search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை"

    புதுவையில் இருந்து கார்கில் போருக்கு உத்தரவிட்ட பிரதமர் வாஜ்பாய் எடுத்த அதிரடி நடவடிக்கையால் இந்தியாவிடம் பாகிஸ்தான் சரியான பாடம் கற்றுக்கொண்டது. #AtalBihariVajpayee
    புதுச்சேரி:

    வாஜ்பாய் 1999-ல் பிரதமராக இருந்த போது, கார்கில் போர் நடந்தது. அந்த போரில் இந்தியா மாபெரும் வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டியது. இந்தியாவின் அந்த சாதனைக்கு சொந்தக்காரர் வாஜ்பாய்.

    இந்தியாவில் காஷ்மீரில் சில பகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அப்போதைய பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த மு‌ஷரப் கார்கில் பகுதியில் ரகசியமாக படைகளை ஊடுருவ செய்தார்.

    இது, இந்திய ராணுவத்துக்கு தெரியாது. மே 3-ந் தேதி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஊடுருவி இருப்பதை ஆடு மேய்ப்பவர்கள் பார்த்து விட்டு இந்திய ராணுவத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    மே 5-ந் தேதி இது, உண்மைதானா? என்பதை கண்டறிவதற்காக 5 ராணுவ வீரர்கள் அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டனர். அவர்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து சித்ரவதை செய்து கொன்றனர்.

    இதன் பின்னர் மேலும் ஆய்வு செய்த போது, பாகிஸ்தான் வீரர்கள் கார்கிலில் உள்ள டராஸ், காக்சர், முஷ்கோக் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் புகுந்திருப்பது தெரிய வந்தது.

    அப்போது பிரதமர் வாஜ்பாய் தலைநகரத்தில் இல்லை. அவர் புதுவைக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்திருந்தார். இங்கு கவர்னர் மாளிகையில் தங்கி இருந்தார்.

    டெல்லியில் இருந்து அவருக்கு பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி இருப்பதை உறுதி செய்து தகவல் வந்தது.

    உடனே பிரதமர் வாஜ்பாய் உறுதியான நடவடிக்கைகளை தொடங்கினார். எந்த தயக்கத்தையும் காட்டாத அவர், பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று உடனடி முடிவுக்கு வந்தார்.

    அவர் புதுவையில் இருந்தபடியே போர் உத்தரவை பிறப்பித்தார். அடுத்த வினாடி இந்திய விமானப் படைகள் தாக்குதலை தொடங்கின.

    அடுத்து டெல்லிக்கு உடனடியாக சென்ற பிரதமர் போர் நடவடிக்கைகளை தீவிரமாக்கினார்.

    தொடர்ந்து தரைப்படைகளும் நேரடியாக சென்று எதிரிகளை எதிர்கொண்டது. கடுமையான போர் நடந்தது.

    வாஜ்பாய் காட்டிய துணிச்சலால் இந்திய ராணுவம் பாகிஸ்தான் படைகளை துவம்சம் செய்தது. இதனால் பாகிஸ்தான் படைகள் பின்வாங்கி ஓடின.



    ஜூலை 26-ந் தேதி போர் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. சுமார் 4 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

    அன்று பிரதமர் வாஜ்பாய் எடுத்த அதிரடி நடவடிக்கையால் இந்தியாவிடம் பாகிஸ்தான் சரியான பாடம் கற்றுக்கொண்டது. #AtalBihariVajpayee

    சென்னையை போன்று புதுவையிலும் சிறுமியை மிரட்டி வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த காதலன் உள்பட 7 பேரை போலீசார் வலைவீசிதேடி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத்திறனாளி சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததில் 17 பேர் கைதாகி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேப்போன்று புதுவையில் சிறுமியை காதலித்து அவளை நண்பர்களுக்கு காதலன் விருந்தாக்கிய சம்பவம் நடந்து உள்ளது.

    புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி நகர பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இதற்காக அவர் தினமும் பஸ்சில் சென்று வந்துள்ளார். அப்போது பஸ்சில் சென்றபோது வழுதாவூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்களது இந்த தொடர்பு காதலாக மாறியது.

    இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியை அந்த வாலிபர் வழுதாவூரை ஒட்டியுள்ள ஒரு தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அவரை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதை செல்போனிலும் அந்த வாலிபர் படம் எடுத்து வைத்துக் கொண்டதாக தெரிகிறது. இதன்பின் அந்த படத்தை காட்டி மிரட்டி பலமுறை அந்த சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

    இதுமட்டுமின்றி அந்த சிறுமியை அருகில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கி உள்ளார். 6 பேர் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    இந்த கொடுமை குறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்து அந்த சிறுமி கதறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் புகார் செய்தனர்.

