search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105618"

    “வரவர குடும்பத்தில் எனக்கு மரியாதையே இல்லை” என புலம்பும் ஆண்கள் பெருகிவிட்டார்கள். உண்மையில் ஆண்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா? என்பதை குடும்ப சூழல்களின் ஊடே ஊடுருவிப் பார்க்கலாமா?...
    “வரவர குடும்பத்தில் எனக்கு மரியாதையே இல்லை” என புலம்பும் ஆண்கள் பெருகிவிட்டார்கள். உண்மையில் ஆண்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா? என்பதை குடும்ப சூழல்களின் ஊடே ஊடுருவிப் பார்க்கலாமா?...

    ஆண்கள் எப்போதும் தங்களை யாராவது கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தங்கள் நலனில் அக்கறை கொள்ளும் வகையில் குடும்பத்தினரின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படி நடந்து கொள்ளாவிட்டால் குடும்பத்தில் இருந்துதான் நிராகரிக்கப்பட்டதாக கருதுகிறார்கள். தனிமை உணர்வு அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. இப்படிப்பட்ட மனநிலை எல்லா ஆண்களுக்கும் உண்டு.

    ‘இந்தக் குடும்பத்தின் முக்கிய நிர்வாகி நான்தான். என்னால் தான் குடும்பத்தின் வரவு, செலவு அனைத்தும் நடக்கிறது. இந்த குடும்பத்திற்கே நான் தான் பாதுகாப்பு. நான் தான் தலைவன். அதனால் குடும்ப உறுப்பினர்கள் தனக்கு முக்கியத்துவம் தர வேண்டும்’ என்று ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் இந்த எதிர்பார்ப்பு எல்லை மீறிப் போய்விடக் கூடாது. மற்றவர்கள் வருந்தும்படி அவர்களுடைய செயல்பாடுகள் அமைந்துவிடக் கூடாது. குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விஷயங்களை கையாள வேண்டியிருக்கும். அவரவர் வேலையில் தீவிர கவனம் செலுத்தும்போது மற்றவர்கள் நலனில் கவனம் செலுத்த முடியாத சூழல் நேரலாம். குடும்பத் தலைவனும் இதற்கு விதி விலக்கல்ல. அதை சரிவர புரிந்து கொள்ளாமல் மனதை குழப்பிக்கொள்ளக் கூடாது.

    ‘வர வர என்னை யாரும் இந்த வீட்டில் மதிப்பதே இல்லை. கொஞ்சம் கூட என் மேலே யாருக்கும் அக்கறை கிடையாது. என்னை கவனித்துக் கொள்வதை விட என்ன பெரிய வேலை? நான் ஒருத்தன் இந்தக் குடும்பத்துக்காக மாடாய் உழைக்கிறேன். எனக்காக சின்ன வேலை செய்வது கூட உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. நான் மட்டும் இல்லேன்னா... உங்க நிலைமை என்னவாகும் என்பதை யோசிச்சு பாருங்க’ என்பது போன்ற புலம்பல்கள் பெரும்பாலான குடும்பத் தலைவர்களிடமிருந்து வருவது சகஜம். இது பெண்களை எந்த அளவிற்கு பலவீனப்படுத்துகிறது என்பது அவர்களுக்கே புரிவதில்லை.



    பெரும்பாலான ஆண்கள் வெளி இடங்களில் மற்றவர்களை அதிகாரம் செய்யும் நிலையில் இருப்பார்கள். அதுபோல் வீட்டில் உள்ளவர்கள் தமக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு வகை மனநிலை. இந்த விஷயத்தில் மற்றவர்கள் சவுகரியம், அசவுகரியங்கள் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

    “ஒரு காலத்தில் பெண்கள் வீட்டில் இருந்தார்கள். அப்போது ஆண்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இப்போது பெண்களும் வெளியில் சென்று வேலை செய்கிறார்கள். வீட்டிற்கு வந்தால் அவர்களும் அதே மனநிலையில் தான் இருப்பார்கள். அவா்களை கவனித்துக்கொள்ளவும் வீட்டில் ஆள் தேவை. ஆனால் அவர்கள் தங்களையும் கவனித்துக் கொண்டு மற்றவர்களையும் கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

    அது பற்றி ஆண்கள் சிந்திப்பதே இல்லை. தங்கள் விருப்பப்படி எதுவும் நடக்காவிட்டால் முகத்தை தூக்கிவைத்துக் கொண்டு பெண்களை குறை சொல்ல தொடங்கி விடுவார்கள். இந்த நிலை மாறினால்தான் பெண்களுக்கு கொஞ்சம் மன ஆறுதலாக இருக்கும். ஆண்களும் காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கைப் பயணம் சுகமாக இருக்கும்” என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

    தங்களுக்கு வயது அதிகரித்துக் கொண்டிருப்பது போலவே, மனைவிக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது என்ற விஷயம் ஆண்கள் மனதில் பதிவதில்லை. நிறைய பேர் திருமணமான புதிதில் வேலை வாங்கியது போலவே எப்போதும் வேலை வாங்கிக் கொண்டிருப்பார்கள். அதில் சிறு தவறு நடந்தாலும், ‘தன்மேல் அக்கறை இல்லை’ என்று மனைவியை குறை சொல்வார்கள். ஆண்களின் இந்த மனநிலை பெண்களை குற்ற உணர்வுக்கு ஆளாக்கி, மன அழுத்தத்தில் தள்ளி விடுகிறது. கணவன் வருத்தப்படும்படி தான் ஏதோ பெரிய தவறு செய்து விட்டதைப் போல உணர்கிறார்கள். அவர்களுடைய இயல்பையும், இயலாமையையும் ஆண்கள் புரிந்து கொள்வதில்லை.



    ஆண்கள் அனுசரணையாக நடந்து கொள்ளும் பட்சத்தில்தான் பெண்களின் உடல்நலனும், மனநலனும் பாதுகாக்கப்படும். கவனிப்பு, பாதுகாப்பு, பராமரிப்பு, உபசரிப்பு என்பது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பொதுவானது. தன்னை அக்கறையாக கவனித்துக் கொள்ளும் மனைவியால் ஏதோ ஒரு காரணத்தால் முடியாமல் போகும்போது அதனை பெரிதுபடுத்தக்கூடாது. தான் ஏதோ ஒதுக்கப்பட்டதைப் போல மனச்சோர்வு அடையக்கூடாது. மற்றவர் தன்னை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு தான் ஒன்றும் பலவீனமாகி விடவில்லை என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் குடும்ப நலனுக்காக பெண்கள் செய்யும் தியாகங்கள் புரியும். அதேவேளையில் ஆண்களால் தங்கள் துணை, தன்னை ஒதுக்குவதற்கான குறைந்தபட்சமாக சில காரணத்தைக் கூட சொல்ல முடியாது.

