search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105618"

    குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்க முதல் காரணம் பெண்கள் தான்.. குடும்ப தலைவியாக வீட்டுக்கு வரும் பெண்கள் இதனை உணர்ந்து குடும்பத்தினை அழகான முறையில் வழி நடந்த வேண்டும்..
    குடும்ப வாழ்க்கை அழகாக இருக்க என்ன செய்யலாம் என்று தேடிய பொழுது கிடைத்த பயனுள்ள தகவல்கள்...

    1. அழகிய குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்க முதல் காரணம் பெண்கள் தான்.. குடும்ப தலைவியாக வீட்டுக்கு வரும் பெண்ணின் கையில் தான் வெற்றி இருக்கு.. இதனை உணர்ந்து நாம் குடும்பத்தினை அழகான முறையில் வழி நடந்த வேண்டும்..

    2. எப்பொழுதும் முகத்தில் புன்னைகையுடன் இருக்க மறுக்காதீங்க..

    3. குடும்பத்தில் இருக்கும் ஓவ்வொருவரையும் மதிக்க பழகுங்கள்.. மற்றவர்களின் மனநிலைக்கு தகுந்தது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.. (விட்டுகொடுத்து பழகுங்கள்) நான் ஏன் விட்டு கொடுக்க வேண்டும் என்ற அகம்பாவம் வேண்டாம்.

    4. தாழ்வு மனப்பான்மையினை அடியோடு அப்புறப்படுத்துங்கள். அனைவரிடமும் சகஜமாக பேசுகள்.. மனம் திறந்து பாராட்டுங்கள்.

    5. சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தி அதுக்கு கை, கால் வைத்து அழகுபடுத்த வேண்டாம்.. எந்த வகை பிரச்சனை வந்தாலும் சம்பந்தபட்ட நபரிடம் பேசி பாருங்கள்.. கேட்கவில்லையா துஷ்டனை கண்டால் தூர விலகு என்று விலகிவிடுங்கள்.

    6. வாழ்க்கையின் பிரச்சனைக்கு தீர்வு என்னவென்று தேடுகள்.. பதிலடி கொடுக்க முயற்சி செய்யாதீர்கள்.. தேவையற்ற குழப்பங்களை மனதில் ஏற்ற வேணடாம்..

    7. இறைவன் கொடுத்த இந்த அழகான இறைய நாளை நான் பயனுள்ளதாக தான் செலவு செய்வேன் என்ற மன உறுதியுடன் தேவையான நல்ல சிந்தனைகளை மட்டுமே சிந்தித்து அதன் வழியே செலவு செய்யுங்கள்.

    8. நாம் சந்தோஷமாக இருந்தால் நம்மை சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள்..என்பதனை மனதில் கொண்டு சிரித்தமுகத்துடன் பேசி பழகுங்கள்..

    9. உங்கள் இஷ்டம் போல் உங்கள் குடும்ப நண்பர்கள் கேட்க வேண்டும் என்று எண்ணம் வைக்காதீங்க.. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்று பிடிவாதம் பிடிக்காதீங்க.. மற்றவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து பேச பழகுங்கள்.



    10. குழந்தைகளுடன் சந்தோஷமாக பேசி, விளையாடி இருங்கள்.. சிறு குழந்தையாக இருக்கும் குட்டி குழந்தைகள் செய்யும் சேட்டைகளை ரசியுங்கள்... சேட்டை அதிகமானால் கண்டிக்க மறுக்காதிங்க...

    11. நம் உடல் ஆரோக்கியம் இல்லாத பொழுது தான் மனதில் சந்தோஷம் நம்மை விட்டு போகும்.. முடிந்த வரை உடலை ஆரோக்கியமாக வைக்க பாருங்க.. சில நேரங்களில் வரும் சின்ன சின்ன நோய்களை பெரிதுபடுத்தாமல் வீட்டில் இருக்கும் பொரியவர்களிடம் என்னால் இன்று உடம்புக்கு முடியவில்லை என்று சொல்லிவிட்டு ஓய்வு எடுங்கள்.

    12. எல்லா நேரமும் வேலை வேலை என்று இருக்காமல் உங்களுக்கு என்று ஒரு சில மணி நேரங்கள் ஓய்வெடுத்து உங்களுக்கு பிடித்தகாரியங்களில் ஈடுபடுங்கள்.. உடலுக்கு ஓய்வு கொடுப்பது போல் உங்கள் மனதுக்கும் ஒய்வு கொடுங்கள்.

    13. குடும்பத்தில் பிரச்சனைகள் வரும் பொழுதோ அல்லது டென்ஷன் அதிகமாக இருக்கும் பொழுதோ அவசர முடிவு எதனையும் எடுக்காதிங்க.

    14. முடிந்த வரை குடும்பத்தில் அனைவரும் ஒன்றாய் சிரித்து பேசி பழகுங்கள்...

    15. குடும்ப வாழ்க்கை என்பது நாம் செய்யும் சமையல் போன்றது.. உப்பு, காரம், புளிப்பு, இனிப்பு அளவாக இருப்பது முக்கியம்.. அதனை பக்குவமாக செய்வது குடும்ப தலைவியாக இருக்கும் ஓவ்வொரு பெண்ணில் கையில் தான் இருக்கு..

    16. மற்றவர்களிடம் நாம் காட்டும் வெறுப்பு நம் மனதினை மேலும் மேலும் குப்பையாக்குகிறது.. அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.. மனது தூய்மையாகும்...
    இன்றைய சூழ்நிலையில் திருமணத்தின் போது மணமக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஓரளவு தயாராவதைப்போல, திருமணத்திற்குப் பின் இருவரும் நிதி சார்ந்த விஷயங்களுக்கும் தயார் ஆவது நல்லது.
    இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இருப்பதுபோல வெளியில் காட்டிக்கொண்டாலும், அவர்கள் நிதி சார்ந்த விஷயங்களில் நிறைய கஷ்டப்படுகிறார்கள். இவர்களுடைய எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அது வெளியே தெரியும் போது பூதாகரமாகி இறுதியில் விவாகரத்து வரை வந்து நிற்கிறது.

