என் மலர்
நீங்கள் தேடியது "மோடி"
- ராமநாதபுரம் தமிழகத்தில் எதிர்பார்ப்பு மிகுந்த தொகுதியாக மாறி உள்ளது.
- கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா தலைவராக இருந்த கதிரவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தரணிமுருகேசன் நியமிக்கப்பட்டார்.
புதிய மாவட்ட தலைவர் நியமிக்கப்பட்ட பிறகு முதல் மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கருப்பு முருகானந்தம் பேசியதாவது:-
இந்த தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பிரதமர் போட்டியிட வேண்டும் என்று தமிழக நிர்வாகிகள் வற்புறுத்தி இருக்கிறோம்.
ராமநாதபுரம் தமிழகத்தில் எதிர்பார்ப்பு மிகுந்த தொகுதியாக மாறி உள்ளது. இந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக மாவட்ட கட்சி நிர்வாகத்தில் எந்த மாற்றத்தை வேண்டுமானாலும் கட்சி தலைமை செய்யும்.
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட வேண்டும் என்று பா.ஜ.க. நிர்வாகி கருப்பு முருகானந்தம் பேசினார்.
- கூட்டு முயற்சியால் மட்டுமே தேர்தலில் வெற்றியடைய முடியும் என்றார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் தலைவர் தரணி முருகேசன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில பொதுச்செய லாளரும், கோட்ட அமைப் பாளருமான கருப்பு முருகா னந்தம் பேசியதா வது:-
தனி நபருக்காக பாரதீய ஜனதா கட்சி இல்லை. இது மிகப்பெரிய கட்சி. தேர்தலில் கட்சி வெற்றி பெற எந்த மாற்றமும் நடக்கும். வருகிற பாராளு மன்ற தேர்தலில் ராமநாத புரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பிரதமர் போட்டியிட வேண்டும் என்று தமிழக நிர்வாகிகள் வற்புறுத்தி இருக்கிறோம். இந்த கோரிக்கை நிறைவேறினால் ராமநாதபுரம் தொகுதி மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.
கட்சி நிர்வாகிகள் கிராமம், கிராமமாக சென்று மக்களை சந்தித்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு முயற்சி யால் மட்டுமே தேர்தலில் வெற்றியடைய முடியும். எனவே ஒவ்வொரு தொண்டனின் பணியும் முக்கியமானது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்யும் வகையில் நமது பணி இருக்க வேண்டும். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சுப.நாகராஜன், மாவட்ட பார்வை யாளர் முரளிதரன், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.முருகன்,மாநில மகளிர் அணி துணைத்தலைவி கலா ராணி, செயலாளர் மற்றும் மாநில பொறுப்பா ளர்கள் மாநில பொறுப்பா ளர்கள் பிரவீன் ஜி, ராமச்சந்திரன்,ரஜினிகாந்த் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆத்மா கார்த்திக், மணி மாறன், பவர் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தரை எவ்வளவு அழுக்காக இருக்கிறது என்று பாருங்கள். எங்களை இங்கேதான் உட்கார வைக்கிறார்கள்.
- வீடியோ சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தில் லோஹாய்-மல்ஹர் கிராமத்தை சேர்ந்தவர் சிறுமி சீரத்நாஸ். இவர் பிரதமர் மோடியிடம் ஒரு கோரிக்கை வைத்து பேசும் வீடியோ பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. அதில் சிறுமி சில இடங்களை காட்டி விளக்குகிறார். வீடியோவில், மோடிஜி, நான் இங்கு அரசு பள்ளியில் படித்து வருகிறேன். தயவு செய்து எங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக்கூடத்தை கட்டி தாருங்கள். தரை எவ்வளவு அழுக்காக இருக்கிறது என்று பாருங்கள். எங்களை இங்கேதான் உட்கார வைக்கிறார்கள்.
