search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105618"

    குடும்ப ரீதியாக அவ்வப்போது ஏற்படக்கூடிய எதிர்பாராத செலவுகளுக்கு மத்தியில் வீட்டு கடன் மாதாந்திர தவணையை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி நிதி ஆலோசகர்கள் தரும் குறிப்புகளை இங்கே கவனிக்கலாம்.
    சொந்த வீடு என்ற கனவை நிஜமாக்க உதவும் வீட்டு கடனுக்கான மாதாந்திர தவணையை ஒவ்வொரு மாதமும் கட்டி முடிக்கும்போது ஏற்படும் நிம்மதியை நடுத்தர வருமானம் கொண்ட மக்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். குடும்ப ரீதியாக அவ்வப்போது ஏற்படக்கூடிய எதிர்பாராத செலவுகளுக்கு மத்தியில் வீட்டு கடன் மாதாந்திர தவணையை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி நிதி ஆலோசகர்கள் தரும் குறிப்புகளை இங்கே கவனிக்கலாம்.

    தவணைக்கான கால அவகாசம்


    வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் வீட்டு கடன் பெறும் சமயங்களில் அதற்கான மாதாந்திர தவணையை, வருட வருமானத்தை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்க வேண்டும். கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் நீண்டதாக தேர்ந்தெடுத்தால், கட்ட வேண்டிய மாத தவணை குறைவாக இருக்கும்.

    அதனால், மாத செலவுகளில் பட்ஜெட் பெரிதாக பாதிக்காது. அதே சமயம் எதிர்காலத்தில் கிடைக்கலாம் என்று எதிர்நோக்கும் வருமான உயர்வை கணக்கில் கொண்டு அதிக இ.எம்.ஐ கட்ட இயலும் என்ற நிலையில் தவணை காலத்தை குறைத்து நிர்ணயம் செய்தால், வட்டிக்கான தொகை கணிசமாக குறையும் என்பது கவனிக்கத்தக்கது.

    தவறாத மாதாந்திர தவணை

    கடனுக்கான மாத தவணைகளை இடையிடையே கட்டாமல் தவற விடும் காரணத்தால் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர் மீது கொண்ட நம்பகத்தன்மை பாதிக்கப்படுகிறது. அது கிரெடிட் புள்ளிகளை பாதிப்பதால் எதிர்காலத்தில் மற்ற வகை கடன்களை பெற முயற்சிக்கும்போது தடைதாமதங்கள் ஏற்படலாம். அதனால், கடன் தவணைகள் சரியாக திரும்ப செலுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.

    ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’

    மாத தவணைகளை முறையாக செலுத்துவதில் சிக்கல்கள் இருக்கும் நிலையில் மொத்த வீட்டு கடன் தொகையை, குறைவான வட்டி விகிதம் கொண்ட மற்றொரு வங்கி அல்லது கடன் வழங்கும் நிதி நிறுவனத்துக்கு ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’ என்ற முறையில் மாற்றம் செய்து கொள்ளலாம். வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் பல்வேறு கால இடைவெளிகளில் வட்டி விகிதத்தை மாற்றலாம் என்பதால், வாடிக்கையாளர்கள் வட்டி விகிதம் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இன்னொரு வங்கி அல்லது நிறுவனத்துக்கு கடனை மாற்றுவது கூடுதல் செலவு மற்றும் நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால் தற்போதைய வங்கியிலேயே வட்டி விகிதத்தை குறைக்கும்படி கோரிக்கை அளிப்பதும் நல்ல அணுகுமுறை.

    முன்கூட்டியே செலுத்தும் முறை

    பல்வேறு சமயங்களில் கைகளில் கூடுதலான பணம் இருக்கும்போது, கடன் தொகையில் குறிப்பிட்ட அளவை முன்கூட்டியே செலுத்தி விட்டால், வீட்டு கடன் மாதாந்திர தவணை குறைவதுடன், நிதிச்சுமையின் அளவும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

    ‘பிரி பேமெண்ட்’ முறை

    கடனுக்கான வட்டி தொகை மற்றும் மாத தவணையின் கால அவகாசத்தை குறைக்கும் விதமாக, குறிப்பிட்ட அளவு தொகையை மொத்தமாக ‘பிரி பேமென்ட்’ என்ற முறையில் திருப்பி செலுத்தலாம். பொதுவாக, மாறுபடும் வட்டி முறையில் பெற்ற கடன்களுக்கு பகுதி கடனை முன்கூட்டியே திரும்ப செலுத்த, வங்கிகள் உள்ளிட்ட வீட்டு வசதி கடன் நிறுவனங்கள் எந்தவித கட்டணத்தையும் விதிப்பதில்லை. ‘பிரி பேமென்ட்’ தொகை சில ஆயிரங்களில் கூட இருக்கலாம்.

    மேலும், முதலீடு செய்துள்ள பங்குகள் மற்றும் பண்டுகள், பத்திரங்கள், சொத்து விற்பனை, போனஸ், வைப்பு நிதி திட்டம், வரி சேமிப்பு முதலீடுகள் முதிர்வு ஆகியவற்றில் கிடைக்கும் தொகை மூலம் வீட்டு கடனை முழுமையாக அல்லது பகுதியாக செலுத்துவதும் பாதுகாப்பானது.

    நிதி மேலாண்மை

    வடிக்கையாளரின் பி.எப், பி.பி.எப், தபால் நிலைய வைப்பு நிதி போன்ற சேமிப்புகள் உள்ளிட்ட முதலீடு ஆகியவற்றை பட்டியலிட்டு அவற்றில் குறைவான வருமானம் கொண்டவற்றை நீக்குவதன் மூலம் நிதி நிலையை மேம்படுத்தலாம். அதன் மூலம் கிடைத்த முதலீடு அல்லது சேமிப்புகளின் மூலம் வீட்டு கடனுக்கான மாதாந்திர தவணையை செலுத்துவதும் சிறப்பான நிதி நடவடிக்கையாக அமையும்.

    தற்போது உரையாடுவதற்கும் உறவுகளை வலுப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. தங்கள் மனம்விட்டு உரையாடாத காரணத்தால்தான் மனஅழுத்தம் ஏற்படுவதாகக் சுட்டிக்காட்டுகின்றனர்.
    `உரையாடல்தான் உறவுகளை வலுப்படுத்தும்' என்கின்றனர் உலகளாவிய மனநல மருத்துவர்கள். பலருக்கும் தங்கள் மனம்விட்டு உரையாடாத காரணத்தால்தான் மனஅழுத்தம் ஏற்படுவதாகக் சுட்டிக்காட்டுகின்றனர்.

