search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெடரர்"

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் காயம் காரணமாக காலிறுதி ஆட்டத்தில் இருந்து ரோஜர் பெடரர், நவோமி ஒசாகா ஆகியோர் விலகினார்கள்.
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 2-6, 6-4, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் குரோஷியாவில் போர்னா கோரிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரர், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ்சை சந்திக்க இருந்தார். இந்த நிலையில் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பெடரர் போட்டியில் இருந்து விலகினார். இது குறித்து 37 வயதான ரோஜர் பெடரர் கருத்து தெரிவிக்கையில், ‘காலிறுதி ஆட்டத்தில் விளையாட முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. நான் 100 சதவீத உடல் தகுதியுடன் இல்லாததால் எனது அணியினருடன் கலந்து ஆலோசித்து விலகல் முடிவை மேற்கொண்டேன். அடுத்த ஆண்டு இந்த போட்டிக்கு திரும்புவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-4, 6-0 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் ரபெல் நடால்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள்.

    இன்னொரு காலிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீரர் நிஷிகோரி 4-6, 2-6 என்ற நேர்செட்டில் 24-ம் நிலை வீரரான டிகோ ஸ்வார்ட்ஸ்மனிடம் (அர்ஜென்டினா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்), 4-ம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பெர்டென்சை சந்திக்க இருந்தார். ஆனால் வலது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நவோமி ஒசாகா கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். இதனால் கிகி பெர்டென்ஸ் போட்டியின்றி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 6-7 (5-7), 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்ததுடன் 500-வது வெற்றியையும் ருசித்தார்.
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், பெடரர் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-0, 6-1 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் ஜெர்மை சார்டியை எளிதில் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் 72-ம் நிலை வீரரான ஜோவ் சோய்சாவை (போர்ச்சுகல்) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-3 என்ற நேர்செட்டில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவாலோவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6-3, 6-3 என்ற நேர்செட்டில் சுலோவக்கியா வீராங்கனை சிபுல்கோவாவை சாய்த்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கோன்டா 6-7 (3-7), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை வான்ட்ரோசோவா 2-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சிமோனா ஹாலெப்க்கு (ருமேனியா) அதிர்ச்சி அளித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா 6-0, 6-1 என்ற நேர்செட்டில் கஜகஸ்தான் வீராங்கனை புதின் சேவாவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினார்கள். #IndianWellstennis #Federer #Nadal
    இன்டியன்வெல்ஸ்:

    இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவரும், 3 முறை சாம்பியனுமான ரபேல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் கிராஜ்னோவிச்சை (செர்பியா) தோற்கடித்து கடந்த 3 ஆண்டுகளில் முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீரர் கரன் கச்சனோவ் 6-4, 7-6 (7-1) என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை சாய்த்து காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். காலிறுதியில் கரன் கச்சனோவ், ரபேல் நடாலை சந்திக்கிறார்.

    இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-1, 6-4 என்ற நேர்செட்டில் 23-ம் நிலை வீரரான கைல் எட்முன்டை (இங்கிலாந்து) விரட்டியடித்து காலிறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு ஒரு மணி நேரமே தேவைப்பட்டது.

    மற்ற ஆட்டங்களில் பிரான்ஸ் வீரர் மான்பில்ஸ் 6-0, 6-2 என்ற நேர்செட்டில் கோல்ஸ்கிரீபரையும் (ஜெர்மனி), ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் கார்லோவிச்சையும் (குரோஷியா), கனடாவின் மிலோஸ் ராவ்னிக் 6-4, 6-3 என்ற செட்டில் ஜான் லினார்ட் ஸ்டிரப்பையும் (ஜெர்மனி), போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காக்ஸ் 7-6 (7-3), 2-6, 6-3 என்ற செட் கணக்கில் டேனிஸ் ஷபலோவையும் (கனடா) தோற்கடித்து காலிறுதியை எட்டினர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளவரும், 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 0-6, 1-6 என்ற நேர்செட்டில் 20 வயதான கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்குவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 52 நிமிடம் நடந்தது.

    மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் மார்கெடா வோன்ட்ரோசோவாவை (செக் குடியரசு) வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.  #IndianWellstennis #Federer #Nadal


    ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியின் அரைஇறுதியில் சுவிட்சர்லாந்து வீரர் பெடரர், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரேவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். #ATPFinal #RogerFederer #AlexanderZverev
    லண்டன்:

    டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஜோகோவிச்(செர்பியா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.

    நேற்று நடந்த முதலாவது அரைஇறுதிப்போட்டியில் 6 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர், 5-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவை சந்தித்தார். 1 மணி 35 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் பெடரர் 5-7, 6-7 (5-7) என்ற நேர்செட்டில் அலெக்சாண்டர் ஸ்வேரேவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். அலெக்சாண்டர் ஸ்வெரேவ் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்தில் ரோஜர் பெடரர் அதிர்ச்சிகரமாக தோற்றார். #USOpen #rogerfederer
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை வென்றவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜான்மில்மேன் 3-6, 7-5 7-6 (9-7) 7-6 (7-3) என்ற செட் கணக்கில் பெடரரை போராடி வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் ஜோகோவிச்சை சந்திக்கிறார். #USOpen
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் பெடரர், ஜோகோவிச் 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர். #USOpen2018 #NovakDjokovic
    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் பெடரர், ஜோகோவிச் 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர். முன்னணி வீராங்கனை ஜெர்மனியின் கெர்பர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 6-வது நாளான நேற்று முன்தினம் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.



    ஆண்கள் பிரிவில் 5 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோசை தோற்கடித்து 17-வது முறையாக அமெரிக்க ஓபனில் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். பெடரர் அடுத்து ஜான் மில்மானை (ஆஸ்திரேலியா) எதிர்கொள்கிறார். மற்றொரு ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-2, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்சின் ரிச்சர்ட் கேஸ்கியூட்டை எளிதில் வீழ்த்தினார்.

    முன்னாள் சாம்பியனான குரோஷியாவின் மரின் சிலிச், ஆஸ்திரேலியாவின் இளம் வீரர் அலெக்ஸ் டி மினாருடன் மல்லுகட்டினார். இதில் முதல் இரு செட்டுகளை பறிகொடுத்த (4-6, 3-6) மரின் சிலிச் அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு எஞ்சிய மூன்று செட்டுகளை 6-3, 6-4, 7-5 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி தோல்வியில் இருந்து தப்பினார்.

    பெண்கள் பிரிவில் 5-ம் நிலை வீராங்கனையான பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 5-7, 1-6 என்ற நேர் செட்டில் 20-ம் நிலை வீராங்கனை அரினா சபலென்காவிடம் (பெலாரஸ்) மண்ணை கவ்வினார். இதன் மூலம் சபலென்கா, கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் முதல்முறையாக 4-வது சுற்றை எட்டியுள்ளார்.

    இதே போல் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், விம்பிள்டன சாம்பியனுமான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரும் 3-வது சுற்றை தாண்டவில்லை. அவரை 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சுலோவக்கியாவின் சிபுல்கோவா விரட்டினார். இதே போல் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் பிரான்சின் கரோலின் கார்சியா 7-5, 4-6, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் 24-ம் நிலை வீராங்கனை சுவாரஸ் நவரோவிடம் (ஸ்பெயின்) 2 மணி 24 நிமிடங்கள் போராடி வீழ்ந்தார்.