எங்கள் பள்ளி இருக்கும் பெரிய கட்டிடத்தை உங்களுக்கு காட்டுகிறேன். இந்த கட்டிடம் 5 வருடங்களாக எவ்வளவு அழுக்காக இருக்கிறது என பாருங்கள். இதுதான் எங்கள் வகுப்பறை. எங்களுக்காக ஒரு நல்ல பள்ளிக்கூடத்தை உருவாக்கி தருமாறு கேட்டு கொள்கிறேன்.
தரையில் உட்கார்ந்தால் எங்களது சீருடைகள் அழுக்காகிறது. சீருடை அழுக்காகிவிட்டால் அம்மா எங்களை அடிக்கிறார். தயவு செய்து மோடிஜி பள்ளியின் உட்கட்டமைப்பை அழகாக கட்டி கொடுங்கள் என உங்களிடம் கேட்டு கொள்கிறேன். மோடிஜி நீங்கள் எல்லோருடைய பேச்சையும் கேட்கிறீர்கள். தயவு செய்து நான் சொல்வதையும் கேளுங்கள். எங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக்கூடத்தை கட்டி தாருங்கள் என அந்த வீடியோவில் சிறுமி கூறுகிறார். இந்த வீடியோ சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது.
- அதானி குற்றவாளி என்றால் பிரதமர் மோடியும் குற்றவாளி தான்.
- இவ்வளவு பெரிய ஊழலை தட்டிக்கேட்ட ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் தான்.
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது:-
அதானி விவகாரத்தில் ரூ.10 லட்சம் கோடி முறைகேடு நடந்தது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினர். பா.ஜனதா எம்.பி.க்கள் 350 பேர் காவி துண்டு போட்டுகிட்டு உட்கார்ந்து இருந்தார்கள். நாங்கள் 39 பேர் கருப்பு சட்டை போட்டு கிட்டு கேள்விகளால் துளைத்தெடுத்தோம்.
அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. அமலாக்க துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை ஆகியவற்றுக்கு பயந்து மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா, பஞ்சாப் முதல்-மந்திரிகள் யாரும் பேசவில்லை. இவ்வளவு பெரிய ஊழலை தட்டிக்கேட்ட ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் தான்.
அதானி குற்றவாளி என்றால் பிரதமர் மோடியும் குற்றவாளி தான். இதை கூறியதற்காக கூட என் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி கொடுத்து என்னுடைய பதவியை பறித்தாலும் பரவாயில்லை. நான் சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளேன்.
- மத்திய அரசு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கியும் தெலுங்கானா வளர்ச்சி அடையாமல் இருக்க காரணம் முதல்வரின் செயல்பாடுதான் என்று விளாசினார்.
- சந்திரசேகரராவுக்கு தி.மு.க. மீது லேசாகவாது சந்தேக கோடு விழ வைக்கலாம்.
அரசியல்வாதிகள் என்றாலே அதிரடி, பல்டி, அந்தர்பல்டி... என்று களத்தில் எந்த பக்கம் நின்றாலும் எப்படியும் அடித்து ஆடக்கூடியவர்கள்.
அப்படி இருக்கும் போது ஒட்டுமொத்தமாக இந்திய அரசியல் களத்தில் விளையாடும் மோடியின் அரசியல் கில்லாடித் தனத்தை சாதாரணமாக எடைபோட்டு விட முடியுமா...?
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி தெலுங்கானா மற்றும் தமிழ் நாட்டில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பிரதமர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் அந்த அந்த மாநில முதலமைச்சர் கலந்துகொள்வது மரபு. ஆனால் தெலுங்கானாவில் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் அந்த மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளவில்லை.
இதை பிரதமர் மோடி தனக்கே உரிய பாணியில் வெளுத்து வாங்கினார். அதாவது அரசு வேறு அரசியல் வேறு. இப்படி ஒரு முதல்வர் அரசு திட்டங்களையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் எப்படி மாநிலம் வளரும்.