    கடிதம் மட்டுமே உரையாடுவதற்கான கருவியாக முன்னர் இருந்தது. அதன் பிறகு தொலைபேசியின் வருகை ப்ரியமானவர்களின் குரலை எவ்வளவு தொலைவில் இருந்தாலும் கேட்டு ஆசுவாசம் கொள்ளச்செய்தது. ஆனால், தற்போது உரையாடுவதற்கும் உறவுகளை வலுப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இருந்தும் உறவுகளின் ஆயுள்காலம் குறுகியகால அளவிலேயே முடிவடைகிறது. முன்பைவிட ஆண்-பெண் நட்பு குறித்த புரிதல்கள் அதிகரித்திருந்தும் இந்தச் சிக்கல் உலவுகிறது.  

    வேலைபார்க்கும் இடங்களில், பேருந்துகளில், ரயில்களில் என எல்லா இடங்களிலும் இணையம் நம்முடனேயே பயணிக்கிறது. சக மனிதர்களுடன் பேசுவதைத் தவிர்த்து இணையத்திலேயே மூழ்கிக்கிடக்கிறோம் என்பதே இந்தத் தலைமுறை மீதான குற்றச்சாட்டு. உண்மையில் இணையமும் அலைபேசியும் மனிதர்களை இணைப்பதைத்தான் முழுநேரப் பணியாகச் செய்துகொண்டிருக்கின்றன. தினம் தினம் புதுப்புது அப்ளிகேஷன்களை ஆண்ட்ராய்டு நமக்குத் தருவித்துக்கொண்டே இருக்கிறது. அவற்றில் பல ஆப்-கள் புதிய மனிதர்களைத் தேடிக் கண்டடைவதற்கும் உரையாடுவதற்கும் பயன்படுகின்றன. இருப்பினும் நம் உறவுநிலைகளில் விரிசல் ஏற்படுவதும், அதைச் சரிசெய்ய இயலாமல் தவிப்பதும் தொடர்கின்றன.

    பெரும்பாலும் இன்றைய தலைமுறையினர் இந்த உறவுச்சிக்கல்களை இரண்டுவிதமாகக் கையாள்கிறார்கள்.



    1) முரண்பாடான கருத்துகள் ஏற்படும்போதும் சுமுகமாகப் பேசிப் பிரிவது.

    2) பேசினால் சச்சரவு அதிகமாகும் என எண்ணி, பேசாமலேயே கடந்து போதல்.

    முதல் பாயின்ட்டில் உரையாடல் ஏற்படுவதால், அதில் சிக்கல் தீர வாய்ப்புள்ளது. உதாரணமாக, சின்ன விஷயத்துக்காக ஏற்படும் சண்டை, உடனே பேசித் தீர்த்துக்கொள்ளப்படும். அந்த உரையாடல் உடனே நிகழ்வதன் மூலம் உறவின் ஆழம் இருதரப்பினருக்கும் உணர வாய்ப்பு ஏற்படும். இதன்மூலம் இயல்பாகவே உறவுகளில் ஏற்படும் வெற்றிடத்தைத் தவிர்க்க இயலும். மேலும், ஒருவருக்கு மட்டும் அந்த உறவில் மனக்கசப்பும், மற்றவருக்கு உறவைத் தொடர வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும்பட்சத்தில் சரியான புரிதலைக் கொடுக்கும்.

    இரண்டாவதாக, பேசாமலேயே கடந்து போவதில் ஏற்படும் சிக்கல் மோசமானது. `இனிமேல் பேசி என்ன இருக்கு!' என நினைத்துப் பேசாமலேயே உறவைத் துண்டித்தல். இது மனதில் நாம் அறியாமலேயே ஒருவித வெறுமையை மெள்ள ஏற்படுத்தும். அந்த வெறுமையைப் போக்குவதற்காகவே புதிய செயல்களில் ஈடுபடத் தொடங்குவோம்.

    புதிதாக வேறு ஏதாவது ஒரு நபருடன் பேசத் தொடங்குவோம். அதன் பிறகான எல்லா உறவுகளிலும் நாம் பேசாமல் போனவர்களின் சாயலை நாம் அறியாமலேயே தேட ஆரம்பிப்போம். தங்கள் நண்பர்களுடன் சண்டைபோட்டுவிட்டு `ஒரு வருஷமா பேசலை' எனச் சொல்லிக்கொள்ளும் நிறையபேரைச் சந்தித்திருப்போம். அவர்கள் உண்மையில் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது ஒரு வருடமாகப் பேசாத அந்த உறவை நினைத்தபடியே இருப்பர்.

    எல்லா உறவுகளுக்கும் தினசரி உரையாடல் அவசியம். அன்றைய பொழுதின் அத்தனை சுக, துக்கங்களையும் பகிர்ந்துகொள்ள இந்த உரையாடல் இன்றியமையாத ஒன்று. மழைநாளின் தேநீரைப்போல பிடித்தமானவர்களின் உரையாடலும் ஏகாந்தமானது.

    நிலையான, உத்தரவாத லாபம், அரசாங்கப் பாதுகாப்பு மற்றும் தொந்தரவு இல்லாதது போன்றவற்றால், ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது பி.பி.எப்.
    பி.பி.எப். எனப்படும் பொது வருங்கால வைப்புநிதி குறித்த விவரங்களை பலர் அறிந்திருப்பதில்லை. எல்லோருக்கும் ஏற்ற திட்டம் இந்த பி.பி.எப். பணத்தைச் சேமிக்க விரும்பும் நடுத்தர மக்களுக்கு ஏற்றது இது.

    நிலையான, உத்தரவாத லாபம், அரசாங்கப் பாதுகாப்பு மற்றும் தொந்தரவு இல்லாதது போன்றவற்றால், ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது பி.பி.எப்.

    இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகளை இங்கே காணலாம்...

    * பொது வருங்கால வைப்புநிதிக் கணக்குகளைக் கூட்டாக இருவர் பெயரில் துவங்க முடியாது என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் பெற்றோர் தங்களின் மைனர் குழந்தையின் பெயரில் கணக்கு துவங்க முடியும். பெற்றோர் இருவரும் உயிரோடு இல்லாமல் இருந்தாலோ அல்லது செயல்படமுடியாமல் இருந்தாலோ, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பாதுகாவலர், மைனர் குழந்தையின் சார்பாகக் கணக்கு துவங்க முடியும். ஆனால் மைனர் குழந்தையின் சார்பாகப் பெற்றோர் பி.பி.எப். கணக்கு துவங்கும்போது, ஒரே குழந்தைக்குப் பெற்றோர் இருவரும் தனித்தனி கணக்குத் துவக்க இயலாது. மைனர் குழந்தை மேஜராகும்போது, அவரே பி.பி.எப். கணக்குதாரராகக் கருதப்படுவார். சட்டப்பூர்வ பாதுகாவலர் பி.பி.எப். கணக்கை கையாள முடியாது.

