search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104227"

    நடிகர் ரஜினிகாந்த், வருகிற 25-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஒன்றிய செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    அரசியல் கட்சிக்கான அடிப்படையான வலுவான கட்டமைப்பை நடிகர் ரஜினி திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்.

    கடந்த வாரம் முதலில் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார். அடுத்த சில நாட்களிலேயே இளைஞர் அணி செயலாளர்களை சந்தித்தார். அந்த வரிசையில் வரும் 20-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார். அதற்கும் அடுத்து 25-ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் உள்ள ஒன்றிய செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

    மாவட்டத்துக்கு குறைந்தது 15 பேர் என்றாலும் சுமார் 500 பேர் திரள்வார்கள். எனவே இதுவரை நடத்தியதுபோல வீட்டில் சந்திப்பது சிரமம். எனவே ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நிகழவிருக்கிறது.

    கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். ரஜினி அது முதலே மண்டபத்தில் தான் சந்திப்புகளை நிகழ்த்தி வந்தார். ஆனால் செய்திகள் வெளியில் கசியவே வீட்டை தேர்ந்தெடுத்தார். ஒன்றிய செயலாளர்கள் கூட்டத்திலும் இதே ரகசியத்தை கடைபிடிக்க மன்ற நிர்வாகிகள் திட்டமிட்டு வருகிறார்கள். #Rajinikanth #RajiniMakkalMandram

    மாவட்ட செயலாளர்கள், இளைஞரணியினரை தொடர்ந்து மகளிர் அணி செயலாளர்களுடன் சென்னையில் வருகிற 20-ந்தேதி ரஜினிகாந்த் ஆலோசனை நடத்துகிறார்.
    சென்னை:

    அரசியல் கட்சி தொடங்கி, வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்தார். இதையடுத்து புதிய கட்சி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக ரஜினி மக்கள் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு, மாவட்டங்கள் முழுவதும் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையும் ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலா இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இந்த விழாவை தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதையடுத்து கடந்த 13-ந்தேதி ரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி நிர்வாகிகளுடன் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியின் கட்டமைப்புகளை பலப்படுத்தவேண்டும்.

    இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும் என்று பல்வேறு அடுக்கடுக்கான ஆலோசனைகளை ரஜினிகாந்த் வழங்கினார். இந்தநிலையில், மாவட்ட மகளிர் அணி செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார்.

    இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மகாலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அனைத்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட மகளிர் அணி செயலாளர்களை நமது தலைவர் ரஜினிகாந்த் வருகிற 20-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் சந்திக்க இருக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    போயஸ்கார்டன் இல்லத்தில் வைத்து ரஜினிகாந்த் மகளிரணி செயலாளர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்குவார் என்று கூறப்படுகிறது.

    டெல்லியில் நடந்த அமைச்சர்கள் குழு கூட்டத்தில் சர்க்கரை மீதான மேல் வரி விதிப்பு குறித்து ஆலோசனை நடைபெற்றது.
    சென்னை:

    சர்க்கரை மீது மேல்வரி விதிப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.

    கூட்டத்தில், மீன்வளம் மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் கா. பாலச்சந்திரன், முதன்மைச் செயலாளர், மற்றும் வணிகவரி ஆணையர் சோமநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    4.5.2018 அன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்ற 27வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்தின்போது சர்க்கரை மீதான 5% ஜி.எஸ்.டி. வரி தவிர்த்து கிலோ ஒன்றுக்கு ரூ.3 மேல்வரி விதிப்பதற்கான மத்திய அரசின் கருத்துரு விவாதிக்கப்பட்டது. இந்த மேல்வரி விதிக்கும் முறையானது ஜி.எஸ்.டி. சட்டத்தின் கொள்கைக்கு மாறாக உள்ளதால் தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதாக இல்லை என்று அமைச்சர். டி.ஜெயக்குமார் அன்றையக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

    தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களும் சர்க்கரை மீது மேல்வரி விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்யும் பொருட்டு ஜி.எஸ்.டி. மன்றமானது அமைச்சர்கள் குழு ஒன்றினை 4.5.2018 அன்று ஏற்படுத்தி உள்ளது. இந்தக் குழுவில் தமிழ்நாடு, அசாம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் அமைச்சர்கள் உள்ளடங்குவர். இந்தக் குழுவானது, சர்க்கரை மீதான மேல்வரி விதிப்பது மற்றும் அது தொடர்பான இனங்கள் குறித்து விவாதித்து அறிக்கை ஒன்றினை ஜி.எஸ்.டி. மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    புதுடெல்லியில்14.5.2018 அன்று நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் சர்க்கரை மீது 5% ஜி.எஸ்.டி. வரி தவிர்த்து கிலோ ஒன்றுக்கு ரூ.3 மேல்வரி விதிப்பதற்கு அரசியல் சாசன கூறுகள் அனுமதிக்கின்றனவா என்பது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்தின் கருத்தினை ஜி.எஸ்.டி. மன்ற செயலகமானது பெற்று வழங்க வேண்டுமென அமைச்சர் டி.ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.

    மேலும், ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு முன்பு இருந்த சர்க்கரை வளர்ச்சி நிதியில் வசூலிக்கப்பட்ட தொகை மற்றும் எந்தெந்த காரணத்திற்காக, எந்தெந்த மாநிலத்திற்காக, எவ்வளவு நிதி வழங்கப்பட்டது. குறித்தான விவரத்தினையும் மத்திய அரசின் நுகர்வோர் நடவடிக்கைகள், உணவு மற்றும் பொது விநியோக துறையிடமிருந்து ஜி.எஸ்.டி. மன்ற செயலகமானது பெற்று இக்குழுவிற்கு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இந்த விவரங்களின் அடிப்படையில், சர்க்கரை மீது மேல்வரி விதிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அமைச்சர்கள் குழுவின் அடுத்தக் கூட்டத்தினை வருகின்ற ஜூன் மாதம் 3-ந்தேதி நாள் நடத்துவதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    நடிகர் ரஜினிகாந்த் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதால் புதிய கட்சி தொடங்குவதில் தீவிரமாகி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
    சென்னை:

    ரஜினி உண்மையிலேயே அரசியல் களத்துக்குள் வந்து விட்டாரா? அல்லது காலா படத்துக்காக பாவ்லா காட்டுகிறாரா? என்பது போன்ற கருத்துக்கள் சமூக வலைதளங்களில் கொட்டி கிடக்கின்றன.

    புதுக்கட்சியை தொடங்காமலேயே அரசியல்வாதியாகிவிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மீது இது போன்று ஏகப்பட்ட விமர்சனங்கள். குறிப்பாக தமிழக அமைச்சர்கள் ஆளாளுக்கு ரஜினியை வசைபாடிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் ரஜினி தனது அரசியல் பாதையை வகுத்து பயணிக்க தொடங்கி விட்டார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

    இதனையெல்லாம் மனதில் வைத்துதான் காலா படப்பாடல் வெளியீட்டு விழாவில் யார் என்ன சொன்னாலும் நான் பின் வாங்கமாட்டேன் என்று எங்கள் தலைவர் பேசினார் என்றும் கூறுகிறார்கள் ரசிகர்கள்.

    மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் கடந்த 4 மாதங்களாக நடந்து முடிந்துள்ளது. உறுப்பினர் சேர்க்கையும் அசுர வேகத்தில் நடக்கிறது. கட்சியை தொடங்க வேண்டியது மட்டும்தான் பாக்கி என்பதும் ரஜினி மக்கள் மன்றத்தினரின் குரலாக ஒலிக்கிறது.


    கடந்த டிசம்பர் மாதம் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட ரஜினி அதன் பின்னர் 2 மாதங்கள் தொடர்ந்து அமைதியாகவே இருந்தார். அதற்குள் கமல் புதிய கட்சியை தொடங்கி ஊர் ஊராக செல்ல தொடங்கிவிட்டார். இதனால் என்னாச்சி ரஜினிக்கு? எதுவுமே பேசாமல் இருக்கிறாரே? என்பது போன்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.

