search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104723"

    மும்பையில் 23-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக இளம்பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. #Mumbai #GirlSuicide
    மும்பை:

    மும்பை தார்டுதேவ் பகுதியை சேர்ந்தவர் அம்ரிஷ் கோத்தாரி (வயது 48). இவர் அங்குள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 23-வது மாடியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் பிரியங்கா (16). நேற்று முன்தினம் வெளியில் சென்றிருந்த பிரியங்கா இரவில் வீடு திரும்பினார். அவருக்காக காத்திருந்த வீட்டு வேலைக்காரர் பிரியங்கா வந்ததும் கதவை திறந்து விட்டு தூங்க சென்று விட்டார். இந்தநிலையில், அதிகாலை 2 மணியளவில் கட்டிட வளாகத்தில் பிரியங்கா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதுபற்றி அறிந்ததும் பிரியங்காவின் பெற்றோர் மற்றும் குடியிருப்புவாசிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    முதற்கட்ட விசாரணையில், பிரியங்கா 23-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    பாங்காக்கில் இருந்து மும்பை வந்த விமானத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறி தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். #MumbaiFlight #WomanMolests
    மும்பை:

    பாங்காக்கில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மும்பைக்கு பயணிகள் விமானம் வந்துகொண்டிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் விமானத்தினுள் விளக்குகள் அணைக்கப்பட்டன. அந்த சமயத்தில் ஒரு வாலிபர், தன் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணியிடம் சில்மிஷம் செய்துள்ளார். அந்த வாலிபர் தன்னை வேண்டுமென்றே தொடுவதை கவனித்த அந்த பெண் கூச்சலிட்டு, பணிப்பெண்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

    உடனே அங்கு வந்த பணிப்பெண்கள், பாதிக்கப்பட்ட பெண் பயணியை வேறு இருக்கைக்கு மாற்றினர். பின்னர் விமானம் மும்பை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும், ஒன்றுமே நடக்காதது போல் இறங்கிய அந்த வாலிபரை, சிஐஎஸ்எப் வீரர்கள் கைது செய்து, சாகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் அவர் மும்பையைச் சேர்ந்த சந்திர திரிபாதி (வயது 31) என்பதும் தனியார் கம்பெனியில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். #MumbaiFlight #WomanMolests

    மயிலாடுதுறை அருகே தர்ணா போராட்டம் நடத்திய இளம்பெண் மீது தாக்குதல் நடத்திய காதலன் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழையூரை சேர்ந்த ஜெயசுதா(வயது26).ஐடிஐ டிப்ள மோ படித்துள்ளார். சென்னையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே செம்பதனிருப்பு ராமர்கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(30). இவரும் சென்னையில் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் ஜெயசுதாவுக்கும், கார்த்திக்குக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 2012-ம் ஆண்டு முதலே இருவரும் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 10-ந் தேதி கடலூரில் காதலர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கீழையூரில் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் 10 நாட்களுக்கு முன்பு உறவினருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. நான் சென்று வருகிறேன் என்று கூறிச்சென்ற கார்த்திக் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் ஜெயசுதா அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து கடந்த 18-ந் தேதி கணவரை தேடி ஜெயசுதா செம்பதனிருப்பு கிராமத்திற்கு சென்றார். அங்கு கணவர் வீட்டுக்கு சென்று விவரம் கேட்டார்.

    அப்போது இங்கு வரக்கூடாது என்று கார்த்திக்கின் தந்தை, தாயார் மற்றும் அவரது தம்பி ஆகியோர் ஜெயசுதாவை அடித்து தாக்கியதாத கூறப்படுகிறது.

    இதனால் ஆவேசம் அடைந்த ஜெயசுதா என் கணவர் வரும் வரை வீட்டை விட்டு போக மாட்டேன் என தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஜெயசுதாவின் திடீர் போராட்டத்தால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். இதையடுத்து ஜெயசுதா எங்கும் செல்லாமல் வீட்டின் முன்பு தொடர்ந்து தர்ணா இருந்து வந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கணவரின் குடும்பத்தினர் நேற்று ஜெயசுதாவை அடித்து உதைத்துள்ளனர். இதில் அவர் மயக்கம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஜெயசுதாவை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் பற்றி பாக சாலை போலீசில் அவர் புகார் செய்தார். இதுகுறித்து பாகசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நானும் கார்த்திக்கும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டோம். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கார்த்திக் பெற்றோர் எங்களை வாழ விடாமல் தடுத்து வருகின்றனர்.

