என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு"
பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கியது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்துள்ளது.
ஏப்ரல் 11-ந் தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல், ஏப்ரல் 18-ந் தேதி 96 தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தல், ஏப்ரல் 23-ந் தேதி 115 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்ட தேர்தல், ஏப்ரல் 29-ந் தேதி 71 தொகுதிகளுக்கு 4-வது கட்ட தேர்தல் நடைபெற்றது. கடந்த 6-ந் தேதி 51 தொகுதிகளுக்கு 5-வது கட்ட தேர்தல் நடைபெற்றது. கடந்த 12-ந் தேதி 59 தொகுதிகளுக்கு 6-வது கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.
இதைத்தொடர்ந்து 7-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் 8 மாநிலங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.
7-வது கட்ட தேர்தலில் பீகார் (8), ஜார்க்கண்ட் (3), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்கு வங்காளம் (9), சத்தீஸ்கர் (1), உத்தரபிரதேசம் (13), இமாச்சலபிரதேசம் (4) ஆகிய 8 மாநிலங்களில் இருக்கும் 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
7-வது கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் 59 தொகுதிகளில் வாரணாசி, பாட்னா சாகிப், சண்டிகர், இந்தூர், அமிர்தசரஸ், கோரக்பூர், காசியாப்பூர் ஆகிய தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகளாகும். இந்த தொகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்துக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
7-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 சதவீதம் பேர் மீது அதாவது 170 பேர்மீது கிரிமினல் வழக்கு உள்ளன. 12 பேர் மீது கொலை வழக்கும், 34 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன.
20 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குகள் இருக்கின்றன. இந்த 20 பேரில் 2 வேட்பாளர்கள் மீது கற்பழிப்பு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
7-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 29 சதவீதம் பேர் கோடீசுவரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 7-வது கட்ட தேர்தலில் அதிக பணப்பட்டுவாடா நடப்பதாக புகார்கள் குவிந்துள்ளன.
இதைத் தடுக்க நாளை பிரசாரம் முடிந்ததும் கண்காணிப்பை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 19-ந் தேதி தேர்தல் முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும். 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
மத்தியபிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 பாராளுமன்ற தொகுதிகளில் 3 கட்டமாக 21 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துவிட்டது.
மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் இந்தூர் தொகுதியும் ஒன்று. இங்கு வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
விழிப்புணர்வு பிரசாரம் செய்தது மட்டுமின்றி ஓட்டுப் போடும் வாக்காளர்களுக்கு பரிசையும் அறிவித்துள்ளனர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் 62 சதவீதம் மட்டுமே ஓட்டுகள் பதிவாகி இருந்தது. எனவே ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க செய்வதற்காக பிரத்யேகமாக செல்போன் செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
அந்த செயலியை வாக்காளர்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து தங்களது விவரங்களை பதிவு செய்ததால், வாக்குப்பதிவு நாளன்று நினைவூட்டிக் கொண்டே இருக்கும். இதோடு வாக்காளர்களுக்கு பல்வேறு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த ஆடை அணிந்து வாக்களிக்கும் ஆண், பெண், மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிக்கும் கர்ப்பிணி, மூத்த குடிமக்கள், வாக்களிக்கும் சிறந்த ஜோடி என பல்வேறு வகைகளில் வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் செய்துள்ளனர்.