    இதனை தொடர்ந்து குழுவின் தலைவர் ராஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உண்மை என்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தாவிடம் ராஜேந்திரன் புகார் செய்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி திருக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு அவர் உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மொத்தம் 7 பேர் பாலியல் சிறுமியை பலாத்காரம் செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசு முறை பயணமாக இன்று புதுவை வந்தார். துணை ஜனாதிபதியின் புதுவை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. #VenkaiahNaidu
    புதுச்சேரி:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசு முறை பயணமாக இன்று புதுவை வந்தார்.

    சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு 10.45 மணிக்கு வருகை தந்தார். அவரை கவர்னர் கிரண்பேடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் வரவேற்றனர்.

    இதையடுத்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கார் மூலம் காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு சென்றார்.

    அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுடன் வெங்கையா நாயுடு கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத்சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    இதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் வெங்கையா நாயுடு கவர்னர் மாளிகைக்கு திரும்பினார். அங்கு மதிய உணவுக்கு பின் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

    இன்று மாலை இந்திய விளையாட்டு ஆணையம் மூலம் கட்டப்பட்டு உள்ள உள் விளையாட்டு அரங்கம் மற்றும் நீச்சல் குளம், விடுதி கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவை கம்பன் கலையரங்கில் நடைபெறுகிறது. அதில் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கார் மூலம் மீண்டும் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு செல்கிறார். அங்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புதுவை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அவர் செல்லும் சாலைகளின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு 50 அடி தூரத்துக்கு ஒரு போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். #VenkaiahNaidu
    புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு மதியம் வழக்கமான உணவுக்கு மாற்றாக சப்பாத்தி, தயிர் சாதம், சுவையுடன் கூடிய உணவும், இனிப்பு வகைகளும் வழங்கப்படும் என்று நாராயணசாமி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த திருபுவனை சன்னியாசி குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் தொண்டு நிறுவனத்தின் சார்பில் ரூ.32 லட்சம் செலவில் நவீன வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதோடு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள், விளையாட்டு உபகரணங்கள், ஓய்வு அறைகள், அனைத்து வகுப்பறைகளிலும் மின் விசிறிகள், தேசிய கொடிக்கு தனி கொடி மேடை, விழா மேடை, புதிய கரும்பலகைகள் என பள்ளி முழுவதும் புதிதாக புனரமைக்கப்பட்டு மாணவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

    பள்ளியின் புதிய கட் டிட திறப்பு விழா நடந்தது. முதல்-அமைச்சர் நாராயண சாமி திறந்து வைத்து பேசினார்.

    புதுவையில் அரசுப் பள்ளிகளும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி, போட்டு தரமான மாணவர்களை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன. இதற்காக மாணவர் மீது ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக் கூட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.


    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சுவையான உணவு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக பெங்களூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் படி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மதியம் வழக்கமான உணவுக்கு மாற்றாக சப்பாத்தி, தயிர் சாதம் மற்றும் சுவையுடன் கூடிய உணவும், இனிப்பு வகைகளும் வழங்கப்படும். விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும்.

    அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 60 பள்ளிகளில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ தொடங்கப்படும். புதுவையில்-40, காரைக்காலில்-20 ‘ஸ்மார்ட் கிளாஸ்’ தொடங்கப்படும்.

    அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவும், நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனை பயன்படுத்தி மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    விழாவில், அமைச்சர் கமலக்கண்ணன், கல்வித்துறை இயக்குனர் குமார், முதன்மை கல்வி அலுவலர் ரங்கநாதன், மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையாளர் சீத்தாராமன், பள்ளி தலைமை ஆசிரியர் தனராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். #Congress #Narayanasamy
    கோட்டக்குப்பத்தில் பள்ளி வாசல் நிர்வாகி வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் மீலாது நகரை சேர்ந்தவர் அமீர் அம்ஜா (வயது 65).

    இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு நிர்வாகியாக உள்ளார். இவரது மகன் முகமது ஷேக் (35). இவர் வீட்டின் மாடியில் மனைவி மற்றும் குழந்தைகளுடனும், அமீர் அம்ஜா வீட்டின் கீழ் தளத்திலும் வசித்து வருகிறார்கள்.

    நேற்று இரவு முகமது ஷேக் வீட்டின் மாடியில் ஒரு அறையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கினார். அதிகாலை 3.45 மணிக்கு ரம்ஜான் நோன்பையொட்டி சிறப்பு தொழுகைக்காக முகமது ஷேக் எழுந்தார்.

