search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீடூ"

    மீடூவில் செக்ஸ் புகார் கூறியதால் என்னை பாலியல் தொழிலாளி என்று குற்றம் சாட்டுகிறார்கள் என்று பாடகி சின்மயி கூறியிருக்கிறார். #MeToo #Chinmayi
    பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது மீடூ இயக்கத்தின் மூலம் பாலியல் புகார் கூறினார். இது கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் பரபரப்பான செய்தியானது. இதன் பின்னர் ராதாரவியுடன் மோதல் தொடங்கியது.

    ராதாரவிக்கு டத்தோ பட்டம் கொடுக்கப்பட்டது என்பதே பொய் என்று டுவிட்டரில் கடித ஆதாரத்துடன் கூறிய சின்மயி, மீண்டும் அது தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

    நேற்று முகநூலில் நேரடி வீடியோவில் பேசிய அவர், மீடூ பற்றி பல்வேறு வி‌ஷயங்களை முன் வைத்தார். அதனைத் தொடர்ந்து தன்னை டப்பிங் யூனியனில் இருந்து நீக்க ராதாரவி சதி செய்திருப்பதாகக் கூறினார். தொடர்ந்து அவர் பேசும்போது:-

    “நான் 2016ல் இருந்தே டப்பிங் யூனியன் உறுப்பினர் இல்லை என்று சொல்லும் ராதாரவி, கடந்த 2 ஆண்டுகளில் 4 படங்களில் டப்பிங் பேச ஏன் ஒப்புக் கொண்டார்? டப்பிங் யூனியன் உறுப்பினர்களிடம் வசூலிக்கப்படும் பணத்தில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு, எதற்காக டத்தோ ராதாரவி வளாகம் எனப் பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்?

    மீடூ புகார் எல்லாம் சொன்னால் இனி நீங்கள் நடிக்கவே வராதீர்கள். ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பார்கள் என ஏன் எச்சரிக்கிறார்?

    ராதாரவி டத்தோ பட்டத்தை பயன்படுத்திக் கொள்வதில் தனிப்பட்ட முறையில் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால், அதை அவருடைய லெட்டர் பேட், டப்பிங் வளாகக் கட்டிடம் என எல்லா வற்றிலும் பயன்படுத்திய தாலேயே நான் அதைப் பற்றி ஆராய்ந்தேன். அப்போது தான் மெலாகா அரசு டத்தோ பட்டம் தரவே இல்லை என்பது தெரிய வந்தது.

    பின்னர் இப்போது அதை சுல்தான் ஒருவர் வழங்கினார் என்றார். அது எந்த சுல்தான் அல்லது எந்த தொழிலதிபர் என்று சொல்லலாம் அல்லவா? ராதாரவி அவருக்கு அவரே பாரத ரத்னா, பத்மஸ்ரீ என என்ன விருது வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளட்டும். எனக்கு அதைப் பற்றி சிறிதும் கவலை இல்லை.

    ஆனால், டப்பிங் யூனியனில் விசாகா குழு இருக்கிறது என்று அவர் கூறினால், பணியிடம் என்று எதைக் குறிப்பிடுவார் என்று கேள்வி கேளுங்கள். மீடூ பிரச்சினை வந்தது முதல் ஆண்களிடம் கேள்வி கேட்பதற்கும், பெண்களிடம் கேள்வி கேட்பதற்கும் இடையே அவ்வளவு வித்தியாசம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

    பாலியல் வன்கொடுமைகளை மறைக்காதீர்கள். இதை மூடி மறைக்கக்கூடாது. வெட்கப்பட வேண்டியது பெண்களும் குழந்தைகளும் கிடையாது என்பதே மீடூவின் அடிநாதம். பெண்களுக்கு மட்டும் இது நிகழ்வதில்லை. ஆண் குழந்தைகளுக்கும் நிகழ்கிறது. என்னிடம் நிறைய ஆண்கள் தங்களுக்கு நேர்ந்த அவலத்தை சொல்லியிருக்கின்றனர். இது நம்மை நாமே கேள்விக்கு உள்ளாக்க வேண்டிய தருணம்.

    ஆனால், இன்றும்கூட பாதிக்கப்பட்டவர்களை விடுத்து பாதிப்புக்கு உள்ளாக்கியவர்களை பலப்படுத்தவே இந்த சமூகம் முற்படுகிறது. பெண்கள் சொல்லும் புகார் மீதான சமூகத்தின் அமைதி பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் பலமாக்கும். மீடூவில் நான் புகார் சொன்ன பிறகு. நிறைய பெண்கள் என்னை இந்த சமூக வலைதளங்கள் எப்படிப் பார்க்கிறது என்று உற்று நோக்கினார்கள்.

