என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழிசை"
குறிஞ்சிப்பாடி:
தமிழக அரசை அகற்றக்கோரி கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் 17 பேர் முதல்-அமைச்சராக இருந்துள்ளார்கள். இதில் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஊழல் செய்து இருக்கிறார்கள். இருந்தாலும் மத்திய அரசுக்கு எப்போதாவது வளைந்து கொடுப்பார்கள். ஆனால் தற்போதைய ஆட்சி அப்படி இல்லை. மிகவும் மோசமான ஆட்சி.
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மாதம் ரூ.10 லட்சத்துக்கு பணிகளை ஒதுக்கி கொடுக்கிறார்கள். எதிர்க்கட்சியும் அப்படித்தான் இருக்கிறது. ஆளும் கட்சியும் அப்படித்தான் இருக்கிறது. எனவே இந்த ஊழல் ஆட்சியை அகற்ற மக்கள் மனம் மாற வேண்டும்.
என்னை பற்றி பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்து இருக்கிறார். அவருக்கு சமூகம், அரசியல், பொருளாதாரம் பற்றி தெரியாது. இட ஒதுக்கீடு என்றாலே என்னவென்று அவருக்கு தெரியாது. பா.ம.க. நடத்திய இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். போராட்டத்தின் போது 100 மரங்களை பொதுமக்களே வெட்டினார்கள்.
குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் அங்குள்ள சமுதாய மக்கள் இட ஒதுக்கீட்டுக்காக போராடி இருக்கிறார்கள். அப்போது அவர்கள் பஸ்களை உடைத்து இருக்கிறார்கள். அரசு பொது சொத்துக்களை சேதப்படுத்தி இருக்கிறார்கள். இது பற்றி தமிழிசை சவுந்தரராஜனுக்கு தெரியாதா? இனி அவரை பற்றி பேச வேண்டாம்.
நடிகர்கள் சிகரெட் பிடிக்கக் கூடாது என்று தொடர்ந்து போராடி வருகிறோம். சர்கார் என்ற படத்தில் நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நடிகர்களும், தயாரிப்பாளர்களும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.
இதே பழைய ராமதாசாக இருந்தால் அந்த படத்தை ஒரு சினிமா தியேட்டரிலும் ஓட விட மாட்டோம். அந்த காட்சியில் நடித்ததற்காக நடிகரும், தயாரிப்பாளரும் சிகரெட் கம்பெனியிடம் காசு வாங்கி இருப்பார்கள், அதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
8 வழி பசுமை சாலையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே உளுந்தூர்பேட்டை-சேலம் 4 வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அரசு இழப்பீட்டு தொகை வழங்கவில்லை. இந்த அரசு ஒருநிமிடம் கூட ஆட்சி செய்ய தகுதி இல்லாத அரசு. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு போராடினேன். அப்போதே ஆலையை மூடி இருக்கலாம். இப்போது துப்பாக்கி சூடு நடந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்.
அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் கடலூர், சிதம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #ramadoss
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பா.ஜனதா தலைவர் தமிழிசையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழிசையை பற்றி இழிவாகவும், அவதூறாகவும் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் சீர்காழி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகை வடக்கு மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் பெண்களை இழிவாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பா.ம.க. செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் ஆகியோரை தொடர்ந்து இழிவாக பேசி வரும் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை கண்டித்து தஞ்சை ரெயிலடியில் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தின்போது டாக்டர் ராமதாசை வரம்பு மீறி விமர்சித்து பேசி வரும் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பா.ம.க. நிறுவனர் ராமதாசிடம், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் குஞ்சிதபாதம் தலைமை தாங்கினார். கோரை கேசவன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கோபிசந்தர் வரவேற்றார். நகர பொருளாளர் அருண்குமார், தஞ்சை மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு, மாவட்ட பொருளாளர் ரேணுகாகோவிந்தராஜன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் யோகலட்சுமி, நகர பொருளாளர் ராஜாத்தி அம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
கும்பகோணத்தில் பா.ம.க. சார்பில் காந்தி பூங்கா அருகில் உழவர் பேரியக்கம் மாநில தலைவர் கோ.ஆலயமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பா.ம.க. நிறுவனர் ராமதாசை பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், மரம்வெட்டி என்று கூறியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டன முழக்கம் எழுப்பினர்.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கும், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணிக்கும் இடையே ‘டுவிட்டர்’ தளத்தில் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது. அப்போது டாக்டர் அன்புமணியை கடுமையாக விமர்சித்தார்.
