என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதுவை"
புதுச்சேரி:
புதுவை 45 அடி ரோட்டில் தனியார் மதுபான கடை அருகே நேற்று மாலை ஒரு வாலிபர் நின்று கொண்டு அவ்வழியே சென்ற பொதுமக்களை வீச்சரிவாளை காட்டி மிரட்டி கொண்டு இருந்தார்.
இதுபற்றிய தகவலின் பேரில் பெரியகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவரிடம் இருந்து வீச்சரி வாளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுவை ரெயின்போ நகரை சேர்ந்த சிவபெருமாள் (வயது 23) என்பதும் ரவுடியான இவர் டி.வி. நகர் அக்கு கொலை வழக்கு உள்ளிட்ட 3 கொலை வழக்கு மற்றும் 5 அடி-தடி வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து சிவபெருமாளை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார்பாளையம் சரவணன் நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது26). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் நேற்று புதுவை சோனாம்பாளையத்தில் உள்ள ஒரு மதுக்கடையில் மதுகுடித்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு மதுகுடித்து கொண்டிருந்த வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மீனவர் ராஜேந்திரனுக்கும், பிரபாகரனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரபாகரனை தாக்கினார். மேலும் ராஜேந்திரன் பீர் பாட்டிலை எடுத்து பிரபாகரனை குத்தினார். இதில் பிரபாகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து ராஜேந்திரன் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள 65 மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் கடந்த சில நாட்களாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு நடத்தினார்.
தமிழக தி.மு.க. அணி நிர்வாகிகளுடன், சென்னை அறிவாலயத்தில் கடந்த 11-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை மு.க.ஸ்டாலின் கள ஆய்வு நடத்தினார். இதனை தொடர்ந்து புதுவை மாநில தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) கள ஆய்வு செய்தார்.
புதுவை ஆனந்தா இன் ஓட்டலில் முதல் தளத்தில் கள ஆய்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. புதுவை மாநிலத்தில் வடக்கு, தெற்கு மற்றும் காரைக்காலில் தி.மு.க. உள்ளது.
இதில் முதல் கட்டமாக புதுவை வடக்கு மாநில தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு நடத்தினார். வடக்கு மாநில நிர்வாகிகள் கிளை செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் என தனித்தனி அறையில் அமர வைக்கப்பட்டு இருந்தனர்.
மதியம் 12 மணிக்கு மேல் புதுவை மாநில தி.மு.க. நிர்வாகிகளுடன் அமர்ந்து மு.க.ஸ்டாலின் உணவு அருந்துகிறார். தொடர்ந்து மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை காரைக்கால் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் கள ஆய்வு நடக்கிறது.
மாலையில் கள ஆய்வினை முடித்துக்கொண்டு மு.க.ஸ்டாலின் கடலூர் வழியாக நாகப்பட்டினம் செல்கிறார். அங்கு தி.மு.க. நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்கிறார்.
முன்னதாக நேற்று இரவு மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து திண்டிவனம் வழியாக புதுவை வந்தார். அவருக்கு புதுவை மாநில எல்லையான கோரிமேட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி, புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி. சிவக்குமார் மற்றும் கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ., மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
நேற்று இரவு புதுவை அக்கார்டு ஓட்டலில் மு.க. ஸ்டாலின் தங்கி ஓய்வு எடுத்தார். #DMK #MKStalin
தமிழகத்தில் தி.மு.க. சார்பில் 68 மாவட்டங்களில் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு நடத்தி முடித்துள்ளார்.
புதுவை மாநிலத்தில் வடக்கு, தெற்கு மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கான கள ஆய்வு நாளை புதுவையில் நடக்கிறது. கள ஆய்வு செய்ய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக புதுவைக்கு வருகிறார். அவருக்கு கோரிமேடு எல்லையில் தி.மு.க. மாநில அமைப்பாளர்கள் சிவா, சிவக்குமார், நாஜிம் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வரும் ஸ்டாலின் ராஜீவ்காந்தி சிலை அருகில் உள்ள ஓட்டலில் தங்குகிறார். இரவு அங்கு ஓய்வெடுக்கிறார். நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு ஆனந்தா இன் ஓட்டலுக்கு ஸ்டாலின் வருகிறார். அங்கு 3 மாவட்டங்களை கள ஆய்வு செய்கிறார்.
