search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104120"

    இங்கிலாந்து திட்டமிட்டுள்ள 100 பந்து கிரிக்கெட் தொடரில் டோனி, கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோரை விளையாட அனுமதிப்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #BCCI #ViratKohli #MSDhoni #100ballcricket

    புதுடெல்லி:

    முதலில் ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டியாக விளையாடப்பட்ட கிரிக்கெட் போட்டிகள், பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டான 50 ஓவர் போட்டியாக மாறியது. பின்னர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் டி20 ஓவராக மாறியது. தற்போது சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. சுமார் நான்கு மணி நேரத்திற்குள் போட்டி முடிந்துவிடும் என்பதால் ரசிகர்களும் அதிக அளவில் மைதானத்திற்கு படையெடுக்கிறார்கள்.

    டெஸ்ட் போட்டி 20 ஓவராக சுருங்கியதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 2020-ம் ஆண்டில் இருந்து 8 அணிகள் பங்கேற்கும் 100 பந்து போட்டி தொடரை தொடங்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. 16-ல் 15 ஓவர்கள், 6 பந்து வீதம் வீசப்படும். கடைசி ஓவரில் 10 பந்துகள் வீசப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் மற்ற நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஆனால் மற்ற நாடுகளில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. ஐபிஎல் தொடரின் பெருமை மற்றும் மார்க்கெட் மதிப்பை காப்பதற்காக இந்திய வீரர்கள் மற்ற லீக் தொடர்களில் விளையாட பிசிசிஐ அனுமதி மறுத்து வருகிறது. இதனால் இந்த தொடரிலும் இந்திய வீரர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது.



    இந்நிலையில், இந்த 100 பந்து கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்களான டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோரை விளையாட அனுமதி அளிப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு இந்திய வீரர்கள் 100 பந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதிப்பட்டால், அந்த தொடர் அதிக வரவேற்பு பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.

    ஏற்கனவே இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள மகளிருக்கான கியா டி20 லீக்கில் இந்திய வீராங்கனைகள் விளையாட பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #BCCI #ViratKohli #MSDhoni #100ballcricket
    கேப்டன் விராட் கோலி தனது கேப்டன் பதவிக்கான செல்வாக்கை அளவுக் கடந்து பயன்படுத்தியதாக நினைக்கவில்லை என வினோத் ராய் கூறியுள்ளார். #ViratKohli
    இந்திய கிரிக்கெட் வாரியத்தில் சீர்த்திருத்தங்கள் கொண்டு வர லோதா தலைமையிலான குழு பல்வேறு கருத்துக்களை உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது. இதில் பெரும்பாலானவற்றை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    பிசிசிஐ நிர்வாகிகள் லோதா பரிந்துரைகளை செயல்படுத்த தாமதம் செய்தார்கள். இதனால் வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழு ஒன்றை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த குழுவின் தலைவரான வினோத் ராய்க்கு தெரியாமல் பிசிசிஐ-யில் எந்த செயலும் நடக்காத நிலை உள்ளது.

    இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி கேப்டன் பதவியை அளவுக் கடந்து பயன்படுத்தியதாக நினைக்கவில்லை என்று வினோத் ராய் கூறியுள்ளார்.



    இதுகுறித்து வினோத் ராய் கூறுகையில் ‘‘எந்தவொரு கோப்டனாக இருந்தாலும் அணியில் அவரது தாக்கும் குறிப்பிட்ட அளவிற்கு இருக்கும். ஒரு குறிப்பிட்ட அளவிலான தனிப்பட்ட அளவிற்கு செயல்பட நான் ஆதரவாகத்தான் இருப்பேன். எல்லாவற்றிற்கும் பிறகு  அளவு எல்லையை கடப்பது உண்டு.

    ஆனால், விராட் கோலி கேப்டன் பதவியை சந்தோசமாக அனுபவிக்க, தனது பதவியை அளவுக் கடந்து பயன்படுத்தியதாக எந்தவொரு வீரரும் புகார் கூறியது இல்லை. என்னுடைய தனிப்பட்ட முறையில், விராட் கோலியின் நடவடிக்கை முற்றிலும் சரியாக இருக்கிறது. எந்தவொரு விஷயத்திற்காகவும் எனக்கு அழுத்தம் கொடுத்தது கிடையாது. மேலும் அணி நிர்வாகம், தேர்வாளர்கள் யாராக இருந்தாலும் அவர் பற்றி எந்தவொரு புகாரும் அளித்தது கிடையாது’’ என்றார்.
    அதிவேகமாக பந்து வீசும் திறன் படைத்த வருண் ஆரோன் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    ஜார்கண்டை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன். 2011-ம் ஆண்டு தனது 21 வயதில் இந்திய அணியில் அறிமுகமானார். அசுர வேகத்தில் பந்து வீசும் வருண் ஆரோன், இந்திய அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கடைசியாக தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் 2015-ம் ஆண்டும், இலங்கைக்கு எதிராக 2014-ம் ஆண்டு ஒருநாள் போட்டியிலும் இடம் பிடித்துள்ளார்.

    சுமார் மூன்று ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருக்கும் வருண் ஆரோன் தற்போது கவுன்ட்டி போட்டியில் லெய்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார். சிறப்பாக பந்து வீசி வரும் வருண் ஆரோன் கிளேமோர்கன் அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 65 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 66 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.



    கவுன்ட்டி போட்டியில் சிறப்பாக பந்து வீசும் என்னால், மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து வருண் ஆரோன் கூறுகையில் ‘‘மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கவுன்டி போட்டியிலும் என்றால் சிறப்பாக பந்து வீச முடியும்.