    கணவன், மனைவி ஆளாளுக்கு கண்டிஷன் போட்டுக் கஷ்டப்பட்டு வாழ்வதை விட ஆரம்பத்திலிருந்தே நிதி சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்தைச் செலுத்தி சந்தோஷமாகக் குடும்பம் நடத்த சில முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம்.

    1. திருமண வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக வாழ் நாள் முழுவதும் கஷ்டப்படும் சூழ்நிலைக்குச் சென்று விடாதீர்கள். ஒவ்வொரு மாதமும் வருமானத்திற்கு அதிகமாகச் செலவு செய்யாதீர்கள். உங்கள் வருமானம் என்னவோ அதை முதலில் உணர்ந்து அந்த வரம்பிற்குள் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

    2. அவசரகாலம் என்பது எல்லோருக்குமே வரக்கூடிய ஒன்றுதான். இதில் ஏழை, பணக்காரன் என எந்தவிதமான பாகுபாடும் இல்லை. ஆகையால் வேலை இழப்பு, அவசர மருத்துவ சிகிச்சை என எந்த ஒரு அவசரத் தேவையாக இருந்தாலும் 'எமர்ஜென்சி ஃபண்ட்' அதாவது அவசரத் தேவைக்கான முதலீட்டை மேற்கொள்ளத் திட்டமிடுங்கள்.

    3. உங்கள் குழந்தைகளின் எதிர்கால கல்விச் செலவு மற்றும் திருமணத்திற்காக ஆரம்பத்திலிருந்தே சிறுக சிறுக சேமிக்கத் திட்டமிடுங்கள். இதைப்போல வீடு வாங்கும் திட்டம் என எதுவாக இருந்தாலும் கணவன், மனைவி இருவரும் ஆலோசித்து சேமிக்கத் துவங்குங்குகள்.



    4. திருமணத்திற்கு முன் உங்கள் நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ நீங்கள் அடிக்கடி கடன் வாங்கி இருக்கலாம்; அதைச் சரியாக திருப்பிச் செலுத்தியும் இருப்பீர்கள். ஆனால், திருமணத்திற்குப் பிறகாவது எதற்கெடுத்தாலும் கடன் என்ற நிலையைத் தவிருங்கள்; கடன் வாங்காமல் வாழ்க்கையை இன்பகரமாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.

    5. திருமணத்திற்கு முன் நீங்கள் ப்ளேபாயாக கூட இருந்திருக்கலாம். ஆனால், திருமணத்திற்கு பின்பும் நீங்கள் நிதி சார்ந்த விஷயங்கள் எதுவும் தெரியாமல் ஸ்கூல் பாயாக இருந்தால் சற்று கடினமே. ஆகையால் நிதி சார்ந்த விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்குங்கள். தினமும் எவ்வளவு செலவு செய்கிறோம்; எதற்காகச் செலவு செய்கிறோம் என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள். தேவையற்ற செலவுகளைத் தவிருங்கள். நிதி சார்ந்த விஷயங்களில் உங்களுக்குத் தேவையானதை தேடித் தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக நிதி சார்ந்த புத்தகங்களை இன்றிலிருந்தாவது படிக்கத் துவங்குங்கள்.

    6. கணவன், மனைவி இருவரும் வாழ்க்கையின் இறுதி தருவாயிலும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த அவசியம் செய்ய வேண்டியது ஓய்வுக்காலத்திற்கான திட்டமிடுதலே. ஆகையால் திருமணம் முடிந்த ஆண்டே ஒவ்வொரு மாதமும் உங்களுடைய மாதாந்திர சம்பளம் எதுவாக இருந்தாலும் உங்கள் பணத்தை சிறிது சிறிதாக ஒய்வுக்காலத்திற்காக சேமிக்கத் திட்டமிடுங்கள். இல்லையெனில் இது சார்ந்த முதலீட்டுத் திட்டங்களிலோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலோ முதலீடுகளை மேற்கொள்ள ஆரம்பியுங்கள்.

    7. இன்றைய சூழ்நிலையில் திருமணத்தின் போது மணமக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஓரளவு தயாராவதைப்போல, திருமணத்திற்குப் பின் இருவரும் நிதி சார்ந்த விஷயங்களுக்கும் தயார் ஆவது நல்லது. ஏனெனில் மணமக்கள் இருவரும் வெவ்வேறு சூழலில் வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள். திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பார்கள். அதைப்போல நிதி சார்ந்த விஷயங்களில் இருவரில் ஒருவாரது இதை உணர்ந்தால்தான் வாழ்க்கை நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்.

    மண வாழ்க்கை முறிய ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், கணவன், மனைவி இடையே உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவதைப்போல நிதி சார்ந்த விஷயங்களில் இருவரும் கவனமாகவும், கட்டுப்பாட்டுடனும் இருப்பது மிக முக்கியம். 
    திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள், மு.க ஸ்டாலின் உட்பட அனைவரும் காவிரி மருத்துவமனை விரைந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi
    சென்னை:


    திமுக தலைவர் கருணாநிதி இரத்த அழுத்தம் காரணமாக சமீபத்தில் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து தமிழகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த அரசியல் தலைவர்கள் கருணாநிதி உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர்.



    இன்று, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கருணாநிதியை பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியிடப்பட்டது. இதையடுத்து இன்று இரவு 8 மணியளவில் காவிரி மருத்துவமனை கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், தற்போது வரை மருத்துவமனை சார்பில் எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை. மேலும், கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் தற்போது காவிரி மருத்துவமனை வந்துள்ளதால் அப்பகுதியில் அதிக அளவில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. மேலும், திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உட்பட அனைவரும் காவிரி மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர்.