இதை கண்டித்து பா.ம.க. வினர் சென்னையில் பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
நான் அன்புமணியை போல் தந்தையின் நிழலில் பதவியை பெறவில்லை. எனது அறிவு, திறமை, உழைப்பை கொண்டுதான் மாநில தலைவர் பதவிக்கு வந்து இருக்கிறேன்.
யார் அறிவாளி? யார் சிறந்த அரசியல்வாதி? என்பதை தெரிந்து கொள்ள என்னுடன் விவாதம் நடத்த அன்புமணி தயாரா? என்று சவால் விட்டு இருந்தார்.
இதுபற்றி டாக்டர் அன்புமணி கூறியதாவது:-
30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ஒரு சமுதாயத்தை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கொச்சைப்படுத்தி இருக்கிறார். அவரை கண்டித்து இன்று தொடர் முழக்க போராட்டம் நடக்கிறது.
நாளைக்கு (29-ந்தேதி) பிறகு எங்கு வேண்டுமானாலும் தமிழிசையுடன் விவாதம் நடத்த தயார்.
இவ்வாறு அவர் கூறினார். #anbumani #tamilisai
சென்னை:
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குறித்து தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து கூறி இருந்தார்.
இதற்கு பா.ம.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே சென்னையில் பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள்.
இன்று தமிழிசை சவுந்திர ராஜனை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை புறநகர் மாவட்டங்களான காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட மாதவரத்தில் மாநகாட்சி மண்டல அலுவலகம் அருகே மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.என்.சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் ஞானபிரகாசம், முன்னாள் நகர்மன்ற தலைவர் சண்முகம், துணைத்தலைவர் மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
காஞ்சி வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து பல்லாவரம் பஸ்நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் விநாயகம், மாவட்ட துணை செயலாளர் பூக்கடை முனுசாமி பங்கேற்றனர். #tamilnews #anbumani
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அணை பாதுகாப்பு சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அணைகள் பாதுகாப்பு மசோதா கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந் தேதி அன்று தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
2010 மசோதாவில் விரும்பும் மாநிலங்கள் மசோதாவை ஏற்றுக்கொள்ளலாம் என்று இருந்ததாக சொன்னாலும், அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஏனென்றால், முல்லைபெரியார் போன்ற 4 அணைகள் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கேரள மாநிலத்தில் உள்ளன என்பதும், கேரளா ஏற்றுக்கொண்டு தமிழகம் மறுத்தால் பிரச்சினைகள் ஏற்படும் என்பதை கூட அறியாதவராக உள்ளார் ஸ்டாலின்.
அதே போல் 2010 மசோதாவில் அந்தந்த மாநிலங்களில் உள்ள அணைகளை சம்பந்தப்பட்ட மாநிலங்களே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், பராமரிக்கும் என்ற ஷரத்தை நீக்கி, தற்போதைய 2018 மசோதாவில் பராமரிக்கும், உரிமை பெற்ற மாநிலங்களின் உரிமை பறிபோகாமல் காத்திருக்கிறது என்பதை ஸ்டாலினுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
தொடர்ந்து பா.ஜ.க.வை விமர்சிப்பது ஒன்றையே கொள்கையாக கொண்டு அதிகாரத்திற்காக அலைந்து கொண்டிருக்கும் ஸ்டாலின் உண்மை நிலை என்ன என்பதை அறிந்து கொண்டு விமர்சனங்களை முன் வைப்பது நலம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் இன்று திருப்பூரில் நடந்தது.
இதில் பங்கேற்பதற்காக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று காலை கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகமே பரபரப்பாக எதிர்பார்ப்பது இன்று மதியம் 1 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் வர இருக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தீர்ப்பை தான். தீர்ப்பு எப்படி வருகிறது என்று பார்ப்போம். அது அணுகுண்டாக வெடிக்கவும் செய்யலாம், புஷ்வாணமாக போகவும் செய்யலாம்.
அது அரசியலில் அணுகுண்டாக மாற போகிறதா? புஷ்வாணமாக இருக்க போகிறதா? என்பதை பார்க்க வேண்டும்.
