search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீடூ"

    நானே படகேருக்கு எதிராக சாட்சி சொல்ல பலரும் பயப்படுகிறார் என்று மீடூ இயக்கம் மூலம் புகார் கூறிய தனுஸ்ரீ தத்தா வேதனையுடன் கூறியுள்ளார்.
    ‘மீடு’ இயக்கம் கடந்த ஆண்டு திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, பிரபல நடிகர் நானே படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறினார்.

    புகாரின் பேரில் நானே படேகர் மற்றும் டைரக்டர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். புகாருக்கு மறுப்பு தெரிவித்த நானே படேகர், தனுஸ்ரீ தத்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

    இந்நிலையில், நானே படேகர் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை. அவர் குற்றமற்றவர் என போலீசார் தெரிவித்து விட்டதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் இதை தனுஸ்ரீ தத்தா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நானே படேகர் குற்றமற்றவர் என யார் சொன்னது? இது வெறும் வதந்தி தான். நான் எனது வக்கீலிடம் பேசினேன். அவர் போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதை உறுதிபடுத்தினார். போலீஸ் விசாரணை மெதுவாக நடப்பது உண்மைதான். சாட்சிகளை முன்வந்து வாக்கு மூலம் அளிக்க வைப்பதற்கு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.



    முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பின்னர் இதுவரை ஒன்று அல்லது 2 சாட்சிகள் மட்டுமே வாக்குமூலம் அளித்துள்ளனர். எனினும் சம்பவத்தை நேரில் பார்த்த முக்கிய சாட்சிகள் பலர் இன்னும் வாக்குமூலம் அளிக்கவில்லை.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் அவர்கள் வாக்குமூலம் அளிக்க பயப்படுகிறார்கள். முதலில் வாக்குமூலம் அளிக்க முன்வந்த பலரும் தற்போது மாறி விட்டனர்.

    சம்பவம் நடந்து 10 வருடங்கள் ஆகி விட்டது. எங்களுக்கு சரியாக ஞாபகம் இல்லை என தெரிவிக்குமாறு சாட்சிகளிடம் கூறி உள்ளனர். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் பலரின் முன்னிலையில்தான் அந்த சம்பவம் நடந்தது. நானே படேகர் அத்துமீறி நடந்து கொண்டார். இதை நான் தட்டிக் கேட்டபோது நடன இயக்குனர் கணேஷ் ஆச்சர்யா, தயாரிப்பாளர் சமி சித்திக், இயக்குனர் ராகேஷ் சரங் ஆகியோர் என்னை பாராட்டினார்கள்.

    நான் அங்கிருந்து வெளியேறிய போது எனது காரை அடித்து உடைத்தனர். இது படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் தெரியும். ஆனால் அன்று படப்பிடிப்பில் யார்-யார் இருந்தார்கள்? என்பதற்கு ஆவணங்கள் எதுவும் இல்லை என்கின்றனர். இது சந்தேகத்தை கிளப்புகிறது.

    பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும். பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டால் தைரியமாக முன்வந்து புகார் தெரிவிக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத்தான் நான் புகார் கொடுத்தேன். விசாரணை முழுமையாக முடிந்த பிறகு தான் உண்மை வெளிவரும்.

    பாலிவுட்டில் நிறைய நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆனால் புகார் கொடுத்தால் தங்களுக்கு படவாய்ப்பு கிடைக்காது என கருதி தற்போது வரை அமைதியாக இருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தெலுங்கு சினிமாவின் முன்னணி பாடகிகளில் ஒருவராக இருக்கும் பிரணவி, பிரபல இயக்குனர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருக்கிறார்.
    தெலுங்கு சினிமாவின் முன்னணி பாடகிகளில் ஒருவர் பிரணவி. இவர் ஸ்ரீ ராமதாசு, ஹேப்பி டேஸ், எமதொங்கா, லயன் உள்ளிட்ட படங்களில் பாடி புகழ் பெற்றவர். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குனர் ரகு மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சினிமாவில் பாட வாய்ப்பு தேடிய சமயத்தில் பலர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதற்கு சம்மதித்தால் மட்டுமே பாட வாய்ப்பு அளிக்கப்படும் என சில பிரபலங்கள் தன்னை வற்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். அப்படி நடந்த சம்பவம் ஒன்று பற்றியும் அவர் கூறியுள்ளார்.