மத்திய அரசு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கியும் தெலுங்கானா வளர்ச்சி அடையாமல் இருக்க காரணம் முதல்வரின் செயல்பாடுதான் என்று விளாசினார். அங்கிருந்து சென்னைக்கு வந்த மோடி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார். வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைக்க செல்லும் இடத்துக்கு செல்ல 2 பேட்டரி கார்கள் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன.
அதில் ஒரு காரில் முதல்வர், கவர்னர், அமைச்சர்கள் ஏறியிருந்தனர். ஒரு கார் மோடி ஏறுவதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் மோடியோ தனது காருக்கு வரும்படி மு.க.ஸ்டாலினையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். கொடி அசைத்தபோதும் மு.க.ஸ்டாலினை தன் அருகில் நிற்க வைத்து கொண்டார்.
இதன்மூலம் அரசியலில் இருவரும் மோடியின் எதிரிகளாக இருந்தாலும் சந்திரசேகரராவை விட மு.க.ஸ்டாலின் மக்கள் நலனுக்காக பாடுபடுகிறார் என்று உணர வைத்து மக்கள் மத்தியில் சந்திரசேகரராவின் செல்வாக்கை சாய்ப்பதற்கான யுக்தி ஒன்று.
இன்னொரு விதத்தில் பார்த்தால் சந்திரசேகர ராவ் அமைக்கும் கூட்டணிக்கு மு.க.ஸ்டாலினும் செல்வார் என்று எதிர் பார்க்கும் நிலையில் தன்னுடன் நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொண்டால் சந்திரசேகரராவுக்கு தி.மு.க. மீது லேசாகவாது சந்தேக கோடு விழ வைக்கலாம்.
மூன்றாவதாக என்ன தான் தி.மு.க. மோடியை வசை பாடினாலும் அவரது பெருந்தன்மையை பார் என்று தமிழக மக்கள் யோசிப்பார்கள். அதன் மூலம் மோடியின் இமேஜ் வளரவும் வாய்ப்பு உண்டு.
அதாவது ஒரே கல்லில் இரண்டுக்கும் மேற்பட்ட மாங்காய்களை மோடி வீழ்த்தி இருக்கிறார். அரசியலில் மோடி கில்லாடி தான்.
- கொச்சியில் பாரதிய ஜனதா கட்சியினரின் இளைஞரணி ரோடு ஷோவிலும் கலந்து கொள்கிறார்.
- கிறிஸ்தவ அமைப்பினர் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக பேசிவருவது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான முதல் வந்தே பாரத் ரெயில் சேவை நாளை தொடங்கப்படுகிறது.
புதிய ரெயில் சேவையை திருவனந்தபுரத்தில் நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் இன்று மாலை கொச்சி நகருக்கு வருகிறார். கொச்சியில் பாரதிய ஜனதா கட்சியினரின் இளைஞரணி ரோடு ஷோவிலும் கலந்து கொள்கிறார்.
பின்னர் பாரதிய ஜனதா இளைஞர் அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.
இந்நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு கேரளாவில் கிறிஸ்தவ பேராயர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். குறிப்பாக சீரோ மலபார் தேவாலய பேராயர் கர்தினால் ஜார்ஜ் ஆல ஞ்சேரி, ஆர்த்தடாக்ஸ் ஆலய பேராயர் பசலியோ மார்தோமா மாத்யூ, யாக்கோ பைட் சிரியன் ஆலய பேராயர் ஜோசப் கிரிகோரியஸ், கோட்டயம் கினாயா கத்தோலிக்க தேவாலயம் ஆயர் மேத்யூ முல்லக்காடு, கால்டியன் ஆலய ஆயர் யூஜின் குரியகோஸ், சீரோ மலங்கரா சபை கார்டினால் கிளிமீஸ், லத்தீன் சர்ச் பேராயர் ஜோசப் காளத்திபரம்பில், சிரியன் சர்ச் ஆப் கானான் ஆயர் குரியகோஸ் சேவரியாஸ் ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்கள்.
