என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 104560
நீங்கள் தேடியது "ஷங்கர்"
இம்சை அரசன் 24ஆம் புலிகேசி நடிக்க முடியாது என்று வடிவேலு பிடிவாதம் பிடித்து வந்த நிலையில், தற்போது சமரசம் ஏற்பட்டு படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #IA24P #Vadivelu
இம்சை அரசன் படத்தில் நடிக்க மறுத்ததால் நடிகர் வடிவேலுவுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிக்க இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.
சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரிக்க முடிவு செய்து அதற்கான பணிகளும் நடந்தன. இதற்கிடையே சில கருத்து வேறுபாடுகள் காரணமாக வடிவேலு இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக ஷங்கர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தை நாடினார். எனினும் தீர்வு எட்டவில்லை. இந்த நிலையில் தான் வடிவேலுக்கு சினிமாவில் தடை விதிக்கப்பட இருப்பதாக செய்திகள் பரவின. எனினும் வடிவேலு விடாப்பிடியாக இருந்தார்.
இந்த நிலையில், இம்சை அரசன் படக்குழுவுக்கும், வடிவேலுவுக்கும் இடையே சுமூகம் ஏற்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது மதுரையில் இருக்கும் வடிவேலு, படப்பிடிப்புக்காக சென்னை வர சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக படப்பிடிப்புக்காக சென்னையில் பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு துணை நடிகர், நடிகைகளும் ஒப்பந்தமாகினர். வடிவேலுவின் விடாப்பிடியால் அனைவரும் தேதியை ஒதுக்கிட்டு தவித்தனர்.
இந்த நிலையில், பிரச்சனை முடிவுக்கு வந்திருப்பதால் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு குறித்த நேரத்தில் தொடங்கும் பட்சத்தில் படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IA24P #Vadivelu
கமல் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிகர் சிம்பு போலீஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan #STR
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் இந்தியன். நல்ல வரவேற்பைபெற்ற இந்த படத்தில் கமல் சுதந்திர போராட்ட வீரராகவும், லஞ்சம் வாங்கும் மகனாகவும் நடித்திருந்தார்.
நேர்மையே கொள்கையாக வைத்து இருக்கும் தந்தை தனது கொள்கைக்கு எதிராக இருக்கும் மகனையே கொல்வதுபோல படத்தின் முடிவு அமைந்து இருந்தது.
1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் அடுத்த பாகமாக இந்தியன் 2 உருவாக இருக்கிறது. கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு வெளியானது. கமல் நடிக்க ஷங்கர் இயக்குகிறார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.0 படம் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. அந்த படம் வெளியான சில நாட்களில் டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக செட் அமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது.
இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கலாம் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போதைய தகவல்படி கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்றும் மேலும் துல்கர் சல்மான், சிம்பு ஆகியோரும் நடிக்க உள்ளதாக தெரிகிறது.
சிம்பு இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும், கமலுக்கு வில்லனாக வருவார் என்றும் செய்தி வருகிறது. ஷங்கர் படங்களில் கதாநாயகர்களுக்கு சமமாக வில்லன்களுக்கும் முக்கியத்துவம் தரப்படும். இந்தியன் முதல் பாகத்தில் தந்தை கமலுக்கு மகன் கமலே வில்லனாக அமைந்திருப்பார்.
முதல் பாகத்தின் கதையே லஞ்சத்துக்கு எதிரானதாக இருந்தது. இரண்டாம் பாகம் ஊழலுக்கு எதிரான படமாக இருக்கும் என்கிறார்கள். 21 ஆண்டுகள் கழித்து திரும்பும் சேனாபதி, நாடு முழுவதும் பரவியுள்ள ஊழலை ஒழிப்பதே கதை என்கிறார்கள்.
கமல் தனது கட்சியின் கொள்கைகளில் முக்கியமாக ஊழல் ஒழிப்பையே முன்மொழிந்து வருகிறார். கமலின் தீவிர அரசியலுக்கும் அவரது கொள்கைகளுக்கும் உதவும் வகையிலேயே கதை, வசனம் அமைந்திருக்கும் என்கிறார்கள். #Indian2 #KamalHaasan #STR
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan #STR
22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் - கமல்ஹாசன் `இந்தியன்-2' படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கின்றனர். கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் லஞ்சம் வாங்கும் இளம் கமலை தாத்தாவாக வரும் கமல் விமானநிலையத்தில் புகுந்து கத்தியால் குத்துவார். பின்னர் அவர் தப்பி செல்லும் வேன் டேங்கர் லாரியில் மோதி தீப்பிடிக்கும். அந்த விபத்தில் இந்தியன் தாத்தா செத்து விட்டதாக கருதுவார்கள்.
