search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105019"

    வில்லியனூரில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர்:

    வில்லியனூர் பத்மினி நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது41). இவர் கணவரை விட்டு பிரிந்து தனியாக வந்து தனது மகனுடன் வசித்து வந்தார். புதுவையில் உள்ள பாத்திரக்கடை ஒன்றில் வேலைபார்த்து லட்சுமி குடும்பத்தை நடத்தி வந்தார்.

    இதற்கிடையே லட்சுமிக்கு நெஞ்வலி மற்றும் ரத்த அழுத்த நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆஸ்பத்திரியில் காண்பித்து சிகிச்சை பெற்று வந்தும் நோய் முற்றிலுமாக குணமாகவில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்த லட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று இரவு மகன் தூங்கிய பின்னர் லட்சுமி மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு தினகரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரஷ்யாவில் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் ஆசையை அதிபர் புதின் பூர்த்தி செய்துள்ளார். #Kremlin #Putin
    ரஷ்யாவின் தெற்கே ஸ்டாவ்ரோபோல் பகுதியில் வசித்து வரும் 10 வயது சிறுவனுக்கு தீவிர நோய் இருந்தது.  இதனால் அவன் விரும்பிய சம்போ என்ற விளையாட்டில் தொடர்ந்து பயிற்சி பெற முடியாமல் அதில் இருந்து விலக வேண்டியிருந்தது.

    அவனுக்கு ரஷ்ய அதிபர் புதினுடன் கைகுலுக்க வேண்டும் என்ற நீண்டநாள் ஆவல் இருந்தது.  இந்த ஆசை நிறைவேறியுள்ளது.  சிறுவனை கிரெம்ளின் மாளிகைக்கு புதின் வரவழைத்துள்ளார். அங்கு தனது தாயுடன் சென்ற சிறுவனை புதின் சந்தித்து சிறிது நேரம் பேசினார். அதன்பின் அவனிடம் கைகுலுக்கி அவனது ஆசையை பூர்த்தி செய்து வைத்துள்ளார்.

    அவனது போட்டிக்கான ஆடையிலும் புதின் கையெழுத்து இட்டு உள்ளார். நோயை விரட்டிய பின் முதல் போட்டியில் கலந்து கொள்ளும்பொழுது இந்த ஆடையை அணிந்து கொள்ளலாம் என சிறுவனின் தாய் அவனிடம் உறுதி கூறியுள்ளார்.

    ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையில் சுற்றி பார்த்த அந்த சிறுவன் அங்குள்ள பல அறைகளுக்கும் சென்றுள்ளான்.  ஆண்டிரீவ்ஸ்கை என்ற அறைக்கும் அவன் சென்றுள்ளான். இங்கு முக்கிய தலைவர்கள் பதவி ஏற்று கொள்வது வழக்கம்.

    இதுபற்றி சிறுவன் கூறும்பொழுது, நான் மாஸ்கோ நகருக்கு முதன்முறையாக வந்துள்ளேன்.  இதில் நான் ஆர்வமுடன் இருந்தேன். அதிபர் புதின் எனது கைகளை வலிமையுடன் குலுக்கினார் என கூறியுள்ளான்.#Kremlin #Putin
    அறிவியல் பூர்வமாகவே ஓமியோபதி ஆற்றல்மிகு மருந்தாகும். உலகெங்கும் பல கோடி மக்கள் ஓமியோபதி மருந்தால் பயனடைந்து வருகிறார்கள்.
    ஜெர்மனியை சேர்ந்த டாக்டர் சாமுவேல் ஹானிமென் என்பவரால் ஓமியோபதி மருத்துவம் உருவாக்கப்பட்டது. உலகமெங்கும் கோடிக்கணக்கான மக்கள் ஓமியோபதி மருத்துவத்தை பயன்படுத்தி வருகிறார்கள். பன்றி காய்ச்சல் என்கிற ஸ்வின்புளு என்பது சுவாச நோயாகும். வைரஸ் என்கிற நோய் நுண் கிருமிகள் சுவாச மண்டலத்தை தொற்றுகிறது.

    ஸ்வின் இன்புளுன்சா வைரஸ் குடும்பத்தில் உள்ள பலவிதமான இன்புளுன்சா வைரஸ்கள் சுவாச உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஸ்வின் இன்புளுன்சா வைரஸ் நோய் நுண்கிருமிகள் பன்றிகளை இருப்பிடமாக கொண்டுள்ளன. இந்த வைரஸ்கள் பல அணுமானத்தில் இருந்தபோதிலும் முக்கிய இன்புளுன்சாவான சி அதன் துணை இன்புளுன்சா ஏ இவற்றை எச்1என்1, எச்1என்2, எச்2என்1, எச்3என்2, எச்2என்3 என்று அறியப்படுகிறது.