இதுதவிர ஓட்டுப்போட்ட பின் கைவிரலில் மையுடன் செல்லும் வாக்காளர்களுக்கு ஓட்டல்களில் 10 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி விலை, ஸ்வீட் கடைகள், தியேட்டர்களில் படம் பார்க்க செல்பவர்களுக்கு பாப்கார்ன் பரிசாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், பென்சனர்கள், மாற்றுத்திறனாளிகள் பஸ்சில் இலவச பயணம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதை தவிர்க்க டோக்கன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. நேற்றுடன் ஆறுகட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் பொதுவாக வாக்குப்பதிவு நேரமானது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 வரை என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களுக்கான நோன்பு திறப்பது காரணமாகவும், தற்போதைய காலக்கட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளதாலும் வாக்குப்பதிவின் நேரத்தை மக்களின் நலன்கருதி மாற்றி அமைக்க வேண்டும்’ என தனது மனுவில் நிஜாமுதீன் பாட்ஷா குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா ஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறைக்கால அமர்வின் முன்னர் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வாக்குப்பதிவுக்கான நேரத்தை முன்கூட்டியே அதிகாலை என்று மாற்றினால் தேர்தல் அலுவலர்களின் போக்குவரத்து தொடர்பான சிரமங்கள் நேரிடும் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், காலை 7 மணி என்பது வெயில் குறைவாக உள்ள நேரம். அதேபோல் மாலை 6 மணிவரை வாக்களிக்க வாய்ப்புள்ளது என்பதை குறிப்பிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் காவேரி ரோடு மாசிமலை வீதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 52). இவரது மனைவி பெயர் பாவாத்தாள். கவுதம் என்ற மகனும், காவியா என்ற ஒரு மகளும் உள்ளனர்.
ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் மூர்த்தி சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். தற்போது பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோட்டை அடுத்த சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்களும் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தியும் இந்த வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி ஓட்டுப்பதிவு எந்திரங்கள் உள்ள அறை முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்- இன்ஸ்பெக்டர் மூர்த்திக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. நெஞ்சை பிடித்தப்படி சரிந்து விழுந்தார்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மற்ற போலீசார் அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி கொண்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர் அவரை பரிசோதித்த போது அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
திடீர் மாரடைப்பில் இறந்த சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி உடல் பவானி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திடீர் மாரடைப்பில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 18-ந்தேதி நடந்தது.
பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 46 ஓட்டுச்சாவடிகளில் புதுவையில் ஒரு சில ஓட்டுச் சாவடிகளில் தவறுகள் நடந்ததாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்றது.
இதில் தமிழகத்தில் 13 ஓட்டுச்சாவடியிலும் புதுவையில் ஒரு ஓட்டுச் சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தர விட்டது. காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கட்டா நகர் 10-ம் எண் வாக்குச் சாவடியில் மாதிரி ஓட்டுப்பதிவில் குளறுபடி ஏற்பட்டது.
வாக்கு எந்திரத்தை சோதனை செய்வதற்காக முதலில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. அந்த சீட்டுகளை அகற்றாமல் தொடர்ந்து ஓட்டுப்பதிவு நடந்ததால் பிரச்சினை உருவானது.
இதனால் வெங்கடா நகர் வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தர விட்டது.
புதுவை வெங்கடா நகரில் மின் கட்டண வசூல் மையத்தில் வாக்குசாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, நிழற்பந்தல் உள்ளிட்ட அணைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.
வெங்கட்டாநகர் வாக்கு சாவடியில் மொத்தம் 952 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 473-ம், பெண்கள் 479ம் அடங்கும்.
மறுவாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. முன்னதாக முகவர்கள் முன்னிலையில் விவி பாட் எந்திரத்தில் மாதிரி வாக்கு பதிவு சோதித்து காட்டப்பபட்டது.
மறுவாக்குப்பதிவில் பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய போது ஒரு முதியவர் மட்டுமே வாக்களிக்க வந்திருந்தார். மந்தகதியிலேயே வாக்குப்பதிவு நடந்தது.
வாக்காளர்கள் தனித் தனியாக ஒவ்வொருவராக வந்தே வாக்களித்தனர். வாக்குப்பதிவு தொடங்கிய. அரை மணி நேரத்தில் அதாவது 7.30 மணியளவில் 10 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்பட்டது.
மதியம் 1 மணி வரை 313 வாக்காளர்கள் ஓட்டு போட்டிருந்தனர். அதாவது 30 சதவீதம் அளவுக்கு பதிவாகி இருந்தது. வெயில் அதிகமாக இருந்ததால் மக்கள் வரவில்லை என்று கருதப்படுகிறது. மாலை 5 மணி வரை 53 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடத்தப்படும் தேர்தலில் இதுவரை 5 கட்ட தேர்தல் முடிந்துள்ளது.