    என்னை அவ்வளவு வசைபாடுகிறார்கள். தமிழில் இருக்கும் எல்லா கெட்ட வார்த்தைகளை சொல்லித்தந்த தமிழ் ஆண்மகன்களுக்கும் நன்றி. நீ யோக்கியமா? நீ ஒழுக்கமா? நீ உத்தமியா என்று கேட்பார்கள். அப்புறம் என்னை பாலியல் தொழிலாளி என்பார்கள். ஒரு வி‌ஷயம் சொல்கிறேன். நீங்கள் என்னை பாலியல் தொழிலாளி எனக் கூறுவதால் நான் வெட்கித் தலை குனிய மாட்டேன்.

    இந்த உலகிலேயே ஆண்களுக்காக மட்டுமே வாழும் தொழில் பாலியல் தொழில். ஆண்களின் பல்வேறு பாலியல் தேவைக்காகவே இந்தத் தொழில் இருக்கிறது. ஒருவேளை அந்த தொழிலாளிகள் எல்லாம் திருந்திவந்தால் நீங்கள் சமூகத்தில் அவர்களுக்கு இடமா கொடுக்கப் போகிறீர்கள்? இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

    உங்கள் வீட்டு பெண்கள் பாலியல் புகார் சொன்னால், வேலைக்கு போகாதே படிக்கப் போகாதே என்று வீட்டுக்குள் பூட்டி வைக்காதீர்கள். தப்பு செய்தவர்களை திருத்துங்கள். பாதிக்கப்பட்டவரை கேவலப்படுத்தாதீர்கள், அசிங்கப்படுத்தாதீர்கள். பாலியல் வன்கொடுமைகள் ஏன் நடக்கிறது. எதற்கு நடக்கிறது என்று பேசுங்கள். குடும்பம், கல்வி நிறுவனம், பணியிடம் என எல்லா இடத்திலும் பேசுங்கள். ஆண்களும் நம்மை புரிந்து கொள்வார்கள். எதுவாக இருந்தாலும் பேசி முடிவு செய்யலாம். சமூகம் அதற்கான மாற்றம் கண்டு வருகிறது.

    திருமணத்துக்குப் பின் கணவன் மனைவியின் விருப்பம் இல்லாமல் உறவு கொண்டால் அது மேரிட்டல் ரேப் என்று பேசும் அளவுக்கு இப்போதெல்லாம் சமூக மாற்றம் வந்திருக்கிறது. இன்னும் மாற்றம் வர வேண்டுமானால் அதற்கு விவாதமும் ஆலோசனையும் செய்யப்பட வேண்டும். எனவே வெளிப்படையாக பேசுங்கள். இதில் நீங்கள் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. இன்று சமூகம் சில விமர்சனங்களை முன்வைத்தாலும்கூட விரைவில் மாற்றம் வரும்’

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
    உலகளவில் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியசெய்தி.
    உலகத்தில் எல்லா சமூகத்திலும், சாதி, மதம் என்கிற வித்தியாசமின்றி ஒட்டு மொத்தமாக ஒடுக்கப்படுகிற ஒரு இனம் உண்டு என்றால் அது பெண்ணினமேஆகும். தாமஸ்ராய்ட்டர்ஸ் ஆய்வின் முடிவின்படி உலகளவில் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியசெய்தி.

    கருவிலேயே பெண் சிசுவாக இருந்தால் கருச்சிதைவிலிருந்து, பிறந்தவுடன் பெண்குழந்தையாக இருந்தால் கள்ளிப்பால் என்று வன்முறை தொடங்கி விடுகிறது. சாஸ்திர சம்பிரதாயங்கள் என்கிற பெயரில் பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், விதவை, பொட்டுக்கட்டுதல் என்று காலங்காலமாக பெண்கள் வஞ்சிக்கப்பட்டனர்.

    பெரும்பாலும் இத்தகையவன்முறைகள்,90 சதவீதம் நெருங்கிய உறவினர்களாலோ, நண்பர்களாலோ, அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களாலோ, பணியிடத்திலோ, பள்ளிக்கூடங்களிலோ உள்ளவர்களால் நடத்தப்படுகிறது.

    இதில் வேதனையான விஷயம், பெரும்பாலான குற்றங்கள் வெளியே தெரிவதில்லை. அப்படியே வந்தாலும் செய்தித்தாள்களில் எங்கோ ஒருமூலையில் ஒதுங்கி விடுகிறது. உதாரணத்திற்கு சமீபத்தில் சேலம் ஆத்தூரை சேர்ந்த ராஜலட்சுமி என்கிற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டு, தலை வெட்டப்பட்டுக் கொலை செய்யபட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்க வேண்டும். அப்படியே நாட்டையே உலுக்கினாலும், ஒரே வாரத்தில் மறக்கடிக்கப்படுகிறது. உதாரணமாக, காஷ்மீரில் எட்டு வயது பெண்குழந்தை ஆசிபா பலநாட்கள் கோவிலுக்குள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதில் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தான் வேதனை. இவைகள் எல்லாம் தடுக்கப்பட என்னதான் வழி?

    குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும். இந்திய அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம், 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியில் வல்லுறவு கொள்பவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படும் என்று சட்டம் இயற்றியுள்ளது. வரவேற்கப்படவேண்டிய ஒன்றானாலும், குற்றங்கள் விசாரணை செய்து நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறுவதற்கும் பலஆண்டுகள் ஆகி விடுகிறது.

    தண்டனைகள் மட்டும் குற்றங்களை முழுவதும் குறைத்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்களது ஆண்குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களிடத்தே, பெண்களும் இவ்வுலகத்தில் வாழ்வதற்கு சமஉரிமை உடையவர்கள்; ஆண்களுக்கு அடிமையாக, ஏவல் செய்பவர்களாக உருவாக்கப்பட்டவர்கள் அல்ல என்கிற உண்மையை உரத்துச் சொல்ல வேண்டும்.



    சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை. தைரியம், பலம், அறிவு, இவைகளை எல்லாம் ஆணுக்கு மட்டுமே உரியகுணங்களாக சித்தரிக்கப்படுகிறது, அத்தகைய சூழலில் வளரும் பெண் குழந்தைகள் தங்களுக்கு புத்திசாலித்தனமும் சாமர்த்தியமும் குறைவு, மற்றும் பலவீனமானவர் என்று கருதத் தொடங்கி விடுகின்றனர். உதாரணமாக, ஏதாவது பொருளினைத் கைத்தவறி நழுவவிட்டால், ஆண்குழந்தை அதைபற்றிக் கவலைக்கொள்ளாது.

    வீட்டிலும் திட்டிவிட்டு விட்டு விடுவார்கள். அதே நேரத்தில் பெண் குழந்தைக்கு திட்டு மட்டுமல்ல, உனக்கு ஏன் இந்த கடினமான வேலை என்று கூறப்படும் போது பெண் குழந்தை தன்னால் கடினமானவற்றை செய்ய முடியாது என்று நம்பத் தொடங்குகிறது. இப்படியாக வளரும் அப்பருவத்திலேயே அதன் மனதில் நீ பலவீனமானவள் என்கிற ஆழமான விதை ஊன்றப்படுகிறது. நன்கு பயிற்சிப் பெற்ற தடகள வீராங்கனையுடனோ, குத்துச்சண்டை பயின்ற பெண்ணிடமோ அவ்வாறு பயிற்சிப் பெறாத ஆண்கள் மோதி வெற்றிப் பெறமுடியாது. ஆகவே ஆணோ, பெண்ணோ, நான் யாருக்கும் சளைத்தவரல்ல, என்கிற எண்ணமும், பயிற்சியும் பெற்றால் எதையும் செய்ய முடியும் என்பது தான் உண்மை.

    ஊடகங்கள் மற்றும் தொலைக் காட்சி தொடர்கள் பெண்களுக்கு எதிரானதாகவும் வன்முறையை தூண்டுபவையாகவும் உள்ளன. திரைப்படங்கள் போன்று தணிக்கைக்குழு இல்லையென்றாலும் சுயக்கட்டுப்பாடுகளோடு நம் வீட்டு பெண்களும் குழந்தைகளும் பார்ப்பதாக இருந்தால் எத்தகைய பொறுப்புணர்வோடு நடந்து கொள்வோமோ அந்த வகையில் நடந்து கொள்ள வேண்டும். அதேப்போன்று ஊடகங்கள் பெண்களுக்கு எதிரான கருத்துகளையும் கேலி செய்யும் செய்திகளையும் வெளியிடக்கூடாது.

    பெண்களையும் சகமனிதர்களாக பார்க்காமல் அவர்கள் தங்ககள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கருவியாக பார்க்கும் மனோபாவமே அடிப்படை முறையான பாலினகல்வி கொடுக்காமையும், இத்தகைய தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கின்றன.

    மீடூ (நானும்கூட) இயக்கங்கள் தற்போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வடிக்கால்களாக அமைந்துள்ளன. மேலைநாடுகளில் மட்டுமின்றி நமது நாட்டில் கூட, பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகவலைத்தளங்களில் தங்களுக்கு கொடுமை இழைத்தோரை குறித்த உண்மையை வெளியிடுவதன் மூலமாக, தவறு செய்தவர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. இது போன்று தவறு செய்தவர்களை வெளிப்படுத்தும் போது எதிர்காலத்தில் தவறு செய்ய முயற்சி செய்பவர்களை தடுக்க ஏதுவாகும். பெண்களுக்கு எதிராக தொடரும் இழிச்செயல்கள் முடிவுக்கு கொண்டு வர இந்நாளில் உறுதி ஏற்போம்.

