search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூச்சொரிதல்"

    தஞ்சை பெரியகோவிலில் தனி சன்னதியில் பெரியநாயகி அம்மனுக்கு இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சை பெரியகோவிலில் தனி சன்னதியில் பெரியநாயகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் உலக நன்மைக்காக பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடத்தப்படும்.

    இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா வைகாசி விசாகமான நேற்று மாலை நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பூக்களை அன்பளிப்பாக அளித்தனர். இந்த பூக்களை கூடைகளில் வைத்து பெரியகோவில் வளாகத்தில் உள்ள நால்வர் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள், கோவில் வளாகத்தை சுற்றி வந்து பெரியநாயகி அம்மன் சன்னதியை சென்றடைந்தனர்.

    பின்னர் பக்தர்களால் வழங்கப்பட்ட ரோஜா, மகிழம், தும்பை உள்ளிட்ட 36 வகையான மலர்களால் பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வழங்கிய மலர்களின் எடை 1,000 கிலோ ஆகும்.
    பங்குனி மாதத்தில் அம்பிகையின் ஆலயங்களில், நடக்கும் பூச்சொரிதல் விழாவில் கலந்து கொண்டு, அம்பிகையை வழிபாடு செய்வதால், நமக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கின்றன.
    பங்குனி மாதத்தில் ஊர் தோறும் அம்பிகையின் ஆலயங்களில், பூச்சொரிதல் விழா நடைபெறும். வாசமுள்ள மலர்களையும், வண்ண வண்ண பூக்களையும் கூடைகளில் கொண்டு வந்து, அம்பிகையின் மீது தூவி பக்தர்கள் வழிபாடு செய்வார்கள்.

    அம்பிகையின் மீது தூவி வழிபடப் படுவதால் இதற்கு ‘பூச்சொரிதல்’ என்று பெயர். இந்த பூச்சொரிதல் விழாவில் கலந்து கொண்டு, அம்பிகையை வழிபாடு செய்வதால், நமக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கின்றன. தேனைச் சுமக்கும் பூக்களை அம்பிகைக்கு அர்ப்பணிக்கும் பொழுது, தேனான வாழ்க்கை நமக்கு அமையும்.

    அதைச் சுமந்து கொண்டு பாதயாத்திரையாக செல்லும் பொழுது, ‘ஓம்சக்தி’ என்று உச்சரிப்பதால், நாம் சிறப்பான பலன்களைப் பெறுகிறோம். அம்பிகையின் மனதைக் குளிர்வித்தால் இந்த உலகம் குளிர்ச்சி அடையும். மழை வளம் பெருகும். “மாரியல்லால் ஒரு காரியமில்லை” என்ற பழமொழிப்படி, மாரியம்மனை வழிபட்டு காரியங்களைத் தொடங்கினால், மகத்தான பலன் நமக்குக் கிடைக்கும். சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெருக வைக்கும் மாரியம்மனை, பங்குனி மாதத்தில் மலர் தூவி வழிபடுவோம். புகழ் குவிய வழி காண்போம்.
    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், பெரியநாயகி அம்மனுக்கு 1,500 கிலோ மலர்களால் பூச்சொரிதல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் தனி சன்னதியில் பெரியநாயகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் மழை வேண்டியும், உலக நன்மைக்காவும் பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடத்தப்படும்.

    இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் உள்ள நால்வர் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் பூக்கூடைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். இந்த ஊர்வலம் கோவிலை வலம் வந்து பெரியநாயகி அம்மன் சன்னதியை சென்றடைந்தது.

    பின்னர் பக்தர்களால் வழங்கப்பட்ட முல்லை, ரோஜா, தாழம், மகிழம், தாமரை, அல்லி, செம்பருத்தி, கனகாம்பரம், வெட்டிவேர், அரளி உள்ளிட்ட 51 வகையான மலர்களால் பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. பக்தர்கள் வழங்கிய மலர்களின் எடை 1,500 கிலோ ஆகும். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 
    ×