என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 104560
நீங்கள் தேடியது "ஷங்கர்"
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் இந்தியன் 2 படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முக்கிய பிராலம் ஒருவர் இணைந்துள்ளார். #Indian2 #KamalHaasan
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. இயக்குநர் ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படப்பிடிப்பு தளங்களை ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த மாதத்தின் இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வும் நடந்து வருகிறது.
கமல்ஹாசன் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில், இந்தியன் படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்திருந்த நெடுமுடி வேணு இந்தியன்-2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்தியன்-2 ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிரான கதையாக உருவாகுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதிலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'எந்திரன்' படத்தின் கதை தொடர்பான வழக்கில் இறுதி விசாரணை தேதியை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. #Enthiran #Shankar
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’.
இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார்.
அதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இதில் சிவில் வழக்கின் முந்தைய விசாரணையின் போது, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் கால அவகாசம் கோரிய இயக்குநர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி விசாரணையை 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதில், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரிய வழக்கு, நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எட்டு ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி, தமிழ்நாடனின் கதை நகலை தாக்கல் செய்தார். மேலும், சிவில் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் சங்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார். இதையடுத்து வழக்கின் இறுதி விசாரணையை, வரும் 28 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். #Enthiran #Shankar #Rajinikanth
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'எந்திரன்' படத்தின் கதை தொடர்பான வழக்கில் ஆஜராகாத இயக்குனர் ஷங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. #Enthiran #Shankar
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’.
இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, கூடுதல் அவகாசம் கேட்டு இயக்குநர் ஷங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று, நீதிபதி சுந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஷங்கர் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, கால அவகாசம் கோரிய இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அந்த தொகையை புளூ கிராஸ் அமைப்புக்கு வழங்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். #Enthiran #Shankar #Rajinikanth
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கும் கமல்ஹாசனுக்கு, முதல் பாகத்தை போலவே இதிலும் இரட்டை வேடம் இருக்கும் என்று கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. இயக்குநர் ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படப்பிடிப்பு தளங்களை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த மாதத்தில் முடிகிறது. எனவே இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன்-2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று ஏற்கனவே அவர் கூறியுள்ளார். முதல் பாகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை எதிர்ப்பதாக கதை இருந்தது. இரண்டாம் பாகம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிரான கதை என்கின்றனர். இதிலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியன் படத்தில் தாத்தா கதாபாத்திரம்தான் படத்தின் வேறாக இருந்தது. முதல் பாகத்தின் முடிவில் இந்தியன் தாத்தா வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று போன் செய்வது போன்று முதல் பாகத்தை முடித்து இருந்தனர்.
இரண்டாம் பாகத்தில் அவர் இந்தியா திரும்புவது போலவும், இங்குள்ள ஊழல் அரசியல்வாதிகளை வர்ம கலையால் வீழ்த்துவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனராம். முதல் பாகத்தில் வந்த இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை இரண்டாம் பாகத்தில் மேலும் வயதான தோற்றத்தில் காட்ட ஷங்கர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வரவழைக்க திட்டமிட்டுள்ளனர்.
இளம் கமல்ஹாசன் வேடம் முதல் பாகம்போல் வில்லத்தனமாக இருக்காது என்றும், அவரும் ஊழலுக்கு எதிராக போராடுபவர் போலவே வருவார் என்றும் கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், இந்தியன் தாத்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை உக்ரைனில் படமாக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan
‘இந்தியன் 2’ படத்துக்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வருகிறது. `பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார், கமல். அதாவது, செப்டம்பர் மாத இறுதியில் `இந்தியன் 2’ படத்துக்கான படப்பிடிப்பில் இருப்பார், கமல்.
`இந்தியன் தாத்தா’ கேரக்டருக்கான காட்சிகளின் படப்பிடிப்பை போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளில் 20 நாள்கள் தொடர்ந்து நடத்தவிருக்கிறார்கள். அங்கே சென்று `இந்தியன் 2’ படப்பிடிப்புக்கான லொகேஷன்களைத் தேர்வு செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், இயக்குநர் ஷங்கர்.
கமலுக்கு வில்லனாக நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய்தேவ்கனை அணுகி இருக்கிறார்கள். நயன்தாரா, கமல்ஹாசன் தவிர பெரும்பாலான டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துவிட்டார். இப்படத்தின் மூலம், `கமலுடன் இணைந்து நடிக்கவேண்டும்‘ என்ற நயன்தாராவின் கனவும் நனவாகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக இருப்பதால், ஆறு மாதங்களுக்கு முன்பே அட்வான்ஸ் பணத்தைக் கொடுத்து, கமலுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். #Indian2 #KamalHaasan
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் இழுத்தடிப்பதால் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகமாக 2.0 பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. படத்தில் நாயகியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய் குமாரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.
