search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஸ்தூரி"

    4 தொகுதிகளிலும் நினைத்ததை விட அதிகமாகவே கமல்ஹாசன் ஓட்டு வாங்குவார் என்று நடிகை கஸ்தூரி கூறி உள்ளார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி பள்ளப்பட்டி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

    அப்போது அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே. அவர் ஒரு இந்து என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் பதட்டம் நிலவி வருகிறது.

    இதுகுறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    கமல் 30 வினாடிகள் பேசியதை 3 நாளாக பேசிக்கொண்டு இருக்கிறோம். பேசியே ஒரு படத்தை சூப்பர் ஹிட் ஆக்கினவர்கள் இப்போது கமல் பேசியதை நாடு முழுக்க பிரபலப்படுத்தி விட்டார்கள்.



    இதைவிட ஒரு சூப்பர் பிரசாரம் அவருக்கு அமையுமா? இந்த 4 தொகுதியில் நினைத்ததை விட அதிகமாகவே அவர் ஓட்டு வாங்குவார் பாருங்கள்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


    நடிகை கஸ்தூரி சமீபத்தில் அளித்த பேட்டியில், சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார். #Kasthuri
    கஸ்தூரி, சலங்கை துரை இயக்கத்தில் இ.பி.கோ 302 என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி:

    முதல் முறையாக போலீஸ் வேட அனுபவம்? 

    நான் பல்வேறு வேடங்களில் நடித்து இருந்தாலும் போலீஸ் உடை அணிவது இதுதான் முதல் முறை. முதலில் சலங்கை துரை கதையை சொன்னபோது என் வேடம் சின்னதாக இருந்தது. 4 நாட்கள் தான் கால்ஷீட் கேட்டார்கள். பின்னர் எனக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் கதை மாற்றப்பட்டது. தொடர் கொலைகளை விசாரிக்கும் மர்மங்கள் நிறைந்த படம். துர்கா ஐபிஎஸ் என்ற துணிச்சலான போலீஸ் அதிகாரியாக வருகிறேன். 

    தொடர்ந்து அதிரடியான கருத்துகளை கூறி வருகிறீர்கள். அரசியலுக்கு வருவீர்களா?

    என்னை பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய நிறைய கட்சிகள் அழைப்பு விடுத்தன. கட்சி சார்ந்த அரசியலில் எனக்கு ஆர்வம் இருந்தது இல்லை. சமீபகாலங்களில் சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அரசியலுக்கு வந்ததாகவோ அல்லது அரசியலில் இருப்பவர்கள் சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பதாகவோ என் கண்ணுக்கு அகப்படவில்லை. அரசியலை பொறுத்தவரை நான் ஒரு கத்துக்குட்டி. எனக்கே இந்த தேர்தல் ஏமாற்றத்தை தான் கொடுத்தது. நான் களம் இறங்கி இருக்கலாமோ என்று எண்ண தோன்றியது. எனக்கு பிரபலம், பின்புலம், மக்கள் சேவை அனுபவம் என சில தகுதிகள் இருக்கின்றன. நான் உள்ளே நுழைந்தால் நிறைய நல்லவர்களும் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் இறங்க வாய்ப்பு உண்டு.



    சில கட்சிகளில் இணைந்ததாக செய்தி வந்ததே?

    சினிமாவில் நடித்தபோது என்னுடன் நடித்த நடிகர்களுடன் இணைத்து பேசினார்கள். இப்போது அரசியல் கருத்துகளை கூறும்போது யாரை விமர்சிக்கிறேனோ அவர்களுக்கு எதிர்க் கட்சியில் இணைந்ததாக பரப்புகிறார்கள். கொட்டாங்கச்சி, என் ஆசை தங்கச்சி தவிர மற்ற எல்லா கட்சிகளிலும் என்னை சேர்த்துவிட்டார்கள்.

    சுயேச்சையாக போட்டியிடுவீர்களா?

