சென்று வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

    அப்போதெல்லாம் சிறுமியிடம் தினேஷ்குமார் பாலியல் சீண்டல் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதுபற்றி சிறுமிக்கு தெரியாது என்பதால் அதை அவர் கண்டு கொள்ளவில்லை.

    கடந்த 19-ந்தேதி ஆயுதபூஜையன்று தமது வீட்டுக்கு வந்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ய தினேஷ்குமார் முயன்றுள்ளான். ஆனால், அவனிடமிருந்து தப்பித்த சிறுமி வீட்டுக்கு சென்று நடந்த சம்பவங்களை தாயிடம் கூறியுள்ளார். அதன்பின்னர் தாயின் அறிவுரைப்படி தினேஷ்குமார் வீட்டுக்கு செல்வதை சிறுமி தவிர்த்துள்ளார். ஆனால், 22.10.2018 தினேஷ்குமாரின் மனைவி அழைத்ததால், சிறிது நேரம் கழித்து அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கு மனைவி இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டு சிறுமியை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார். அதனால் அச்சமடைந்த சிறுமி வீட்டுக்குத் தப்பிச் சென்று தாயிடம் புகார் செய்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் நடந்தவை அனைத்தும் தினேஷ் குமாரின் மனைவி சாரதாவுக்கு தெரிய வந்ததாகவும், அவர் கணவனை திட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்குமார் அரிவாளுடன் சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரது தாயாரைத் தாக்கி மயக்கமடையச் செய்திருக்கிறார். பின்னர் சிறுமியின் கழுத்தை வெட்டித் துண்டாக்கியுள்ளார். தொடர்ந்து சிறுமியின் தலையை சாலையில் வீசி விட்டு, வீட்டுக்குச் சென்ற தினேஷ்குமாரை அவரது மனைவி சாரதாவும், அவரது தம்பியும் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

    மனிதக் கொடூரன் தினேஷ்குமாரின் செயலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தினேஷ் குமார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், குழந்தைகள் பாதுகாப்புக்கான போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படாதது தவறு; கண்டிக்கத்தக்கது ஆகும்.

    ஒன்றும் அறியாத சிறுமிகளிடம் தங்கள் பாலியல் வெறியைத் தீர்த்துக் கொள்ள துடிப்பவர்கள் திருந்துவதற்கு வாய்ப்புள்ள மனிதர்களாக இருக்க முடியாது. அதனால், இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடித்து, தினேஷ் குமார் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்து அவருக்கு மிக மிகக் கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss #PMK
    திருப்பத்தூரில் தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு திருப்பத்தூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் உள்ள ஆதிசக்திநகரை சேர்ந்தவர் சக்தி, தச்சு தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜெயக்குமார் (வயது 30). இவர்கள் 2 பேரின் குடும்பத்தினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி கொள்ளாமல் இருந்தனர்.

    ஆனால் ஜெயக்குமாரின் மனைவி கனிமொழி மட்டும் அவரது வீட்டிற்கு தெரியாமல் சக்தியின் மனைவி விஜயாவிடம் பேசி வந்தார். இந்த தகவல் ஜெயக்குமாரின் குடும்பத்தினருக்கு தெரிந்தது. இதன் காரணமாக ஜெயக்குமாருக்கும், கனிமொழிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.

    மேலும் சக்தி குடும்பத்தினர் சொல்லி கொடுத்துதான் தனது மனைவி தன்னுடன் சண்டை போடுகிறாள் என ஜெயக்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஜெயக்குமார், அவரது தாயார் பத்மினி, தம்பி உதயகுமார் ஆகியோர் கடந்த 15.10.16 அன்று சக்தியிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த உதயகுமார் சக்தியை கையால் தாக்கினார். ஜெயக்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்தியின் வயிற்றில் குத்தினார். இதில் சக்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு திருப்பத்தூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது.

    நேற்று வழக்கை நீதிபதி இந்திராணி விசாரித்து, ஜெயக்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். உதயகுமார், பத்மினி ஆகிய 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    கடலூர்:

    நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் அண்ணாநகரை சேர்ந்தவர் அபோன்ராஜ். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 22). கடந்த 4.8.2016 அன்று இரவு மின் தடை ஏற்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மணிகண்டன், பக்கத்து தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    சிறுமி சத்தமிட்டதால் பெற்றோர் எழுந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், மணிகண்டனை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர் தப்பி ஓடி விட்டார். பின்னர் இது பற்றி சிறுமியின் தாய் நெய்வேலி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் மணிகண்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வப்பிரியா ஆஜராகி வாதாடினார். #tamilnews
    மதுரையில் நேற்று இரவு மர்ம நபர்களால் ரவுடி மற்றும் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை செல்லூர் வைத்தியநாதபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது25), பிரபல ரவுடி. இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில்தான் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்.

    அசோக்குமார் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது 4 பேர் வந்தனர். அவர்கள் யார் என்று பெற்றோர் கேட்டபோது, தெரிந்தவர்கள்தான் பேசி விட்டு வருகிறேன் என்று அசோக்குமார் வெளியே சென்றார்.

    சிறிது நேரத்தில் அவரது அலறல் சத்தம் கேட்டது. பெற்றோர் சென்று பார்த்த போது அசோக்குமார் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து செல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அசோக்குமாருக்கும், வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த மற்றொரு ரவுடி கும்பலுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவர்களில் யாராவது அசோக்குமாரை கொன்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்லூர் அருள்தாஸ்புரத்தில் நேற்று நள்ளிரவில் மற்றொரு வாலிபரும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    அவரது பெயர் ஹரிராஜா (26). செல்லூர் பாக்கியநாதபுரம் அனுமார் கோவில் சந்து பகுதியைச் சேர்ந்த பெரியபாண்டியின் மகன் ஆவார்.

    பெரியபாண்டி பாக்கிய நாதபுரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். ஹரிராஜா அவருக்கு உதவியாக இருந்து வந்தார்.

    நேற்று இரவு வெளியே போய் வருவதாக கூறி சென்ற ஹரிராஜா அருள் தாஸ்புரம் தண்ணீர் தொட்டி அருகே கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    ×