search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104227"

    இந்தியா-பல்கேரியா நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் முக்கிய ஆலோசனை நடத்தினார். #SushmaSwaraj #SushmainBulgaria
    சோபியா:

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பல்கேரியா, மொராக்கோ, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    முதல்கட்டமாக நேற்று பல்கேரியா தலைநகர் சோபியா வந்தடைந்த அவர் பல்கேரியா வெளியுறவுத்துறை மந்திரி எக்கடெரினா ஸ்ஹரியேவா-வுடன் இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    குறிப்பாக, எட்டாம் நூற்றாண்டு முதல் இந்தியாவுடன் நெருங்கிய தோழமை பாராட்டிவரும் பல்கேரியாவின் நட்புறவை இந்தியா பெரிதும் மதிப்பதாக சுஷ்மா தெரிவித்தார்.



    பின்னர், அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின்போது பொருளாதாரம், வேளாண்மை, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் கலாச்சாரம் தொடர்பாக இருநாடுகளும் தொடர்ந்து கூட்டுறவுடன் செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது.

    இந்த ஆலோசனைக்கு பின்னர் பல்கேரியா துணை பிரதமரையும் சுஷ்மா சந்தித்தார். #SushmaSwaraj #SushmainBulgaria 
    ‘சின்னதம்பி’ யானையை மீண்டும் தடாகம் பகுதிக்கு கொண்டுவர வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #ChinnaThambiElephant
    உடுமலை:

    கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த சின்னதம்பி காட்டுயானையை வனத்துறையினர் கடந்த 25-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

    அங்கு சில நாட்கள் சுற்றிய காட்டுயானை கடந்த 31-ந்தேதி நள்ளிரவு ஆழியாறு அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிப்பட்டினம் என்ற ஊருக்குள் நுழைந்தது. பொள்ளாச்சி வனத்துறையினர் யானையை கோபால்சாமி மலையில் விரட்டி விட்டனர்.

    மறுநாள் 1-ந்தேதி மலை மற்றும் காடு, தோட்டங்களை கடந்து உடுமலை மைவாடி ரெயில் நிலையம் அருகே உள்ள புதருக்குள் யானை நின்றது. 80 கி.மீட்டர் தூரத்துக்கும் மேல் நடந்து வந்த யானை பசி மற்றும் தூக்கத்தால் மயங்கியது. வனத்துறையினர் தண்ணீர் மற்றும் உணவு கொடுத்தனர். அதன்பின்னர் யானைக்கு மயக்கம் தெளிந்தது.

    யானை ஊருக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா வழக்கு தொடர்ந்தார். சின்னதம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என்று தமிழக அரசு கோர்ட்டில் கூறியது.

    இந்நிலையில் யானையை விரட்ட வந்த கும்கி கலீமும், சின்னதம்பியும் நண்பர்களாகி விட்டன. கரும்பு உள்ளிட்ட உணவு பொருட்களை மாறி மாறி ஊட்டி மகிழ்ந்தன.

    யானையின் இந்த திடீர் மாற்றம் குறித்து அறிந்த கால்நடை டாக்டர் மனோகரன் சம்பவ இடத்துக்கு சென்று யானையின் நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். காட்டுயானையை வேறு இடத்துக்கு மாற்றினால் ஆவேசமாக இருக்கும். சின்னதம்பி குழந்தைபோல் மாறியது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்றார்.

    மாவட்ட வன அலுவலர் தீலிப், உடுமலை ரேஞ்சர் தனபால், அமராவதி ரேஞ்சர் முருகேசன், தலைமை வன அதிகாரி கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மீண்டும் சின்னதம்பிக்கு பிடித்த இடமான தடாகம் பகுதியிலேயே விட ஆலோசனை நடத்தினர்.

    கும்கிகள் கரும்புடன் நடந்தால் அதனை பின் தொடர்ந்து சின்னதம்பியும் செல்லும் என்று யானை நிபுணர்கள் கூறுகிறார்கள். இன்று 5-வது நாளாக கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் மைவாடி ரெயில் நிலையத்துக்கும் இடையே சின்னதம்பி நிற்கிறது. அதன் போக்கிலேயே விட்டுபிடிக்க வனத்துறையினர் காத்திருக்கிறார்கள்.

    பொதுமக்கள் வாழைப்பழம், மக்காச்சோள கதிர்களை கொண்டு வந்து பார்த்து வருகிறார்கள். கொண்டு வந்த தின்பண்டங்களை வன ஊழியர்களிடம் கொடுக்கிறார்கள். அவர்கள் சின்னதம்பிக்கு கொடுக்கிறார்கள். சின்னதம்பி ஆசை ஆசையாக வாங்கி உண்கிறது.