    என்னால் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட முடியும் என்று தேர்வாளர்கள் விரும்பினால், என்னால் இந்த அணிக்காக விளையாட முடியும். என்னால் அதிவேகத்திலும் என்னுடைய சிறந்த பந்து வீச்சையும் வெளிப்படுத்த முடியும்’’ என்றார்.
    பி.சி.சி.ஐ.யினால் குறைந்த ஓவர் போட்டிகளுக்கு கொடுக்கப்படும் கவனம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். #GautamGambhir #BCCI #MarketTestCricket

    புதுடெல்லி:

    பி.சி.சி.ஐ.யினால் குறைந்த ஓவர் போட்டிகளுக்கு கொடுக்கப்படும் கவனம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். 
     
    இதுகுறித்து அவர் கூறியதாவது, ஒருநாள், டி20 போட்டிகளை மார்க்கெட்டிங் செய்வது போன்று, டெஸ்ட் போட்டிகளை பிசிசிஐ மார்க்கெட்டிங் செய்வதில்லை. ஈடன் கார்டன் மைதானத்தில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் எனது நியாபகத்தில் இருக்கிறது. முதல் நாளில் இந்தியா பேட்டிங் செய்தபோது மைதானத்தில் 1000 பார்வையாளர்களே இருந்தனர். அன்றைய போட்டியில் சேவாக், சச்சின், லஷ்மண் உள்ளிட்டோர் விளையாடிய போதும் பார்வையாளர்கள் மிகவும் குறைவாகவே இருந்தனர். எனவே, குறைந்த ஓவர் போட்டிகளில் செலுத்தப்படும் கவனத்தை குறைத்து கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    டெஸ்ட் கிரிக்கெட் வலுவிழந்து வருகிறது. இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது சிகப்பு பந்துகளில், அதற்கு முன்பாக மட்டை பிட்ச்களில் வெள்ளை பந்தில் அங்கு ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடுவதில் பயனில்லை. சிகப்பு பந்துகளில் விளையாடுவது வேறு, வெள்ளை பந்தில் குறைந்த ஓவர் போட்டிகளில் விளையாடுவது வேறு. அங்கு விளையாடும் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் டெஸ்ட் போட்டிக்கு தயாராக உதவாது.

    இவ்வாறு கவுதம் காம்பீர் கூறியுள்ளார். #GautamGambhir #BCCI #MarketTestCricket
    டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கான தேர்தல் வருகிற ஜூன் 30-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஒரு நபர் ஒரு பதவிக்குத்தான் போட்டியிட முடியும்.
    டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் டெல்லி ஐகோர்ட் நியமனம் செய்த முன்னாள் நீதிபதி கண்காணிப்பில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் 30-ந்தேதி கிரிக்கெட் சங்கத்திற்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கிரிக்கெட் நிர்வாகத்தில் லோதா கமிட்டி பரிந்துரை செய்ததில் ஒரு நபர் ஒரு பதவிக்குத்தான் போட்டியிட வேண்டும் என்பதும் ஒன்று. இதனடிப்படையில்தான் டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இரண்டு புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று பெண்களுக்கானது. மற்றொன்று முதல் தர கிரிக்கெட்டில் விளையாடியவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாகும். 
    ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் மீது டெல்லி போலீசார் தொடுத்திருந்த சூதாட்ட வழக்கில் ஜூலைக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #SCasksHC #Sreesanth
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த். இவர் ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற சீசனில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் உள்பட மூன்று வீரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனை அடுத்து, ஸ்ரீசாந்த் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பிசிசிஐ அவருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடைவிதித்தது.


    இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஸ்ரீசாந்தை விடுவித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து, டெல்லி ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பில் முறையிடப்பட்டது. இதற்கிடையே, ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

    மேலும், இதர நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பிசிசிஐ தடையில்லா சான்று தர மறுப்பதாகவும், இதர நாடுகளில் சென்று விளையாட அனுமதி வேண்டியும் ஸ்ரீசாந்த் மனு அளித்திருந்தார்.

    இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வரும் ஜூலை மாதத்துக்குள் டெல்லி போலீசாரால் தொடரப்பட்ட கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #SCasksHC #Sreesanth
    இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு லோதா கமிட்டி பரிந்துரை செய்த சிபாரிசு தொடர்பான வழக்கு விசாரணையை ஜூலை 4-ந் தேதிக்கு தள்ளிவைப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அறிவித்தனர். #BCCI #Supremecourt
    புதுடெல்லி:

    லோதா கமிட்டி சிபாரிசின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக விதிமுறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

    கடந்த 1-ந் தேதி நடந்த விசாரணையின் போது, ‘இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகளை வகுப்பது குறித்த தங்களது ஆலோசனைகளை மாநில கிரிக்கெட் சங்கமும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் மே 11-ந் தேதிக்குள் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் புதிய விதிமுறையின் இறுதி வடிவம் கோர்ட்டு உத்தரவுக்கு உட்பட்டதாகும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறை குறித்து, மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் தங்களது ஆலோசனைகளை, இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ள சீனியர் வக்கீல் கோபால் சுப்பிரமணியத்திடம் அறிக்கையாக சமீபத்தில் தாக்கல் செய்தனர்.

    அந்த அறிக்கையில், ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிர்வாகிகளாக இருக்கக்கூடாது. ஒருவர் தொடர்ந்து 2 முறைக்கு மேல் ஒரு பதவியில் தொடர வேண்டும் என்றால் 3 ஆண்டு கால இடைவெளி விட்டு தான் போட்டியிட முடியும் உள்ளிட்ட லோதா கமிட்டியின் முக்கியமான பரிந்துரைகளுக்கு பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை ஜூலை 4-ந் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். #BCCI #Supremecourt
    ×