search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதலை"

    ராணுவ வீரரை கன்னத்தில் அறைந்ததற்காக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன பெண் அஹெத் தமிமி தற்போது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். #Israel #Palestine #AhedTamimi
    ஜெருசலேம்:

    பாலஸ்தீன நாட்டின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் தனது ராணுவ அடக்குமுறை மூலம் அப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து அங்கு குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராணுவத்தின் அத்துமீறல்களை எதிர்த்தும், அடக்குமுறைகளை கண்டித்தும் பாலஸ்தீன மக்கள் போராடி வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது வீட்டின் அருகில் இருந்த பகுதியில் ராணுவ வீரர்கள் தனது உறவினரை தாக்குவதை கண்ட 15 வயது அஹெத் தமிமி என்ற பாலஸ்தீன சிறுமி ராணுவ வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, வீரர் ஒருவர் அவரை கன்னத்தில் அறைய, தமிமியும் ராணுவ வீரரை உதைத்து, கன்னத்தில் அறைந்தும் பதிலடி கொடுத்துள்ளார்.



    இந்த சம்பவத்தை தமிமியின் தாயார் வீடியோ பதிவு செய்து பேஸ்புக்கில் வெளியிட்டார். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பாலஸ்தீன் மக்கள் மத்தியில் தமிமி முக்கியத்துவம் பெற்றார்.

    இதையடுத்து, ராணுவ வீரரை தாக்கியதாக அவர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. அதில் தமிமிக்கு 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், ராணுவ வீரரை தாக்கியதாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன சிறுமி தமிமி, தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். #Israel #Palestine #AhedTamimi
    எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளையொட்டி மேலும் 1,189 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. #MGRcentenaryfunction
    சென்னை:

    எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சட்ட விதிகளுக்கு உட்பட்டு 10 ஆண்டுகள் எந்தவித புகாரும் இல்லாத ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஆயுள் தண்டனை பெற்றவர்களின் ஜெயில் நடவடிக்கைகள் திருப்தி அளித்தால் மட்டுமே, அவர்களுக்கு தகுந்த ஆய்வுக்குப் பிறகு விடுதலை அளிக்கப்படுகிறது.

    சில ஆயுள் தண்டனை கைதிகள் 20 ஆண்டுகளாக ஜெயிலில் உள்ளனர். அவர்களையும் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு மாநில மருத்துவ குழு பரிந்துரைப்படி விடுதலை செய்யப்படுகிறார்கள்.

    தமிழ்நாட்டில் மொத்தம் 138 சிறைச்சாலைகள் உள்ளன. இதில் பெண்களுக்காக 5 சிறப்பு மாவட்ட சிறைச்சாலைகள் உள்ளன. 10 மாவட்ட சிறைச்சாலைகள், 38 சப்-ஜெயில் ஆண்களுக்காகவும், 8 சப்-ஜெயில்கள் பெண்களுக்காகவும் உள்ளன. பெண்களுக்காக 2 சிறப்பு ஜெயில்கள் இருக்கின்றன. சிறுவர்களுக்காக 12 சீர்திருத்த பள்ளிகளும் 3 திறந்தவெளி ஜெயில்களும் உள்ளன.



    தமிழகத்தில் உள்ள ஜெயில்களில் மொத்தம் 22 ஆயிரத்து 792 பேரை அடைத்து வைக்கும் வசதி உள்ளது. தற்போது இந்த சிறைச்சாலைகளில் 16 ஆயிரம் பேர் உள்ளனர்.

    ஆயுள் தண்டனை கைதிகளில் இந்த ஆண்டு பிப்ரவரி 25-ந்தேதி வரை 10 ஆண்டு நிறைவு செய்தவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். இதில் 60 வயது ஆனவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முதலில் விடுதலை அளிக்கப்பட்டது.

    இதுவரை தமிழக ஜெயில்களில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த 311 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வரும் மாதங்களில் 1,189 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். #MGRcentenaryfunction
    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, பாதி தண்டனை காலத்தை கழித்த மூத்த கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. #MahatmaGandhi #BirthdayAnniversary
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, மூத்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு திட்டம் ஒன்றை கொண்டு வந்து அமல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * ஆண் கைதிகளுக்கு 60 வயதும், பெண் கைதிகளுக்கு 55 வயதும் முடிந்து இருக்க வேண்டும். மொத்த தண்டனை காலத்தில் பாதியளவை அனுபவித்து முடித்து இருக்க வேண்டும்.

    * வரதட்சணை சாவு, கற்பழிப்பு, ஆட்கடத்தல், பொடா, தடா, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம், அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் (பெமா), சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட முக்கிய சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள், இந்த பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட மாட்டார்கள்.

    * போதைப்பொருள் தடுப்புச்சட்டம், லஞ்ச ஊழல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின்கீழ் தண்டிக்கப்பட்டவர்களுக்கும் இந்த பொது மன்னிப்பு திட்டம் பொருந்தாது. அவர்கள் விடுவிக்கப்பட வாய்ப்பு இல்லை.

