என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருமங்கலம்"
மதுரை:
மதுரை நரிமேடு மருது பாண்டியன் நகரை சேர்ந்தவர் கற்பூர பாண்டியன் (வயது 24). பிரபல ரவுடி. இவர் கடந்த ஆண்டு தல்லா குளத்தில் நண்பர்களுடன் சேர்ந்து வாலிபர் ஒருவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதையடுத்து கற்பூர பாண்டியன் மதுரையை காலிசெய்துவிட்டு திருமங்கலம் அருகில் உள்ள மருதங்குடி கிராமத்தில் வசித்து வருகிறார். அங்கிருந்து தினமும் மதுரை வந்து தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார்.
இந்த நிலையில் கற்பூர பாண்டியன் சம்பவத்தன்று நண்பர் அய்யனாருடன் மோட்டார் சைக்கிளில் தல்லாகுளம் சென்று மருதங்குடிக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.
அப்போது இலந்தை குளம் விலக்கில் வந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் கற்பூர பாண்டியனை வெட்டியது.
படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த கற்பூர பாண்டியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கற்பூர பாண்டியனை வெட்டிய திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையை சேர்ந்த சுடலை முத்து, மதுரை ஜெய்ஹிந்த் புரம் ஜெகன் (33), தினேஷ் குமார் (23), சங்கர் (23), லோகேஸ் கண்ணன் (23), தனசேகர் (21) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரவுடிகளுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கற்பூர பாண்டியனை கொல்ல முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கற்பூர பாண்டியனிடமும் கொலை முயற்சி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள கொம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மணிகண்டன் (வயது 20). தனியார் பஸ் கண்டக்டர்.
கொம்பாடியில் இருந்து மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் திருமங்கலம் புறப்பட்டார். விருத்தன்குளம் வளைவு பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் சரிந்தது.
இந்த விபத்தில் மணிகண்டன் பலத்த காயமடைந்தார். அவரை 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மணிகண்டன் இறந்தார்.
விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). வெல்டிங் தொழிலாளியான இவர் நேற்று திருமங்கலம் அருகே உள்ள புதுப்பட்டிக்கு வேலைக்கு சென்று இருந்தார்.
வேலையை முடித்து விட்டு செல்வராஜ் மதுரை ஆவின் நகரை சேர்ந்த வேல்முருகன் (48) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.
மோட்டார் சைக்கிளை வேல்முருகன் ஓட்டி வந்தார். மறவன்குளம் மதுரை மெயின் ரோட்டில் வந்து கொண்டு இருந்த போது நாகர்கோவிலுக்கு சென்ற அரசு பஸ் எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பின்னால் அமர்ந்து இருந்த செல்வராஜ் தவறி கீழே விழந்தார். தலையில் பலத்தக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் செல்வம் என்பவரை கைது செய்தார்.
திருமங்கலம் அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்தவர் ஓச்சாதேவர் (70). இவர் அங்குள்ள மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்த போது அந்த வழியா வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் ஓச்சாதேவரின் 2 கால்களும் துண்டானது.
அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.
பேரையூர்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் மணிமாறன் (வயது29). மெக்கானிக்கான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையையொட்டி மணிமாறன் ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று அவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு ஊருக்கு புறப்பட்டார்.
மேலக்கோட்டை பெரியார் காலனி 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மணிமாறன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று இரவு மணிமாறன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேரையூர்:
திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள வி.அம்மாபட்டி கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி (வயது 40). பாரம் ஏற்றும் தொழிலாளி.