    சுயேச்சையாக நிற்கும் அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்லை. சுயேச்சையை மதித்து ஓட்டு போடும் அளவுக்கு தமிழக மக்கள் இன்னும் மாறவில்லை. எனவே தனித்தோ சுயேச்சையாகவோ களம் இறங்க மாட்டேன்.
    இயக்குனர் பொன்.சுகீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நளினகாந்தி’ படத்தில் கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். #Kasthuri #NalinaGandhi
    நடிகை கஸ்தூரி சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர் அடுத்து நடிக்கும் படம் நளினகாந்தி. கதாநாயகன் இல்லாத இந்த படத்தில் வ.ஐ.ச.ஜெயபாலன், புவிஷா இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். புவிஷா சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோனேவுக்கு உறவுப்பெண்ணாக நடித்தவர்.

    படம் பற்றி இயக்குனர் பொன்.சுகீர் கூறியதாவது: ஜெயபாலன் ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர். அவர் மனநோய்க்கு ஆளாகிறார்.



    அவரிடம் பணிபுரியும் நர்சான புவிஷா, அவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்ட கஸ்தூரி இருவரும் அவரை எப்படி மனநோயில் இருந்து மீட்டெடுக்கிறார்கள் என்பதே கதை. நளினகாந்தி என்பது ஒரு ராகத்தின் பெயர். இது மனநோயில் இருந்து மீட்கும் சக்தி கொண்டது என்பதால் இதையே தலைப்பாக வைத்தோம். சராசரி கதைக்களம் என்ற நிறுவனம் தயாரிக்க ஜூட் ஆரோகணம் இசையமைக்கிறார்’. 

    இவ்வாறு அவர் கூறினார்.
    முடிவில்லா புன்னகை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட கஸ்தூரி, பெண்களுக்கான சுதந்திரம் வீட்டில் இருந்தே தொடங்குகிறது என்று கூறியிருக்கிறார். #Kasthuri
    முடிவில்லா புன்னகை படத்தின் இசை மற்றும் டிரைய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

    இதில் அவர் பேசும்போது, ‘அவ்வையார், மதர் தெரசா, ஜெயலலிதா ஆகியோர் பெண்களில் மிகப்பெரிய ஆளுமைகள். சினிமா சாக்கடை ஆச்சே என பலர் விமர்சனம் செய்த போது, என் தந்தைதான் எனக்கு ஆதரவு கொடுத்தார். பெண்களுக்கான சுதந்திரம் வீட்டில் இருந்தே தொடங்குகிறது. சில வீடுகளில் அதை கணவர் கொடுத்தாலும், முதலில் ஆரம்பிப்பவர்கள் தந்தைகளே.. 



    மனைவி கண்ணகியாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். மகள் கல்பனா சாவ்லா ஆக வேண்டும் என நினைப்பார்கள் என்று தந்தையரை பற்றி கஸ்தூரி பேசினார். 
    எம்.ஜி.ஆர். - லதாவை உதாரணமாக வைத்து நடிகை கஸ்தூரி தெரிவித்த கருத்துக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று கஸ்தூரி வருத்தம் தெரிவித்துள்ளார். #Kasthuri
    நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது கருத்துகள் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘என்னய்யா இது, பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க.’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விமர்சித்து பதிவு செய்திருந்தார். 

    இதற்கு நடிகை லதா தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். மேலும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


    இந்த நிலையில், இதுகுறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “எம்.ஜி.ஆர். காதல் காட்சியில் நடித்ததில், கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? இதில் கண்ணியமும், பெண்ணியமும் என்ன கெட்டுவிட்டது? நான் வாத்தியாரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களை ரசிக்கும் எண்ணற்றவர்களில் ஒருவள். அவரை விமர்சிக்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை.

    இருப்பினும், இதில் யார் மனமும் புண்பட்டிருந்தால், மனமார வருந்துகிறேன்.” என்று கூறியுள்ளார். #Kasthuri #MGR #Latha

    எம்.ஜி.ஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்து நடிகை லதா அறிக்கை வெளியிட்டுள்ளார். #Latha #Kasthuri
    நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘என்னய்யா இது, பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க.’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விமர்சித்து பதிவு செய்திருந்தார். இதற்கு பல கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், நடிகை லதா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 

    எம்.ஜி.ஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

    “நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன். ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை. தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா..?



    கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே.. அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே..? எதுக்கு நானும், எம்.ஜி.ஆர் நடிச்ச படத்தைச் சொல்லணும்.

    அவங்கதான் எதுக்கெடுத்தாலும் பெண்ணியம்.. அது… இதுன்னு கருத்துச் சொல்லிட்டிருக்காங்களே.. இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா.. ஒரு பொண்ணே, இன்னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படுத்துற மாதிரி பேசலாமா..? கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி.

    இதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து கண்டன கடிதம் அனுப்பி உள்ளதாக என்னிடம் சொன்னார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி. அதுமட்டும் இல்லாமல் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களிலும் இருந்து கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகும் `தமிழரசன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. #Thamizharasan #VijayAntony
    விஜய் ஆண்டனி தற்போது பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் `தமிழரசன்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். 

    சோனு சூட் வில்லனாகவும், சுரேஷ்கோபி, ராதாரவி, யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமிநாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.



    எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் இந்த படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், இன்னும் சில நாட்களில் அடுத்த கட்ட படப்பிடிப்பை துவங்கி விரைவில் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். #Thamizharasan #VijayAntony #RamyaNambeesan #SonuSood

    பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகும் `தமிழரசன்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கஸ்தூரி ஒப்பந்தமாகி இருக்கிறார். #Thamizharasan #VijayAntony
    `கொலைகாரன்', `அக்னிச் சிறகுகள்' படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது `தமிழரசன்', `காக்கி' படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் தமிழரசன் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சோனு சூட் வில்லனாகவும், சுரேஷ் கோபி, பூமிகா, சங்கீதா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

    இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கஸ்தூரி ஒப்பந்தமாகி இருக்கிறார். கஸ்தூரி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கிவிட்டதாகவும், அவர் இதில் டாக்டராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் விஜய் ஆண்டனியுடன் பல காட்சிகளில் கஸ்தூரி இணைந்து நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.



    இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி இந்த படத்தை தயாரிக்கிறார். #Thamizharasan #VijayAntony #RamyaNambeesan #Kasthuri

    ஒண்ணாம் கிளாஸ் ஆசிரியருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரிக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Kasthuri
    சென்னை:

    நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்துவார். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தை அவர் விமர்சித்தது டுவிட்டரில் பரபரப்பாகி உள்ளது.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்வது, 21 மாத நிலுவைத்தொகையை வழங்குவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது.

    தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. இதில் 8 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்கள், அரசுப்பள்ளிகளில் பணிகள் முடங்கியுள்ளன.

    இதுகுறித்து பதிவிட்ட நடிகை கஸ்தூரி, ’தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களை விட மும்மடங்கு சம்பளம், வேலை பளுவோ குறைவு. மாணவர்கள் வெற்றி குறித்த அழுத்தம், பொறுப்பும் கவலையும் அதினும் குறைவு. செய்தாலும் செய்யாவிட்டாலும் வேலை நிரந்தரம். வேறு எங்கும் இல்லாத ஓய்வூதியம், அரசு விருதுகள், பயணத்தள்ளுபடி, இலவச உணவு உள்ளிட்ட சலுகைகள், அரசு செலவில் கல்வி ஆய்வு அல்லது ஆராய்ச்சி செய்ய வெளியூர், வெளிநாடு பயணம், தேர்தல் பணிக்கு பணம், இப்படி அரசு கல்வித்துறையில் பணிசெய்வோருக்கு ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன.