கேரளாவில் சமீபத்தில் கிறிஸ்தவ பேராயர் ஒருவர் பேசும்போது, கேரள ரப்பர் விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றினால் கிறிஸ்தவர்கள் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றும், பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கேரளாவில் கணக்கை தொடங்கும் நிலை உருவாகும் எனவும் கூறியிருந்தார்.
இதுபோல இன்னொரு பேராயர் கூறும்போது, பாரதிய ஜனதா கட்சி ஒன்றும் தீண்டதகாத கட்சி இல்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து கடந்த உயிர்ப்பு பெருவிழாவின் போது பாரதிய ஜனதா கட்சியினர் கிறிஸ்தவ மத போதகர்கள் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கேரளாவின் கிறிஸ்தவ அமைப்பினர் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக பேசிவருவது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கேரளா வரும் பிரதமர் மோடியை கிறிஸ்தவ பேராயர்கள் சந்திக்க இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் என மக்கள் நீதிமய்யம் கட்சியை ஆரம்பித்த கமல், அதனை விட்டு தற்போது விலகி செல்வது போல் தெரிகிறது.
- கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை கர்நாடகாவில் பா.ஜ.க தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
கோவை:
கோவை பந்தய சாலையில் உள்ள மத்திய மண்டலம் அருகே கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவின் சட்டமன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் திறந்து வைத்து மக்களுக்கு இளநீர் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்பதே தெரியவில்லை. அந்தளவு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது. அமைதி பூங்கா என்று அழைக்கப்பட்டு வந்த தமிழகம் தற்போது அந்த நிலைமையில் இருந்து மாறி சென்று வருகிறது.
தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் என மக்கள் நீதிமய்யம் கட்சியை ஆரம்பித்த கமல், அதனை விட்டு தற்போது விலகி செல்வது போல் தெரிகிறது.
மாற்றத்தை கொண்டு வருவோம் என்று கூறிய அவர்கள் தற்போது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஊழல் கறை படிந்த காங்கிரஸ், தி.மு.கவின் நட்சத்திர பேச்சாளராக கமல்ஹாசன் திகழ்ந்து வருகிறார்.
பா.ஜ.கவை பொறுத்தவரை கோவை மட்டுமின்றி எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறும். கர்நாடகாவில் பா.ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
பா.ஜ.கவில் இருந்து எவ்வளவு பெரிய தலைவர்கள் சென்றாலும் அதனால் கட்சிக்கு எந்த பின்னடைவும் கிடையாது. ஏனென்றால் தொண்டர்கள் கட்சியோடு இருக்கிறார்கள். இதனால் பாதிப்பு என்பது இல்லை.
கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை கர்நாடகாவில் பா.ஜ.க தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக அண்ணாமலை ஏற்கனவே விளக்கம் கொடுத்து விட்டார். இனி இதுபற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளத்தை உறுதி செய்வதற்கான முக்கிய தளமாக குவாட் உருவெடுத்துள்ளது.
- நமது நோக்கத்திற்காக ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் செயலாற்றி வருகிறோம்.
ஹிரோஷிமா:
வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளத்தை உறுதி செய்வதற்கான முக்கிய தளமாக குவாட் உருவெடுத்துள்ளது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் வெற்றி மற்றும் பாதுகாப்பு என்பது, ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமானது. ஆக்கப்பூர்வமான கொள்கை மற்றும் ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையில் நாம் முன்னேறி வருகிறோம்.
சுதந்திர மற்றும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியம் குறித்த நமது நோக்கத்திற்காக ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் செயலாற்றி வருகிறோம். உலகளாவிய நன்மை, மக்கள் நலன், அமைதி மற்றும் வளத்திற்காக குவாட் அமைப்பு தொடர்ந்து பணியாற்றும்.