ரூ.450 கோடி செலவில் உருவாகும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போய் வந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற நவம்பர் 29-ஆம் தேதி படம் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்தது.
ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இந்த படத்தில் கிராபிக்ஸ் மிரட்டல்கள் இருக்கும் என்று பேசப்படுகிறது. இந்திய படங்களில் பாகுபலி கிராபிக்ஸ் சாதனைகளில் பேசப்பட்ட படமாக இருந்தது. அந்த படத்தை 2.0 மிஞ்சும் என்றும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் மேலும் தாமதம் ஏற்பட்டு உள்ளது என்றும், எனவே படம் அடுத்த வருடத்துக்கு தள்ளிப்போகும் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. எனினும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. திட்டமிட்டபடி நவம்பர் 29-ந்தேதி படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth #AmyJackson
தொடர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு இயக்கநர் ஷங்கர், நடிகர்கள் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி அளித்துள்ளனர். #KeralaFloods #KeralaFloodRelief
கேரள மாநிலத்தில் இதுவரை காணாத அளவுக்கு பலத்தமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கேரள மக்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குர் ஷங்கர் தலா ரூ.10 லட்சம் நிதி அளித்துள்ளனர்.
முன்னதாக நடிகர்கள் கமல், விஜய் சேதுபதி, சூர்யா - கார்த்தி இணைந்து ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். நடிகர் தனுஷ் ரூ.15 லட்சமும், விஷால், சித்தார்த் தலா ரூ.10 லட்சமும், நடிகை ரோஹிணி ரூ.2 லட்சமும் வழங்கியுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கமும் நிதி அளித்துள்ளது. #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக உருவாக இருக்கும் ‘இந்தியன்-2’ படக்குழுவில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நயன்தாரா இணையவிருப்பதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan
கமல் நடிப்பில் `விஸ்வரூபம்-2' வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கிறது. படத்தின் டிரைலர் மற்றும் மூன்று பாடல்களின் பாடல் வரி அடங்கிய வீடியோக்கள் ஏற்கனவே வெளியான நிலையில், அதன் சண்டைக் காட்சிகள் உருவான விதத்தை வீடியோவாக நேற்று வெளியிட்டனர். அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
அடுத்ததாக கமல், சங்கர் இயக்கத்தில் `இந்தியன்-2' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன் தாராவும் வில்லனாக இந்தி நடிகர் அஜய்தேவ்கனும் நடிக்க இருப்பதாக தகவல் வருகிறது.
நயன்தாரா தென்இந்திய கதாநாயகர்களில் கமல்ஹாசனை தவிர மற்றவர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். கமலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்திருந்த அவர் இதற்கு சம்மதிப்பார் என்கிறார்கள். சமீபகாலமாக இந்தி நடிகர்களை தமிழில் முன்னணி கதாநாயகர்கள் தங்கள் படங்களில் வில்லனாக்கி வருகிறார்கள். அந்த வரிசையில் கமலும் அஜய்தேவ்கனை வில்லனாக்குகிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது. 1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன்-2 உருவாக இருக்கிறது. படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. #Indian2 #KamalHaasan
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படம் குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். #2Point0 #Rajinikanth
ரஜினியின் ‘2.0’, விஜய்யின் ‘சர்கார்’, சிவகார்த்திகேயன் நடிக்கும் ஏலியன் படம், மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்‘ என தமிழிலேயே நிறையப் படங்களில் பிசியாக இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பாலிவுட், ஹாலிவுட் படங்கள், இசை நிகழ்ச்சிகள் என தீவிரமாக இயங்கி வருகிறார். மேலும் அவருடைய கதை தயாரிப்பில் உருவாகும் ‘99 சாங்க்ஸ்’ படத்தின் வெளியீட்டு வேலைகளில் இறங்கியிருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் அளித்த ஒரு பேட்டியில், சங்கரின் 2.0 பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரகுமான், “2.0 போன்ற படத்தை ஷங்கரால் மட்டும்தான் உருவாக்க முடியும். அவர் விரும்பும் தரத்திற்கு வரும் வரை மிக மெனக்கெட்டு வருகிறார்.
படத்தில் ஒரு பாடலைப் பார்த்தேன். எந்த கிராபிக்சும் இல்லாமலேயே அவ்வளவு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. முக்கியமாகப் படத்தின் மொத்த கிளைமாக்ஸ் காட்சியும் பார்த்தேன். எனக்கு அதன் வியப்பு இன்னமும் நீங்கவில்லை. ஷங்கர் போன்ற திறமைசாலி இந்தியாவுக்கே பெருமை” என்று பதிலளித்தார்.
