search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104227"

    ஒடிசா சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில் அம்மாநில பா.ஜ.க. மேலிட தலைவர்களுடன் அமித் ஷா இன்று தீவிர ஆலோசனை நடத்தினார். #AmitShah #Odishapollstrategy
    புவனேஸ்வர்:

    2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றது.

    இந்நிலையில், ஒடிசா சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில்  அம்மாநில பா.ஜ.க. மேலிட தலைவர்களுடன் அமித் ஷா இன்று தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

    முன்னதாக, ஒடிசா சட்டசபையில் உள்ள 147 தொகுதிகளில் 120 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்ற வேண்டும் என கட்சியினரை வலியுறுத்தியுள்ள அமித் ஷாவுடன் பல்வேறு சட்டசபை தொகுதிகளை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர்கள் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். #AmitShah #Odishapollstrategy
    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா காஷ்மீர் மாநிலம் ஜம்முவுக்கு நேற்று சென்றார். விமான நிலையத்தில் இருந்து விருந்தினர் மாளிகை சென்ற அமித்ஷா அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். #AmitShah #Jammu
    ஜம்மு:

    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா காஷ்மீர் மாநிலம் ஜம்முவுக்கு நேற்று சென்றார். விமான நிலையத்தில் இருந்து விருந்தினர் மாளிகை சென்ற அமித்ஷா அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையில், காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமலில் இருக்கும் நிலையில் தற்போது அங்கு நிலவும் சூழல், கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் மூத்த நிர்வாகிகள், கட்சியின் தேர்தல் பிரிவு நிர்வாகிகளுடன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து அமித்ஷா ஆலோசித்தார்.

    இதை தொடர்ந்து மாலையில் பாரதீய ஜன சங்கத்தின் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசினார்.

    காஷ்மீரில் மெகபூபா முப்தி அரசுக்கு அளித்த ஆதரவை 19-ந் தேதி பா.ஜனதா விலக்கி கொண்ட பிறகு ஜம்முவுக்கு அமித்ஷா சென்றுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  #AmitShah #Jammu #tamilnews 
    ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #pmnarendramodi
    பீஜிங்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷியா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு இந்த அமைப்பில் இந்தியாவும் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர். 

    இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் ஆகியோரை சந்தித்து இந்தியாவுடனான இந்நாடுகளின் நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இந்த சந்திப்பின்போது அந்நாடுகளை சேர்ந்த உயரதிகாரிகளும், இந்தியாவை சேர்ந்த உயரதிகாரிகளும் உடனிருந்தனர். #tamilnews #pmnarendramodi
    பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா, அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை நேற்று திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு முக்கிய ஆலோசனை நடத்தினார்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதன் காரணமாக அங்கு நீதிபதி நசிருல் முல்க் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்று, நிர்வாகத்தை கவனித்து வருகிறது.

    இந்த தருணத்தில், அந்த நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா, அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை நேற்று திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு முக்கிய ஆலோசனை நடத்தினார். இது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இரு தரப்பு உறவுகள் பற்றி மைக் பாம்பியோவுடன் கமர் ஜாவத் பஜ்வா விவாதித்தார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ள வேண்டிய அரசியல் நல்லிணக்க நடவடிக்கைகள் பற்றியும் இருவரும் பேசினர் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

    இந்த சந்திப்பு பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட் விடுத்து உள்ள டுவிட்டர் பதிவில், “தெற்காசியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை எந்த பாரபட்சமும் இன்றி இலக்கு வைத்து ஒடுக்குவது குறித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வாவுடன் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ விவாதித்தார்” என கூறப்பட்டு உள்ளது.  #Tamilnews 
    காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் பட்டியலில் வடசென்னையும் இருப்பதால், அந்த தொகுதி நிர்வாகிகளை ஆலோசனை நடத்துவதற்கு டெல்லி வருமாறு ராகுல்காந்தி அழைப்பு விடுத்திருக்கிறார். #RahulGandhi #Congress
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த ராகுல்காந்தி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதில் ஒன்று இந்தியா முழுவதும் 300 தொகுதிகளை தேர்வு செய்து அந்த தொகுதிகளின் நிலவரங்களை கள ஆய்வு செய்து வருகிறார்.