    சின்னதம்பியை இன்னும் ஒருவாரம் இதே பகுதியில் வைத்து அதன் உடல் நலம் மற்றும் மன நிலை நல்ல நிலைக்கு திரும்பிய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம் என்று வனத்துறை அதிகாரி கூறினர்.

    சர்க்கரை ஆலையின் பின்புறம் சின்னதம்பி முகாமிட்டுள்ளதால் அதன் பாதுகாப்பு கருதி அது நடமாடும் பகுதியில் தேங்கிய கழிவு நீரை நிர்வாகம் மோட்டார் மூலம் வெளியேற்றியது. #ChinnaThambiElephant


    கேரளாவிற்கு இன்று வருகை தரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். #RahulGandhi #Congress
    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அதற்கு தயாராக தொடங்கி உள்ளன.

    கேரளாவிலும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ஆளும் கம்யூனிஸ்டு கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும் பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டன. கேரளாவில் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வை கொண்ட பா.ஜனதா கட்சியும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை கருத்தில் கொண்டு காய்களை நகர்த்தி வருகிறது.



    கேரளாவில் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதத்தில் மட்டும் 2 முறை சுற்றுப்பயணம் செய்துள்ளார். இது அந்த கட்சியின் நிர்வாகிகளை உற்சாகம் அடைய செய்துள்ளது.

    சபரிமலை விவகாரத்தை பாராளுமன்ற தேர்தலில் கையில் எடுத்து ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை கைப்பற்ற பா.ஜனதா திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கேரள அரசியலில் தனது கவனத்தை திருப்பி உள்ளார். இன்று அவர் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பகல் 1.30 மணிக்கு கொச்சிக்கு ராகுல்காந்தி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சமீபத்தில் மரணம் அடைந்த காங்கிரஸ் எம்.பி. ஷாநவாஸ் வீட்டிற்குச் செல்லும் ராகுல் காந்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்.

    அதன்பிறகு கொச்சி அரசு விருந்தினர் மாளிகையில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, காங்கிரஸ் மாநில தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கொச்சி மரைன் டிரைவில் காங்கிரஸ் பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்துகிறார்.

    மாலை 6 மணிக்கு கொச்சியில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். ராகுல்காந்தியின் வருகையால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். #RahulGandhi #Congress

    சென்னையில் வரும் 18-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. #GIM2019 #TNCabinet #TNGovt
    சென்னை:

    சென்னையில் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ள நிலையில், வரும் 18-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் அதற்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.

    ஏற்கனவே இதற்கு முன்பு நடத்தப்பட்ட 2 அமைச்சரவைக் கூட்டங்களிலும், உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.



    2015ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.2.42 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்வதற்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. #GIM2019 #TNCabinet #TNGovt

    மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஸரிப் இன்று சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். #SushmaSwaraj #Javad Zarif
    புதுடெல்லி:

    ஈராக், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் மூன்றாவது நாடாக ஈரான் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஈரான் சுமார் 2 கோடி டன் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளது.

    ஈரானுடன் எந்த நாடும் வர்த்தக தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என்று உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னர் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் இந்தியா தொடர்ந்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. மேலும், அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாமல் ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணிகளிலும் இந்தியா உதவிகரமாக உள்ளது.



    இந்நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஸரிப் மூன்றுநாள் அரசுமுறை பயணமாக கடந்த திங்கட்கிழமை இந்தியா வந்தார். டெல்லியில் இன்று மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டும் விவகாரம் மற்றும் பல்வேறு பிராந்திய பிரச்சனைகள் தொடர்பாக இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் இரு நாட்டு அதிகாரிகளும் விரிவான விவாதம் மற்றும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #SushmaSwaraj  #Javad Zarif

    அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். #PMModi #NorwegianPM #ErnaSolberg
    புதுடெல்லி:

    நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் நார்வே அரசின் உயரதிகாரிகள் குழுவும் வந்துள்ளது.

    ஜனாதிபதி மாளிகையில் சிகப்பு கம்பளம் விரித்து, முப்படை அணிவகுப்பு மரியாதையுடன் நார்வே பிரதமருக்கு இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் இருநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றனர்.



    இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது, பல்வேறு துறைகளில் இணைந்து செயலாற்றுவது தொடர்பாக இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. பின்னர், எர்னா சோல்பர்க்,  நரேந்திர மோடி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

    நார்வே பிரதமருடனான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளை மேலும் பலப்படுத்தும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்திருந்தது என்று குறிப்பிட்டார்.

