search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105618"

    பணக்காரர் ஆவதற்கான தகுதிகள் என்னென்ன தெரியுமா? அந்தத் தகுதிகள் உங்களுக்கு இருக்கின்றனவா எனத் தெரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    ‘பணக்காரர்’ என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு நம் அனைவருக்குமே ஆசைதான். ஆனால் பணக்காரர் ஆவதற்கான தகுதிகள் என்னென்ன தெரியுமா? அந்தத் தகுதிகள் உங்களுக்கு இருக்கின்றனவா எனத் தெரிந்துகொள்ள வேண்டுமா?

    இதோ...

    1. தூண்டுதலைத் தாண்டுங்கள்

    ‘இது எனக்கு இப்போதே வேண்டும்’ என்ற ஆசைத் தூண்டுதலை உங்களால் புறக்கணிக்க முடிந்தால், பணம் சம்பாதித்தலில் உள்ள முதல் தடையை வெற்றிகரமாகக் கடந்துவிடலாம். உடனடி மனநிறைவு என்பது குறுகிய காலத்துக்கு பெரிதாகத் தோன்றினாலும், அதைக் கட்டுப்படுத்தவில்லை எனில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் சோதனையான காலத்தில் உதவும் அல்லது நீங்கள் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் உங்களின் சொத்து மதிப்பும் உயரும்.

    2. சிறந்தவராக மாற முயலுங்கள்


    உங்கள் பணியில் அல்லது தொழிலில் சிறந்தவராக மாறப் போதுமான அளவு நேரத்தை ஒதுக்குகிறீர்கள் என்றால், உங்களின் வருமானம் ஈட்டும் திறனும் கண்டிப்பாக அதிகரிக்கும். விருப்பமானவற்றை இடைவிடாமல் செய்வதன் மூலம், சந்தேகங்கள், போராட்டங்கள், நிராகரிப்பு இன்றிச் சிறப்பான பலன்களைப் பெறமுடியும். நீங்கள் செய்வதைச் சிறப்பாகச் செய்தால், அதற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்.



    3. கட்டுப்பாடுகளைக் கடைப்பிடியுங்கள்

    பணத்தைச் செலவழிக்கும்போது சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறீர்களா? உங்கள் அவசியத் தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கிறீர்களா? கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தை, தேவைக்கும் விருப்பத்துக்கும் இடையில் வைப்பது அவரவர் முடிவே. அவசியத் தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கும், ஆடம்பரத்தைத் தவிர்க்கும் எளிய வாழ்க்கை எல்லோருக்கும் ஏற்றது. தேவையற்ற செலவுகளைத் தவிர்த்தல், அடிக்கடி வெளியில் உணவருந்துவதைக் குறைத்தல், ஆடை, அணிகலன்களுக்கான செலவைக் கட்டுக்குள் வைத்தல் போன்றவை அதிகப் பணம் சேமிக்க வழிவகுக்கும்.

    4. நிதித் திட்டமிடல் அவசியம்

    பணத்தைச் சேமிக்கும், செலவழிக்கும் வழிகள் குறித்த நிதித் திட்டமிடல் முக்கியம். உங்கள் பணத்தைச் சிறப்பாக ஒதுக்கீடு செய்யும் சரியான திட்டத்தின் மூலம்தான் பணக்காரர் ஆகும் பயணம் தொடங்கும். நல்ல பொருளாதாரத் திட்டத்துக்கான முதல் அடி, சிறந்த நிதித் திட்டமிடல்தான். ஒவ்வொரு செலவையும் வகைப்படுத்துதல் மற்றும் உங்களின் தேவைகள் மீதான செலவுகளை மாதமாதம் மதிப்பிடுதல் போன்றவை குறைவாகச் செலவு செய்யவும், அதிகமாகச் சேமிக்கவும் உதவும். நமது வருமானம், செலவுகள் பற்றிய தெளிவான பார்வை நமக்கு இருந்தால், ‘பட்ஜெட்’டில் வராத தேவையில்லாத செலவுகளைக் குறைப்பது எளிது.

    5. முதலீட்டுக்கு முக்கியத்துவம்

    பணக்காரராக இருப்பது என்பது ஒருவருடைய திறமை, அதிர்ஷ்டம், வாரிசுரிமை போன்றவற்றை மட்டும் பொறுத்ததல்ல. கையில் உள்ள பணத்தை தொடர்ந்து புத்திசாலித்தனமாக முதலீடு செய்து வருவதும் முக்கியம். வளமாக உள்ள பலரும் கூட சரியாக முதலீடு செய்யத் தெரியாமல் பணத்தை முடக்கிப் போட்டிருக்கிறார்கள் அல்லது தப்பான ஆலோசனைகளைக் கேட்டு தவறான முதலீடுகளில் பணத்தைப் போட்டு இழக்கிறார்கள். முதலீடு செய்வதற்கு பெருந்தொகை தேவை என்று எண்ணத் தேவையில்லை. சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கு ஏற்ப, எஸ்.ஐ.பி. எனப்படும் முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டம் போன்றவற்றில் சிறுதொகையை தொடர்ந்து முதலீடு செய்து வந்தாலே நாளடைவில் பணக்காரர் ஆகிவிடலாம்.
    நமது குடும்பத்தில் இருப்போர் போதிய வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் வேளையில், ஆடம்பரத்துக்காக ‘மொபைல் ஆப்’களைப் பயன்படுத்தி பணத்தை வீணாக்குவது அறிவார்ந்த செயலாக இருக்காது.
    இளைய தலைமுறையினருக்கு, நவீன தொழில்நுட்பங்களின் மீதும், புதுப்புது அப்ளிகேஷன்கள் மீதும் தீராத ஆர்வம் இருக்கிறது. இதன் விளைவாக சந்தைக்கு வரும் புதுப்புது கேட்ஜெட்களையும், அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தி பார்க்க ஆசைப்படுகிறார்கள். குறிப்பாக அப்ளிகேஷன் உலகில் தங்களை சிறந்தவர்களாக முன்நிறுத்திக் கொள்ள முயல்கிறார்கள்.

    இன்றைய டிரெண்டிங்கிற்கு ஏற்ப, இன்றைய வைரல் விஷயங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதுடன், அப்ளிகேஷன் உலகிலும் அப்-டேட்டாக இருக்கிறார்கள். ‘‘இது மிகவும் பழைய அப்ளிகேஷன், இன்றைக்கு இதுதான் புது டிரெண்டிங்’’ என்று நண்பர்களோடு சிலாகிப்பதோடு, ‘‘அந்த ‘ஆப்’பில் அவ்வளவு சலுகை கிடைக்கிறது, இந்த ‘ஆப்’பில் இவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இவ்வளவு பணத்தை மிச்சப்படுத்தினேன்’’ என்று தற்பெருமை பேசுவதற்கும் ஆசைப்படுகிறார்கள்.

    இவர்களது மனநிலைக்கேற்ப, அப்ளிகேஷன் நிறுவனங்களும் சலுகை மழை பொழிந்து வருகிறார்கள். ‘கூகுள் பே’, ‘பேடிஎம்’ போன்ற பணபரிமாற்ற அப்ளிகேஷன்கள் ‘ஸ்கிராட்ச் கார்ட்’ வகையிலான சலுகைகளையும், அமெசான், பிலிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனையகங்கள் ‘கேஷ் பேக்’ சலுகைகளையும் வழங்குகின்றன.

    பிரபல அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, பிரபலமில்லாத ‘ஆப்’களிலும் சலுகைகள் மலிந்துகிடக்கிறது. இப்படி சலுகைகளை அள்ளி வழங்கும் எல்லா ‘ஆப்’களையும் பற்றி நாம் இங்கு ஆய்வு செய்யப்போவதில்லை. சுவையான உணவுகளையும், சூடான சலுகைகளையும் இளைஞர்களுக்கு வழங்கி வரும் சில உணவு ‘ஆப்’களின் நன்மை, தீமைகள் பற்றி மட்டுமே அலசிப்பார்க்க இருக்கிறோம்.

    வங்கி, அலுவலகம், டிக்கெட் முன்பதிவு மையம், செல்போன் ரீ-சார்ஜ் கடை, மின்வாரிய அலுவலகம், இறைச்சி-மீன் மார்க்கெட்... போன்ற எல்லா தேவைகளும், நம்முடைய ஸ்மார்ட் போனிற்குள் அப்ளிகேஷன்களாக வந்துவிட்டன. அந்தவரிசையில் தற்போது ஓட்டல்களும், உணவு ‘ஆப்’ வடிவில் நம் ஸ்மார்ட்போனிற்குள் வந்துவிட்டன.

    ஊபர் ஈட்ஸ், ஸ்விகி, சோமாட்டோ, பாசோஸ்... என பல பெயர்களில் வந்திருக்கும் ‘ஆப்’ ஓட்டல்களில் உங்களுக்கு வேண்டிய உணவுகளை ஆர்டர் செய்தால், அவை சில நிமிடங்களிலேயே உங்கள் வீட்டிற்கு வந்துவிடும். அது பிரியாணியாக இருந்தாலும் சரி, பீட்சா-பர்கராக இருந்தாலும் சரி, ஆர்டர் செய்த 15 நிமிடங்களுக்குள் உணவு உங்களை தேடி பறந்துவந்துவிடும்.

    இத்தகைய உணவு ‘ஆப்’களை நிர்வகிக்கும் நிறுவனங்கள், உணவுப் பொருட்களைப் பெற்று வழங்குவதற்காகவே பிரபலமான உணவகங்கள் மற்றும் ஓட்டல்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. அதனால் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் ஓட்டல்களில் குறிப்பிட்ட உணவை, ‘ஆப்’களின் மூலம் ஆர்டர் செய்தால், அதை அந்த ‘ஆப்’ நிறுவனத்தின் விநியோக பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள், சுடச்சுட டெலிவரி செய்துவிடுவார்கள்.