    இந்த 300 தொகுதிகளையும் பரவலாக ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரசுக்கு செல்வாக்கு இருக்கும் தொகுதி வாரியாக பார்த்து தேர்வு செய்துள்ளார். அவரது தேர்வு பட்டியலில் வடசென்னை பாராளுமன்ற தொகுதியும் இடம் பெற்றுள்ளது.

    நாடு முழுவதும் இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள 300 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளையும் தொகுதி வாரியாக அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி நாளை வட சென்னை தொகுதி நிர்வாகிகளையும் தொகுதி வாரியாக அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி நாளை வடசென்னை தொகுதி நிர்வாகிகளை அழைத்திருக்கிறார்.

    மாவட்ட தலைவர் திரவியம், வட்டார தலைவர்கள் ஜெய்சங்கர். சக்தி நாகேந்திரன், நஜிமாசெரீப், சையத், சீமான் செல்வராஜ், மூர்த்தி, அருள், கோதண்டம், நிசார். நிலவன், ரவிகுமார், பாஸ்கர் ஆகியோரையும் அழைத்துள்ளார்.

    பொதுவாக மாவட்ட தலைவர்கள் மட்டத்தில்தான் ராகுல்காந்தி நேரடியாக பேசுவார். முதல் முறையாக கீழ்மட்ட நிர்வாகிகளையும் அழைத்து பேசுகிறார். இதற்கு காரணம் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்குத்தான் நிலவரம் தெரியும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

    இந்த ஆலோசனையின்போது தொகுதியில் காங்கிரசுக்கு இருக்கும் செல்வாக்கு, வெற்றி வாய்ப்பு விவரங்களை கேட்டறிந்து, கூட்டணி அமைத்து போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டால் குறிப்பிட்ட தொகுதியை கூட்டணி கட்சிகளிடம் கேட்டு பெறவும் ஆலோசனை வழங்கி வருகிறார். #RahulGandhi #Congress
    பின் தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு செயலாற்ற வேண்டும் என கவர்னர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆலோசனை வழங்கினார். #PresidentKovind #GovernorsConference
    புதுடெல்லி:

    மாநில கவர்னர்கள் பங்கேற்கும் 49-வது மாநாடு இன்று ஜனாதிபதி மாளிகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  முதல் நாளான இன்று நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடக்க உரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-

    மாநில அரசுக்கு வழிகாட்டியாகவும், மத்திய அரசுடன் முக்கியமான பாலமாகவும் கவர்னர்கள் விளங்குகிறார்கள். சிந்தனைகள் மற்றும் மதிப்புகளின் ஊற்றுக்கண்களாக கவர்னரையும், கவர்னர் அலுவலகத்தையும் பொதுமக்கள் பார்க்கிறார்கள்.

    நாட்டில் உள்ள சுமார் 100 மில்லியன் மக்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள். நமது வளர்ச்சிப் பயணத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பயன் அடையாத சக குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு, மாநில ஆளுநர் என்ற முறையில் உதவி  செய்ய வேண்டும். 

    உலகிலேயே அதிக இளைஞர்கள் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அவர்களின் பாதுகாவலர்கள் நீங்கள். அவர்கள் சரியான ஒழுக்க நெறிகளை பின்பற்றுவதை நீங்கள் ஊக்கம் அளிக்கலாம். மேலும், நவீன கல்வியை தொடரவும் இந்திய கலாச்சாரத்தை தொடர்ந்து பின்பற்றவும் ஊக்குவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #PresidentKovind #GovernorsConference
    5 நாள் அரசுமுறைப் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள சுஷ்மா சுவராஜ் இன்று தென்னாப்பிரிக்க வெளியுறவுத்துறை துணை மந்திரியுடன் ஆலோசனை நடத்தினார். #SushmaSwarajinSouthAfrica #Johannesburg #BRICS
    ஜோகனஸ்பர்க்:

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஜோஹனஸ்பர்க் நபரில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் விவாதிக்கப்படவுள்ள விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை (4-ம் தேதி) நடைபெறவுள்ளது.