    வழக்கறிஞர் நல்லினி

    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால், மீடூ இயக்கம் உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ளார். #Mohanlal #Metoo
    தமிழ் திரையுலகில் பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது மீ டூ புகார் கூறியதை அடுத்துப் பரபரப்பானது. அதே போல் கேரள திரையுலகிலும் நடிகை ஒருவர் கடத்தப்பட்ட விவகாரத்திலிருந்து அங்கிருக்கும் நடிகைகள் திரையுலகில் பெண்களுக்கு நிகழும் பாலியல் கொடுமைகள் பற்றி பேசி வருகின்றனர்.

    இந்நிலையில், மீ டூ விவகாரம் குறித்து கருத்துக் கூறியுள்ளார் நடிகர் மோகன்லால். சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பாதிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்ட மலையாள திரையுலகம் வரும் டிசம்பர் 7ஆம் தேதி துபாயில் கலை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிகழ்விற்கான ஏற்பாடு வேலைகளுக்காக துபாய் சென்றுள்ள நடிகர் மோகன்லால் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மீ டூ விவகாரம் பற்றி பேசும் போது, “மலையாள சினிமா உலகில் இதுபோன்ற பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீ டூவை ஒரு இயக்கமாக நீங்கள் நினைக்கக் கூடாது. அது உள்நோக்கம் கொண்டது. அது ஒரு டிரெண்ட். பாலியல் குற்றம் சொல்வது ஒரு பே‌ஷனாக மாறிவிட்டது. எந்த ஒரு சிக்கலுக்கும் ஒரு ஆயுட்காலம் உண்டு. பாலியல் சச்சரவுகள் திரைப்படங்களில் மட்டுமல்ல... வாழ்வில் எல்லா இடங்களிலும் நடக்கலாம்” என்று கூறியுள்ளார்.
    ரெட்கார்டு போடுவேன் என்று டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி மிரட்டியதாக பாடகி சின்மயி புகார் கூறியுள்ளார். #Chinmayi #RadhaRavi
    கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயி டப்பிங் கலைஞராகவும் பணிபுரிந்து வந்தார். பாலியல் புகார் கூறியதால் அவர் டப்பிங் யூனியனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இது தொடர்பாக இன்று சின்மயி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நான் மீ டூ தொடர்பாக குரல் கொடுக்கத் துவங்கியதால் தான் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். யார் எதிராக பேசினாலும் உடனே டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி அவர்களை நீக்கிவிடுவார். இது பல முறை நடந்துள்ளது. நான் 2006-ம் ஆண்டில் இருந்து டப்பிங் பேசி வருகிறேன்.

    தேர்தல் பற்றி எனக்கு தெரிவித்ததே இல்லை. ஒரு கண்டன பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் முன்பணம் வாங்கிய இசை நிகழ்ச்சி ஒன்றை ரத்து செய்து முன்பணத்தை திருப்பி தர வைத்தார் ராதாரவி.

    பேரணியில் கலந்து கொள்ளாவிட்டால் ரெட்கார்டு கொடுப்பேன் என்று மிரட்டினார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகினர் போராட்டம் நடத்தியபோது வருகைப்பதிவேடு வைத்திருந்தனர்.

    அவர் அழைக்கும் போராட்டங்களுக்கு வராதவர்களுக்கு வேலை கிடையாது. இல்லை என்றால் அபிபுல்லா சாலையில் இருந்த டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு வரவழைத்து கண்டபடி திட்டுவார். ஆண், பெண் என்று வித்தியாசம் இல்லாமல் கேவலமாக திட்டுவார்.

    நான் ஒரு முறை அப்படி திட்டு வாங்கியபோது என் அம்மாவும் உடன் இருந்தார். சுசித்ராவும் திட்டு வாங்கியுள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதால் நானும், சுசித்ராவும் திட்டு வாங்கினோம். ஆனால் கூட்டம் நடப்பது குறித்து யாருமே எங்களிடம் தெரிவிக்கவில்லை.

    ஒட்டப்பாலத்தில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்தார் ராதாரவி. நான் ராதாரவிக்கு போன் செய்து நிகழ்ச்சியை ஒப்புக் கொண்டது பற்றி தெரிவித்தது எனக்கு நினைவில் உள்ளது.