    “நாம் இருக்கும் இடத்திலேயே நாம் விரும்பிய உணவு பொருள் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்ற அடிப்படையில்தான் இந்த உணவு ‘ஆப்’கள் இயங்குகின்றன. எனக்கு அந்த ஓட்டலில் இருந்து ‘பிரியாணி’, இந்த கடையில் இருந்து ‘பிஷ் பிங்கர்’, அந்த கடையில் இருந்து ‘ஐஸ் கிரீம்’, இந்த கடையில் இருந்து ‘பீட்சா’ என எதை ஆர்டர் செய்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் கிடைப்பதால், பல லட்சங்களில் தொடங்கி சில ஆயிரங்களில் வருமானம் ஈட்டும் இளையோர் வரை இத்தகைய ‘ஆப்’களைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் பரவலாகி வருகிறது.

    இரவுப் பணியில் இருக்கின்ற பலரும் உணவு ‘ஆப்’ நிறுவனங்களின் சேவையை ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கின்றனர். நள்ளிரவு நேரத்தில் அருகிலுள்ள எந்தக் கடையாவது திறந்திருக்குமா, நமக்கு பிடித்தது கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருந்த பலரும் இத்தகைய ‘ஆப்’களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதிகாலை 2 மணி வரை இந்த சேவை கிடைப்பது அவர்களுக்கு ஒருவிதத்தில் ஆறுதல்.



    உணவு சேவை ‘ஆப்’கள் மூலம் சில அடையாளம் தெரியாத கடைகளின் சுவையான உணவுகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சிறிய அளவில் இருக்கின்ற கடைகளும் உணவு சேவை ‘ஆப்’கள் மூலம் இட்லியும், பழச்சாறும், ஐஸ்கிரீமும் விற்பனை செய்யும் நிலை உருவாகி வருகிறது. இத்தகைய ‘ஆப்’கள் பொருளாதார சுழற்சிக்கு உதவுகின்றன எனினும், ஆடம்பரத்துக்கும், வீண் செலவுக்குமே வழிவகுக்கின்றன என்பது உண்மை.

    அவசரத் தேவைக்காக உணவு ‘ஆப்’களை பயன்படுத்துவது ஒரு புறம் இருக்க, ஆடம்பரத்துக்காகவும் பகட்டுக்காகவும் இவற்றைப் பயன்படுத்துவது பலரிடம் அதிகரித்து வருகிறது. அதாவது, பணத்தைக் காரணமின்றி வீண் விரயம் செய்யும் ஒருவித மனநிலை நமது இளையோர் மத்தியில் வளர்ந்து வருகிறது என்று சொல்லலாம். பணம் இருந்தால் எதையும் நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்க முடியும் என்ற தவறான எண்ணமும் இத்தகைய ‘ஆப்’களின் பயன்பாட்டால் வளர்ச்சி அடைகிறது.

    நமது பணத்தை யாருக்காக, எப்படி, பயனுள்ள விதத்தில் செலவிடுவது என்பதை இக்கால இளையோர் உணர்ந்து கொள்வது அவசியம். நமது பெற்றோரும் உடன்பிறந்தோரும் உறவினர்களும் வறுமையில் வாடும் வேளையில், நாம் சம்பாதித்த பணம் என்பதற்காக வீண் செலவு செய்வது முட்டாள்தனமானது. நமது குடும்பத்தில் இருப்போர் போதிய வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் வேளையில், ஆடம்பரத்துக்காக ‘மொபைல் ஆப்’களைப் பயன்படுத்தி பணத்தை வீணாக்குவது அறிவார்ந்த செயலாக இருக்காது.

    இளையோர் தங்களைத் தனிமனிதராக மட்டும் பார்க்காமல், ஒரு குடும்பத்தின், சமூகத்தின் அங்கத்தினராகப் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்.

    சில மாதங்களுக்கு முன்பு, உணவு சேவை ‘ஆப்’ நிறுவனங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது பலருக்கும் நினைவிருக்கலாம். ‘ஆப்’கள் மூலம் ஆர்டர் செய்து பெறுகின்ற உணவுப் பொருட்கள் பல நேரங்களில் தரமற்றவையாக இருக்கின்றன என்பது அவற்றில் முக்கியமானக் குற்றச்சாட்டு. இதன் விளைவாக, மத்திய அரசு இத்தகைய நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளையும், ஒழுங்குகளையும் கட்டாயமாக்கியது. அரசிடம் பதிவு செய்யாத கடைகளின் உணவுப் பொருட்களை ‘ஆப்’ நிறுவனங்கள் விநியோகம் செய்யக்கூடாது என்பது கட்டுப்பாடுகளில் முக்கியமானது.

    அரசின் கட்டுப்பாடுகள், எந்த அளவுக்கு தரமான உணவை நாம் பெறுவதற்கு உறுதி அளிக்கின்றன என்பது கேள்விக்குறியே. உணவுப் பொருட்கள் தரமற்றதாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று, ‘ஆப்’ நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துள்ள உணவகங்கள் அல்லது கடைகள், வெளியே அனுப்பப்படும் உணவுப்பொருட்களை அவசர கதியில் தயாரித்து அனுப்புகின்றன. நேரில் வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு தயாரிக்கும் முறையில் ‘ஆப்’ வாடிக்கையாளர்களுக்கான உணவுகளை உணவகங்கள் தயாரிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

    இரண்டாவதாக, ‘ஆப்’ நிறுவனங்கள் வழியாக ஒவ்வொரு நாளும் விற்பனையாகும் எண்ணிக்கையின் அடிப்படையில் முன்கூட்டியே உணவுப் பொட்டலங்கள் தயாராகிவிடுகின்றன. விநியோகத்தில் ஏற்படும் கால தாமதம், அந்த உணவுப் பொருட்களின் தரத்தைக் குறைத்து விடுகிறது. சில நேரங்களில், உணவகங்கள் முன்கூட்டியே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொட்டலங்களை ‘ஆப்’ நிறுவனங்களின் குடோன்களுக்கு அனுப்பி விடுகின்றன. ஆர்டருக்கு ஏற்ப அந்நிறுவனங்களில் இருந்தே அவை விநியோகிக்கப்படுவதால் தரத்தில் குறைபாடு காணப்படுகிறது என்பதும் குற்றச்சாட்டாக உள்ளது.

    மூன்றாவதாக, குறிப்பிட்ட உணவகங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் சில ‘ஆப்’ நிறுவனங்கள், உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் உரிமையையும் பெற்றுக் கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. நாம் ஆர்டர் செய்யும் கடைகளின் பெயரில் உணவுப்பொருட்கள் பார்சல் செய்யப்பட்டிருந்தாலும், உண்மையில் அவை அந்த உணவகங்களில் தயார் செய்யப்படாததால் சுவையிலும் தரத்திலும் மாறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய உரிமை பெற்ற ‘ஆப்’ நிறுவனங்கள், சுகாதாரமற்ற குடோன்களில் உணவு தயாரிப்பதாகவும் சில சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



    ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகளை உணவு ‘ஆப்’ நிறுவனங்கள் மறுக்கின்றன. வாடிக்கையாளர்களின் ஆர்டர் பெறப்பட்ட பிறகே தங்கள் பணியாளர்கள் குறிப்பிட்ட கடைகளில் உணவுப்பொருட்களை வாங்கி விநியோகிப்பதாகவும், முன்கூட்டியே வாங்கி சேமித்து வைக்கின்ற வழக்கம் இல்லை என்றும், சொந்தமாக தயாரித்து விநியோகிப்பதை விடவும் கடைகளில் வாங்கி விநியோகம் செய்வதே தங்களுக்கு எளிதானது என்றும் ‘ஆப்’ நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    அதிக வருவாய் ஈட்டும் இளையோரின் செலவையும் ஆடம்பரத்தையும் ‘ஆப்’ உணவு சேவை நிறுவனங்கள் அதிகரித்தாலும், பல ஏழைகளின் வருமானத்துக்கும் வழியமைத்துக் கொடுக்கின்றன. ஒரு ஆர்டருக்கு, ரூபாய் 40 விநியோக கட்டணமாக கிடைப்பதால் சிலர் பகுதி நேர வேலையாகவும், பலர் முழு நேர வேலையாகவும் செய்து வருகிறார்கள். ஆனால், தங்கள் பணியாளர்களின் நலனில் இந்த நிறுவனங்கள் சரியான அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு நியமிக்கப்படும் உணவு விநியோகப் பணியாளர்களுக்கு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட எந்த பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை என்பது வருத்தத்திற்குரியது.

    சில ‘ஆப்’ நிறுவனங்கள், தங்கள் விநியோக பணியாளர்களுக்கு குறிப்பிட்ட மாதச் சம்பளம் நிர்ணயிக்காமல், கிடைக்கின்ற ஆர்டர்களுக்கு ஏற்ப கமிஷனை மட்டுமே சம்பளமாக வழங்கும் அவல நிலையும் உள்ளது. ‘உணவு ஆப்’கள் ஒருபுறம் முன்னேற்றமாகவும் ஆடம்பரமாகவும் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் பல்வேறு சோகங்களையும் குழப்பங்களையும் பாதுகாப்பில்லாத நிலையையும் கொண்டிருக்கின்றன.

    ஆகவே, உணவு சேவை நிறுவனங்களின் ‘ஆப்’களைப் பயன்படுத்துவோர் அவற்றின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை அறிந்து பயன்படுத்துவது நல்லது. பணியாளர்களுக்கு சரியானப் பாதுகாப்பும், சம்பளமும் கொடுக்காத, தரமான உணவுப் பொருட்களை விநியோகம் செய்யாத நிறுவனங்களை தவிர்ப்பதும் நல்லது. அதேசமயம் அதிகம் பணம் செலவழிப்பது மட்டுமே உணவின் தரத்திற்கும் சுகாதாரத்திற்கும் உத்தரவாதமாக அமையாது. ஆடம்பரத்துக்காக அன்றி, அவசரத்துக்காக மட்டும் சரியான உணவு ‘ஆப்’களைத் தேர்வு செய்து பயன்படுத்துவோம்.

