search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவுப்பொருட்கள்"

    பாகிஸ்தானில் முஸ்லிம் மக்களுக்கும், சிறுபான்மை சீக்கிய மக்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை பேணவும், வளர்க்கவும் சீக்கிய வியாபாரி ஒருவர் தள்ளுபடி விலையில் உணவுப்பொருட்கள் வழங்கியுள்ளார்.
    பெஷாவர்:

    பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணம், ஜாம்ருத் பகுதியில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடையை இந்திய வம்சாவளி சீக்கியர் நரஞ்ச் சிங் திறந்து நடத்தி வருகிறார்.

    இவர் முஸ்லிம் மக்களுக்கும், சிறுபான்மை சீக்கிய மக்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை பேணவும், வளர்க்கவும் ஆர்வம் காட்டுகிறார். அந்த வகையில், தன் கடையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்களுக்கு தள்ளுபடி விலையில் உணவுப்பொருட்கள் வழங்க முடிவு செய்து, அதை மேற்கொண்டுள்ளார். இது அங்குள்ள முஸ்லிம்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    அரசாங்கத்தின் விலை கட்டுப்பாட்டு குழு நிர்ணயம் செய்துள்ள விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு இவர் உணவு பொருட்களை முஸ்லிம்களுக்கு விற்பனை செய்து வருகிறார். குறிப்பாக உணவுப்பொருட்களை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை குறைவான விலையில் இவர் விற்பனை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சினிமா திரையரங்குகளில் குடிநீர், பாப்கார்ன் உள்ளிட்ட உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Telangana #MovieTheatres
    ஐதராபாத்:

    திரையரங்குகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க பல்வேறு விதிமுறைகளை விதித்து தெலுங்கானா மாநிலத்தின் திரையரங்க கண்காணிப்பு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கு மேல் உணவுப்பொருட்களை விற்பது சட்டவிரோதம் என்றும், அதற்கு அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதன்படி, முதல்முறை குற்றம்சாட்டப்படுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2-வது முறை கைதாகினால், 50 ஆயிரம் அபராதமும் தொடர்ந்து தவறு செய்யும் பட்சத்தில் அதிகபட்சமாக 1 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், அத்துடன் 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய நடைமுறை வருகிற 1-ம் தேதி முதல் கடைபிடிக்கப்படும் என்றும், தொடர்ந்து திரையரங்குகள் கண்காணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சமீபத்தில் திரையரங்குகளில் உணவுப்பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Telangana #MovieTheatres
    ×