    அப்போது மற்றொரு அறை கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 24 பவுன் நகையில் 2 பவுன் வளையலை மட்டுமே வைத்து விட்டு 22 பவுன் நகை மற்றும் ரொக்க பணம் ரூ.8 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது கண்டு திடுக்கிட்டார்.

    இதுகுறித்து முகமது ஷேக் உடனடியாக கோட்டக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் வீட்டின் பால்கனி வழியே புகுந்து நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 2 பவுன் வளையல் கவரிங் நகையாக இருக்கலாம் என கருதி அவர்கள் பீரோவிலேயே வைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இதற்கிடையே பக்கத்து வீட்டை சேர்ந்த அமீர் என்பவரின் தோட்டத்தில் முகமது ஷேக் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 3 பவுன் நெக்லஸ் கிடந்தது. அதனை அமீர் எடுத்து முகமது ஷேக்கிடம் ஒப்படைத்தார்.

    கொள்ளையர்கள் தப்பி செல்லும் போது 3 பவுன் நெக்லஸ் தவறி விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது போக கொள்ளை போன நகை- பணத்தின் மொத்த மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு காரில் சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியாங்குப்பம்:

    பாகூர் அருகே ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது50). புதுவையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு சாராயம் கடத்தும் தொழில் செய்து வந்த இவர் ஏற்கனவே 2 முறை காரில் சாராயம் கடத்தி கடலூர் கலால் பிரிவு போலீஸ் பிரபுவை கைது செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் ஜெயிலில் இருந்து வெளியே வந்த பிரபு மீண்டும் புதுவையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு சாராயம் கடத்துவதாக கடலூர் கலால் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கலால் போலீசார் ரகசியமாக பிரபுவை கண்காணித்து வந்தனர்.

    இன்றுகாலை பிரபு ஒரு காரில் அபிஷேகப்பாக்கத்தில் இருந்து டி.என்.பாளையம் வழியாக சாராயம் கடத்தி வந்த போது கடலூர் கலால் போலீசார் காரை நிறுத்தி பிரபுவை கைது செய்தனர். காரில் கடத்தி வரப்பட்ட சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    சென்னைக்கு காரில் கடத்தப்பட்ட 750 மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து 2 வாலிபர்களை கைது செய்தனர்.

    சேதராப்பட்டு:

    கோட்டக்குப்பம் அருகே உள்ள ஆளத்தூரில் இன்று அதிகாலை கோட்டக்குப்பம் சரக மதுவிலக்கு இன்ஸ் பெக்டர் அரிகரன், சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஆம்னி கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அதனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். உள்ளே 12 அட்டைப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. சந்தேகம் அடைந்த போலீசார் அதனை திறந்து பார்த்தபோது மதுப்பாட்டில்கள் இருந்தன. மொத்தம் 750 மதுப்பாட்டில்களும், 50 லிட்டர் சாராயமும் இருந்தது.

    இதைத்தொடர்ந்து காரில் இருந்த சென்னை முகப்பேறு பகுதியை சேர்ந்த தியாகு (வயது 30), புதுவையைச் சேர்ந்த பாபு (30) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுவையில் இருந்து சென்னைக்கு மதுப்பாட்டில்கள் கடத்தி சென்று அதிக விலைக்கு விற்க முயன்றது தெரியவந்தது.

    போலீசார் அவர்கள் 2 பேரை கைது செய்தனர். மேலும் மதுப்பாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்தனர். கடத்தப்பட்ட மது பாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும்.

    தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு இடங்கள் குறைந்திருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #Congress #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கோப்பு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். கோப்பு வருவதில் கால தாமதம் ஏற்பட்டது.

    நிதித்துறை காலதாமதம் ஏற்பட்டபோது நிதித்துறை பொறுப்பு வகிக்கும் மந்திரி பியூஸ்கோயலை தொடர்பு கொண்டு பேசினேன். உடனடியாக அவர் ஒப்புதல் அளித்தார்.

    இருப்பினும் மத்திய அரசின் பங்களிப்பு திட்டங்களுக்கு நிதி பெறுவது தொடர்பாக சில விளக்கங்களை உள்துறை அமைச்சகம் கேட்டது. நேரில் சென்று மத்திய இணை செயலாளரை சந்தித்து தெரிவித்துள்ளேன். இதனால் ஓரிரு நாளில் பட்ஜெட்டுக்கான அனுமதி கிடைக்கும்.