    மேலும், அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi
    சொந்த வீடு கட்ட அல்லது அடுக்குமாடி வீடு வாங்குவதற்கு வங்கி கடன் பெற முடிவெடுப்பவர்கள் எளிய நடைமுறைகள் கொண்ட வங்கியை அவர்களது தேவைகளின் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள்.
    சொந்த வீடு கட்ட அல்லது அடுக்குமாடி வீடு வாங்குவதற்கு வங்கி கடன் பெற முடிவெடுப்பவர்கள் எளிய நடைமுறைகள் கொண்ட வங்கியை அவர்களது தேவைகளின் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள். வீட்டை கட்டி விட்டு அல்லது வாங்கிய வீட்டில் நிம்மதியாக அமர வேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ள நிலையில் கடனுக்கான வட்டி விகிதம் பற்றிய வருங்கால கணக்கீடுகள் பலருக்கும் இருப்பதில்லை.

    காலப்போக்கில் ஏற்படும் பொருளாதார சிக்கல்களால் தவணை தவறும் சமயங்களில்தான் வட்டி விகிதம் பற்றி பலரும் யோசிப்பதாக நிதி ஆலோசகர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த நிலையில் மாதாந்திர தவணையை சற்று குறைவாக செலுத்த இயலுமா..? என்ற கேள்விக்கு அவர்கள் தரும் ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’ (Balance Transfer) என்ற வழிமுறை பற்றிய செய்திகளை இங்கே பார்க்கலாம்.

    வங்கி மாற்றம்

    10 வருடங்களுக்கும் மேலான காலகட்டம் கொண்ட நீண்ட கால கடன்களுக்கு பொருத்தமாக குறிப்பிடப்படும் இந்த வழிமுறையின் மூலம் மீதமுள்ள வீட்டுக் கடனை குறைவான வட்டி விகிதமுள்ள வங்கிக்கு மாற்றிக்கொண்டு அந்த விகிதத்தின்படி மாதாந்திர தவணையை செலுத்தி வரலாம்.

    அவசியமான ஆவனங்கள்


    வீட்டுக் கடன் பெறுவதற்கு தரப்பட்ட அனைத்து ஆவணங்களும் இதற்கும் அவசியம் என்ற நிலையில், முந்தைய வங்கியிலிருந்து ஒரிஜினல் ஆவணங்கள் அனைத்தையும் பெற்று புதிய வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.

    மீதமுள்ள மதிப்புக்கு காசோலை

    ஆவணங்கள் தக்க சோதனைகளுக்கு பின் புதிய வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மீதமுள்ள கடன் தொகைக்கான மதிப்பு காசோலையாக முந்தைய வங்கிக்கு வழங்கப்படும். மேலும், முந்தைய வங்கி நடைமுறைகள் புதிய வங்கியிலும் பின்பற்றப்படும்.

    ஆவணம் பதிவு

    தவணை செலுத்தப்படும் சொத்து அமைந்துள்ள பகுதிக்கான சார்-பதிவாளர் அலுவலகத்தில் கடன் கொடுத்த புதிய வங்கியின் பெயர், மற்றும் கடனுக்கான விபரங்கள் ஆகியவை ஆவணமாக பதிவு செய்யப்படும்.

    நீண்ட கால ஆதாயம்

    மேற்கண்ட முறை எல்லா நேரங்களிலும், அனைவருக்கும் பொருத்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. மீதியுள்ள கடன் தொகை, வங்கிகளில் வசூலிக்கப்படும் ‘போர்குளோசர் கட்டணம்’ என்ற அபராத கட்டணம், மற்றும் ‘பிராசஸிங் கட்டணம்’ போன்றவற்றையும், மாறக்கூடிய வட்டி விகித வேறுபாடுகளையும் கணக்கிட வேண்டும். சில நிலைகளில் வீட்டை மறு மதிப்பீடு செய்யவேண்டியதாக இருக்கலாம். அதன் பின்னர் ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’ என்பது மீதி செலுத்த வேண்டிய தவணைகளின் கணக்கீடு அடிப்படையில் ஆதாயம் தரக்கூடியது என்றால் இம்முறையை கடைப்பிடிக்கலாம்.
    வீட்டுக்கடன் பெற்ற மாதாந்திர சம்பளதாரர்கள் வீட்டு கடன் திட்டத்தில் திரும்ப செலுத்துக்கூடிய வட்டிக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி நிதி ஆலோசகர்கள் தரும் ஆலோசனைகளை இங்கே காணலாம்.
    சொந்தமாக வீடு கட்டிய அல்லது அடுக்குமாடி வீடு வாங்கிய நடுத்தர மக்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக, வீட்டுக்கடன் பெற்ற மாதாந்திர சம்பளதாரர்கள் வீட்டு கடன் திட்டத்தில் திரும்ப செலுத்துக்கூடிய வட்டிக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி நிதி ஆலோசகர்கள் தரும் ஆலோசனைகளை இங்கே காணலாம்.

    வீட்டு வாடகைப்படி

    வீட்டு வாடகை அலவன்ஸ் (எச்.ஆர்.ஏ) பெற விரும்புபவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கான வாடகை ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கவேண்டும். வங்கி கடன் பெற்று கட்டிய வீட்டிலேயே குடியிருப்பவர்களுக்கு எச்.ஆர்.ஏ மூலம் சலுகைகள் பெற இயலாது. ஆனால், அவர்கள் கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை திரும்ப செலுத்துவதன் மூலம் வரிச்சலுகைகள் பெறலாம்.

    வேறு ஊரில் குடியிருப்பவர்கள்

    வங்கி கடன் பெற்று சொந்த ஊரில் வீடு வாங்கியவர்கள் அல்லது கட்டியவர்கள், வேறொரு ஊரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் பட்சத்தில் சலுகைகள் உண்டு. அவருக்கு வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டிக்கான வரிச்சலுகையுடன், வீட்டு வாடகைக்கான வரிச்சலுகையும் கிடைக்கும்.

