search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104723"

    ராஜபாளையத்தில் குடும்ப தகராறில் இளம்பெண் கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் தெக்கூரைச் சேர்ந்தவர் சண்முகத்தாய் (வயது38). இவரது கணவர் குமார். செங்கோட்டை ரெயில்வேயில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 8 மாதத்தில் சுவிதா என்ற பெண் குழந்தை இருந்தது. 3 பேரும் செங்கோட்டையில் வசித்து வந்தனர்.

    சில தினங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் சண்முகத்தாய் கணவரிடம் கோபித்துக்கொண்டு குழந்தையுடன் தெக்கூரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    நேற்று மாலையில் சண்முகத்தாயையும், அவரது குழந்தையையும் காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை ஊருக்கு ஒதுக்குப்புறமான விவசாய கிணற்றில் தாயும், மகளும் பிணமாக மிதந்தனர். குடும்ப தகராறில் சண்முகத்தாய் மனமுடைந்து கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது.

    இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
    ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை காப்பாற்றிய ஆர்.பி.எப். வீரர் சிவாஜிக்கு பதக்கத்துடன், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது. #RPFConstable #Train
    புதுடெல்லி:

    சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த மாதம் 23ம் தேதி இரவு வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரெயிலில் சென்றார். அப்போது அந்த பெண்ணை ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    அந்த பெண்ணின் அலறல் கேட்டு அதே பெட்டியில் பயணம் செய்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர்  சிவாஜி அங்கு சென்றார். ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது துணிச்சல் மிக்க செயலுக்கு போலீசார் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், ஓடும் ரெயிலில் பெண்ணை காப்பாற்றிய ஆர்.பி.எப். வீரர் சிவாஜிக்கு பதக்கத்துடன், ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஓடும் ரெயிலில் இளம் பெண்ணை காப்பாற்றிய சிவாஜியின் துணிவை ஊக்குவிக்கும் வகையில் ரெயில்வே அமைச்சர் பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய் பணமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே, ரெயில்வே ஐ ஜி பொன் மாணிக்கவேல் சிவாஜியின் துணிவை பாராட்டி 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. #RPFConstable #Train
    ×