முதலில் கிளை செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் என 4 கட்டமாக 3 மாவட்டங்களுக்கும் கள ஆய்வு செய்கிறார். காலையில் வடக்கு பின்னர் தெற்கு மாவட்ட கள ஆய்வு முடிக்கிறார்.
பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஸ்டாலின் மதிய உணவு அருந்துகிறார். மதியம் காரைக்கால் மாவட்டத்திற்கு கள ஆய்வு மதியம் 2 மணிக்கு நடக்கிறது. மாலை 4 மணிக்கு கள ஆய்வு முடிகிறது. கழக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்க கடலூர் வழியாக நாகப்பட்டினத்திற்கு ஸ்டாலின் செல்கிறார். ஸ்டாலினை வரவேற்கும் வகையில் புதுவை கோரிமேடு எல்லை முதல் வழி நெடுகிலும் பேனர்கள், கழக கொடிகள், கட்அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.
புதுவை அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான சர்வம் என்ற தொண்டு நிறுவனம் புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான பூத்துறை என்ற இடத்தில் உள்ளது.
அதை பார்வையிடுவதற்காக கவர்னர் பன்வாரிலால் வந்தார். அப்போது அவருக்கு கருப்பு கொடி காட்டுவதற்காக திருச்சிற்றம்பலம் ரோட்டில் கம்யூனிஸ்டு கட்சியினர் திரண்டு இருந்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் கவர்னர் சென்னையில் இருந்து பூத்துறைக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென விடுதலை சிறுத்தை கட்சியினர் காரில் வந்து பூத்துறை கிராமத்துக்கு செல்லும் நுழைவு பாதையில் குவிந்தனர்.
அவர்கள் கருப்பு கொடி காட்டுவதற்கு தயாரானார்கள். உடனே போலீஸ் டி.எஸ்.பி. இளங்கோவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர்.
அதன் பிறகு கவர்னர் சர்வம் தொண்டு நிறுவனத்துக்கு சென்று இடங்களை சுற்றி பார்த்தார்.
புதுவை வீராம்பட்டினத்தில் உள்ள ஜீவரத்தினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் புவியரசன்.
இவர், அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். மேலும் அந்த மாணவியின் செல்போனில் பேசி செக்ஸ் டார்ச்சர் செய்து வந்தார்.
இது பற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் முறையிட்டார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
இந்த புகாரின் மீது குழந்தைகள் நல குழுவினரிடம் விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த குழு விசாரணை நடத்தியதில் மாணவிக்கு ஆசிரியர் புவியரசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது நிரூபணமானது.
இதையடுத்து அந்த குழுவின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் புவியரசனை சஸ்பெண்டு செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து கல்வித்துறை இணை இயக்குனர் சோமசுந்தரம் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து ஆசிரியர் புவியரசனை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். #Tamilnews
அரியாங்குப்பம்:
புதுவை நோனாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். தற்போது பள்ளி கோடை விடுமுறையையொட்டி படகு குழாமில் படகு சவாரி செய்ய கூட்டம் அலை மோதுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை சுண்ணாம்பாறு படகு குழாமில் படகு சவாரி செய்ய ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அப்போது 2 வாலிபர்கள் குடிபோதையில் சுற்றுலா பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அரியாங்குப்பம் புதுக்குளம் வீதியை சேர்ந்த ஆனந்த் என்ற அலெக்ஸ் (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த உதயசெல்வன் (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு, புதுவையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
புதுவை மாநில தேர்வு முடிவுகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதுவை, காரைக்கால் பகுதியை சேர்ந்த 6,987 மாணவர்களும், 8,088 மாணவிகளும் என மொத்தம் 15,075 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவுகளின்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 13,163 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 5,242, மாணவிகள் 7,321 ஆகும். தேர்ச்சி விகிதம் 87.32. இது கடந்த ஆண்டைவிட 0.64 சதவீதம் அதிகம்.
புதுவை, காரைக்காலில் அரசு பள்ளியில் 6,668 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 4,918 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 73.76 சதவீதமாகும். தனியார் பள்ளிகளில் 8,407 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 8245 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 98.07 சதவீதமாகும்.
புதுவை பகுதியில் அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 5,270 மாணவர்களில் 3857 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி வீதம் 73.19 சதவீதமாகும். தனியார் பள்ளிகளில் 7,495 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 7,388 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 98.57 சதவீதமாகும்.
