search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீடூ"

    இயக்குனர் சுசி கணேசன் மீது லீனா மணிமேகலை கூறிய குற்றச்சாட்டை நான் ஆதரிக்கிறேன் என்று நடிகை அமலாபால் அறிக்கை வெளியிட்டுள்ளார். #Amalapaul #MeToo
    ‘மீ டூ’  மூலம் பிரபல நடிகைகள், பாடகிகள் உள்ளிட்ட பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, பிரபல இயக்குனர் சுசிகணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை சுசிகணேசன் மறுத்தார். மேலும் பொய்யான குற்றச்சாட்டை கூறியதாக வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், நடிகை அமலாபால் லீனா மணிமேகலைக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், ‘நான் லீனா மணிமேகலையின் இயக்குனர் சுசி கணேசனின் மீதான குற்றச்சாட்டை ஆதரிக்கிறேன். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தர தெரியாத ஒரு மனிதரிடம் துணை இயக்குனராக அந்த பெண் என்ன பாடுப்பட்டு இருப்பாள் என்பது எனக்கு புரிகிறது.



    நான் அவர் இயக்கிய ‘திருட்டு பயலே 2’ படத்தின் கதாநாயகியாக இருந்தாலும், இயக்குனர் சுசி கணேசனுடைய இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியா யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடை ஒட்டு உரசும் மனப்பான்மை என பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன். இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடுபட்டு இருப்பார் என்பதை நான் அறிகிறேன்.

    அந்த கொடுமையை சமூக வலைதளங்கள் மூலம் அவர் வெளியில் சொல்லி இருப்பதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். 

    இன்றைய பொருளாதார நிலையும், பெருகி வரும் வேலைக்கென்று வரும் பெண்களின் தொகையும், பெண்களை ஒரு எளிய இரையாக்கி விடுகிறது. அங்கிங்கு எனாது படி அனைத்து தொழிகளிலும், துறைகளிலும் இந்த கொடுமை நடந்து வருகிறது.

    தங்களது மனைவியையும், மகள்களையும் போற்றி காப்பாற்றும் இதே ஆண் சமுதாயம், வெளியே மற்ற பெண்களிடம் தங்களது ஆதிக்க மனப்பான்மையை செலுத்துவது துரதிர்ஷ்டமானது.

    இதுவே இந்தியர்களாகிய நாம் நம்முடைய உண்மையான ஆற்றலை கலை, சேவை மற்றும் ஆன்மீக துறைகளில் வெளிப்படுத்தும் தன்மையை ஊனமாக்குகிறது.



    ஆன்மீக துறையிலும், கலை துறையிலும் இருந்து பல உண்மைகள் வெளிவர துவங்கி உள்ளது. இதே போல மற்ற துறைகளிலும், குறிப்பாக அங்கீகரிக்க படாத மற்ற துறைகளில் இருந்தும், மீடூ குறித்த பதிவுகள் வெளிவர வேண்டும்.

    அரசாங்கமும், நீதி துறையும் எதிர்காலத்தில் இவ்வித கொடுமைகள் நடக்காமல் இருக்க வேண்டி, பெண்களுக்கு தொழில் பாதுகாப்பு முன்னிட்ட பல அம்சங்களை சட்ட ரீதியாக அமல் படுத்த வேண்டும். அவ்விதமான கட்டுப்பாடுகளே பெண்களை போத பொருளாக சித்தரிக்கும் சிலருக்கு எச்சரிக்கை மணியாகும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    முன்னணி நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியா, மீடூ குறித்த கேள்விக்கு கடின உழைப்பு மீது மட்டுமே நம்பிக்கை என்று கூறியிருக்கிறார். #VadaChennai #MeToo
    வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எப்போதுமே துணிச்சலான கருத்துகளை பேசும் ஆண்ட்ரியா சமீபத்திய பரபரப்பான மீடூ இயக்கம் பற்றியும் துணிச்சலாக கருத்து தெரிவித்துள்ளார். ‘மீ டூ’ இயக்கத்தை வரவேற்கிறேன்.

    தற்போது மாற்றத்திற்கான நேரம். பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கேட்கத் துவங்கியுள்ளது. இந்த மீ டூ இயக்கம் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வாய்ப்பு இல்லை. பட வாய்ப்புக்காக என்னை யாரும் படுக்கைக்கு அழைத்தது இல்லை. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது ஆண்களின் தவறு மட்டும் அல்ல.