2024ல் இந்தியாவில் குவாட் உச்சி மாநாட்டை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி துறைகளில் ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளை அதிகரிப்பது
- சுரங்கம் மற்றும் முக்கியமான கனிமங்கள் ஆகிய துறைகளில் மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஆஸ்திரேலிய நேரப்படி இன்று காலை அவர் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசியதாக தெரிகிறது. அவர்களின் பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்கதி துறைகளில் ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளை அதிகரிப்பது குறித்து இடம் பெற்றது. பொருளாதார ஒத்துழைப்பு அதிகரிப்பது இந்த பேச்சுவார்த்தையில் முக்கியம்சமாக இருந்தது.
இந்த பேச்சுவார்த்தைக்கு முன் பிரதமர் மோடிக்கு சிட்னியில் கவர்னர் ஜெனரல் அதிகாரப்பூர்வ மாளிகையில் வழங்கப்பட்ட அரசு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கடந்த ஆண்டு இறுதிச் செய்யப்பட்டது. தற்போது இரண்டு நாடுகளும் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஒரு நிலையான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ- பசிபிக்கிற்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்கின்றன. இந்த பார்வையில் ஆதரிப்பதில் நாம் ஒன்றாக முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்தார்.
சுரங்கம் மற்றும் முக்கியமான கனிமங்கள் ஆகிய துறைகளில் எங்களது மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினோம்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
நேற்று சிட்னியில் ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களை சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுடன் உரையாற்றினார்.
- மிர்சாபூர் கம்பளம், நாகபுரி தேக்கு, திரிபுரா மூங்கில், ராஜஸ்தான் கல் சிற்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- அசோகர் சின்னத்துக்கான பொருட்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் இருந்து பெறப்பட்டன.
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது. அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:-
* புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1250 கோடி.
* குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த எச்.பி.சி. நிறுவனத்தை சேர்ந்த பிமல் படேல் என்பவர் இந்த பாராளுமன்ற கட்டிடத்துக்கான வடிவமைப்பை செய்து கொடுத்து உள்ளார்.
* டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டி உள்ளது.
* 4 மாடிகளுடன் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.
* பாராளுமன்ற மக்களவையில் ஒரு மேஜையின் முன் உள்ள இருக்கைகளில் 2 எம்.பி.க்கள் அமர முடியும்.
* எம்.பி.க்கள் தங்களின் முன்பு உள்ள டிஜிட்டல் தொடுதிரை மூலம் பார்த்து வாசிக்கலாம். தேவையான வற்றை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
* அரசியல் சாசன காட்சியகம், கூட்டரங்கம், 6 கமிட்டி அறைகளுக்கான 92 அறைகள் இடம்பெற்று உள்ளன.
* ஆடியோ, வீடியோ சார்ந்த உபகரணங்கள் மேம்பட்டதாக உள்ளன.
* அலுவலக அறையில் மத்திய மந்திரிகளுக்காக 92 அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
* மின்சக்தி பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சில அம்சங்கள் உள்ளன.
* மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது.
* ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்து மறுபடியும் பயன்படுத்தும் அம்சங்களும் உள்ளன.
* மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், அதிகாரிகள் இளைப்பாறுவதற்காக இளைப்பாறும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இது உணவோடு சேர்ந்து உரையாடக்கூடிய இடமாக உள்ளது.
* பசுமை நாடாளுமன்றம் என்ற முயற்சியும் எடுக்கப்பட்டுள்ளது.
* 23 லட்சத்து 4 ஆயிரத்து 95 மனித வேலை நாட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
* இந்த கட்டிடத்தின் ஆயுள் காலம் 150 ஆண்டுகள்.
* கட்டிடக் கலையில் இந்தியாவின் அனைத்து மாநில அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
* 75 ரூபாய் நாணயம் மற்றும் தபால்தலை வெளியிடப்பட்டது.
* மக்களவையில் 888 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்கள் என மொத்தம் 1272 எம்.பி.க்கள் அமர முடியும்.