    இந்த கூட்டத்திலும், இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்காவுடனான முத்தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 5 நாள் அரசுமுறைப் பயணமாக புதுடெல்லியில் இருந்து நேற்று தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.

    இன்று ஜோகனஸ்பர்க் நகரை சென்றடைந்த சுஷ்மா சுவராஜுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க நாட்டின் சர்வதேச உறவுகள் மற்றும் கூட்டுறவுத்துறை துணை மந்திரி லுவெல்லின் லான்டர்ஸ்-ஐ சந்தித்த சுஷ்மா சுவராஜ் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் அடிமை நாடாக சிக்கிக்கிடந்த தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் 125-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பீய்ட்டெர்மார்ட்டிஸ்பர்க் ரெயில் நிலையம் பகுதியில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளிலும் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். #SushmaSwarajinSouthAfrica  #Johannesburg  #BRICS
    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று தென்கொரியா அதிபர் மூன் ஜே-வை ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தெரியவந்துள்ளது. #KimJongUn #MoonmetKim
    சியோல்:

    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று தென்கொரியா அதிபர் மூன் ஜே-வை இன்று ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தென்கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    கடந்த முறை சந்தித்து பேசிய எல்லைப்பகுதி கிராமமான பன்முன்ஜோம் என்னும் இடத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் சுமார் இரண்டு மணிநேரம் ஆலோசனை நடத்தியதாகவும், இதுதொடர்பாக விரிவான அதிகாரப்பூர்வ தகவல் நாளை அரசு தரப்பில் இருந்து வெளியாகலாம் எனவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. #KimJongUn  #MoonmetKim
    தூத்துக்குடியில் நிலைமை பதட்டமாக உள்ளதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும் டி.ஜி.பி. ராஜேந்திரனை தலைமை செயலகத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். #SterliteProtest
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் பொதுமக்களுக்கும் போலீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது

    இதில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் பலியானார்கள். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.



    தூத்துக்குடியில் நிலைமை பதட்டமாக உள்ளதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.

    இதைதொடர்ந்து மேலும் 2 ஆயிரம் போலீசார் மதுரை உள்பட பக்கத்து மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் இன்றும் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.

    இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும் டி.ஜி.பி. ராஜேந்திரனை தலைமை செயலகத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன், உள்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடியில் அமைதி திரும்ப எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. #SterliteProtest

    பாராளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் எடியூரப்பா நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார்.
    பெங்களூரு:

    முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த எடியூரப்பா அடுத்த கட்டமாக நாளை (23-ந்தேதி) பாராளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள், பா.ஜ.க. முன்னணி தலைவர்கள், எம்.பிக்கள், எம்.எல்.சிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
    கர்நாடக மாநிலத்தில் இரண்டு துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களுடன் குமாரசாமி ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.#KarnatakaElections #KarnatakaFloorTest #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி வருகிற 23-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார். 38 இடங்களில் வெற்றி பெற்ற ஜே.டி.எஸ். கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. மெஜாரிட்டிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை. அதையும் தாண்டி 116 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மந்திரி சபைக்கு உள்ளது.