    குடும்பத்தில் அனைவரும் முக்கியம். அதில் ஒருவரை மட்டும் பிரத்யேகமாக கவனிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்போது மற்ற வேலைகளை ஒதுக்க வேண்டி இருக்கும். அதனை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். குடும்ப நலனுக்காக சில பழக்க வழக்கங்களை பெண்கள் மாற்றிக் கொள்வதுபோல, ஆண்களும் சில விஷயங்களில் மாறித்தான் ஆக வேண்டும்.

    வெளியில் பல பணிகளை செய்து முடித்து வீடு திரும்பும்போது வீட்டில் நிம்மதியும், அக்கறையும் தேவை என்பது நியாயமானது தான். ஆனாலும் வீட்டில் உள்ள பெண்களின் நிலைமையையும் உத்தேசித்து நடந்துக் கொள்ள வேண்டும்.

    பெண்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது கூட அதைப்பற்றி கவலைப்படாமல் வழக்கமான உபசாரங்கள் கிடைக்கவில்லையே என்று கோபிக்கும் ஆண்கள், தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அதுதான் மகிழ்ச்சியான குடும்பத்திற்கு மிகவும் அவசியமானது. 
    நீண்டகால முதலீடுகளை மேற்கொள்வதில் நம்மில் பலருக்கும் ஆர்வம். ஆனால் நீண்டகால முதலீடுகளை எவ்வளவு காலம் தொடாமல் இருந்தால் நல்லது என்பது குறித்து நமக்குக் குழப்பமும் இருக்கிறது.
    நீண்டகால முதலீடுகளை மேற்கொள்வதில் நம்மில் பலருக்கும் ஆர்வம். ஆனால் நீண்டகால முதலீடுகளை எவ்வளவு காலம் தொடாமல் இருந்தால் நல்லது என்பது குறித்து நமக்குக் குழப்பமும் இருக்கிறது.

    பொதுவாக முதலீட்டு ஆலோசகர்கள், ஒரு முதலீட்டாளர் தன்னுடைய முதலீட்டுக்கு பின்னர் குறிப்பிட்ட காலத்துக்கு அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதையே ஒரு நல்ல முதலீட்டு உத்தியாக கருதுகிறார்கள்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் பிடலிட்டி முதலீட்டு நிறுவனம் எத்தகைய முதலீட்டாளருக்கு அதிக வருமானம் கிடைக்கிறது எனத் தெரிந்துகொள்ள ஓர் ஆய்வை நடத்தியது.

    தான் செய்த முதலீட்டை பல ஆண்டுகளுக்கு மறந்துவிட்ட அல்லது கண்டுகொள்ளாமல்விட்ட முதலீட்டாளர்களே மிக உயர்ந்த வருமானத்தை நிதிச் சந்தையில் இருந்து பெற்றனர் என அந்த ஆய்வு தெரிவித்தது. அது மட்டுமல்ல, இந்த முதலீட்டாளர்களில் ஒரு பிரிவினர் நீண்ட காலத்துக்கு முன்பு இறந்துவிட்டதாகவும் அந்த ஆய்வு முடிவு கூறியது.

    எனவே, உங்கள் முதலீட்டுப் பிரிவுகளை நிர்வகிப்பதைப் பொறுத்தவரை, ஒரு செயலும் செய்யாமல் இருப்பது மிகவும் லாபகரமான உத்தி ஆகும். இது மிகவும் எளிதான, சிறந்த உபாயம்தான்.

    ஆனால் முதலீட்டில் நீண்டகாலம் என்பதற்கு பலரும் பலவித வரையறையைக் கூறுகிறார்கள்.

    உங்களுடைய வரியை கணக்கிடும் நோக்கத்துக்காக, நீங்கள் பட்டியலிடப்பட்ட பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள் ஆகியவற்றில் செய்த முதலீட்டுக் காலம் ஒரு வருடத்துக்கு அதிகமாக இருந்தால் அது ஒரு நீண்ட கால முதலீடாக கருதப்படும். அதே சமயத்தில் மற்ற முதலீடுகளுக்கு, இந்தக் கால வரம்பு மூன்று ஆண்டுகள் ஆகும்.

    இது இந்திய வரி விதிப்பு சட்டப்படி இருக்கலாம். ஆனால் அதிக வருமானம் தரும் முதலீடு என வரும்பொழுது இந்தக் கால வரம்பு அதற்குப் பொருந்தாது. அப்போது ஒரு வருடம் என்பது ஒரு குறுகிய காலம் ஆகும்.

    பங்குகளில் நீண்ட காலத்திற்கு மட்டுமே ஏன் முதலீடு செய்யப்பட வேண்டும்? இதற்கான பதில், பங்குச்சந்தையில் நிச்சயமாக, ஏற்றத்தாழ்வு இருக்கும். தற்போது, மும்பை பங்குச்சந்தை சென்செக்சின் ஐந்து வருட வருவாய் வருடத்துக்கு தோராயமாக 12.77 சதவீதம் அல்லது ஒட்டுமொத்தமாக 79 சதவீதம் ஆக உள்ளது.

    எது எவ்வாறாயினும், ஐந்து வருட காலத்தை ஒவ்வொரு வருடமாக அலசி ஆராய்ந்தால், இதன் வருவாய் 8.9 முதல் 41.8 சதவீதம் வரை உள்ளது. இது நீண்ட கால முதலீட்டுக்கு ஆதரவாக உள்ள ஒரு வலுவான வாதம் ஆகும்.

    வருமானம் பெரியது, ஆனால் மாறுபாடு அதிகமாக உள்ளது. எந்த குறிப்பிட்ட குறுகிய காலத்தை எடுத்துக்கொண்டாலும் உங்களுக்கு வருவாய் இழப்பு அல்லது நஷ்டம் ஏற்படலாம். இவை அனைத்தும் நீண்டகால அளவில் மட்டுமே ஈடு செய்யப்படும்.