    பன்றிக்காய்ச்சலுக்கு காரணம் இன்புளுன்சா ஏ வைரசின் வரையறுக்கப்பட்டது எச்1என்1. இவை ஏன் எச்1என்1 என்று அழைக்கப்படுகிறது என்றால் இரண்டு பெரிய ஆன்டிஜன் இந்த வைரசின் மேல் காணப்படுகிறது. அவை ஹீம்அக்லுடினின் (எச்), மற்றொன்று நியூராமினிடேஸ்(என்).

    இந்த வைரசால் 65 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள், குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், நாள்பட்ட ஆஸ்துமா, சர்க்கரை நோயாளிகள், இதய நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதாரண சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஏற்படும் இன்புளுயன்சா காய்ச்சல் போலவே சோர்வு, காய்ச்சல், பசியின்மை, தும்மல், இருமல், மூக்கில் நீர்வடிதல், தொண்டைவலி, தலைவலி, உடல்வலி மற்றும் இருமல் ஏற்படும். சிலருக்கு கடுமையான மூச்சு திணறல், மூச்சடைப்பு ஏற்படும். சிலருக்கு வலிப்பு உண்டாகும். நுரையீரல் கடுமையாக தொற்று கிருமியால் பாதிக்கப்படும்போது தவிர்க்க முடியாத மரணம் ஏற்படும்.

    சீதோஷ்ணநிலை மற்றும் தட்பவெப்பம் மாற்றத்தினால் ஸ்வின்புளு, பன்றிக்காய்ச்சல் ஏற்படுகிறது. கூட்ட நெரிசல் நோய் தொற்றும் வேகத்தை அதிகப்படுத்தும். கூட்டநெரிசல் இடங்களில் நோய் பாதிப்பின் அளவு அதிகமாக இருக்கும். மனிதனுக்கு சுவாச சம்பந்தமான தும்மல், இருமல், தொற்றுநோய்க்குள்ளான பொருட்களை தொடுவதால் மூக்கு, கண், வாய் இவற்றை வைரஸ் தொற்று ஏற்பட்ட கைகளால் தொடுவதால் அடுத்தவர்களுக்கு தொற்று ஏற்படுகிறது. சுவாச உறுப்புகளின் மூலமாக ஸ்வின்புளு இன்புளுன்சா வைரஸ் மனிதனின் உடலை வந்து சேர்கிறது.

    நோய் வராமல் தடுப்பதற்கு பொதுஇடங்களில் ஜன்னல், கதவுகளை திறந்து காற்றோட்டமாக வைக்க வேண்டும். பொது கூட்டங்களை தவிர்க்க வேண்டும். இன்புளுன்சா பாதிக்கப்பட்டவர்கள் மாஸ்க் எனும் முகமூடியை அணிந்து, கைக்குட்டையை கொண்டு மூக்கு, வாயை பொத்திக்கொள்ள வேண்டும். இருமல், சளி, தும்மல், களைப்பு போன்ற ஆரம்ப அறிகுறிகள் தோன்றும்போது தனி அறையில் நன்கு ஓய்வெடுக்க வேண்டும். வெளியில் நடமாடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். டாக்டரை உடனடியாக அணுக வேண்டும்.

    கை, முகத்தை அடிக்கடி சோப்பு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக இருமல், தும்மல் ஏற்பட்டவுடன் சோப்பு தண்ணீரில் கை மற்றும் முகத்தை வெந்நீரில் கழுவ வேண்டும்.ஓமியோபதி மருந்துகளை கொண்டு ஸ்வின்புளு என்கிற வைரஸ் இன்புளுன்சாவான பன்றிக்காய்ச்சலை வரும்முன் தடுக்கலாம். ஸ்வின்புளு மட்டும் இல்லாமல் இதுபோன்ற பிற எபிடெமிக் காய்ச்சலையும் (மலேரியா, டெங்கு), ஓமியோபதி ஜீனஸ் எபிடெமிகஸ் மருந்தை கொண்டு பெருவாரியான ஒரே மாதிரியான நோய் குறிகளை கொண்டுள்ள மக்களை நோயின்றி காப்பாற்றலாம்.

    இந்த குறிப்பிட்ட ஒத்த குறிகளை கொண்ட மருந்தை ‘ஜீனஸ் எபிடெமிக்கஸ்’ என்று ஓமியோபதி வைத்திய சாஸ்திரம் கூறுகிறது. இப்படி தேர்வு செய்யப்படும் ஓமியோபதி ஜீனஸ் எபிடெமிக்கஸ் மருந்தை கொண்டு ஆரோக்கியமான மனிதர்களுக்கு கொடுத்து வருமுன்னர் தடுக்கலாம். அறிவியல் பூர்வமாகவே ஓமியோபதி ஆற்றல்மிகு மருந்தாகும். உலகெங்கும் பல கோடி மக்கள் ஓமியோபதி மருந்தால் பயனடைந்து வருகிறார்கள்.