6-வது கட்டமாக உத்தர பிரதேசம் (14), அரியானா (10), மேற்கு வங்காளம் (8), பீகார் (8), மத்திய பிரதேசம் (8), டெல்லி (7), ஜார்க்கண்ட் (4) ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 59 தொகுதிகளிலும் நேற்று மாலை பிரசாரம் ஓய்ந்தது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) 59 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும்.
59 தொகுதிகளிலும் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் திக்விஜய் சிங், மேனகா காந்தி, அகிலேஷ் யாதவ், ரீடா பகுகுணா, கீர்த்தி ஆசாத், கவுதம் காம்பீர், பூபிந்தர் கூடா, ராதா மோகன் சிங், ரகுவன்ஸ் பிரசாத் சிங், மீனாட்சி லெகி, அஜய்மக்கன், விஜேந்தர்சிங், ஷீலா தீட்சித் ஆகியோர் முக்கியமானவர்கள்.
59 தொகுதிகளிலும் 10 கோடியே 17 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 5 கோடியே 42 லட்சம் பேர். பெண் வாக்காளர்கள் 4 கோடியே 75 பேர்.
இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 7 மாநிலங்களிலும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பாதிக்கு பாதி பதட்டமானதாக கண்டறியப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு இந்த 59 தொகுதிகளில் 2 இடங்களே கிடைத்திருந்தன. இந்திய தேசிய லோக் தளம் 2 இடங்களிலும், அகாலி தளம் 1 இடத்திலும், சமாஜ்வாடி கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.
ஆனால் இந்த தடவை பா.ஜனதாவுக்கு 2014-ம் ஆண்டு தேர்தலில் கிடைத்தது போல 44 இடங்களில் வெற்றி கிடைக்குமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. தற்போதைய அரசியல் நிலவரப்படி இந்த 44 இடங்களில் பாதி இடங்களை பா.ஜனதா இழக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் 6-வது கட்ட தேர்தல் பாரதிய ஜனதாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது.
இதுவரை நடந்துள்ள 5 கட்ட தேர்தல்கள் மூலம் 424 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்துள்ளது. நாளை நடக்கும் 59 தொகுதிகளையும் சேர்த்தால் 483 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்று விடும்.
19-ந்தேதி 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் அத்துடன் 542 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்து விடும். 23-ந்தேதி வாக்குகள் எண்ணி முடிவுகள் வெளியிடப்படும்.
பாதுகாப்பு படைகளில் பணியாற்றுபவர்கள் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளுக்கு வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவதால் அவரவர்களுக்கு வாக்குரிமை உள்ள தொகுதிகளில் முன்கூட்டியே அவர்கள் வாக்களித்துவிட்டு செல்வதற்கு வசதி செய்து கொடுக்கப்படுகிறது.
தபால் ஓட்டு என்றழைக்கப்படும் இந்த வாக்குகள்தான் வாக்கு எண்ணிக்கையின் முதல்சுற்றில் எண்ணப்படும். அவ்வகையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியாவில் இருந்து பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒரு வீரர், சுயேட்சை வேட்பாளரும் நடிகையுமான சுமலதாவுக்கு தான் வாக்களித்த காட்சியை செல்பியாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.
இதற்கு சிலர் கண்டனம் தெரிவித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக சிலர் தேர்தல் கமிஷனில் ஆதாரத்துடன் புகார் அளித்தனர். இதனடிப்பையில் நடவடிக்கை எடுத்த தேர்தல் கமிஷன், எண்ணிக்கையின்போது அந்நபரின் வாக்கை தள்ளுபடி செய்யுமாறு தொகுதி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. #LSPolls #Postalvote #CRPFSoldier #CRPFSoldierPostalvote
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று மதியம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அது போல கடலூர், பூந்தமல்லியில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கடந்த மாதம் 29-ந்தேதி பரிந்துரை செய்யப்பட்டது. அதை ஏற்று இந்த 10 இடங்களிலும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதற்கிடையே 46 இடங்களில் வாக்குப்பதிவின்போது 3 விதமான தவறுகள் நடந்ததாக தெரிய வந்தது.