    இதற்கெல்லாம் விடை அளிக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ரஜினி தனது பேச்சில் புலிப்பாய்ச்சலை வெளிப்படுத்தினார்.

    நான் அரசியலுக்கு வந்துள்ளதை பலர் ஏளனம் செய்கிறார்கள். என்னாலும் எம்.ஜி.ஆர். தந்த நல்லாட்சியை தர முடியும் என்று பொங்கினார்.

    இதன் பின்னர் அவரது இமயமலை பயணமும் அப்போது அரசியல் பேசாமல் தவிர்த்ததும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இமயமலையில் இருந்து திரும்பிய பின்னர் கடந்த 9-ந்தேதி நடந்த காலா விழா ரஜினியின் அரசியல் வேகத்துக்கு மீண்டும் அடித்தளம் அமைத்துள்ளது என்றே கூறலாம்.


    அந்த விழாவில் ரஜினி கூறிய தவளை கதை, தன்னை தினமும் விமர்சிப்பவர்களுக்கு அவர் கொடுத்துள்ள பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. ரஜினியை பற்றி பலரும் பலவிதமான விமர்சனங்களை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இவை எதற்குமே ரஜினி பதில் கூறுவதில்லை. தன்னை விமர்சிப்பவர்களுக்காகவே தவளை கதையை கூறி தெளிவு படுத்தியுள்ளார் என்கிறார்கள் அவரது கட்சியினர். 3 தவளைகள் மலை ஏறும் போது, சுற்றி நிற்பவர்கள் எல்லாம் அவ்வளவு தூரம் ஏறமுடியாது என்று கூறியதையும் தாண்டி ஒரு தவளை மட்டும் மலை உச்சியை தொட்டது.

    ஏனென்றால் அந்த தவளைக்கு காது கேட்கவில்லை. இப்படி நம்மை சுற்றி இருப்பவர்கள் சொல்வதையெல்லாம் கேட்காமல் செல்ல வேண்டிய இலக்கை அடைய வேண்டும் என்றே ரஜினி எங்களிடம் அறிவுறுத்தி உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

    மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணியினரின் ஆலோசனைக்கு பின்னர் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியுள்ள ரஜினி பெண்களின் ஓட்டுகளை கவரவும் திட்டமிட்டுள்ளார்.

    இன்னும் ஒன்று அல்லது 2 மாதங்களில் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்க உள்ள ரஜினி தனது அடுத்தடுத்த நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த உள்ளார்.

    தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் செயல்பட முடியாத நிலை ஆகியவை ஏற்படுத்தி இருக்கும் வெற்றிடத்தை நிரப்பவே வந்துள்ளதாக கூறும் ரஜினி, அதற்காக நகர்த்தி வரும் காய்கள் வெற்றிக் கோட்டை எட்டுமா? பொறுத்திருந்து பார்ப்போம். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது ஜூன் மாதத்துக்குள் கிளை மன்றங்களை அமைக்க அவர் உத்தரவிட்டார். #Rajinikanth
    ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்றுமுன்தினம் பிரமாண்டமாக நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ரசிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ஒட்டுமொத்தமாக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் சென்னை வந்திருந்ததால், அவர்களுடன் 10-ந்தேதி (நேற்று) ஆலோசனை நடத்தப்படும் என்று ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த் நேற்று காலை 10.45 மணி முதல் 12 மணி வரை ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

    இதில் 32 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் ரஜினிகாந்த் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    கூட்டம் முடிந்த பின்னர் வெளியே வந்த ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் ஏ.ஜோசப் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊராட்சி, ஒன்றியம், நகரம், மண்டல கிளை மன்றங்களை மிக விரைவில் செயல்படுத்த வேண்டும். 30 பேர் கொண்ட கிளை மன்றங்களை அமைக்க வேண்டும். ஒரு மாதத்துக்குள் 62 ஆயிரத்து 552 கிளை மன்றங்கள் திறக்கப்பட வேண்டும்.

