search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பரங்குன்றம்"

    டிசம்பர் மாதம் நடைபெறும் 4 மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது. #Thiruparankundramconstituency #Tiruvarurconstituency
    சென்னை:

    திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2-ந்தேதி மதுரையில் இறந்தார். அவரைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி இறந்தார்.

    இவர்களின் மறைவு காரணமாக திருவாரூர் தொகுதியும், திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளதாக தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது.

    எம்.எல்.ஏ. மறைந்தால் அந்த தொகுதியில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் கமி‌ஷன் விதி. அதன்படி இந்த இரு தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட உள்ளது.



    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஜனவரி மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கிடையே டிசம்பர் மாதத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் மாதம் நடத்த தேர்தல் கமி‌ஷன் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகிறது.

    வழக்கமாக சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் போது நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டசபை மற்றும் பாராளுமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்துவது வழக்கம்.

    அந்த வகையில் டிசம்பர் மாதம் 4 மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

    மேலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த தொகுதிகளும் காலியாக உள்ளது. ஆனால் சபாநாயகர் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதால் 18 தொகுதிகளையும் காலியிடம் என அறிவிக்கக்கூடாது என்று கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

    எனவே இந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்தால் 18 பேரும் எம்.எல்.ஏ.வாக தொடர வாய்ப்பு கிடைக்கும். எதிராக தீர்ப்பு வந்தால் எம்.எல்.ஏ.வாக நீடிக்க முடியாமல் காலியிடமாக அறிவிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். இதனால் அந்த தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    தகுதி நீக்க வழக்கில் விசாரணை நீடித்தால் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவது உறுதி என்பதால் அரசியல் கட்சியினர் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். #Thiruparankundramconstituency #Tiruvarurconstituency

    மாரடைப்பால் மரணம் அடைந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். #ADMK #MLABose #EPS #OPS
    மதுரை:

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸ். உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலில் ஆபரேசன் செய்து கொண்டார். கடந்த வாரம் மதுரை திரும்பிய ஏ.கே.போஸ் ஜீவாநகரில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் ஏ.கே.போசுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் தீவிர மாரடைப்பு காரணமாக ஏ.கே.போஸ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 70.

    ஏ.கே.போஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பிற்பகல் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது முதல்வர் பழனிசாமி கூறுகையில், அதிமுகவில் விசுவாசமிக்க தொண்டனாக பணியாற்றியவர் ஏ.கே.போஸ்; கட்சி பணியில் சிறப்பாக செயல்பட்டவர்; தன்னுடைய உழைப்பால் கட்சியில் படிப்படியாக முன்னேறியவர் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.



    அவருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான், மாணிக்கம், சரவணன், நீதிபதி, கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் ஏ.கே.போஸ் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மதுரை கீரைத்துறையில் உள்ள மயானத்தில் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.

    ஜெயலலிதாவால் பாராட்டப்பட்ட ஏ.கே.போஸ் கடந்த 2006 முதல் 2011 வரை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டசபை உறுப்பினராக தேர்ந் தெடுக் கப்பட்டார்.

    இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், சிவசுப்பிரமணியன், சங்கர் என்ற 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். #ADMK #MLABose #EPS #OPS
    திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். #ADMK #MLABose #AKBOSE #RIP #Thiruparankundram
    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ். இவருக்கு வயது 69, இவர் மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகரில் வசித்து வந்தார்.

    திடீரென்று நள்ளிரவு இரவு உறங்கி கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தினர் அவரை அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனை போகும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏ.கே.போஸ் திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர். கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எஸ்.எம்.சீனிவேலு வெற்றி பெற்றார். ஆனால் அவர் தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்பே உடல் நிலை பாதிப்பால் மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  #Thiruparankundram #ADMK #MLA #AKBose #Death
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முருகப்பொருமானுக்கு முக்கனி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில் ஆனி மாதத்தில் நடைபெறும் ஊஞ்சல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான ஆனி ஊஞ்சல் திருவிழா கடந்த 18-ந்தேதி தொடங்கியது.

    திருவிழா நடைபெற்ற 10 நாட்கள் தினமும் இரவில் உற்சவர் சன்னதியில் இருந்து திருவாட்சி மண்டபத்திற்கு மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் வலம் வருதலும், திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் முருகப்பெருமான் அமர்ந்து ஊஞ்சலாடல் உற்சவம் நடைபெற்றது

    இந்தநிலையில் நேற்று திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக முக்கனிபூஜை நடைபெற்றது. இதனையொட்டி கோவிலின் கருவறையில் உள்ள முருகப்பெருமான், துர்க்கை அம்மன், கற்பக விநாயகர், சத்தியகீரிஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோருக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் படைக்கப்பட்டு மகா பூஜைகள் நடைபெற்றது.