    குடியிருக்கும் ஊரில் வாடகை வீடு

    குடியிருக்கும் ஊரில் வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு வங்கி கடன் பெற்று வாடகை வீட்டில் குடியிருக்கும் பட்சத்தில், எச்.ஆர்.ஏ மற்றும் வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகியவற்றில் வரிச்சலுகை பெறலாம்.

    ஐந்து ஆண்டுகள் வரையறை

    வங்கி கடன் பெற்று கட்டப்படும் வீட்டின் கட்டுமான பணிகள் முடிவடையாத நிலையில் பணிகள் முடியும் வரையில் கடனுக்கான அசலுக்கு வரிச்சலுகை பெற இயலும்.

    வீட்டின் கட்டுமானம் முடிவடைந்து, பல்வேறு காரணங்களால் அதில் குடியேற முடியாத சூழ்நிலையில் குடியிருக்கும் வாடகை வீட்டுக்கு மேற்கண்ட இரண்டு வகை வரிச்சலுகைகளும் கிடைக்கும். குறிப்பாக, கடன் பெற்ற ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் வீட்டுக்கே வட்டிக்கான வரிச் சலுகை கிடைக்கும்.

    முதல் வீட்டுக்கு சலுகை

    2016-17 ஆண்டில் வீட்டு கடன் வழங்கப்பட்ட சமயத்தில் கடன் பெற்றவருக்கு சொந்தமாக வேறு வீடு இல்லாத நிலையில், கடன் தொகையாக ரூ.35 லட்சம் என்ற அளவுக்குள் பெற்று, கட்டிய வீட்டின் சந்தை மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு உட்பட்டு இருக்கும் நிலையில் அந்த கடனுக்கு பிரிவு 80 EE-J¡-ð® ரூ.50,000 வரிச்சலுகை அளிக்கப்படுகிறது.

    இரண்டாவது வீட்டுக்கான கடன் பெற்றவர்களுக்கு வரிச்சலுகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டும் சலுகை பெற முடியும்.
    அன்பும், பிரியமுமான உறவுகள் அருகில் இருந்தாலே போதுமே. நாம் மற்றவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட முதலில் நாம் நல்ல உறவுகளாக இருக்கலாம்.
    ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்தது. யானை, யானை அம்பாரி யானை, அரசனாக அமரச் சொல்லும் யானை.

    உனக்குக் கொஞ்சம், எனக்குக் கொஞ்சம், உவகையுடன் தின்னலாம். கை கோர்த்தே நாம் காலம் முழுதும் சஞ்சரிக்கலாம். உறவென்னும் பாறையில் உயிருள்ளவரை உலவலாம் இந்தப் பாடல்கள் நினைவிருக்கிறதா? சிறு வயதில் பள்ளி விடுமுறையில் தாத்தா, பாட்டி வீட்டுக்குச் சென்றவர்களுக்கு கிராமத்தில் இந்த விளையாட்டை விளையாடியது நினைவில் இன்னும் இருக்கலாம். ஐம்பது வயதை கடந்த அனைவரிடமும் மாறாத வாசனையாய் இந்த உணர்வுகள் இருக்கும். அமைதி, பொறுமை, நிதானம் என்று வாழ்வில் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு வாழ்பவர்கள் நிச்சயம் தங்கள் பால்ய காலத்தை உறவுகளுடன் கழித்தவர்களாய்த்தான் இருப்பார்கள்.

    ஏட்டுக் கல்வியை பல்கலைக்கழகங்கள் கொடுக்கலாம். ஆனால் வாழ்க்கைக் கல்வியை இந்த மாதிரி உறவுகள்தான் கற்றுக் கொடுக்கும். எல்லா உறவுகளும் அன்பின் நெருக்கமாய் இருப்பதில்லை. அதிலும் போட்டி, பொறாமை, கோபம் என்று எல்லாம் இருக்கும். ஆனாலும் விட்டுக்கொடுத்து அன்பும் பாசமுமாய் வாழ்ந்தால் எவ்வளவு ஆனந்தமாய் இருக்கும் என்று உணர்த்த முடியும்.

    பள்ளி விடுமுறை விட்டதுமே ஊருக்குப் போகும் குஷி ஆரம்பித்து விடும். கிராமம் என்றால் உற்சாகத்துக்கு கேட்கவே வேண்டாம். பொழுது போவது தெரியாது. நீரை வாரி இறைக்கும் பம்புசெட், நீச்சல் கற்றுக்கொடுக்கும் கிணறு, தணலில் சுட்டுச் சாப்பிடும் கம்பு, கேழ்வரகு, சோளம், இளநீர், நுங்கு என்று இயற்கையான தின்பண்டங்கள், தாத்தா தென்னை ஓலையில் செய்து கொடுக்கும் கிளி, குருவி, சைக்கிள் ஓட்ட கற்றுத்தரும் மாமா, வெள்ளி, சனியில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விடும் அத்தை, சித்திகள் என்று அனைவரும் அன்பை கற்றுக்கொடுத்தார்கள். அன்பைவிட அக்கறையே அதிகம் இருக்கும் அவர்கள் செயலில்.

    பங்கிட்டு வாழ கற்றுக்கொடுக்கும் பல்லாங்குழி, விட்டுக்கொடுத்து வாழ் எனச் சொல்லும் கிட்டி, கிளித்தட்டு, அத்துடன் கும்மி. இன்று பல ஆங்கில டாக்டர்கள் இரு கையையும் தட்டுங்கள் அது இதயத்திற்கு இதமானது என்கிறார்கள். வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்கிறார்கள். இன்று பல இடங்களில் கை தட்ட பயிற்சி, சிரிக்க ஒரு கிளப் என்று நடக்கிறது.