    தனக்கு ஆதரவு அளிக்கும் முடிவு எடுத்த சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு குமாரசாமி நன்றி தெரிவித்தார். இன்று மாலை அவர்களை நேரில் சந்திக்க உள்ளார். முன்னதாக இன்று காலை ஹசன் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் குமாரசாமி தரிசனம் செய்தார். பின்னர் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இரண்டு துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தெரிவித்திருக்கிறார். அநேகமாக பரமேஸ்வரா துணை முதல்வர் ஆகலாம் என கூறப்படுகிறது. டெல்லியில் மத்திய தலைவர்களை குமாரசாமி சந்தித்த பின்னர் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    எனவே, புதன்கிழமை குமாரசாமி மட்டுமே பதவியேற்பார். அன்றே நம்பிக்கை வாக்கெடுப்பும் நடைபெறும் என்று தெரிகிறது. மற்ற அமைச்சர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்தபிறகு பதவியேற்கலாம். #KarnatakaElections #KarnatakaFloorTest #Kumaraswamy
    சர்க்கரை மீது கிலோ ஒன்றுக்கு ரூ.3 மேல்வரி விதிப்பதற்கு அனுமதிக்கலாமா? என்று மத்திய சட்ட அமைச்சகத்திடம் இருந்து அமைச்சர் டிஜெயக்குமார் கருத்து கேட்டுள்ளார்.
    சென்னை:

    சர்க்கரை மீது மேல்வரி விதிப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.

    கூட்டத்தில், மீன்வளம் மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் கா. பாலச்சந்திரன், முதன்மைச் செயலாளர், மற்றும் வணிகவரி ஆணையர் சோமநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    4.5.2018 அன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்ற 27-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்தின்போது சர்க்கரை மீதான 5% ஜி.எஸ்.டி. வரி தவிர்த்து கிலோ ஒன்றுக்கு ரூ.3 மேல்வரி விதிப்பதற்கான மத்திய அரசின் கருத்துரு விவாதிக்கப்பட்டது. இந்த மேல்வரி விதிக்கும் முறையானது ஜி.எஸ்.டி. சட்டத்தின் கொள்கைக்கு மாறாக உள்ளதால் தமிழ் நாட்டிற்கு ஏற்புடையதாக இல்லை என்று அமைச்சர். டி.ஜெயக்குமார் அன்றையக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

    தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களும் சர்க்கரை மீது மேல்வரி விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்யும் பொருட்டு ஜி.எஸ்.டி. மன்றமானது அமைச்சர்கள் குழு ஒன்றினை 4.5.2018 அன்று ஏற்படுத்தி உள்ளது. இந்தக் குழுவில் தமிழ்நாடு, அசாம், உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் அமைச்சர்கள் உள்ளடங்குவர். இந்தக் குழுவானது, சர்க்கரை மீதான மேல்வரி விதிப்பது மற்றும் அது தொடர்பான இனங்கள் குறித்து விவாதித்து அறிக்கை ஒன்றினை ஜி.எஸ்.டி. மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    புதுடெல்லியில் 14.5.2018 அன்று நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் சர்க்கரை மீது 5% ஜி.எஸ்.டி. வரி தவிர்த்து கிலோ ஒன்றுக்கு ரூ.3 மேல்வரி விதிப்பதற்கு அரசியல் சாசன கூறுகள் அனுமதிக்கின்றனவா என்பது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்தின் கருத்தினை ஜி.எஸ்.டி. மன்ற செயலகமானது பெற்று வழங்க வேண்டுமென அமைச்சர் டி.ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.

    மேலும், ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு முன்பு இருந்த சர்க்கரை வளர்ச்சி நிதியில் வசூலிக்கப்பட்ட தொகை மற்றும் எந்தெந்த காரணத்திற்காக, எந்தெந்த மாநிலத்திற்காக, எவ்வளவு நிதி வழங்கப்பட்டது. குறித்தான விவரத்தினையும் மத்திய அரசின் நுகர்வோர் நடவடிக்கைகள், உணவு மற்றும் பொது விநியோக துறையிடமிருந்து ஜி.எஸ்.டி. மன்ற செயலகமானது பெற்று இக்குழுவிற்கு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இந்த விவரங்களின் அடிப்படையில், சர்க்கரை மீது மேல்வரி விதிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அமைச்சர்கள் குழுவின் அடுத்தக் கூட்டத்தினை வருகின்ற ஜூன் மாதம் 3-ந்தேதி நாள் நடத்துவதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. #tamilnews
    ×