    இன்னொரு ஆட்டத்தில் ரஷியாவின் மரிய ஷரபோவா 6-3, 6-2 என்ற நேர் செட்டில் ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) துவம்சம் செய்து 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஜப்பானின் நவோமி ஒசாகா தன்னை எதிர்த்த சாஸ்னோவிச்சுக்கு (பெலாரஸ்) ஒரு கேம் கூட விட்டுக்கொடுக்காமல் 6-0, 6-0 என்ற நேர் செட்டில் வெற்றி கண்டு மிரட்டினார்.  #USOpen2018 #NovakDjokovic
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் 5 முறை சாம்பியனான ரோஜர் பெடரர், நிஷியாகாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். #USOpen2018 #RogerFederer
    நியூயார்க்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று இந்திய நேரப்படி அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் 5 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-2, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் நிஷியாகாவை (ஜப்பான்) தோற்கடித்தார். பெடரர் அடுத்து பிரான்சின் பெனோய்ட் பேரை சந்திக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனான ஜோகோவிச் (செர்பியா) 6-3, 3-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் புக்சோவிக்சை (ஹங்கேரி) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 7-6 (5), 6-3 என்ற நேர் செட் கணக்கில் மார்கரிட்டா காஸ்பர்யனை (ரஷியா) 1 மணி 45 நிமிடங்கள் போராடி விரட்டியடித்தார். இதே போல் முன்னாள் சாம்பியன் மரிய ஷரபோவா (ரஷியா) 6-2, 7-6 (6) என்ற நேர் செட் கணக்கில் 39 வயதான பட்டி ஷின்டரை (சுவிட்சர்லாந்து) சாய்த்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஒலிம்பிக் சாம்பியனான மோனிகா பிய்க் (பியூர்டோரிகோ), தன்னை எதிர்த்த ஸ்டெபானி வோஜிலிக்கு (சுவிட்சர்லாந்து) எந்த ஒரு கேமையும் விட்டுக்கொடுக்காமல் 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் துவம்சம் செய்தார்.
    இன்று வெளியிடப்பட்ட ஆண்களுக்கான டென்னிஸ் தரவரிசையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். #Nadal
    டென்னிஸ் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கான சங்கம் (ATP) இன்று உலக டென்னிஸ் தர வரிசையை வெளியிட்டது. இதில் ஸ்பெயின் வீரரான ரபெல் நடால் 9310 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

    சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7080 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் 5665 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல் போட்ரோ 5395 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 4655 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

    டிமிட்ரோவ், மரில்ன் சிலிச், டொமினிக் தியெம், ஜான் இஸ்னெர், நோவக் ஜோகோவிச் முறையே 6 முதல் 10-வது இடத்தை பிடித்துள்ளனர்.
    விம்பிள்டனில் அட்டகாசமான ஃபார்வர்டு டிஃபென்ஸ் கிரிக்கெட் ஸ்ட்ரோக் வைத்து ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்தார் பெடரர். #Wimbledon2018
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் 1-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 22-ம் நிலை வீரரான அட்ரியன் மன்னரினோவை எதிர்கொண்டார்.

    இதில் 6-0, 7-5, 6-4 என ரோஜர் பெடரர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ரோஜர் பெடரர் 2-0 என முதல் செட்டில் முன்னிலையில் இருக்கும் இருக்கும்போது வேடிக்கையான விஷயம் ஒன்று நடந்தது.

    பெடரர் செய்த சர்வீஸ் தவறாக சென்றது. வந்த பந்தை வேகத்தில் அட்டிரியன் பெடரரை நோக்கி திருப்பி அடித்தார். அந்த பந்தை கிரிக்கெட் ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும்போது ஃபார்வர்டு டிஃபென்ஸ் ஸ்ட்ரோக் வைப்பதுபோல், பெடரர் ஸ்ட்ரோக் வைத்தார்.

    இதை கவனித்த விம்பிள்டன் அந்த வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டு, பெடரரின் இந்ந்த ஃ.பார்வர்டு டிஃபென்ஸ்-க்கு ஐசிசி என்ன ரேங்க் கொடுக்கும்?’’ என்று கேள்வி கேட்பதுபோன்று டுவிட் செய்திருந்தது.

    இதற்கு பெருமூச்சு விட்டதுபோன்று, ஐசிசி ஓகே என்று சொல்லி நம்பர் ஒன் என்று பதில் டுவிட் செய்திருந்தது.

    இதற்கிடையே சச்சின் தெண்டுல்கரும் விம்பிள்டன் டுவிட்டிற்கு பதில் டுவிட் செய்திருந்தார்.

    சச்சின் டுவிட் செய்ததும். ஜாம்பவான் ஜாம்பவானை ஆதரிக்கும்போது... என படத்தை வெளியிட்டு ஐசிசி அசத்தியுள்ளது.
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெடரர், செரீனா 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #Wimbledon2018 #Federer #SerenaWilliams
    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில் 8 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் லுகாஸ் லாக்கோவை (சுலோவக்கியா) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். பெடரர் அடுத்து ஜெர்மனியின் ஜான் லினார்ட் ஸ்டிரப்பை சந்திக்கிறார்.

    கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் தன்னை எதிர்த்த ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மானை 7-6 (4), 7-6 (4), 7-6 (4) என்ற நேர் செட்டில் விரட்டினார். இதே போல் கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்), மெக்டொனால்டு, சாம் குயரி (அமெரிக்கா) ஆகியோரும் 2-வது தடையை கடந்தனர்.

    பெண்கள் பிரிவில் குழந்தை பெற்றுக் கொண்டு களம் திரும்பியுள்ள அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டோமோவை (பல்கேரியா) பந்தாடினார். வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), கரோலினா பிளிஸ்கோவா, சபரோவா (செக்குடியரசு), மேடிசன் கீஸ் (அமெரிக்கா) உள்ளிட்டோர் தங்களது 2-வது சுற்று ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

    அதே சமயம் 2-ம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை 6-4, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் ரஷியாவின் மகரோவா வீழ்த்தினார்.

    முன்னதாக, முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ரஷியாவின் மரிய ஷரபோவா நேற்று முன்தினம் இரவு நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் 7-6 (3), 6-7 (3), 4-6 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் விடாலியா டையட்சென்கோவிடம் போராடி வீழ்ந்தார். இந்த ஆட்டம் 3 மணி 8 நிமிடங்கள் நீடித்தது.  #Wimbledon2018 #Federer #SerenaWilliams  #tamilnews
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து வீரர் பெடரர், குரோஷியா வீரர் மரின் சிலிச் ஆகியோர் வெற்றி பெற்றனர். #RogerFederer #MarinCilic
    லண்டன்:

    ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் உயரியதும், கவுரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது.

    இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), உலக தரவரிசையில் 57-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் டுசன் லாஜோவிச்சை சந்தித்தார். இதில் பெடரர் 6-1, 6-3, 6-4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.



    மற்றொரு ஆட்டத்தில், கடந்த ஆண்டில் 2-வது இடம் பிடித்தவரான மரின் சிலிச் (குரோஷியா) 6-1, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷிகாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் சாம் குயரி 6-2, 6-4, 6-3 என்ற நேர்செட்டில் ஜோர்டான் தாம்சனை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-0, 6-3 என்ற நேர்செட்டில் வர்வரா லெப்செங்கோவை (உஸ்பெகிஸ்தான்) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவரான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 1-6, 3-6 என்ற நேர்செட்டில் குரோஷியா வீராங்கனை டோனா வெகிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6-4, 6-2 என்ற நேர்செட்டில் அஜ்லா டாம்ஜனோவிச்சை(ஆஸ்திரேலியா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.  #RogerFederer #MarinCilic #tamilnews
    20 கிராண்ட் சிலாமுடன் முதல் இடத்தில் உள்ள பெடரரின் சாதனையை நெருங்குவது பற்றி அதிகமாக சிந்திக்கவில்லை என நடால் கூறியுள்ளார். #RogerFederer #RafaelNadal

    உலகின் நம்பர்-1 வீரரான நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 11-வது முறை யாக கைப்பற்றி சாதித்தார். ஒட்டு மொத்தமாக 17 கிராண்ட் சிலாம் பெற்றுள் £ர். ரோஜர் பெடரர் 20 கிராண்ட் சிலாமுடன் முதல் இடத்தில் உள்ளார். அவ ருக்கு அடுத்தப்படியாக நடால் உள்ளார். பெடரரின் சாதனையை நடால் முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அவர் கூறிய தாவது, ‘பெடரரின் சாதனையை நெருங்குவது பற்றி அதிகமாக சிந்திக்க வில்லை. என்னை பொறுத்த வரை டென்னிஸ் மிகவும் முக்கியமானது தான். ஆனால் அதுமட்டுமே வாழ்க்கை அல்ல. எனது உடல் தகுதி இருக்கும் வரை ஆடுவேன்’ என்றார். #RogerFederer #RafaelNadal

    ×