    காதல் திருமணம் செய்த நாங்கள் கடந்த 3 மாதமாக மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினோம். தற்போது மாமாவை பார்க்க போகிறேன் என்று சென்ற என் கணவரை காணவில்லை. அவரை கண்டு பிடித்தும் என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    கீரிப்பாறை அருகே இளம்பெண்ணை 10-ம் வகுப்பு மாணவர் கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    கீரிப்பாறை அருகே உள்ள மலைக்கிராம பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் தனது உறவினர்களுடன் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மருத்துவ சிகிச்சைக்காக சென்றார்.

    அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. உடனே அந்த பெண்ணிடம் அவரது கணவர் மற்றும் குடும்ப விவரங்களை டாக்டர்கள் விசாரித்தனர்.

    அப்போது அந்த பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற தகவல் தெரியவந்தது. திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் ஆனதால் அந்த பெண் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு சிகிச்சை பெற வந்ததும் தெரியவந்தது. அந்த பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்ததால் இதுபற்றி கீரிப்பாறை போலீசாருக்கு ஆஸ்பத்திரியில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது.

    கீரிப்பாறை போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அந்த பெண்ணுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த 14 வயதான 10-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காதலாக மாறியதால் அவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதில் அந்த பெண் கர்ப்பிணியானார்.

    8 மாதம் ஆனதால் இனி மேலும் அதனை மறைக்க முடியாது என்பதால் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தற்போது அந்த பெண் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    அந்த பெண்ணை கர்ப்பமாக்கிய அந்த மாணவர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் வழக்குப்பதிவு செய்யும் பட்சத்தில் அந்த இளம்பெண் மீதே நடவடிக்கை பாயும் என போலீசார் தெரிவித்தனர். #tamilnews
    தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்றதாக திருநங்கை மீது போலீசில் புகார் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருச்சிற்றம்பலம்:

    தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஒட்டங்காடு ஊராட்சி , மதன்பட்டவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மனைவி காந்திமதி.

    சம்பவத்தன்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர், காந்திமதியின் கால் வலிக்கு நாட்டு வைத்தியம் பார்ப்பதாக கூறி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இரவு நேரம் ஆனதால், திருநங்கை காந்திமதி வீட்டிலேயே தங்கி விட்டார்.

    மறுநாள் அதிகாலையில் வீட்டில் தூங்கிய திருநங்கையும், காந்தி மதியின் மகள் அதிர்ஷ்டமேரியும் (வயது21) காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த காந்திமதி பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவர்கள் 2 பேரையும் காணவில்லை.

    இந்த நிலையில், திருநங்கை விட்டுச் சென்ற செல்போன் சிம்கார்டை பரிசோதனை செய்து பார்த்த போது திருநங்கையின் படமும் அவரது பெயர் முனியம்மா என்பதும் தெரியவந்தது. அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?என்ற விவரம் தெரியவில்லை.

    இந்த சம்பவம் குறித்து காந்திமதி திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் செய்தார். திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அதிர்ஷ்டமேரியை கடத்தி சென்ற திருநங்கை முனியம் மாவை தேடி வருகிறார்கள். #tamilnews
    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மிஸ்ராவின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் எழுந்த நிலையில் அவரை உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். #BSFJawan #SharingInformation #PakistanSpy
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரில் எல்லைப் பாதுகாப்பு படையில் 2006-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருபவர், அச்சுதானந்த் மிஸ்ரா. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த மிஸ்ராவிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம்பெண் தன்னை ராணுவ செய்திகள் சேகரிக்கும் நிருபர் என்று அறிமுகம் செய்து கொண்டார். இதனால் இருவர் இடையேயும் நட்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து எல்லைப் பாதுகாப்பு படை, போலீஸ் பயிற்சி மையம் மற்றும் வீரர்களுக்கான ராணுவ பயிற்சிகள், வெடிமருந்து கூடங்கள் போன்றவற்றை புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளாக அந்த பெண்ணிடம் மிஸ்ரா பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். பின்னர் வாட்ஸ்-அப்பில் பாகிஸ்தானில் பதிவு செய்த ஒரு போன் நம்பர் மூலம் தொடர்ந்து தகவல்களை பகிர்ந்து வந்துள்ளார்.

    மிஸ்ராவின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் எழுந்த நிலையில் அவரை உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

    இதுபற்றி மாநில தலைமை போலீஸ் அதிகாரி ஓ.பி.சிங் நிருபர்களிடம் கூறுகையில், “ராணுவம் பற்றிய ரகசிய தகவல்களை மிஸ்ரா பகிர்ந்து கொண்ட பெண் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யை சேர்ந்தவர். இதற்காக மிஸ்ராவுக்கு வங்கிக் கணக்கில் பணம் எதுவும் செலுத்தப்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.  #BSFJawan #SharingInformation #PakistanSpy
    திருமலை அருகே போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த இன்ஸ்பெக்டரை டிஐஜி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
    திருமலை:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பீலேரு பகுதியை சேர்ந்தவர் சம்யுக்தா (வயது 27). இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்னை நிலவியது. இதனால் கணவரின் குடும்பத்தார் மீது பீலேரு போலீஸ் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சம்யுக்தா புகார் அளித்தார்.