    உணவிற்கு மட்டுமே பாதுகாப்பு

    உணவு ‘ஆப்’ நிறுவனங்களின் விநியோக பணியாளர்கள், போக்குவரத்து மிகுந்த சாலைகளில் கருப்பு, சிவப்பு, ஆரஞ்சு வண்ண டீ-சர்ட்களில் ‘விர்’ என பறந்துக்கொண்டிருக்கிறார்கள். உணவை துரிதமாக கொண்டு சேர்த்தால்தான், இவர்களுக்கு நல்ல விமர்சனங்களும், அடுத்தடுத்த ஆர்டர்களும் கிடைக்குமாம். உணவை தாமதமாக கொண்டு சேர்த்தாலோ, உணவு பொட்டலங்கள் சேதமடைந்திருந்தாலோ, ஆர்டர் செய்தவர்கள் கடும் கோபக்காரர்களாக நடந்து கொள்வதுடன், விநியோக பணியாளர் மீது தவறான விமர்சனங்களையும் பதிவிடுகிறார்கள். இதனால் அவர்களது அடுத்தடுத்த ஆர்டர்கள் மறைமுகமாக பறிக்கப்படுவதுடன், அவர்களது வருமானமும் வெகுவாக குறைக்கப்படுகிறது.

    விநியோக பணியாளர்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்பதைவிட, உணவை பாதுகாப்பாகவும், துரிதகதியிலும் விநியோகிக்கவேண்டும் என்பதே பெரும்பாலான உணவு ‘ஆப்’ நிறுவனங்களின் குறிக்கோளாகஇருக்கிறது.

    போலி ஆர்டர்கள்


    உணவு ‘ஆப்’ நிறுவனங்கள், விநியோக ஊழியர்களிடம் கண்டிப்போடு நடந்துக்கொள்வதற்கும் சில காரணங்கள் உள்ளன. உணவை ஓட்டல்களில் இருந்து வாங்கி, அதை உரியவரிடத்தில் சேர்ப்பதுதான், விநியோக ஊழியர்களின் வேலை. ஆனால் சில சமயங்களில் உணவை ஆர்டர் செய்தவர், அதை பாதியிலேயே ரத்து செய்வதுண்டு. அப்படி பாதியிலேயே ரத்து செய்யப்படும் உணவை ஓட்டல் நிறுவனங்களும் ஏற்றுக்கொள் வதில்லை.

    சுருக்கமாக சொன்னால், அந்த உணவு விநியோக ஊழியர்களுக்கானதாகி விடுகிறது. மேலும் ரத்து செய்த ஆர்டருக்கான விநியோக கட்டணமும் வழங்கப்படும். இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சிலர், நண்பர்களின் உதவியோடு போலி ஆர்டர்களை அரங்கேற்றுகிறார்கள். பின்னர் அதை பாதியிலேயே ரத்தும் செய்து விடுகின்றனர். அவர்களது திட்டப்படி உணவிற்கு உணவும், பணத்திற்கும் பணமும் கிடைத்துவிடுகிறது. இப்படியே 6 போலி ஆர்டர்களை அரங்கேற்றினால், உணவு+கட்டணம் ஆகியவற்றுடன் போனஸ் தொகையும் கிடைத்து விடுமாம். இந்த பார்முலாவை பலரும் பயன்படுத்துவதால், ‘ஆப்’ நிறுவனங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன.

    டே. ஆக்னல் ஜோஸ்
    தற்போது நாம் விரும்பும் ஓட்டலில் இருந்து உணவை வீட்டுக்கே வரவழைக்கிறோம். இந்த வீடு தேடி வரும் உணவுகளால் மக்களுக்கு லாபமா? நஷ்டமா என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
    கடந்த காலங்களில் தந்தை தான் கற்று வந்த விஷயங்களை எல்லாம் தனது பிள்ளைக்கு கற்றுக்கொடுப்பார். எது நல்லது, எது கெட்டது என்பதனை தந்தை தனது அனுபவத்தில் உணர்ந்திருப்பார். நல்ல விஷயங்களை பிள்ளைக்கு போதிப்பார். கெட்ட விஷயத்தை புறக்கணித்து விடுவார். ஆனால் இது தகவல் தொழில் நுட்ப காலம். இங்கு பிள்ளைகளும், தந்தையும் ஒரு சேர கற்றுக்கொள்கிறார்கள். எனவே அதில் நல்லது? கெட்டது என்பதனை தந்தை அறிந்து இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தந்தை அதனை கற்றுணர்ந்து இது தவறு என்று சொல்வதற்குள், அவரது பிள்ளை அதற்கு அடிமையாகி விடுகிறது.

    கடந்த காலங்களில் தந்தை தான் கற்று வந்த விஷயங்களை எல்லாம் தனது பிள்ளைக்கு கற்றுக்கொடுப்பார். எது நல்லது, எது கெட்டது என்பதனை தந்தை தனது அனுபவத்தில் உணர்ந்திருப்பார். நல்ல விஷயங்களை பிள்ளைக்கு போதிப்பார். கெட்ட விஷயத்தை புறக்கணித்து விடுவார். ஆனால் இது தகவல் தொழில் நுட்ப காலம். இங்கு பிள்ளைகளும், தந்தையும் ஒரு சேர கற்றுக்கொள்கிறார்கள். எனவே அதில் நல்லது? கெட்டது என்பதனை தந்தை அறிந்து இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தந்தை அதனை கற்றுணர்ந்து இது தவறு என்று சொல்வதற்குள், அவரது பிள்ளை அதற்கு அடிமையாகி விடுகிறது.

    அந்த தகவல் தொழில் நுட்ப அடிமைத்தளத்தில் இருந்து மீண்டு வருவது என்பது இயலாத காரியம் ஆகி விட்டது. மது, மாது ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி விட்டு, தகவல் தொழில் நுட்பம் மனிதனுக்கு மிகப்பெரிய போதையாகி விட்டது.

    செம்மறி ஆடுகள்

    மந்தையாக செல்லும் செம்மறி ஆடுகளில், முன்னே செல்லும் ஒரு ஆடு கிணற்றில் விழுந்தாலும், அதனை பின்தொடரும் அத்தனை ஆடுகளும் கிணற்றில் விழுந்து விடும். அது போல தகவல்தொழில் நுட்பம் என்ற ஒற்றை பாதைக்கு பின்னால் ஒட்டுமொத்த சமூகமும் செம்மறி ஆடுகள் போல் சென்று கொண்டு இருக்கிறது.

    பேசுவதற்காக, கண்டுபிடிக்கப்பட்ட செல்போனில் எதையும் செய்யலாம் என்ற நிலை வந்து விட்டது. பல சாதனங்கள் செய்து கொண்டு இருந்த வேலைகளை எல்லாம் செல்போன் ஒன்றே செய்கிறது. செல்போனிலே வீட்டுக்கு தேவைக்கான சாமான்களை வாங்க தொடங்கினோம். கார், ஆட்டோக்களை முன்பதிவு செய்து வரவழைக்கிறோம். தற்போது நாம் விரும்பும் ஓட்டலில் இருந்து உணவை வீட்டுக்கே வரவழைக்கிறோம். இது வளர்ச்சிக்குள் இருக்கும் வீழ்ச்சி என்பதனை யாரும் அறிவதில்லை.



    சலுகை

    வீட்டுக்கு வந்து உணவு தரும் சேவையை பல நிறுவனங்கள் மக்களுக்கு அளித்து வருகிறது. இவர்களது செயலி மூலம் நாம் விரும்பும் ஓட்டலில் இருந்து விரும்பும் உணவுகளை ஆர்டர் செய்யலாம். அவர்கள் அதனை நமது வீட்டுக்கு அரை மணி நேரத்தில் டெலிவரி செய்கிறார்கள். மேலும் இந்த நிறுவனங்கள் அளிக்கும் பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளால் கவர்ந்திழுக்கப்படும் மக்கள் இதற்கு அமோக ஆதரவை அளித்து வருகின்றனர். இந்த வீடு தேடி வரும் உணவுகளால் மக்களுக்கு லாபமா? நஷ்டமா என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

    நேர விரயம்

    லாபம் இருக்கிறது என்று சொன்னவர்களின் கருத்துக்கள் வருமாறு:-

    நகர வாழ்க்கையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்குள் போதும், போதும் என்றாகி விடுகிறது. நான்கு பேர் இருக்கும் வீட்டில் மோட்டார் சைக்கிளில் ஓட்டலுக்கு செல்ல முடியாது. ஆட்டோவில் செல்ல வேண்டும். அதற்கு கூடுதல் செலவு ஆகிறது. அதுமட்டுமின்றி அனைவரும் ஓட்டலுக்கு சென்று வர நேரம் விரயம் ஆகிறது. ஆனால் ஆன்லைனில் பதிவு செய்து விட்டால் போதும். சலுகை விலையில் வீட்டுக்கே வந்து உணவு தருகிறார்கள். விரும்பும் நேரத்தில், விரும்பும் உணவுகளை சாப்பிடலாம். இதை விட என்ன வேண்டும் என்று என்கிறார்கள்.

    எலிப்பொறி

    நஷ்டம் தான் என்று சொன்னவர்கள் கருத்துக்கள் விவரம் வருமாறு:-

    கடந்த காலங்களில் வெளியூர் பயணங்களின் போது தான் ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவது வழக்கம். ஆனால் தற்போது சுவைக்காகவும், சோம்பேறித்தனத்தாலும் ஓட்டலில் சென்று சாப்பிடும் பழக்கம் அதிகரித்து விட்டது. வீட்டு சாப்பாடு தான் உடலுக்கு ஆரோக்கியம். ஆனால் ஓட்டல் சாப்பாட்டை வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுவது சரியாகுமா? அதில் சலுகை என்பதே எலிப்பொறியில் வைக்கும் தேங்காய் போன்றது. அதில் நாம் சிக்க தான் செய்வோம். நம்மை ஏமாற்றி வியாபாரம் செய்வதற்கான உத்தி அது. ஒரு முறை வீட்டிற்கு உணவுகளை வரவழைத்து சாப்பிட்டு விட்டால், அதற்கு அடிமையாகி மீண்டும், மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் நமது மனதில் குடியேறி விடும் என்கிறார்கள். 
    பல்வேறுபட்ட விதங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது உங்களது வருமானத்தை அதிவேகமாக அதிகரிக்கும் ஒரு நிச்சயமான வழி ஆகும். என்ன புத்திசாலித்தனமான முதலீடு, அதன் அம்சங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்...
    நம் அனைவருக்கும் பொருளாதாரம் சார்ந்த கனவுகள், இலக்குகள் உண்டு. அது, வீடு வாங்குவதாக இருக்கலாம், நிலம் வாங்குவதாக இருக்கலாம், கார் வாங்குவதாக இருக்கலாம், வங்கி இருப்பு குறிப்பிட்ட தொகையை எட்ட வேண்டும் என்பதாக இருக்கலாம்.