    ஓமியோபதி மருந்தால் பின்விளைவுகள் துளியும் ஏற்படாது. பாதுகாப்பான மருந்துகள், வேறு நோய்களுக்கு ஆங்கில மருந்துகள் உட்கொண்டாலும் ஓமியோபதி மருந்துகளை பயன்படுத்தலாம். ஆங்கில மருந்துக்கும், ஓமியோபதி மருந்துக்கும் முரண்பாடு ஏற்படாது. ஓமியோபதி மருந்துகள் எதிர்ப்பு சக்தியும், பலத்தையும் கொடுத்து காய்ச்சலை குறைப்பதோடு, பசியை ஏற்படுத்தும். ஓமியோபதி மருந்துகள் பாதுகாப்பானவை. எல்லா வயதினரும் கை குழந்தைகள் உள்பட அனைவரும் பயன்படுத்தலாம். கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் பயன்படுத்தலாம்.

    ஓமியோபதியில் இன்புளுன்சா எனும் புளு காய்ச்சலை குணப்படுத்த பொதுவாக 132 மருந்துகள் உள்ளன. இருப்பினும் நோய் அறிகுறிகளை கருத்தில் கொண்டு ஆராய்ந்து நடைமுறையில் உள்ள புளு நோயாளியின் அறிகுறிகளை கருத்தில் கொண்டு சரியான ஒத்த ஓமியோபதி ஜீனஸ் எபிடெமிக்கஸ் புளு மருந்தை ஓமியோபதி டாக்டர் தேர்வு செய்து கொடுப்பார். அப்படி தேர்வு செய்யப்பட்ட மருந்தை அதே பகுதியில் அதே அறிகுறிகளோடு கூடிய புளு நோயாளிகளை கண்டறிந்து ஓமியோபதி ஜீனஸ் எபிடெமிக்கஸ் மருந்தை கொடுத்தால் புளு குணமாகும். ஆரோக்கியமான மனிதர்களுக்கு கொடுத்து இன்புளுன்சா எனும் ஸ்வின்புளு என்ற பன்றி காய்ச்சலை தடுக்கலாம், குணப்படுத்தலாம்.

    தமிழ்நாடு அரசு ஓமியோபதி கவுன்சிலில் பதிவு பெற்ற ஓமியோபதி டாக்டர்களின் ஆலோசனையில்லாமல் மருந்து கடைகளில் தானாகவே ஸ்வின்புளு பன்றிக்காய்ச்சல் மருந்து வாங்கி உபயோகிக்க வேண்டாம்.

    டாக்டர் கே.கிங் (ஓமியோ),

    தமிழ்நாடு அரசு ஓமியோபதி துறை முன்னாள் கவுரவ ஆலோசகர்
    பன்றிக்காய்ச்சலை எவ்வாறு கட்டுப் படுத்துவது, அதனை தடுக்க என்ன செய்யலாம், பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    மீண்டும் டெங்கு, பன்றிக்காய்ச்சல்... ஆகிய வார்த்தைகள் மக்களுக்கு அச்சத்தை உருவாக்கி வருகின்றன. பன்றிக்காய்ச்சல் எப்படி பரவுகிறது, அதன் அறிகுறிகள் என்னென்ன, அதற்கான சிகிச்சைகள் குறித்து மதுரை பெரிய ஆஸ்பத்திரி டீன் டாக்டர் மருதுபாண்டியன் நம்மிடம் விளக்கம் அளித்தார். அதுபற்றிய தகவல்களை இனி விரிவாக காணலாம்.

    ‘ஸ்வைன் ப்ளூ’ என பன்றி காய்ச்சலை ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இது ‘ப்ளூ வைரஸ்’ எனப்படும் ‘இன்ப்ளூயென்சா வைரஸ்’ என்ற கிருமியால் பன்றிகளுக்கு வரக்கூடிய நோய். இந்த வைரஸ், எப்படி மனிதர்களுக்கு சளி- காய்ச்சலை வரவழைக்கிறதோ, அதேபோன்று பன்றிகளுக்கும் பாதிப்பை வரவழைக்கும். தொடக்கத்தில் பன்றிகளிடம் இருந்துதான் இந்த நோய் மனிதர்களுக்கு பரவியது. ஆனால், இப்போது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக காற்றின் மூலம் பரவி வருகிறது. தும்மல் மற்றும் இருமல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. சில சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருட்களை தொட்டுவிட்டு, பிறகு மூக்கு அல்லது வாய் பகுதிகளை தொட்டாலும் இந்நோய் தாக்கக்கூடும்.