* மிர்சாபூர் கம்பளம், நாகபுரி தேக்கு, திரிபுரா மூங்கில், ராஜஸ்தான் கல் சிற்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
* சிவப்பு-வெள்ளை மார்பிள் ராஜஸ்தானில் இருந்தும், கேஷரியா பச்சை நிற கற்கள் உதய்பூரில் இருந்தும், சிவப்பு நிற கிரானைட் கற்கள் அஜ்மீரில் இருந்தும், வெள்ளை நிற மார்பிள் கற்கள் ராஜஸ்தானில் இருந்தும், ஜல்லிக் கற்கள் உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் இருந்தும் கொண்டு வரப்பட்டுள்ளன.
* மேற்கூரைக்கான எக்கு டாமன் டையூவில் இருந்து வரவழைக்கப்பட்டது.
* பித்தளை வேலைகள் குஜராத்திலும், மேசை, இருக்கைகள் செய்யும் பணி மும்பையிலும் நடந்தது.
* அசோகர் சின்னத்துக்கான பொருட்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் இருந்து பெறப்பட்டன.
* அரியானாவில் தயாரிக் கப்பட்ட எம்-சானட் மணல் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்டது. சிமெண்ட் கற்கள் அரியானா, உத்தர பிரதேசத்தில் இருந்து வர வழைக்கப்பட்டன.
* 2020 டிசம்பர் 10-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 2½ ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது.
* மக்களவை மயில் வடிவத்திலும், மாநிலங்களவை தாமரை வடிவத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
* செங்கோல் நிறுவிய நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை உள்ளிட்ட 20 ஆதீனங்கள் பங்கேற்றனர்.
* செங்கோலை பூஜையில் வைத்து பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வழிபட்டனர்.
* மத்திய மந்திரிகள், மாநில முதல்-மந்திரிகள், எம்.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
* பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
* வந்தே மாதரம் பாடலை நாதஸ்வரத்தில் இசைத்த கலைஞர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறினார்.
* திருவாவடுதுறை, தருமபுரி, மதுரை உள்ளிட்ட 20 ஆதீனங்களிடம் பிரதமர் மோடி தனித்தனியாக ஆசி பெற்றார்.
* பாராளுமன்ற திறப்பையொட்டி இஸ்லாம், கிறிஸ்தவம், பவுத்தம் உள்ளிட்ட அனைத்து மத பிரார்த்தனை நடந்தது. இதில் சங்கராச்சாரியார்கள், பாதிரியார்கள், மதகுருமார்கள் பங்கேற்ற னர்.
* பாராளுமன்ற கட்டுமான பணியில் ஈடுபட்ட கட்டுமான பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பிரதமர் மோடி கவுரவித்தார்.
* செங்கோலை உருவாக்கிய உம்மிடி ஜுவல்லர்ஸ் அதிபர்களையும் பிரதமர் மோடி கவுரவித்தார்.
* புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கான கல்வெட்டை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
* சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடிபெட்டிக் குள் சோழர் காலத்து செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். அதன்பிறகு குத்துவிளக்கு ஏற்றினார்.
* அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே என்னும் தேவார பாடல் ஒலிக்கப்பட்டது.
+3
- தென்னிந்திய மாநிலங்களில் பா.ஜ.க. வினவருக்கு இறுக்கமான சூழல் நிலவுகிறது.
- காங்கிரஸ் கட்சியா பாஜகவா என்றில்லாமல் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை அடிப்படையில் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைய வேண்டும்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமையில் நடந்தது. விழாவுக்கு பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன், துரை ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வரும் தலைவர்களை ஊக்குவிக்கும் விதமாக சமூகநீதி, சமத்துவம், பன்மைத்துவம், மத சார்பின்மை போன்றவற்றிற்காக பாடுபடும் சான்றோரை கவுரவிக்கும் வகையில் அம்பேத்கர் சுடர் விருது சி.பி.எம்.எம்.எல். பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யாவுக்கும், பெரியார் ஒளி விருது, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் ராஜாவுக்கும், காமராஜர் கதிர் விருது தமிழக சபாநாயகர் அப்பாவுக்கும் திருமாவளவன் வழங்கி பாராட்டினார்.