    இந்த பணிகளை ஜூன் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். அவர் வழங்கிய அறிவுரைகள், ஆலோசனைகளால் 100 மடங்கு சக்தி அதிகரித்தது போல் நாங்கள் உணர்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Rajinikanth #tamilnews
    ரஜினி மக்கள் மன்றத்தின் முதலாவது மாநாட்டை கோவையில் பிரமாண்டமாக நடத்துவது பற்றி இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார்.

    ரஜினிகாந்த் அடிக்கடி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நேரிலும், வீடியோ கான்பரன்சிங் முறையிலும் கலந்துரையாடி ஆலோசனைகள் வழங்கி வருகிறார். மன்ற பணிகளையும் தீவிரப்படுத்தி உள்ளார்.

    இந்த நிலையில் ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரஜினிகாந்த் நேற்று சென்னை ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமாக நடத்தினார்.

    இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசுகையில், “யார் என்ன சொன்னாலும் நான் எனது பாதையில் செல்வேன். நதிகளை இணைப்பதே எனது கனவு. எனக்கு கடமை இருக்கிறது. அதற்கான நேரம் வரும். அப்போது ஆண்டவன் ஆசீர்வாதத்தால் மக்களின் ஆதரவினால் தமிழக மக்களுக்கு நல்ல நேரம் பிறக்கும்” என்றார்.

    ரஜினியின் இந்தப் பேச்சால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்று அவர் தனது மன்ற பணிகளை மேலும் தீவிரப்படுத்தி உள்ளார்.

    இதற்காக அனைத்து மாவட்ட மன்ற நிர்வாகிகளையும் ரஜினிகாந்த் சென்னை வரவழைத்து போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.



    காலை 10.45 மணிக்கு தொடங்கிய கூட்டம் 12 மணி வரை நடைபெற்றது. மாவட்டங்களில் இருந்து வந்த முக்கிய நிர்வாகிகள் 32 பேர் கலந்து கொண்டனர். அவர்களுடன் தலைமை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு முழுவதும் மன்றத்தின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும், பஞ்சாயத்து, ஒன்றியம், நகரம், மண்டலம் வாரியாக மன்றத்தின் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் இந்தப் பணிகளை வருகிற ஜூன் 2-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் ஆலோசனைகள் வழங்கினார்.

    ரஜினி மக்கள் மன்றத்தின் முதலாவது மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவது பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிய வருகிறது.

    மேற்கு மண்டலத்தில் கோவையில் அடுத்த மாதம் இந்த மாநாடு நடைபெறலாம் என்றும் இதற்காகத்தான் 2-ந்தேதிக்குள் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியை முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ரஜினி நடத்திய ஆலோசனை கூட்டம் முடிந்தபின் மன்ற நிர்வாகிகள் சிலர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

    அப்போது அவர்கள் ஜூன் 2-ந்தேதிக்குள் ரஜினி மன்ற உள்கட்டமைப்பை பலப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

    ரஜினியின் அரசியல் கட்சி எப்போது தொடங்கப்படும் என்று கேட்டபோது, “ரஜினி வந்தாலும் வராவிட்டாலும் அவர் பின்னால் நாங்கள் அணிவகுத்து நிற்போம்” என்று கூறினார்கள். #Rajinikanth #RajiniMakkalMandram

    நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது அரசியல் கட்சிப் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    அரசியல் கட்சி தொடங்க போவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், அதற்கான அடித்தளத்தை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். முதல்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள தனது 50 ஆயிரம் ரசிகர் மன்றங்களை “ரஜினி மக்கள் மன்றம்” என்று மாற்றி உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். அதன்படி உறுப்பினர்கள் சேர்க்கை முடித்து அடையாள அட்டையை வழங்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக மாவட்ட நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.