    திட்டமிட்டுச் செயல்பட்டால் இத்தகைய கனவுகளை ஒருநாள் நனவாக்க முடியும். உதாரணமாக, முதலீட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    பல்வேறுபட்ட விதங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது உங்களது வருமானத்தை அதிவேகமாக அதிகரிக்கும் ஒரு நிச்சயமான வழி ஆகும். ஆனால் உங்கள் பணத்தை அதிவேகமாக வளர்ப்பதற்கு புத்திசாலித்தனமான முதலீடு முக்கியம்.

    அது என்ன புத்திசாலித்தனமான முதலீடு, அதன் அம்சங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்...

    * முதலீடு செய்வதற்கு முன்னர், உங்கள் முதலீட்டில் இருந்து நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றித் தெளிவாக இருக்க வேண்டும்.

    * ஒருவர் முதலீட்டு செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பே நிகரச் சொத்துகள் மற்றும் கடன் களைக் கணக்கிடுவது முக்கியம். தற்போதைய முதலீடுகளைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தால், உங்கள் பணத்தை அறிவுப்பூர்வமாக முதலீடு செய்வது எளிதாக இருக்கும்.

    * முதலீடு குறித்த முறையான ஆராய்ச்சி முக்கியம். நீங்கள் முதலீடு செய்யும் துறையைப் பற்றிய தெளிவான அறிவு பெறும்வரை முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

    * முதலீட்டில் சோதனை முயற்சி வேண்டாம். எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், பங்குச் சந்தை எங்கு செல்லும் என்பதை ஊகிக்க முயற்சிக்க வேண்டாம். இன்றே முதலீடு செய்து உங்கள் முதலீட்டுத் தொகையை விரிவாக்கவும்.

    * நீங்கள் முதலீடு செய்வதற்குப் புதியவராக இருந்தால், நீங்கள் அறிந்திருக்கும் துறைகளில் முதலீடு செய்வது எப்போதும் பாதுகாப்பானது. இது நல்ல முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவும்.

    * பல்வேறு பிரிவுகளில் முதலீடு செய்யுங்கள். இதனால் ஒன்றில் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், மற்றொன்றில் இருந்து கிடைக்கும் லாபத்தால் அந்த நஷ்டம் ஈடு செய்யப்படும்.

    * உங்கள் முதலீடுகளின் செயல் திறனைச் சரிபார்க்க வழக்கமான இடைவெளியில் எப்போதும் உங்கள் ‘போர்ட்போலியோ’ செயல்திறனைக் கண்காணிக்கவும். மேலும், திருமணம் போன்ற சிறப்புச் சந்தர்ப்பங்களில் ஒரு பகுப்பாய்வு தேவைப்படலாம்.

    * சில முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் பணவீக்கத்தின் தாக்கத்தைப் புரிந்து கொள்கிறார்கள். உங்கள் வருமானம் மற்றும் முதலீடுகளின் உண்மையான மதிப்பை அறிய பணவீக்கத்தின் காரணியை அறிந்துகொள்ளுங்கள்.

    * ஒரு சில முதலீடுகள் உடனடியாகப் பணம் எடுக்கக்கூடியதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எந்த ஓர் அவசர சூழ்நிலையிலும் அத்தகைய முதலீடு உங்களுக்குக் கைகொடுக்கும். உங்கள் எல்லா நிதியையும் நீண்டகால முதலீடாக வைத்துக்கொள்ள வேண்டாம்.

    * முதலீடு பற்றிய முடிவுகளை எடுக்கும்போது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். முதலீடு தொடர்பான இத்தகைய முடிவுகளை யதார்த்தமாகவும், அறிவார்ந்த விதத்திலும் எடுங்கள். எப்போதும் உங்கள் எதிர்பார்ப்புகள் யதார்த்தமாக இருக்க வேண்டும். ஒருபோதும் வானத்தில் கோட்டை கட்ட நினைக்க வேண்டாம். யதார்த்தமில்லாத எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்ட நிதி இலக்குகளை எட்ட முடியாது என்பதை உணருங்கள்.
    விவாகரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்திருக்கும் இளம் தம்பதியினர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.
    பல குடும்பங்களில் ஈகோவை முன்வைத்து எழும் சச்சரவுகள் இல்லற அமைதியைக் காவுகொள்கின்றன. கனவுகளுடன் தொடங்கிய மணவாழ்வின் வேர்களில் தம்பதியரின் ஈகோ அமிலம் ஊற்றுகிறது. புனிதமாகப் போற்றி வளர்த்த காதலை, பல தம்பதியர் கணப்பொழுது ஈகோவால் தொலைத்திருக்கிறார்கள்.

    எந்த உறவானாலும் அதன் உறுதியை உரசிப் பார்க்க அவ்வப்போது வந்து செல்லும் ஈகோ போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியாது. ஆனால், கொஞ்சம் கவனமாகக் கையாண்டால் ஈகோவை எதிர்கொண்டு மீளலாம். ஆனால், கணவன் - மனைவி இருவரில் ஒருவர் பக்குவக் குறைவானவராக இருந்தால் போதும், இந்த ஈகோ மன முறிவுக்கு வித்திட்டுவிடும். விவாகரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்திருக்கும் இளம் தம்பதியினர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.

    மணவாழ்வில் ஒருவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஈகோவை வளர்க்கும்போது கணவன் - மனைவி உறவு சிக்கலாகிறது. ஈகோ தலைக்கேறியவர்களை எப்போதும் புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஏதாவதொரு தவறைச் சுட்டிக்காட்டினால் வேறு முகம் காட்டுவார்கள். பொதுவாக, ஈகோ தலைக்கேறியவர்களிடம் இருந்து விலகவே விரும்புவோம். ஆனால், ஈகோ முற்றியவர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கை கசப்புத் தட்டும்.



    கடந்த தலைமுறையில் மனைவியைவிடக் கணவனின் வயது பொதுவாக அதிகமாக இருக்கும். பொருள் சார்ந்த குடும்ப ஓட்டமும் பெரும்பாலும் கணவனைச் சார்ந்தே இருக்கும். இவற்றுடன் கலாச்சாரம் சார்ந்தும் பெண் விட்டுக்கொடுத்துப் போகவே பழக்கப்பட்டிருந்ததால் குடும்பங்கள் ஈகோவில் சிக்காமல் தப்பிப் பிழைத்தன. இன்றோ கிட்டத்தட்ட ஒரே வயதில், இணையான படிப்பு, வேலை, ஊதியம் என இருப்பதால் இளம் தம்பதிகளுக்கு மத்தியில் ஈகோ பிரச்சினை இயல்பாகப் பற்றிக்கொள்கிறது. ஆழமான புரிதலும் நிபந்தனையற்ற அன்பும் கொண்ட தம்பதியரிடையே ஈகோ எடுபடுவதில்லை.

    கணவனோ மனைவியோ இணை மீதான பிடிமானம் இளகுவதாக உணரும்போது ஒருவகையான பாதுகாப்பின்மை தோன்றும். அப்போது சிலர் தங்களது சுய மதிப்பை ஈகோவாக வெளிப்படுத்துவார்கள். இன்னும் சில இடங்களில் ஈகோவின் தோற்றுவாய் தற்பெருமையாக இருக்கும். தனது வீடு, வசதி, படிப்பு, அழகு உள்ளிட்டவை குறித்த தம்பட்டம் பெரும்பாலும் அடுத்தவரை மட்டம் தட்டுவதற்கே பயன்படுத்தப்படுகிறது.

    பரஸ்பரம் மதித்தல், புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றுடன் மனத்தாங்கல்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே காது கொடுத்தால் அங்கே ஈகோவுக்கு இடமிருக்காது. உண்மையான அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஈகோவைத் தூர விரட்டும். நிறை குறைகளை ஏற்றுக்கொள்வதும் சச்சரவுகள் முளைக்கும்போது துணையின் பலவீனத்தைக் கவனமாகக் கடந்துபோவதும் இதில் சேரும்.
    திருமணமாகாத ஆண்கள் திருமணமான பெண்களுடன் டேட்டிங் செல்வதற்கு ஏதோ ஒரு வசதி இருந்தாக வேண்டும். திருமணமான பெண்கள் ஏன் தங்கள் கணவனை ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் உள்ளது..
    திருமணமாகாத ஒரு இளைஞன் திருமணமான ஒரு பெண்ணுடன்; இந்த கதையை நாம் எண்ணிலடங்கா முறையில் கேள்விப்பட்டிருப்போம். திருமணமாகாத ஆண் ஏன் திருமணமான பெண்களை ஆண்கள் நாட வேண்டும் என உங்களுக்கு தோன்றலாம். கேட்க வியப்பாக இருந்தாலும் கூட நடைமுறையில் பல இடங்களில் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது.

    திருமணமாகாத ஆண்கள் திருமணமான பெண்களுடன் டேட்டிங் செல்வதற்கு ஏதோ ஒரு வசதி இருந்தாக வேண்டும். திருமணமான பெண்கள் ஏன் தங்கள் கணவனை ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் உள்ளது. புதிய ஆணுடன் கிடைக்கும் உறவினால் ஏற்படும் கிக்கு, காதலே இல்லாத திருமண வாழ்க்கையில் மாட்டிக் கொண்டது போன்ற பல காரணங்களை இதற்கு கூறலாம்.