    அப்போது அங்கு இன்ஸ்பெக்டர் தேஜோமூர்த்தி இருந்தார். புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர் இளம்பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கி கொண்டார்.

    அதன் பின்பு இளம்பெண்ணுக்கு போனில் பேசிய இன்ஸ்பெக்டர் உனக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் என்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று செல்போனில் பேசி வந்தார். வாட்ஸ்- அப்பிலும் தகவல் அனுப்பியுள்ளார். வீட்டுக்கும் சென்று அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட தேஜோமூர்த்தி திருமலை பிரம்மோற்சவ விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளேன். அதனால் எனக்கு இங்கு ரூம் கொடுத்து உள்ளனர். உடனே புறப்பட்டு திருமலைக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளார்.

    இன்ஸ்பெக்டரின் தொல்லை அதிகரித்ததால் ஆவேசமடைந்த சம்யுக்தா திருப்பதிக்கு வந்து டி.ஐ.ஜி. சீனிவாசராவை சந்தித்து இன்ஸ்பெக்டர் செல்போனில் பேசிய ஆடியோ மற்றும் வாட்ஸ் அப்பில் அனுப்பிய தகவலை கொடுத்து புகார் செய்தார்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய டி.ஐ.ஜி. சீனிவாசராவ் இன்ஸ்பெக்டர் தேஜோ மூர்த்தியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் தலைமறைவாகி விட்டார். #tamilnews
    தூத்துக்குடியில் இளம்பெண்ணை காதலித்து திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தது குறித்து மின்வாரிய ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெர்மல்நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது28). இவர் விருதுநகரில் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் மணிமேகலை(25)க்கும் இடையே காதல் இருந்து வந்தது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மணிகண்டனை மணிமேகலை வற்புறுத்தினார். அதற்கு மணிகண்டன் மறுத்தார். இதையடுத்து மணிமேகலை தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கேரள மாநிலத்தில் காதல் கணவரை ஏமாற்றி விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய இளம்பெண் கடத்தல் நாடகம் ஆடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் மனு (வயது 27). மெக்கானிக். இவருக்கும் கோட்டயத்தை சேர்ந்த மீனு (22) என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. முறைப்படி இருவரும் திருமணம் செய்தனர். 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று காலை மனு வேலைக்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் மனைவி செல்போனில் மனுவை அழைத்தார். அப்போது மீனு பேசும்போது தன்னையும், மகனையும் ஒரு கும்பல் கடத்த வீட்டுக்குள் புகுந்து கழுத்தில் கத்தியை வைத்து அறுப்பதாக கூறி முடிக்கும் முன்பே இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் கழுத்து அறுக்கப்பட்டது போன்ற போட்டோ அவரின் வாட்ஸ் அப்புக்கு வந்தது.

    அதிர்ச்சியடைந்த மனு போலீசாருடன் வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது ரத்தக்கறை ஆங்காங்கே சிதறி கிடந்தது. போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது ரத்தம் குறித்து சந்தேகம் ஏற்பட்டது.

    அதில் தண்ணீர் ஊற்றி பார்த்தபோது அது ரத்தம் இல்லை. குங்குமம் என்று தெரிந்தது.

    இதனால் மீனுவின் மீது போலீசாரின் சந்தேகப் பார்வை திரும்பியது.

    மீனுவின் செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசாருடன் அவரை பிடிக்க திட்டமிட்டனர். இந்நிலையில் அவர் கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் இருப்பதாக தெரியவந்தது.

    அங்கு சென்ற போலீசார் மீனு, அவரது மகன் மற்றும் அவருடன் இருந்த வாலிபர் பினு என்ற வாலிபரையும் பிடித்தனர். 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பல தகவல்கள் வெளியானது. காதல் திருமணம் செய்து குடும்பம் நடத்திய மீனுவுக்கும் அதே பகுதியை சேர்ந்த பினு (22) என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போக திட்டமிட்டனர்.

    அதற்கான சமயம் எதிர்பார்த்த நிலையில் ஒரு கும்பல் கடத்தியதாக நாடகமாடலாம் என்று திட்டம் வந்தது. சம்பவத்தன்று கணவருக்கு போன் செய்து கும்பல் கழுத்தை அறுத்து கடத்தி விட்டதாக கூறிவிட்டு மகனுடன் கள்ளக்காதலன் பினுவின் காரில் தப்பிச்சென்றது தெரியவந்தது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனு மற்றும் கள்ளக்காதலன் பினு ஆகியோரை கைது செய்தனர்.