சபாநாயகர் ஒரு முடிவு எடுத்திருக்கிறார். உயர்நீதி மன்ற நீதிபதிகள் என்ன முடிவு செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கோவையில் மழை பெய்து வருகிறது. ஆறுகள், குளங்கள் நிறைந்து வரும் நிலையில் நீரை சேமிக்கும் அளவுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை இன்றைய கால கட்டத்தில் செயின்பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. 1 மணி நேரத்தில் எவ்வளவு நகை பறிக்கப்படும் என்பது திருடர்களிடம் போட்டியாகவே நடத்தப்படுகிறது. எனவே பெண்கள் வெளியே நடமாடவே பயப்படுகின்றனர்.
ராகுல்காந்தி மத்திய அரசை எவ்வளவோ குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் எவ்வளவு குறை சொன்னாலும் இன்று மத்தியில் நிலையான ஆட்சி, ஊழல் இல்லாத ஆட்சியை பா.ஜனதா கட்சி கொடுத்து வருகிறது.
கார்த்திக் சிதம்பரம் மீதான 4500 பக்க குற்றப்பத்திரிகையில், ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கார்த்திக் சிதம்பரத்துக்கு உதவி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.
இன்று ஊழலற்ற ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் பா.ஜனதா கட்சி தலைநிமிர்ந்து நிற்கிறது. ராகுல் காந்தி நாளொரு வண்ணம், பொழுதொரு வண்ணமாக குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டிருக்கிறார். இதை மக்கள் நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #18MLACase #Tamilisai
விழுப்புரம்:
விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் நேற்று மாலை பாரதீய ஜனதா கட்சியின் எஸ்.சி. அணி சார்பில் சமதர்ம எழுச்சி மாநில மாநாடு நடைபெற்றது.
எஸ்.சி.அணியின் மாநில தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், எஸ்.சி. அணி மாநில பார்வையாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:-
பிரதமர் நரேந்திரமோடி 6 கோடி கழிவறைகளை உருவாக்கி கொடுத்து இருக்கிறார். இதில் சரிபாதி கழிவறைகள் பட்டியல் இன குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு போய் சேர்ந்துள்ளது.
இவர்களுக்கு கழிவறை கட்டிக்கொடுக்க திராவிட கட்சிகள் ஏன் முன்வரவில்லை? குறைந்த பட்சம் பள்ளிக்கூடங்களிலாவது கழிவறைகள் கட்டி கொடுத்து இருக்கலாம். அதையும் செய்யவில்லை. இந்த துரோகம் செய்த கழகங்கள் தான் நமது சமுதாயத்தை உயர்த்துவார்கள் என்று கனவு கண்டால் அது நடக்காது.
தமிழகத்தில் இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தில் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 4 கோடி சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 1½ கோடி கியாஸ் இணைப்புகள் பட்டியல் இன மக்களுக்காக மோடி கொடுத்துள்ளார். ஆனால் திராவிட கட்சிகள் எதையும் செய்யவில்லை. மோடியின் ஆட்சியில்தான் மக்கள் உயர்வை கண்டு வருகிறார்கள். இளைஞர்கள் படிப்புடன் தொழில் தொடங்க முத்ரா திட்டத்தை கொண்டு வந்து அதில் 40 சதவீதம் பட்டியல் இன மக்களுக்காக கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது இருக்கும் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு நாம் வளர்ந்து காட்டுவது. தற்போது சிந்தை அடிப்படையிலும், கொள்கை அடிப்படையிலும் மிகப்பெரிய பிரிவு ஏற்பட்டுள்ளது. திராவிட கழகங்களின் செயல்பாடுகள் கலவரங்களை ஏற்படுத்துவதற்கும் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கும் வழிவகுக்கும் வகையில் உள்ளது.
தமிழர்களை காப்பதிலும், பட்டியல் இன மக்களை உயர்த்தி காட்டுவதிலும் மோடி அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் இன்று ஒரு புறத்தில் நின்றுகொண்டிருக்கின்றன. உண்மையான எதிர்க்கட்சி என்றால் பா.ஜ.க.தான். வருகிற தேர்தல் கொள்கை, கோட்பாடு, சிந்தனை அடிப்படையிலும், வளர்ச்சியை கொடுக்கக்கூடிய தேர்தலாகவும் நடைபெற உள்ளது.
அனைத்து சமூகமும் ஒன்று பட்டு நின்றால்தான் தமிழகம் முன்னேறும், தமிழ் சமுதாயம் முன்னேறும்.