    வீட்டில் நாலு உறவுகள் அவர்களின் குழந்தைகள் சேர்ந்து இருக்கும்போது அங்கு தெறிக்கும் சிரிப்பலைகள் மூலம் தீர்க்காத நோய்களும் உண்டா? இரவில் மீந்துப்போன குழம்பு வகைகளைச் சுட வைத்து பாட்டி சாதம் பிசைந்து போடுவாள். அதில் உள்ள ருசி எந்த ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் கிடைக்கிறது.? இருப்பதை பங்கிட்டுச் சாப்பிடும் வழக்கத்தையும் அல்லவா அது கற்றுத் தருகிறது. அனைவரும் ஒரே இடத்தில் பேதமின்றி படுத்திருக்க, பாட்டியும், தாத்தாவும் சொன்ன இதிகாசங்கள், நல்ல பண்புகளையும், பழக்க வழக்கங்களையும் கற்றுத் தந்தது. தாத்தாவின் கை பிடித்து நடக்கும்போது எதிர்ப்படுபவரிடம் அவர் பேசுவதும், நடந்து கொள்வதும் நமக்குப் பாடமானது. வீட்டுக்கு வந்தவர்களை பாட்டி வரவேற்கும் முறையைப் பார்த்து மரியாதை என்பதைக் கற்றுக்கொண்டோம். நேசிப்பையும், உணவில் ஆரோக்கியத்தையும், அன்பையும், பணிவையும், நல்ல பண்புகளையும் அவர்கள் வாழ்ந்து காட்டுவதன் மூலம் கற்றுத் தந்தார்கள்.



    ஆனால் இன்று? இன்று இளைய சமுதாயத்தின் உலகம் அலைபேசியின் தொடுதிரையிலும், கணினியிலும் அடக்கிவிட்டது. வீட்டுக்கு யாராவது வந்தால் கூட வாங்க என்று கூப்பிடத்தோணாமல் வாட்ஸ் ஆப்பிலும், முகநூலிலும் மூழ்கிக்கிடக்கிறார்கள். காசு மட்டும் அல்லவே வாழ்க்கை. அடிப்படை பண்புகளை எந்த கல்வி நிறுவனம் கற்றுத் தருகிறது?

    இன்று பெருகி நிற்கும் வன்முறை, பாலியல் கொடுமைகள், பயங்கரவாதம் இந்த அளவுக்கு அன்று இல்லையே? காசு சம்பாதிக்கும் எந்திரமாக்கி விட்டோம் குழந்தைகளை. விடுமுறை என்பது அவர்களுக்கு சென்டிரல் ஜெயிலில் இருந்து சப்-ஜெயிலுக்கு மாறும் நாள். ஒரு கூட்டுக் குடும்பத்தில் எல்லா உறவுகளிடமும் அனுசரித்துப் போகப் பழகியவனால் சமுதாயத்தில் எந்த இடத்திலும் கலந்து பழகி வெற்றிபெற முடியும்.

    ஒரு கூட்டுக் குடும்பத்தில் ஐந்தாறு பெண் குழந்தைகளிடம் கலந்து பழகியவனால் மற்றொரு பெண்ணை தவறான எண்ணத்துடன் பார்க்கவோ, நடக்கவோ முடியாது. படித்து நல்ல வேலை கிடைத்து பையன் வெளிநாடு சென்றாலும் அவனின் வயதான பெற்றோர்களைக் கவனித்துக்கொள்ள கூட்டுக் குடும்பத்தில் உறவுகளின் அனுசரணை இருக்கும். அன்பும், பிரியமுமான குடும்பத்தில் வளர்ந்தவன் வெளிநாட்டுக்குத் தன்னை அடிமை சாசனம் எழுதித் தரமாட்டான். முதியோர் இல்லங்கள் தேவை இல்லாமல் போயிருக்கும். உறவுகளுடன் வாழ்ந்து அவர்களை மதிக்கவும், நேசிக்கவும் கற்றவன் ஆசிர்வதிக்கப்பட்டவன்.

    தன் மகன்-மகள் டாக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்று லட்சக்கணக்கில் செலவு செய்யும் பெற்றோர்கள் அவர்கள் ஒரு நல்ல மனிதனாக வாழ என்ன செலவு செய்கிறார்கள்? வாழ்க்கை, பல்கலைக்கழகங்களிலோ, கோடைக்கால பயிற்சி வகுப்பிலோ இல்லை. பாட்டி, தாத்தா வீட்டில், உறவுகளின் குழுவில் இருக்கிறது, நமது கலாசாரம், பாரம்பரியத்தைக் கடத்திக்கொண்டு வருகிறவர்கள் அவர்களே.

    விடுமுறை தினங்களில் உறவுகளின் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். கிராமத்தில் நடக்கும் திருவிழாவிற்கு, பாட்டி, தாத்தா வீட்டுக்கு அனுப்புங்கள். நல்ல பழக்க வழக்கங்களை கற்றுத்தர வேண்டாம். அவர்களே கற்றுக்கொள்வார்கள்.

    சுற்றத்தின் அழகு சூழ இருத்தல் என்கிறார் அவ்வையார். அன்பும், பிரியமுமான உறவுகள் அருகில் இருந்தாலே போதுமே. நாம் மற்றவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட முதலில் நாம் நல்ல உறவுகளாக இருக்கலாம். நம் வீட்டில் அவர்கள் வருவதை அனுமதிக்கலாம். அன்பாய் விருந்தோம்பலாம். நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நமக்கு திரும்பக் கிடைக்கும். டாலர்களில் இல்லை வாழ்க்கை. பெற்றோர்கள் இருக்க வேண்டியது முதியோர் இல்லங்களில் இல்லை. குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டியது செல்வத்தை அல்ல. அதைவிட உயர்வான நல்ல கல்வி. அன்பான சுற்றம், உறவுகள்.

    எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா

    ஐக்கிய அரபு அமீரகத்தில் அடிப்படை தேவைகளைக்கூட நிறைவேற்ற இயலாத சூழலில் தவிக்கும் இந்திய குடும்பத்தினருக்கு உதவ பலர் முன்வந்துள்ளனர். #UAE
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் மதுசூதனன் என்ற 60 வயது இந்தியர் தனது 5 பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் மிகவும் ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவர் குறித்து சமீபத்தில் செய்தி வெளியானது. அதில் தானும் தன் குடும்பத்தினரும் சிறைக்கைதி போல வாழ்ந்து வருவதாகவும், தங்களுக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த செய்தி மிக வேகமாக பரவியது. இந்நிலையில், வேலை வாய்ப்பின்றி இருக்கும் மதுசூதனனின் பிள்ளைகளுக்கு பணி வழங்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பேசிய அந்நாட்டின் உயர்த்தூதர் சுமதி வாசுதேவ், மதுசூதனனின் 5 பிள்ளைகளுக்கும் பாஸ்போர்ட் புதுப்பித்து தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.#UAE
    நமது முயற்சிகளும் சரியான திட்டமிடல்களும் நம்மை இன்னும் உயர்வான இடத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
    வெற்றி பெற திட்டமிடுங்கள் சரியான திட்டமிடலே பாதி வெற்றியைத் தந்துவிடுகிறது. எதையும் சரியாகத் திட்டமிடும்போது நாம் பாதி இலக்கினை எட்டிவிட்டோம் என்ற நிம்மதி நமக்குள்ளே பிறந்துவிடும். தேர்வுகளின்போது பாடங்களைச் சரியான திட்டமிடலோடு படிக்கத் தொடங்கினால் போதும் வெற்றிக்கனிகள் உங்கள் பக்கமே வரும்.

    வாழ்க்கையும் நமக்கு பல நேரங்களில் தேர்வுகளையே ஞாபகப் படுத்தும். அதைச் சரியான முறையில் நாமும் கையாள வேண்டும் என்பதையே நம்முடைய ஒவ்வொரு நிமிடமும் நமக்கு ஞாபகப்படுத்தும். மிகச் சரியான முறையில் நாம் வாழ்க்கையை எதிர்கொள்வது அவசியமாகிறது. கடைசி நிமிடத் தயாரிப்புகள் சில நேரங்கள் வேண்டுமானால் நமக்கு கை கொடுக்கலாம். பல சமயங்களில் அதுவே நமக்கு மிகப்பெரிய எதிரியாக வந்து நிற்கும். நம்முடைய நிகழ் நிமிடங்களை நாம் மிகச்சிறப்பான முறையிலே அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

    அடுத்தடுத்த நிமிடங்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் நிகழ் காலங்களை சரியான வகையில் நாம் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். பல நேரங்களில் நாம் ரெயில்களையும் பேருந்துகளையும் தவற விட்டதின் மூலமாகவே நமது நல்ல வாய்ப்புகளை இழந்திருப்போம். அதற்கு நம்முடைய சாதாரண கவனக்குறைவே காரணமாக இருந்திருக்கும். மிகப்பெரிய சாதனைகளை சிறு சிறு கவனக்குறைவுகளின் மூலமாகவோ சரியான திட்டமிடல் இல்லாமலோ நடக்காமல் போயிருக்கும்.

    உங்கள் மேல் உள்ள அதீத அன்பாலும் தாங்கள் வாழ்விலே பட்ட கஷ்டங்கள் எக்காரணம் கொண்டும் தங்களின் குழந்தைகள் படக்கூடாது என்பதிலே மிகுந்த அக்கறை உடையவர்கள் பெற்றோர்கள். அவர்களின் உணர்ச்சி வசப்பட்ட சில செயல்பாடுகளை நாம் தொந்தரவு என்று ஒரு போதும் கருதிடக் கூடாது.

    நம்முடைய பெற்றோர்கள் நம்மை சரியான புரிதலோடு வழிகாட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடையவர்கள் யாரும் இங்கே தோற்றுப் போவதில்லை. அவர்களுடைய அன்பை நாம் ஒருபோதும் உதாசீனப் படுத்திட கூடாது. ஒவ்வொரு முறையும் நம்மீது அதீத அக்கறையோடு அவர்கள் சொல்வதை மனதிலே கொண்டு செயல்படும்போதே வெற்றி எளிதிலே கிடைத்து விடும் பொருளாகி விடுகிறது. நம்முடைய உயரங்களும், வளர்ச்சிகளும் நிச்சயமாக அடுத்தவருடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர வேண்டும். நமது முயற்சிகளும் சரியான திட்டமிடல்களும் நம்மை இன்னும் உயர்வான இடத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

    முனைவர்.நா.சங்கரராமன்
    மருத்துவக் காப்பீடு அவசியமானது, அதில் நமக்குத் தேவையான அம்சங்கள் அடங்கிய, நியாயமான பிரீமியம் செலுத்தும் திட்டத்தைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனமானது.
    திடீர் திடீர் என்று தாக்கும் உடல்நல பாதிப்புகள், எகிறும் மருத்துவச் செலவுகள் என்று இன்றைய சூழலில் மருத்துவக் காப்பீடு அத்தியாவசியமாகிவிட்டது.

    உடல்நலக் குறைவு வாட்டும்போது, அதற்கு ஆகும் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்ற கவலையும் சம்பந்தப்பட்டவர்களை அலைக்கழிக்கும். இந்நிலையில், மருத்துவக் காப்பீடு இருந்தால் ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம்.

    தனிநபர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடும்ப மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்று இதில் இரண்டு வகைகள் உண்டு.

    தனிநபர் மருத்துவக் காப்பீட்டில், பாலிசிதாரர் ஒருவர் மட்டுமே மொத்த காப்பீட்டுத் தொகையையும் உபயோகிக்க முடியும். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகக் காப்பீடு எடுப்பதற்குப் பதிலாக, ‘பேமிலி புளோட்டர் பாலிசி’ எனப்படும் ஒரே ஒரு குடும்பக் காப்பீடு எடுக்கலாம்.