    ‘நான் சினிமாவில் பாட பலரிடம் வாய்ப்பு கேட்டேன். அப்போது பிரபல இயக்குனர் ஒருவர் தனக்கு பாட வாய்ப்பு தருவதாக தெரிவித்தார். ஸ்டூடியோவுக்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்றதும் பாலியல் தொந்தரவு கொடுத்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் சின்ன பொண்ணு இப்போதுதான் பள்ளி படிப்பை முடித்து இருக்கிறேன் என்று கூறினேன்.

    ஆனால் அதை அவர் பொருட்படுத்தவில்லை. ஆபாசமாகவும் பேசினார். எனக்கு கோபம் வந்தது. அவரை பார்த்து செருப்பால் அடிப்பேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன்’.

    இவ்வாறு பிரணவி கூறியுள்ளார்.
    தன்னுடைய சினிமா வாழ்க்கை மோசமாக இருந்ததாக கூறிய நடிகை ரிச்சா, நடிக்க வாய்ப்பு கேட்கும்போதெல்லாம் படுக்கைக்கு அழைத்ததாலேயே தான் சினிமாவை விட்டு விலகியதாக கூறியுள்ளார். #MeToo #RichaBhadra
    சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் பெண்களை நடிகர்களும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு அழைப்பதாக பரவலாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. 

    இந்தி திரையுலகில் பிரபலமாக இருக்கும் பலர் இந்த புகாரில் சிக்கி உள்ளனர். நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார்.

    தமிழ், தெலுங்கு பட உலகிலும் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை ரிச்சா பத்ராவும் பாலியல் தொல்லையில் சிக்கியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார். இவர் 2002-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.



    அதிக படங்களில் நடித்துக்கொண்டு இருந்தபோதே திடீரென சினிமாவை விட்டு விலகினார். அதன்பிறகு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். சினிமா வாழ்க்கை குறித்து ரிச்சா கூறியதாவது:-

    “என் சினிமா வாழ்க்கை மோசமாக இருந்தது. நடிக்க வாய்ப்பு கேட்கும்போதெல்லாம் படுக்கைக்கு அழைத்தனர். இதனால்தான் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேன். திருமணம் செய்துகொண்ட பிறகு நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. எனவே மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடினேன்.

    அப்போதும் என்னை படுக்கைக்கு வரும்படி கட்டாயப்படுத்தினர். இதனால் சினிமா துறையே வேண்டாம் என்று முடிவு கட்டி இப்போது முழுமையாக ஒதுங்கி விட்டேன்.”

    இவ்வாறு ரிச்சா கூறியுள்ளார். #MeToo #RichaBhadra

    பற பட விழாவில் தன்னைப் பற்றி பேசிய தயாரிப்பாளர் ராஜனுக்கு, பாடகி சின்மயி பயப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். #MeToo
    நடிகைகள், பெண் இயக்குனர்கள், பாடகிகளின் பாலியல் புகார்களால் பட உலகை உலுக்கி வந்த மீ டூ இயக்கம் சமீபகாலமாக ஒய்ந்து இருந்தது. இந்த நிலையில் சென்னையில் நடந்த ‘பற’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ‘மீ டூ’ குறித்து பேசியவர்களின் கருத்துக்கள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

    சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் பேசும்போது, பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயிக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் பேசும்போது, “சமீபகாலமாக சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களின் பெயரை கெடுக்கும் செயல் நடக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு நடந்ததை இப்போது சொல்வதன் நோக்கம் என்ன? விளம்பரத்துக்காக பெருமைக்குரியவர்களை அசிங்கப்படுத்தி பெயரை சிதைக்கலாமா?. அப்படி சிதைத்தால் உங்களையும் சிதைப்பார்கள்.” என்று பேசினார்.

    இதற்கு பதில் அளித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசும்போது, “சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஸ்ரீரெட்டி உள்பட குற்றச்சாட்டு சொன்னவர்களின் புகார் குறித்து விசாரித்தால்தானே உண்மை தெரியவரும். புகார் சொன்ன பெண்ணை குற்றவாளியாக பார்க்க கூடாது” என்றார்.