    மத்திய அரசின் கால தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் அரசியல் குறுக்கீடு இருப்பதாக நான் கூற முடியாது. பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் சட்டமன்ற கூட்டத்தை தொடங்கினோம். இருப்பினும் கவர்னருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த வேண்டியிருந்தது.

    தற்போது அதை முடித்துள்ளோம். பட்ஜெட்டுக்கு அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் சட்டசபை கூடும். மத்திய அரசு நிதி குறைந்து கொண்டே வருகிறது. 42 சதவீதம் அளிக்கப்பட்ட சதவீதம் 27 சதவீதமாக குறைத்துள்ளனர்.

    மத்திய அரசிடம் கூடுதலாக நிதி பெற அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறோம். சுற்றுலா திட்டங்கள் மூலம் கூடுதலாக நிதி பெற கோப்புகள் அனுப்பியுள்ளோம். அரசின் வருவாயை பெருக்கவும் நடவடிக்கை எடுத்து உள்ளோம். கேரளா போன்ற மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களை புதுவையில் நடைமுறைப்படுத்தவும் ஆலோசித்து வருகிறோம்.

    நீட் தேர்வினால் எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்காத 2 மாணவிகள் தமிழகத்தில் இறந்துள்ளனர். கண்டமங்கலத்தை சேர்ந்த ஒரு மாணவி வி‌ஷம் அருந்தி சிகிச்சை பெற்று வருகிறார். இது வருத்தம் அளிக்கிறது.

    ஏழை, எளிய கிராமபுறத்தை சேர்ந்த சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவிகள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் இளைய சமுதாயத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினோம். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். 5 ஆண்டுக்கு புதுவைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம்.

    ஆனால் மத்திய அரசு இதை கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் மத்திய மந்திரி நிர்மலாசீத்தாராமன், மாணவிகள் இறப்பு சம்பவத்தை கேலியாக சித்தரித்து பேசியுள்ளார். இது மிகவும் வருந்தத்தக்கது. பிளஸ்-2 தேர்வில் அதிக மார்க் எடுத்த மாணவர்கள் மீண்டும் ஒரு நுழைவுத்தேர்வை எதிர்கொண்டு அதிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தேவையற்றது. மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக தற்போது முக்கிய குற்றவாளிகள் 2 பேரும், உதவிய 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளி சந்துருஜி போலீசாருக்கு சவால் விட்டுள்ளார்.

    எனவே, அவரை உடனடியாக பிடிக்க உத்தரவிட்டு உள்ளேன். ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் அரசியல் தலையீடு, குறுக்கீடு கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளேன்.

    ஏப்ரல் 18-ந்தேதி ஏ.டி.எம். கொள்ளை வெளிப்பட்டது. ஜூன் 18 வருவதற்கு முன்பாகவே அதுதொடர்பான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் சி.பி.சி.ஐ.டி, சைபர் கிரைம், எஸ்டிஎப் ஆகியவை இணைந்து செயல்படுகின்றனர்.

    சந்துருஜி கைது செய்யப்பட்ட பிறகுதான் முழுமையான தகவல்கள் கிடைக்கும். இதில் சர்வதேச தொடர்புகள் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். அப்படியிருந்தால் அதற்கேற்ற விசாரணைக்கு உத்தரவிடப்படும்.

    அனைத்து கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து சென்டாக் மூலம் மாணவர்கள் சேர்க்கும் நடைமுறையை அமல்படுத்தி உள்ளோம். இதற்கான இணையதளத்தில் ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களும் விண்ணப்பித்ததால் இணையதள திறன் குறைந்துபோய்விட்டது.

    தற்போது அதன் திறனை 2 அல்லது 3 மடங்காக உயர்த்தும்படி கூறியுள்ளோம்.

    புதுவையை சேர்ந்த 753 பேர் எம்.பி.பி.எஸ். இடத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். பிற மாநிலங்களை சேர்ந்த 1,183 பேரும், வெளிநாட்டை சேர்ந்த 3 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு 3 தனியார் மருத்துவ கல்லூரிகள் தலா 150 இடங்களில் அரசுக்கு இடங்களை ஒதுக்கி தந்தனர். தற்போது பிம்ஸ் மருத்துவக்கல்லூரியில் 150 இடங்களில் 50 இடங்களை மருத்துவ கவுன்சில் குறைத்துள்ளது. இதனால் பிம்ஸ் கல்லூரியில் மொத்தம் 100 இடம்தான் உள்ளது.