    * நம்முடைய பொது வருங்கால வைப்புநிதி கணக்கில் உள்ள பணம் நம்முடையது. நம்மைத் தவிர்த்து வேறு யாரும் அதை எடுக்க முடியாது. கடன் அல்லது ஏதேனும் சொத்துக்குப் பணம் செலுத்தும்போது வேறு தனிநபர் அல்லது நிறுவனத்தால் பி.பி.எப். கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாது. இது உங்கள் சேமிப்புக்கு வழங்கப்படும் தரமான பாதுகாப்பு. வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தால், தவணைத் தொகையைச் செலுத்தவில்லை எனில் வீடு ஜப்தி செய்யப்படும் அபாயம் உள்ளது. அதுவே பி.பி.எப். பணம் என்றால், பி.பி.எப். கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கடனை அடைக்கும்படி சட்டப்படி உத்தரவிட முடியாது. இது ஒரு முக்கியமான பாதுகாப்பு. அதேநேரம், வருமானவரி பாக்கியை பி.பி.எப். கணக்கிலிருந்து எடுக்க வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது.

    * உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுதாரர்களை நியமிக்க பி.பி.எப். கணக்கில் அனுமதிக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுதாரர்களை நியமித்தால் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதவீத பங்கு என பி.பி.எப். கணக்குதாரர் குறிப்பிடவேண்டும். ஆனால் மைனர்களின் சார்பாகத் திறக்கப்படும் கணக்குகளுக்கு வாரிசு தாரர் நியமிக்கமுடியாது. பி.பி.எப். கணக்கு காலத்தில் உங்களால் எத்தனை முறை வேண்டுமானாலும் வாரிசுதாரரை மாற்ற முடியும். ஆனால் ஓர் அறக்கட் டளையை வாரிசுதாரராக நியமிக்க முடியாது. வாரிசுதாரர்களால் பி.பி.எப். கணக்கை தொடர்ந்து பராமரிக்க முடியாது. பி.பி.எப். கணக்குதாரரின் இறப்பின்போது கணக்கில் உள்ள பணத்தைப் பெற அனைத்து உரிமையும் பெற வாரிசுதாரர் தகுதியுடையவர் ஆவார். அப்பணத்தை அறங்காவலராக இருந்து சட்டத்துக்கு உட்பட்டுப் பெறமுடியும்.

    * பி.பி.எப். கணக்கு துவங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் பண முடக்கக் காலம் என்று பலர் தவறாகக் கருதுகிறார்கள். பி.பி.எப். விதிகளின் படி, வைப்புநிதி செய்யப்பட்ட நிதியாண்டின் கடைசி நாளிலிருந்து முதிர்ச்சியடையும் தேதி கணக்கிடப்படும். எனவே எந்த மாதம், எந்தத் தேதி கணக்குத் துவங்கப்பட்டது என்பது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் பி.பி.எப். கணக்குக்கு முதல் முறை ஜூன் 1, 2018 அன்று பணம் செலுத்தினால், 15 ஆண்டுப் பணமுடக்கக் காலம் மார்ச் 31, 2019-ல் இருந்து கணக்கிடப்படும், முதிர்ச்சியடையும் தேதி ஏப்ரல் 1, 2034 ஆக இருக்கும். பணி ஓய்வு, வீடு வாங்குதல் அல்லது முக்கியக் கடனை திரும்பச் செலுத்துதல் போன்ற பொருளாதாரத் திட்டங்களை வகுக்கும் போது, பி.பி.எப். கணக்கின் முதிர்ச்சி காலத்தைக் கணக்கிடுகையில் இந்த வழிமுறையை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    * சில முதலீட்டாளர்கள் தங்களின் பொது வருங்கால வைப்புநிதி கணக்கை மறந்துவிடுவார்கள். குறைந்தபட்ச வைப்புநிதி இல்லையென்றால், பி.பி.எப். கணக்கு கைவிடப்படும் நிலை ஏற்படும். பி.பி.எப். கணக்கு கைவிடப்பட்டால், அதிலுள்ள பணத்துக்கான வட்டி, முதிர்ச்சியின்போது மட்டுமே கிடைக்கும். இதுபோன்ற கைவிடப்பட்ட கணக்குகளில், முதிர்ச்சி அடையும் வரை ஒவ்வோர் ஆண்டின் இறுதியில் இருக்கும் பணத்துக்கு வட்டி கணக்கிடப்படும். பணம் எடுத்தல் மற்றும் கடன் பெறும் வசதியும் கைவிடப்பட்ட கணக்குகளுக்குக் கிடையாது. இந்த இரு வசதியும் பெற வேண்டும் என்றால், கைவிடப்பட்ட காலத்துக்கு உண்டான குறைந்தபட்ச சந்தாவையும், குறிப்பிட்ட அளவு அபராதத்தையும் கட்ட வேண்டும். நாம் எப்போதும், எந்நிலை யிலும் பொது வருங்கால வைப்புநிதி கணக்கை கைவிடக்கூடாது என்பதை இந்த விதிகள் உணர்த்துகின்றன. எனவே, பி.பி.எப். கணக்கின் மீது உரிய கவனம் செலுத்தி, ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்ச பணத்தையாவது முதலீடு செய்துவரவேண்டும். 
    பெண்களே உங்கள் கனவுகளோடு சினிமாக்களை சம்பந்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். யதார்த்தம் என்பது சினிமாக்களில் வருவதைக் காட்டிலும் நிறைய மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
    பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணத்தில் பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் எதிர்பார்ப்புகளும், கனவுகளும்தான். நான் டாக்டருக்கு படித்தவன். எனக்கு பத்தாவது வரை படித்த பெண்ணை திருமணம் செய்துவிட்டார்கள் என்பார்கள் சிலர்.

    ‘எனக்கு கணவராக வருபவர் நன்றாக ஆங்கிலம் பேசுவார், நன்றாக கார், பைக் ஓட்டுவார், பெண்களிடம் அதிகம் பேச மாட்டார் என்று நினைத்திருந்தேன்’ என்பார்கள் சிலர். ‘குண்டாக இருக்கிறார், பல்லு எடுப்பாக இருக்கிறது, கருப்பாக இருக்கிறார் இவரோடு வெளியில் செல்லவே அசிங்கமாக இருக்கிறது’ என்பார்கள் சிலர். இவை, சமூகம் நம்மைப் பார்த்து என்ன சொல்லும் என்பதை மனதில் கொள்வதால் ஏற்படும் பிரச்சனை.

