search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியர்கள்"

    கஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறி உயிரிழந்த இந்தியாவைச் சேர்ந்த 2 பேர் உடல்களை மீட்ட மீட்பு குழுவினர் உடலை மலை முகாமில் வைத்துள்ளனர்.
    காத்மாண்டு:

    இந்தியா-நேபாள நாட்டுக்கு நடுவே உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா சிகரம் உள்ளது. உலகத்திலேயே 3-வது மிகப்பெரிய சிகரமான இதில் ஏராளமான மலையேறும் குழுவினர் ஏறி வருகின்றனர். இந்தநிலையில் சிகரத்தில் ஏறிய இந்தியாவைச் சேர்ந்த 2 பேர் பிணமாக கிடந்தனர்.

    அவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டு மலை முகாமில் வைத்தனர். பின்னர் காத்மாண்டுவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு 2 பேரின் உடல்களும் ஹெலிகாப்டரில் அனுப்பி வைக்கப்பட்டது. கடும் குளிர் ஏற்பட்டதாலும், உடலில் வெப்பம் குறைந்ததாலும் 2 பேரும் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.
    லிபியா தலைநகர் திரிபோலியை கைப்பற்ற முயற்சிக்கும் உச்சக்கட்ட மோதல் நடைபெறும் நிலையில் அங்கிருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தியுள்ளார். #Tripolitravelban #sushmaswaraj
    புதுடெல்லி:

    லிபியா நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அந்நாட்டின் கிழக்கு பகுதியில் இயங்கிவரும் போட்டி அரசு உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகிறது. போட்டி அரசின் லிபியா தேசிய ராணுவத்தின் தளபதியாக பதவி பகிக்கும் கலிபா ஹஃப்டர் தலைநகர் திரிபோலியை கைப்பற்றும் நோக்கத்தில் விமானப்படை மற்றும் தரைப்படை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்.

    லிபியா அரசுப்படைகளுக்கும் கலிபா ஹஃப்டர் தலைமையிலான உச்சக்கட்ட மோதலில் இதுவரை 200-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், திரிபோலியில் நாளுக்குநாள் நிலைமை மோசமாகி வருவதால் அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு அவர்களின் உறவினர்களும், நண்பர்களும் அறிவுறுத்த வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று வலியுறுத்தியுள்ளார்.

    இந்திய அரசின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டும், சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டும் இன்னும் 500-க்கும் அதிகமான இந்தியர்கள் திரிபோலியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. நிலைமை மேலும் மோசமடைந்தால் அங்கிருப்பவர்களை அழைத்து வருவது சிரமமாகி விடும். எனவே, திரிபோலியில் இருக்கும் உங்களது உறவினர்களையும், நண்பர்களையும் உடனடியாக தாய்நாட்டுக்கு திரும்புமாறு நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். #Tripolitravelban #sushmaswaraj
    வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர். #RemittancesIndia #WorldBank
    வாஷிங்டன்:

    அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள், தாய்நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்புகின்றனர். இவ்வாறு தாய் நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர். இந்த ஆண்டும் இந்தியர்கள் முதலிடத்தை தக்க வைத்திருப்பதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் கடந்த ஆண்டில் 79 பில்லியன் டாலர் பணம் அனுப்பி உள்ளனர். இது இந்திய ரூபாய் மதிப்பில் 5.5 லட்சம் கோடி ஆகும்.



    இந்தியாவைத் தொடர்ந்து சீனா 2வது இடத்தில் உள்ளது. வெளிநாடுகளில் உள்ள சீனர்கள் தாய்நாட்டிற்கு 67 பில்லியன் டாலர்கள் அனுப்பி உள்ளனர். மெக்சிகோ 36 பில்லியன் டாலர்களுடன் 3வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 34 பில்லியன் டாலர்களுடன் 4வது இடத்திலும், எகிப்து 29 பில்லியன் டாலர்களுடன் 5வது இடத்திலும் உள்ளன.

    வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்கு பணம் வருவது கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. 2016ம் ஆண்டு 62.7 பில்லியன் டாலர்களும், 2017ம் ஆண்டு 65.3 பில்லியன் டாலர்களும் பணம் வந்தது குறிப்பிடத்தக்கது. #RemittancesIndia #WorldBank

    புல்வாமா தாக்குதலைக் கண்டித்து அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #PulwamaAttack #IndianCommunityProtest
    நியூயார்க்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி பிற நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். போராட்டம், கடையடைப்பு என தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.