    இதன் மூலம் அவரவர் தேவைக்குத் தகுந்தாற்போல் மொத்த காப்பீட்டுத் தொகையைப் பகிர்ந்து பயன்பெறலாம். காப்பீட்டு நிறுவனங்கள் இந்த இருவகைத் திட்டங்களையும் தருவதால் நமக்குத் தேவையான சிறந்த திட்டத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். பெரிய குடும்பமாக இருந்தால், குடும்பக் காப்பீடு திட்டம் நல்லது. எனினும் ஒருவர் கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளானால், தனிநபர் காப்பீடே சிறந்தது.

    மொத்த காப்பீட்டுத்தொகையைத் தேர்வு செய்யும்போது, உங்கள் நகரத்தில் மருத்துவத்துக்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இரண்டாம்கட்ட நகரங்களைக் காட்டிலும் பெருநகரங்களில் அதிக மருத்துவச் செலவுகள் ஏற்படும். நீங்கள் மருத்துவமனையில் சேரும்பட்சத்தில், குறைந்த காப்பீட்டுத்தொகை திட்டங்கள் எந்தப் பலனையும் தராது. ஆனால், அதிகக் காப்பீட்டுத் தொகைக்கு, பிரீமியம் தொகை அதிகம் என்பதால், நன்கு ஆராய்ந்து காப்பீட்டுத் தொகையை முடிவு செய்யவேண்டும்.



    மருத்துவக் காப்பீட்டில் ‘கோ-பே’ மற்றும் காத்திருப்புக் காலத்தையும் கவனிக்க வேண்டும். ‘கோ-பே’ என்பது பாலிசிதாரர் தனது மருத்துவச் செலவில் ஒரு பங்கை ஏற்றுக்கொள்வது. இம்முறை, காப்பீட்டுத் திட்டங்களைப் பொறுத்து கட்டாயமா, கட்டாயமில்லையா எனத் தெரியும். மூத்த குடிமக்களின் காப்பீட்டுத் திட்டங்களுக்கு இது கட்டாயமாகும். இம்முறையில் பிரீமியம் தொகை குறையும் என்பதால், ‘கோ-பே’ திட்டத்தைத் தேர்ந்தெடுத்து மருத்துவச் செலவில் ஒரு பங்கை ஏற்கலாம்.

    1 முதல் 6 ஆண்டுகள் வரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் காத்திருப்பு கால முறையும் உள்ளது. குறிப்பிட்ட வகை அல்லது ஏற்கனவே உள்ள நோய்களுக்கு 1 முதல் 6 ஆண்டுகள் வரை காத்திருப்புக் காலம் தரப்படுகிறது. ஆயினும், குறைந்த காத்திருப்புக் காலம் கொண்ட திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

    ஆயுள், மருத்துவம், வாகனம் என எந்தக் காப்பீடு எடுத்தாலும், உள்ளடக்கம் மற்றும் நீங்கல்களைக் கவனித்தல் அவசியம். இவை காப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்து வேறுபடும். சிலநேரங்களில் உங்களிடம் மருத்துவக் காப்பீடு இருந்தும் சில பிரிவுகள் அதில் உள்ளடங்காவிடில் சிரமப்பட நேரிடும்.

    காப்பீட்டு நிறுவனங்களும் மருத்துவமனைகளும் ஒரு வலையமைப்பில் கூட்டுச் சேர்ந்து காப்பீட்டாளர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் பணமில்லா மருத்துவ வசதி போன்ற சிறப்புச் சேவைகளை வழங்குகின்றன. எனவே, காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யும்முன் குறிப்பிட்ட நிறுவனத்தின் வலையமைப்பை உறுதி செய்யவேண்டும். அதன் மூலம் அவசரகாலங்களில் எளிதாக மருத்துவ வசதி பெறலாம்.

    மருத்துவக் காப்பீடு அவசியமானது, அதில் நமக்குத் தேவையான அம்சங்கள் அடங்கிய, நியாயமான பிரீமியம் செலுத்தும் திட்டத்தைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனமானது.
    காதலர்கள் தங்கள் காதல் வாழ்க்கையை திருமண வாழ்க்கையாக மாற்ற நினைக்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் முதல் பிரச்சனை பெற்றோர்களின் சம்மதத்தைப் பெறுவது.
    காதலர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டாலும், தங்கள் காதல் வாழ்க்கையை திருமண வாழ்க்கையாக மாற்ற நினைக்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் முதல் பிரச்சனை பெற்றோர்களின் சம்மதத்தைப் பெறுவது.

    பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் மகளை திருமணம் செய்யும் ஆண், நல்லவராக இருக்க வேண்டும், நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். அவர்கள் தங்கள் மகளின் காதலன் மீது ஆரம்பத்தில் தவறான எண்ணத்தையே வைத்திருப்பார்கள். இதனால், பெண்ணின் பெற்றோர் உடனான முதல் சந்திப்பு என்பது மிகவும் முக்கியமானது. அதில் அவர்களை எப்படி கவர்வது என்பதை இதில் தெரிந்து கொள்ளுங்கள்.

    நேரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உங்களுக்காக அவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பது அவ்வளவு நல்லதல்ல. அது முதல் பார்வையிலேயே உங்களைப் பற்றிய தவறான புரிதலை உண்டாக்கும்

    உங்கள் டிரசிங் நீங்கள் யார் என்பதை பிரதிபலிக்கும் ஒரு அம்சம். அதனால், முடிந்த வரை நேர்த்தியான உடையில் அவர்களை சந்திக்கவும்.



    உணவு உண்ணும் போது முடிந்த வரையில் மிகவும் பொறுமையாக, நாகரீகமாகவும் உணவு உட்கொள்ளவும்.