    பங்குச் சந்தையானது சுழற்சிகளில் நகரும் ஒரு சக்கரம் போன்றது. இது ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் ஒரு முழு சுழற்சியை சந்திக்கிறது. இதன் சுழற்சி சக்கரத்தில் ஓர் உச்சபட்ச உயர்வு, அதன் பின் சறுக்கல், அதன் பின்னர் நிலைபெறுதல் போன்றவை ஏற்படுகின்றன. எனவே உங்களுக்கு சரியான அளவு வருவாய் வேண்டும் என்றால் நீங்கள் ஒரு முழு சுழற்சி முழுவதும் முதலீடு செய்ய வேண்டும். அது ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் கண்டிப்பாக நடக்காது.

    பங்கு முதலீட்டில், ‘நீண்ட காலம்’ என்பது ஒரு தெளிவான வார்த்தை ஆகும். எனினும் வல்லுனர்கள் தங்களுடைய விருப்பத்தின்படி காலத்தை வரையறுப்பார்கள். ஆனால், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தை நீண்டகாலம் எனக் கூறலாம்.
    சண்டையில்லாத உறவு சாத்தியம் இல்லை. ஆனால், சண்டை வரும்போது இந்த 6 விஷயங்களை மட்டும் மறக்காமல் பின்பற்றி பாருங்கள் அன்பு நிலைத்திருக்கும்.
    ‘அதிகம் விவாதிக்கிற, சண்டை போட்டுக் கொள்கிற தம்பதிகளே ஒருவருக்கொருவர் அதீத அன்புடன் இருக்கிறார்கள்’ என்கிறார்கள்.

    பிடிக்காத ஒருவர் எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடுவதும், பிடித்த ஒருவர் இப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவதும்தான் தம்பதிகளின் சண்டைக்கு முக்கிய காரணம். கருத்து வேறுபாடு இல்லாத காதலர்களே / தம்பதிகளே கிடையாது. அந்த கருத்து வேறுபாட்டை இருவரும் எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த உறவு தித்திக்கிறது.

    அதனால், சண்டையில்லாத உறவு சாத்தியம் இல்லை. ஆனால், சண்டை வரும்போது இந்த 6 விஷயங்களை மட்டும் மறக்காமல் பின்பற்றுங்கள்.

    1. தன்னுடைய கருத்தை மற்றவரின்மேல் திணிக்கக் கூடாது.
    2. பார்ட்னர் முக்கிய விஷயத்தை விவாதித்துக் கொண்டிருக்கும்போது அதை திசை திருப்பவோ, புறக்கணிக்கவோ கூடாது.
    3. அடுத்தவர் பேசுவதையும் கவனியுங்கள்.

    4. மற்றவர் நலன் சார்ந்ததாகவே உங்கள் முடிவுகள் இருக்கட்டும்.
    5. கடுமையான வார்த்தைகள் கூடவே கூடாது.
    6. விட்டுக் கொடுப்பதன் மூலம் உறவைப் பாதுகாக்க முடியும்.‘ஊடுதல் காமத்திற்கு இன்பம்’ என்று வள்ளுவர் சொன்னது சரிதான்!
    தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆக்கங்கள் இருக்கலாம். ஆனால் அதில் தொலைந்த உறவுகள், பாசங்கள், பந்தங்கள், மனித நேயம், மனிதாபிமானம் நிறையவே.
    தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கின்றன. உண்மை அறிவியலின் உச்சத்தை அடைந்து விட்டான் மனிதன். ஆனால் அத்தனை அறிவுசார் கண்டுபிடிப்புகளும் ஆக்கத்திற்கு ஊக்கம் அளிக்கின்றனவா? அவனது கண்டுபிடிப்புகளின் ஆளுமை ஒரு எல்லையை அடையும் போது சுயநலம் தலைத்தூக்கி, அதனை தான் மட்டும் எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பதில் தானே கவனம் செல்கிறது.

    அந்த அறிவியல் அடுத்த கட்ட முன்னேற்றத்தைக் காணும்போது ஏற்கனவே இன்னொருவன் கண்டுபிடிப்பதை எப்படி அழிக்க முடியும் என்ற அச்சுறுத்தலைத் தானே அது தருகிறது. தொழில்நுட்பம் ஆக்கப்பூர்வமானவற்றுக்கு பயன்படும் விகிதாசாரத்தை ஒப்பிடும் போது அது அழிவு பாதைக்கு இட்டுச் செல்லும் அளவுதான் அதிகம் இருக்கிறது.

    கண்டுபிடிப்புகளின் வழி மாற்றுப் பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது. ரசாயன குண்டுகள், அதனை இட்டுச் செல்லும் வான ஊர்த்திகள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அடுத்தவனை அழிக்கவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வியாபாரம் தான் உலக வர்த்தகத்தில் உச்சத்தில் இருக்கிறது.

    பூமியில் தண்ணீரை இல்லாமல் செய்துவிட்டு செவ்வாய் கிரகத்தில் தண்ணீரைத் தேடும் அவலநிலையை என்ன சொல்வது? உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் தொழிற்கூடங்களை அனுமதித்துவிட்டு புதிய வியாதிகளுக்கு மருந்துகளை கண்டுபிடிப்பது எந்த அறிவுடைமையைச் சார்ந்தது?

    அறுபதுகளில் வாழ்பவர்களை விட இருபதுகளில் வாழும் இன்றைய இளைஞர்கள் அறிவு ஜீவிகள். ஐக்கூ அதிகம் நிறைந்தவர்கள். ஆனால், என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள்? இயற்கையை மறந்த எந்திரத்தனமான ஒரு வாழ்க்கை என்ன சுகத்தை தந்துவிடும்? ரோபோக்கள் போன்று உணர்ச்சியற்ற வாழ்க்கையில் என்ன லாபம் கிடைத்துவிடும்?

    அன்பு, அறம், வீரம், ஞானம், நகைச்சுவை என்று எத்தனையோ பண்புகளோடு, குணாதிசயங்களோடு வாழவேண்டிய நிலைமை மாறி, ‘அழுத்தம்’ என்றே ஒரே அச்சில் சுழன்று வருகிறார்கள். இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். மன உளைச்சலால், மன அழுத்தத்தால் மாய்ந்து போகிறார்கள்.

    இன்றைய இளைய தலைமுறையினர் அத்தை, மாமன், மச்சான், அண்ணன், தம்பி என்ற பாசப் பிணைப்பு கொண்ட உறவுகளையே யார் என்று அறியாமல் வாழ்கிறார்கள். அலைபேசி, வலைத்தளம், முகநூல்கள் என்று ஏதோ ஒரு வேற்று உலகில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார்கள்.

    உறவுகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை; யாரையும் மதிப்பதும் இல்லை; அவர்களை சுற்றி எது நடந்து கொண்டிருந்தாலும் அவர்கள் உலகம் கைபேசியில் தான் சுழல்கிறது. நெருங்கிய உறவுகள் இறந்தாலும் கூட அவர்களுக்கு அழத் தெரியவில்லை. உணர்வுகள் மரத்துப்போய்விட்டன.

    அத்தை மகள், மாமன் மகள் என்ற அனிச்சப் பூக்களின் அருமை தெரியாமல் எந்த நாடோ, எந்த ஊரோ, எங்கிருந்தோ வந்த யாரோ ஒருவரை மனைவியாக்கி கொண்டு மனமாச்சரியங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அல்லது பிரிந்து மனஅழுத்ததில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

    தான் நிர்ணயித்த இலக்கை அடைந்து திரும்பி பார்க்கும் போது ஒன்றுமே இல்லாத வெற்றிடம் தான் தெரிகிறது. என்ன வாழ்க்கை? எந்த நோக்கத்திற்காக வாழ்ந்தோம்? விடையே தெரியவில்லை. நம் அறிவை மனிதநேயத்திற்காக, மனிதகுல மேம்பாட்டிற்காக எப்படி பயன்படுத்தினோம்? எங்கோ வேற்றுக் கிரகத்தில் உள்ளவர்களை இங்கு ஆராய்கிறோம். தான் வாழ்ந்த வாழ்க்கையைச் சிந்திக்க தவறிவிட்டோம்.

    அன்றாடம் வறுமைக் கோட்டிற்கு கீழே சென்றுகொண்டிருக்கும் உறவுகளைப் பற்றி சிந்தித்தோமா? பரம்பரை பரம்பரையாய் ஆல மரங்களாய் வாழ்ந்த உறவுகள் ஒற்றை மரமாய் விரைவில் விழப் போவதை கவனத்தில் கொண்டோமா? சூனியம் ஒன்று சூழவிருப்பதை, சூழ்நிலைகளின் தாக்கம் நம்மை பாதிக்கபோவதை உணர்ந்திருக்கிறோமா?

    தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆக்கங்கள் இருக்கலாம். ஆனால் அதில் தொலைந்த உறவுகள், பாசங்கள், பந்தங்கள், மனித நேயம், மனிதாபிமானம் நிறையவே. இந்த கலாசார சீரமைப்புக்கு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம். உங்கள் வாரிசுகளின் எதிர்காலம் அதில் தான் அடங்கி இருக்கிறது.

    எழுத்தாளர் மு.முகமது யூசுப்
    நம் வாழ்வின் முக்கிய பொருளாதார இலக்குகளை அடைவதற்காகச் செய்த முதலீடுகளைத் திரும்பப்பெற்றால், நம்முடைய பொருளாதாரத் திட்டத்தையே சீர்குலைத்துவிடும்.
    நீண்ட கால முதலீடுகளை நமது திடீர்ப் பணத்தேவைக்குப் பயன்படுத்த முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்.

    நம் வாழ்வின் முக்கிய பொருளாதார இலக்குகளை அடைவதற்காகச் செய்த முதலீடுகளைத் திரும்பப்பெற்றால், நம்முடைய பொருளாதாரத் திட்டத்தையே சீர்குலைத்துவிடும்.

    ஆனால் நீண்ட கால முதலீட்டில் உள்ள சில அம்சங்களால் நமது குறுகிய காலத் தேவைகளை எளிதாகப் பூர்த்திச் செய்ய முடியும். அதுகுறித்துப் பார்க்கலாம்...

    பொது வருங்கால வைப்புநிதி: ‘பப்ளிக் பிராவிடண்ட் பண்ட்’ எனப்படும் பொது வருங்கால வைப்புநிதியில் முதிர்ச்சிக்கு முன்பே பணத்தைத் திரும்பப் பெற முடியும். பொது வருங்கால வைப்புநிதிக்கான கால அளவு 15 ஆண்டுகள். ஏழாவது நிதியாண்டில் பகுதி பணத்தைத் திரும்பப்பெறுவது அனுமதிக்கப்படுகிறது. நான்காவது ஆண்டின் இறுதியில் இருக்கும் மொத்த பணத்தில் 50 சதவீதம் அல்லது பணம் எடுப்பதற்கு முந்தைய ஆண்டில் உள்ள மொத்த பணத்தில் 50 சதவீதம் இவ்விரண்டில் எது குறைவோ அந்த அளவு பணத்தை எடுக்கலாம்.

    பொது வருங்கால வைப்புநிதியில் மூன்றாவது மற்றும் ஆறாவது நிதியாண்டுக்கு மத்தியில் கடன் பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. கடன் கேட்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள இருப்பில் 25 சதவீதப் பணத்தை அதிகபட்சக் கடனாகப் பெறலாம்.

    பொது வருங்கால வைப்பு நிதியின் முதிர்ச்சி காலத்துக்கு முன்பு கணக்கை முடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஐந்து ஆண்டுகள் கழிந்தநிலையில் குழந்தைகளின் கல்வி அல்லது பெற்றோர், குழந்தைகள் அல்லது கணக்குதாரரின் உயிர் காக்கும் மருத்துவச் செலவு போன்றவற்றிற்காக முன்கூட்டியே கணக்கை முடிக்கலாம். ஆனால் வட்டி விகிதம் 1 சதவீதம் குறைவாக இருக்கும்.

    தொழிலாளர் வருங்கால வைப்புநிதி: எம்பிளாயீஸ் பிராவிடண்ட் பண்ட் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில், பதிவுசெய்யப்பட்ட சங்கங்களில் இருந்து வீடு வாங்கவோ அல்லது வீடு கட்டவோ, பகுதி பணத்தை மத்தியில் திரும்ப எடுக்கவோ பயனர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சந்தாதாரர்களாக இருத்தல் அவசியம், குறிப்பிட்ட பதிவு செய்யப்பட்ட வீட்டுவசதி சங்கத்தில் குறைந்தபட்சம் 10 உறுப்பினர்கள் இருப்பது அவசியம். அதிகபட்சம் 90 சதவீதமும், குறைந்தபட்சம் ரூ. 20 ஆயிரமும் அனுமதிக்கப்படும்.

    மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: ‘சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம்’ எனப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கால அளவு ஐந்தாண்டுகள் என்றபோதும், முதல் அல்லது இரண்டாம் ஆண்டின் இறுதியில் முன்கூட்டியே கணக்கை முடிக்க அனுமதிக்கப்படுகிறது. ஓராண்டுக்குப் பிறகு வைப்புநிதியில் 1.5 சதவீதமும், இரண்டாண்டுகளுக்குப் பிறகு வைப்புநிதியில் 1 சதவீதமும் அபராதமாக விதிக்கப்படும்.