    அவ்வகையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று புல்வாமா தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.

    பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கக் கூடாது, பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும், சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசாரை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். #PulwamaAttack #IndianCommunityProtest
    கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்காக இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிய 15 ஆயிரம் இந்தியர்கள் கனடா நாட்டு குடியுரிமை பெற்று இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. #Canadiancitizenship
    மும்பை:

    கனடா நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்காக கனடா நாட்டு தூதரகத்தின் மூலம் விண்ணப்பித்து வருகிறார்கள். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக 3 விதமான தேர்வுகள் நடத்திய பின்பே அனுமதி வழங்கப்படுகிறது.

    இதில் தனியார் நிறுவனங்கள் மூலம் விண்ணப்பித்து தேர்வு எழுதுகிறார்கள். ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள் இதற்காக விண்ணப்பித்து தேர்வு எழுதி வருகிறார்கள்.

    இதற்காக முதலில் நிரந்தர குடியுரிமை (பி.ஆர்) பெற வேண்டும். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிய 15 ஆயிரம் இந்தியர்கள் கனடா நாட்டு குடியுரிமை பெற்று இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது கடந்த 2017-ம் ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகம் ஆகும்.

    கனடா குடியுரிமை பெறுவதில் பிலிப்பைன்ஸ் நாட்டினர் தான் முதலிடத்தில் உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தை இந்தியர்கள் பிடித்துள்ளனர்.

    இந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டினர் 15,600 பேருக்கு கனடா குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. #Canadiancitizenship
    டிரம்ப் அரசின் எச் 4 விசாதாரர்களின் பணி அனுமதியை ரத்து செய்யும் நடவடிக்கையால் அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் இந்தியர்கள் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #H4Visa #Trump #US
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் எச்.1பி விசாவில் பணிபுரிவோரின் கணவர் அல்லது மனைவி வேலை செய்ய முன்னாள் அதிபர் ஒபாமா அரசு அனுமதி வழங்கியது. அதற்காக ‘எச் 4’ விசா வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு ஏராளமான இந்தியர்கள் உள்பட வெளி நாட்டினர் பணி புரிகின்றனர்.

    இதை எதிர்த்து அமெரிக்காவை சேர்ந்த சேவ் ஜாப்ஸ் என்பவர் கொலம்பியாவில் உள்ள மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் ஒபாமா அரசின் இத்தகைய கொள்கை முடிவால் அமெரிக்க தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது. எனவே அதை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

    இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 28, மே 22 மற்றும் ஆகஸ்டு 20-ந்தேதிகளில் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது உள்நாட்டு பாதுகாப்பு துறை ஆஜராகி விளக்கம் அளித்தது. அதில், ‘எச் 4’ விசாதார்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணி அனுமதி இன்னும் 3 மாதத்தில் ரத்து செய்யப்படும். இதற்கான புதிய சட்டம் இன்னும் 3 மாதத்தில் வெள்ளை மாளிகையின் பட்ஜெட் நிர்வாக அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்த விவகாரம் குறித்து டிரம்ப் அரசு ஏற்கனவே கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தது. அதில் கோர்ட்டு விரும்பினால் ‘எச்4’ விசாவை ரத்து செய்ய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளது.

    தற்போது எச் 4 விசாவை ரத்து செய்ய வகை செய்யும் புதிய சட்டம் இன்னும் 3 மாதத்தில் தயாராகி விடும் என கோர்ட்டில் பகிரங்கமாக அறிவித்துள்ளது. டிரம்ப் அரசின் இத்தகைய நடவடிக்கையால் அமெரிக்காவில் தங்கி ‘எச் 4’ விசாவில் பணிபுரிவோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    எச் 4 விசாவில் பணிபுரிய 1 லட்சத்து 26 ஆயிரத்து 853 விண்ணப்பங்களுக்கு அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை அனுமதி வழங்கியுள்ளது. இவர்களில் 93 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் 5 சதவீதம் பேர் சீனாவை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 2 சதவீதம் பேர் மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள். #H4Visa #Trump #US

    மெக்சிகோவில் இருந்து படகு வழியே அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற 2 இந்தியர்கள் உட்பட 19 பேரை அமெரிக்க கடலோர காவல்படை கைது செய்தது. #America
    நியூயார்க்:

    மெக்சிகோவில் இருந்து பங்கா வகை படகு ஒன்று பலரை ஏற்றி கொண்டு அமெரிக்க கடற்பகுதிக்குள் நுழைந்தது. இதனை வான் மற்றும் கடல்வழி நடவடிக்கைகளுக்கான விமானம் ஒன்று கண்டறிந்தது.  இதுபற்றி அமெரிக்க கடலோர காவல் படையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த படகு அமெரிக்க கடலோர காவல் படையால் தடுத்து நிறுத்தப்பட்டது.