    வேலைக்காக படுக்கைக்கு செல்ல பெண்கள் விருப்பமாக இல்லாவிட்டால் ஆண்கள் அழைக்க மாட்டார்கள். எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது, நான் யாருடனும் படுக்கைக்கு செல்ல மாட்டேன் என்று பெண்கள் தைரியமாக சொன்னால் தான் இந்த பழக்கம் முடிவுக்கு வரும். நான் பெரிய, பெரிய இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றுகிறேன்.



    நல்ல நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கிறேன். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறேன். படுக்கைக்கு செல்லாமல் தான் இத்தனை படங்களிலும் நடித்துக் கொண்டிருக்திறேன். கடின உழைப்பு, திறமை மீது நம்பிக்கை வைத்திருப்பவள் நான்’ என்று கூறியிருக்கிறார்.
    விக்ரம் வேதா, ரிச்சி, இவன் தந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், மீடூ விவகாரத்தில் ஹீரோக்கள் எங்கே போனார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். #MeToo #ShraddhaSrinath
    நிபுணன் திரைப்பட படப்பிடிப்பில் அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை சுருதி ஹரிகரன் மீடூ இயக்கத்தில் தன் அனுபவத்தை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து கன்னடத்தில் யூடர்ன், தமிழில் விக்ரம் வேதா, ரிச்சி, இவன் தந்திரன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் சுருதிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். “உனக்கு நேர்ந்ததை நினைத்து நான் வருந்துகிறேன். பணியிடத்தில் யாருமே அசவுகரியமாக உணரக்கூடாது.

    அதேபோல் அடுத்தவர்களை இம்சிக்கும் இடத்திலும் யாருமே இருக்ககூடாது. ஒரு பெண் ஒரு நட்சத்திர நடிகருடன் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை வெளியே பகிர்ந்து கொள்கிறார். இணைய உலகமே அவரை வாட்டி எடுக்கிறது.

    போதாதற்கு கொலை மிரட்டல்களும், விளம்பரத்துக்கான புகார் என்ற வசவுகளும் சேர்ந்து கொள்கின்றன. திரையில் எனது தங்கையை காப்பேன், எனது தாயை பேணுவேன் என்றெல்லாம் சூளுரைத்து வில்லன்களை அடித்து துவைத்து, லாரியைக்கூட பறக்கவிட்டவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்.



    நமது சூப்பர் ஹீரோக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இப்போது நான் தெரிந்து கொள்ள நினைக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
    அந்த எண்ணத்துடன் அணுகும் ஆண்களை அசிங்கப்படுத்த யோசிக்க மாட்டேன் என்று நடிகை பிரியாமணி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். #Priyamani #MeToo
    பருத்தி வீரன் உள்பட பல படங்களில் நடித்தவர் பிரியாமணி. இவரிடம் சமீபத்தில் அதிகரித்து வரும் நடிகைகளின் பாலியல் புகார்கள் பற்றி கேட்டபோது, மீ டூ வி‌ஷயத்தில் பெண்கள் தங்களுக்கான நியாயத்துக்காக போராடுகின்றனர்.

    எதுவும் நடக்காமலே நடந்ததாக எந்தப் பெண்ணும் சொல்ல மாட்டாள். அதற்கான அவசியமும் இல்லை. சினிமாத் துறையில் இருக்கும் பெண்கள் பேசுவதால், சினிமாவில் மட்டுமே இதெல்லாம் நடப்பதாக அர்த்தமில்லை. பெண்களுக்கு இந்தச் சமுதாயத்தில் பாதுகாப்பு குறைவுதான். 



    இதைச் சொல்வதற்கு அசிங்கமாக இருந்தாலும், அதுதான் உண்மை. இந்தச் சூழலுக்குள்ளே பெண் குழந்தைகளை வளர்ப்பதுதான் இன்றைய பெற்றோருக்கான சவால். நான் சினிமாவில் கிளாமராக வருகிறேன் என்றால், அது என் தொழில். அதற்காக நிஜத்திலும் அப்படியே இருப்பேன் என்ற எண்ணத்துடன் அணுகும் ஆண்களை அசிங்கப்படுத்த யோசிக்க மாட்டேன். எனக்குப் பாலியல் தொல்லை ஏற்பட்டால், நிச்சயம் என் கணவரின் உதவியுடன் எல்லோர் முன்னிலையிலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்'' என கூறியிருக்கிறார்.
    சின்மயி விவகாரம் குறித்து வைரமுத்து மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார். #BJP #HRaja #Vairamuthu
    மதுரை:

    மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச்செயலாளர் எச்.ராஜா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரளாவில் இடதுசாரி அரசும், மக்கள் விரோத சக்தியும் இந்துத்துவ விரோத சக்திகளும் ஒருங்கிணைந்து சபரிமலை புனிதத்தை கெடுத்து விட வேண்டும் என கங்கணம் கட்டி செயல்படுகின்றன.