    நாம் நமக்காக வாழ்கிறோம். சமூகம் என்ன நினைக்கும் என்பதை கவனத்தில் கொள்வதற்கு முன் உங்களை கல்யாணம் செய்து கொண்டவரின் மனநிலை பற்றி யோசியுங்கள். நாம் அழகாக இருக்கிறோம், நம்மிடம் இவ்வளவு திறமையிருக்கிறது என்பது நினைவில் இருப்பது போல் நாம் பட்ட அவமானங்களையும் நினைவில் கொள்வது நல்லது.

    அது, நம் கால்களை எப்போதும் தரையில் வைத்துகொள்ள உதவும். எவ்வளவு பெரிய சண்டையானலும் சரி அதை தீர்த்து வைக்க, மூன்றாம் நபரின் துணையை நாடாதீர்கள். அது பெற்றோராக இருந்தாலும் சரி. உங்களைப் பற்றிய ரகசியங்கள் உங்களிடம் மட்டுமே இருக்க வேண்டும்.

    மீறி வெளியில் தெரிந்தால் அது உங்கள் மீதான நம்பிக்கையை குறைத்துவிடும். மகிழ்ச்சி, கோபம் இவையெல்லாம் மற்றவர்களால் நமக்கு கிடைத்துவிடும். ஆனால் திருப்தி நம் மனதில் இருந்து வந்தால்தான் உண்டு.

    உங்கள் வாழ்க்கையில் நீங்கள்தான் ராஜா, ராணி. சினிமாவில் நடப்பதெல்லாம் யதார்த்த வாழ்க்கையிலும் நடக்கும் என்று எண்ணுவது தவறு. உங்கள் கனவுகளோடு சினிமாக்களை சம்பந்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். யதார்த்தம் என்பது சினிமாக்களில் வருவதைக் காட்டிலும் நிறைய மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். 
    தற்போது கிரெடிட், டெபிட் கார்டுகளில் மோசடிக்காரர்கள் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தற்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், அவர்கள் அதைப் பயன்படுத்தும் அளவும் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ப, கிரெடிட், டெபிட் கார்டுகளில் மோசடிக்காரர்கள் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அவை குறித்த செய்திகளையும் நம்மால் அடிக்கடி அறிய முடிகிறது. சரி, நாங்கள் எப்படி இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது என்று கேட்கிறீர்களா?

    அதற்கான ஆலோசனைகள் இதோ...

    சுய வரையறையை நிர்ணயித்துக் கொள்வது

    ஒவ்வொரு கிரெடிட் கார்டிலும் எவ்வளவு செலவழிக்கலாம் என்று ஒரு வரையறை (கிரெடிட் லிமிட்) இருக்கும். அது தவிர, நாமாக ஒரு வரையறையை நிர்ணயித்துக் கொள்ளலாம். இவ்வாறு நிர்ணயித்துக்கொள்வதால் இரு நன்மைகள்.

    முதலாவதாக, அதிகம் செலவு செய்யும் எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவதாக, கிரெடிட் கார்டு மோசடிகளின்போது நீங்கள் ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம்.

    நீங்கள் சொந்தமாக ஒரு கிரெடிட் லிமிட்டை நிர்ணயித்து, அது குறித்து கார்டு நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டால், கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் செலவுகள் குறிப்பிட்ட வரையறையை நெருங்கும்போது அல்லது தாண்டும்போது கார்டு நிறுவனம் உங்களை எச்சரிக்கும்.

    உங்கள் கார்டு திருடப்பட்டு பயன் படுத்தப்பட்டாலும், அந்த வரையறையைத் தாண்டி செலவு செய்ய முடியாது.

    உங்களின் தனிப்பட்ட கிரெடிட் லிமிட்டை பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப வெவ்வேறு விதமாக அமைத்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, வெளிநாட்டில் பயன்படுத்துவது, ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய பயன்படுத்துவது, உணவகங்களில் உணவு உண்ண உபயோகிப்பது இப்படி. ‘ஆட்-ஆன்’ கார்டுகள் எனப்படும் கூடுதல் கார்டுகளிலும் இதுபோல ‘சப் லிமிட்’டை பிரதான கார்டுதாரர் ஏற்படுத்திக்கொள்ளலாம்.



    வலுவான ‘பாஸ்வேர்டு’

    புதிய ‘டிஜிட்டல் இந்தியா’ உந்துதலால், தற்போது ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை எகிறியிருக்கிறது. ரிசர்வ் வங்கி தெரிவிக்கும் ஒரு புள்ளிவிவரத்தின்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் நம் நாட்டில் நூறு கோடிக்கும் மேற்பட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தக் கணக்கில், நாம் செய்திருக்கும் பரிவர்த்தனைகளும் அடங்கும் என்பதால், நாம் எப்போதும் வலுவான பாஸ்வேர்டை பயன்படுத்துவது நல்லது. நமது பாஸ்வேர்டு, எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்புக் குறியீடுகள் கொண்டதாய், எளிதில் ஊகிக்க முடியாததாய் இருக்க வேண்டும்.

    வெவ்வேறு கணக்குகளுக்கு வெவ்வேறு பாஸ்வேர்டுகளை உபயோகிப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றுவதும் அவசியம். ஆன்லைன் என்றாலும், ஆப்லைன் என்றாலும், பரிவர்த்தனையின்போது நாம் பாதுகாப்பான சூழலில் இருக்கிறோமா என உறுதி செய்துகொள்ள வேண்டும். எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், பிறரிடம் நமது பாஸ்வேர்டை பகிர்ந்துகொள்ளக் கூடாது.

    பொது இடங்களில்...

    பொது இடங்களில் கிரெடிட், டெபிட் கார்டை பயன்படுத்தும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். நமது கார்டு எண், ஏமாற்றுப் பேர்வழிகளால் திருடப்படவோ, படம் எடுக்கப்படவோ வாய்ப்பு அதிகம்.

    உங்களின் கிரெடிட் கார்டு குறித்த எந்தத் தகவலையும் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது. காரணம், இணைய வழியிலான தகவல் திருட்டு இன்று மிக அதிகம்.

    ‘வருமுன் காக்க வேண்டும்’ என்பது பழமொழி. மோசடிக்கு உள்ளானபின் வருந்துவதை விட, அது நடக்காமல் தற்காத்துக்கொள்வதே சிறப்பு.

