search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாஸ்"

    முதலமைச்சரின் சாதியை குறிப்பிட்டு பேசியது வன்முறையை தூண்டக்கூடியது என்று கருணாஸ் மீது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். #Eswaran #Karunas
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கருணாஸ் எம்.எல்.ஏ. பேசிய பேச்சு மக்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

    ஒரு எம்.எல்.ஏ. சாதி பெயரை குறிப்பிட்டு பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. நீங்கள் (கருணாஸ்) பிறந்த சாதியை உயர்வாக பேசிக் கொள்ளுங்கள். அதை பற்றி யாரும் கவலைப்படவில்லை. உங்களை உயர்த்தி கொள்வதற்காக அடுத்த சமுதாயத்தை கொச்சைப்படுத்தி பேசுவது தவறான பாதைக்கு வழி காட்டுவதாகும்.

    தமிழக அரசை பற்றி எந்த குற்றத்தை வேண்டுமானாலும் சுமத்தலாம். விமர்சனம் செய்யலாம். அந்த உரிமை ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு உள்ளது. முதலமைச்சருடைய சாதியை குறிப்பிட்டு பேசுவது வன்முறையை தூண்டக்கூடியது.

    அ.தி.மு.க.வினுடைய வாக்கு வங்கியால் நீங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆனீர்களா? அல்லது உங்கள் மக்கள் செல்வாக்கால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததா?. எம்.ஜி. ஆர். காலத்திலிருந்தே கொங்கு மண்டலத்தினுடைய ஆதரவால்தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து கொண்டிருந்ததென்பது எந்தவொரு பாமரனுக்கும் தெரியும்.

    2016-ம் ஆண்டிலே ஆட்சிக்கு வந்தது கூட கொங்கு மண்டலம் கொடுத்த வெற்றிதான் என்பதை நினைவூட்டுகிறேன். அப்படி இருக்கையில் இன்னொரு சாதி போட்ட பிச்சையில் கொங்கு மண்டலத்துக்காரர் முதலமைச்சராகி இருக்கிறார் என்று சொல்வது நியாயமா?

    தனிப்பட்ட விளம்பரம் தேடி கொள்வதற்காக இப்படி பேசுவதை எல்லாம் தவிர்க்க வேண்டும். ஒரு மக்கள் பிரதிநிதியாக இருப்பதற்கு முதல் தகுதி மற்றவர்கள் மனம் புண்படாமல் பேசுவதுதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    2016-ம் ஆண்டு கடைசி நேரத்தில் உங்களை அழைத்து ஒரு சட்டமன்ற உறுப்பினராக்கினார்கள் என்பதற்காக நன்றி விசுவாசத்தை காட்டுங்கள், யாருக்கும் கவலையில்லை. ஆனால் அடுத்தவர்களை கேவலப்படுத்தி பேசாதீர்கள்.

    பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசுவதை அனுமதிக்கக்கூ டாது. எல்லோருக்கும் பேச தெரியும். ஆனால் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அநாகரிகமாக நடந்து கொள்ளக்கூடாது.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். #KonguNaduMakkalDesiaKatchi #Eswaran #Karunas
    காவல் துறையை கண்டித்து கருணாஸ் பேசியது கோழைத்தனம் என்று மதுரை விமான நிலையத்தில் நடிகர் கார்த்திக் கூறினார். #Karunas #Karthik
    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் நடிகர் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2½ ஆண்டுகளாக அரசியலில் இருந்து விலகி இருந்தேன். அதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் அப்படி ஒதுங்கி இருந்திருக்கக்கூடாது.

    நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பகுதி நேர அரசியல்வாதிகளாக இல்லாமல் முழுநேர அரசியல் வாதிகளாக செயல்பட வேண்டும். இனி நானும் முழுநேர அரசியல்வாதியாக செயல்படுவேன்.

    எனது கட்சியில் தவறு செய்தவர்கள் அவர்களாகவே ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இல்லை எனில் நான் விலக்க நேரிடும்.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம். அதே சமயத்தில் திருவாரூர் தொகுதி மிகப்பெரிய தலைவர் போட்டியிட்ட இடம் என்பதால் அதில் போட்டியிடவில்லை. பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுவோம்.

    மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்ட வேண்டும். ஆளும் கட்சி மக்களுக்கு எதிராக இருந்தால் அதற்கு எனது ஆதரவில்லை.