ஆனால் அவர் வெளிநாட்டில் இருப்பதுபோல் படத்தை முடித்தனர். இரண்டாம் பாகத்தில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியன் தாத்தா இந்தியா திரும்புவது போல் கதையை ஆரம்பிக்கின்றனர்.
இந்தியன் 2 படத்திற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் இந்த படத்தில் கமல் ஜோடியாக காஜல் அகர்வாலிடமும், கமலின் இளமை தோற்றத்தில் நடிக்க துல்கர் சல்மானிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. விரைவில் படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் சமீபத்தில் துவங்கிய நிலையில், படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. படத்திற்காக கமல்ஹாசன் தயாராகி வருகிறார். #Indian2 #KamalHaasan #STR
சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.O’ படத்தின் சென்சார் ரிசல்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. #2Point0 #Rajinikanth
ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பின் வெளியான டிரைலர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று உலகளவில் டிரெண்டானது.
தற்போது இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதை படக்குழுவினர் வெளியிட்டு நவம்பர் 29ம் தேதி ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளனர். #2Point0 #Rajinikanth
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் `இந்தியன்-2' படத்தின் கலை பணிகள் பூஜையுடன் துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan
22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் - கமல்ஹாசன் `இந்தியன்-2' படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கின்றனர். கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இயக்குநர் ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படப்பிடிப்பு தளங்களை சமீபத்தில் ஆய்வு செய்தார்கள்.
இந்த நிலையில், படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் பூஜையுடன் இன்று துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் கலை பணிகளை டி.முத்துராஜ் கவனிக்கிறார். இவர் முன்னதாக ஷங்கர் இயக்கிய ஐ, 2.0 படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன்-2 முழு அரசியல் படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில் கமல் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும், இந்தியன் தாத்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கமலுக்கு வில்லனாக நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய்தேவ்கனை அணுகி இருக்கிறார்கள். படத்தில் நாயகியாக நடிக்க காஜல் அகர்வாலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan
2.0 படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இசை கோர்வையின் போது படத்தை பார்த்து தான் வியந்ததாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். #2Point0 #ARRahman
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.0’ இந்த மாதம் 29-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் 3டி டிரைலர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் கடந்த 3-ந் தேதி வெளியானது. இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Mixing reel 6 #2point0 OMG ,.emotional and sci-fi Epic !
— A.R.Rahman (@arrahman) November 7, 2018
இந்நிலையில் இந்தப் படத்திற்கு இசை அமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான், ‘2.0’வின் ஆறாவது ரீல் காட்சிகளுக்கான மிக்சிங் வேலைகளை செய்து வருகையில், அந்த காட்சிகளை பார்த்து வியந்து அது குறித்து ட்விட் செய்துள்ளார். அதில், “2.0 படத்தின் 6-வது ரீலுக்கான இசையில் மிக்ஸ் செய்து கொண்டிருக்கிறேன். ஓ மை காட்... உணர்வுப்பூர்வமான சயின்ஸ் பிக்ஷர் சகாப்தம் என்பேன்” என்று பதிவிட்டிருக்கிறார். #2Point0 #Rajinikanth #ARRahman
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.0’ படம் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்ராக்கர்ஸில் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. #2Point0 #Rajinikanth
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக ரூ.543 கோடியில் இந்த படம் உருவாகி இருக்கிறது.
சமீபத்தில் வெளியாகிய இந்த படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் வருகிற நவம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
இந்த நிலையில், 2.0 படம் விரைவில் தமிழ்ராக்கர்ஸில் வெளியாகும், நவம்பர் மாத ரிலீஸ் என்று சினிமா படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ்ராக்கர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சர்கார் படத்தையும் படம் ரிலீஸான அன்றே வெளியிட்டு படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்தது. இந்த நிலையில், 2.0 படமும் இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளதால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #2Point0 #Rajinikanth
2.0 படத்தின் டிரைலர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், ரஜினிகாந்த், ஷங்கர் மற்றும் 2.0 படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #2Point0 #Rajinikanth #KamalHaasan
ரஜினிகாந்தின் 2.0 பட டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டதையொட்டி அவருக்கும், இயக்குனர் சங்கருக்கும் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வீடியோவில் கூறி இருப்பதாவது:-
ரஜினிகாந்த், ஷங்கர், அக்ஷய்குமார், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
2.0 படம் ரஜினிகாந்தின் சாதனைக்கு மற்றொரு மைல்கல்லாக அமையும். இந்த படம் உருவாக சங்கர் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது எனக்கு தெரியும். ஷங்கரின் உழைப்புக்கான பலன் கிடைக்கும். வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #2Point0 #Rajinikanth #KamalHaasan
2.0 படத்தில் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கரிடம் 3.0 படம் வருமா என்று கேட்டதற்கு வரவாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth
2.0 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஷங்கர் பேசிய தாவது:-
எந்திரன் 2.0 படத்தின் பலமே ரஜினி தான். அவர் எது செய்தாலும் வித்தியாசமாகவும் கவர்ச்சியாகவும், மாஸாகவும் இருக்கும். படப்பிடிப்பில் ஒரு நாள் அவருக்கு முழங்காலில் அடிப்பட்டது. அதுபற்றி அவர் எங்களிடம் சொல்லவே இல்லை. நாங்கள் வற்புறுத்தி பார்த்த போது தோல் கிழிந்திருந்தது. ஆனால் அதற்கு அவர் சிகிச்சை பெறாமல் தொடர்ந்து நடிப்பேன் என்று அடம் பிடித்தார். ஆனால் நாங்கள் அவரை வற்புறுத்தி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம். அவருக்கு 4 தையல் போடப்பட்டது. அவர் இப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார்.