    அதற்கு அவரோ, எனக்கும் ஷூட்டிங் இருக்கு. நான் கேன்சல் பண்ணிட்டு வரல? நீ வரவில்லை என்றால் ரெட்கார்டு கொடுப்போம் என்றார். டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டால் அவர்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள். அதற்கு உதாரணம் பூமாராவ் என்ற பெண்’

    இவ்வாறு சின்மயி தெரிவித்துள்ளார்.
    தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சுவர் ஏறி குதித்து ஓடினார் என்று ஒரு பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார். #Vishal
    தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இரண்டிலும் தலைமை பொறுப்பில் இருப்பவர் விஷால். ‘மீடூ’ என்ற இயக்கம் மூலம் சமூக வலைத்தளங்களில் சின்மயி உள்ளிட்ட பல பெண்கள் திரைப் பிரபலங்கள் மீது ‘மீடூ’ வில் பாலியல் புகார்களை கூறியிருந்தனர்.

    வைரமுத்து, முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுசி கணேசன் உட்பட பல்வேறு துறையை சேர்ந்த பல பிரபலங்கள் பாலியல் புகாரில் சிக்கினர். இதைத் தொடர்ந்து நடிகைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் குழு ஒன்று அமைக்கப்படும் என விஷால் அறிவித்தார்.

    இந்நிலையில், விஸ்வதர்ஷினி என்கிற பெண் தனது முகநூலில் நேரலையாக வீடியோவில் பேசும் போது நடிகர் விஷால் குறித்து பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.

    கோபாலபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு அதிகாலை 2 மணிக்கு வந்த விஷால், 2 மணி நேரம் கழித்து, அதாவது 4 மணியளவில் பின் வாசல் வழியாக சுவர் ஏறி குதித்து ஓடியது ஏன்? எதற்காக அங்கே வந்தார்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சி.சி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது விஷால் எப்படியெல்லாம் ஆட்டம் போட்டார் என தன்னிடம் ஆதாரம் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    பாலியல் தொல்லைகளை தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்க கூடாது என்று நடிகை இலியானா கூறியுள்ளார். #MeToo #Ileana
    தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்துள்ள இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சினிமாவில் பாலியல் தொல்லைகள் குறித்து அவர் கூறியதாவது:-

    ‘மீ டூ’வில் நிறைய பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேர்ந்த தொல்லைகளை சொல்கிறார்கள். இது நல்ல மாற்றத்தை கொண்டு வரும். சினிமாவில் மட்டுமல்லாமல் எல்லா துறைகளிலுமே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளன. அவர்களுடைய கசப்பான அனுபவங்களை ‘மீ டூ’வில் பேசுவது வேதனைக்குரிய வி‌ஷயம்.

    பாலியல் தொல்லைகளை தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்க கூடாது. ‘மீ டூ’ போராட்டத்தினால் நிறைய இடங்களில் பெண்கள் பாதுகாப்புக்கு குழுக்கள் அமைத்து இருக்கிறார்கள். ‘மீ டூ’வால் எதிர்காலத்தில் சினிமா துறை சிறு பாலியல் சம்பவம் கூட இல்லாமல் சுத்தமாக மாறும் என்று நம்புகிறேன். 

    எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் பலரும் பேசினார்கள். எனது திருமணம் குடும்பம் உள்ளிட்ட சொந்த வி‌ஷயங்கள் குறித்து பேச நான் விரும்பவில்லை. எனது நண்பர் ஆண்ட்ரூ உறவு வி‌ஷயத்தில் மிகவும் சந்தோ‌ஷமாக இருக்கிறேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். அதற்கு மேல் பேசமுடியாது. 



    நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க மறுக்கிறேன் என்று பேசுகின்றனர். அது தவறு. இரண்டு மொழிகளிலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு இலியானா கூறினார்.
    மீடூ வி‌ஷயத்தில் புகார் கூறும் பெண்களிடம் ஆதாரம் கேட்க கூடாது என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். #RadhikaApte #MeToo
    கபாலி படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்த ராதிகா ஆப்தே இந்தி பட உலகில் முன்னணி நடிகை. மீடூ இயக்கம் பிரபலமாகும் முன்பே வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி பேசியவர். மீடூ இயக்கம் பற்றி அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘நான் மீடூ இயக்கத்தை 100 சதவீதம் ஆதரிக்கிறேன்.

    பாலியல் துன்புறுத்தலை எந்த விதத்திலும் சகிக்க முடியாது. இது இப்போது அத்தியாவசியமான ஒரு இயக்கமாகி விட்டது. பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் வந்து தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பகிரங்கப்படுத்துவதும் அவர்களுக்கு ஆதரவாக சமூகத்தில் குரல்கள் எழுவதும் ஆரோக்கியமான ஒரு வி‌ஷயம்.