    ஆனால் திருமணமாகாத ஆண்கள் ஏன் திருமணமான பெண்களால் வசீகரிக்கப்படுகிறார்கள் என்பது ஏன் என தெரிந்து கொள்ள வேண்டுமா? திருமணமான பெண்களுடன் உறவில் ஈடுபடுவதால் திருமணமாகாத ஆண்களுக்கு பலன் அதிகமே தவிர இழக்க ஒன்றுமே இல்லை. ஆண்களுக்கு பிடிக்காத அர்ப்பணிப்பை தவிர, திருமணமான பெண்களிடம் ஆண்களுக்கு அனைத்தும் கிடைக்கும். திருமணமான பெண்கள் என்றால் ஈகோ இருக்காது; அதே போல் தேவையில்லாத சண்டைகளும் வராது.

    திருமணமாகாத ஆண்களுடன் உறவில் ஈடுபடும் போது தேவையற்ற கோரிக்கைகளையும் எழுப்ப மாட்டார்கள். திருமணமான பெண்கள் மீது திருமணமாகாத ஆண்கள் ஏன் ஈர்ப்பை பெறுகிறார்கள் என்பதற்கான காரணங்கள், இதோ!

    திருமணமாகாத பெண்களுடன் டேட்டிங் செல்வதை விட திருமணமான பெண்களுடன் செல்வது தான் சுலபம். அதற்கு காரணம் அவர்களை ஈர்ப்பது சுலபம். பொதுவாக திருமணமாகாத ஆண்களின் கவனத்தை ஈர்க்க அவர்கள் அதிகம் விரும்புவார்கள்.



    குறுகிய கால உறவு வேண்டும் அல்லது ஒரு நாள் இரவுக்கு மட்டும் வேண்டும் என்ற தேவைப்பாடு இருந்தால், திருமணமான பெண்கள் தான் சரியான தேர்வு. அவர்களுடன் இரவை கழித்த பிறகு மீண்டும் உங்களை எதிர்ப்பார்க்க மாட்டார்கள். அதனால் இது ஆண்களுக்கு வசதியாக இருக்கும்.

    திருமணமாகாத பெண்களுடன் டேட்டிங் சென்றால், அவர்கள் பல விஷயங்களுக்கு கோபமடைந்து சண்டை போடுவார்கள். சண்டைக்கு பிறகு மௌன சிகிச்சை அளித்து, அவர்களை தாஜா செய்ய வேணும் என்று விரும்புவார்கள். ஆனால் திருமணமான பெண்கள் என்றால், உங்கள் சந்திப்பு எப்போதும் ரகசியமாகவும், வேக வேகமாகவும் தான் இருக்கும். அதனால் சண்டை போடவோ, சமாதானம் அடையவோ நேரம் இருக்காது.

    ஒரு உறவில் புதிய அனுபவத்தை அனுபவிக்க திருமணமான பெண் சிறந்த துணையாக இருப்பார்கள். அனுபவமுள்ள பெண்ணிடம் ஆண் நிறைய கற்றுக் கொள்ளலாம். அதனை அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

    திருமணமான பெண்களுக்கு அதிகமாக செலவு செய்ய தேவையில்லை. அவர்கள் விலையுயர்ந்த பரிசுகளை எதிர்ப்பார்ப்பதில்லை. மாறாக புகழ்ச்சியை மட்டுமே எதிர்ப்பார்ப்பார்கள்.

    உங்களுக்காக திருமணமான பெண்கள் தங்கள் கணவனை விட மாட்டார்கள். அலுப்பு தட்டும் திருமண வாழ்க்கையில் இருந்து ஒரு மாறுதல் வேண்டும் என்ற கேவலமான சுகத்திற்காகவே அவர்கள் உங்களை நாடுவார்கள்.

    திருமணமான பெண்கள் திருமணமாகாத ஆண்களை மிரட்ட முயற்சி செய்தால், ஆண்களுக்கு ஒரு பாதிப்பும் ஏற்பட போவதில்லை. ஆனால் ஆண்களோ அந்த பெண்ணின் கணவன், குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் கூறி விடுவதாக மிரட்டலாம். ஆண்களை விட பெண்களே இழப்பதற்கு அதிகம்.

    திருமணமான பெண்களுடன் உறவில் இருக்கும் போது பிற பெண்களுடன் சுற்றக் கூடாது என்ற கட்டுப்பாடில்லை. எந்த ஒரு அர்பணிப்பும் இல்லாததால், அவர்கள் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் டேட்டிங் செல்லலாம்.
    வீட்டு கடன் பெற்றவர் திருப்பி செலுத்த முடியாமல் போவதற்கு கடும் நோய் (அ)இறப்பு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அதுபோன்ற நிலையில் கடன் பெற்று வாங்கிய வீட்டின்மீது செய்யப்பட்ட காப்பீடு பெரும் உதவியாக இருக்கும்.
    வீட்டு கடன் பெறுவதன் மூலம் சொந்த வீடு வாங்குவதுதான் இன்றைய சூழலில் பெரும்பாலானோர் வழக்கமாக உள்ளது. அவ்வாறு பெறப்படும் கடனை மாத தவணைகளாக திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் 10 முதல் 25 வருடங்களாக இருக்கும் நிலையில் அந்த நீண்ட கால அவகாசத்தில் கடன் பெற்றவருக்கு ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு அல்லது இறப்பு ஆகிய காரணங்களால் கடனை திருப்பி செலுத்துவது தடைபடலாம். அதன் காரணமாக அவர் குடும்பத்தினர் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு என்று நிதி ஆலோசகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    உதவும் காப்பீட்டு திட்டங்கள்

    அவர்களது கருத்துப்படி, கடன் பெற்றவர் திருப்பி செலுத்த முடியாமல் போவதற்கு கடும் நோய் அல்லது இறப்பு ஆகிய இரண்டும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அதுபோன்ற நிலையில் கடன் பெற்று வாங்கிய வீட்டின்மீது செய்யப்பட்ட காப்பீடு பெரும் உதவியாக இருக்கும் என்றும் ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    கடன் மறு சீரமைப்பு

    வீட்டு கடனை முற்றிலும் செலுத்தாத நிலையில் கடன்தாரருக்கு இறப்பு நேரிடும் பட்சத்தில் கடனுக்கான இணை விண்ணப்பதாரர் அல்லது அவரது சட்ட ரீதியான வாரிசு ஆகியோர் கடனை திருப்பி செலுத்தவேண்டும். அதுபோன்ற தருணங்களில் கடன் அளித்த நிதி நிறுவனம் அல்லது வங்கி ஆகியவற்றை அவர்கள் அணுகினால் விதிமுறைகளின்படி கடனை மறுகட்டமைப்பு செய்தோ அல்லது இ.எம்.ஐ செலுத்துவதற்கான கால அவகாச நீட்டிப்பு அளித்தோ உதவிகள் செய்ய வாய்ப்புகள் உண்டு.

    கூடுதல் தொகை காப்பீடு

    பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் வீட்டு கடன் வழங்குவதற்கு முன்னர் போதுமான தொகைக்கு காப்பீடு செய்யும்படி வலியுறுத்துகின்றன. அத்தகைய நிலையில் வீட்டு கடனுக்கு ‘டெர்ம் காப்பீடு’ செய்யும் முன்னர் காப்பீட்டு தொகை, பெறப்பட்ட கடன் தொகையை விட அதிகமாக இருந்தால்தான் கடன் பெற்றவரது வாரிசுகளுக்கு சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்கப்படும்.

    வங்கிகள் அளிக்கும் சலுகைகள்

    காப்பீடு மூலம் கிடைத்த தொகை போதுமானதாக இல்லை என்ற நிலையில் கடனுக்கான சொத்தை விற்பதன் மூலம் நிலுவை தொகையை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் திரும்ப பெறும் சூழல் ஏற்படலாம். ஆனால், வீட்டு கடனை பொறுத்தவரை வங்கிகள் உடனடியாக சொத்துக்களை விற்பனை செய்யும் வழிமுறைகளை மேற்கொள்வதில்லை.

    கடன் பெற்றவர்கள் அல்லது அவர்களது வாரிசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கடன் மறு சீரமைப்பு அல்லது இ.எம்.ஐ செலுத்த கூடுதல் கால அவகாசம் போன்ற சலுகைகளை வழங்க முன் வருகின்றன.

    கடனோடு இணைந்த காப்பீடு

    வீட்டு கடன் தணைகளை செலுத்தும்போது வரக்கூடிய எதிர்பாராத சங்கடங்களை சமாளிக்க காப்பீடு அவசியம் என்ற நிலையில் வீட்டு கடன் அளிக்கும் நிறுவனங்கள் கடன் பெற்றவர்களுக்கு உதவும் விதமாக ‘பில்ட் இன்’ காப்பீடு திட்டங்களை அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
    தொலைந்துபோன டெபிட் கார்டை தடைசெய்ய, நெட் பேங்கிங் எனப்படும் இணைய வங்கிச்சேவையை பயன்படுத்தலாம். இம்முறையை எப்படி பயன்படுத்துவது என்று இங்கே பார்ப்போம்...
    இன்று நமது பணப் பரிவர்த்தனைக்கு பிரதான கருவியாக ‘டெபிட் கார்டு’ உள்ளது.

    வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பது, இணைய தளம் வாயிலாக பணப் பரிமாற்றம் செய்வது போன்ற வங்கிச் சேவைகளை டெபிட் கார்டு மிகச் சுலபமாக்கிவிட்டது.

    இந்நிலையில், வங்கி டெபிட் கார்டை தொலைக்க நேர்ந்தால், தடுமாறிப் போய்விடுவோம்.

    வங்கியில் இருந்து உங்களது புதிய டெபிட் கார்டை பெறுவதற்கு முன்பு, தொலைந்த அட்டையை ‘பிளாக்’, அதாவது தடைசெய்வது சற்றுக் கடினமான செயல்.

    உங்களது டெபிட் கார்டை பிளாக் செய்ய வேண்டும் என்றால், வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ள வேண்டும். அப்போது, தொலைபேசியில் காத்திருக்கும் நேரம் மற்றும் வங்கிக் கணக்கு எண், டெபிட் கார்டு தொலைந்ததற்கான காரணம், முகவரி போன்ற தகவல்களைத் தருவது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் நம்மைப் பொறுமையிழக்க வைக்கும்.