    அந்த படகில் 2 இந்தியர்கள் உட்பட மொத்தம் 19 பேர் இருந்துள்ளனர்.  சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய முயன்ற அவர்கள் அனைவரையும் கைது செய்த கடலோர காவல்படை, அதில் இருவர் கடத்தல்காரர்கள் என்பதையும் கண்டறிந்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #America
    பாகிஸ்தான் சிறைகளில் 418 மீனவர்கள் உள்பட 471 இந்தியர்கள் அடைக்கப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. #Indian #PakistanJail
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாகிஸ்தான் சிறைகளில் 418 மீனவர்கள் உள்பட 471 இந்தியர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் கடல் மற்றும் நிலப்பகுதி எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டவர்கள். இதேபோல் இந்திய சிறைகளில் 108 மீனவர்கள் உள்பட பாகிஸ்தானை சேர்ந்த 357 பேர் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.

    2016-ம் ஆண்டு நல்லெண்ண அடிப்படையில் 31 மீனவர்கள் உள்பட 114 பாகிஸ்தான் கைதிகளை இந்தியா விடுவித்தது. அதேபோல் 941 மீனவர்கள் உள்பட 951 இந்திய கைதிகளை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது. சிறை கைதிகளுக்கான பாகிஸ்தான்- இந்தியா நீதித்துறை குழு 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த குழு 2013-ம் ஆண்டுக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  #Tamilnews
    இந்தியாவில் 46 சதவீதம் பேர் பாஸ்போர்ட் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்திருப்பதாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவதற்கும், பாஸ்போட்டை புதுப்பிப்பதற்கும் கடுமையான சட்ட விதிகள் பின்பற்றப்படுகின்றன.

    குறிப்பாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர் பற்றிய போலீஸ் விசாரணைக்கு கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படுவதாக கூறப்படுவதுண்டு.

    இதையடுத்து பாஸ்போர்ட் சேவையை எளிமைப்படுத்த மத்திய அரசு பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. பாஸ்போர்ட்டை உடனுக்குடன் விரைவில் பெறுவதற்காக ஆன்-லைன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

    மேலும் விதிகளை திருத்தம் செய்து ஒவ்வொரு பாஸ்போர்ட் சேவைக்கும் தனி தனி கவுண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் பாஸ்போர்ட் புதுப்பிப்பு சேவை விரைவாக நடந்து வருகிறது.

    என்றாலும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் லஞ்சம் கொடுத்தே பாஸ்போர்ட்டை பெற முடிகிறது என்று சொல்கிறார்கள். இது தொடர்பாக சமீபத்தில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.

    அதில் 46 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்த பிறகே பாஸ்போர்ட் பெற முடிந்தது என்று கருத்து தெரிவித்துள்ளனர். அந்த 46 சதவீதம் பேரில் 37 சதவீதம் பேர் பாஸ்போர்ட் சோதனையின் போது லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

    5 சதவீதம் பேர் ஏஜெண்டு மூலம் பாஸ்போர்ட் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க நேரிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். 4 சதவீதம் பேர் பாஸ்போர்ட் எடுத்து வரும் தபால்காரருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். என்றாலும் 54 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்காமலே பாஸ்போர்ட்டை பெற்றதாக கூறியுள்ளனர்.

    பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்தவர்களில் 53 சதவீதம் பேர் தங்களுக்கு இந்த வி‌ஷயத்தில் நல்ல அனுபவமே ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.
    சுவிஸ் நே‌ஷனல் பாங்க் வெளியிட்ட தகவலில் இந்தியர்களின் பணம் சுமார் ரூ.300 கோடி கேட்பாரற்று கிடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று இந்தியர்களுக்கு சொந்தமான பணம் அது என்று கூறப்படுகிறது.
    புதுடெல்லி:

    இந்திய கோடீசுவரர்கள் வரி ஏய்ப்பு செய்து சம்பாதிக்கும் கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கிகளில் சேமித்து வைக்கிறார்கள்.