    கே.ராஜன் பேசிய வீடியோவை பாடகி சின்மயி தனது டுவிட்டரில் பகிர்ந்து, “சிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே. பயப்பட வேண்டுமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
    மீடூ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீது புகார் அளித்து எந்த பயனும் இல்லாததால், மத்திய மந்திரி மேனகா காந்தியிடம் சின்மயி புகார் அளித்துள்ளார். #MeToo #Chinmayi #ManekaGandhi
    பெண்கள் தங்கள் துறைகளில் இருக்கும் ஆண்கள் மூலம் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்த தொடங்கப்பட்டது மீடூ இயக்கம். சர்வதேச அளவில் பிரபலமான இந்த இயக்கம் மூலம் தமிழ் சினிமாவின் பிரபல பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறினார்.

    சின்மயி புகாரின் மீது எந்த நடவடிக்கையும் இல்லாததால் இந்த விவகாரம் குறித்து அவர் மத்திய மந்திரி மேனகா காந்தியிடம் புகார் அளித்துள்ளார். மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை மந்திரியான மேனகா காந்தியை குறிப்பிட்டு சின்மயி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவில், “வைரமுத்து மீது நான் புகார் அளித்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. அதன் பிறகு தமிழ் சினிமா துறையிலிருந்து (டப்பிங் யூனியன்) நான் விலக்கப்பட்டுள்ளேன். வழக்கு பதிவு செய்வதற்கு இன்றைய சட்டம் எனக்கு அனுமதி அளிப்பது இல்லை. எனக்கு ஒரு தீர்வு அளியுங்கள்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.



    சின்மயி பதிவுக்கு மத்திய மந்திரி மேனகா காந்தி அளித்த பதில் ட்விட்டில், “உங்களது புகாரை தேசிய மகளிர் ஆணையத்திடம் எடுத்துச் சென்றுள்ளேன். உங்களது விவரங்களை செய்தியில் அனுப்பவும்” என்று தெரிவித்துள்ளார்.

    அமைச்சரின் ட்விட்டுக்குப் பதிலளித்த சின்மயி, “என்னைப் போலவே பல பெண்கள் தங்களது பாதுகாப்புக்காகவும், தொழிலுக்காகவும் பயப்படுகின்றனர். வைரமுத்து மட்டும் அல்லாமல் சினிமா துறையில் பல ஆண்களால் பெண்கள் அஞ்சுகின்றனர். எங்கள் அனைவருக்குமே தீர்வு வேண்டும். உங்களது பதில் ட்விட்டைப் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். #MeToo
    தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களில் அதிகமான பாடல்கள் பாடிய கார்த்திக், முதல் முறையாக மீடூ புகாருக்கு விளக்கம் அளித்துள்ளார். #MeToo #SingerKarthik
    தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களில் அதிகமான பாடல்கள் பாடி உள்ள பிரபல பாடகர் கார்த்திக் மீது ‘மீ டூ’வில் சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் கூறப்பட்டது. வெளிநாட்டு தமிழ் பாடகி இந்த புகாரை கூறியிருந்தார். இதனை பாடகி சின்மயி வெளியிட்டார். இதற்கு தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் கார்த்திக் விளக்கம் அளித்து கூறியிருப்பதாவது:-

    “புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலில் உயிர் துறந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். என்மீது கூறப்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். என்னை சுற்றி எப்போதும் மகிழ்ச்சி பரவ வேண்டும் என்று விரும்புபவன் நான்.

    சமீபகாலமாக என் மீது வதந்திகள் வருகின்றன. நான் இதுவரை யாரையும் புண்படுத்தியது இல்லை. யாருக்கும் தொல்லையோ, அசவுகரியமோ கொடுத்ததும் இல்லை. கடந்த காலங்களில் எனது செயலால் யாராவது சங்கடப்பட்டு இருந்தால் அந்த தவறுக்கான விளைவுகளை சந்திக்க தயாராக இருக்கிறேன்.