    பணம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டு வசதியான வழியாக இருக்கலாம், நாம் கார்டை பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப ஊக்கப்பரிசுகளும் தள்ளுபடிகளும் கிடைக்கலாம். அதேநேரம், கிரெடிட் கார்டில் மோசடிக்கான வாய்ப்புகளும் அதிகம்.

    எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள், எப்போதும்போல் வசதியாக கார்டுகளை பயன்படுத்துங்கள். 
    திருமண வாழ்வில் அதிக பிரச்சனைகளையும் அந்த பிரச்சனைகளை எந்த முறையில் தீர்வு கண்டு குடும்பத்தில் சந்தோஷத்தை கொண்டு வரலாம் என்றும் பார்க்கலாம்.
    உங்களின் பார்ட்னர் உங்களிடம் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபித்துக்கொள்கிறார் என்றால், அது உங்கள்மீதான கோபமல்ல. நிதானமாக இருந்து அந்தச் சூழ்நிலையை சகஜநிலைக்கு மாற்றுங்கள். என்ன செய்தால் உங்களின் பார்ட்னர் சகஜமாக மாறுவார் என்பதைத் தெரிந்துகொள்ள, கொஞ்சம் `ஹோம் வொர்க்' செய்யவேண்டியிருக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஹோம் வொர்க் செய்யலாமே!

    தற்போது பெண்களும் அலுவலகம் செல்கின்றனர். எனவே, வீட்டுவேலைகளை சமமாகப் பிரித்து செய்வது அவசியம். பொதுவாக ஆண்கள், வீட்டுவேலைகள் செய்யத் தெரியாமலோ அல்லது செய்யப் பிடிக்காமலோ இல்லை. வீட்டுவேலைகள் செய்வதிலிருக்கும் கடுமையைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் மிக முக்கியமான காரணம். ஒருமுறை தன் மனைவியோடு நின்று அனைத்து வேலைகளையும் சமமாகப் பங்கிட்டு செய்தால் மட்டுமே, இந்தப் பிரச்னை தீரும். அன்பை அளவில்லாமல் பரிமாறிக்கொள்வதுபோல், வீட்டுச்சுமையையும் சமமாகப் பகிர்ந்துகொள்ளுங்கள்!



    உங்கள் பார்ட்னரின் சிரிப்பு, அழுகை, கோபம் போன்ற `ரியல் நோட்டிஃபிகேஷனை'விட, உங்கள் போனில் வரும் `ரீல் நோட்டிஃபிகேஷனை' சரிபார்க்கத்தான் நேரம் சரியாக இருக்கிறது. குறைந்தபட்சம், வார இறுதிநாளில் தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்களுக்கு விடுதலை கொடுத்து, உங்கள் பார்ட்னரோடு நேரத்தை முழுமையாகச் செலவிடுங்கள். மனம்விட்டு பேசும்போது எந்தக் கவனச்சிதறலும் இல்லாமல் இருப்பது சிறந்தது.

    வங்கிக்கணக்கில் பணம் இருந்தாலும் சரி... இல்லைன்னாலும் சரி, பண விஷயத்தில் கணவன் - மனைவிக்கிடையே சண்டைவருவது இயல்பு. கணவன்-மனைவியாய் இருந்தாலும், ஒவ்வொருவருடைய தேவை என்பது வேறு. எண்கள் நிறைந்த தாள் என்பதையும் தாண்டி அது உணர்வுகளின் வெளிப்பாடு. `ஆசை' இருக்கும் வரையில் `காசு' வாழும். எது அத்தியாவசியம், எது வீண் செலவு என்பதை கணவன் - மனைவி இருவரும் ஆலோசித்து முடிவெடுப்பது அவசியம். தேவைக்கு மீறி செலவு செய்வதில் இருக்கும் பிரச்னைகளை நன்கு ஆராய்ந்து, பிறகு அடி எடுத்து வைப்பது நல்லது. உங்கள் அன்பை முறிக்கும் எந்த விஷயத்தையும் இருவருக்குமிடையில் அனுமதிக்காதீர்கள்.

    சந்தோஷமான வாழ்க்கைக்காக சிறிது நேரம் உங்கள் பார்ட்னருக்குச் செலவிடுங்கள். அன்பைவிட வேறென்ன பெரிதாக இருக்கப்போகிறது.
    வீட்டுக்கடன் பெறுவதற்கு எளிதான சூழல் அமைந்துள்ள இன்றைய நிலையில் வங்கிகள் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பல்வேறு எளிமையான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றன.
    வீட்டுக்கடன் பெறுவதற்கு எளிதான சூழல் அமைந்துள்ள இன்றைய நிலையில் வங்கிகள் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பல்வேறு எளிமையான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றன. வங்கி நடவடிக்கைகளில் வாடிக்கையாளரது நன்னடத்தைகளுக்கு வெகுமதி அளிக்க இருப்பதாக பல வங்கிகள் அறிவித்துள்ளன. அதாவது, வாடிக்கையாளரின் ‘கிரெடிட் ஸ்கோர்’ (Credit Score Report) நிலவரத்தை பொறுத்து வீட்டு கடன் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நான்கு அமைப்புகள்

    மத்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் அடிப்படையில் நான்கு விதமான வங்கி கடன் தகவல் அமைப்புகள் (Credit Rating Bureaus) செயல்பட்டு வருகின்றன. அவை, சிபில், ஈக்விபேக்ஸ், ஹை-மார்க் மற்றும் எக்ஸ்பீரியன் ஆகியவை ஆகும். இந்த அமைப்புகள் வாடிக்கையாளரது வங்கி கணக்குகளை அனைத்து அடிப்படையிலும் ஆராய்ந்து, சரியான நேரத்தில் தவணைகள் செலுத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு என்ற விபரங்களை கவனித்து அதற்கேற்ப ‘கிரெடிட் ஸ்கோர்’ மதிப்பீட்டை அளிக்கின்றன.

    கடன் பெற்றவர் பற்றி தகவல்

    கடந்த வருடங்களில் தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறு நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் பெற்றவர்களது தகவல்களை மேற்கண்ட வங்கி கடன் தகவல் அமைப்புகளுக்கு அனுப்பியுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.