இப்படத்தில் ரஜினியை பல வடிவத்தில் பார்க்கலாம். எந்திரன் முதல் பாகத்தில் ரஜினியை வசிகரன், சிட்டி ஆகிய 2 வேடத்தில் பார்த்தோம். இப்படத்தில் வசிகரன், சிட்டி, ஜெயின்ட் சிட்டி, எந்திரன் 2.0 உள்ளிட்ட பல வேடத்தில் அவரை பார்க்கலாம். அவர் 42 கிலோ எடையை சுமந்து நடித்துள்ளார்.
கண்களுக்கு 3டி டெக்னாலஜியும், காதுகளுக்கு 4டி ஒலி டெக்னாலஜியும் அருமையாக இருக்கும். கிராபிக்ஸ், சண்டை காட்சிகள், வி.எப்.எக்ஸ் ஆகியவைதான் சவாலாக இருந்தது. எந்திரன் 3.0 வருமா? என்று கேட்கிறார்கள். அதற்காக சின்ன சின்ன ஐடியாக்கள் உள்ளன. அவை ஒன்றாக இணையும் போது கண்டிப்பாக அடுத்த பாகம் வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசும் போது, ‘நான் ரஜினியின் தீவிர ரசிகன். அதை 10 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டேன். நான் 40 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் எந்திரன் படத்தில் ரஜினி கடுமையாக உழைத்ததை பார்த்து ஓய்வு எண்ணத்தை கைவிட்டேன்’ என்றார்.
வில்லனாக நடித்துள்ள இந்தி நடிகர் அக்ஷய் குமார் கூறும்போது, ‘எந்திரன் 2.0 படத்தில் நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. ரஜினிதான் எனக்கு முன் மாதிரியாக இருக்கிறார்’ என்றார். #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth
2.0 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், லேட்டா வந்தாலும், கரெக்ட்டா வரணும், வந்து சரியா அடிக்கணும் என்றார். #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது.
இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது,
ரஜினியையோ, அக்ஷய் குமாரையோ நம்பி 2.0 படத்தை பார்க்க வரவேண்டாம். ஷங்கரை நம்பி வாருங்கள். ஷங்கர் மிகவும் நம்பிக்கையான மனிதர், 2.0 சூப்பர், டூப்பர் ஹிட் ஆக போகிற படம். 2.0 திரைப்படம் அனைத்து தரப்பினருக்குமானது. அவர் ஒரு சிறந்த படைப்பாளி, மிகச் சிறந்த இயக்குநர். அவரது சிந்தனையும், உருவாக்கமும் பிரம்மாண்டமானது. ஆச்சரியப்பட வைப்பது. இயக்குனர் ஷங்கர் 2.0 திரைப்படத்தை உலகளவில் கொண்டு சென்றுள்ளார்.
அவருடன் இரு படங்களை முடித்த பிறகு மூன்றாவது முறையாக இணைவது பற்றி 2.0 கதை பற்றி பேசினோம். அப்போது அவரிடம் நான் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை மட்டும் தான் கேட்டேன். சிவாஜி படம் எடுக்கும் போது படத்தின் தயாரிப்பு நினைத்ததை விட அதிகமானது. ஆனால் படம் நல்லாவே வசூல் செய்தது. அந்த படத்தின் வசூல் எவ்வுளவோ அதை முதலீடாக வைத்து எந்திரன் படத்தை உருவாக்கினோம். எந்திரன் படத்தின் தயாரிப்பு விகிதமும் அதிகரித்தது. சன் பிக்சர்ஸ் அதிக பணத்தை அதற்காக செலவிட்டது. எந்திரனும் வசூல் குவித்து சாதனை படைத்தது.