    அந்த வகையில் சுவிஸ் வங்கிகளில் இந்திய பணக்காரர்களுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது.

    அந்த கருப்புப் பணத்தை மீட்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. அதன் பலனாக பணம் முதலீடு செய்து இருப்பவர்களின் பெயர்களை சுவிஸ் வங்கிகள் வெளியிட்டன. ஆனால் அதில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியர்கள் போட்டுள்ள பணம் 50 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    சுவிஸ் நே‌ஷனல் பாங்க் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 2017-ம் ஆண்டு இந்திய கோடீசுவரர்கள் ரூ.7 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மூன்றாவது ஆண்டாக சுவிஸ் நே‌ஷனல் பாங்க் தன்னிடம் கணக்கு வைத்துள்ள உள்ளூர் பகுதி மக்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் பற்றிய விவர பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சில இந்தியர்கள் பெயர்களும் உள்ளன.

    அந்த இந்தியர்களில் 6 பேர், தங்களது கணக்குகளில் உள்ள பணத்தை உரிமை கொண்டாடமல் இருக்கும் தகவலும் வெளியிடப்பட் டுள்ளது. சமீபத்தில் சுவிட்சர்லாந்து அரசாங்கம், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள் முறைகேடாக சம்பாதிக்கும் பணத்தை தங்கள் நாட்டில் குவிப்பதை தடுக்க சட்டங்களை திருத்தி கடுமையாக்கியது. இதனால் சில இந்தியர்கள் தங்கள் பணத்துக்கு உரிமை கோராமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது.


    சுவிஸ் நே‌ஷனல் பாங்க் வெளியிட்ட தகவலில் இந்தியர்களின் பணம் சுமார் ரூ.300 கோடி கேட்பாரற்று கிடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று இந்தியர்களுக்கு சொந்தமான பணம் அது என்று கூறப்படுகிறது.

    அந்த இந்தியர்கள் பற்றிய மற்ற எந்த விபரங்களையும் பெற முடியாத நிலை உள்ளது. எனவே அந்த இந்தியர்களோ அல்லது அவர்களது வாரிசுதாரர்களோ உரிய ஆவணங்கள், சான்றிதழ்களை காண்பித்து ரூ.300 கோடியை திரும்ப பெற்றுச் செல்லலாம் என்று சுவிஸ் நே‌ஷனல் பாங்க் அறிவித்துள்ளது.

    40 கணக்குகள் மூலம் 2 பெரிய பெட்டிகளில் உள்ள அந்த ரூ.300 கோடியை இதுவரை எந்த இந்திய பணக்காரரும் உரிமை கொண்டாடவில்லை. #SwissBank
    நேபாளத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் ஸ்வால்லன் கோஷி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். #Nepal
    காத்மாண்டு:

    நேபாளத்தில் பேடாடர் மலைப்பகுதியில் இருந்து கோஷி பகுதி வழியாக வந்துகொண்டிருந்த இந்திய பதிவு எண் கொண்ட வாகனம் திடீரென்று ஓட்டுனரது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், அந்த வாகனம் அருகில் இருந்த ஸ்வால்லோன் கோஷி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு சென்றனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்ததாகவும், மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வாகன ஓட்டுனரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Nepal
    டிரம்ப்பின் புதிய எல்லை கொள்கையால் அமெரிக்காவில் குடியேறும் ஆசையுடன் இந்தியாவில் இருந்து சென்ற ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் அங்குள்ள ஆரேகான் மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
    நியூயார்க்:

    அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

    குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

    இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் 31-ம் தேதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 1940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களுடன் வந்த 1995 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கடந்த ஒருமாத காலத்தில் தெற்காசியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறும் ஆசையுடன் சென்ற 123 பேர் அங்குள்ள ஆரேகான் மாநிலத்தில் உள்ள ஷெரிடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களில் 50 பேர் இந்தியர்கள் என்றும் பெரும்பாலானவர்கள் இந்தி மற்றும் பஞ்சாபி மொழி பேசுவதாகவும், சிலர் மட்டும் சீனர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மிகவும் குறுகிய தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இவர்களை யாரும் சந்தித்து சட்ட உதவிகளை அளிக்கவும் அதிகாரிகள் தடை செய்துள்ளதாக ஆரேகான் இந்தியா பசிபிக் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.  #Indianasylumseekers  #asylumseekersdetainedinUS
    ×