    நிரந்தர வைப்புநிதி (பிக்சட் டெபாசிட்): நிரந்தர மற்றும் தொடர் வைப்பு நிதித் திட்டங்கள் மிகவும் எளிதாகப் பணமாக மாற்றக்கூடியவை, முன்கூட்டியே திரும்பப்பெறக் கூடியவை. வைப்புநிதி காலத்தைப் பொறுத்து 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை அபராதமாக விதிக்கப்படும்.

    எஸ்.ஐ.பி. பரஸ்பர நிதி: நாம் பண நெருக்கடியைச் சந்திக்கும்போது எஸ்.ஐ.பி. பரஸ்பர நிதி நிறுத்தத்தை மேற்கொள்ளலாம். இதைத் தற்காலிமாக நிறுத்துவதால் நமது நீண்டகாலப் பொருளாதாரத் திட்டங்கள் பாதிக்கப்படாது. கால அளவு: 1 முதல் 3 மாதங்கள். இந்தக் காலத்திற்குப் பிறகு மீண்டும் திட்டம் தானாகச் செயல்பாட்டுக்கு வரும். இதை ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

    மானிய காப்பீட்டுத் திட்டம்: ‘எண்டோமென்ட் பாலிசி’ எனப்படும் மானிய காப்பீட்டுத் திட்டம் அல்லது இதர காப்பீட்டுத் திட்டங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பிரீமியம் செலுத்தியிருந்தால், அதன் பேரில் கடன் பெற முடியும். இந்தக் கடனை காப்பீட்டு நிறுவனம் அல்லது வங்கியில் அந்த ஆவணங்களைச் சமர்ப்பித்துப் பெறலாம். இத்திட்டத்தில் மொத்த மதிப்பில் 80 முதல் 90 சதவீதம் கடனாகப் பெறலாம். ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி செலுத்த வேண்டும். 
    பெண்கள் பலர் இப்போது ஆண்களைப் போல தாமதமாக திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். பெண்கள் ஏன் 35 வயது வரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    இதில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இருக்கின்றனர். பெண்கள் பலர் இப்போது ஆண்களைப் போல தாமதமாக திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். இந்த காலத்துப் பெண்கள் படிப்பு மற்றும் வேலைக்குத் தான் முன்னுரிமை கொடுக்கின்றனர். அதில் வெற்றி பெற்றவர்கள் ஒருவரின் துணையை ஏற்க மறுத்து திருமண ஆசையை விடுத்து தனித்து வாழவே விரும்புகின்றனர்.

    பெரும்பாலும், 35-40 வயது வரை உள்ள திருமணமாகாத பெண்கள் அனைவருமே நகர்புறத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். நகர்புற வாழ்க்கை முறை ஒரு மனிதரின் வாழ்க்கை முற்றிலும் மாற்றி தனித்து வாழும் விருப்பத்தை உண்டாக்குகிறது என்று ஒரு ஆய்வு முடிவு கூறுகின்றது. வாருங்கள் இப்போது 35 வரை அப்படி திருமணமாகாமல் இருப்பதால் நேரக் கூடிய சில அதிர்ச்சி தரும் உண்மைகளைப் பற்றி பார்ப்போம்...

    எல்லா உறவுகளுக்கும் ஒரு வரம்பு என்பது உள்ளது. அப்படி எந்த வரம்பும் இல்லாமல் தன்னிச்சையாக தங்கள் விருப்பத்துடன் 35 வயது வரை வாழ்ந்துவிட்டு அதன் பின் அனைவருக்கும் கட்டுப்பட்டு திருமணம் செய்து ஒரு வரம்புடன் வாழ வேண்டும் என்றால் அது கஷ்டமாகத் தான் இருக்கும். எனவே, இது திருமணம் செய்துக் கொள்ளும் ஆசையை மறுத்து தனித்து வாழ மனமானது விரும்பக் கூடும்.

    கல்யாணம் செய்து கொள்ளும் போது முதலில் சந்தோஷமாகத் தான் இருக்கும். ஆனால் போக போக மன அழுத்தம், வீட்டு பொறுப்புகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இதுவே நீங்கள் தனியாக இருந்தால் இவை எதுவும் இருக்காது. அதுவும் 35 வயது வரை தனியாக சந்தோஷமாக இருந்துவிட்டு இவை அனைத்தையும் யோசித்து பார்க்கும் போது செய்யாமல் இருப்பதே மேல் என்று தான் தோன்றும்.



    தனியாக இருந்தால் வாழ்க்கையை நீங்கள் நினைக்கும் படி மாற்றிக் கொள்ள முடியும். நினைத்த இடத்திற்குப் போகலாம், நினைத்த நேரத்தில் வேலை விடலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம். இவை யாரையும் எந்த வகையிலும் பாதிக்காது.

    நீங்கள் தனியாக இருந்தால் உங்கள் வேலையில் முழுவதுமாக கவனம் செலுத்த முடியும். தொழில் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்த முடியும்.

    நீங்கள் தனியாகவே 35 வயது வரை இருந்து பழகிவிட்டால் பின்னர் திருமணமான பிறகு உங்களின் வாழ்க்கை துணையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை கண்டிப்பாக விரும்பமாட்டீர்கள் அல்லவா? இது ஒரு முக்கிய காரணம் தனித்து வாழ்வதில்.

    சந்தோஷமாக 35 வயது வரை தனியாக வாழ்ந்துவிட்டால், உங்களால் மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கை வாழப்பிடிக்காது பொதுவாக. அதுவும் நீங்கள் பார்த்த கல்யாணமான தம்பதிகள் தினசரி சண்டை போடுபவர்களாகவும், சந்தோஷமான வாழ்க்கை வாழாமலும், ஏமாற்றங்களை சந்தித்தவர்களாகவும் இருப்பதை பார்த்திருந்தால் அது இன்னமும் கடினமாகிவிடும். பின்னர் திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு.