    தமிழர்களுக்கு வீரம் அதிகம். போராடலாம். ஆனால் கொலை செய்யக் கூடாது. காவல்துறையை கண்டித்து கொலை செய்வோம் என கருணாஸ் என்ன காரணத்துக்காக கூறினார் என்று தெரியவில்லை. அவர் அவ்வாறு பேசியது கண்டித்தக்கது. இது மிகவும் கோழைத்தனமான செயலாகும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #Karunas #Karthik
    அதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை எவ்வாறு கையாளுவது எனத் தெரியாமல் கருணாஸ் நிலை தடுமாறியிருப்பதாக அமைச்சர் உதயகுமார் விமர்சனம் செய்தார். #Karunas #RBUdhayaKumar
    மதுரை:

    முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ், சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியபோது, கூவத்தூரில் நான் இல்லாமலா இந்த அரசு உருவானது? என்று கூறிய அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் இழுத்தார்.

    ‘முதல்வரே நான் அடித்து விடுவேன் என பயப்படுகிறார் போலும். இந்த கருணாஸ் இல்லாமல் எப்படி அரசாங்கம் ஏற்பட்டது? கூவத்தூர் ரிசார்ட்டை காட்டினது நான்தான். என்றார். அத்துடன் காவல்துறை உயர் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசினார். அவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதுடன், அ.தி.மு.க.வில் சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.


    கருணாஸ் பேசியது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, கருணாஸ் பேச்சு குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

    இதற்கிடையே மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், “கருணாஸ் அதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை எவ்வாறு கையாளுவது எனத் தெரியாமல் நிலை தடுமாறியுள்ளார்” என தெரிவித்தார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. அரசைப் பற்றி விமர்சிக்க தி.மு.க.விற்கு எந்த தகுதியும் இல்லை என்றும் அமைச்சர் உதயகுமார் கூறினார். #RBUdhayaKumar #Karunas
    நாசர் தலைமையினான அணி நடிகர் சங்கத்தினை நிர்வகித்து வரும் நிலையில், நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படுவதால் நடிகர் சங்கத் தேர்தல் 6 மாதம் தள்ளிவைக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #NadigarSangamMeet
    சென்னை:

    தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.

    பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, நடிகை ஸ்ரீதேவி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் பொதுக்குழுவில் விஷால் பேசியதாவது:-

    ‘நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 19 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த இடத்தை ரூ.26 ஆயிரத்துக்கு வாங்கினார்கள். இப்போது அதன் மதிப்பு ரூ.150 கோடியில் இருந்து ரூ.200 கோடி வரை இருக்கும். கட்டிடம் கட்டுவதை எதிர்த்து பல தடைகள் ஏற்படுத்தினார்கள். கோர்ட்டுக்கு சென்றார்கள். அதையெல்லாம் மீறி கட்டிட வேலைகள் நடந்து வருகின்றன. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆத்மா நமக்கு துணையாக இருக்கிறது.



    நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு தான் எனது திருமணம் நடைபெறும். வேங்கட மங்கலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தை விற்றது தொடர்பாக முந்தையை நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு விஷால் பேசினார்.

    கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    ‘நடிகர் சங்க பொறுப்பில் 3 வருடங்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளோம். உறுப்பினர்களுக்கு பல நலப்பணிகள் செய்துள்ளோம். வாக்குறுதி அளித்தபடி சங்க கட்டிடத்தையும் கட்டி வருகிறோம். உறுப்பினர்கள் பட்டியலில் உள்ள குறைகளை சரி செய்வதற்காக நடிகர் சங்க தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று 10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சங்கத்துக்கு கடிதம் கொடுத்துள்ளனர். எனவே தேர்தலை 6 மாதத்துக்கு தள்ளிவைத்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.



    அனைத்து உறுப்பினர்களுமே தேர்தலை தள்ளி வைக்க ஆதரவு தெரிவித்தனர். அடுத்த மார்ச் மாதம் கட்டிட வேலைகளை முடித்து திறப்பு விழா நடத்த முடிவு செய்துள்ளோம். நடிகர் சங்க தேர்தலும் புதிய கட்டிடத்திலேயே நடைபெறும். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க மேலும் ரூ.20 கோடி தேவைப்படுகிறது. எனவே நட்சத்திர கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். சர்வதேச தரத்தில் இந்த கட்டிடமும் அரங்குகளும் கட்டப்பட்டு வருகிறது என்றார்கள். 

