search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈராக்"

    ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 12 ஆயிரம் பேரை கொன்று புதைத்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. #ISIS
    பாக்தாத்:

    ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

    ஈராக்குக்குள் 2014-ம் ஆண்டு அவர்கள் புகுந்தனர். படிப்படியாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள் அவர்கள் கைவசம் சென்றன. அப்போது அவர்களுக்கு எதிரான நபர்களை கொன்று குவித்தார்கள்.

    ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்த இடங்களை மீட்பதற்காக ஈராக் ராணுவம் அமெரிக்கா உதவியுடன் போராடியது. சில மாதங்களுக்கு முற்றிலும் மீட்கப்பட்டது. தற்போது ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவில் மட்டும் சில பகுதிகளை தங்கள் வசப்படுத்தி வைத்துள்ளனர்.

    ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்த பகுதிகளில் தற்போது ஆய்வுகள் நடந்து வருகின்றன.

    அப்போது அவர்கள் கொன்று குவித்த நபர்களை புதைத்த இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 200 இடங்களில் புதை குழிகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொது புதை குழிக்குள்ளும் நூற்றுக்கணக்கான நபர்களை புதைத்துள்ளனர்.

    நினிவே, கிர்குக், சலாவுதீன், அன்பார் பிராந்தியங்களில் இந்த புதைக்குழிகள் இருக்கின்றன. அதில் கஸ்பா சின்கோல் என்ற இடத்தில் மட்டுமே 6 ஆயிரம் பேர் புதைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு 200 புதைகுழிகளிலும் சேர்த்து சுமார் 12 ஆயிரம் பேர் புதைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

    அவர்கள் யார், என்பதை கண்டுபிடிக்கும் முயற்சி நடக்கிறது. பல இடங்களில் புதைகுழிகள் சரியாக மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளன. புதைகப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

    காணாமல் போனவர்கள் யார்? அவர்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கிறார்களா? என்பது பற்றியும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். #ISIS
    ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #IraqBlast #Baghdad
    பாக்தாத்:

    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினர் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர்.

    பாக்தாத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஏடன் நகரில் பஸ் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பின் போது குண்டு வெடித்தது. இதில் ஒரு ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார். 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அல்-சாகா நகரில் அரசு ஊழியர் ஒருவரின் காரில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்தனர். இதை அறியாமல் அவர் அந்த காரில் பயணித்த போது, குண்டுவெடித்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

    சர்தார் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அதே போல் பாக்தாத்தின் வடகிழக்கு பகுதியில் அடுத்தடுத்து 2 பஸ்களில் குண்டு வெடித்ததில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை. 
    ஈராக் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய அதிபராக பர்ஹாம் சலேவை தேர்வு செய்துள்ளனர். #BarhamSalih
    பாக்தாத்:

    ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. அங்கு திடீரென ஐஎஸ் பயங்கரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியை கைப்பற்றி தனிநாடு அமைத்தனர். தினமும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். எனவே அமெரிக்க கூட்டுப் படையின் உதவியுடன் கடந்த டிசம்பரில் அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர். 

    அதைத் தொடர்ந்து ஈராக்கில் ஜூலை 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மதகுரு மக்தாதா தலைமையிலான சயிரூன் கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, வாக்குகளை எந்திரங்கள் மூலம் எண்ணாமல், நேரடியாக கைகளால் எண்ணும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, வாக்குகள் அனைத்தையும் கைகளால் எண்ண வேண்டும் என பாராளுமன்றம் உத்தரவிட்டது.



    ஈராக் அதிபர் தேர்தலில் நடத்தப்பட்ட மறு வாக்கு எண்ணிக்கையிலும் மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், ஈராக் நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில் குர்தீஷ் இனத்தைச் சேர்ந்த குர்தீஷ் தேசபக்த யூனியன் கட்சியின் வேட்பாளராக பர்ஹாம் சலேவும், குர்தீஷ் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பவுட் ஹூசைனும் போட்டியிட்டனர்.

    இந்த தேர்தலில் பர்ஹாம் சலே பெரும்பான்மையுடன் ஈராக்கின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். #BarhamSalih
    ஈராக் நாட்டில் போலீஸ் சோதனை சாவடி அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 2 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். #Iraq #IS #SucideAttack
    பாக்தாத்:

    ஈராக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அடிக்கடி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று கார் மூலம் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் சோதனைச் சாவடியில் இருந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிராக அரசின் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று கிர்குக் நகரில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில், வெடி பொருட்கள் நிரம்பிய காரை தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் வெடிக்கச் செய்தான். இதன்மூலம் அங்கு பணியில் இருந்த 2 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும், 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும், இதுபோன்ற தாக்குதல்கள் ஐ.எஸ் அமைப்பினரால் தான் அதிகமாக நடத்தப்படுவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Iraq #IS #SucideAttack
    ஈராக் நாட்டின் அன்பர் மாகாணத்துக்குட்பட்ட சோதனைச்சாவடி மீது இன்று பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். #Suicidecarbomber #Iraqcarbomber
    பாக்தாத்:

    ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் இருந்து சுமார் 340 கிலோமீட்டர் தூரம் மேற்கில் சிரியா நாட்டின் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள அன்பர் மாகாணம் அமைந்துள்ளது.