    எனவே, 3 கல்லூரிகளிலும் சேர்த்து 400 இடம்தான் உள்ளது. இதனால் அரசு ஒதுக்கீடு இடங்கள் குறையும். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Narayanasamy
    புதுவை பூமியான்பேட்டையில் இளம் பெண்ணை வாலிபர் கடத்தி சென்று விட்டதாக தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை பூமியான்பேட்டை பாவாணர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு அனுஷா (வயது 23) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தேவகி கணவரை விட்டு பிரிந்து மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். அனுஷா திருமண நிகழ்ச்சிகளில் வரவேற்பாளராக நிற்கும் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற அனுஷா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் எங்கும் அனுஷா இல்லை.

    இதையடுத்து தேவகி தனது மகள் மாயமானது குறித்து ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் அனுஷாவை நைனார் மண்டபத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீர புத்திரன், ஏட்டு இரிசப்பன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    புதுவையில் மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால், பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பாகூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் இளவரசி (வயது 26). இவர், புதுவை கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி எதிரே உள்ள அழகு நிலையத்தில் (பியூட்டி பார்லர்) வேலை பார்த்து வருகிறார்.

    இவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ கல்லூரியில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வரும் திருச்செந்தூரை சேர்ந்த யஷ்வந்தய்யா (28) என்பவர் பழக்கமானார். நாளடைவில் இது காதலாக மாறியது.

    இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சில மாதங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் தாம்பத்திய உறவில் யஷ்வந்தய்யாவுக்கு நாட்டம் இல்லாததால் அவர் மீது இளவரசிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    பின்னர் விசாரித்த போது, யஷ்வந்தய்யா பெண்ணாக இருந்து ஆணாக மாறி அறுவை சிகிச்சை செய்திருப்பது இளவரசிக்கு தெரியவந்தது.

    இதனால் யஷ்வந்தய்யாவை பிரிந்து இளவரசி வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று திருமண நாளையொட்டி இளவரசியை யஷ்வந்தய்யா சந்தித்தார். அப்போது இருவரும் சேர்ந்து வாழலாம் என அவர் இளவரசியிடம் வற்புறுத்தினார்.

    ஆனால், இதற்கு இளவரசி சம்மதிக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த யஷ்வந்தய்யா பாட்டிலில் தயாராக எடுத்து சென்ற பெட்ரோலை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார்.

    தீ உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்காமல் யஷ்வந்தய்யா அலறி துடித்தார். பின்னர் அருகில் இருந்த கழிவுநீர் வாய்க்காலில் உருண்டு புரண்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யஷ்வந்தய்யாவை மீட்டு அவர் வேலை பார்க்கும் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு யஷ்வந்தய்யா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுவை மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணிப்பதாக கவர்னர் கிரண்பேடி தனது பிறந்த நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். #governorkiranbedi
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு இன்று 69-வது பிறந்த நாளாகும். இதனையொட்டி ராஜ் நிவாஸ் வளாகத்தில் உள்ள பெருமாள் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் கவர்னர் கிரண்பேடி பங்கேற்று வழிபட்டார்.

    தொடர்ந்து ராஜ்நிவாஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கிரண்பேடி தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் மற்றும் பலரும் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    தனக்கு வாழ்த்து சொல்ல வந்த சிறுவனை கவர்னர் கிரண்பேடி தனது இருக்கையில் அமர வைத்து உற்சாகப்படுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிறந்த நாள் என்பது நம்மை ஈன்றெடுத்த அன்னையை நினைவு கூரும் தினமாகும். நமக்கு பிறந்த நாள் என்பதை விட அன்னைக்கு மறுபிறவி என்பதே சரி. புதுவை மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #governorkiranbedi

    புதுவை மாநில பட்ஜெட்டுக்கு திங்கட்கிழமை மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    டெல்லியில் முகாமிட்டு இருந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி நள்ளிரவு புதுவை திரும்பினார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் மத்திய உள்துறை இணை செயலாளர் கோவிந்த் மோகனை சந்தித்து பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக பேசினேன்.

    அப்போது அவர் மத்திய அரசின் பங்களிப்பு திட்டத்தின் கீழ் நிதி அளிப்பது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டார். அதற்கான விளக்கங்ளை அளித்தேன். மேலும், வழக்கமான நடைமுறைகளை பின்பற்றியே பட்ஜெட் ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பியது குறித்தும் தெரிவித்தேன். உள்துறை இணை செயலாளர் புதியவர் என்பதால் இந்த விளக்கங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.

    அநேகமாக வருகிற திங்கட்கிழமை மத்திய அரசின் ஒப்புதல் பட்ஜெட்டுக்கு கிடைக்கும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #Congress #Narayanasamy
    ×