    இதற்கு மாற்றாக, தொலைந்துபோன டெபிட் கார்டை தடைசெய்ய, நெட் பேங்கிங் எனப்படும் இணைய வங்கிச்சேவையை பயன்படுத்தலாம். இம்முறையை எப்படி பயன்படுத்துவது என்று இங்கே பார்ப்போம்...

    உங்களது ‘யூசர் ஐடி’ மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி இணைய வங்கிக்கணக்கில் உள்நுழையுங்கள்.



    ‘ஈ- சர்வீசஸ்’ எனும் பிரிவில், ஏடிஎம் கார்டு சேவைகள் என்பதற்குக் கீழே ‘பிளாக் ஏடிஎம் கார்டு’ என்பதைத் தேர்வு செய்யுங்கள்.

    பின்னர் எந்த வங்கிக்கணக்குக்கான டெபிட் கார்டை பிளாக் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். உங்களின் ஏடிஎம் கார்டு எண்ணின் முதல் மற்றும் கடைசி 4 இலக்க எண்கள் காண்பிக்கப்படும். அத்துடன் செயல்பாட்டில் உள்ள, தடை செய்யப்பட்ட அனைத்து டெபிட் கார்டுகளும் காண்பிக்கப்படும்.

    நீங்கள் பிளாக் செய்ய விரும்பும் டெபிட் கார்டை தேர்வு செய்து, அதைச் சரிபார்த்த பின்னர் சமர்ப்பிக்கவும்.

    அதை உறுதிசெய்யும் வகையில், வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு அல்லது எஸ்.எம்.எஸ். வாயிலாக அனுப்பப்படும் ஓடிபி எனும் அங்கீகாரத்தை தேர்வு செய்யவும்.

    வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு அல்லது குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் ஓடிபி-ஐ என்டர் செய்த பின்னர், அதை உறுதி செய்ய (கன்பர்ம்) வேண்டும்.

    கடைசியாக ஏடிஎம் கார்டை பிளாக் செய்யக்கோரும் உங்களின் சேவை கோரிக்கையை வெற்றிகரமாகச் சமர்பித்த பின்னர் வழங்கப்படும் சேவை எண்ணை, எதிர்கால தேவைக்காகவும் மீண்டும் அதுதொடர்பாக விளக்கங்களை வங்கியில் கோரவும் குறித்து வைத்துக்கொள்ளவும்.

    டெபிட் கார்டை பிளாக் செய்வதற்கான சேவை எண்ணை குறித்து வைத்துக்கொண்டு, வங்கிக்குச் சென்று அந்த எண்ணை வழங்கி புதிய டெபிட் கார்டை பெற்றுக்கொள்ளலாம்.

    அந்தச் சமயத்தில் வங்கிகள் உடனடியாக கையில் டெபிட் கார்டை உங்களுக்கு வழங்கும். அது உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் அல்லது அதிகபட்சமாக 2 வேலை நாட்களுக்குள் செயல்பட ஆரம்பிக்கும். 
    அதிகம் படித்த ஆண்கள்கூட பெண்களை புரிந்துகொள்வதில் பின்தங்கித்தான் இருக்கிறார்கள். பெண்களை சரியாக புரிந்துகொள்ள முடியாத ஆண்களால் மணவாழ்க்கையில் வெற்றியடைய முடிவதில்லை.
    அதிகம் படித்த ஆண்கள்கூட பெண்களை புரிந்துகொள்வதில் பின்தங்கித்தான் இருக்கிறார்கள். பெண்களை சரியாக புரிந்துகொள்ள முடியாத ஆண்களால் மணவாழ்க்கையில் வெற்றியடைய முடிவதில்லை. வெளியே அவர்கள் அன்னியோன்யமான தம்பதிகள்போல் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் புகைச்சல் இருந்துகொண்டேதான் இருக்கும். பெண்களை புரிந்துகொள்ளத் தெரிந்த ஆண்களால், மனைவியிடம் இயல்பான உறவினை மேற்கொள்ள முடியும். அவர்களால் மணவாழ்க்கையையும் மகிழ்ச்சிக்குரியதாக அமைத்துக்கொள்ள முடியும்.

    பெரும்பாலான ஆண்கள் செல்போனுக்கு, மனைவியைவிட அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். செல்போன் கையில் இருந்தால் உலகையே மறந்துவிடுகிறார்கள். கண் நிறைந்த மனைவியை அருகில் வைத்துக்கொண்டு, செல்போனில் கண்டதையும் பார்த்துக்கொண்டிருப்பதை எந்த பெண்ணாலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. சில ஆண்கள் காது வலித்து, வாய் சோர்ந்து போகும் அளவுக்கு செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பேசுபவர்கள் யாராக இருந்தாலும், பேசும் நேரம் என்பது முக்கியம். வீட்டில் உட்கார்ந்துகொண்டு மனைவி வெறுத்துப்போகும் அளவுக்கு ஆண்கள் வெளிநபர்களிடம் பேசிக்கொண்டிருக்கக்கூடாது.

    மனைவி பெரும்பாலும் கணவர் எப்போது வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பார். அவரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்களை வைத்துக்கொண்டு காத்திருப்பார். அப்படிப்பட்ட சூழலில் கணவர் போனில் பேசிக்கொண்டோ, எதையாவது பார்த்துக்கொண்டோ இருந்தால் கணவர் தன்னை மதிக்கவில்லை என்ற முடிவுக்கு மனைவி வந்துவிடுவார்.

    கம்ப்யூட்டரே கதி என்று கிடக்கும் ஆண்களையும் பெண்களுக்கு பிடிப்பதில்லை. இப்போது காதலிக்க விரும்பும் பெண்கள்கூட வலைத்தளத்தில் அதிக பொழுதை செலவிடும் இளைஞர்கள் பக்கம் திரும்பிப்பார்க்காமல் சென்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு பெண்களின் இதயத்தைவிட இணைய தளத்தையே அதிகம் பிடிக்கும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள்.

    அதனால் பெண்களை கவர விரும்பும் ஆண்கள், இணையதள மோகத்தில் இருந்து விடுபடுவது அவசியமாகிறது. அதுபோல் இப்போது திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள், தங்களை பெண் பார்க்க வரும் இளைஞர்களிடம் தனியாக சந்தித்து பேசும்போது இணையதள மோகம் பற்றி வெளிப்படையாகவே கேட்டுவிடுகிறார்கள். கம்ப்யூட்டர், செல்போன் போன்றவைகளே கதி என்று கிடக்கும் ஆண்களை விபரம் தெரிந்த பெண்கள் கணவராக ஏற்றுக்கொள்வதில்லை.



    தான் சொல்லுவதைதான் மனைவி கேட்க வேண்டும் என்ற பிடிவாதம் ஆண்களுக்கு உண்டு. முக்கியமான விஷயங்களை பற்றி முடிவெடுக்கும்போதுகூட பலர் மனைவியிடம் கருத்து கேட்பதில்லை. தானாக முடிவினை எடுத்துவிட்டு, பின்பு மனைவியிடம் தகவல் மட்டும் கூறினால் போதும் என்று அவர்கள் நினைத்துவிடுகிறார்கள். மனைவிகள் இப்போது முடி வெடுக்கும் அளவுக்கு தெளிவாக இருப்பதால், தங்களிடம் தகவல்கள் மட்டும் சொல்லும் கணவர்களை அவர்களுக்கு பிடிப்பதில்லை. தொடர்ந்து மனைவியிடம் தகவல் மட்டுமே சொல்லும் கணவராக நீங்கள் இருந்தால், நீங்கள் உங்கள் மனைவியிடம் அபிமானத்தை இழந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

    கர்வம் என்பது ஆண்களில் சிலரது பிறவிக் குணம். ஒவ்வொரு செயலிலும் அவர்களது இந்த கர்வம் முன் வந்து நிற்கும். அதை கம்பீரம் என்று தவறாக கருதிவிடுகிறார்கள். தெளிந்த சிந்தனையும், அறிவார்ந்த செயலும்தான் ஆண்களுக்கு கம்பீரமே தவிர, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அகந்தை கொள்வது கம்பீரம் அல்ல. கர்வம் கொண்டவர்கள் அற்ப விஷயத்திற்கெல்லாம் நீயா நானா என்று போட்டி போடுவார்கள். அதன் மூலம் நிம்மதியை இழந்துகொண்டிருப்பார்கள். அதனால் ஆண்களின் அகந்தை பெண்களுக்கு பிடிக்காது.

    தங்கள் உறவுகளைப் பற்றி பெருமையாகவும், மனைவியின் உறவுகளைப் பற்றி ஏளனமாகவும் பேசும் கணவன்மார்கள் இன்றும் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் சாதிக்கப்போவது எதுவுமில்லை. நாளடைவில் மனைவியின் அன்பைதான் இழக்க நேரிடும். அவர் அன்பை இழப்பது மட்டுமல்ல, அவர் யாரை எல்லாம் புகழ்ந்து பேசுகிறாரோ அவர்களையும் தனது மனைவி எதிரியாக கருதுவார் என்பதை ஆண்கள் மறந்து விடக்கூடாது. அதனால் ஏளன பேச்சு குடும்பத்தை கூறுபோட்டுவிடும் என்பதை உணருங்கள்.

    மனைவியோடு பிரச்சினை என்று வந்துவிட்டால் அந்தப் பிரச்சினையை மட்டும் பேசி தீர்க்க வேண்டும். அதுதான் புத்திசாலி ஆண்களுக்கு அழகு. ஆனால் பெரும்பாலான ஆண்கள் பழைய சம்பவங்களை எல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு மனைவியை திருப்பி அடிப்பார்கள். அதுமட்டுமல்ல மனைவியின் அண்ணன், தம்பி, அம்மா, அப்பா, குடும்பம், பூர்வ ஜென்ம உறவுகளைக் கூட வம்பிற்கு இழுப்பார்கள். இப்படிப்பட்ட வம்பு மனிதர்களை பெண்கள் நம்பி வாழ்வதில்லை.