    பொதுக்குழுவில் நடிகர்கள் விஜயகுமார், பாக்யராஜ், எஸ்.வி.சேகர், விஜய்சேதுபதி, ஜீவா, ஐசரி கணேஷ், பூச்சி முருகன், நந்தா, ஸ்ரீமன், கே.ராஜன், சரவணன், உதயா, ஆனந்தராஜ், நடிகைகள் லதா, சரோஜா தேவி, பூர்ணிமா, சச்சு, காஞ்சனா, சோனியா, சங்கீதா, குட்டி பத்மினி, ஷீலா, ரோகிணி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். #NadigarSangamMeet #Vishal #Nasser

    வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `வடசென்னை' படத்தின் முன்னோட்டம். #VadaChennai #Dhanush
    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `வடசென்னை'. 

    வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப், பவல் நவகீதன், சாய் தீனா, சரண் சக்தி, பவர்பாண்டி விக்கி, சோமு உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    இசை - சந்தோஷ் நாராயணன், படத்தொகுப்பு - ஜி.பி.வெங்கடேஷ், ஆர்.ராமர், ஒளிப்பதிவு - வேல்ராஜ், ஒலி வடிவமைப்பு - டி.உதயகுமார், கலை இயக்குனர் - ஜாக்கி, சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், ஸ்டில்ஸ் - ராபர்ட், ஆடை வடிவமைப்பு - அமிர்தா ராம், தயாரிப்பு - தனுஷ், தயாரிப்பு மேற்பார்வை - எஸ்.பி.சொக்கலிங்கம், தயாரிப்பு நிறுவனம் - வுண்டர்பார் பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் - வெற்றிமாறன்.

    மூன்று பாகங்களாக உருவாகும் வடசென்னை படத்தின் டீசர், சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது. படத்தை அக்டோபரில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

    தமிழக சட்டசபைக்கு இன்று வந்த கருணாஸ் முதல்-அமைச்சர் இருக்கை அருகே சென்று அவரிடம் தனக்கு சட்டசபையில் பேச அனுமதி தாருங்கள் என்று கேட்டார்.
    சென்னை:

    அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. சமீப காலமாக அரசுக்கு எதிராக குற்றம் சாட்டி வந்தார். தி.மு.க. நடத்திய மாதிரி சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டு கூவத்தூர் பேரம் பற்றி எனக்கு தெரியும் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

    அவரது இந்த நிலையால் சட்டசபையில் பேச முன்பு போல் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதுபற்றி அவர் சபாநாயகரிடம் முறையிட்டபோது அரசு கொறடாவை சந்திக்குமாறு கூறினார்.

    என்றாலும் அவருக்கு சட்டசபையில் பேச அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று சட்டசபைக்கு வந்த கருணாஸ் முதல்- அமைச்சர் இருக்கை அருகே சென்று அவரிடம் தனக்கு சட்டசபையில் பேச அனுமதி தாருங்கள் என்று மெதுவாக கேட்டார். அதற்கு முதல்- அமைச்சர் பார்க்கலாம் என்று கூறிவிட்டார்.

    பின்னர் கருணாஸ் நிருபர்களிடம் கூறும்போது, வரலாற்று பாடப்புத்தகத்தில் பசும்பொன்தேவர் வரலாறு நீக்கம் பற்றி விளக்கம் கேட்டு சட்டசபையில் பேசவே அனுமதி கேட்டேன் என்றார். இந்த பிரச்சனைக்கு ஏற்கனவே அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளிக்கையில் மீண்டும் பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #TNAssembly #Karunas
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `வடசென்னை' படத்தின் முதல் பாகம் ரிலீசுக்கு தயாராகியிருக்கும் நிலையில், படத்தின் இசை குறித்து சந்தோஷ் நாராயணன் மனம் திறந்துள்ளார். #VadaChennai #Dhanush
    தனுஷ் - வெற்றிமாறன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் `வடசென்னை'. மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படத்தின்
     முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூலை 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 

    இந்த நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடல்களை இசையமைத்து முடித்துவிட்டதாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,

    `வடசென்னை படத்திற்கு இசையமைத்து முடித்துவிட்டேன். வெற்றிமாறனின் இந்த பிரம்மாண்ட படைப்பில் நானும் ஒருவனாக இருப்பதை கவுரவமாக நினைக்கிறேன். படத்திற்காக கடுமையாக உழைத்த நடிகர் தனுஷுக்கு வாழ்த்துக்கள். துடிப்பும், வேடிக்கையும் அடங்கிய ஏரியா குத்து பாடல்களுடன் திரும்ப வருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்'. என்று கூறியிருக்கிறார். 