    ஆனால் மீடூ வி‌ஷயத்தில் புகார் கூறும் பெண்களிடம் ஆதாரம் கேட்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற வி‌ஷயங்களில் எப்போதும் ஆதாரத்தை சேகரித்து கையில் வைத்துக்கொண்டு குற்றம் சாட்ட முடியாது. நாம் நம் எதிர்ப்பை காட்டாவிட்டால் அதையே அவர்களுக்கான வசதியாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து தவறு செய்வார்கள். ஒருமுறை என்னுடைய பின்புறத்தை ஒருவன் தட்டிவிட்டு சென்றான். 20 நிமிடங்களில் நான் அதை மறந்துவிட்டேன். ஆனால் சுற்றிலும் இருந்தவர்கள் அதை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார்கள்’ என்று கூறியுள்ளார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். #RadhikaApte
    கபாலி படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. அடிக்கடி பாலியல் புகார்களைக் கூறி பரபரப்புகளை ஏற்படுத்துபவர். தமிழ்ப் படத்தில் நடித்தபோது ஒரு நடிகர் தனக்கு பாலியல் புகார் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

    இப்போது யார் என்று பெயரையும், படத்தையும் குறிப்பிடாமல் தென்னிந்திய இயக்குநர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் கூறும் போது, “தென்னிந்திய இயக்குநர் ஒருவர் மும்பையிலுள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். அவரது பெயர் சரியாக நினைவில்லை.

    அந்த இயக்குனர் நடிகர் விக்ரமை வைத்து பீரியட் படம் இயக்க உள்ளதாகவும், நீங்கள் நடித்தால் உங்களுக்கு நல்ல பேர் கிடைக்கும் என்றும் கூறி என்னை ஆடி‌ஷனில் பங்கேற்கும்படி அழைத்தார். இதனால் அவர் தங்கிய ஓட்டலுக்கு சென்றேன். ஒரு அறையில் 12 பேருடன் இயக்குநர் அமர்ந்திருந்தார். என்னிடம் சிறிய கோட் ஒன்று கொடுத்து அணிந்து கொள்ள சொன்னார்.

    பின் ஒரு போட்டோகிராபர் என்னை பல கோணங்களில் போட்டோக்கள் எடுத்தார். கவர்ச்சியாக போஸ் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார். இப்படி அவர் வலியுறுத்தியது எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. பிறகு நடனமாட சொல்லி, சில ஆபாசமான அசைவுகளையும் செய்து காட்டும்படி சொன்னார்.



    அவர் தன் படத்துக்காகத்தான் ஆடி‌ஷன் செய்கிறாரா என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு காலையில் படப்பிடிப்பு இருப்பதாக சொல்லி, அந்த ஓட்டலில் இருந்து தப்பித்து வந்தேன். கடைசியில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை” என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார். விக்ரமை வைத்து கரிகாலன் என்னும் படம் தொடங்க திட்டமிடப்பட்டு கைவிடப்பட்டது. எனவே அந்த இயக்குனரா என்று சினிமாவில் கேள்வி எழுந்துள்ளன.
    ‘மிஸ் இந்தியா’ பட்டத்துக்காக நடிகை தனுஸ்ரீ படுக்கையை பகிர்ந்தார் என்று நடிகை ராக்கிசாவந்த் பரபரப்பு புகார் கூறியிருக்கிறார். #MeToo #Tanushree #RakhiSawant
    பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது முன்னாள் இந்திய அழகியும், நடிகையுமான தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது மீடூ இயக்கம் மூலம் வெளிவந்த முதல் குற்றச்சாட்டு ஆகும்.

    அதன்பிறகு மீடூ இயக்கத்தில் நடிகர்கள், டைரக்டர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த பாலியல் குற்றச்சாட்டின்போது நானாபடேகருக்கு ஆதரவாக நடிகை ராக்கி சாவந்த் செயல்பட்டார்.

    இந்த நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. தனுஸ்ரீ தத்தா பற்றி ராக்கி சாவந்த் அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து ராக்கி சாவந்த் கூறியதாவது:-

    தனுஸ்ரீ தத்தா 10 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் லெஸ்பியன் உறவு கொண்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தனுஸ்ரீ ஆண்கள் மற்றும் பெண்களுடன் உறவு கொள்ளும் குணம் உள்ளவர். பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அனைவரும் தங்களின் மீடூ கதைகளுடன் விரைவில் வெளியே வருவார்கள்.



    நான் அப்படிப்பட்டவள் இல்லை. ஆனால் தனுஸ்ரீ தான் என்னை ஓரினச் சேர்க்கையாளராக மாற்றினார். நான் பெரிய ஆளாக வர மாட்டேன் என்று நினைத்து அவர் என்னை பயன்படுத்திக் கொண்டார். அவர் செய்ததை எல்லாம் நான் வெளியே சொல்ல மாட்டேன் என்று நினைத்து விட்டார். அவர் நினைத்தது தவறு.