    பிரதமரை சந்திப்பதற்கு முன்னதாக இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை  எர்னா சோல்பர்க் சந்தித்து பேசினார். #PMModi #NorwegianPM #ErnaSolberg

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - பிரதமர் மோடி ஆகியோர் தொலைபேசி மூலம் இருநாடுகளின் நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினர். #PMModi #Trump
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டில் முதன்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நேற்று மாலை தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்.

    இரு தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். இந்தியா - அமெரிக்கா நாடுகளின் நல்லுறவு கடந்த ஆண்டில் திருப்திகரமாக அமைந்திருந்ததை சுட்டிக்காட்டிய அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்கா-இந்தியா இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் அமெரிக்கா-இந்தியா-ஜப்பான் முத்தரப்பு மாநாடு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு துணை புரிந்தது.

    இதன் எதிரொலியாக பாதுகாப்புத்துறை, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கு இடையில் சாதகமான கூட்டுறவு நிலவியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.



    இந்த நல்லுறவை பலப்படுத்தும் வகையில் இதேபோல் இந்த ஆண்டிலும் நட்புறவுடன் இணைந்திருந்து பணியாற்ற டிரம்ப்பும், மோடியும் விருப்பம் தெரிவித்தனர். இந்த ஆலோசனையின்போது பிராந்திய வளர்ச்சி மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பாகவும் தங்களது கருத்துகளை அவர்கள் வெளிப்படுத்தினர். #PMModi #Trump

    பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக பா.ஜனதா எம்.பி.க்களை மாநில வாரியாக சந்தித்து பேச மோடி திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பு நாளை தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. #ParliamentElection #PMModi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

    இதனால் நாடு முழுவதும் உள்ள கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக தொடங்கி உள்ளன.

    சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களை பா.ஜனதா இழந்தது. மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினாலும், பா.ஜனதாவுக்கு இது பின்னடைவாகவே கருதப்படுகிறது.



    இதையடுத்து பா.ஜனதா மூத்த தலைவர்கள் கட்சியை மீண்டும் பலப்படுத்தி புத்துணர்ச்சி கொடுப்பதற்காக அடுத்தடுத்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடியும் பா.ஜனதா எம்.பி.க்களை சந்தித்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

    பா.ஜனதா எம்.பி.க்களை மாநில வாரியாக சந்தித்து பேச மோடி திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் 30 முதல் 40 எம்.பி.க்களை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    உத்தரபிரதேசத்தில் அதிகபட்ச எம்.பி.க்கள் இருப்பதால் அவர்களை 3 கட்டங்களாக சந்திக்க பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. கிழக்கு உத்தரபிரதேசம், மத்திய உத்தரபிரதேசம், மேற்கு உத்தரபிரதேசம் எம்.பி.க்கள் என 3 கட்டமாக இந்த சந்திப்பு நடக்கிறது.

    எம்.பி.க்களுடனான மோடியின் சந்திப்பு மத்திய மந்திரிகளில் யாராவது ஒருவர் வீட்டில் நடக்கும் என்று கூறப்படுகிறது. மத்திய பிரதேச மாநில எம்.பி.க்களை மோடி 28-ந்தேதி சந்திக்க உள்ளார்.

    டெல்லி, பஞ்சாப், இமாச்சலபிரதேசம், காஷ்மீர், அரியானா மாநிலங்களின் எம்.பி.க்களை நாளை மோடி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது தேர்தல் பிரசாரத்தை எப்படி மேற்கொள்வது என்பது பற்றி பிரதமர் மோடி ஆலோசனை வழங்க உள்ளார்.

    ஒவ்வொரு எம்.பி.யும் புதிய திட்டங்களுடன் வருமாறும் பிரதமர் நரேந்திர மோடியிடம் சகஜமாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் எம்.பி.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #ParliamentElection #PMModi
    கன்னியாகுமரி, கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி ஆகிய 5 பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா பொறுப்பாளர்களுடன் நாளை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடுகிறார். #PMModi #ParliamentElection
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பா.ஜனதா தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடி ஆலோசனை நடத்துவதுடன் அறிவுரையும் வழங்கி வருகிறார். “என் வாக்குச்சாவடி வலுவான வாக்குச்சாவடி” என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

    அந்த வகையில், தமிழ்நாட்டிலும் கன்னியாகுமரி, கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி ஆகிய 5 பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் நாளை (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாட இருக்கிறார். மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 1,000 பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