காரைக்கால் பகுதியில் அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 1,398 மாணவர்களில் 1,061 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 75.89 சதவீதமாகும். தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 912 மாணவர்களில் 857 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 93.97 சதவீதமாகும். புதுவை, காரைக்கால் பகுதிகளில் 87.32 சதவீதம் மாணவர்களும், புதுவை பகுதியில் 88.09 சதவீத மாணவர்களும், காரைக்காலில் 83.03 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுவை பகுதியில் அரசு பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி வீதம் கடந்த ஆண்டை விட 0.51 சதவீதம் குறைவாகும். அதேநேரத்தில் காரைக்காலில் 2.19 சதவீதம் அதிகமாகும்.
புதுவை, காரைக்காலில் 51 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில் பாகூர் கொரவள்ளிமேடு பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு, தனியார் பள்ளிகளில் வேதியியல் பாடத்தில் 4 மாணவர்களும், கணிப்பொறி அறிவியலில் 19, கணக்கு 29, பொருளியல் 7, வணிகவியல் 111, கணக்கு பதிவியல் 150, வணிக கணிதம் 7 என ஆக மொத்தம் 327 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், கல்வித்துறை செயலர் அன்பரசு, இயக்குனர் குமார், இணை இயக்குனர் சோம சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.
பாகூர்:
கன்னியகோவில் அருகே முள்ளோடையில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க் எதிரே இன்று அதிகாலை 5 மணியளவில் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் புதுவை- கடலூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் மீது அடுத்தடுத்து வந்த வாகனங்களும் மோதின. இதில் முகமே அடையாளம் தெரியாத வகையில் அவர் உடல் சிதறி போனது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிதறி கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வாகனங்கள் மோதி இறந்தவர் கடலூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
இதையடுத்து கடலூர், நெல்லிக்குப்பம் பண்ருட்டி, போலீசாருக்கு கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
கேரளாவை சேர்ந்தவர் அக்ஷயா (வயது 22). இவர் புதுவை பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி எம்.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று மாலை இவர் புதுவை தீயணைப்பு நிலையம் அருகே செல்போனில் பேசியபடி நடை பயிற்சி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென அக்ஷயாவிடம் இருந்து செல்போனை பறித்தனர். அக்ஷயா திருடன்... திருடன் என அலறுவதற்குள் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து அக்ஷயா ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் 2 வாலிபர்கள் புதுவை பழைய சட்ட கல்லூரி அருகே நின்று கொண்டு அவ்வழியே சென்றவர்களிடம் செல்போன் விற்பனைக்கு உள்ளதாக கூறி விலை பேரம் பேசி கொண்டு இருந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஒதியஞ்சாலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு செல்போனை விற்க பேரம் பேசிக்கொண்டு இருந்த 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் திப்புராயப் பேட்டை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த மலர்வாணன் (19) மற்றும் புதுவை இளங்கோ நகர் அருகே உள்ள சாந்தி நகரை சேர்ந்த ஆனந்தகுமார் (19) என்பதும், இவர்கள் பல்கலைக்கழக மாணவி அக்ஷயாவிடம் செல்போனை பறித்து சென்றவர்கள் என்பது தெரிய வந்தது.
மேலும் இவர்கள் மது குடித்து விட்டு புதுவைக்கு சுற்றுலா வரும் வெளிமாநில பயணிகளை குறிவைத்து அவர்களிடம் தகராறு செய்து செல்போனை பறித்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 3 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
புதுவை சத்யா நகர் 3-வது குறுக்கு தெருவில் ஒரு வாடகை வீட்டில் 2-வது தளத்தில் சீனிவாசன் (வயது 41) என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவரான இவர் நேற்று காலை ஆட்டோ தொழிலுக்கு சென்று விட்டார்.
அவரது மனைவி தமிழரசி வீட்டின் கீழ் தளத்தில் படிக்கட்டில் அமர்ந்து அருகில் குடி யிருந்தவர்களிடம் பேசி விட்டு பின்னர் வீட்டுக்கு சென்றார்.
அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும்.
தமிழரசி பக்கத்து வீட்டுக் காரர்களிடம் பேசிக் கொண்டிருந்ததை யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்