    ‘மீ டூ’ இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். எனக்கு எதிரான புகாரில் உண்மை இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கவும் சட்ட நடவடிக்கைக்கு உட்படவும் தயாராக இருக்கிறேன்.”

    இவ்வாறு பாடகர் கார்த்திக் கூறியுள்ளார்.
    மீடு இயக்கத்தில் தன் பெயர் வராதது அதிர்ஷ்டம் தான் என இந்தி நடிகரும் லோக்சபா எம்.பியுமான சத்ருகன் சின்கா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. #ShatrughanSinha #MeToo
    மும்பை:

    பிரபலங்கள் மீது பெண்கள் பாலியல் புகார் கூறும் மீடூ இயக்கம் கடந்த சில மாதங்களாக நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா இந்த இயக்கத்தின் மூலம் பாலியல் புகார் கூறினார். அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தன.

    இந்நிலையில் மீடூ இயக்கம் பற்றி இந்தி நடிகரும் லோக்சபா எம்.பியுமான சத்ருகன் சின்கா கூறியது சர்ச்சையாகி இருக்கிறது. அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது:-

    ‘இது மீடூ காலம். ஒரு வெற்றிகரமான ஆணின் தோல்விக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்பதை வெட்கப்படாமல் சொல்லலாம். இந்த இயக்கத்தால் வெற்றிகரமான ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு பின்னால் பெரும்பாலும் பெண்கள் உள்ளனர். நான் எவ்வளவோ செய்து இருக்கிறேன். ஆனால் செய்ததை எல்லாம் தாண்டி என் பெயர் மீடூ இயக்கத்தில் வெளியே வரவில்லை. அதனால் என்னை அதிர்ஷ்டசாலி என்றே கூற வேண்டும்.



    நான் என் மனைவி சொல்வதை கேட்கிறேன். எந்த புகாரும் இல்லை என்றாலும் என் மனைவியை பல நேரம் உடன் அழைத்துச் செல்கிறேன். மற்றவர்களிடம் நான் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று காட்ட முடியும் என்பதுதான் அதன் காரணம். என் மனைவி பூனம் ஒரு பெண் கடவுள். அவர் தான் எனக்கு எல்லாமே. யாராவது என்னைப் பற்றி எதையாவது தெரிவிக்க விரும்பினாலும் தயவு செய்து சொல்லிவிடாதீர்கள்.’

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

    இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை உருவாகியுள்ளது. சத்ருகன் சின்கா மகள் சோனாக்‌ஷி சின்கா இந்தி சினிமாவில் கதாநாயகியாக இருப்பவர்.

    சத்ருகன் சின்கா ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். சோனாக்‌ஷி ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து இருந்தார். #ShatrughanSinha #MeToo
    மத்திய முன்னாள் மந்திரி எம்.ஜே. அக்பருக்கு எதிராக பாலியல் புகார் தெரிவித்த பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு டெல்லி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. #metoo #MJAkbar #MJAkbardefamationsuit #journalistPriyaRamani
    புதுடெல்லி:

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீடூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீடூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்தனர்.
     
    அவ்வகையில், மீடூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளானார். பிரபல பத்திரிகையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி  பொறுப்பில் இருந்த எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இதனால் தனது மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது.

    இதைதொடர்ந்து, அக்பரின் சட்ட ஆலோசனை நிறுவனமான கரன்ஜாவாலா குழுமத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர்களில் ஒருவரான பிரியா ரமணி மீது டெல்லி கூடுதல் அமர்வு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தனர்.


    இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது எம்.ஜே.அக்பர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். மாஜிஸ்திரேட் சமர் விஷாலிடம் தனது வாக்குமூலத்தை அவர் பதிவு செய்தார். தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பிரியா ரமணி சமூக வலைத்தளங்களின் மூலம் அவதூறான குற்றச்சாட்டுகளை பரவ விட்டதாக அவர் தெரிவித்தார்.

    எம்.ஜே.அக்பரின் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்ட மாஜிஸ்திரேட் இவ்வழக்கின் மறுவிசாரணையை ஒத்திவைத்தார்.