    இந்த மாகாணத்துக்கு உட்பட்ட கைம் மாவட்டம், அல் கைம் நகரின் நுழைவு வாயில் பகுதியில் வழக்கம்போல் இன்று பாதுகாப்பு படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஒரு கார் சோதனைச்சாவடியின் மீது மோதி பயங்கரமாக வெடித்து சிதறியது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 வீரர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

    காயமடைந்தவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #Suicidecarbomber #Iraqcarbomber
    ஈராக்கில் முன்னாள் எம்.பி. வீட்டில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் சன்னி இனத்தை சேர்ந்த பழங்குடி போராளிகள் 6 பேர் உடல் சிதறி பலியாகினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். #Iraq #SuicideAttack
    திக்ரித்:

    ஈராக் நாட்டில் சலாகுதீன் மாகாணத்தின் தலைநகரான திக்ரித்துக்கு வடக்கே சிர்கத் நகரம் உள்ளது. இதையொட்டிய ஆஸ்திரா என்ற கிராமத்தில், அந்த நாட்டின் முன்னாள் எம்.பி. அத்னன் அல் கானத் வீடு உள்ளது. நேற்று அதிகாலை நேரம், இடுப்பில் வெடிகுண்டுகள் பொருத்திய ‘பெல்ட்’ அணிந்து வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர், அங்கு சென்று குண்டுகளை வெடிக்க வைத்தார். பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறின.

    இதில் அங்கு இருந்த சன்னி இனத்தை சேர்ந்த பழங்குடி போராளிகள் 6 பேர் உடல் சிதறி பலியாகினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த னர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    இருந்தபோதிலும், சம்பவம் நடந்த பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருந்து வருவதால், அவர்களே இந்த தாக்குதலை நடத்தி இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

    சிர்கத் பகுதி 2014-ம் ஆண்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் 2016-ம் ஆண்டு அதை அமெரிக்க படைகளின் ஆதரவுடனும், பழங்குடி போராளிகளின் உதவியுடனும் ஈராக் படையினர் மீட்டு விட்டனர். ஆனாலும் அங்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து கொண்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   #Iraq #SuicideAttack #tamilnews 
    ஈராக் நாட்டின் பைஜி மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். #Iraq #ISattack
    பாக்தாத்:

    ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தங்கள் ஆதிக்கத்தை முன்னிறுத்த முயன்று வருகிறது. ஈராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றி இருந்தனர். பின்னர் அரசுப்படை நடத்திய தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பினர் அங்கிருந்து விரட்டப்பட்டு அப்பகுதி மீண்டும் அரசின்வசம் வந்தது.

    இதையடுத்து, அவ்வப்போது மக்கள் கூடும் இடங்களிலும், தங்களுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மற்றும் ராணுவத்தின்மீது தாக்குதல் நடத்துவதுமாய் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஆல்பு ஜுவாரி என்ற கிராமத்தில் சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சோதனைச் சாவடியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும், படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அல் ஷாபி எனும் பயங்கரவாதத்துக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்தவரகள் என்பது குறிப்பிடத்தக்கது. #Iraq #ISattack
    ஈராக்கில் நடைபெற்ற மறுவாக்கு எண்ணிக்கையிலும் மதகுரு மக்தாதா கட்சி வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #Iraqpoliticalalliance #IraqElection #IraqElectionRecourt
    பாக்தாத்: 

    ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. இந்த நிலையில் திடீரென ஐஎஸ் பயங்கரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியை கைப்பற்றி தனிநாடு அமைத்தனர். தினமும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். எனவே அமெரிக்க கூட்டுப் படையின் உதவியுடன் கடந்த டிசம்பரில் அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர். 

    அதைத் தொடர்ந்து ஈராக்கில் கடந்த 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் ஹைதர் அல்-அபாடி தலைமையிலான நசார் கூட்டணியை எதிர்த்து ஷியா பிரிவு மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணியும், பதே கட்சி கூட்டணியும் மோதின. 

    இந்த தேர்தலில் 44.5 சதவீதம் வாக்குகள் பதிவாகிய நிலையில், ஓட்டு எண்ணிக்கையில் மதகுரு மக்தாதா தலைமையிலான சயிரூன் கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது. இவருக்கு அடுத்தபடியாக பதே கட்சி 47 இடங்கள் வந்துள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் அபாடி தலைமையிலான நசார் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இக்கட்சி 42 இடங்கள் பிடித்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 

    தேர்தல் நடைமுறைகளில் முறைகேடு நடந்திருப்பதாக ஆளும் தரப்பினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து முறைகேடுகள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் விசாரணை நடத்தி, 1000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளின் வாக்கு எண்ணிக்கையை செல்லாது என அறிவித்தது. 