    பன்றிக்காய்ச்சல் தொற்றினால் மனிதனுக்கு பொதுவாக வரக்கூடிய காய்ச்சலுக்குரிய அறிகுறிகள்தான் இருக்கும். குறிப்பாக சளி, காய்ச்சல், தொண்டைவலி, சோர்வு, உடல் வலி, குளிர் போன்றவையும் வரும். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கும் ஏற்படக்கூடும். பன்றி காய்ச்சலை பரப்பும் வைரசுக்கு ஒரு வினோத சக்தியும் இருக்கிறது. அது என்னவென்றால் இது இன்னொரு வைரசுடன் சேர்ந்து மூன்றாவதாக புதிய வைரசாகவும் உருமாறிவிடக்கூடும். எனவே அலட்சியம் காட்டினால், நோய் தீவிரம் அடைந்து உடல் உறுப்புகள், செயல் இழந்து உயிரிழப்பும் வரலாம்.

    பன்றிக்காய்ச்சலை எவ்வாறு கட்டுப் படுத்துவது, அதனை தடுக்க என்ன செய்யலாம், பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்து மதுரை பெரிய ஆஸ்பத்திரி இளநிலை, முதுநிலை டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கப் பட்டுள்ளது. இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் அடிக்கடி நடத்தப்பட்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு டீன் டாக்டர் மருதுபாண்டியன் கூறினார்.

    தடுக்க முடியுமா? :

    பன்றிக்காய்ச்சலை தடுக்க முடியுமா? என்பது குறித்து மதுரை பெரிய ஆஸ்பத்திரியின் மருந்தியல் துறை பேராசிரியர் டாக்டர் பாலாஜிநாதன் கூறியதாவது:-

    பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு இருந்தால் அதனை 80 சதவீதம் தடுத்து விடலாம். பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட ஒருவரை குணப்படுத்த முடியும். ஆனால், அந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு வேறு ஏதேனும் பாதிப்பு இருந்தால் அவரை குணப்படுத்துவது சற்று கடினமானதாகிவிடும்.

    எடுத்துக்காட்டாக பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு சர்க்கரை நோய், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினை இருந்தால் அவருக்கு தகுந்த சிகிச்சை மிக அவசியமானது. பொதுவாக குழந்தைகளையும், பெரியவர்களையும் இந்த வைரஸ் எளிதாக தாக்குகிறது.

    தினமும் உணவு உண்ணும் முன்பும், பின்பும் சோப்பு போட்டு முறையாக கையை கழுவ வேண்டும். சளி இருமல் இருப்பவர்கள் இருமும் போது கைக்குட்டை கொண்டு வாயை மூடிக்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்று பரவும் காலங்களில் கை குலுக்குவது, கட்டி அணைப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சளி, இருமல் இருக்கும் குழந்தைகளை வீட்டிலேயே தனியாக வைத்து பராமரிக்கலாம். பள்ளிக்கு அனுப்பினால் மேலும் பலருக்கு பரவும்.

    வீட்டையும் வீட்டை சுற்றியுள்ள இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் செய்யாமல் அருகில் உள்ள டாக்டரை அணுக வேண்டும். இதுபோன்ற வழிகளை பின்பற்றி பன்றிக்காய்ச்சலை எளிதில் பரவாமல் தடுக்கலாம். பன்றிக்காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை தங்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கிறது. அதற்கான தடுப்பூசிகள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் இருக்கிறது. அதுபோல் பன்றி காய்ச்சலை கண்டறிவதற்காக பிரத்யோக ஆய்வகமும் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் உள்ளது. தென் மாவட்டங்களில் இதுவே அங்கீகாரம் பெற்ற மிகப்பெரிய ஆய்வகமாகும்.

    பன்றிக்காய்ச்சலுக்கு மருந்து உண்டா என்று கேட்டால், ‘உண்டு’ என்பதுதான் பதில். பன்றிக்காய்ச்சல் வைரஸ் கிருமியை அழிக்கும் ‘ஒசல்டாமிவிர்‘ என்ற மாத்திரை இருக்கிறது. ஆகவே அதற்கான அறிகுறிகள் தென் பட்டால் டாக்டரிடம் சென்று பார்க்க வேண்டும். மேலும், இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசியும் போடப்படும். இந்த வைரஸ் ஒவ்வொரு வருடத்திற்கும் மாறி மாறி உருவெடுப்பதால், ஆண்டுதோறும் புது தடுப்பூசி போட வேண்டும்.

    இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

    வைரஸ்களில் பலவகை

    பன்றிக்காய்ச்சலை ஆரம்பத்தில் எச்1என்1 என்ற வைரஸ்தான் பரப்பியது. தற்போது அதில் படிப்படியாக பல மாற்றங்கள் உருவாகி, எச்3என்2, எச்2என்1, எச்2என்3, எச்1என்2, எச்3என்1 என்ற பல்வேறு வைரஸ் வகை வந்து விட்டன. பொதுவாக இந்த காய்ச்சல் வெளிமாநிலங்களில் இருந்துதான் தமிழகத்திற்கு வருகிறது. ராஜஸ்தான், கர்நாடகம் போன்ற இடங்களில் இருந்துதான் இந்த காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. அதுவும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் அதிகம் பரவுகிறது. பொதுவாக மற்ற மாதங்களில் இது அதிக பிரச்சினையை ஏற்படுத்துவது இல்லை.

    பன்றிக்காய்ச்சல் ஒருவருக்கு ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பை பொறுத்து, அவருக்குரிய பாதிப்பை கூறுகிறார்கள். அதாவது, ஏ, பி, சி என்ற 3 நிலைகள் இதில் உள்ளன.

    நிலை-‘ஏ’ பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் நோயாளிக்கு ஏற்படும் ‘ஏ‘ நிலைக்கான அறிகுறி என்பது மெல்லிய உடல் உஷ்ணம், லேசான தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல் சோர்வு ஆகியவை.

    நிலை-‘பி’ கடும் காய்ச்சல், கடும் தொண்டை வலி.

    நிலை-‘சி’ மேற்கண்ட ‘ஏ‘ மற்றும் ‘பி‘ நிலைகளில் காணப்படும் அறிகுறிகளுடன், மூச்சு திணறல், நெஞ்சு வலி, குறைவான ரத்த அழுத்தம், தலைசுற்றல், மயக்கம், மந்தநிலை, கை கால்கள் நீல நிறமாகுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த நிலையில் இருந்தால், பாதிக்கப்பட்ட நபர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக நிச்சயம் சேர்க்கப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

    என்னென்ன பரிசோதனை?

    தொண்டை பகுதியில் இருந்து எடுக்கப்படும் சளியை பரிசோதித்து எந்த வைரஸ் தாக்கி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார்கள். குறிப்பாக ‘சி‘ நிலை அறிகுறி உள்ளவர்களுக்கு அவசியம் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது.

    தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

    பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள், உடன் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். ஆனால் தற்போது அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் சாந்தா பேசினார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சியில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது;-

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் டெங்கு நோய் பாதிப்பு உள்ளது என்ற தகவல் கிடைத்தால் உடனடியாக அந்த கிராமத்தில் கொசுக்களை கட்டுப்படுத்த புகை மருந்து அடிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான தடுப்பு மருந்துகளுடன் போதிய முன்னேற்பாடுகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் சாக்கடைகளில் கழிவுநீர் தேங்காமல் இருக்க கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்யத்தேவையான முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொண்டு, கிராமங்களில் ஆங்காங்கே தேங்கி உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும், அதில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட்டு உலர வைத்த பின்னர்தான் தண்ணீர் ஏற்ற வேண்டும். அனைத்து கிராமங்களிலும் வினியோகிக்கப்படும் குடிநீர் ஆயிரம் லிட்டருக்கு 4 கிராம் பிளீச்சிங் பவுடர் கலந்து தினசரி குளோரினேசன் செய்யப்பட்டு வழங்க வேண்டும். மேலும், 

    பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    லூபஸ் என்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, எதிர்மறையாக மாறுவதால் வருவது. சில சமயங்களில், நமது உடலில் இயங்கும் நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலுக்கு எதிராக உடல் உறுப்புக்களை, திசுக்களை, பாதிக்கிறது.
    லூபஸ் என்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, எதிர்மறையாக மாறுவதால் வருவது. சில சமயங்களில், நமது உடலில் இயங்கும் நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலுக்கு எதிராக உடல் உறுப்புக்களை, திசுக்களை, பாதிக்கிறது. உடலின் வெவ்வேறு பாகங்களையும் பாதிக்கலாம். குறிப்பாக தோல், மூட்டுக்கள், சிறுநீரகங்கள், மூளை, இதயம், நுரையீரல், ரத்த அணுக்கள் ஆகியன பாதிக்கப்படலாம்.

    இந்நோயின் அறிகுறிகள் வேறு நோய்களின் அறிகுறிகளைப் போன்று இருப்பதால் இந்நோயைக் கண்டறிவது சிரமம். பெரும்பாலானவர்களுக்குக் காணப்படும் அறிகுறி வணத்துப்பூச்சி சிறகடிப்பது போல இரு கன்னங்களிலும் காணப்படுவதாகும்.