    தனுஸ்ரீ தத்தா படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா அழகிப்பட்டத்தை வென்றார். தனுஸ்ரீயால் என் பெயர் கெடுகிறது. எனக்கு இந்தியாவில் நல்ல பெயர் உள்ளது.

    எனக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. இந்தியர்கள் என் மீது மதிப்பு வைத்துள்ளனர். ஆனால் தனுஸ்ரீ என் இமேஜை டேமேஜ் செய்கிறார். அவர் அமெரிக்காவில் இருந்து போலியான மீடூ இயக்கத்தை கொண்டு வந்து என் இமேஜை கெடுக்கிறார். அவருக்கு இந்தியாவை பிடிக்காது. அமெரிக்கா தான் பிடிக்கும்.

    தனுஸ்ரீ தத்தா நன்றாக சாப்பிட்டு குண்டாகி அசிங்கமாக உடலுடன் இருக்கிறார். அவருக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அவரிடம் பணம் இல்லாததால் அனைத்தும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தயாராகி வரும் நித்யாமேனன், மீடூ இயக்கத்தில் சேரமாட்டேன் என்று கூறியிருக்கிறார். #NithyaMenon #MeToo
    பிரியதர்ஷினி, லிங்குசாமி, விஜய், பாரதிராஜா ஆகியோர் இயக்கத்தில் தனித்தனியாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளது. இதில் பிரியதர்ஷினி இயக்க உள்ள படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளார்.

    இப்படத்திற்கு தி அயர்ன் லேடி எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நித்யா மேனன் பேட்டியளித்த போது இப்படம் பற்றி கூறியுள்ளார். அதில், “இது மிகப்பெரிய படம். பிரியதர்ஷினி என்னிடம் கதை சொன்ன போது மிகவும் பிடித்திருந்தது. கதை குறித்து மிகுந்த கவனத்தோடு அவர் இருக்கிறார். ஒரு பயோபிக் படம் பண்ணும்போது முழுக்க முழுக்க அந்த கதாபாத்திரத்திற்கு நியாயமான, தேவையான நடிப்பை வழங்க வேண்டும் என சொல்லிவிட்டேன். சரியான பாதையில் மிகுந்த நம்பிக்கையோடு பட வேலைகளை பிரியதர்ஷினி செய்துவருகிறார்.

    இப்படத்தில் நடிப்பதற்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன். அது ஒரு நடிகையாக எனக்கு மிக சுவாரசியமானதாக இருக்கப்போகிறது” என்று கூறியுள்ளார்.



    மேலும் மீடூ இயக்கம் பற்றி கூறும் போது, “மீடூ இயக்கத்திற்கு நான் எதிரானவள் இல்லை. ஆனால் பாலியல் அத்துமீறல் போன்ற தவறான வி‌ஷயங்களை எதிர்ப்பதற்கு என்னிடம் வேறு வழி உள்ளது. நான் குழுவில் இணைந்து போராட விரும்பவில்லை, அமைதியாக சாதிக்க நினைக்கிறேன்.

    இதுபோன்ற வி‌ஷயங்கள் பற்றி பேசாததால் பாலியல் சீண்டல்களுக்கு ஆதரவளிக்கிறேன் என அர்த்தம் இல்லை. நான் மாறுபட்ட அணுகுமுறையை வைத்திருக்கிறேன். வேலையின் மூலமாகவே அதை செய்ய முடியும் என நினைக்கிறேன் என்றார்.
    மீடூ இயக்கத்தின் மூலம், பலரும் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், பெண்களை தவறாக பயன்படுத்த வில்லை என்று விஷால் கூறியிருக்கிறார். #Vishal
    திரைத்துறையில் பெண்கள் பாலியல் ரீதியாக வேட்டையாடப்படுவதாக சமீப காலங்களில் புகார்கள் அதிகரித்துள்ளன. மீடூ இயக்கத்தின் மூலம், பலரும் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

    இது குறித்து பேசியுள்ள நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால், சினிமாவில் வாய்ப்புக்காக பெண்களை பணிய வைப்பது தடுக்கப்பட வேண்டும். இதை தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைத்துறையும் உறுதிசெய்ய வேண்டும். குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதற்காக தொடங்கப்பட்ட மீடூ இயக்கம் சிலரின் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. 