1. மாதிரி வாக்குப்பதிவு நடத்தும்போது ஓட்டு எந்திரத்தில் பதிவான வாக்குகளை அழிக்காமல் விட்டு விட்டனர்.
2. சில தொகுதிகளில் விவி பேட்டில் உள்ள துண்டு சீட்டுகளை அப்புறப்படுத்தவில்லை.
3. மின்னணு எந்திரத்தில் பதிவான மாதிரி வாக்குகளையும் விவி பேட்டில் உள்ள துண்டு சீட்டையும் அகற்றாமல் தவறு செய்து இருந்தனர்.
இதை மேற்கோள் காட்டி தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பி இருந்தோம். அதை பரிசீலித்த தேர்தல் ஆணையம் இந்த 46 இடங்களில் 3 இடங்களில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த நேற்று மாலை உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து 13 வாக்குச்சாவடிகளில் வருகிற 19-ந்தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மீதமுள்ள 43 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட மாட்டாது. மறு வாக்குப்பதிவு நடக்கும் 13 இடங்களில் 11 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் 2 வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். ஒன்று பாராளுமன்றத்துக்கும் மற்றொன்று சட்டசபை இடைத்தேர்தலுக்கும்.
பண்ருட்டி, ஈரோடு ஆகிய 2 இடங்களில் நடைபெறும் மறுவாக்குப்பதிவில் பாராளுமன்ற வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும்.
கோவையில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை ரகசியமாக நாங்கள் தேனிக்கும், ஈரோடுக்கும் அனுப்பி வைக்கவில்லை. அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு தகவல் சொல்லி விட்டுதான் மின்னணு எந்திரங்களையும் விவி பேட் எந்திரங்களையும் அனுப்பி வைத்தோம்.
தேர்தல் கமிஷனின் அனுமதியின் பேரில்தான் இந்த எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. தேர்தலில் நடந்த தவறுக்காக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது இனிமேல்தான் நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்போது மறுவாக்குப் பதிவு நடத்துவதுதான் எங்களது முக்கிய பணியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகள் விவரத்தையும் இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அந்த 13 வாக்குச்சாவடிகள் விவரம் வருமாறு:-
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பூந்தமல்லி கன்னப்பாளையம் ஊராட்சியில் அடங்கிய மேட்டுப்பாளையம் அரசு பள்ளியில் (பூத் நம்பர் 195) 19-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு 1117 ஓட்டு உள்ளது.
பூந்தமல்லி தொகுதியில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்ததால் இங்கு 19-ந் தேதி நடைபெறும் மறு வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் 2 ஓட்டு போடுவார்கள். அப்போது நடு விரலில் “மை” வைக்கப்படும்.
தர்மபுரி மாவட்டத்தில் 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த 8 வாக்குச் சாவடிகளிலும் உள்ள வாக்காளர்கள் தர்மபுரி எம்.பி. தொகுதிக்கு ஒரு ஓட் டும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு ஒரு ஓட்டும் பதிவு செய்ய வேண்டும்.
தர்மபுரி எம்.பி. தொகுதியில் அடங்கிய பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நத்தமேடு பகுதியில் வாக்குச்சாவடி எண்.192 முதல் 195 வரை உள்ள 4 வாக்குச்சாடிகளிலும், டி.அய்யம்பட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண். 181 மற்றும் 182 ஆகிய 2 வாக்குச்சாவடிகளிலும், கேத்து ரெட்டிப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண்.183 மற்றும் 186 ஆகிய 2 வாக்குச் சாவடிகளிலும் மறு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெரியகுளம் அருகே வடுகபட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண் 197-ல் மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின்னர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் விவி பேட் கருவியில் இருந்து ஒப்புகை சீட்டை அகற்றாமல் தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்துள்ளது.
இந்த மையத்தில் 1405 வாக்குகள் உள்ளன. இதில் ஆண்கள் 702 பேரும், பெண்கள் 703 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். இதில் ஆண்கள் 450 பேர், பெண்கள் 454 பேர் என 904 பேர் வாக்களித்திருந்தனர்.