    இது 6 மாதத்திற்கு முன்பு கேரளாவில் இரு பிரிவினர் ஒரு தேவாலயத்திற்கு உரிமை கொண்டாடினர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஒரு தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர் தரப்பினர் பேரணி போராட்டம் நடத்தினர். உடனே பினராயி விஜயன் அரசு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்தினால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும். எனவே கால அவகாசம் வேண்டுமென கோரியது.


    இதே நடைமுறையை சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு ஏன் பின்பற்றவில்லை? இந்துக்களின் பழக்க வழக்கங்களை பின்பற்றாமல் ஆபாசமான புகைப்படங்களை பதிவிட்ட ரெஹனா பாத்திமா என்பவர் கமாண்டோ உடையணிந்து சபரிமலை வரை சென்றுள்ளார். இது கேரள முதல்வரின் கீழ்த்தரமான செயல். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

    கேரள அரசை கண்டித்து வருகிற 30-ந்தேதி பா.ஜ.க. சார்பில் அய்யப்பன் நாமசங்கீர்த்த யாத்திரை நடக்கிறது. சின்மயி விவகாரம் குறித்து வைரமுத்து மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் தாய் ஆண்டாளை பழித்த வைரமுத்து வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக தூங்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #HRaja #Vairamuthu #Chinmayi
    18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கூவத்தூர் கலாச்சாரம் தொடர்வதால் குதிரை பேரம் விரைவாக ஆரம்பிக்கும் என்றும் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். #MLAsDisqualificationCase #ArjunSampath
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    144 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு பல லட்சம் மக்கள் வருவார்கள் என்று தெரிந்தும் அரசும், அறநிலையத்துறையும் ஒத்துழைக்கவில்லை. போக்குவரத்து வசதி, ரெயில் வசதி, பெண்கள் உடை மாற்றும் அறைகள் எல்லாம் சரி செய்து தரப்படவில்லை. புஷ்கர விழாவில் 40 லட்சம் மக்கள் புனித நீராடி இருக்கிறார்கள்.

    18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கூவத்தூர் கலாச்சாரம் தொடர்கிறது. இதனால் குதிரை பேரம் விரைவாக ஆரம்பிக்கும். இதற்கு மாற்று அரசியல் கண்டிப்பாக வரவேண்டும். அ.தி.மு.க., தி.மு.க. இருக்கும் வரை இது போன்ற அரசியல் நடக்கும் என்றார். இதற்காகத்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் ஆரம்பித்திருக்கிறார். ஆன்மீக அரசியல் கண்டிப்பாக வெற்றி பெறும்.

    வருகிற 26-ந் தேதி சென்னையில் மீ டூ விவகாரம் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பொதுவாக பாலியல் விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். அது பொய்யென்றால் புகார் அளித்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுபோன்ற வி‌ஷயங்களில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும்.

    எச்.ராஜா மீது தொடர்ந்து மீம்ஸ் மூலம் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கூறப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும். இதை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MLAsDisqualificationCase  #ArjunSampath
    பெண்களை பாலுணர்வுடன் பார்த்தால், அவர்கள் உள்ளுணர்வு இரும்பாக மாறும் என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #MeToo
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மத்திய அரசின் நலத்திட்டம் குறித்த விளக்கம் கூட்டம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மத்திய அரசின் எரிவாயு, சாலை, வங்கி கடன் உள்பட பல திட்டங்களை விளக்கி பேசினார்.

    பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



    பிரதமர் மோடி மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருப்பதால் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

    சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் செல்லக்கூடாது என்று போராடி வரும் சபரிமலை பக்தர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள்.

    பெண்களை கரும்பு மாதிரி நினைப்பவர்களுக்கு எதிராக தான் மீடூ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. பெண்களை பாலுணர்வுடன் பார்த்தால், அவர்கள் உள்ளுணர்வு இரும்பாக மாறும். இரும்பு கரம் கொண்டு அடக்குவார்கள்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரதிய ஜனதா மகளிரணி துணை நிற்கும். மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீது எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. மீனவர்கள் விவகாரத்தில் குற்றம்சாட்டி வரும் எதிர்கட்சியினர் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஆனால் இலங்கை தமிழக மீனவர்களுக்கு எதிராக கொண்டு வந்துள்ள சட்டத்தை சட்டத்தின் வழியாக எதிர்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கண்டிப்பாக பாரதிய ஜனதா கட்சி காலூன்றும்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #MeToo
    பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய பிரித்திகா மேனன் மீது வழக்கு தொடருவேன் என்று நடிகர் தியாகராஜன் பேட்டியளித்துள்ளார். #Thiyagarajan
    அலைகள் ஓய்வதில்லை, ரங்கா, மலையூர் மம்பட்டியான், நீங்கள் கேட்டவை, கொம்பேறி மூக்கன் உள்பட பல படங்களில் தியாகராஜன் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த செக்கச்சிவந்த வானம் படத்திலும் நடித்து இருந்தார்.

    தியாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரித்திகா மேனன் முக நூலில் கூறினார். கோவையில் படப்பிடிப்பு நடந்த போது தியாகராஜன் தன்னுடைய அறைக் கதவை தட்டியதாகவும் தான் திறக்க வில்லை என்றும் பதிவிட்டு இருந்தார்.

    பிரித்திகாவின் இந்த குற்றசாட்டை தியாகராஜன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பிரித்திகாமேனன் நான் இயக்கிய பொன்னர் சங்கர் படத்தில் அப்ரெசண்டீசாக 3, 4 நாட்கள் புகைப்படம் எடுக்கும் பணியை செய்தார். அப்போது அவர் தங்கியிருந்த அறைக்கதவை யாரோ தட்டியதாகவும் அது நான் தான் என்று முகநூலில் பதிவிட்டுள்ளார்.
    அவர் பங்குபெற்ற காட்சிகளின் படப்பிடிப்பு இரவு தொடங்கி மறுநாள் காலை வரை நடந்தது. படத்தில் இடம்பெற்ற மிக முக்கிய போர் காட்சிகள். அந்த சமயத்தில் மூச்சு விடக்கூட நேரம் இல்லாமல் உயிரை கையில் பிடித்துக் கொண்டு எடுத்தோம். 15 நாட்கள் அப்படி படப்பிடிப்பு நடத்தியதற்கான ஆதாரம் இருக்கிறது.

    இது யூகத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு. அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.

    என் மீது வீண்பழி சுமத்தி களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கும் அவர் மீது வழக்கு தொடர உள்ளேன். அது இதுபோல பொய்க் குற்றச்சாட்டு கூறுபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். விரைவில் ஊடகங்கள் முன்னிலையில் உண்மை தெரிய வரும். மீ டூ என்பது பெண்களுக்கு அவசியமான இயக்கம். அதை இதுபோன்று தவறாக பயன்படுத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    மீடூ இயக்கம் மூலம் பல முக்கிய பிரபலங்கள், இயக்குனர்கள், நடிகர்கள் சிக்கி வரும் நிலையில், சிம்புவும் சிக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #MeToo
    பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளைத் துணிந்து வெளியே சொல்வது மீ டூ இயக்கம் மூலம் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள், பத்திரிகையாளர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

    சில தினங்களாக நடிகர், இயக்குனர் அர்ஜுன், சுசி கணேஷன், தியாகராஜன், வைரமுத்து உள்ளிட்ட பலர் மீது பாலியல் புகார்கள் வந்துள்ளது. தற்போது சிம்பு இந்த சர்ச்சையில் சிக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

    தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் ஹீரோயினாகவும் பின்னர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்தவர் லேகா வாஷிங்டன். ஜெயம்கொண்டான், வ குவாட்டர் கட்டிங் படத்திலும் நடித்திருக்கிறார். இவர் சிம்புவுடன் ‘கெட்டவன்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், அந்த படம் சில காரணங்களால் நின்று போனது.



    லேகா வாஷிங்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் "கெட்டவன்" மீடூ என பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் சிம்பு என்று கூறி, சிம்புடன் லேகா வாஷிங்டன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து வருகிறார்கள். இதனால், மீடூ சர்ச்சையில் சிம்பு சிக்குவதாக பலரும் கூறி வருகிறார்கள்.


    உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், மீடூ குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றுள்ளார். #MeToo #AishwaryaRai
    பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளைத் துணிந்து வெளியே சொல்வது மீ டூ இயக்கம் மூலம் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள், பத்திரிகையாளர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

    இந்தி சினிமாவில் விகாஷ் பால், சுபாஷ் கபூர், அலோக்நாத், சஜித்கான், நானாபடேகர் உள்ளிட்டோர் புகார்களில் சிக்கி தங்கள் படவாய்ப்புகளை இழந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகப் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அதற்காக நிதி வசூல் செய்யும் பணியிலும் ஈடுபட்டுவருகிறார். இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கிளம்பும்போது மீ டூ விவகாரம் தொடர்பாக அவரிடம் தொடர்ச்சியாக பல கேள்விகள் கேட்கப்பட்டன.