    ஒண்ணாம் கிளாஸ் வாத்தியாருக்கு டைடல் பார்க்கில் வேலை செய்யும் பொறியாளரை விட சம்பளம் அதிகம். சத்துணவுக்கும் சம்பளத்துக்கும் மிக அதிகமாக செலவு செய்வது தமிழகம்தான். வாங்கின காசுக்கு உண்மையா கற்றுக்கொடுத்தா அரசு பள்ளி தரம் எப்பிடி இருக்கணும்?’’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    கஸ்தூரியின் இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அரசியல்வாதிகளையும் கார்ப்பரேட் கொள்ளையர்களையும் கேள்வி கேட்க முடியாதவர் என்று கஸ்தூரியை விமர்சித்து வருகிறார்கள். கஸ்தூரியின் கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்தும் பதிவிட்டு வருகின்றனர். #Kasthuri
    தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, தற்போது அரசியலில் நுழைய இருக்கிறார். #Kasthuri #ActressKasthuri
    கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிப்பு அடைந்தபோது நிவாரண பணிகளில் ஈடுபட்டவர்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவர். சமூகவலை தளங்களில் பரபரப்பாக இருக்கும் கஸ்தூரி அரசியலில் நுழைய இருக்கிறார்.

    இதுபற்றி கூறும்போது, ‘அரசியலில் என் பாதை மகாகவி பாரதியாரின் வழியில் இருக்கும். கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு ஒரு லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது. குறைந்த செலவில் வீடு கட்டி தருபவர்களுக்கு இது சரியான வாய்ப்பு.

    கஜா புயல் நிவாரண பணிகளில் என்னுடன் ரஜினி மக்கள் மன்றம், கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் ஆகியோர் கட்சி பாகுபாடு பார்க்காமல் உதவிகள் செய்தனர்’ என்று கூறி உள்ளார்.
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் வாட்டர் பில்டருடன் செல்வதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். #GajaCycloneRelief #Kasthuri
    நடிகை கஸ்தூரி கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களுடன் கிளம்பினார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை அள்ளிக்கொடுக்கும் உயர்ந்த உள்ளங்களை வாழ்த்துகிறேன். என்னால் முடிந்த அளவில் நிவாரண பொருட்களை எடுத்துக் கொண்டு நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல உள்ளேன். டெல்டா மாவட்டங்களின் தற்போதைய அத்தியாவசிய தேவை குடிநீர்.

    உணவு பொருட்கள், மருத்துவ உதவி போன்றவை பலதரப்புகளிருந்து வந்துகொண்டிருக்கும் வேளையில், குடிநீர் பற்றாக்குறை பூதாகரமாக தலையெடுத்துள்ளது. நாட்கள் செல்ல செல்லச், சுத்தமான பாதுகாப்பான குடிநீர் மிக பெரிய தேவையாக இருக்கும். இதற்கு அத்தியாவசியமான 1000 நீர் சுத்திகரிப்பு கருவிகளை வழங்க இருக்கிறோம்.



    1000 குடும்பத்திற்கு தேவையான அதிநவீன குடிநீர் சுத்திகரிப்பான்கள், போர்வைகள், கொசுமருந்து, காய்ச்சல் நிவாரணி மாத்திரைகள், சானிடரி நாப்கின்கள் அடங்கிய லாரியை அனுப்புகிறோம். இந்த குடிநீர் சுத்திகரிப்பான்கள் பேரிடர் காலத்தில் பயன்படுத்த மிகவும் உகந்தவை. எங்கும் எடுத்து செல்லலாம், சுலபமாக பயன்படுத்தலாம், எத்தனை மாசுபட்ட தண்ணீரையும் தெளிந்த பாதுகாப்பான சுத்தமான குடிநீராக மாற்றிவிடும். கொதிக்கவைக்க அவசியமில்லை.

    பிளாஸ்டிக் பாட்டில்களையும், கேன்களையும் நாடவேண்டியதில்லை, இரண்டு வருடங்களுக்கு குறையாமல் செலவில்லாமல் குடிநீரை சுத்தப்படுத்திக் கொள்ளலாம். இது வெளிநாட்டில் மட்டுமே இப்போதைக்கு கிடைக்கிறது, இங்கு நம் பயன்பாட்டிற்காக ஆயிரம் சுத்திகரிப்பான்களை உடனடியாக தயாரித்து அனுப்பியிருக்கும் சென்னை ராமா குடிநீர் சுத்திகரிப்பான் நிறுவனத்திற்கு நன்றி. முதல் கட்டமாக 1000 பில்டர்கள் வழங்குகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCycloneRelief #Kasthuri

    கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கஸ்தூரி, இயக்குனர் முருகதாஸ் கவனமாக இருக்க வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார். #ARMurugadoss #Kasturi
    கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

    ஒரு ஆணோடு சம்பந்தப்பட்டு பேசியதால் தங்களின் மதிப்பு உயரும் என்று எந்த பெண்ணும் நினைப்பது கிடையாது. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண் கூட அதை வெளியே சொல்வது இல்லை.

    இதுபோன்று பலர் தவறாக கூறுவதால்தான் பாதிக்கப்படும் பெண் அதுதொடர்பாக வெளியே சொல்ல முன்வருவது இல்லை. சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் மீது குற்றச்சாட்டு கூறுவதால், அந்த பெண்ணின் தரம் உயருகிறதா? இல்லையே. சிலர் அவர்களின் சுய விளம்பரத்துக்காக இதுபோன்ற தவறான குற்றச்சாட்டை கூறுகிறார்கள் என்று சொல்கிறார்கள். முக்கியமாக, ஊசி இடம் கொடுக்காமல் நூல் உள்ளே நுழையாது என்று பலர் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.

    இப்படி பெண், தனக்கு அவமானம் நடந்தது என்று வெளியே சொன்னால் பெண்தான் காரணம், பெண் மீதுதான் தவறு என்று சமுதாயத்தில் குற்றம் சுமத்துகிறார்கள். தற்போது ‘மீ டூ’ வந்ததால்தான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தைரியம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் தைரியமாக வெளியே சொல்கிறார்கள். சுய விளம்பரத்துக்காக நடிகைகள் உள்பட யாரும் குற்றச்சாட்டு கூறுவது இல்லை.

    ஒரு இடத்தில் பாலியல் தொல்லை நடந்தால், அதில் இருந்து விடுபடதான் அனைவரும் நினைப்பார்கள். அதை விட்டுவிட்டு புகார் கொடுக்க எந்த பெண்ணுமே நினைக்க மாட்டார்கள். எனவே ஏன் புகார் சொல்கிறார்கள் என்று கேட்க வேண்டாம். குற்றம் சாட்டப்படும் நபரிடம்தான் பதில் கேட்க வேண்டும்.

    தமிழகத்தில் ஒரு சினிமாவின் கதையை பார்த்து காப்பி அடித்து மற்றொரு சினிமா எடுப்பது இப்போது மட்டும் நடப்பது அல்ல. பெரிய, பெரிய நடிகர்கள் நடித்த சினிமாக்கள் கூட காப்பி அடித்து வேறு சினிமாக்கள் எடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு எல்லாம் பிரச்சினை வந்தது இல்லை.

    சர்கார் படத்தை இயக்கிய முருகதாஸ் கூட, ஏற்கனவே ஒரு ஹாலிவுட் படத்தின் கருவை எடுத்து கஜினி படம் இயக்கினார். தமிழகத்தில் இப்போது இருக்கக்கூடிய பெரிய இயக்குனர்கள் மீது வராத கதை திருட்டு என்ற புகார் முருகதாஸ் மீது தொடர்ச்சியாக மீண்டும் வர என்ன காரணம் என்ற யோசனை வருகிறது. எனவே இயக்குனர் முருகதாஸ் கவனமாக இருக்க வேண்டும்.

    இதுபோன்ற குற்றச்சாட்டு வராமல் அவர் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    பெண்களுக்கு எல்லா இடத்திலும் சமத்துவம் இல்லை. சபரிமலைக்கு பெண்கள் போகலாம் என்ற கோர்ட்டு உத்தரவு வழங்கி உள்ளது. ஆனால் சினிமாத்துறையில் உள்ள மேக்கப் துறை, லைட்மேன் போன்றவற்றில் பெண்களுக்கு அனுமதி இல்லை. அது ஒருதலை பட்சமான வி‌ஷயம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×