    சிலர் பிறக்கும்போதே இந்நோய் வருவதற்கான அறிகுறியுடன் காணப்படுவர். அது சில மருந்துகள், நோய்த் தொற்றுக்கள், சூரியஒளி காரணமாகத் தூண்டப்பட்டு அதிகமாகும். முழுவதும் குணப்படுத்த முடியாத நிலையில், இந்நோயைக் கட்டுக்குள் வைக்கலாம்.

    அறிகுறிகள் :

    பாதிக்கப்பட்ட இடங்களைப் பொறுத்து, இந்நோயின் அறிகுறிகள் மாறுபடும். காய்ச்சல், மூட்டுக்களில் வலி, வீக்கம், இறுக்கம், கன்னங்களில் பட்டாம்பூச்சி வடிவில் நிறமாற்றம்

    * சூரியஒளி படும்போது தோல் சிவந்து, கறுத்துப் போதல்.
    * விரல்கள், பாதங்கள் வெளிறிப் போதல் அல்லது நீல நிறமாகி விடுதல் (குளிர் படும் போது அல்லது மன அழுத்தம் அதிகமாகும் போது)
    * மூச்சுவிடச் சிரமம் ஆதல்,
    * நெஞ்சுவலி
    * கண்களில் வறட்சி
    * தலைவலி, குழப்பம், ஞாபக மறதி ஆகியன தென்படும்.

    பின் விளைவுகள் :


    * இந்நோய் தீவிரமாகும் போது உடலின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம்.
    * மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம். மூளை பாதிக்கப்பட்டால் தலைவலி, மயக்கம், பார்வைக் குறைபாடுகள், தலைசுற்றல், பக்க வாதம், நடைமுறையில் மாற்றங்கள், குழப்பங்கள் நேரலாம்.
    * ஞாபக மறதி, எண்ணங்களை வெளிப் படுத்துவதில் குறைபாடு நேரலாம்.
    * ரத்தம், ரத்தக் குழாய் சம்பந்தமான நோய்கள், அதாவது ரத்தசோகை, ரத்தம் உறைதல், ரத்தக் கசிவு, ரத்தக் குழாய்கள் வீக்கம் (உப்புதல்) ஆகியன.
    * நுரையீரல் நோய்கள், நுரையீரல் உறைகளில் வீக்கம் நேர்ந்து, மூச்சுவிடச் சிரமம் ஆகும். நிமோனியா வரலாம். நுரையீரலில் ரத்தக் கசிவு நேரலாம்.
    * இதயத்தின் தசைகளில், ரத்தக் குழாய் களில் இதயத்தைச் சுற்றியுள்ள உறையான பெரிகார்டியத்தில் வீக்கம் வரலாம், இதய அடைப்பு வரலாம்.

    பிற பின் விளைவுகள்:

    * இவ்வியாதி காரணமாக நோய்த்தொற்று அதிகம் ஏற்படலாம்.
    * புற்றுநோய் வர, குறைந்த வாய்ப்புள்ளது.
    * எலும்புகளுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும், அதனால் எலும்புகள் உடை யும் அபாயம் நேரலாம்.
    * பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ரத்த அழுத்தம் அதிகமாக வாய்ப்பு அதிகம். அதனால் கர்ப்பச்சிதைவு ஏற்படவும், குழந்தை உரிய நேரத்துக்கு முன்பே பிறக்கவும் வாய்ப்பு அதிகம். ஆகவே இந்நோய் குணமாகும் வரை கர்ப்பம் தரிக்காமல் இருப்பது நல்லது.

    மருந்துகள்:

    குடூச்சியாதி கஷாயம், தீக்தகம் கஷாயம், தாடிமாதி கஷாயம், சுகுமார க்ருதம், மஹாதிக்தக க்ருதம், ஆரோக்கிய வர்த்தினி வடி ஆகியன சாப்பிடலாம்.
    மேலே போட
    * ‘பஞ்சதிக்தக திரவியம்’ சேர்த்துக் காய்ச்சிய பாலை பாதிக்கப்பட்ட இடங்களில் ஊற்றலாம். (தாரா).
    * சீந்தில் கொடியைச் சேர்த்துக் காய்ச்சிய பால் கஷாயத்தில் தாரா செய்யலாம்.
    * தா வரி சேர்த்துக் காய்ச்சிய பால் கஷாயத்தில் தாரா செய்யலாம்.



    “சொரியாட்டிக் ஆர்த்தரைட்டிஸ் இது சொரியாஸிஸ், ஆர்த்தரைட்டிஸ் (வாதம்) இரண்டும் சேர்ந்த வியாதி ஆகும்.
    தோலில் சிவந்த தடிப்புகளும் அதன் மேலே வெள்ளிபோன்ற நிறமுடைய செதில்களும் காணப்படும். பெரும்பாலான மக்களுக்கு, முடிவில் சொரியாஸிஸ் வரும் பிறகு சொரியாட்டிக் ஆர்த்தரைட்டிஸ் ஆக உணரப்படும்.
    அவை விரல் நுனி, முதுகுத் தண்டு போன்று உடலின் எந்த பாகத்தையும் பாதிக்கும்.
    இந்நோயை குணப்படுத்த முடியாது, நோயைக கட்டுக்குள் வைக்கலாம்.