இவர் காடனேரியில் உள்ள கல்குவாரிக்கு கல் பாரம் ஏற்றிச் சென்றார். டிராக்டரில் மற்ற தொழிலாளிகளுடன் சேர்ந்து கற்களை ஏற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது குவாரியின் மேல் பகுதியில் இருந்து பாறை உருண்டு வந்து அமுக்கியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அய்யாச்சாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் அய்யாச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பேரையூர்:
திருமங்கலம் மின் வினியோக செயற்பொறியாளர் ரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருமங்கலம் துணை மின் நிலையத்தில் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
எனவே அந்த நேரத்தில் திருமங்கலம் நகர் பகுதிகள், உலகாணி, சித்தாலை, சாத்தாங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சிவரக்கோட்டை, மேலக்கோட்டை, மைக்குடி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
கப்பலூர் துணை மின் நிலையத்திலும் 15-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
எனவே அந்த சமயத்தில் கப்பலூர், கப்பலூர் பகுதி தியாகராஜர் மில், உச்சப்பட்டி, தனக்கன்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம், கரடிக்கல் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பேரையூர்:
திருமங்கலத்தில் உள்ள துப்புரவு தொழிலாளர் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 48). திருமங்கலம் நகராட்சியில் கடந்த 20 ஆண்டாக துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணன் காய்ச்சலால் அவதிப்பட்டார்.
உடனடியாக அவரை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.
கிருஷ்ணன் எந்த வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் என்று தெரியவில்லை. கடந்த 10 மாதத்தில் திருமங்கலம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.
போரூர்:
திருமங்கலம் சி.பி.டபுள்யூ. குடியிருப்பு 46-வது பிளாக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஞானசேகர் (வயது52). தேனாம்பேட்டையில் உள்ள மத்திய அரசு கணக்கு தணிக்கை அலுவலகத்தில் அதிகாரியாக இருந்தார். இவரது மனைவி மார்க்ரெட். இவர்களுக்கு மகளும், மகனும் உள்ளனர்.
இன்று காலை வெகு நேரமாகியும் ஞானசேகரின் படுக்கையறை கதவு திறக்க வில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அங்குள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு ஞானசேகர் தற்கொலை செய்து இருந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து திருமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா மற்றும் போலீசார் ஞானசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் ஞானசேகர் கடந்த சில மாதங்களாக கடன் பிரச்சினையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட எஸ்.வளையபட்டியைச் சேர்ந்தவர் இளங்கோ (வயது 29). இவரது மனைவி பஞ்சவர்ணம் (27).
இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. செல்வகுமார் (7) என்ற மகன் உள்ளான். கடந்த சில மாதங்களாக இளங்கோவுக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தகராறு உருவானது.
நேற்றும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் பஞ்சவர்ணம் மற்றும் இளங்கோ தீக்காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர்.
இது குறித்து நாகையாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது பஞ்சவர்ணம் கூறுகையில், குடும்ப தகராறில் கணவர் இளங்கோ, என்மீது மண் எண்ணை ஊற்றி தீ வைத்தார். அந்த அறையில் இருந்த மகனை காப்பாற்ற வந்தபோது நான் கணவரை கட்டிப்பிடித்தேன் என்றார்.
மேலும் கணவரின் செயலுக்கு அவரது பாட்டி பேச்சியம்மாள் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
அதன்பேரில் இளங்கோ, பேச்சியம்மாள் மீது நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ரவுடியாக வலம் வந்தவர் டாக் ரவி என்ற ரவிக்குமார் (வயது 47). இவர் மதுரை எல்லீஸ் நகரில் குடியிருந்து வருகிறார்.
இவர் மீது முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, வரிச்சியூர் செல்வத்தின் தம்பி இளங்கோ கொலை வழக்கு உள்ளிட்ட 4 கொலை வழக்குகள் உள்பட 24 வழக்குகள் உள்ளன.
2014-ம் ஆண்டுக்கு பின் இவர் மீது வழக்கு எதுவும் பதிவாகவில்லை. தற்போது 2 வழக்குகள் மட்டும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் திருமங்கலம் அருகேயுள்ள எர்ர மலம்பட்டியைச் சேர்ந்த பீட்ராமன் (45) என்பவரிடம் டாக் ரவி என்ற ரவிக்குமார் ரூ.1 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று திருமங்கலம் அருகே உள்ள மறவன்குளம் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்திற்கு டாக் ரவி வந்ததாகவும், அப்போது பிட்ராமன் தான் கொடுத்த 1 லட்ச ரூபாய் பணத்தை கேட்டதற்கு டாக் ரவி ஆபாசமாக பேசியதோடு, காலி பீர் பாட்டிலை எடுத்து கொலை செய்யும் நோக்கத்துடன் அவரை குத்த முயன்றதாக தெரிகிறது.