    தனித்து வாழ்வதின் சிறப்பம்சம் என்பதே உங்கள் மனதிற்கு பிடித்தவருடன் நினைத்த நேரத்தில் இருக்கலாம். இது தான் நகர்புற பெண்கள் மிக முக்கிய காரணமாக இருக்கிறது தனித்து வாழ்வதற்கு.
    ஆந்திராவில் இறந்த பெண்ணுக்கு கடவுள் உயிர் கொடுப்பார் என்று நம்பி அவரது குடும்பத்தினர் மூன்று நாட்களாக சடலத்தை புதைக்காமல் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்கரெட்டி குடம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதுபற்றி குடியிருப்புவாசிகள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து பார்த்தபோது, அந்த வீட்டில் வசித்து வந்த அருணா ஜோதி (வயது 41) என்ற பெண் இறந்து அழுகிய நிலையில் சடலம் கிடந்தது தெரியவந்தது. இது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது.

    ஆனால், அருணா ஜோதி இறந்ததை ஒரு பொருட்டாக கருதாமல் அவரது தாயும், தம்பியும் வழக்கமான பணிகளை செய்துகொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம், அருணா ஜோதி இறந்துவிட்டதாக கூறியும்  எந்த ரியாக்சனும் இல்லை. அருணா ஜோதியின் உயிரை கடவுள்தான் எடுத்தார், கடவுள் மறுபடியும் உயிர் கொடுப்பார் என்று இருவரும் கூலாக கூறியுள்ளனர்.

    பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், அருணா ஜோதி இறந்ததால், அவரது குடும்பத்தினரின் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.

    வாடகை கூட கொடுக்க முடியாத அளவுக்கு இவர்களின் குடும்பம் வறுமையில் வாடியதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பசியால் அருணா ஜோதி இறந்தாரா?அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. #AndhraSuperstition #FamilyKeepsBody
    முதுமையினை மருத்துவத்தால் வெல்ல முடியாது. இது மனித அன்பினால் மட்டுமே முடியும். இதனை நாமும் உணர்ந்து முதியோர்களின் வாழ்வினை ஆரோக்கியமாக்குவோம்.
    மனிதனின் சில முறையற்ற வாழ்வு முறையினை காலம் அவனுக்கு உணர்த்தி திருத்தி விடும். ஆனால் அந்த காலம் சற்று நீண்டு இருக்கலாம். அதனால் பல இழப்புகளுக்குப் பிறகே நல்ல பலன்கள் கிடைக்கலாம். இது இயற்கையின் சூழல். இதன் போக்கினை மாற்றுவது கடினம். ஆனால் முடிவில் நல்லதே ஏற்படும். அவ்வகையில் இன்று ஆச்சர்யப்படும் படியான ஒரு மாற்றம் நிகழ்ந்து வருகின்றது.

    வெளிநாடுகளில் காலம் காலமாக ஒரு பழக்கம் இருந்து வருகின்றது. வயதானவர்கள், முதியோர்கள் ஆகியோர் முதியோர் இல்லங்களிலேயே இருப்பார்கள். அங்கு முதியோர் இல்லங்களும், அரசாங்கமும் அந்த முதியவர்களை நன்கு கவனித்துக் கொள்ளும். அவர்களின் உடல்நலம், மனநலம் இவற்றுக்கு எந்த குறையும் இல்லாத கவனிப்பு இருக்கும்.

    இவர்களின் பிள்ளைகளும், உறவினர்களும் முக்கிய பண்டிகை நாட்களிலும், பிறந்த நாட்களின் பொழுதும் சென்று இவர்களை பார்த்து வருவார்கள். வெளி நாடுகளில் வீடுகளுக்கு வேலை செய்ய உதவி ஆட்கள் கிடையாது. உதவி ஆட்கள் வந்தாலும் செலவு மிக அதிகம். அனைத்து வேலைகளையும் வீட்டு மனிதர்களே செய்துகொள்ள வேண்டும்.

    அனைவரும் வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில் முதியோர்களை கவனித்துக் கொள்வது கடினம் என்ற காரணமே அநேக முதியோர் இல்லங்கள் தோன்றின. அது சாதாரண நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. அதனைப் பார்த்தே நம் நாட்டிலும் முதியோர் இல்லங்கள் தோன்றின. இங்கு பொருளாதார பிரச்சினை அதிகம்.

    எனவே கூடுதல் செலவு செய்தாலே நல்ல முதியோர் இல்லங்கள் கிடைக்கும் நிலை உள்ளது. இவ்விடத்தில் நான் பெற்றோரை பிள்ளைகள் கவனிக்கவில்லை என்ற பேச்சினைப் பற்றி கூறவரவில்லை. நான் கூறவருவதெல்லாம் வெளிநாடுகளில் எத்தனை வசதிகள் இருந்தாலும் அநேக முதியவர்கள் தன் குடும்பத்துடனே வாழ முற்படுகின்றனர். குடும்பம் இல்லாதவர்கள் தன் போன்று இருக்கும் பிறருடன் சேர்ந்து ஒரு குடும்பமாக வாழும் முயற்சியினை மேற்கொள்கின்றனர் என்பது பற்றிதான்.



    * பல வசதிகள் இருந்தாலும் உறவு, நட்பு இன்றி தனித்து இருப்பதே பல நோய்கள் பாதிப்பிற்கு காரணமாகி விடுகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. தனிமை இவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகின்றதாம்.

    * உடன், உறவுகள் இருக்கும் பொழுது ஆரோக்கியமான உணவினை நன்கு சமைத்து உண்ண முடிகின்றதாம். தனித்து இருப்பவர்களுக்கு இது இயலுவதில்லை.

    * உடன் இருப்பவர்களால் பல உதவிகளை பெற முடிகின்றது. உடைமாற்ற, மாத்திரை எடுத்துக் கொள்வது போன்றவை உடன். உறவுகள் இருக்கும் பொழுதே முடிகின்றதாம்.

    * வேலைச் சுமை குறைவதால் எளிதில் சோர்வடையாமல் இருக்கச் செய்கின்றதாம்.

    * வெளியில் துணையோடு சென்று வர முடிகின்றது.

    * அவசரத்திற்கு அருகில் நம்பகமானவர்கள் இருப்பதால் அச்சமின்றி இருக்க முடிகின்றது.