    * 70 சதவீத உடல் ஊனத்துடன் உள்ள மாற்றுத்திறனாளிகள் பாதி தண்டனைக் காலத்தை கழித்து இருந்தால் விடுதலை செய்யப்படுவார்கள். மீள முடியாத நோய் தாக்கியவர்கள், மூன்றில் ஒரு பங்கு தண்டனையை கழித்திருந்தால் அவர்களும் விடுவிக்கப்படுவார்கள்.

    * மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களும், மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்களும் விடுவிக்கப்பட மாட்டார்கள்.

    * 3 கட்டங்களாக இந்த பொது மன்னிப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டு மூத்த கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். முதல் கட்டமாக வரும் அக்டோபர் 2-ந் தேதியும், 2-வது கட்டமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதியும் (சம்பரண் சத்தியாகிரக இயக்க நினைவு நாள்), 3-வது கட்டமாக அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதியும் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

    * மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் மத்திய அரசு அறிவுரை கடிதம் அனுப்பி வைக்கும். அவை ஒரு கமிட்டி அமைத்து தகுதியான நபர்களை தேர்வு செய்து, கவர்னருக்கு அனுப்பி அரசியல் சாசனம் பிரிவு 161-ன் கீழ் அவரது ஒப்புதல் பெற்று, கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. #MahatmaGandhi #BirthdayAnniversary #tamilnews 
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் 47 பேர் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். #MGRcentenaryfunction #TNPrisonersReleased
    சென்னை:

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அரசு சார்பில் பல்வேறு மாவட்டங்களிலும் அதற்கான விழாக்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறைச்சாலைகளில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது.

    அதில், மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும், உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர் நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படியும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்துள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளில், முதற்கட்டமாக 67 ஆயுள் தண்டனை கைதிகள் கடந்த 6ந்தேதி விடுதலை செய்யப்பட்டனர்.  அதன்பின்னர் கடந்த 12ந்தேதி 52 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.



    இந்நிலையில், புழல் சிறையில் இருந்து 47 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர்.  இதனை சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன் தெரிவித்துள்ளார். #MGRcentenaryfunction #TNPrisonersReleased
    விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட 13 பேரையும் விடுதலை செய்து சுவிட்சர்லாந்து கோர்ட்டு உத்தரவிட்டது.
    பெர்ன்:

    இலங்கையில் தனி நாடு கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சுவிட்சர்லாந்தை சேர்ந்த 13 பேர் நிதி உதவி அளித்ததாக அவர்கள் மீது சுவிட்சர்லாந்து அரசாங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த சுவிஸ் பெடரல் கிரிமினல் கோர்ட்டு, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் நிதி உதவி செய்தவர்களுக்கும் இடையே பாரம்பரிய ரீதியான தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. மேலும் விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு என்பதற்கான போதிய ஆதாரம் இல்லை என்றும் தெரிவித்தது.

    மேலும் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் 8 பேர் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர். மற்ற 5 பேர் மீது மோசடியில் ஈடுபட்டதாக மட்டுமே குற்றச்சாட்டு உள்ளது.

    இந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட 13 பேரையும் விடுதலை செய்து சுவிட்சர்லாந்து கோர்ட்டு உத்தரவிட்டது. 
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளில் 68 கைதிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
    சென்னை:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளில் முதற்கட்டமாக 67 கைதிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 6-ந் தேதி, சென்னை புழல் சிறைச்சாலையில் 10 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவு பெற்ற (25.2.2018 அன்றைய தேதி அடிப்படையில்) 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 68 கைதிகளை விடுதலை செய்யப்பட உள்ளனர். அதன்படி புழல் மத்திய சிறையில் 44 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 52 பேரும், இதர சிறைச்சாலைகளில் இருந்து 16 பேரும் என மொத்தம் 68 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

    இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. 
    முறையான விசா இல்லாமல் தங்கியிருந்ததால் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட உக்ரைன் மாடல் அழகி இன்று விடுதலை செய்யப்பட உள்ளார். #UkrainianModel #UPModelRelease
    கோரக்பூர்:

    உக்ரைனைச் சேர்ந்த மாடல் அழகி தாரியா மோல்சா (வயது 20). இவர் முறையான விசா எதுவும் இன்றி நேபாளம் வழியாக எல்லையை கடந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். பின்னர், உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சிறப்பு அதிரடிப்படை போலீசார் கடந்த ஏப்ரல் 3-ம்தேதி கைது செய்தனர். அவரிடம் போலியான டிரைவிங் லைசென்ஸ் மட்டும் இருந்தது.

    அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் கோரக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் உளவு வேலை பார்ப்பதற்கு அனுப்பி வைக்கப்பட்ட நபராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள அவரது நண்பர்கள் குறித்து விசாரிக்கப்பட்டது.

    இதுபோன்ற காரணங்களால் அவரது ஜாமீன் மனுவை கோரக்பூர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கடந்த வாரம் ஜாமீன் பெற்றார். இதையடுத்து அவரை விடுதலை செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.