    பெண்களுக்கு வேகமாகவும், சரியாகவும் முடிவெடுக்க தெரியும். ஆனால் சில நேரங்களில் அவர்கள் முடிவெடுக்க தெரியாதவர்கள் போல் திணறுவார்கள். அதற்கு காரணம் சமூகம்தான். பெண்களுக்கு முடிவெடுக்கத் தெரியாது என்று காலங்காலமாக கூறிவந்ததால், அவர்கள் சில நேரங்களில் முடிவெடுக்கும்போது பதற்றம் அடைகிறார்கள். அப்படிப்பட்ட பெண்களிடம், ‘உன்னாலும் முடியும். தைரியமாக முடிவெடு’ என்று சொல்லும் கணவரை, மனைவிக்கு பிடிக்கும். ‘நான் சொல்வதை மட்டும் கேள். முடிவெடுக்கும் விஷயங்களில் எல்லாம் நீ தலையிடாதே!’ என்று சொல்லும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது.



    கொடுத்த வாக்குறுதியை மறக்கும் ஆண்கள் பெண்களின் அபிமானத்தை இழந்துவிடுவார்கள். வாக்குறுதி என்பது சமாதானம் செய்வதற்காக தரப்படுவதல்ல. காப்பாற்றப்பட வேண்டிய சத்தியம். பெரும்பாலான ஆண்கள் வாக்குறுதி கொடுத்துவிட்டு அதை மறந்து விடுகிறார்கள். சிலர், ‘அப்படி நான் எந்த வாக்குறுதியும் கொடுத்ததில்லை’ என்று மறுப்பார்கள். வாக்குறுதிகளை மறப்பவர்கள் மீதும், மறுப்பவர்கள் மீதும் பெண்கள் நம்பிக்கைவைக்கமாட்டார்கள்.

    மனைவிக்கு பாதுகாப்பு தருவதாக சொல்லிக்கொண்டு அளவுக்கு அதிகமாக அடக்கு முறையை கையாளும் கணவனை மனைவிக்குப் பிடிக்காது. பாதுகாப்பு நடவடிக்கை என்பது சுதந்திரத்தை பறிப்பதாக மாறிவிடக்கூடாது.

    வார விடுமுறை என்பது தனக்கு மட்டுமே சொந்தமானது என்று பல ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாளிலும் பெண்கள் வீட்டுவேலை செய்ய வேண்டும். தாங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று ஆண்கள் கருதுகிறார்கள். தொலைக்காட்சியில் விளையாட்டு பார்க்க வேண்டும் என்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். லேட்டாக எழுந்து சில சமயம் குளிப்பது கூட கிடையாது. படுக்கையிலேயே பெட்காபி, டிபன் எல்லாம் நடக்கும். இதெல்லாம் மனைவிக்கு பிடிக்காது. அதுபோல் வார விடுமுறை நாளில் காலையிலே எழுந்து குளித்து தயாராகி, மனைவியை அம்போ என்று விட்டுவிட்டு, நண்பர்களைத் தேடிப் போய்விடும் ஆண்களையும் அவர்களுக்கு பிடிக்காது.

    வீட்டில் எவ்வளவு இடமிருந்தாலும் ஈரமான டவலை வரவேற்பறையில் உள்ள சோபாவில் தான் சில ஆண்கள் போடுவார்கள். அதுபற்றி கேள்வி கேட்க முடியாது. கேட்டால், ‘நான் அவசரமாக வெளியே போகிறேன். நீ வீட்டில்தானே இருக்கிறாய். இதைகூட நீ செய்யக் கூடாதா?’ என்று எதிர்கேள்வி கேட்பார்கள். இப்படிப்பட்டவர்கள் மனைவியிடம் எரிச்சலையே சம்பாதிப்பார்கள்.

    இதையெல்லாம் விட பெரிய தொல்லை வீட்டிற்கு அடிக்கடி நண்பர்களை அழைத்து வருவது. அந்த நண்பர்கள் முன்னிலையில் மனைவியிடம் இதை செய் அதை செய் என்று உத்தரவும் போடுவார்கள். இப்படிப்பட்ட கணவர்களை மனைவிகள் சுமையாகத்தான் கருதுவார்கள் என்பதை தாமதமாகத்தான் ஆண்கள் புரிந்துகொள்கிறார்கள் என்பது கவனிக்கத் தகுந்த உண்மை. 
    இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெற்றோர் மீதான பாசம் என்பது தூரமாகி கொண்டிருக்கிறது. வயதான பெற்றோரை, பாரமாக கருதும் மனப்போக்கு ஏற்பட்டுள்ளது.
    சுவாசிப்பதை போல நேசிப்பதே நிஜமான அன்பு. இத்தகைய அன்புக்கு சொந்தக்காரர்களாக இருப்போர் நம் பெற்றோர். இவர்களை தெய்வங்களாக தொழுவோரும் உள்ளனர். அதேசமயத்தில், முதுமையை சுமையாக கருதி பெற்றோரை தூக்கி எறிவோரும் இருக்கிறார்கள்.

    பண்டைக்காலத்தில் முதியோரின் சொல் மந்திரமாக மதிக்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் எந்தவொரு முடிவையும் அவர்களே எடுத்தனர். அதன் விளைவு, சிறந்த பயனை தந்தது. ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறி விட்டது. முதியோரின் வார்த்தைகள் அலட்சியப்படுத்தப்படுவதோடு, தங்களது மகன், மகள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள் என அனைவராலும் அவர்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர்.

    கணவன், மனைவி, குழந்தைகள் என குறுகிய வட்டத்தில் வாழ்க்கை பயணம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அனுபவம் வாய்ந்த முதியோரின் அறிவுரை பேரன், பேத்திகளுக்கு கிடைப்பதில்லை. தாத்தா, பாட்டியின் அரவணைப்பு இல்லாததால், வளர்ந்து வாலிபர்கள் ஆனவுடன் கால்போன போக்கில் சென்று தங்களது வாழ்க்கை பயணத்தை வீணாக முடித்து கொள்கின்றனர். அன்பு இன்றி இதயம் இறுகி விடுகிறது.

    உலகில் உதித்த நாளில் இருந்து, நம்மை சீராட்டி பாராட்டி வளர்க்கும் பெற்றோரின் உழைப்பை அட்டைப்பூச்சியாய் உறிஞ்சு வளர்கிறார்கள். ஆனால் அவர்கள் தள்ளாடும் போது, தவிக்க விட்டு விடுகின்றனர்.



    பெற்றோரின் சொத்துக்கள், தங்களுக்கு தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடி எடுத்து கொள்கின்றனர். அதன்பிறகு தங்களது பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவோரும் உண்டு. வயதான காலத்தில் ஒவ்வொரு பெற்றோரும் தனது மகன் அல்லது மகள் அன்பாக, ஆறுதலாக ஒரு வார்த்தை பாசமாக பேச மாட்டார்களா? என்ற ஏக்கத்தில் இருப்பார்கள். ஆனால் அது கிடைக்காத பட்சத்தில், மனம் நொந்து வெந்து விடுகிறது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெற்றோர் மீதான பாசம் என்பது தூரமாகி கொண்டிருக்கிறது. வயதான பெற்றோரை, பாரமாக கருதும் மனப்போக்கு ஏற்பட்டுள்ளது.

    எத்தனையோ முதியோர்கள் சொத்துகளை எழுதி வாங்கி கொண்டு மகனும், மகளும் செய்த கொடுமைகளை மனதுக்குள்ளே பூட்டி வைத்து புழுங்கி கொண்டிருக்கின்றனர். ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல், பிறரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தனக்கு தராவிட்டாலும் பரவாயில்லை தனது மகனோ, மகளோ சந்தோஷமாக வாழட்டும் என்ற எண்ணத்தில் நடமாடும் பிணமாக வாழ்ந்து வருகிறார்கள்.

    இவர்களை போன்றோரை கணக்கெடுத்து, அவர்களின் நிலையை மாற்றுவது என்பது கடினம் தான். அதேநேரத்தில் சொத்துக்களை எழுதி வாங்கி கொண்டு சொந்தம் இல்லை என்று உதறி தள்ளும் கல்நெஞ்சம் படைத்த மகனுக்கும், மகளுக்கும் இதுபோன்ற சவுக்கடி கொடுப்பது அவசியம் தான். அன்பு, பாசம், நேசம் ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்க முடியாது. இது, மனநிலை சார்ந்த விஷம் ஆகும்.

    பெற்றோரின் முதுமை அவர்களின் மகன், மகள்களுக்கு சுமையாக தெரிகிறது. உண்மையாகவே அது சுமை அல்ல. அவர்களை சுமப்பது ஒரு சுகமான அனுபவமே. பல்வேறு பிரச்சினைகளுக்கு முதியோரால் முற்றுப்புள்ளி வைக்க முடியும். எனவே மனதை இளக வைத்து, அதில் முதுமையை மகுடம் சூட்ட வேண்டும். அப்போது தான் கண்ணன்-பூங்காவனம் போன்றோர் உருவாகாமல் தடுக்க முடியும்.

    -தாமிரன்
    பெண்கள் தங்கள் கணவனுக்காக செய்யும் ரொமாண்டிக் விஷயங்கள் தான், இல்லறத்தில் அதிகப்படியான காதலை உண்டாக்கும். உறவில் நெருக்கத்தை அதிகரிக்கவும் செய்யும்.
    நிஜத்தில் ஆண்களை விட பெண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள். ஆனால், இதை இதுவரை எந்த திரைப்படத்திலும் யாரும் பெரிதாக காண்பிப்பது இல்லை. ஆண்தான் மல்லிகைப்பூ, அல்வா வாங்கி செல்வார், ஆண்தான்

    திரைப்படத்திற்கு அழைத்து செல்வார். பெண்கள் சும்மாவே இருப்பார்கள். உண்மையில் பெண்கள் தங்கள் கணவனுக்காக செய்யும் ரொமாண்டிக் விஷயங்கள் தான், இல்லறத்தில் அதிகப்படியான காதலை உண்டாக்கும். உறவில் நெருக்கத்தை அதிகரிக்கவும் செய்யும்.