    காலம் தாழ்த்துதல், வாய்ப்பு தருவதாக உறுதியளித்துவிட்டு அது நடக்காமல் போனால் பழிவாங்குவதற்காக மீடூவை ஆயுதமாக எடுக்கும் நிலையும் உள்ளது. அது நிறுத்தப்பட வேண்டும். மனம் ஒத்து பழகுவதற்கும் ஒருவரை தவறாக உபயோகிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நானும் சில பெண்களுடன் டேட்டிங் சென்றிருக்கிறேன், அதனால் அவர்களை தவறாக பயன்படுத்தினேன் என்று அர்த்தமில்லை’ என்றார்.
    மீடூ புகார்களை யாரும் கேலி செய்ய வேண்டாம் என்று பெரும்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #MeToo
    சென்னை:

    இசை அமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கி இருக்கும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் ஆல்பமான ‘கெட் யுவர் ப்ரீக்கிங் ஹேண்ட்ஸ் ஆப் மீ’ என்னும் இசை குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

    மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆல்பத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    3 வயதில் இருந்து வெவ்வேறு வயது மனிதர்கள் அன்பினால் தான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். இந்த வீடியோவை வெளியிடும் தேவையே இங்கு வந்திருக்க கூடாது என்று நினைக்கிறேன். ஜிப்ரானுக்கு முன்பே பாரதியார் இந்த கொடுமைக்கு எதிராக பாடல் எழுதியிருக்கிறார்.

    பெண்ணுக்கு தலைவர் பொறுப்பை கொடுக்கலாமா என்று உலகம் யோசித்து கொண்டிருந்த வேளையில் இந்தியா ஒரு பெண்ணை தலைவராக்கியது. பெண்களுக்கு தற்காப்பு கற்றுக் கொடுப்பது சரியாக இருக்காது, பயமே இல்லாமல் செய்தாக வேண்டும். அந்த பொறுப்பு ஆண்கள் கைகளில் தான் இருக்கிறது. நான் ஒரு பெண்ணின் தந்தை மட்டுமல்ல, ஒரு தந்தைக்கு பிள்ளை. வன்புணர்வு மட்டுமல்ல, வன்முறையாக கைகுலுக்குவதும் கூட தவறு தான்.

    மீ டூ என்று ஆங்கிலத்தில் சொல்வது நன்றாக உள்ளது. நானும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை உள்ளடக்கிய சொல்தான் அது. தற்போது இது கோரசாக எழுகிறது.

    இப்போது ஏன் அதனை சொல்கிறார்கள் என்று சிலர் கோபித்துக் கொள்கிறார்கள். எப்போது எழுந்தால் என்ன? நியாயமாக, தைரியமாக எழ வேண்டிய குரல் எழுந்து கொண்டிருக்கிறது, அது எழட்டும். அதனை கேலி செய்யாதீர்கள். உடன்கட்டை ஏறுதல் என்பதை 200 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னாலும் தவறுதான், அதை தற்போது சொன்னாலும் தவறுதான். எப்போது கேட்டால் என்ன. நியாயமான குரல் எப்போது வேண்டுமானால் எழலாம், அதை யாரும் கேள்வி கேட்கக்கூடாது.

    வலதாக அல்லது இடதாக இருக்கணும் அது என்ன மய்யம் என்கிறார்கள், அது தான் வள்ளுவர் கூறும் நடுநிலைமை. ஒரு அற்புதமான நிலையில் எங்கள் மக்கள் நீதி மய்யம் உதித்திருப்பது மகிழ்ச்சி. நாளைய இந்தியாவின் சிற்பி மாணவர்களாகிய நீங்கள், அதனால் தான் உங்களிடம் இந்த அரசியலை சொல்கிறேன். உங்களை நம்பி இருப்பது மக்கள் நீதி மய்யம் மட்டுமல்ல, மக்களும் தான்.


    ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தேர்வு இருப்பது போல அரசியல்வாதிகளுக்கு தேர்வு வைக்க வேண்டும். நான் அந்த தேர்வுக்கு தான் தயாராகி வருகிறேன். கேள்விகளை கேளுங்கள், என்னை சோதியுங்கள் நான் பதிலளிக்க தயார். மக்கள் தலைவர் ஆக என்னிடம் நேர்மை என்ற திறமை இருக்கிறது.

    நம் முன்னோர்களின் தாக்கத்தில் இருந்தும், என் மக்களுக்கு நீதி வேண்டும் என்ற கோபத்தில் தான் மக்கள் நீதி மய்யம் உருவானது. மக்களுக்காக தான் வந்திருக்கிறேன், எனக்காகவும் வந்திருக்கிறேன். இங்கு கொடுக்கும் ஆதரவை வாக்குச் சாவடிக்கு வந்தும் தர வேண்டும். உங்கள் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    நிகழ்வுக்கு பிறகு பெரும்பாக்கம் அருகே எழில் நகரில் உள்ள தமிழக அரசின் குடிசை மாற்று வாரியை குடியிருப்பு வளாகத்துக்கு கமல்ஹாசன் சென்றார்.

    அப்போது எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள், புகார் தெரிவித்தனர். #MakkalNeedhiMaiam #KamalHaasan #MeToo
    ×