    இதற்கிடையே வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் சமீபத்தில்  நாடு திரும்பினார்.  சென்னை திரும்பியதும் அவர் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நேற்று சென்னையில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தென்னிந்திய நதிகளை இணைப்பது தான் தனது கனவு என்றும் கண் மூடுவதற்கு முன்னால் அது நடக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அரசியல் பற்றி இந்த நிகழ்ச்சியில் அதிகம் பேசாவிட்டாலும், அவரது இந்த கருத்து ரசிகர்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் 32 மாவட்ட செயலாளர்களுடன் செயலாளர் ராஜூ மகாலிங்கம், நிர்வாகி சுதாகர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பின் போயஸ் இல்லத்தில் மாவட்ட செயலாளர்கள், ரஜினியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது  கட்சிப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். #Rajinikanth #RajiniMakkalMandram 
    நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் கமிஷனும், சட்ட ஆணையமும் வருகிற 16-ந் தேதி ஆலோசனை நடத்துகின்றன. #ElectionCommission #LawCommission
    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தவேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். தேர்தல் செலவுகளை பெரிய அளவில் குறைக்கும் நோக்கில் இந்த கருத்தை அவர் தெரிவித்து உள்ளார்.

    இதைத்தொடர்ந்து இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் நடவடிக்கையில் மத்திய சட்ட ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக சட்ட ஆணையம் அரசியல் சாசன நிபுணர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தலில் தொடர்பு கொண்டோரிடம் கருத்து கேட்டு உள்ளது.

    மேலும் நாடாளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் இது குறித்து கொண்டு வரப்படவேண்டிய சட்ட திருத்தங்கள், ஒப்புதல்கள் பற்றிய செயல் திட்டங்களையும் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி முதல் கட்டமாக 2019-ம் ஆண்டும், இரண்டாம் கட்டமாக 2024-ம் ஆண்டு பல மாநிலங்களின் சட்டசபை தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதேநேரம் தலைமை தேர்தல் கமிஷனர் ஓம் பிரகாஷ் ராவத் அண்மையில் மிகுந்த எச்சரிக்கையுடன் கூறும்போது, குதிரைக்கு முன்பாக நாங்கள் வண்டியை பூட்டவிரும்பவில்லை. ஏனென்றால் இதில் சட்ட ரீதியாக அணுகவேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. அந்த சட்ட வடிவமைப்பு உருவாகாதவரை நாங்கள் எதைப்பற்றியும் பேச விரும்பவில்லை என்று கூறி இருந்தார்.

    மேலும் இதுபோல் ஒன்றாக தேர்தலை நடத்துவதற்கும், மின்னணு ஓட்டுப்பதிவு மற்றும் ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் வாங்குவதற்கும் ரூ.9284 கோடி செலவு பிடிக்கும் என்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட துணை ராணுவத்தினரின் பங்களிப்பும் பெரிதும் தேவைப்படும் எனவும் எதிர்பார்ப்பதாக தேர்தல் கமிஷன் கருத்து தெரிவித்து இருந்தது.

    என்றபோதிலும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் கமிஷனும், மத்திய சட்ட ஆணையமும் முறைப்படியான பேச்சுவார்த்தையை தொடங்க திட்டமிட்டு இருக்கின்றன. இந்த பேச்சுவார்த்தை வருகிற 16-ந் தேதி டெல்லியில் நடக்கிறது.

    இது தொடர்பாக சட்ட ஆணையத்தின் தலைவரும் நீதிபதியுமான பி.எஸ்.சவுகானுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்துள்ளது.

    இதுபற்றி பி.எஸ்.சவுகான் கூறுகையில் “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் கமிஷனுடன் விரிவான ஆலோசனை நடத்த இருக்கிறோம். ஏனென்றால் நாடு முழுவதும் தேர்தலை நடத்தும் பொறுப்பு அவர்களுக்குத்தான் உள்ளது“ என்றார்.   #ElectionCommission #LawCommission
    ×