இதே போல ஆண்டிப்பட்டி அருகே பாலசமுத்திரம் வாக்குச்சாவடி எண் 67-ல் மாதிரி வாக்குப்பதிவு அழிக்காமலும், ஒப்புகை சீட்டை அகற்றாமலும் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்த மையத்தில் 644 ஆண்கள், 611 பெண்கள் என 1255 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில் 523 ஆண்கள், 500 பெண்கள் என மொத்தம் 1023 பேர் வாக்களித்திருந்தனர். இதனால் இந்த இரண்டு வாக்குச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த இரு வாக்குச்சாவடிகளையும் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கும் சேர்த்து வாக்காளர்கள் 2 ஓட்டுகள் போட வேண்டும்.
ஈரோடு பாராளுமன்ற தொகுதி காங்கயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் என்ற ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் உள்ள வாக்கு சாவடி எண். 248ல் மறு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
இந்த ஓட்டு மையத்தில் தேர்தலுக்கு முன் மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் மாதிரி ஓட்டு 50 சேர்ந்து பதிவாகி உள்ளது. இதனால் அந்த ஒரு வாக்குச்சாவடிக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
கடலூர் பாராளுமன்ற தொகுதி பண்ருட்டி திருவதிகை நகராட்சி உயர் நிலைப்பள்ளியில் உள்ள 210-ம் எண் வாக்குச் சாவடியில் கடந்த 18-ந் தேதி நடந்த வாக்குப்பதிவின்போது அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சின்னத்தின் பட்டன் இல்லை என்பதை வாக்காளர் ஒருவர் கண்டுபிடித்தார்.
இதைத்தொடர்ந்து 210-ம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு கலெக்டர் அன்புச்செல்வன் அறிக்கை அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் திருவதிகை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உள்ள 210-ம் எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
புதுவை மாநிலத்தில் உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு 2-ம் கட்டமாக கடந்த 18-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றபோது காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கட்டா நகர் வாக்குச்சாவடி எண் 10-ல் மாதிரி வாக்குப்பதிவுகளை வாக்குப்பதிவு அதிகாரி நீக்காமல் வாக்கு பதிவு செய்திருப்பது தெரிய வந்தது.
இந்திய பாராளுமன்ற தேர்தல், பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. முதல் 3 கட்ட தேர்தலில் 302 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தள்ள நிலையில் இன்று (திங்கட்கிழமை) 9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் நான்காம் கட்ட தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் 12 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். 961 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை இந்த வாக்காளர்கள் 1 லட்சத்து 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு செய்து தீர்மானிக்கின்றனர்.
இன்று தேர்தலை சந்திக்கிற பீகாரின் 5, ஜார்கண்டின் 3, மத்திய பிரதேசத்தின் 6, மராட்டியத்தின் 17, ஒடிசாவின் 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தின் தலா 13, மேற்கு வங்காளத்தின் 8, காஷ்மீரின் 1 (அனந்தநாக் தொகுதியில் குல்காம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும்) தொகுதிகளில் மாநில போலீஸ் படையினரும், மத்திய துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பதற்றமான இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் 42 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
4-வது கட்ட பாராளுமன்ற தேர்தலில் மராட்டியம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 பெரிய மாநிலங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மராட்டிய மாநிலத்தில் மும்பை மாநகரில் உள்ள 6 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.
மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் உள்ள நடிகை ஊர்மிளாவுக்கும், பா.ஜனதா கட்சி வேட்பாளர் கோபால் ஷெட்டிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வட மத்தி மும்பையில் மறைந்த முன்னாள் மத்திய மந்திரி பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜனுக்கும்(பா.ஜனதா), மற்றொரு மறைந்த முன்னாள் மத்திய மந்திரியான சுனில் தத்தின் மகள் பிரியா தத்துக்கும் (காங்கிரஸ்) இடையே ‘நீயா, நானா?’ என்கிற அளவில் போட்டி அமைந்துள்ளது.
மத்திய பிரதேசத்தைப் பொறுத்தமட்டில், முதல்-மந்திரி கமல்நாத் 9 முறை வென்ற சிந்த்வாரா நாடாளுமன்ற தொகுதியில் அவரது மகன் நகுல் காத் (காங்கிரஸ்) போட்டியிடுகிறார்.