    திருமணத்திற்கு முன் அம்மா எண்ணெய் தேய்த்து குளிக்க வைப்பதில் அக்கறையும், பாசமும் இருக்கும். திருமணத்திற்கு பிறகு மனைவி குளிப்பாட்டி விடுவதில் எல்லாமும் இருக்கும். கணவன் – மனைவியின் இல்லற வாழ்க்கையில் மிக ரொமாண்டிக்கான விஷயம் என இதை எளிதாக குறிப்பிடலாம்.

     கணவன் ஆய்ந்து ஒய்ந்து வேலைகளை முடித்து வீடு திரும்பும் போது, அவனை கேட்காமலேயே அவனுக்கு பிடித்த உணவுகளை சமைத்து பரிமாறுவது அல்லது ஊட்டிவிடுவது.

    வீட்டு வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, ஏதேனும் நிகழ்வில் மற்றவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென கணவன் மீது கண்களை திருப்பி சிறு புன்னகையுடன் ஜாடை காண்பிப்பது.

    காலையில் கணவர் அலுவலகம் கிளம்பியதில் இருந்து மதியம் சாப்பிட்டாச்சா என்று கேட்பதில் தொடங்கி, மாலையில் வர தாமதம் ஆனால் எப்போது வீட்டிற்கு வருவீங்க என்று போனில் கேட்பது வரை எப்போது உங்களையே நினைத்து கொண்டிருக்றேன் என்பதை கணவருக்கு எளிய முறையில் ரொமாண்டிக்காக புரியவைக்க மனைவியால் மட்டுமே முடியும்.

    டென்சன், கோபம், கவலையில் இருக்கும் கணவரை தனது கண் அசைவின் மூலம் ரொமாண்டிக் மூடிற்கு கொண்டு செல்ல மனைவியால் மட்டுமே முடியும்.

    ஒரு சில விஷயங்கள், பொருட்கள் கணவனுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். அதை அவரே கூட மறந்திருப்பார். என்றோ கூறியதை நினைவில் வைத்து அதை தகுந்த தருணத்தில் வாங்கி வந்து பரிசளித்து கணவரை ஆச்சரியத்தில்  ஆழ்த்தினால்  அப்புறம் மனைவி சொல்லே மந்திரம் என மயங்கிக் கிடப்பார் கணவர்.

    பெண்கள் விரும்பும் நவீன பொருட்களில் சிலவற்றை நீங்களும் பரிசளிக்கலாம். அல்லது உங்கள் மனைவி, சகோதரிக்கு பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் அன்பளிப்பாக அனுப்பலாம்.
    பரிசளிப்பது என்பது மிகவும் சிறந்த கலை. பரிசளிப்பதன் மூலம் உங்களின் அன்பை வெளிப்படுத்த முடியும். எனவே நீங்கள் விரும்புவோருக்கு பரிசளியுங்கள், அவர்களின் நன்மதிப்பை பெறுங்கள். நவீன பெண்கள் விரும்பும் நவீன பொருட்களில் சிலவற்றை நீங்களும் பரிசளிக்கலாம். அல்லது உங்கள் மனைவி, சகோதரிக்கு பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் அன்பளிப்பாக அனுப்பலாம்.

    மொபைல் சார்ஜிங் பர்ஸ்

    இன்றைய நவ நாகரிக யுகத்தில் ஸ்மார்ட்போன் இல்லாத பெண்களே கிடையாது. ஸ்மார்ட்போன் மற்றும் அது சார்ந்த உதிரி பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், அதேசமயம் மற்றவர்களின் பார்வைக்கும் அழகான தோற்றம் தருவது மொபைல் சார்ஜிங் பர்ஸ். ஸ்மார்ட்போன், சார்ஜிங் கேபிள் உள்ளிட்டவற்றை அழகாக வைக்க, இந்த வகை பர்ஸ் உதவும்.

    சென்சார் கண்ணாடி

    பெண்கள் அதிக நேரம் செலவழிப்பது கண்ணாடி முன்புதான். தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அவர்கள் அதிக அக்கறை செலுத்துவர். நவீன காலத்தில் பழைய கால முகம் பார்க்கும் கண்ணாடியை விட சென்சார் என்ற உணர் கருவி கொண்ட கண்ணாடி மிகவும் ஏற்றது. இத்தகைய சென்சார் கண்ணாடி பெரும்பாலான இணையதளங்களிலும் கிடைக்கிறது.

    ஆல் இன் ஒன் ஹேர் ஸ்டைலர்

    சிகை அலங்காரத்துக்கு மிகவும் ஏற்றது ஹேர் டிரையர் உள்ளிட்ட நவீன சாதனங் களாகும். அனைத்து வகை யான கூந்தல் பராமரிப்புக்கும் ஏற்ற ஹேர் ஸ்டைலரை வாங்கி பரிசளியுங்கள். இதை விரும்பாத பெண்கள் மிக மிகக் குறைவு.

    இ-ரீடர்

    வழக்கமாக ஸ்மார்ட்போன்களில் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிப்பதை விட இ-ரீடர் எனப்படும் கிண்டில் போன்ற இ-புத்தகங்கள் மிகவும் சிறந்தது. இதுவும் பெண்களுக்கு பரிசளிக்க ஏற்றது. இதை எடுத்துச் செல்வதும் எளிது. விரும்பிய நேரத்தில் படிக்க உதவியாக இருக்கும்.

    ஸ்மார்ட் வாட்ச்

    நவீன பெண்களுக்கு நவீன கைக்கடிகாரம்தான் ஸ்மார்ட்வாட்ச். மிகவும் சிக்கலான, அதிக செயல்பாடுகளைக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்களை விட, பெண்களுக்கு உதவும் வகையில், எளிய செயல்பாடு மூலம் சிறப்பாக இயங்கும் ஸ்மார்ட் வாட்ச்களை வாங்கி பரிசளிக்கலாம். இதையும் பெண்கள் விரும்புவர்.

    பரு நீக்கி (பிம்பிள் ஸாப்பர்)

    இளம் பெண்களுக்கு மிகவும் உபயோகமானது. சருமத்தில் ஊடுருவி பரு உண்டாக்கும் பாக்டீரியாவை அழித்துவிடும். பருவினால் உண்டாகும் தழும்புகளை மறையச் செய்யும். பரிசளிக்கும் பெண்ணின் சருமத்துக்கேற்ற ஸாப்பரை வாங்க வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்.



    யுனிவர்சல் சார்ஜர்

    நவ-நாகரிக பெண்கள் மின்னணு சாதனங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு மிகவும் ஏற்றது. ஒரே சமயத்தில் பல மின்னணு சாதனங்களை சார்ஜ் ஏற்ற உதவும் வகையிலான யுனிவர்சல் சார்ஜரையும் பெண்களுக்கு பரிசாக அளிக்கலாம். வயர்லெஸ் சாதனமாக இருப்பின் இது மிகவும் சிறந்தது. இதில் மிகவும் சிறந்த பிராண்டுள்ள, விரைவாக சார்ஜ் ஏறக்கூடியதை வாங்கி பரிசளிக்கலாம்.

    இயர் பட்

    காதில் தோடு அணிகிறார்களோ இல்லையே, இந்தக் கால நவ-நாகரிக பெண்கள் இயர்போன் அணிவதை பார்க்கலாம். இதனால் மிகவும் நவீனமாக, காதை உறுத்தாத, இனிய இசையை வழங்கக் கூடிய வெளிப்புற இசையை துண்டித்து, ஸ்மார்ட்போனிலிருந்து வரும் விரும்பிய இசையைக் கேட்க உதவும் இயர்போனை நீங்கள் பரிசளிக்கலாம்.

    மேக் அப் பிரஷ்

    பெரும்பாலும் விசேஷங்கள், வெளியூருக்கு பயணம் மேற்கொள்வோருக்கு மிகவும் உபயோகமானது. இத்தகைய பிரஷ்கள் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன. இதில் பேட்டரியில் இயங்கும் பிரஷ், நேரத்தை மிச்சப்படுத்தும். இத்தகயை பிரஷ்கள் அனைத்து ஆன்லைன் இணையதளங்களிலும் கிடைக்கிறது.

    இன்ஸ்டன்ட் கேமரா

    எவ்வளவுதான் ஸ்மார்ட்போன் வந்தாலும். புகைப்படங்களை பார்க்கும் சந்தோஷமே தனி. புகைப்படம் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை கிடையாது.அந்த வகையில் உடனடியாக பிரிண்ட் போட்டுத் தரும் கேமராவும் பரிசளிக்க சிறந்த பொருள்தான்.

    கண் மசாஜர்

    பெண்கள் தங்கள் கண்களை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவர். இத்தகையோருக்கு மிகவும் ஏற்றது கண் மசாஜர். கண்ணில் ரத்த ஓட்டம் அதிகரிக்கச் செய்யும் இந்த மசாஜரை சிறிது நேரம் அணிந்தால் கண் புதுப் பொலிவுடன் தோற்றமளிக்கும். இதை அணிவதன் மூலம் தலைவலி போன்ற பிரச்சினையையும் தவிர்க்க முடியும். இது மன இறுக்கத்தையும் போக்க வல்லது. இதையும் பரிசளிக்கலாம்.

    பாதுகாப்பு கருவி


    பெண்கள் அழகை மேம்படுத்த மட்டுமின்றி அவர்களை பாதுகாக்க உதவும் கருவிகளுள் இதுவும் ஒன்று. தனியாக இருக்கும் சந்தர்ப்பங்கள், வெளியிடங்களுக்கு சென்று திரும்புகையில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடியது. இதில் உள்ள பாதுகாப்பு பொத்தானை அழுத்தினால் அது உடனடியாக செய்தியை பாதுகாவலருக்கு அனுப்பும். பெண்களை பாதுகாக்க நினைப்பவர்கள் அவசியம் வாங்கி பரிசளிக்க வேண்டிய சாதனங்களுள் மிகவும் முக்கியமானது இது.

    பெண்களுக்கு அழகு சேர்க்கும் சாதனங்களுடன் அவர்களை பாதுகாக்கும் கருவிகளும் வந்துள்ளன. அவற்றையும் வாங்கி அளிப்பது நீங்கள் அவர்கள் மீது வைத்துள்ள அக்கறையை வெளிப்படுத்த உதவும்.
    ×