    இதேபோல கோவிலுக்குள் உள்ள அனைத்து சன்னதியிலும், சாமிகளுக்கு முன்பாக முக்கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. 
    ரெயில் தண்டவாளத்தில் தலை நசுங்கி உடல் துண்டான நிலையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் எதிரே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இதன் அருகில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் துண்டாகி தலை நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜா போலீசில் புகார் செய்தார். ரெயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கறுப்பு-சிவப்பு கட்டம் போட்ட ரெடிமேட் சட்டையும், நீலநிற பேண்ட்டும் அணிந்திருந்தார். இன்று அதிகாலை 2.45 மணியளவில் ரெயிலில் அடிபட்டு அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என்பது தெரியவில்லை.

    வாலிபர் இறந்து கிடந்த இடம் அருகே பச்சை நிற சீட் கவர் பொருத்தப்பட்ட சைக்கிள் நீண்ட நேரமாக கேட்பாரற்று இருந்தது. இதில் வாலிபர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இது குறித்து மதுரை ரெயில்வே போலீஸ் ஏட்டுகள் வேல்முருகன், சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு 900 கிராம் எடையுள்ள ரத்ன கீரிடம், 450 கிராம் எடையுள்ள தங்க சிம்மாசனம், 200 கிராம் அளவிலான தங்கரேக்கில் திருவாட்சி ஆகியவை காணிக்கையாக வழங்கப்பட்டன.
    திருப்பரங்குன்றம் ஸ்கந்தகுரு வித்யாலய வேதசிவகாம பாடசாலையின் 25-வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி திருப்பரங்குன்றம் முருகன் கோவில் 2-வது ஸ்தானிக பட்டரும், பாடசாலையின் முதல்வருமான ராஜா பட்டர் தலைமையில், பாடசாலை முன்னாள் மாணவர்கள் சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு 900 கிராம் எடையுள்ள ரத்ன கீரிடம், 450 கிராம் எடையுள்ள தங்க சிம்மாசனம், 200 கிராம் அளவிலான தங்கரேக்கில் திருவாட்சி ஆகியவை காணிக்கையாக வழங்கப்பட்டன.

    இதனை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து. கண்ணன் பெற்றுக்கொண்டு, அதனை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் நடராஜனிடம் வழங்கினார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் முருகன்கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) மாரிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் தெய்வானையுடனான முருகப்பெருமானுக்கு புதிய ரத்தின கீரிடம் சூட்டப்பட்டு, தங்க திருவாட்சி, தங்கசிம்மாசனத்தில் சாமி எழுந்தருளியது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.

    தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பாடசாலை முன்னாள் மாணவர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 19-ந்தேதி வைகாசி விசாக திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக மொட்டையரசு உற்சவம் நடைபெற்றது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 19-ந்தேதி வைகாசி விசாக திருவிழா தொடங்கி நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் சண்முகப்பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடைபெற்றது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நேற்று மொட்டையரசு உற்சவம் நடைபெற்றது.

    விழாவையொட்டி காலை 9 மணிக்கு உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து சாமி பல்லக்கில் புறப்பட்டு சன்னதி தெரு வழியாக சென்று கல்யாண விநாயகர் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்கக்குதிரை வாகனத்தில் அமர்ந்து மொட்டையரசு திடலுக்கு சென்றார்.

    இதையொட்டி வழிநெடுகிலும் பக்தர்கள் திருக்கண் மண்டபம் அமைத்திருந்தனர். அவற்றில் எழுந்தருளி சாமி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். தொடர்ந்து மொட்டையரசு திடலுக்கு சென்று அங்கு இரவு 10 மணி வரை தங்கியிருந்தார். அங்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து சாமி பூப்பல்லக்கில் புறப்பட்டு இருப்பிடம் சேர்ந்தார்.
    திருப்பரங்குன்றம், சோலைமலையில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று முருகப்பெருமான் திருவீதி உலா வந்தார்.
    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் முதற்படை வீடு என்ற பெருமை கொண்ட திருத்தலமாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவில் அமைந்து உள்ளது. அறுபடைவீடுகளிலேயே திருமண திருத்தலமாகவும் இந்த கோவில் விளங்குகிறது. கோவிலின் கருவறை மலையை குடைந்து அமைந்துள்ளதால், குடவரை கோவிலாக சிறப்பு கொண்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும்.

    அதே போல இந்த ஆண்டிற்கான விசாக திருவிழா கடந்த 19-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் இரவு 7 மணிக்கு உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு சாமி எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று முருகப்பெருமான் திருவீதி உலா நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 28-ந்தேதி விசாக திருவிழா நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் இருந்து வள்ளி, தெய்வானையுடன் சண்முகப் பெருமான், தனது சன்னதியை விட்டு இடம் பெயர்ந்து கொறடு மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சாமிக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடக்கிறது.