முதல்-மந்திரி பதவியை தக்கவைப்பதற்காக கமல்நாத், சிந்த்வாரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். தந்தையும், மகனும் ஒரே நாளில் ஒரே தொகுதியில் தேர்தலை சந்திக்கின்றனர் என்பது முக்கிய அம்சம்.
பீகாரில் பெகுசாராய் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. இங்கு பா.ஜனதா வேட்பாளராக மத்திய மந்திரி கிரிராஜ்சிங்கும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமாரும் மோதுகின்றனர். இதே மாநிலத்தின் தர்பங்கா தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வென்றவர்.
மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோவும் (பாரதீய ஜனதா கட்சி), நடிகை மூன்மூன்சென்னும் (திரிணாமுல் காங்கிரஸ்) அசன்சோல் தொகுதியில் கடும் போட்டியில் உள்ளனர்.
இந்த 4-வது கட்ட தேர்தலுக்காக தலைவர்கள் பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா (பா.ஜனதா), தேவேந்திர பட்னாவிஸ் (பா.ஜனதா), ராகுல் காந்தி (காங்கிரஸ்), பிரியங்கா (காங்கிரஸ்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), மாயாவதி (பகுஜன் சமாஜ்), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), நவீன் பட்நாயக் (பிஜூஜனதாதளம்), உத்தவ் தாக்கரே (சிவசேனா) உள்ளிட்டவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு, ஆதரவு திரட்டினர்.
நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.
இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு முடிகிறது.
இன்று ஓட்டுப்பதிவு நடக்கிற 72 தொகுதிகளில் 45 தொகுதிகளை பாரதீய ஜனதா கட்சி கடந்த 2014 தேர்தலில் கைப்பற்றி இருந்தது. இதைத் தக்க வைத்தாக வேண்டிய நெருக்கடி, அந்த கட்சிக்கு உள்ளது.
பீகார், ஜார்கண்ட், காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய ஏழு மாநிலங்களில் 51 தொகுதிகளில் 5-வது கட்ட தேர்தல் மே மாதம் 6-ந் தேதி நடக்கிறது. #LokSabhaElection #4thPhase #BJP #Congress
கேரளாவில் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. கோவளம் வாக்குச்சாவடியில் கை சின்னத்தை அழுத்தியபோது தாமரைக்கு நேரே விளக்கு எரிந்ததாக புகார் எழுந்ததை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டது.
இயந்திரம் பழுதானதே இந்த குழப்பத்துக்கு காரணம் என திருவனந்தபுரம் கலெக்டர் வாசுகி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பேஸ்புக் நேரலையில் வந்த திருவனந்தபுரம் கலெக்டர் வாசுகி கூறியிருப்பதாவது:-
‘கோவளம் செவ்வரா 151-வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்கு செல்வதாக தவறான செய்தி பகிரப்படுகிறது. எந்த பட்டனை அழுத்தினாலும் ஒரு கட்சிக்கு வாக்கு விழும் என்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம் இல்லை.
அப்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றி அமைக்க சாத்தியமே இல்லை. கோவளத்தில் 76 வாக்குகள் நல்லமுறையில் பதிவு செய்யப்பட்டது. 77வது வாக்கு பதிவின்போது இயந்திரம் பழுதானது. இயந்திரத்தில் சின்னதாக தவறு நடந்துள்ளது. இது போன்ற பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக இயந்திரத்தை மாற்ற வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி உடனடியாக இயந்திரத்தை மாற்றி, தொடர்ந்து வாக்குப்பதிவு நல்லபடியாக நடந்தது’
இவ்வாறு அவர் கூறினார்.
கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா கூறியதாவது:-
‘கோவளம் சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தகராறு ஏற்படுவதற்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் குறித்து ஆய்வு செய்யப்படும். கேரளத்தில் பல பகுதிகளில் மழை பெய்ததால் ஈரப்பதம் காரணமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி உள்ளன. மற்றபடி கேரளத்தில் நல்லபடியாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது’.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #ThiruvananthapuramCollector
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்