    மருத்துவ முன்னேற்றம் இன்று மனிதனுக்கு நீண்ட ஆயுளை கொடுத்துள்ளது. ஆனால் முதுமையினை மருத்துவத்தால் வெல்ல முடியாது. இது மனித அன்பினால் மட்டுமே முடியும். இதனை வெளிநாட்டினர் நன்கு உணர ஆரம்பித்து விட்டனர். இதனை நாமும் உணர்ந்து முதியோர்களின் வாழ்வினை ஆரோக்கியமாக்குவோம்.
    ஒரு சில விஷயங்களை பிளாட் வாங்கும்போது கவனிக்க வேண்டியதாக உள்ளது. அவற்றில் முக்கியமான 5 விஷயங்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாக, பிளாட் என்ற அடுக்குமாடிக் குடியிருப்புக்கான பட்ஜெட், அது அமைந்துள்ள இடம், அளிக்கப்பட்டுள்ள வசதிகளான குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா, விஷேச நிகழ்ச்சிகளை நடத்தும் ஹால், பாதுகாப்பு வசதிகள், தோட்டம், லிப்ட் வசதி மற்றும் குடிநீர் ஆகிய நிலைகளை பொறுத்து அமைந்திருக்கும். பட்ஜெட் தவிரவும், ஒரு சில விஷயங்களை பிளாட் வாங்கும்போது கவனிக்க வேண்டியதாக உள்ளது. அவற்றில் முக்கியமான 5 விஷயங்கள் பற்றி ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் குறிப்பிட்டதாவது ;

    1. வீடுகளை சுற்றிலும் மற்றும் முன்பக்கம் ஆகிய இடங்களில் சரியான அளவில் காலி இடம் இருக்கவேண்டும்.

    2. கட்டுமான திட்டத்தில் உள்ள அனைத்து பிளாட்-களுக்கும் UDS என்ற பிரிக்கப்படாத மனையின் பங்கு சரியான முறையில் பிரித்து தரப்பட்டிருக்கவேண்டும்.

    3. இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த தக்க பார்க்கிங் வசதி இருப்பதோடு, கார்களை பார்க்கிங் செய்ய சுமாராக 300 சதுர அடி அளவுள்ள இடமாவது இருக்க வேண்டும்.

    4. பிளாட்டுகளின் மாதாந்திர பராமரிப்பு கட்டணம் வழக்கமாக அளவுக்குள் இருக்கவேண்டும்.

    5. பெரும் மழை, அதிகப்படியான வெள்ளம் ஆகியவற்றால் பிளாட் மற்றும் அதற்கு செல்லும் பாதைகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லாமல் இருப்பது அவசியம். 
    போனஸ், அரியர், ஊக்கத்தொகை போன்ற கூடுதல் வருவாய் வரும்போது, அதை செலவழித்துக் கொண்டாடித் தீர்த்துவிடுவது பலரின் வழக்கம். ஆனால் கூடுதல் வருவாயை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பார்ப்போம்...
    போனஸ், அரியர், ஊக்கத்தொகை போன்ற கூடுதல் வருவாய் வரும்போது, அதை செலவழித்துக் கொண்டாடித் தீர்த்துவிடுவது பலரின் வழக்கம். ஆனால் அப்படி இருக்காமல், கொஞ்சம் புத்திசாலித்தனத்தோடு செயல்பட்டால், நமது பொருளாதார அஸ்திவாரம் பலம் பெறும். கூடுதல் வருவாயை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பார்ப்போம்...

    அவசரகால நிதி:

    எந்த ஒரு நிதித் திட்டமிடலிலும் அடிப்படையான விஷயம், ஓர் அவசரகால நிதியை உருவாக்குவது. ஆனால் நம்மில் பலர் இதுகுறித்து அலட்டிக்கொள்வதில்லை. அதாவது, அவசர கால நிதியின் அவசியத்தை உணர்ந்து அப்படி ஒரு தொகையைப் பாதுகாப்பதில்லை அல்லது அது போதுமானதாக இருப்பதில்லை. அதனால்தான் நாம் திடீர் செலவுகள் ஏற்படும்போது தடுமாறிப் போய்கிறோம்.

    அந்த மாதிரி சமயங்களில் நாம், நண்பர்கள், உறவினர்களிடம் கடன் பெற்றுச் சமாளிக்க முயல்கிறோம் அல்லது கடன் அட்டையைப் பயன்படுத்த விழைகிறோம். ஆனால், கூடுதல் வருவாயைப் பயன்படுத்தி ஓர் அவசரகால நிதியை உருவாக்கிக்கொண்டோம் என்றால், அவசரச் செலவுகள், எதிர்பாராத செலவுகளைச் சமாளித்துவிடலாம். கிடைத்த கூடுதல் தொகையை சேமிப்புக் கணக்கில் போட்டுவைப்பதைவிட, ‘லிக்விட் பண்ட்’களில் முதலீடு செய்யலாம். அவை, சேமிப்புக் கணக்கை விட அதிக ‘ரிட்டர்ன்’ அளிக்கும். தேவைப்படும்போது அவற்றில் 24 மணி நேரத்துக்குள் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.

    கடன்களை திரும்பச் செலுத்துங்கள்:

    கூடுதல் தொகை கைக்கு வரும்போது, கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். குறிப்பாக, தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்றவற்றை முடிப்பதற்குப் பார்க்க வேண்டும். காரணம், அவற்றுக்கான வட்டி அதிகம். இதுபோன்ற கடன்களை வைத்துக்கொண்டு முதலீடு செய்வதில் அர்த்தமில்லை.

    முதலீட்டில் இருந்து பெறும் வருவாயை விட, மேற்கண்ட கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகம் என்பதை உணருங்கள். நீங்கள் வீட்டுக்கடன் செலுத்திக் கொண்டிருந்தால், கூடுதல் தொகை கிட்டும்போது அதில் ஒரு கணிசமான தொகையை முன்கூட்டிச் செலுத்தலாம். தற்போது பெரும்பாலான வங்கிகள் இப்படி முன்கூட்டி பணம் செலுத்துவதற்கு அபராதம் விதிப்பதில்லை. இவ்வாறு முன்கூட்டி கணிசமான தொகை செலுத்துவதால், நாம் கட்டும் வட்டி விகிதம் குறையும்.



    காப்பீட்டு அளவை அதிகரிக்கலாம்:

    நாம் நமக்கு போதுமான அளவு காப்பீடு பெற்றிருக்கிறோமா என்று அவ்வப்போது ஆராய்வதும், அந்த அளவைக் கூட்டிக்கொள்வதும் முக்கியம். போனஸ் போன்ற கூடுதல் தொகைகள் வரும்போது, நமது ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டு அளவுகளை அதிகரித்துக்கொள்ளலாம். மருத்துவச் செலவுகள் கூடிக்கொண்டே செல்லும் தற்போதைய சூழலில், கூடுதல் பணம் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி நமது மருத்துவக் காப்பீட்டு அளவை அதிகரித்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.

