search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறியல்"

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து குமரியில் 8 இடங்களில் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 247 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 8 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் வக்கீல் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் 81 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதேபோல கன்னியாகுமரி கொட்டாரம் சந்திப்பில் நடந்த தி.மு.க. மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆஸ்டின் எம்.எல்.ஏ., தாமரை பாரதி உள்பட 41 பேர் மீதும், சுசீந்திரம், பறக்கை சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்தில் 20 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    ராஜாக்கமங்கலத்தில் நடந்த மறியல் போராட்டத்தில் 12 பேர் மீதும், தக்கலை அழகிய மண்டபத்தில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 20 பேர் மீதும், ஆரல்வாய்மொழியில் நடந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 26 பேர் மீதும், மணவாளக்குறிச்சி சந்திப்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக 12 பேர் மீதும். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தூத்துக்குடியில் நடந்த போலீசாரின் துப்பாக்கி சூடு கண்டித்து களியக்காவிளையில் காங்கிரஸ் சார்பில் சவபெட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட 35 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் நேற்று நடந்த தொடர் போராட்டத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மொத்தம் 247 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.#SterliteProtest
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து நெல்லை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.#SterliteProtest #BanSterlite #Vaiko
    நெல்லை:

    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பாக முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    நெல்லை சந்திப்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை வகித்தார். இதில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூ. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சந்திப்பு பஸ் நிலையம் முன்பு வந்தனர். பின்னர் பஸ்நிலைய நுழைவு வாயில் முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மாற்றுப் பாதையில் வாகனங்கள் சென்றன. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தமிழக அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்டவர்களை படத்தில் காணலாம்

    பின்னர் ஏ.எல்.எஸ். லெட்சுமணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட 500 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.#SterliteProtest #BanSterlite #Vaiko
    பெரம்பலூர் சர்க்கரை ஆலைகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் 94 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பொதுத்துறை சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.50 கோடி பாக்கி தொகையையும், பெரம்பலூர் தனியார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு எப்.ஆர்.பி. மற்றும் எஸ்.ஏ.பி. விலைக்குரிய பாக்கி தொகையையும் கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரை செய்தபடி வேளாண் உற்பத்தி செலவினை கணக்கிட்டு 1½ மடங்கு கூடுதல் விலையை அறிவிக்க வேண்டும். கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்திட வேண்டும்.

    கரும்புக்கான மாநில அரசு பரிந்துரை விலையை அறிவிக்காததை கண்டித்தும், கரும்பு விவசாயிகளை பாதிப்பு ஏற்படுத்திடும் ரெங்கராஜன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தி வருவதனால் விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் டிராக்டர் உரிமையாளர் சங்கம் ஆகியவை இணைந்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.

    இதனால் நேற்று புதிய பஸ் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் அன்பழகன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கம், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கம், கரும்பு வளர்ப்போர் முன்னேற்ற சங்கம், பங்குதாரர் மற்றும் கரும்பு வளர்ப்போர் சங்கம் ஆகிய அனைத்து விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்களும், டிராக்டர் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தேவேந்திரன் ஆகியோர் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக புதிய பஸ் நிலையத்தில் நேற்று காலை ஒன்று திரண்டனர்.

    ஊர்வலமாக செல்வதற்கும், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடையாது என்று விவசாயிகளிடம் போலீசார் கூறினர். இதையடுத்து அவர்கள் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் திடீரென்று விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் விவசாயிகள் திடீரென்று பஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சாலை மறியலில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் 94 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
    ×