search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதலை"

    தமிழ் கைதிகளை விடுதலை செய்தால் பட்ஜெட் ஓட்டெடுப்பில் சிறிசேனா அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. #SriLankaGovernment #PoliticalPrisoner
    கொழும்பு:

    இலங்கை நாடாளுமன்றத்தில் வருகிற 4-ந்தேதி அதிபர் சிறிசேனாவின் அரசு பட்ஜெட் தாக்கல் செய்கிறது. இதைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் அதன் மீது ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. ஆனால் முன்னாள் அதிபர் ராஜபக்சே தனது ஆதரவு எம்.பி.க்கள் மூலம் பட்ஜெட் ஓட்டெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்து, சிறிசேனாவின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே சிறிசேனா அரசு தப்பும் நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவருமான சி.வி.விக்னேஷ்வரன் யாழ்ப்பாணம் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-

    விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாக கைது செய்யப்பட்ட ஏராளமான தமிழ் இளைஞர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இந்த இயக்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் கருணா நாட்டில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்.

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் இலங்கை அரசு விடுதலை செய்யவேண்டும். அப்போதுதான் பட்ஜெட் ஓட்டெடுப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறிசேனா அரசுக்கு ஆதரவாக செயல்படும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கட்சியிடம் கேட்டுக்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #SriLankaGovernment #PoliticalPrisoner 
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். #MGRCenturyFestival #ADMK

    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலையாவதற்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களின் விடுதலை பட்டியலும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    முதற்கட்டமாக கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி வேலூர் ஜெயிலில் இருந்து 7 ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 6 கட்டங்களாக மொத்தம் 95 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், 7வது கட்டமாக இன்று காலை மேலும் 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர். காலை 7 மணி அளவில் விடுதலை செய்யப்பட்ட 9 கைதிகளுக்கும் உடமைகள், ஜெயிலில் வேலை பார்த்ததற்கான கூலி பணத்தை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.

    ஜெயில் கைதிகளை அவர்களது உறவினர்கள் வந்து வரவேற்று வீடுகளுக்கு அழைத்து சென்றனர். #MGRCenturyFestival #ADMK

    கொலை வழக்கில் விடுதலை என்று தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் முன்னாள் கவுன்சிலர் பரிதாபமாக இறந்தார்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்மிடிகாம்பட்டி கொட்டாவூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், சென்னையில் துரித உணவகம் (பாஸ்ட்புட்) நடத்தி வந்தார். மேலும், இவர் இதே ஊரின் தே.மு.தி.க. முன்னாள் கிளை செயலாளராகவும் இருந்தார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    கடந்த 2.3.2012 அன்று அதே பகுதியில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில் முன்பு வெங்கடேசன் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வெங்கடேசனை வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி கந்திலியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பாபுசங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபுஜி, திருப்பதி, முரளி, ஜோதி, குப்புசாமி, கோவிந்தன், விஜய், அருண் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கு திருப்பத்தூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை நீதிபதி டி.இந்திராணி விசாரித்து, பாபுசங்கர் உள்பட 9 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

    இந்த நிலையில் தீர்ப்பு வந்தால், நமக்கு தண்டனை அளிக்கப்படுமோ? என பாபுசங்கர் சோகத்துடன் காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு திடீரென பாபுசங்கருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பாபுசங்கர் பரிதாபமாக இறந்தார்.

    அதாவது வழக்கில் இருந்து பாபுசங்கர் உள்ளிட்ட 9 பேரும் விடுதலையாகிவிட்டார்கள் என தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே பாபுசங்கர் இறந்துவிட்டார்.

    இந்த சம்பவம் கந்திலி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    நல்லம்பள்ளி அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கூலிதொழிலாளி ஜாமீனில் விடுதலையானார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்துள்ள அதியமான் கோட்டையில் இரண்டு மகன்களுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு செல்போன் கோபுரத்தில் ஏறி கூலி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நல்லம்பள்ளி அடுத்துள்ள ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது45). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். பத்தாம் வகுப்பு படிக்கும் சக்தி (15) என்ற மகனும், 6-வது வகுப்பு படிக்கும் வீரமணி (11) என்ற மகனும் உள்ளன. தனது 2 மகன்களுக்காக முனிராஜ் பல முறை சாதி சான்றிதழ் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகமும், மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னையிலும் பலமுறை மனு கொடுத்துள்ளார்.