    முன்னதாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திகடனாக பால்குடம் சுமந்தும், பல்வேறு வகையான காவடிகளை எடுத்தும் கோவிலுக்கு வருகிறார்கள். திருவிழா காலங்களில் உற்சவர் சன்னதியில் இருந்து சாமி தெய்வானையுடன் (உற்சவர்) எழுந்தருளி நகர் வலம் வருவது வழக்கம். ஆனால் விசாக திருவிழாவில் மட்டும் ஆண்டிற்கு ஒரு முறை சண்முகர் தனது சன்னதியை விட்டு இடம்பெயருவது தனி சிறப்பாகும்.

    இதேபோல அழகர்மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலைமுருகன் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது வைகாசி மாத வசந்த உற்சவ திருவிழாவாகும். இந்த விழா கடந்த 19-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதில் காப்புகட்டுதல், சண்முகார்ச்சனை, மகாபிஷேகம், சாமி புறப்பாடு நடந்தது.

    நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்று, மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பிரகாரங்கள் வழியாக முருகப்பெருமான் புறப்பாடு நடந்தது. விழாவை தொடர்ந்து தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வருகிற 28-ந்தேதி 10-ம் நாள் திருவிழாவுடன் வசந்த உற்சவ திருவிழா நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து உள்பட திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    திருப்பரங்குன்றம் கோவில் வருடாபிஷேகத்தையொட்டி முருகப்பெருமானின் கையில் உள்ள தங்கவேலுக்கு புனிதநீர் அபிஷேகம் நடைபெற்றது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று 8-வது ஆண்டு வருடாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி காலையில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் யாகசாலையில் இருந்து கருவறைக்கு மேளதாளங்கள் முழங்க புனிதநீர் குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

    இதையடுத்து கருவறையில் உள்ள முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள தங்கவேலுக்கு குடத்தில் இருந்து புனித நீர் ஊற்றி மகா அபிஷேகம் நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். வருடாபிஷேகத்தையொட்டி கருவறையில் முருகப் பெருமானுக்கு புனுகு தைலம் சாத்தப்பட்டது.

    இதேபோல கருவறையில் வீற்றிருக்கும் கற்பக விநாயகர், சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் சாம்பிராணி தைலம் சாத்தப்பட்டது. முன்னதாக சமவேளையில் 5 சன்னதியிலும் மகா அபிஷேகம் நடைபெற்று, பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது பக்தர்கள் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர். 
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றுவதை தவிர்க்கும் வகையில் 7 இடங்களில் அணையா விளக்குகள் வைக்கப்பட உள்ளது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வருகிறார்கள். நெய் விளக்கு விற்பனை உரிம ஏலத்தை தனியார் ஏற்றிருந்த நிலையில் 2013-ம் ஆண்டில் இருந்து கோவில் நிர்வாகம நேரடியாக மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் நெய் விளக்கு விற்பனையை செய்து வந்தது. இதன் மூலம் கோவிலுக்கு பல மடங்கு வருமானம் கிடைத்ததோடு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்தது.

    இந்த நிலையில் சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து திருப்பரங்குன்றம் கோவிலில் நெய் விளக்கு விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவுப்படி கோவிவில் அணையா விளக்கு அமைக்கப்பட்டு அதில் பக்தர்கள் நெய் விட்டு வழிபட ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இதுகுறித்து கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) மாரிமுத்து கூறுகையில், சராசரியாக 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட அணையா (வாடா) விளக்குகள் 7 இடங்களில் வைக்கப்பட உள்ளது. இதற்காக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் வாடா விளக்குகள் வைக்கப்படும் இதே போல சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவிலிலும் வைக்கப்படும் என்றார்.

    அணையா விளக்குகள் பயன்படுத்தும் பட்சத்தில் அகல் விளக்கில் நெய் விளக்கு ஏற்றுவது முழுமையாக தவிர்க்கப்படும் என்று தெரிகிறது. 
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடனா திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 19-ந்தேதி வசந்த உற்சவம் தொடங்குகிறது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடனா திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வசந்த உற்சவ விழா 9 நாட்கள் விசேஷமாக நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டிற்கான வசந்த உற்சவ விழா வருகிற 19-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை விமரிசையாக நடக்கிறது.

    இதையொட்டி அக்கினி நட்சத்திர நாட்களில் வீசும் அனல் காற்று வெப்பம் தணியும் விதமாக கோவிலுக்குள் உள்ள வசந்த மண்டபத்தில் தண்ணீர் நிரப்பட்டு குளிர்ச்சி ஏற்படுத்தப்படும்

    இந்தநிலையில் திருவிழாவையொட்டி 9 நாட்களும் தினமும் மாலை 6.30 மணிக்கு உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அங்கு தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கின்றன.

    வசந்த உற்சவ திருவிழாவில் தங்கம், பவளம், வைடூரியம் போன்ற நகை அணிகலன்களால் ஆன விஷேசமான மகா அலங்காரமும், மல்லிகைப் பூக்கள் மகத்தான அலங்காரமும் செய்யப்படுகிறது. இந்த அலங்காரங்கள் பார்ப்பவரை பக்தி பரவசப்படுத்தி, மெய்சிலிர்க்க வைப்பது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். 
    ×