பின்னர் ராமனின் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவுடி ராக் ரவி கைது செய்யப்பட்டார். திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு சூர்யா (வயது 13), ஆறுமுகம் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
சூர்யா அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை மல்லிகா மகன் சூர்யாவுடன் 4 வழிச்சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர்.
தாய்-மகன் 4 வழிச் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக சூர்யா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சூர்யா ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தான். இதைப் பார்த்த மல்லிகா அதிர்ச்சியில் உறைந்தார்.
அங்கிருந்தவர்கள் சூர்யாவை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சூர்யா பரிதாபமாக இறந்தான்.
புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துச்செல்வம் (28) என்பவரை கைது செய்தனர்.
பேரையூர்:
பருவ மழை மற்றும் கஜா புயல் காரணமாக மழை பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதன் காரணமாக மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயத்துக்காக வைகை அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சில ஆண்டுகளாக வற்றிக்கிடந்த மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் கண்மாய் தற்போது நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இந்த தண்ணீர் கம்பிக்குடி கால்வாய் மூலமாக திருமங்கலம் அருகே உள்ள பெரிய ஆலங்குளம் கண்மாய்க்கு வந்தடையும்.
இந்த கண்மாய் நிரம்பிய பின் அருகில் உள்ள ஓ.ஆலங்குளம், விருசங்குளம், பெரிய உலகாணி, சின்னஉலகாணி ஆகிய பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கண் மாய்களுக்கு செல்லும்.
இதன்மூலம் ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது நிலையூர் கண்மாய் நிரம்பி, பெரிய ஆலங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் சென்றது. அந்த கண்மாயும் தற்போது நிரம்பியதால் உபரி நீர் அருகில் உள்ள ஓ.ஆலங்குளம், விருசங்குளம் கண்மாய்களுக்கு செல்கிறது.
ஆனால் இந்த கிராமங்களுக்கு தண்ணீரை சமமாக பங்கீடு செய்யவில்லை என விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். நேற்று ஓ.ஆலங்குளத்துக்கு மட்டும் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடுவதாகவும், விருசங்குளத்துக்கு பாரபட்சம் காட்டுவதாகவும் புகார் கூறி, அந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் மறியல் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் ஓ.ஆலங்குளத்துக்கு செல்லும் தண்ணீரை பெரிய ஆலங்குளம் கிராம மக்கள் இன்று மணல் மூட்டைகளை அடுக்கி தடுத்து நிறுத்தினர். இதனால் ஓ.ஆலங்குளம், விருசங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு தண்ணீர் செல்வது முற்றிலும் தடைபட்டது.
இதை கண்டித்து இன்று காலை ஓ.ஆலங்குளத்தை சேர்ந்த 100-க்கும மேற்பட்டோர் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெரிய ஆலங்குளத்தில் இருந்து சரிசமமாக மற்ற ஊர்களுக்கு திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மறியல் குறித்து தகவல் அறிந்த அதிகாரி பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அனைத்து கண்மாய்களும் நிரம்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
கம்பிக்குடி கால்வாய் தண்ணீரை பங்கிடுவது தொடர்பாக கிராம மக்களிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. பொதுவாக ஏரி, குளங்கள், கண்மாய்கள் ஆகியவை பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில்தான் இருக்கும். ஆனால் இந்த பகுதியில் சிலர் தன்னிச்சையாகவே கண்மாய்க்கு வரும் தண்ணீரை அடைத்து வருகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மெத்தனமாக இருந்து கண்டுகொள்வதில்லை என அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்