    ‘ஸ்கோர்’ மதிப்பிடும் விதம்

    பெற்ற கடனை திருப்பி செலுத்தும் முறையை பொறுத்து ‘கிரெடிட் ஸ்கோர்’ குறைந்தபட்சம் 300 என்ற அளவாகவும், அதிகபட்சம் 900 என்ற அளவாகவும் கணக்கிடப்படுகிறது. அதன் அடிப்படையில் 500-க்கும் மேற்பட்டு கூடுதலான ‘ஸ்கோர்’ பெற்ற வாடிக்கையாளர்களுக்கு புதிய வங்கி கடன் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

    எச்சரிக்கை அவசியம்

    பொதுவாக, வங்கி வாடிக்கையாளர்களில் பலரும் முன்னர் ஒரு சமயத்தில் பெற்ற வங்கி கடனுக்கான நடவடிக்கைகளில் சரிவர செயல்படாமல் விட்ட காரணத்தால், பின்னர் கடன் பெறும் காலத்தில் அது பாதிப்பை அளிக்கக்கூடியதாக மாறும் என்பது பற்றி தெரியாமல் உள்ளதாக நிதியியல் ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 
    வங்கி கடன் மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக, ‘தப்பி ஓடும் பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்’ கீழ் மும்பை கோர்ட்டு பொது நோட்டீஸ் வெளியிட்டது. #PNBFraud #NiravModi
    புதுடெல்லி:

    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளார். அவருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிரவ் மோடிக்கு எதிராக நிதி மோசடி தடுப்பு சட்டம் மற்றும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகள் விசாரணை மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.



    இந்த நிலையில் இந்திய வங்கிகளில் இருந்து கோடிக் கணக்கில் கடன்பெற்று மோசடியில் ஈடுபடும் தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியது.

    ‘தப்பி ஓடும் பொருளாதார குற்றவாளிகள் சட்டம் 2018’ எனப்படும் இந்த சட்டப்படி, பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பி செல்வோரை, ‘தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள்’ என அறிவித்து, அவர்களின் பினாமி சொத்துகள் உள்பட அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய முடியும்.

    தற்போது அமலுக்கு வந்துள்ள இந்த புதிய சட்டத்தின் கீழ் நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பர்வி மோடி, சகோதரர் நீஷல் மோடி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து 3 பேருக்கும் எதிராக மும்பை சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஆஷ்மி தனித்தனியாக பொது நோட்டீஸ் வெளியிட்டு உள்ளார். இந்த பொது நோட்டீஸ்கள் முன்னணி நாளிதழ்களில் வெளியிடப்பட்டு உள்ளன.

    இதில் பர்வி மற்றும் நீஷல் ஆகியோருக்கு எதிராக வெளியிடப்பட்ட நோட்டீசில், ‘உங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டு இருந்த சொத்துக்களை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது?’ எனக்கேள்வி கேட்டு இருந்த கோர்ட்டு, இது தொடர்பாக அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ந் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இதைப்போல நிரவ் மோடிக்கு எதிரான நோட்டீசில், ‘நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறியது மட்டுமின்றி, விசாரணைக்கும் ஆஜராக மறுத்து வருகிறீர் கள். எனவே மேற்படி சட்டத் தின் கீழ் நீங்கள் தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி என அழைக்கப்படுவீர்கள்’ என கூறப்பட்டு இருந்தது.

    அமலாக்கத்துறை கோரியிருந்தது போல உங்களை ஏன் தப்பி ஓடிய குற்றவாளி என அறிவிக்கக்கூடாது? என்றும், உங்கள் சொத்துகளை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? என்றும் செப்டம்பர் 25-ந் தேதிக்கு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.#PNBFraud #NiravModi  #Tamilnews
    ‘எவ்வளவு வருமானம் வந்தாலும் பத்தல...’ என்பதே பெண்கள் பலரின் புலம்பலாக உள்ளது. சரி, செலவை எப்படிக் குறைக்கலாம் என்று கூறுங்களேன் என்கிறீர்களா? இதோ, சில ‘டிப்ஸ்’...
    ‘எவ்வளவு வருமானம் வந்தாலும் பத்தல...’ என்பதே பெண்கள் பலரின் புலம்பலாக உள்ளது. அவர்கள் பெரும்பாலும் வீண் செலவு வழிகளை அடைக்காமல் இருப்பார்கள். சரி, செலவை எப்படிக் குறைக்கலாம் என்று கூறுங்களேன் என்கிறீர்களா? இதோ, சில ‘டிப்ஸ்’...

    போக்குவரத்துச் செலவை கூடியமட்டும் குறைக்க முயலுங்கள். ஒரே பகுதியில் இருந்து மற்றொரு குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் நண்பர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள், வாகனத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். இது சுற்றுச்சூழலுக்கும் நன்மை சேர்க்கும் விஷயம்.

    தேவையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஏ.சி., மின்விசிறி போன்றவற்றை அணைப்பதுடன், குழந்தைகளுக்கும் அப்பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

    சில பெரும் நிறுவனங்கள், கடைகள், குறிப்பிட்ட காலத்தில் தள்ளுபடி வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதைக் கவனித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

    சிறிய கடைகளில் என்றில்லை, ஆச்சரியப்படுத்தும்வகையில், பெரிய கடைகளிலும் பேரம் பேசுவது சில நேரங்களில் பலன் கொடுக்கும். பேரம் பேச கவுரவம் பார்க்க வேண்டாம்.



    வெளியிடங்களில் சாப்பிடு வதைக் குறைத்துக்கொள்வது, பர்சுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கும் நல்லது.

    திரையரங்கில் படம் பார்ப்பது செலவு பிடிக்கும் விஷயமாகிவரு கிறது. சிறிது காலம் பொறுத்திருந்தால், முறைப்படி இணையத்திலேயே பணம் செலுத்திப் பார்க்க முடியும்.

    ‘ஜிம்’முக்கு பணம் கட்டிவிட்டு, போகாமல் இருப்பதைவிட, வீட்டி லேயே உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

    பழையதாகிவிட்டது என்பதாலேயே ஒரு பொருளை தூக்கிப் போட்டுவிடாமல், அதிகபட்சம் எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.

    வீட்டில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் தனித்தனி செல்போன், அவற்றுக்கான செலவு தேவையா என யோசியுங்கள்.