    இதற்காக, அந்தந்த பாராளுமன்ற தொகுதிகளில் தனித்தனியாக இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி தொகுதியில் நாகர்கோவிலில் உள்ள பெருமாள் திருமண மண்டபமும், கோவை தொகுதியில், சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் அரங்கத்திலும், சேலம் தொகுதியில், அம்மாபேட்டை சிவாஜி நகரில் உள்ள வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியிலும், நாமக்கல் தொகுதியில், பொம்மக்குட்டை மேடு கவின் மஹாலிலும், நீலகிரி தொகுதியில், ஊட்டி எங்படுகா அசோசியேஷன் ஹாலிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 2 பேர் வீதம் பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. மோடி கட்-அவுட் அருகே நின்று செல்பி எடுத்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோடியின் பேச்சை, தமிழ் மொழியிலும் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.



    இது தொடர்பாக, பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் முழுவீச்சில் தயாராகி வருகிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏற்கனவே பொறுப்பாளர்களை நியமித்து விட்டோம். 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #PMModi #ParliamentElection

    சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை எட்டியுள்ள நிலையில் முதல்வர்கள் யார்? என்பது தொடர்பாக ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். #RahulGandhi #MPCM #RajasthanCM #ChhattisgarhCM #2018electionresults
    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி நிலவரப்படி, மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 103 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 117 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.
     
    இதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 198 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 60 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 86 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். பா.ஜ.க. வேட்பாளர்கள் 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 15 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் வெற்றிபெற்று, 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் வெற்றிபெற்று, 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 83 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 60 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

    பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்திலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் தனி மெஜாரிட்டியுடனும் ஆட்சி அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை காங்கிரஸ் தலைமை தொடங்கியுள்ளது.



    இந்நிலையில், இந்த மூன்று மாநிலங்களிலும் அடுத்த முதல்வராக யாரை நியமனம் செய்வது? என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று மாலை 5 மணியளவில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மேற்கண்ட 3 மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும்.

    இதேபோல், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நாளை (புதன்கிழமை) அந்தந்த மாநில தலைநகரங்களில் நடைபெறவுள்ளது. #RahulGandhi #MPCM #RajasthanCM #ChhattisgarhCM #2018electionresults
    மேகதாது அணை விவகாரத்தில் சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து நீதிமன்றம் செல்வோம் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Mekedatudam #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவையில் 1957-ம் ஆண்டு முதல் இதுவரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95 சதவீத ஆசிரியர்களுக்கு சம்பளம், பென்‌ஷன் வழங்கப்பட்டு வருகிறது.

    விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. புதுவையில் 26, காரைக்காலில் 8, ஏனாமில் ஒரு பள்ளி என மாநிலம் முழுவதும் 35 பள்ளிகள் உள்ளது.

    இந்த பள்ளிகளில் 26 ஆயிரத்து 568 மாணவர்கள் படித்து வருகின்றனர். மாதந்தோறும் இந்த பள்ளிகளுக்கு ஆசிரியர்களின் சம்பளமாக ரூ.2 கோடியே 92 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

    பென்‌ஷனுக்காக மாதம் ரூ.58 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2 மாதத்திற்கு ஒரு முறை இதற்கான கோப்பு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.

    தற்போது கவர்னர் கிரண்பேடி இதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். இந்த நிதியை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். புதுவை மாநிலம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழ்வதற்கு அரசு உதவி பெறும் பள்ளிகளும் காரணம்.

    ஏழை மாணவர்களிடம் அவர்கள் கட்டணம் வசூலிப்பதில்லை. பெரும்பாலும் சிறுபான்மையினர்தான் இந்த கல்வி நிறுவனங்களை நடத்துகின்றனர்.

    இதனால் அவர்களுக்கு நிதியுதவி அளிப்பது பொருத்தமானதுதான். அரசை பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடமை உள்ளது. விதிமுறைகளை கவர்னர் தொடர்ந்து மீறி வருகிறார்.

    நிர்வாக விதிமுறைகளுக்கு மாறாகவும் செயல்பட்டு வருகிறார். இதுதொடர்பாக பல முறை நான் கடிதம் எழுதி உள்ளேன். அரசின் அன்றாட நடவடிக்கையில் கவர்னர் தலையிடக்கூடாது. அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடக்கூடாது.