    மனு கொடுத்தும் இது வரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் 10-ம் வகுப்பு பொது தேர்வில் மகன் சக்தி எழுதுவதால் சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. 

    அதனால் பல முறை மனு கொடுத்தும் சாதி சான்றிதழ் கிடைக்காததால் அதியமான் கோட்டை கால பைரவர் கோவில் அருகில் உள்ள 180 அடி செல்போன் கோபுரத்தில் ஏறி முனிராஜ் தற்கொலை செய்து கொள்வதாக பொதுமக்களை பார்த்து சத்தம் போட்டார். இது குறித்து தகவல் அறிந்த அதியமான் கோட்டை போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத் திற்கு விரைந்தனர். அப்போது செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த முனிராஜை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டு அதியமான் கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் போலீசார் முனிராஜிடம் விசாரணை நடத்தியதில் பல முறை தன் மகன்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மகன்கள் மேற்படிப்பிற்கு தொடர முடியாதோ என்ற அச்சத்தில் மன முடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    வருவாய்துறையினர் சாதிசான்றிதழ் தருவதாக உறுதி அளித்த பிறகு முனிராஜை காவல் துறையினர் இது போன்ற சம்பவங்களில் இனிமேல் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து வழக்குபதிவு செய்து ஜாமீனில் விடுதலை செய்தனர்.
    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கவர்னர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். #Perarivalan #RajivGandhiCase
    சென்னை:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, கவர்னர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அமைச்சரவை முடிவினை ஏற்று, அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் கவர்னர், அவர்களை உடனடியாக விடுதலை செய்யும் ஆணையை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜிவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கவர்னருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பரிந்துரை செய்திருக்கிறது. தமிழக அமைச்சரவையின் முடிவு வரவேற்கத்தக்கதாகும். இது தமிழக அமைச்சரவையின் முடிவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் விருப்பமும் இதுவே.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி கவர்னருக்கு இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை எந்த காரணத்தைக் கூறியும் கவர்னர் நிராகரிக்க முடியாது. கடந்த 2000-ம் ஆண்டில் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி அப்போதைய தி.மு.க. அரசு அளித்த பரிந்துரையை கவர்னர் பாத்திமா பீவி ஏற்றுக் கொண்டு தண்டனையைக் குறைத்தார் என்பது வரலாறு ஆகும்.

    எனவே, தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை சர்ச்சை ஆக்காமல், அதை ஏற்று 7 தமிழர்களையும் விடுதலை செய்ய கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் கருணை மனுவை கவர்னர் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையொட்டி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

    கடந்த பல ஆண்டுகளாக சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவித்து தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய வரலாற்று வாய்ப்பு தமிழக கவர்னருக்கு கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தி விரைந்து நல்லதொரு முடிவை எடுக்குமாறு கவர்னரை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கவர்னர் எடுக்க போகும் முடிவானது சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கும். அவரின் முடிவு, 7 பேரின் விடுதலை தொடர்பாக நடைபெற்று வந்த நீண்ட கால சட்ட போராட்டத்திற்கு ஒரு இறுதி முடிவாக, நல்ல முடிவாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, நிஜாமுதீன் உள்பட பலர் தமிழக அமைச்சரவை தீர்மானத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். 
    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வதற்காக ஆளுநருக்கு பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அமைச்சரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. #TNSecretariat #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சித்தார். ஆனால் இவர்களது விடுதலைக்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருந்தது. 

    இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய எவ்வித ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசே முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

    இதையடுத்து, தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, விடுதலை செய்வது குறித்து பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.