    இவ்வாறு பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், வாக்குகளை எந்திரங்கள் மூலம் எண்ணாமல், நேரடியாக கைகளால் எண்ணும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, வாக்குகள் அனைத்தையும் கைகளால் எண்ண வேண்டும் என பாராளுமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், ஈராக் அதிபர் தேர்தலில் நடத்தப்பட்ட மறு வாக்கு எண்ணிக்கையிலும் மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. விரைவில் சதார் தலைமையில் ஆட்சி அமையவுள்ளது என தெரிவித்துள்ளனர். #Iraqpoliticalalliance #IraqElection #IraqElectionRecourt
    ஈராக் நாட்டில் பல்வேறு பகுதிகளில் முறையாக மின்விநியோகம் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் போராடியதை அடுத்து, மின்சாரத்துறை மந்திரியை நீக்கி, ஈராக் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். #IraqPM #HaideralAbadi
    பாக்தாத்:

    ஈராக்கில் ஹைதர் அல் அபாடி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீப காலங்களில் அதிக அளவில் மின்தடை ஏற்படுவதாகவும், மின்சாரத்துறையில் ஊழல் நடைபெறுவதாகவும் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இதுதொடர்பாக மின்துறை ஊழியர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்து பிரதமர் உத்தரவிட்டார். இதையடுத்து, தற்போது மின்சாரத்துறை மந்திரியான காசிம் அல் பக்தாவியை முறையாக பணி செய்யாதது மற்றும் ஊழல் காரணங்களுக்காக அதிரடியாக நீக்கம் செய்து பிரதமர் ஹைதர் அல் அபாடி உத்தரவிட்டுள்ளார். #IraqPM #HaideralAbadi
    ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து திட்டமிட்ட சதி என ஈராக் பிரதமர் ஹைதர் அலி அல்பாதி தெரிவித்துள்ளார். #Iraq #PMHaiderAlAbadi #BallotBox, #Storagesite #Burn
    பாக்தாத்:

    ஈராக் நாட்டு தலைநகர் பாக்தாதில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நேற்று திடீரென தீபிடித்து விபத்து ஏற்பட்டது.

    தீ விபத்தை அறிந்த அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு அங்கிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை பத்திரமாக மீட்டனர்.

    இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து திட்டமிட்ட சதி என ஈராக் பிரதமர் ஹைதர் அலி அல்பாதி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிட்ட சதி. இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அரசு முடிவு செய்திருந்த நிலையில் தீ விபத்து நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #Iraq #PMHaiderAlAbadi #BallotBox, #Storagesite #Burn
    ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #Baghdadblast
    பாக்தாத்:

    ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தின் சதர் நகரில் நேற்று மக்கள் அதிகம் கூடும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானார். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பயங்கரவாதிகள் இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இந்த வெடி குண்டு தாக்குதல் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதே சதர் நகரில் உள்ள வெடி மருந்து கிடங்கு இன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #Baghdadblast
    ஈராக்கில் 39 இந்தியர்கள் கடந்த 2014-ம் ஆண்டு கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. #Iraq #39indians
    புதுடெல்லி :

    ஈராக் நாட்டின் மோசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடந்த 2014-ம் ஆண்டு 39 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட அவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் இருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அனைவரும் மரணமடைந்ததாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மாநிலங்களவையில் தெரிவித்தார்.  

    மெஹ்மூத் ப்ரச்சா எனும் வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்ட 39 இந்தியர்கள் தொடர்பாக பொது நல வழக்கு ஒன்றை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். கடத்தபட்ட இந்தியர்கள் இறந்தது பற்றி முன்பே இந்திய அரசுக்கு தெரிந்திருந்தும், அந்த தகவலை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது. பின்னர், அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக மிக தாமதமாக இந்திய அரசு தெரிவித்தது.

    எனவே, அவர்கள் அனைவரும் எப்போது? எப்படி இறந்தார்கள்? என்பது பற்றி இந்திய அரசு தெரிவிக்க வேண்டும் என பொது நல மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கீதா மிட்டல் மற்றும் ஹரி சங்கர் முன்னிலையில் இந்த பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது.

    மத்திய அரசு தரப்பில் ஆஜரான மானிக் டோக்ரா இந்த வழக்கில் எந்த பொதுநல எண்ணமும் இல்லை எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இறுதியாக, படுகொலை செய்யப்பட்ட 39 இந்தியர்கள் தொடர்பான இந்த பொது நல வழக்கு கண்டிக்கத்தக்கது. இது போன்ற வழக்குகளை ஊக்கப்படுத்தவும் முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உததரவிட்டனர்.

    மேலும், பொதுநல வழக்கு தொடர்ந்த மெஹ்மூத் ப்ரச்சாவிற்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் வித்தித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #Iraq #39indians
    ×