ரஜினிகாந்துடன், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் 2.0 படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது. 3டி தொழில்நுட்பத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இந்தப் படத்தின் கிராபிக்ஸ் போன்ற பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. #2Point0 #Rajinikanth
அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் கமல்ஹாசன், அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதை மனதில் வைத்தே இந்தியன்-2 படத்தில் நடிப்பதாக கூறினார். #Indian2 #KamalHaasan
கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம்-2 வருகிற 10-ஆம் தேதி திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது.
படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்காக மும்பை, ஐதராபாத் நகரங்களுக்கு கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று ஐதராபாத்தில் படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்தது.
இந்த நிலையில், அரசியல் சினிமா பற்றிய கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்து பேசினார். இந்தியன்-2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்று கேட்டபோது,
‘‘இந்தியன் படத்துக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று பலவருடங்களுக்கு முன்பே நான் விரும்பினேன். அதை இயக்குனர் ஷங்கரிடமும் வெளிப்படுத்தினேன். ஆனால் ஷங்கருக்கு தயக்கம் இருந்தது. வெற்றி பெற்ற படத்தை எதற்காக மாற்றி எடுக்க வேண்டும் என்று யோசித்தார்.
நான் அவரிடம், நீங்கள் இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுக்கவில்லை என்றால் அந்த தலைப்பை என்னிடம் தந்து விடுங்கள் நான் எடுக்கிறேன் என்று கூறினேன். அதன்பிறகு சமீப காலமாக அரசியல் சம்பந்தமாக நான் பதிவிடும் கருத்துக்களை பார்த்த பிறகு இந்தியன்-2 படத்தை எடுக்கலாம் என்று அவருக்கு எண்ணம் ஏற்பட்டது.
என்னுடையை அரசியல் பிரவேசம் என்ற புள்ளியில், இருவரும் ஒன்று சேர்ந்து இந்த படத்தை எடுக்க தயாராகி உள்ளோம். அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதை மனதில் வைத்தே இந்த படத்தில் நடிக்கிறேன்.’’
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #Indian2 #KamalHaasan
திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகளை கொண்டாடி வரும் இயக்குனர் சங்கருக்கு அவரோடு பணிபுரிந்த உதவி இயக்குனர்கள் அவரை நெகிழச் செய்திருக்கிறார்கள். #Shankar
‘ஜென்டில்மேன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சங்கர். அர்ஜுன், மதுபாலா நடித்திருந்த இப்படம் 1993ம் ஆண்டும் ஜூலை 30ம் தேதி வெளியானாது. இப்படம் நேற்றுடன் 25 ஆண்டுகளைத் தொட்டது மட்டுமன்றி, இயக்குனர் சங்கர் திரையுலகிற்கு அறிமுகமாகியும் 25 ஆண்டுகளாகியுள்ளது.
இதுவரை சங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் சங்கர்.
இந்நிலையில், சங்கரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்த அனைவருமே ஒன்றிணைந்து சென்னையில் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் சங்கரிடம் ஆரம்பகால கட்டத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர்களிலிருந்து, இப்போது பணிபுரியும் உதவி இயக்குனர்கள் வரை கலந்து கொண்டார்கள். பிரபல இயக்குனர்களாக இருக்கும் பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், அறிவழகன், அட்லீ உள்ளிட்ட அனைவருமே இதில் பங்கேற்றார்கள்.
இதில் உதவி இயக்குனர்கள் அனைவருமே சங்கரைப் பற்றி தனித்தனியாக எழுதி, அதனை ஒரு புத்தகமாக தொகுத்து அதனை பரிசாக வழங்கியிருக்கிறார்கள்.
அந்நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். உதவி இயக்குனர்களுடனான சந்திப்பு குறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் “உதவி இயக்குனர்களின் அன்பால் நெகிழ்ந்துவிட்டேன். அவர்கள் அனைவரும் இல்லாமல் எனது பயணம் சாத்தியமில்லை” என்று தெரிவித்திருக்கிறார் இயக்குனர் சங்கர்.
கமல் நடிப்பில் `விஸ்வரூபம்-2' படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் `2.0' படத்தின் டீசர் ஆகஸ்ட் 15-ல் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth
ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் இந்த படம் 3டியில் உருவாகி இருக்கிறது.
படம் நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கடந்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததும் டீசர், டிரைலருக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் 2.0 படத்தின் டீசர் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.
டீசர் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகலாம் என படத்தின் ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பே லீக் ஆனது. இதனால் அதிர்ச்சியான படக்குழு கிராபிக்ஸ் வேலைகளை மும்முரப்படுத்த தொடங்கியது. #2Point0 #Rajinikanth
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X