    பெரியபாளையம் அருகே சீர்வரிசை கேட்ட காதல் கணவர் வீட்டு முன் அமர்ந்து இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆதரவாக பெண்களும் களம் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    பெரியபாளையம்:

    திருவள்ளுர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே உள்ள காரணிபாட்டை கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது24). சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

    இதே பகுதியை சேர்ந்த கவுசல்யா (வயது22) நர்சிங் கோர்ஸ் படித்துள்ளார். இருவரும் கடந்த ஏழு வருடமாக காதலித்து வந்தனர்.

    இந்நிலையில், கடந்த மாதம் விஜய்க்கும், வேறு பெண்ணுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதை அறிந்த கவுசல்யா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி விஜயிடம் முறையிட்டுள்ளார்.

    ஆனால், விஜய் திருமணத்துக்கு மறுத்துவிட்டார். இது பற்றி ஊத்துக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் கவுசல்யா புகார் செய்தார். காதலர்கள் இருவரையும் அழைத்து போலீசார் சமரசம் செய்து கோவிலில் திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.



    பின்னர் ஆடி மாதத்தை யொட்டி கவுசல்யா தனது தாய் வீட்டுக்கு சென்றார். மீண்டும் கணவர் வீட்டுக்கு திரும்பி வந்ததும் விஜய் அவரது தாய் உஷா, சகோதரி சிவரஞ்சனி ஆகியோர் ஆடி மாத சீர் கொண்டு வரவில்லை என்று கவுசல்யாவை தரக்குறைவாக பேசி இருக்கிறார்கள்.

    25 சவரன் நகை மற்றும் சீர்வரிசை எடுத்து வரவேண்டும் என்று வலியுத்தி இருக்கிறார்கள். இது குறித்து கவுசல்யா கடந்த 28-ந் தேதி ஊத்துக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் செய்தார்.

    எனவே, கணவன்-மனைவி இருவரையும் போலீசார் அழைத்து பேசி சமரசம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், வீட்டுக்கு வந்தவுடன் விஜய் மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு அருகில் உள்ள விஜயின் சகோதரி சிவரஞ்சனி வீட்டுக்கு சென்று விட்டனர்.



    பிரச்சனையை பெரிதாக்கியதால் கவுசல்யாவை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். இதையடுத்து தனது கணவன் மற்றும் மாமியார் தன்னை வீட்டின் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கவுசல்யா பூட்டி கிடக்கும் கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கிராம மக்கள் மற்றும் சுய உதவி குழு பெண்கள் சிலர் கவுசல்யாவுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். #tamilnews
    சேலம் புதிய பஸ்நிலையத்தில் இளம்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய திருநங்கை கைது செய்யப்பட்டார்.
    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் தினமும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் பவானிக்கு செல்லும் பஸ்சில் பயணிகள் அமர்ந்திருந்தனர். அப்போது ஒரு திருநங்கை அந்த பஸ்சிற்கு வந்து அங்கிருந்த பயணிகளிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதைப்பார்த்த அந்த பஸ்சில் இருந்த மாஜிஸ்திரேட்டு ஒருவர், திருநங்கையிடம் ஏழை, எளிய மக்களிடம் இவ்வாறு பணம் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது என அறிவுரை கூறினார். இதைகேட்காமல் அந்த திருநங்கை மாஜிஸ்திரேட்டிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்தும் சேலம் குகை பகுதியை சேர்ந்த சத்யா (வயது 28) என்ற பெண்ணிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து சத்யா பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அந்த திருங்கையை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், பெரமனூர் நாகம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்த திருநங்கையான ஜாவீத் (27) என்பதும், பயணியிடம் பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. பின்னர் அவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் கைது செய்தார்.

    இதுகுறித்து பயணிகள் கூறுகையில், சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர், பிற மாவட்டங்களுக்கு செல்வதற்காக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் பயணிகளிடம் சிலர் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். இரவு நேரத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளிடம் தொந்தரவு செய்து வருகின்றனர். எனவே பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
    ஆம்பூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த வடச்சேரி பகுதியை சேர்ந்தவர் ரகுபதி மகன் ஞானமூர்த்தி (வயது 23). மேஸ்திரி. இவரும், அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகள் நந்தினி (19) என்ற இளம்பெண்ணும் காதலித்து 1½ ஆண்டிற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 8 மாத ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் நேற்றிரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஞானமூர்த்தி மனைவியை தாக்கியுள்ளார். நள்ளிரவு வரை சண்டை நீடித்தது. அக்கம், பக்கத்தினர் வந்து பார்த்த போது நந்தினி தூக்கில் பிணமாக தொங்கி கிடந்தார்.

    உமராபாத் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து ஞானமூர்த்தி மற்றும் அவரது தாய் உமா (50) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×