    அதிகமாக உணவு உட்கொள்வது உங்களைத் தவறான கண்ணோட்டத்தில் காண செய்யும். குறைந்தளவு மட்டும் உண்பது உங்களை கூச்ச உணர்வு கொண்டவராகக் காட்டும்.

    பெற்றோரின் முன் அவர்களின் மகளை மரியாதையுடன் நடத்துங்கள். அப்போதுதான் அவர்களுக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கை உண்டாகும்.

    உங்கள் காதலியின் பெற்றோருடன் பேசி முடித்தவுடன், அங்கிருந்து சரியான நேரத்தில் கிளம்பவும். அவர்களின் நேரத்தை வீணடிக்கவோ அல்லது அங்கிருந்து அவர்களே கிளம்ப வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு வைத்துக்கொள்ள வேண்டாம்.
    கணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் நன்கு சந்தோஷமாக வாழும் போது சில காரணங்களால் அவர்களின் உறவில் விரிசல் ஏற்படும்.
    கணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் நன்கு சந்தோஷமாக வாழும் போது சில காரணங்களால் அவர்களின் உறவில் விரிசல் ஏற்படும். இதற்கு ஆண்கள் மட்டும் காரணமாக இருப்பது என்பது கிடையாது. இதுபோல மனைவியை ஏமாற்றும் கணவனை கண்டுபிடிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

    * தொடர் பிரச்சனைகளால் இருவருக்கிடையில் ஏற்படும் மனக்கசப்பு, குழப்பம் போன்றவற்றால் நிம்மதியில்லாமல் போகும். இந்நேரங்களில் ஆண்கள் இதைவிட்டு விலக நினைப்பார்கள். மனைவியுடனான் நெருக்கத்தை குறைத்து மற்றவர்கள் மேல் அக்கரை அதிகமாகும்.

    * திருமண வாழ்க்கை சில காலகட்டத்தில் சலிப்பை உண்டாக்கும். இதனால் மற்ற பெண்களின் ஈர்ப்பை அவர்கள் அடைய நினைப்பார்கள்.

    * தாம்பத்யத்தில் முக்கியமானது உடலுறவு சம்பந்தமான பிரச்சனை. மனைவியுடனான அனுபவம் குறைந்து காணப்பட்டால் வேற எண்ணங்கள் தோன்றி ஏமாற்றும் நிலையை தேடுவார்கள்.

    * காலம் செல்ல செல்ல திருமணமான புதிதில் இருந்த பாசம், அன்பு, அக்கரை குறைய ஏற்படும். இதனால் வேறொரு பெண்ணை தேடுவார்கள்

    * குழந்தைகள், வேலைபளு போன்றவற்றால் மனைவிகளை மறந்து இடைவெளியை உண்டாக்குவார்கள். இதன்மூலம் அலுவலகத்திலோ வேறு எங்கேயோ நெருக்கமுள்ள பெண்களின் உறவால் மயங்கிவிடுவார்கள்.

    * கணவர்கள் செய்யும் சிலவற்றை மனைவி பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவாகி, அது தாமதமாகி வேறொருவர் பாராட்டினால் மனைவி மேல் இருக்கும் உறவில் பிளவு ஏற்படும். அதை கொடுக்கும் பெண்ணின் பக்கம் சாய்ந்துவிடுகிறார்கள்.

    * ஆண்கள் மனதில் ஏற்படும் எதிர்பார்ப்பை மனைவிகள் புரிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்யும் போது, அது அவர்களுக்கு இடையே நெருக்கம் குறைந்து, ஏமாற்ற செய்கிறது.
    கணவன் - மனைவி உறவுகளில் கணவன் அல்லது மனைவி தங்கள் துணையை விட்டு வேறு நபரை நாட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
    கணவன் - மனைவி உறவுகளில் கணவன் அல்லது மனைவி தங்கள் துணையை விட்டு வேறு நபரை நாட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அந்த பிரச்சனைகள் என்னவென்று தெரிந்து கொண்டாலே ஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க முடியும். கணவன் மனைவி இருவருக்குள்ளும் எந்த ஒரு விஷயத்திலும் தெளிவான, ஒளிவுமறைவு இல்லாத தொடர்பாடல் இருக்க வேண்டும். தெளிவாக பேச வேண்டும், உண்மையைப் பேச வேண்டும். ஒருவருக்கு ஒருவர் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்

    உங்கள் துணை மீது உள்ள ஆர்வத்தை குறைத்து கொள்ளாதீர்கள். ஆசையை வெளிப்படுத்துதல், கொஞ்சுதல், விளையாட்டாக நடந்துக் கொள்வது என உங்கள் துணை மீதான ஆர்வத்தை வெளிப்படுத்த மறக்க வேண்டாம், மறுக்க வேண்டாம்.

    உடலுறவு என்பது அவசியமானது தான். ஆனால் துணையாக இருந்தாலும் விருப்பதுடன் இணைவது தான் இனிமை. சரியான நேரங்களில் இருவரின் புரிதலுடன் இணைவது தாம்பத்தியம் சிறக்க உதவும். தாம்பத்தியத்தில் இருவருக்குள்ளும் புரிதல் இருப்பது மிகவும் அவசியமானது.

    உங்களின் உணர்வுகளை கணவரிடம் வெளிப்படுத்த தயங்க வேண்டாம். கோபத்தை கொட்டுவது போல, மகிழ்ச்சி, அழுகை, என அனைத்தையும் வெளிப்படையாக காட்டுங்கள். இது தான் உங்கள் இருவர் மத்தியிலான நெருக்கத்தை அதிகப்படுத்தும் கருவி. எந்த ஒரு செயலாக இருப்பினும் அதை தைரியமாக செய்யுங்கள். வேலையாக இருந்தாலும் சரி, இல்லறமாக இருந்தாலும் சரி, தைரியம் தான் உங்களை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும். 
    ×