    இந்நிலையில், இவ்வழக்கில் பிப்ரவரி மாதம் 25-ம் தேதி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு எம்.ஜே. அக்பருக்கு எதிராக பாலியல் புகார் தெரிவித்த பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு டெல்லி கோர்ட் இன்று சம்மன் அனுப்பியுள்ளது. #metoo #MJAkbar #MJAkbardefamationsuit #journalistPriyaRamani 
    முன்னா பாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ், சஞ்சு போன்ற இந்தி படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி மீது பெண் உதவி இயக்குனர் பாலியல் புகார் அளித்துள்ளார். #RajkumarHirani #MeToo
    முன்னா பாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ், சஞ்சு போன்ற இந்தி படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி. சஞ்சய்தத் நடிப்பில் இவர் இயக்கிய முன்னா பாய் எம்.பி.பி.எஸ். படம் தமிழில் கமல் நடிப்பில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அமீர்கான் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் படம் தமிழில் ‌ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் திரைப்படம்.

    ராஜ்குமார் ஹிரானி மீது சஞ்சு படத்தில் அவரது உதவி இயக்குனராக பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரை 6 மாதம், ராஜ்குமார் ஹிரானியால் செக்ஸ் தொல்லைக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக சஞ்சு படத்தின் இணை தயாரிப்பாளர் வினோத் சோப்ரா, அவரது மனைவி அனுபமா சோப்ரா, படத்தின் திரைக்கதை ஆசிரியர் அபிஜத் ஜோஷி ஆகியோருக்கு இ-மெயில் அனுப்பி உள்ளார். அந்த பெண் இயக்குனர் அனுப்பியுள்ள மெயிலில் ‘2018 -ம் ஆண்டு ஏப்ரல் 9-ந் தேதி ஹிரானி தனது வீடு மற்றும் அலுவலகத்தில் செக்ஸ் ரீதியாக என்னை துன்புறுத்தினார்.

    இந்த குற்றச்சாட்டுக்கு ராஜ்குமார் ஹிரானி பதிலளிக்க மறுத்ததோடு தனது வழக்கறிஞர் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தரப்பு வக்கீல் தேசாய், ’இயக்குனர் மீதான பாலியல் குற்றச்சாட்டு முற்றிலும் பொய், வேண்டும் என்றே அவதூறு பரப்புகிறார்கள்’ என விளக்கம் அளித்துள்ளார்.



    இந்த இ-மெயில் தொடர்பாக சஞ்சு படத்தின் இணை தயாரிப்பாளர் வினோத் சோப்ரா எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், அவரது மனைவி அனுபமா சோப்ரா அந்த பெண் இ-மெயில் அனுப்பி இருப்பதை உறுதி செய்துள்ளார். இந்த பிரச்சினையை எப்படி எடுத்துச்செல்வது என்பது குறித்து யோசிக்க கால அவகாசம் வேண்டும் என்று அவள் என்னிடம் கூறினாள். அவள் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் அவளுக்கு ஆதரவாக இருப்போம்” என்றார்.

    சஞ்சு படத்தின் திரைக்கதை ஆசிரியர் அபிஜத் ஜோஷி கூறும்போது ’அந்த பெண்ணின் பிரச்சினையை காதுகொடுத்து கேட்பது என் கடமை. அவளுக்கு துணை நிற்பேன். மேலும், அறம் தவறமாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

    இந்த சர்ச்சையின் எதிரொலியாக ஹிரானியின் இணை தயாரிப்பில் பிப்ரவரி 1-ந் தேதி வெளிவர இருக்கும் ‘ஏக் லட்கிகோ தேகாதோ யேசா லகா’ படத்தின் போஸ்டரிலிருந்து ஹிரானியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 
    பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி, மீடூவை பற்றி விமர்சித்து பேட்டியளித்ததற்கு அங்கு அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. #RaniMukherjee #MeToo
    இந்தி பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ராணி முகர்ஜி. தமிழில் கமல்ஹாசனுடன் ‘ஹேராம்’ படத்தில் நடித்துள்ளார். விழாவொன்றில் அவர் பேசும்போது, “ஹேராம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. முழு மேக்கப்புடன் சென்ற என்னை, முகத்தை கழுவி விட்டு வரச்சொல்லி நடிக்க வைத்து என்னாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார் கமல்ஹாசன்” என்றார்.

    நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகாருக்கு பிறகு இந்தி பட உலகில் ‘மீ டூ’ இயக்கம் விவாதமாக மாறி இருக்கிறது. டெலிவிஷன்களிலும் மீ டூ கலந்துரையாடல்கள் நடத்துகிறார்கள். டி.வி. நிகழ்ச்சியொன்றில் நடிகைகள் தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா, அலியாபட் ஆகியோர் மீ டூவுக்கு ஆதரவாக கருத்து சொல்லி பாலியல் தொல்லை கொடுப்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றனர்.



    ஆனால் ராணிமுகர்ஜி அந்த கருத்தை எதிர்த்தார். அவர் பேசும்போது, “ஆண்கள் மாற மாட்டார்கள். பெண்கள்தான் மாற வேண்டும். பெண்களே தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் தற்காப்பு கலைகள் கற்றுக்கொள்வது அவசியம்” என்றார். ராணிமுகர்ஜியின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. அவரை கண்டித்து பேசி வருகிறார்கள். பாலியல் தொல்லை கொடுப்பவனுக்கும் தற்காப்பு கலை தெரிந்து இருந்தால் என்ன செய்வது என்று சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கின்றனர்.
    பாடகி சின்மயின் கணவரும், நடிகருமான ராகுலை, நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவு செய்திருக்கிறார். #Samantha #Chinmayi
    பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மீடூ இயக்கத்தை குறை கூறி இருந்தார். அதில் “நான் ஒரு பெண்ணியவாதி. ஆனால் மீ டூவை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது குப்பை” எனப் பேசியிருந்தார்.

    இது குறித்து சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்தர், தனது சமூகவலைதள பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றை பதிவிட்டார். அதில் தனது மனைவியின் துணிச்சலைப் பாராட்டியதோடு பாலியல் சீண்டல்கள் குறித்து தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் எனக் கூறி இருந்தார்.



    இந்நிலையில் இது குறித்து நடிகை சமந்தா ராகுலின் டுவிட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில், “நிறைய பெண்களைவிட உங்களுக்குச் சிறப்பான புரிதல் இருக்கிறது. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
    மீடூ இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கொடுத்த ஸ்ருதி ஹரிஹரன், என்னுடன் இணைந்து பணியாற்ற தயங்குகிறார்கள் என்று கூறியிருக்கிறார். #SruthiHariharan #MeToo
    நிபுணன் படத்தில் நடித்த போது படப்பிடிப்பு தளத்தில் தவறாக நடந்து கொண்டார் என அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் குற்றம் சாட்டினார். இதற்கு அர்ஜுன் மறுப்பு தெரிவித்ததோடு அவர் மீது வழக்கு தொடர்ந்தார். இதனால் ஸ்ருதி ஹரிஹரனுக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்துள்ளன.

    இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “இது என்னைக் காயப்படுத்தினாலும் பெருமை கொள்ளவும் செய்கிறது. நான் துன்பப்பட்டாலும் எதிர்காலத்தில் சில பெண்களாவது பயப்படாமல் துணிந்து பேசுவார்கள். இதை நடைமுறையில் எப்படி எதிர்கொள்வது என்பதைப் பார்க்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு வரை வாரத்திற்கு மூன்று பட வாய்ப்புகளாவது எனக்கு வரும்.

    நான் வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பேன். வழக்கமாக நமது படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றால் தான் அடுத்த வாய்ப்புகள் வரும். செப்டம்பர் மாதம் எனது பெரிய படம் ஒன்று வெளியானது. ஆனால் அதன் பின் வாய்ப்புகள் வருவது நின்றுவிட்டது. படவாய்ப்புகள் மிகவும் குறைந்துவிட்டன. என்னுடன் இணைந்து பணியாற்ற தயங்குகிறார்கள்.



    ஆனால் இயக்குனர்கள் நம்பிக்கையளிக்கும் விதமாக எனக்காக எழுதுகிறார்கள். இதன் மூலம் எனக்கு சில எதிரிகள் உருவாவார்கள் என்பது தெரியும். அதனால் இதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து போராடுவேன்’ என்றார்.
    ×