    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். முக்கிய கதபாத்திரங்களில் அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் ஆகஸ்ட்டில் வெளியாக இருக்கிறது. #VadaChennai #Dhanush

    அதிமுக ஆட்சி தொடர என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும், தேவைப்பட்டால் கூவத்தூர் ரகசியத்தை வெளியிட தயாராக இருப்பதாகவும் கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்தார். #Karunas #Koovathur
    சென்னை:

    தி.மு.க. சார்பில் அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டசபை கூட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    இப்போதைய அரசு ஜனநாயகத்துக்கு எதிராக உள்ளது. மக்கள் மீது அக்கறை கொள்ளாமல் தங்கள் மீது மட்டும் அக்கறையுடன் செயல்படுகிறார்கள். நான் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அரசியலில் அறிமுகம் செய்யப்பட்டேன். இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட்டு ஜெயித்தேன்.

    என்றாலும், இன்று வரை நடுநிலையுடன்தான் செயல்படுகிறேன். மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்த்து வருகிறேன். தூத்துக்குடியில் அரசு நடந்து கொண்ட விதம் எனக்கு மிகுந்த மனவருத்தத்தை கொடுத்து இருக்கிறது.

    தூத்துக்குடியில் அமைதியாக ஊர்வலம் நடத்திய மக்கள் மீது குறிவைத்து சுட போலீசாருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இது பற்றி சட்டசபையில் பேசுவதற்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது. உதவி வட்டாட்சியர் உத்தரவுப்படி துப்பாக்கி சூடு நடந்தது என்கிறார்கள்.

    முதல்-அமைச்சர் இது பற்றி பேசும் போது துப்பாக்கி சூடு என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்னுடைய பாதுகாப்புக்காக நியமித்த அதிகாரியை நீக்கி இருக்கிறார்கள். சட்டசபையில் துப்பாக்கி சூட்டை கண்டித்து நான் பேசியதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.

    நான் எப்போதும் நியாயத்தின் பக்கம்தான் இருப்பேன். தி.மு.க. தற்போது மக்களுக்காக குரல் கொடுக்கிறது. நானும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். மக்களுக்காக செயல்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்த ஆட்சி நீக்கப்பட வேண்டும்.

    அடுத்து ஜனநாயகத்தை மதிக்கும் ஆட்சி அமைய வேண்டும். இதில், மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சர் ஆக வேண்டும். மக்கள் நலனை மட்டும் சிந்திக்கும் அரசாக அது இருக்க வேண்டும். இன்றைய ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். சாதாரண சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு கூட பணம் கேட்கிறார்கள்.

    நான் எனது தொகுதி மக்களுக்காக 182 மனுக்களை அரசிடம் கொடுத்து இருக்கிறேன். அதில் 2 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது. எனவே அடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனநாயகத்தை மதிக்கும் ஆட்சி வரவேண்டும். எனக்கு சீட் வேண்டும் என்பதற்காக இப்படி பேசவில்லை. மக்கள் நலனை கருத்தில் கொண்டே இதை சொல்கிறேன்.


    மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்பதற்காகவே நான் எம்.எல்.ஏ. ஆனேன். ஆனால் அவமானங்களை சந்தித்து விட்டேன். இந்த ஆட்சி தொடர என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். தேவைப்பட்டால் கூவத்தூர் சம்பவம் பற்றிய ரகசியத்தை வெளியிடவும் தயாராக இருக்கிறேன்.

    இன்றைய அரசு பணத்துக்காக நடைபெறும் அரசாக இருக்கிறது. வியாபாரம் போல நடக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். மக்கள் இந்த அரசை விரும்பவில்லை. எனவே, மக்கள் விரும்பும் அரசு, ஜனநாயகத்தை மதிக்கும் அரசு வர வேண்டும். அதற்கு நானும் துணை நிற்கிறேன்.

    இவ்வாறு கருணாஸ் பேசினார். #Karunas #Koovathur
    ×