    பணமாக எடுத்துக் கொடுப்பதைவிட, கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது நாம் அதிகம் செலவழித்துவிடுகிறோம். எனவே கிரெடிட் கார்டை பர்சை விட்டு வெளியே எடுப்பதை கூடியவரை தவிருங்கள். 
    பெற்றோரின் பாதுகாப்பை விட்டு வெளியே வரும் பெண்கள் அவர்களுக்கு சமமான பாதுகாப்பை தரக்கூடிய ஒருவரிடம் தங்கள்வாழ்க்கையை ஒப்படைக்க விரும்புகிறார்கள்.
    பெண்கள் தங்களை விட வயது அதிகமான ஆண்களை விரும்புகிறார்கள். தங்களை வழி நடத்தும் திறமை அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறார்கள். அதோடு தங்களை முழுமையாக புரிந்து கொண்டு பெருந்தன்மையோடு நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

    தங்கள் ‘லைப் பார்ட்னர்’ தங்களை விட அனுபவமும் ஆற்றலும் மிக்கவர்களாக இருந்தால் நல்லது என்ற எண்ணம் இன்றைய இளம் பெண்களிடம் தலைதூக்கிவிட்டது. அதனால் அப்படிப்பட்டவர்களை தேடத் தொடங்கிவிட்டார்கள்.

    பெண் எதிர்பார்க்கும் புத்திசாலித்தனம் ஆணிடம் இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையிலும் அவரோடு இணைந்து வெற்றிகளை தக்க வைத்துக் கொண்டால் என்ன என்று சிந்திக்கத் தொடங்குகிறார்கள். இந்த சிந்தனையின் விளைவு திருமணத்தில் முடிகிறது.

    ஆண்களின் அதிகபட்ச அனுபவமும், பக்குவமும் இங்கே கணக்கில் கொள்ளப்பட்டு இந்த இல்வாழ்க்கை இணைப்பு நடந்து விடுகிறது. எப்போதும் நம்பிக்கையை அடிப்படையாக வைத்தே அன்பு வளரும். பெற்றோரின் பாதுகாப்பை விட்டு வெளியே வரும் பெண்கள் அவர்களுக்கு சமமான பாதுகாப்பை தரக்கூடிய ஒருவரிடம் தங்கள்வாழ்க்கையை ஒப்படைக்க விரும்புகிறார்கள்.

    தங்களை விட வயதில் பெரிய ஆண்களை பெண்கள் பெரிதும் மதிக்கிறார்கள். இந்த மதிப்பே நாளடைவில் நம்பிக்கையாக மாறி விடுகிறது. ஆனால் அந்த பாதுகாப்பே பல பெண்களுக்கு எமனாகவும் மாறிவிடுகிறது.
    உங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை நாட்கள் ஆகியுள்ளது என்பது முக்கியமல்ல. உங்களது வாழ்க்கை துணை எந்த விஷயத்தையாவது உங்களிடம் இருந்து மறைத்திருக்கிறாரா? என்பது தான் கேள்வி.
    உங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை நாட்கள் ஆகியுள்ளது என்பது முக்கியமல்ல. உங்களது வாழ்க்கை துணை எந்த விஷயத்தையாவது உங்களிடம் இருந்து மறைத்திருக்கிறாரா? என்பது தான் கேள்வி. அது நல்ல விஷயமோ? கெட்ட விஷயமோ?. மனைவியிடம் இருந்து ஒரு விஷயத்தை மறைப்பது என்பது மனித இயல்பு. இது போன்ற ரகசியங்கள் கணவரிடம் இருந்தால் அதை தெரிந்து கொள்ளவில்லை என்றால் மனைவிகளுக்கு தலை வெடித்துவிடும். நம்ப செய்து கட்டாயப்படுத்தும் வரை ரகசியம் வெளியில் வராது. மனைவிகளிடம் இருந்து ஆண்கள் மறைக்கும் பல்வேறு விஷயங்களை இங்கே பார்ப்போம்.

    1. திருமணத்திற்கு முன்பு ஆண் அல்லது பெண் இருவரும் தங்களது கடந்த வாழ்க்கை குறித்து பேசுவார்கள். இதில் சில குறிப்பிட்ட விஷயங்களை ஆண்கள் பரிமாறிக் கொள்ளமாட்டார்கள். தன்னை பற்றி யாரும் தவறாக நினைத்துவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் இதை பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். உறவு முறைகள் குறித்து பேசுவார்கள். ஆனால் அனைத்து உறவு முறை குறித்தும் பேச மாட்டார்கள். ஆண்கள் பெரும்பாலும் தங்களது கடந்த கால உறவு முறைகளை மறைப்பார்கள். இதில் சிறிய அளவை மட்டும் மனைவியிடம் தெரிவிப்பார்கள் என்பது ஒரு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

    பின்னர் இதர வழிகள் மூலம் மனைவிகள் அந்த உறவு முறையை ஆராய்ந்து கண்டுபிடித்துவிடுவார்கள். அப்புறம் விசாரித்தால் அதை கணவர்கள் ஒப்புக் கொள்வார்கள். நீங்கள் உண்மையிலேயே உங்களது கணவரின் கடந்த காலம் குறித்து தெரிந்துகொள்ள விரும்பினால் சாதாரணமாக ஒரு நண்பரை போல் அதே நேரத்தில் கேட்டுவிடுங்கள். அந்த விஷயத்தால் எனக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது, நான் கவலைப்படமாட்டேன் என்ற நம்பிக்கையை கணவருக்கு ஏற்படுத்திவிட வேண்டும். நீங்கள் தன்னை பற்றி தவறான அபிப்பிராயத்துக்கு வந்துவிடக் கூடாது என்ற காரணத்தால் தான் கணவர்கள் கடந்த கால உண்மைகளை மறைப்பார்கள்.

    2. சமூக வாழ்க்கையையும் கணவர்கள் மனைவியிடம் மறைப்பது உண்டு. ஒரு அளவு வரை தான் இதை பற்றி பேசுவார்கள். பெண்கள் உள்ளிட்ட பலரிடம் அவர் நட்பு வைத்திருக்கலாம். இத்தகைய பெண்கள் குறித்து உங்களிடம் பேசினால் உங்களுக்கு சந்தேகம் வந்துவிடும் என்ற காரணத்தால் அதை மறைத்துவிடுவார்கள்.

    3. முறிந்த காதல் குறித்து ஆண்கள் மனைவிகளிடம் பகிர்ந்து கொள்வது கிடையாது. இதை ஏற்கமாட்டார்கள். ஆனால் சிலர் இது குறித்து வெளிப்படையாக பேசிவிடுவார்கள். மறைப்பதற்கு ஆண்களின் ஈகோ தான் காரணம். ஆனால் இது ஒரு மென்மையான விஷயம். மனைவிக்கு கிடைத்த சிறந்த காதலராக தன்னை காட்டிக் கொள்வார்கள். இதற்கு முன்பு நான் யாரிடமும் தொடர்பில் இல்லை என்று காட்டிக் கொள்வதற்காகவும் மறைப்பார்கள். இது ஆண்களுக்கு பொதுவாக இருக்கும் ஒரு குணாதிசியம்.