    உடலின் ஒரு பாகத் திலுள்ள மூட்டுக்ளையோ அல்லது (இடது, வலது) இரு பக்கத்திலுள்ள மூட்டுக்களையோ பாதிக்கலாம். இந்நோயின் அறிகுறிகள் “ருமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்” நோயைப் போன்றே இருக்கும். இரு நோய்களிலும் மூட்டுக்கள் பாதிக்கப்பட்டு வலி, வீக்கம் ஆகியன இருக்கும்.
    மேலும், சொரியாட்டிக் ஆர்த்தரைட்டிஸ், விரல் களிலும், பாதங்களிலும் வலியையும், வீக்கத்தையும் உண்டாக்கும். மூட்டுக்களில் குறிப்பிடத்தக்க அறிகுறிகள் தோன்றுமுன்பே, கை, கால்களில் வீக்கம், அசாதாரண மாற்றம் தோன்றம்.

    பாதத்தின் அடியிலோ, பாதத்தின் பின்பகுதியிலோ தசை, தசைநார் ஆகியவை எலும்புடன் இணையும் இடத்தில் வலியை உண்டாக்கும்.
    சிலருக்கு “ஸ்பாண்டி லைட்டிஸ்” எனப்படும் முதுகுத்தண்டின் அடிப்பாகத்தில் வலி வரும். முதுகுத் தண்டின் கண்ணிகளுக்கிடையே வீக்கம் வரும். முதுகுத்தண்டு மற்றும் இருப்புக்குமிடையே இருக்கும் மூட்டுக்களிலும் வீக்கம் வரும். சில சமயங்களில் தோல் செல்களின் உற்பத்தி அதிகம் ஆகும்.
    நோய் எதிர்ப்பு சக்தி ஏன் எதிராக மாறுகிறது என்பது முழுவதும் அறியப்படாவிட்டாலும், பரம்பரை, சூழ்நிலை ஆகிய இரண்டும் பெரும்பங்கு வகிக்கின்றன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    ‘சொரியாடிக் ஆர்த்தரைட்டிஸ்’ நோய் வந்தவர்கள் குடும்பத்தில் யாருக்காவது சொரியாஸிஸ் அல்லது சொரியாட்டிக் ஆர்த்தரைட்டிஸ் நோய் முன்பே வந்திருக்கும்.

    பிறப்பிலேயே இந்நோய் வரக்கூடிய சாத்தியக் கூறுகள் அமையப் பெற்றவர்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ, அல்லது சுற்றுச்சூழல் பாதிப்பால் வைரஸ், பாக்டீரியா தோற்று ஏற்பட்டாலோ இந்நோய் சீக்கிரம் வந்து விடலாம். நோய் தீவிரமாகும் போது கையின் சிறு எலும்புகள் முழுவதும் சேதமடையலாம். கண்நோய்கள் வரலாம். இதயநோய்கள் வரலாம்.

    சிகிச்சை, மருந்துகள்

    ள்ளே சாப்பிட

    மஞ்சிஷ்டாதி கஷாயம், மாணிபத்ர லேகியம், குடூச்சியாரி கஷாயம், கல்யாணகம் கஷாயம், கைஷோர குக்குலு, ஆரோக்கிய வர்த்தினிவடி ஆகிய உள்ளே சாப்பிடலாம்.

    வெளியே போட


    தசமூல கஷாயத்தில் பத்து போடலாம், தாரா செய்யலாம்.
    உத்தரபிரதேசத்தில் தற்போது 13 வருடத்திற்கு பிறகு கடுகு எண்ணையால் புது நோய் பரவுகிறது. இதற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.
    லக்னோ:

    ‘டிராப்சி’ எனப்படும் நீர்க்கோவை என்ற மர்ம நோய் உத்தரபிரதேச மாநிலத்தில் பரவி வருகிறது. இது கலப்படம் செய்யப்பட்ட கடுகு எண்ணையை பயன்படுத்துவோருக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    இந்த நோய் பாதித்தவர்களின் கால்களில் வீக்கம் ஏற்படும். இந்த நோய் இறுதியாக கடந்த 2005-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் கடுமையாக பரவியது. அதில் 75 பேர் உயிரிழந்தனர்.

