search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105610"

    பல்வேறு வகையான புட்டு சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ரவையில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த முறை செய்வது மிகவும் எளிமையானது.
    தேவையான பொருள்கள் :

    ரவை - 250 கிராம்
    சர்க்கரை - 1 கப்
    தேங்காய் - அரை மூடி ,
    உப்பு - ஒரு சிட்டிகை
    நெய் - 1 ஸ்பூன்



    செய்முறை :

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ரவையை போட்டு உதிர் உதிராக வாசனை வரும்வரை வறுக்கவும்.

    வறுத்த ரவை ஆறியதும் தண்ணீரில் உப்பு சேர்த்து தெளித்து பிசிறிக் கொள்ளவும்.

    இத்துடன் சர்க்கரை, துருவிய தேங்காய், நெய் கலந்து, வைத்து கொள்ளவும்.

    பிசறி வைத்த மாவை புட்டு வேக வைக்கும் குழாயில் போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான ரவா புட்டு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கு அதிக அளவு கால்சியத்தை கொண்டிருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனி சுவையான உருளைக்கிழங்கு புட்டு செய்முறை பற்றி பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - கால் கிலோ
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் - அரை மூடி
     
    தாளிக்க :

    கடுகு - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    சின்ன வெங்காயம் - 10
    நல்லெண்ணெய் - தாளிக்க தேவையான அளவு


     
    செய்முறை :

    முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தோலுரித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் தேவையான அளவு உப்பினைச் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

    வாணலியில் தேவையான அளவு நல்ல எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் உருளைக்கிழங்கினைச் சேர்த்து நன்கு ஒரு சேர கிளறவும்.

    இரண்டு நிமிடங்கள் கழித்து அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்துக் கிளறவும். பின் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

    சுவையான உருளைக்கிழங்கு புட்டு தயார்.

    இதனை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முளைக்கட்டிய பச்சைப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முளைக்கட்டிய பச்சைப்பயறுடன் சத்து மாவு சேர்த்து புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சத்து மாவு - ஒரு கப்,
    தேங்காய்த் துருவல் - கால் கப்,
    உப்பு - சிட்டிகை,
    முளைக்கட்டிய பச்சைப்பயறு - கால் கப்,
    நேந்திரன் பழத்துண்டுகள் - ஒரு கப்.



    செய்முறை :

    வெறும் வாணலியில் சத்து மாவை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.

    வறுத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு, வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து பிசறவும்.

    அதனுடன் முளைக்கட்டிய பச்சைப்பயறை சேர்த்து கலக்கவும்.

    இதனை இட்லி தட்டில் பரத்தி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

    அதனுடன் தேங்காய்த் துருவல், நேந்திரன் பழத்துண்டுகள் சேர்த்து கலக்கவும்.

    கடலைக் கறியுடன் பரிமாறலாம்.

    சூப்பரான சத்து மாவு முளைக்கட்டிய பச்சைப்பயறு புட்டு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×