    4. ஆண்களுக்கு உங்களது இழப்பு குறித்த அச்சம் அதிகம் இருக்கும். ஆனால் அதீத ஈகோ காரணமாக அதை வெளிப்படுத்தமாட்டார்கள். அவர்களும் உங்களை போலவே இழப்பின் மீது அச்சம் இருக்கும். ஆண்கள் இதை மறைத்து வைத்திருப்பார்கள். அவர்கள் அதிக உணர்ச்சிவசப்படும் போது இதை தெரிவிப்பார்கள். நீங்கள் அவரை இணங்கச் செய்யும் வரை அவர்களது உண்மையான உணர்வை மறைந்துதான் வைத்திருப்பார்கள்.

    5. அவர் உங்களை சார்ந்திருப்பதாக எப்போது உணரச் செய்யவிடமாட்டார். அதை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். ஆனால் உண்மையிலேயே அவர் உங்களை சார்ந்து தான் இருப்பார்கள். மன ரீதியாக மட்டுமின்ற உடல்ரீதியாகவும் இந்த நிலை தான் இருக்கும். இதற்கு அவர் அணியும் ஆடையை கூட கூறலாம். பேன்ட் போன்றவற்றை அவர் அணியலாம். ஆனால் உள்ளாடைகள் விஷயத்தில் அவர் உங்களை சார்ந்து தான் இருக்க வேண்டும்.
    இதற்கு மனைவி அல்லது வேறு யாரேனும் உதவியாக இருந்தாக வேண்டும். அவர்களுக்கு மனைவியின் உதவி கண்டிப்பாக தேவை. அதே சமயம் தன்னை பலவீனமாக நினைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

    அதனால் மனைவிகள் எப்போது கணவருக்கு காதலியாக, நண்பராக எப்போது இருக்க வேண்டும். இதை செய்தால் கணவர் இன்னும் உங்களிடம் வெளிப்படையாக இருப்பதை பார்க்க முடியும். தன்னிடம் உள்ள ரகசியங்களையும் மறைக்கமாட்டார்கள்.

    6. பொதுவாக இதை இந்த பட்டியலில் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் என்பது தெரியும். ஆம், அவர் தனது கற்பனைகளை உங்களிடம் மறைப்பார். அனைத்தையும் கிடையாது. சிலவற்றை மறைப்பார்கள். இதை நிறைவேற்ற உங்களால் உதவ முடியாது என்று அவர் நினைப்பது தான் இதற்கு காரணம். அதனால் அத்தகைய கற்பனைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார். அவரது கற்பனைகளை தெரிந்து கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கும். அந்த கற்பனைகள் அவருக்கு பல இரவுகளின் கனவாக கழிந்திருக்கும்.
    கணவர் சில விஷயங்களை எதிர்பார்க்காமல் செய்யும் போது மனைவி சந்தோஷப்படுவாள். இப்போது கணவன் எந்த விஷயங்களை செய்தால் மனைவி சந்தோஷப்படுவாள் என்பதை பற்றி பார்க்கலாம்.
    கணவன் எதிர்பார்க்காமலேயே அவனுக்கான வேலைகளை இன்றுவரை மனைவி செய்துக் கொண்டே தான் இருக்கிறாள். ஆனால், மனைவி எதிர்பாராத தருணத்தில், மனைவிக்கு தேவையான வேலைகள் என்னென்ன நீங்கள் ஒரு கணவனாக செய்துள்ளீர்கள்? அட்லீஸ்ட் இந்த லிஸ்ட்ல இருக்க இந்த விஷயமாவது கட்டின மனைவிக்காக செஞ்சிருக்கீங்களா?

    மனைவி சோர்வாக, களைப்பாக உணரும் போது, அவரருகே அமர்ந்து, கால் பிடித்துவிடுவது, கால் விரல் சொடக்கு எடுத்துவிடுதல் போன்றவை செய்துள்ளீர்களா? இன்னும் சில ஆண்கள் மனைவியின் கால்களை பிடிக்க கௌரவம் பார்ப்பார்கள். ஆனால், இது மனைவிக்கு கணவன் மீது,” கௌரவம் பாராமல் தன் மீது அன்பு செலுத்துகிறார்” என்ற உணர்வு அதிகரிக்க, காதல் அதிகரிக்க செய்யும் கருவியாக அமையும்.

    சமையல் செய்யும் போது பின்னாடி இருந்து கட்டிபிடிப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துவது. காதல் விளையாட்டுகளுடன் அவருடன் சேர்ந்து சமைக்க உதவுவது.



    சண்டையிட்டு அழவைத்த பிறகு, முதல் ஆளாக சென்று மன்னிப்பு கேட்டு, அரவணைத்து ஒரு ஆசை முத்தம் கொடுத்தது உண்டா? இல்லையேல் அடுத்த முறை சண்டையிடும் போது கொடுத்து பாருங்கள். சண்டை மட்டுமல்ல, உங்கள் மீதுள்ள கோபமும் ஒரு நொடியில் அடங்கிவிடும்.

    இப்போதெல்லாம், மாடர்ன் கணவன்மார்கள் மாதவிடாய் காலத்தில் மனைவியை ஒதுக்குவது இல்லை. ஆண்களுக்கும் மாதவிடாய் பற்றிய தெளிவு அதிகரித்து வருகிறது. ஆனால், இன்றும் மாதவிடாய் நாட்களில் மனைவியை தொட கூட தயக்கம் காட்டும் ஆண்களும் இருந்து வருகிறார்கள். இது உடலளவில் பாதிக்கப்படும் அவர்களுள் மனதளவிலும் பாதிப்பை அதிகரிக்கும். முடிந்த வரை மாதவிடாய் நாட்களில் மனைவியை அனுசரித்து பழகுங்கள்.

    மனைவி வேலை விஷயமாக அல்லது வெளியூர் சென்று நள்ளிரவில் ஊர் திரும்பும் போது, நேரம் பாராமல் அவருக்காக ஏர்போர்ட், ரெயில்நிலையம் அல்லது பேருந்து நிலையத்தில் தாமதம் ஆவதை பொருட்படுத்தாமல், அவருக்காக காத்திருந்தது உண்டா? இது போன்ற செயல்களை நீங்கள் மனம், முகம் சுளிக்காமல் செய்தால், அதை பற்றி தம்பட்டம் அடித்து பெருமையாக பேசுவது மனைவிக்கு பிடித்தமான செயலாகும்.
    ×