வரும் ஆண்டில் சுவாமி சகஜானந்தரின் 130-வது ஆண்டு பிறந்தநாள் விழா பட்டியல் இன மக்களின் வளர்ச்சி விழாவாக கொண்டாடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
அம்பேத்கருக்கு உண்மையாக புகழ் சேர்க்கும் ஒரே கட்சி பா.ஜனதாதான். இதை ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி நிரூபித்து வருகிறார். இந்த சமுதாயம் உயர்த்தப்பட வேண்டுமானால் தமிழக மக்கள் பா.ஜனதாவுக்கு அங்கீகாரம் தர வேண்டும். இந்த சமூகத்துக்காக உழைத்துக் கொண்டிருப்பதாக கூறும் திருமாவளவன் போன்ற சமூக தலைவர்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். இந்த மக்களுக்காக உதவி செய்யும் வகையில் ஏதேனும் திட்டங்களை கொண்டு வந்தீர்களா? ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் நாங்கள் என்னென்ன திட்டங்களைகொண்டு வந்தோம் என்பதை எங்களால் பட்டியல் இட முடியும்.
இன்றைய சூழ்நிலையில் காவிரி நமக்கு கிடைத்துள்ளது. காவிரிக்காக மு.க.ஸ்டாலின் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அவை அனைத்தும் பொய்யான தோற்றம்தான். தமிழகத்தில் பா.ஜ.க.வால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை இந்த சமூகம் உணர வேண்டும். எந்த ஒரு திட்டமானாலும் அது மக்களுக்கு எதிரான திட்டமாக இருந்தால், அதை பா.ஜ.க. ஒத்துக்கொள்ளாது. தமிழகத்தில் காவிக்கொடி பறக்கும் காலம் வந்துவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்த ஊத்துப்பட்டி கிராமத்தில் உள்ள சற்குரு மகராஜ் சங்கர பாண்டி சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக தேர்தலில் நேற்று வெளியான கருத்து கணிப்பு தொங்கு சட்டசபை அமையும் என்றும், பா.ஜனதா அதிக இடங்களை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. நிச்சயமாக கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும். சுப்ரீம் கோர்ட்டு காவிரியில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டும், கர்நாடக காங்கிரஸ் ஆட்சி திறக்க வில்லை.
கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் தான் காவிரிக்கு முடிவு ஏற்படும். தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். 94-ம் ஆண்டு இதற்கு அனுமதி கொடுத்தது காங்கிரஸ் ஆட்சி. தி.மு.க. ஆட்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது.
அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்டெர்லைட்டுக்கு கூடுதல் நிலம் வழங்கப்பட்டது. இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டு தான் முடிவெடுக்க வேண்டும்.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாது. பா.ஜ.க. விரைவில் அமைக்கும். தீப்பெட்டி தொழிலுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரிவிலக்கு பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilisai #karnatakaelection #bjp
மதுரை:
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகாவில் பா. ஜனதா பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும். கர்நாடகாவில் காங்கிரஸ் செய்த தில்லுமுல்லு காரணமாக ராஜராஜேஸ்வரி தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் மக்களுக்கு பயன் தருபவை. மக்கள் விரும்பாவிட்டால் அந்த திட்டங்கள் நிறுத்தப்படும். கெய்ல் திட்டத்தில் 91 சதவீத வேலை முடிந்துள்ளது. 9 சதவீத வேலை மட்டுமே பாக்கி உள்ளது. இதனை உயர் நீதி மன்றம் நடை முறைப்படுத்த கூறியும் மக்கள் எதிர்ப்பதால் திட்டத்தை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், அரசியல் வாதிகள் கருத்துகள் கூறும்போது ஒரு தரப்பினரையோ, சமூகத்தையோ அவமரியாதையாக பேசக் கூடாது.
எஸ்.வி.சேகர் மீது கட்சி ஓழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அது பற்றி கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.
போலீஸ்காரர் ஜெகதீஸ் துரை குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பு தொகையும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். தமிழக அரசு மணல் விவகாரத்தில் உறுதியான முடிவு எடுக்க வேண்டும்.
நம்பியாறு, வைகை, தாமிரபரணி ஆறுகளில் மணல் அள்ளுவதால் நிலத் தடி நீர் வெகுவாக குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்