    ஆனால், கவர்னர் கிரண்பேடி நேரடியாக அரசு அலுவலகங்களுக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளை மிரட்டி வருகிறார். சமீப காலமாக பல அரசு துறை அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

    கூட்டுறவு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.326 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். இதற்கான கோப்பையும் கவர்னர் திருப்பி அனுப்புகிறார். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை தடுக்க கவர்னருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

    அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் கவர்னர் தொடர்ந்து செயல்படுகிறார். ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு அரை சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. அந்த சம்பளத்தையும் வழங்கவிடாமல் தடுத்து விட்டார்.

    ரோடியர் மில்லுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய உள்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். இதற்கான கோப்பு 3 மாதமாக நிலுவையில் உள்ளது. இதற்கு விரைவில் முடிவு கிடைக்கும். இதன் பிறகு ரோடியர் மில்லில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவோம்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தை மத்திய குழு பார்வையிட்டது. பேரிடர்துறை மூலம் ரூ.10 கோடி இடைக்கால நிவாரணமாக அனுப்பியுள்ளோம்.

    மேலும் மத்திய அரசிடம் நீண்டகால திட்டங்களுக்காக ரூ.1,342 கோடி கேட்டுள்ளோம். புதுவை பகுதியில் சாலைகளை சீரமைக்கவும் நிதி கேட்டுள்ளோம்.

    கேரளா அதிரகண்டி நீர்தேக்கத்தில் இருந்து மாகிக்கு குடிநீர் வருகிறது. இதற்கு மாநில அரசு சார்பில் கேரளா அரசுக்கு பணம் செலுத்தி வருகிறோம். இத் தொகையை கேரளா அரசு திடீரென உயர்த்தியது. கேரளா முதல்வருக்கு கடிதம் அனுப்பி கேட்டுக்கொண்டதால் இத்தொகையை ரத்து செய்துள்ளனர். இதனால் கூடுதலாக செலுத்திய ரூ.2 கோடி திரும்பக்கிடைக்கும்.

    மேகதாதுவில் தடுப்பணை கட்டக்கூடாது என உத்தரவு உள்ளது. அதை மீறி தடுப்பணை கட்டினால் தமிழகத்தை மட்டுமின்றி புதுவையையும் பாதிக்கும். தேவைப்பட்டால் சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து நீதிமன்றம் செல்வோம்.

    தமிழக அரசும் காவிரி ஆணையம் கூறியபடி காரைக்காலுக்கு நீர் வழங்க முன்வர வேண்டும். வெள்ளத்தால் கேரளா பாதிக்கப்பட்டபோது புதுவையில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள் நிதி அளித்தனர். இந்த நிதியை அடுத்த மாதம் கேரளா முதல்-அமைச்சரிடம் நேரில் அளிக்க உள்ளேன்.

    தற்போது புதுவையில் காரைக்கால் மாவட்டம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கும் தாராளமாக நிதி வழங்க அனைவரும் முன்வர வேண்டும். இதற்காக முதல்-அமைச்சர் அலுவலகத்தில் வார வேலை நாட்களில் தனி பிரிவு செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அமைச்சர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். #Mekedatudam #Narayanasamy

    பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக துணை முதல் மந்திரி பரமேஷ்வரா தெரிவித்துள்ளார். #GParameshwara #Lankeshkilling
    பெங்களூரு:

    பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ்(55). பிரபல பத்திரிகையாளரான இவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கடந்த 5-9-2017 அன்று அவருடைய வீட்டின் அருகே கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

    இந்த படுகொலை தொடர்பாக விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கொலை திட்டம் தீட்டிய அமோல் காலே, பிரவீன் (எ) சுஜித் குமார், அமித் டேல்வேக்கர் மற்றும் துப்பாக்கியால் சுட்ட பரசுராம் வாக்மாரே உள்பட 18 பேர்மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக பெங்களூரு பெருநகர முதன்மை நீதிமன்றத்தில் 9,235 பக்கங்களை கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் நேற்று தாக்கல் செய்தனர்.

    கவுரி லங்கேஷுடன் எவ்வித அறிமுகமோ, பகையோ இல்லாத ஒரு அமைப்பு அவரை கொல்வதற்கு கடந்த 5 ஆண்டுகளாக திட்டமிட்டிருந்ததாக இந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சனாதன் சன்ஸ்த்தா என்னும் இந்துத்துவ அமைப்பின் துணை அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது சித்தாந்தத்துக்கு எதிரானவர் என்று கருதியதால் கவுரி லங்கேஷை கொல்ல முயன்றதாக அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.பாலன் தெரிவித்தார்.



    பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில துணை முதல் மந்திரி பரமேஷ்வரா பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    கொலையில் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை விதிக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், விரைவில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். #GParameshwara  #Lankeshkilling
    ×