காயிதே மில்லத் பிறை விருது பெங்களூரு சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மோகன் கோபாலுக்கும், செம்மொழி ஞாயிறு விருது தமிழறிஞர் தாயம்மாள் அறவாணனுக்கும் திருமாவளவன் வழங்கி கவுரவித்தார். விருதுகளுடன் ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் அவர் வழங்கினார்.
கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:-புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை வைப்பதற்கான தேவை என்ன இருக்கிறது? அந்த திறப்பு விழாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து ஆதீனங்களை வரவழைத்து தேவாரம் பாடலைப் பாட வைப்பதற்கான அவசியம் என்ன?
தென்னிந்திய மாநிலங்களில் பா.ஜ.க. வினவருக்கு இறுக்கமான சூழல் நிலவுகிறது. கர்நாடகாவில் கூட மெல்ல மெல்ல முன்னேறி உள்ளனர், ஆனால் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் ஒன்று, இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே அவர்கள் திக்கு முக்காடுகின்றனர். எனவே திட்டமிட்டு அவர்கள் தென்னிந்தியாவில் ஊடுருவ முயற்சிக்கிறார்கள்.பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டை குறிவைத்து விட்டனர்.
இந்திய தேசத்தை காப்பாற்ற நாம் ஒன்றிணைய வேண்டும். காங்கிரஸ் கட்சியா பாஜகவா என்றில்லாமல் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை அடிப்படையில் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைய வேண்டும்.
பா.ஜ.க. சங்பரிவார் அமைப்புகள் அமைக்க நினைப்பது இந்த கஷ்டம் என்னும் தேசியமே. இந்து ராஷ்ட்ரம் என்பது பிராமண தேசம் என்பது தான் உண்மையான பொருள். இந்த அடிப்படை புரியாமல் மோடியும் அண்ணாமலையும் பிராமணர்களுக்கு எடுபிடி வேலை செய்து வருகின்றனர். இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடும் என்று அறிவித்திருக்கிறார்கள். மக்கள் தொகை அடிப் படையில் நாடாளுமன்ற உறுப்பினரின் எண்ணிக்கை கூடினால் அதனை வரவேற்கலாம்.
ஆனால் பாஜகவினர் திட்டமிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வட மாநிலங்களில் மட்டும் உயர்த்தி அதன்பின் தேர்தல் வந்தாலும் மத அரசியலைத் தூண்டி தனக்கென தனி மெஜாரிட்டியை பெற்று தொடர்ந்து ஆட்சியில் இருக்கலாம் என்ற தொலை நோக்கு பார்வையுடன் திட்டமிட்டு இந்த அறிவிப்பை செய்து இருக்கிறார்கள். பா.ஜ.க.வினரை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும், கட்சிகள் இணையாவிட்டாலும் மக்கள் விரட்டி அடிப்பார்கள். 2024-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழும். ஆட்சி மாற்றம் நிகழும் போது திரவுபதி முர்மு நிச்சயமாக மரியாதை செய்யப்படுவார்.
தமிழ்நாட்டில் 2 எம்.பி.க்கள் 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட சின்ன கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்க லாம், ஆனால் இந்திய அளவில் சனாதனத்தை எதிர்க்கும் வலிமையான கட்சி விடுதலை சிறுத்தைகள்.
பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றுதான் நம் முன்னால் இருக்கின்ற ஒற்றை சவால் என்கின்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
விழாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுசெயலாளர் டி.ராஜா பேசியதாவது:-
தலைவர்களின் பெயர்களில் விருதுகள் வழங்குவது, இந்தியாவை இடது பக்கம் திருப்புவது காலத்தின் தேவையாக இருக்கிறது என்பதை இந்த விழா உணர்த்துகிறது.