    இந்நிலையில், தாரியாவை விடுதலை செய்வதற்கான உத்தரவை கோரக்பூர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்தது. கோர்ட் உத்தரவு கோரக்பூர் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி இன்று அவர் விடுதலை செய்யப்படுவதாக சிறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.  #UkrainianModel #UPModelRelease
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் 67 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். #MGRcentenaryfunction #TNPrisonersReleased
    சென்னை:

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆளும் அதிமுக அரசு பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் என ஏற்பாடு செய்து எம்.ஜி.ஆரின் புகழ்பாடியது.



    அவ்வகையில், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவு செய்தது. அதன்படி, 25.02.18 அன்று 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யவுள்ளதாகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்தது.

    இதையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள ஆயுள் கைதிகள் கணக்கெடுக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக விடுதலை செய்யப்பட உள்ள 67 கைதிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த பட்டியலை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. நன்னடத்தை குழு பரிந்துரையின்படி இந்த 67 பேரை விடுவிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தது.

    அதன்படி, முதற்கட்டமாக 67 ஆயுள் தண்டனைகளும் இன்று புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் மறுவாழ்விற்காக அனைவருக்கும் பெட்ரோல் பங்குகளில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் வேலை வழங்க சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பணியில் சேருவதற்கு ஆர்வம் இருந்தால் பின்னர் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MGRcentenaryfunction #TNPrisonersReleased
    ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று திருச்செந்தூரில் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார். #Thoothukudifiring
    திருச்செந்தூர்:

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் திருச்செந்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்.ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க கூடாது. ஆலை நிர்வாகம் கோர்ட்டுக்கு சென்றால் மீண்டும் திறக்க வாய்ப்பு ஏற்படும். எனவே அரசு சட்டசபையில் ஆலைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து நிரந்தரமாக மூடவேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அப்பாவி பொதுமக்களை சமூக விரோத கும்பல் என கூறி போலீசார் கைது செய்வதை நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்

    இந்த ஆலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு நியமித்துள்ள ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். இது வெறும் கண்துடைப்பு ஆகும். இந்த பிரச்சனை குறித்து தமிழக முதல்வரை சந்திக்க 2 முறை அனுமதி கடிதம் கொடுத்தும் இதுவரை எனக்கு அனுமதி இல்லை.

    பெட்ரோல், டீசல் விலையில் ஜி.எஸ்.டி.யில் சேர்க்க வேண்டும். அப்போது தான் விலை குறையும். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாநில அளவில் போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thoothukudifiring
    எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகள் நிறைவு செய்த 67 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #MGRcentenaryfunction
    சென்னை:

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆளும் அதிமுக அரசு பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் என ஏற்பாடு செய்து மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழ்பாடின.

    இந்நிலையில், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், 25.02.18 அன்று 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யவுள்ளதாகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MGRcentenaryfunction
    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி அக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பண்ருட்டி:

    தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    இதனை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பல இடங்களில் சாலை மறியல், கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று காலை பண்ருட்டி சேலம் மெயின் ரோட்டில் அங்கு செட்டிப்பாளையம் மெயின் ரோட்டில் பண்ருட்டி வடக்குஒன்றிய செயலாளர் கொக்கு பாளையம் பாலமுருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பண்ருட்டி சேலம் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஓரினச்சேர்க்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலேசியா நாட்டின் முக்கிய அரசியல் தலைவர் அன்வர் இப்ராகிம் பொதுமன்னிப்பு அடிப்படையில் 15-ம் தேதி விடுதலையாகிறார். #MalaysianleaderAnwarrelease
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் நடந்த பொதுத்தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. 92 வயதான மஹாதிர் முகம்மது நேற்று பிரதமராக பொறுப்பேற்றார். இதன் மூலம் உலகின் மிக வயதான பிரதமர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.

    ஊழல் குற்றச்சாட்டு மற்றும் ஓரினச்சேர்க்கை புகார் தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் மஹாதிர் கூறியிருந்தார். அதன்படி, அன்வரை விடுவிப்பது தொடர்பாக இன்று மஹாதிர் தலைமையில் அந்நாட்டு மன்னர் சுல்தான் முகம்மதுவை சந்தித்து முக்கிய கட்சித்தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பிரதமர் மஹாதிரின் கோரிக்கையை ஏற்ற மன்னர், அன்வர் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு வழங்க சம்மதித்துள்ளார். இதனை மஹாதிர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அன்வர் இப்ராஹிமின் மக்கள் நீதி கட்சி மற்றும் மஹாதிரின் பிஎச் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

    அன்வர் இப்ராஹிமின் மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயில் துணை பிரதமராக பதவியேற்றுள்ளார். அன்வர் இப்ராஹிம் விரைவில் சிறையிலிருந்து வெளிவரும் பட்சத்தில் முக்கிய பொறுப்பு அவருக்கு அளிக்க மஹாதிர் தயாராக உள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில், மன்னர் அளித்த பொதுமன்னிப்பு அடிப்படையில் அன்வர் இப்ராகிம் வரும் 15-ம் தேதி விடுதலையாவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவலை அன்வர் இப்ராகிமின் மகள் நூருல் இஸ்ஸா உறுதிப்படுத்தியுள்ளார். #MalaysianleaderAnwarrelease
    ×