இந்த நிலையில், எந்திரன் வசூலை 2.0 படத்திற்காக தான் செலவு செய்வதாக சுபாஷ்கரன் கூறினார். தனக்கு லாபம் வேண்டாம், எந்திரன் வசூல் கிடைத்தால் போதும் என்றார். 300, 350 கோடிக்கு படத்தை எடுக்க முடிவு செய்து ஆரம்பித்தோம். தற்போது 500 கோடியை தாண்டியுள்ளது படத்தின் பட்ஜெட். இந்த படமும் நல்ல வசூலைக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் படத்தில் நடிக்க முடியவில்லை. எனவே படத்தில் இருந்து நான் வெளியேறுவதாக கூறினேன். வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுப்பதாக சொன்னேன். ஆனால் ஷங்கர் விடவில்லை. படம் முக்கியம் அல்ல, நீங்கள் தான் முக்கியம் என்று சுபாஷ் சொன்னார். உடல்நிலை சரியான பிறகு கூட படத்தை எடுக்கலாம். ஆனால் நான் திரும்ப வர வேண்டும் என்று சுபாஷ் சொன்னார். இவரை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது கடினம்.
இவரைப்போன்ற ஒரு நல்ல நண்பர் கிடைப்பது எளிதல்ல. கோஹினூர் வைரம் மாதிரி எனக்கு ஒரு நல்ல நண்பர் கிடைத்துவிட்டார்.
படத்தில் அக்ஷய் குமாரின் தோற்றத்தை பார்த்து ஆடிப்போயிட்டேன். மேக்கப்புக்காக அவர் 4 மணிநேரம் வேலை பொறுமையாக இருந்திருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் சவால்.
ரொம்பவே தாமதமாக வந்திருப்பதாக கூறுகிறார்கள். லேட்டா வந்தாலும் சரியான நேரத்திற்கு வரவேண்டும். வந்து சரியா அடிக்க வேண்டும், நான் படத்தை சொன்னேன்.
ஆயிரக்கணக்கானோர் படத்திற்காக பணிபுரிந்திருக்கிறார்கள். அனைவரும் படத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.
அடுத்ததாக எனது நண்பர் கமல் நடிக்கும் இந்தியன்-2 திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெறும். இவ்வாறு ரஜினி பேசினார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.0’ படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது.
இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பிரத்யேகமாகப் படத்தின் பாடல்கள் 3டி-யில் காட்சிப்படுத்தப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புது விதமான டிஜிட்டல் சவுண்டு சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த டிஜிட்டல் சவுண்டு சிஸ்டம் குறித்தும் பத்திரிகையாளர்களுக்கு விளக்கப்பட்டது.
பின்னர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது.
இந்திய படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டும் கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 3 ஆயிரம் பேர் இந்த கிராபிக்ஸ் பணிகளைச் செய்திருப்பதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth
2.0 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய அக்ஷய் குமார் விஷால் கேள்விக்கு பதில் அளித்த போது, உடற்பயிற்சி குறித்த அறிவுரை வழங்கினார். #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது.
இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் தமிழில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழில் பேச 2 முதல் 3 மணிநேரம் வரை பயிற்சி எடுத்தன். பேச பயமாக இருக்கிறது. பேசுகிறேன், தவறாக இருந்தால் மன்னியுங்கள்.
வணக்கம் சென்னை. மகிழ்ச்சி. இந்த பாலிவுட் நடிகர் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் இயக்குநர் ஷங்கர் மற்றும் இசை மகான் ஏ.ஆர்.ரமானுடன் 2.0 படத்தில் இணையும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. நானும் இந்த படத்தில் இருப்பது பெருமை. மகிழ்ச்சி உங்க அனைவருக்கும் நன்றி. என்றார்.
பின்னர் அக்ஷய் குமாரிடம் வீடியோ மூலமாக விஷால் கேள்வி எழுப்பினார். அதில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் ரகசியம் என்ன என்று கேட்டார். விஷாலுக்கு பதில் அளித்த அக்ஷய்குமார், நான் எனது சிறிய வயது முதல் உடற்பயிற்சி செய்து வருகிறேன். மகிழ்ச்சியுடன் செய்கிறேன். அதுவே காரணம் என்று கூறிய அக்ஷய், விஷால் பற்றிய ஒரு பேட்டி பார்த்தேன். அதில் விஷாலின் அம்மா, விஷால் அரிசி சம்பந்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளவில்லை என்று வருத்தப்பட்டிருந்தார்.
எனவே அம்மாவுக்காக ஒரே ஒரு நாள் அரிசி சம்பந்தப்பட்ட உணவை எடுத்துக் கொள்ளுங்கள் விஷால் என்று அக்ஷய் கூறினார். #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X