இந்திய நாடு எந்த காலத்திலும் ஒரு மதம் சார்ந்த நாடாக போய் விடக்கூடாது என்று அம்பேத்கர் பேசினார், ஆனால் இன்று மோடி ஆட்சி காலத்தில் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது?
மோடி அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். மைய அரசு அதிகாரங்களை குவித்துக் கொள்ளக் கூடாது. இந்திய பொருளாதாரம் சிக்கலில் உள்ளது.
ஜனநாயகத்தின் தாய் வீடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. நாட்டின் முதல் குடிமகள் திரௌபதி முர்மு எங்கே? இந்த நாடு மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கிறது மாற்றத்திற்கான போர் குரலை மக்கள் எழுப்ப தொடங்கிவிட்டனர்.
நாடு பாதுகாக்கப்பட வேண்டுமானால் பாசிச பா.ஜ.க. அரசு தூக்கி எறியப்பட வேண்டும். பா.ஜ.க. அரசு ஜனநாயகத்தையே தவிர்த்து வருகிறது. இதனை முறியடித்து நாடு, அரசியல் சட்டம், ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க் கள் எஸ்.எஸ்.பாலாஜி, வூளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு, மாநில் நிர்வாகிகள் வன்னி அரசு, உஞ்சை அரசன், பாவரசு, பால சிங்கம், தயாளன், தகடூர் தமிழ் செல்வன், பாவலன், வீர ராஜேந்திரன், வக்கீல் பார்வேந்தன், பள்ளிக் கரணை ஆர்.பன்னீர்தாஸ், மாவட்ட செயலாளர்கள் வி.கோ.ஆதவன், இரா. செல்வம், செல்லத்துரை, அம்பேத்வளவன், ரவி சங்கர் மற்றும் நீல சந்திர குமார், முருகையன், சிறுத்தை வீ.கிட்டு, செம்பை வீரமுத்து, கே.சந்திரன், ஸ்டீபன், எழிலரசு, மயிலை குமரப்பா, ஆ.வேலாயுதம், ஜெயபாபு சோழன், கடலூர் துணை மேயர் தாமரை செல்வன், பாவேந்தன், நந்தன், ஆதிமொழி, சேலம் காயத்ரி, அருண்பிரேம், லைவ் கார்த்திக், பரம செல்வம், விடுதலை, தாமரை உள்ளிட்ட ஆயிரக்கணக் கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- கேரளாவில் கத்தோலிக்கர்களை பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக மாற்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
- பிரதமர் மோடி கேரளா சென்றபோது அவரை 8 ஆயர்கள் சந்தித்து பேசினார்கள்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் சில தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று கொச்சி வந்தார்.
கொச்சியில் அவர் திருச்சூர் கத்தோலிக்க பேராயர் மார் ஆண்ட்ரூஸ் தாழத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
ஆனால் இந்த சந்திப்பின்போது எடுத்து கொண்ட புகைப்படங்களை மத்திய மந்திரி அமித்ஷா சமூக வலைதளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அதில் கேரளாவுக்கு வரும்போது மனம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் கத்தோலிக்கர்களை பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக மாற்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு கட்டமாக கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது மாநில பாரதிய ஜனதா நிர்வாகிகள் கத்தோலிக்கர்களின் வீடுகளுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
அதன்பின்பு கேரளாவில் உள்ள சில கத்தோலிக்க ஆயர்கள் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். மேலும் பிரதமர் மோடி கேரளா சென்றபோது அவரை 8 ஆயர்கள் சந்தித்து பேசினார்கள். அதன்பின்பு பேராயர் மார் ஆண்ட்ரூஸ் தாழம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த நிலையில் கேரளா வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பேராயர் மார் ஆண்ட்ரூஸ் தாழத்தை சந்தித்து பேசியிருப்பது கேரள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.