    இந்நிலையில், இன்று மாலை சுமார் 4 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடியது. துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பரிந்துரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைக்கப்படும்.

    அதன்பின்னர், ஆளுநர் இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கமுடியும் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் முடிவு குறித்து பலரும் எதிர்பார்த்துள்ளனர். #TNSecretariat #TNCM #EdappadiPalaniswami
    சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். #Perarivalan #RajivGandhiCase #Bharathiraja
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராகுல் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை மாநில அரசின் கைகளில் உள்ளது என சமீபத்தில் வெளியான தீர்ப்பை அடுத்து, அவர்களது விடுதலை குறித்த பரபரப்பு அதிகமானது.

    இதையடுத்து, இன்று மாலை அமைச்சரவை கூட்டப்பட்டு இதற்கான நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவித்து இருந்தது. கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

    இந்நிலையில், தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பாக இயக்குனர் பாரதி ராஜா, அமீர் உள்ளிட்டோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாரதி ராஜா, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் மன்னித்து, விடுதலை செய்யலாம் என கூறிய ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு நன்றி என தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இவர்கள் விடுதலைக்காக போராடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இதைத்தொடர்ந்து, 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து தங்களது இளமையும், வாழ்வையும் இழந்த இவர்கள் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து துன்ப பூட்டுகளையும் திறக்கும் திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டுமே என்ற அம்பேத்கரின் கருத்தை உண்மையாக்கி, அவர்கள் 7 பேரின் துன்ப பூட்டை உங்கள் ஆட்சி அதிகாரம் மூலம் திறந்து விடுமாறும், அவர்கள் சுதந்திர காற்றை சுவாசித்து, குடும்பத்துடன் எஞ்சிய வாழ்வை அனுபவிக்க வழிசெய்யுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. #Perarivalan #RajivGandhiCase #Bharathiraja
    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. #RajivCaseConvicts #Perarivalan #SupremeCourt
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்த ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

    தமிழக விரைவு கோர்ட்டில் நடந்த விசாரணையில் ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனையும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

    இந்த நிலையில் சோனியாகாந்தி கேட்டுக் கொண்டதன் பேரில் நளினிக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்தனர்.

    ஆனால் அந்த மனு மீது எந்த ஜனாதிபதியும் முடிவு எடுத்து அறிவிக்கவில்லை. இதற்கிடையே கருணை மனு தாக்கல் செய்து நீண்ட நாட்களாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யும் ஒரு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது.

    அந்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து இருப்பதால் தங்களையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் மத்திய அரசு ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் தண்டனை பெற்ற 7 பேரும் விடுதலையாவதில் சிக்கல் நீடித்தப்படி இருந்தது.


    இந்த நிலையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யப் போவதாக அறிவித்தார். இதற்காக சட்டசபையில் அவர் தீர்மானமும் கொண்டு வந்தார்.

    அந்த தீர்மானத்தை அவர் மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் கேட்டார். ஆனால் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. அதற்கு பதில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்ததால் அதில் தமிழக அரசு தலையிட எந்த அதிகாரமும் இல்லை என்று மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த சட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ள உரிமைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு விவரம் வருமாறு:-

    ராஜீவ் கொலையில் தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் தீர்மானம் குறித்து முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம் கவர்னருக்கு இருப்பதாக இந்த கோர்ட்டு கருதுகிறது. எனவே 7 பேரை விடுதலை செய்வது குறித்து கவர்னர் இறுதி முடிவு எடுக்கலாம்.

    இது தொடர்பாக தமிழக அரசு கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம். 2016-ம் ஆண்டு தமிழக அரசு கொடுத்துள்ள மனு மீதும் கவர்னரே முடிவு செய்யலாம்.

    எனவே மத்திய அரசு தொடுத்துள்ள இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.