    அப்போது கேட்காதது போல் பதில் சொல்லாமல் கடந்துசென்றார். அவரது இந்தச் செய்கை இந்தி சினிமா வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் ஐஸ்வர்யா மீ டூ விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகப் பேசியிருந்தார்.
    கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் சஞ்சனா கல்ராணி, இயக்குனர் ஒருவர் கட்டாயப்படுத்தி ஆபாசமாக நடிக்க வைத்தார் என்று கூறியிருக்கிறார். #MeToo
     கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் சஞ்சனா கல்ராணி. தமிழின் முன்னணி நடிகையாக இருக்கும் நிக்கி கல்ராணியின் சகோதரி. இவர் 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே நடிக்க வந்துவிட்டார்.

    சஞ்சனா தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

    ‘நான் 15 வயதில் நடிக்க வந்தேன். பல கனவுகளுடன் சினிமா துறைக்கு வந்தேன். எனக்கு நடிப்பு மீது அளவு கடந்த ஆர்வம். அதனால் படங்களில் நடித்துவிட்டு மீண்டும் படிக்க செல்ல வேண்டும் என்று நினைத்தேன். நான் நடிக்க வந்த போது எனக்கு 16 வயதுதான்.

    என் முதல் படமான கண்டாஹெண்டதி படத்தின் இயக்குனர் மர்டர் என்ற இந்தி படத்தை எனக்கு போட்டுக் காண்பித்தார். படத்தில் ஆபாச காட்சிகள் அதிகமாக இருந்தன. இந்த படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய விரும்புவதாக அவர் கூறினார்.

    நான் இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன். ஆபாச காட்சிகள் அதிகமாக உள்ளன என்று கூறியதற்கு கன்னட ரசிகர்களுக்கு ஏற்ப படத்தில் மாற்றம் செய்யப்படும் என்று இயக்குனர் தெரிவித்தார். ஒரே ஒரு முத்தக் காட்சியில் மட்டும் நடிக்க நான் ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்புக்காக பாங்காக்கிற்கு சென்றபோது என் அம்மாவையும் துணைக்கு அழைத்து வருவேன் என்று நான் கூறியதற்கு அவர்கள் சம்மதித்தார்கள்.



    ஆனால் பாங்காக் சென்ற பிறகு என் அம்மாவை படப்பிடிப்பு தளத்திற்கு வர அனுமதிக்கவில்லை. அங்கு நிறைய பேர் இருப்பார்கள், அம்மா வர வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகு அவர்கள் பல முத்தக் காட்சிகளை படத்தில் சேர்த்தார்கள். 50 முறை முத்தக்காட்சிகளில் நடிக்க வைத்தார்கள். மேலும் என் மார்பு பகுதி, கால்களை ஆபாசமான வகையில் படம் எடுத்தார்கள். கேமராவை அந்த பகுதிகளிலேயே காட்டினார்கள்.

    இப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்று நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அதற்கு அவரோ, நாங்கள் சொல்லும்படி எல்லாம் செய்யவில்லை என்றால் உன் கேரியரை நாசமாக்கிவிடுவோம் என்று என்னை மிரட்டினார்.

    கனவுகளுடன் வந்த சின்னப் பெண்ணை அவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு பயன் படுத்திவிட்டார்கள். அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து நான் வெளிவர 2 மாதங்கள் ஆனது. நான் தற்கொலை செய்துகொள்வேனோ என்று பயந்து 2 மாதங்கள் என் தாய் என்னுடன் தான் படுப்பார்.

    இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.
    கமலுடன் காங்கிரஸ் இணைந்தால் கல்லறைக்கு செல்வதற்கு சமம் என்று ஆரணியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். #KamalHaasan #Congress #NanjilSampath
    ஆரணி:

    ஆரணியில் நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் புகார் உள்ளது. முதல்-அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகியிருக்க வேண்டும்.

    சபரிமலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பெண்களே போராடுவது ஆச்சரியமாக இருக்கிறது.

    ‘மீ டு’ விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன். ‘மீ டு’வை இன்று பலர் எல்லை தாண்டி கையில் எடுப்பது வேதனையளிக்கிறது. ‘மீ டு’வை மிஸ்யூஸ் மற்றும் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது.


    கமலுடன் காங்கிரஸ் இணைந்தால் கல்லறைக்கு செல்வதற்கு சமமாகிவிடும். கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியாது.

    தி.மு.க.வுடன் இருந்தால் தான் காங்கிரசுக்கு பலன் கிடைக்கும். கமல்ஹாசனுடன் கூட்டணி வைத்தால் தற்கொலை செய்து கொள்வதை போல் தமிழகத்தில் காங்கிரசின் நிலைமை மாறி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.   #KamalHaasan #Congress #NanjilSampath
    ×