    தற்போது 13 வருடத்திற்கு பிறகு அங்கு மீண்டும் இந்த நோய் பரவுகிறது. இதற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். ஜனுப்பூர் பகுதியில் அசோக் குமார் (65) என்பவர் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

    கடந்த ஏப்ரல் 25-ந்தேதி அவரது மனைவிக்கு திடீரென கால்களில் வீக்கம் ஏற்பட்டது. பின்னர் வாந்தி, வயிற்றுப் போக்கும் உண்டானது. இதையடுத்து அவர் மரணம் அடைந்தார். அதே நோய் பாதிப்பால் மே 3-ந்தேதி அவரது மருமகளும், அதன் பின்னர் அடுத்தடுத்து 2 மகன்களும் பலியாகினர்.

    தற்போது அசோக்குமாரும் அவரது 4 வயது பேத்தி சுவாதியும் இதே நோய் பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் வேகமாக பரவி வருவதால் உத்தரபிரதேச மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதை தடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளனர். #Uttarpradesh
    உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், உடலுக்கு நலம் பயக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து அதை சரியாக உண்ணும்போது, இருந்த வியாதிகூட இடம் தெரியாமல் ஓடிவிடும்.

    'நாம் உண்ணும் உணவின் மூலம் நோய் வராமல் காக்கவும், வந்த நோயை விரைவில் போக்கவும் இயலும். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், உடலுக்கு நலம் பயக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து அதை சரியாக உண்ணும்போது, இருந்த வியாதிகூட இடம் தெரியாமல் ஓடிவிடும்.

    வாதம்/பித்தம்/கபம்:

    வாதம்: ஒருவருக்கு மூட்டு வலி, கழுத்துவலி இருந்தால், வாதம் சீர் கெட்டுள்ளது என்று பொருள். இவர்கள் வாதத்தைக் குறைக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். செரிமானத்திற்கு சிரமம் தரும் மாவுப் பண்டங்கள் வாயுவைத் தரும்.

    சேர்க்கவேண்டியவை: வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது வாதத்தை குறைத்திட உதவும்.

    தவிர்க்கவேண்டியவை: புளி, உருளைக்கிழங்கு, கொத்தவரை, கொண்டக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், காராமணி, குளிர்பானங்கள்.

    பித்தம்: 

    பல நோய்க்கு பித்தம் ஒரு முக்கிய காரணம். பித்தம் அதிகரித்தால், அஜீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னைகள் வரக்கூடும். அல்சர், உயர் ரத்த அழுத்தம், ஆரம்பநிலை மதுமேகம் என நோய் பட்டியல் பெரிசு.

    சேர்க்கவேண்டியவை: கைக்குத்தல் அரிசி நல்லது. கரிசலாங்கண்ணிக் கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள் இஞ்சி என இவையெல்லாம் பித்தத்தைத் தணிக்கும். இதையெல்லாம் தாண்டி மனதையும் குதூகலமாய் வைத்திருக்கவேண்டியது அவசியம்.

    தவிர்க்கவேண்டியவை: உணவில் காரம், எண்ணெயைக் குறைக்கவேண்டும். கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட அதிகம் சேர்க்கக் கூடாது.

    கபம்: சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் அதிகம்.


    சேர்க்கவேண்டியவை: மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவை எல்லாம் கபத்தைப் போக்க உதவும். கற்பூரவல்லி பஜ்ஜியும், சுக்குக்காபியும்... விடாமல் தும்முபவர்களுக்கு மிகவும் நல்லது.

    தவிர்க்கவேண்டியவை: பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லேட்.

    சளி / இருமல்: 

    ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது சளி, இருமல் இருக்கும். இவற்றுக்கு பயனளிக்கும் இந்த அஞ்சரைப்பெட்டி அறிவியலையும் கொஞ்சம் அலசுவோம்.

    சேர்க்கவேண்டியவை: இரவில் தூங்கும்போது, நான்கு மிளகைத் தூளாக்கி ஒரு ஸ்பூன் தேன் கலந்து லேசாக சூடாக்கி கால் டம்ளர் தண்ணீரில் கலந்து பருகலாம். இருமல் நீங்கி இதமான தூக்கம் வரும். மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். மோர் பித்தம் நீக்கி, கபத்தைக் குறைக்க உதவும்.

    தவிர்க்கவேண்டியவை: சுரைக்காய், வெண்பூசணி, மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில காலம் தவிர்க்கலாம். ஒருவேளை அதை சாப்பிடவேண்டும் என்றால், மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம்.

    பால், தயிர், இனிப்பு இந்த மூன்றும் நுரையீரலில் சளியை சேர்க்கக்கூடியன என்பதால், தவிர்க்கவும். எலுமிச்சை, கமலா ஆரஞ்சு மற்றும் திராட்சை மற்றும் ஐஸ்கிரீம், சாக்லேட் தவிர்ப்பது நல்லது. இரவில் பாசிப்பயறைத் தவிர்க்கவும்.
    ×