    சுப்ரீம்கோர்ட்டின் இன்றைய பரபரப்பு தீர்ப்பு காரணமாக ராஜீவ் கொலையில் தண்டனை பெற்ற 7 பேரும் விரைவில் விடுதலையாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது. தமிழக அரசு இது தொடர்பாக புதிதாக தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கவர்னர் அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து கருத்து கேட்பார். அதன் பிறகு இதில் இறுதி முடிவு எடுக்கப்படும். அநேகமாக 7 பேரை விடுவிக்க கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பேரறிவாளன் வக்கீல் பாபு இதுகுறித்து கூறுகையில், “தமிழக அரசு கவர்னரை சந்தித்து பேசி 7 பேர் விடுதலைக்கு உதவ வேண்டும்” என்றார். 

    இதனை அடுத்து, 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

    7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #RajivCaseConvicts #Perarivalan #SupremeCourt
    ஆம்பூர் அருகே டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டத்தில் கைதான 40 பேரை வேலூர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் கடந்த ஆண்டு புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 20 பெண்கள் உள்பட 40 பேரை கைது செய்தனர். வழக்கு விசாரணை வேலூர் விரைவு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி குணசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அவர் இன்று தீர்ப்பளித்தார். டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடி கைதான 40 பேரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பில் கூறினார்.

    இதையடுத்த கைதான 40 பேரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
    கராச்சி சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர்களில் 26 பேரை நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு நேற்று விடுதலை செய்துள்ளது. #Pakistan #IndianFishermen #Release
    கராச்சி:

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

    அவ்வாறு கராச்சி சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களில் 26 பேரை நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு நேற்று விடுதலை செய்துள்ளது. 
    சட்ட விரோதமாக எல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை விடுதலை செய்தது வடகொரியா. #NorthKorea #SouthKorean
    சியோல்:

    தென் கொரியாவை சேர்ந்தவர் சியோவ் (வயது 34). இவர் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி சட்ட விரோதமாக எல்லை தாண்டி வட கொரியாவுக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

    ஆனால் அவரை நேற்று வடகொரியா விடுதலை செய்துவிட்டது. இது குறித்து தென்கொரியாவின் ஒருங்கிணைப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

    அந்த அறிக்கையில், “வடகொரியா இன்று (நேற்று) காலை 11 மணிக்கு நம் நாட்டைச் சேர்ந்த சியோவ் என்பவரை பான்முன்ஜோமில் (எல்லையோர கிராமம்) வைத்து எங்களிடம் ஒப்படைத்தது. அவர் கடந்த 22-ந் தேதி சட்ட விரோதமாக தங்கள் நாட்டில் நுழைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக வடகொரியா கடந்த திங்கள்கிழமை அறிவித்தது. இந்த நிலையில் இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்” என கூறப்பட்டு உள்ளது.

    மேலும், வடகொரியாவில் பல்லாண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தங்கள் நாட்டைச் சேர்ந்த மேலும் 6 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தென்கொரியா வேண்டுகோள் விடுத்து வந்தது. இந்த நிலையில் இப்போது சியோவை வடகொரியா விடுதலை செய்து இருப்பதை சாதகமான அறிகுறியாக தென்கொரியா எடுத்துக்கொண்டு உள்ளது.

    கொரியப்போருக்கு பின்னர் வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே தீராத பகை நிலவி வந்தது. இப்போது அந்த நிலை மாறி இரு நாடுகளுக்கு இடையே இணக்கமான சூழல் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 
    உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலர் டி.வி. கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உட்பட 3 பேரை விடுதலை செய்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    முன்னாள் அமைச்சர் செல்வகணபதி. இவர் 1991-96-ம் ஆண்டு வரை உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார்.

    அப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலர் டி.வி. கொள்முதல் செய்ததில் ரூ.83.25 லட்சம் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக செல்வகணபதி உள்பட 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இதுகுறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கில் செல்வகணபதி உள்ளிட்டோரை விடுதலை செய்து 2009-ம் ஆண்டு சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    இதை எதிர்த்து சி.பி.ஐ. சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

    கீழ்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து செல்வகணபதி உள்பட 3 பேரை விடுதலை செய்து சி.பி.ஐ. அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது.
    ×