    திறன்களை வளர்க்கலாம்:

    இன்று எல்லோருமே கூடுதல் வருவாயை விரும்புகின்றனர். ஏதாவது பகுதிநேர வேலை பார்த்துக்கூட குடும்பத்தின் வருவாயைக் கூட்ட எண்ணுகின்றனர். இது நல்ல விஷயம்தான். ஆனால், கூடுதல் வருவாய் வேண்டும் என்றால், கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, கணினி அறிவு. கணினி சார்ந்த, கூடுதல் வேலைவாய்ப்புக்கு உதவும் ஏதாவது கோர்ஸ் போன்றவற்றைப் பயில நமக்குக் கிடைத்த உபரித் தொகையை உபயோகிக்கலாம்.

    அடிப்படைத் தொகைக்கு உபயோகிக்கலாம்:

    நாம் வீட்டுக்கடன், வாகனக் கடன் போன்றவற்றைப் பெற எண்ணியிருந்தால், அதற்கு, டவுன் பேமண்ட் எனப்படும் அடிப் படைத் தொகையைச் செலுத்த வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். நமக்கு கூடுதல் வருவாய் வரும்போது, வழக்க மான அடிப்படைத் தொகையைவிட கூடுதலாகச் செலுத்தப் பயன்படுத்தலாம். அதன் மூலம் நமக்கு, ஈ.எம்.ஐ. எனப்படும் மாதாந்திர தவணைத் தொகையின் அளவு குறையும்.

    முதலீடு செய்யலாம்:

    நீங்கள் உங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் உங்களின் ஓய்வுகாலத்தை மனதில் வைத்து முதலீடு மேற்கொண்டு வரக்கூடும். கையில் கணிசமாகப் பணம் கிடைக்கும்போது, அதை உங்கள் முதலீட்டை வலுப்படுத்த உபயோகிக்கலாம். நீங்கள் உங்களின் நீண்டகால இலக்குகளை எட்டுவதை நோக்கி ‘ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட்’களில் ஒரு கணிசமான தொகையை இடும் அதேவேளையில், ‘லிக்விட் பண்ட்’களிலும் முதலீடு செய்யலாம்.

    நாம் எப்போதும் நமது செலவு விருப்பங்களுக்கும், நமது பொருளாதார பலத்தை வலுவாக்கும் விஷயங்களுக்கும் இடையே ஒரு சமநிலையைப் பராமரிப்பது முக்கியம்.

    இன்று நம்மை மகிழ்விக்கும் செலவுகளைவிட, எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு மேற்கொள்ளும் முயற்சிகளே நன்மை பயக்கும் என்பது நிதி ஆலோசகர்களின் கருத்து. 
    ஆனால் கிரெடிட் கார்டுக்காக என்னென்ன கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன என்று தெரிந்துகொண்டால் அதைப் பெறலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யலாம்.
    கிரெடிட் கார்டு எனப்படும் ‘கடன் அட்டை’, பலரை வசீகரிக்கும், பலரை பயமுறுத்தும் அட்டையாக உள்ளது.

    ஆனால் கிரெடிட் கார்டுக்காக என்னென்ன கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன என்று தெரிந்துகொண்டால் அதைப் பெறலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யலாம்.

    அந்தக் கட்டணங்கள் பற்றி...

    ஆண்டுக் கட்டணம்: கிரெடிட் கார்டு வழங்குவதற்கு பொதுவாக வங்கிகளும் நிதி அமைப்புகளும் எவ்விதக் கட்டணமும் வசூலிப்பதில்லை. ஆனால் சில வங்கிகள் முதலாண்டில் மட்டும் கட்டணங்களுக்கு விலக்கு அளித்துவிட்டு இரண்டாம் ஆண்டிலிருந்து கட்டணங்களை விதிக்கின்றன.

    வட்டி மற்றும் நிதிசார் கட்டணங்கள்: பொதுவாக வங்கிகள், கிரெடிட் கார்டை பயன்படுத்தி நாம் செய்யும் செலவுகளுக்கு 50 நாட்கள் வரை வட்டி வசூலிப்பதில்லை. ஆனால் 50 நாட்களுக்குள் செலவுத் தொகையை வங்கிக்கணக்கில் திரும்பச் செலுத்தவில்லை என்றால் கடனுக்கான வட்டி மற்றும் நிதிசார் கட்டணங்கள் விதிக்கப்படும்.

    பணம் எடுப்பதற்கான கட்டணங்கள்: கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏ.டி .எம்.மில் பணம் எடுக்கலாம். ஆனால், இந்த வசதியை அவசரத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தால் உடனடியாக அத்தொகைக்கு வட்டி விதிக்கப்படும்.

    அதிகப்படியான செலவுக் கட்டணம்: உங்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட தொகைக்கும் மேல் கடன் பரிவர்த்தனை செய்தாலோ அல்லது பணம் எடுத்தாலோ அபராத கட்டணம் விதிக்கப்படும்.

    கால தாமதக் கட்டணம்: கிரெடிட் கார்டு மீதான கால தாமதக்கட்டணம் நமக்குப் பலவகைகளில் பாதிப்பை ஏற் படுத்தும். இதனால் நம் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். மேலும், அபராதக் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

    தொகை பரிமாற்றத்துக்கான கட்டணம்: ஒரு கிரெடிட் கார்டு மீதான கடன் தொகை மற்றும் பாக்கித் தொகையை இன்னொரு கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தும் பொழுது அதற்கென தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும். 
    விட்டுக்கொடுப்பவர் என்றும் கெட்டுப்போனதில்லை. வாழ்க்கை துணையிடம் வெற்றி தோல்வியை எதிர்பார்க்கலாமா? அரவணைத்து, அனுசரித்து செல்வதில் தானே தலைமுறைக்கும், இன்பம் கூடும்.
    ஆணும் பெண்ணும் இணைந்து இல்லறத்தில் ஈடுபடும்போது, வாழக்கை அர்த்தம் பெறுகிறது. இன்பம் கூடுகிறது. ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது என்பது மனிதருக்கு மட்டுமல்ல பெரும்பான்மையான விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் உள்ள சிறப்பியல்பு. இணைவது, வெறும் இனப்பெருக்கத்திற்கு மட்டும் என்றில்லாது, ஒருவருக்கு ஒருவர் அன்பும் பாசமும் வெளிப்படுத்திக் கொள்ளுதல், இணைந்து இரை தேடுதல், கூடுக்கட்டி குடும்பமாய் வாழுதல், பாதுகாப்பு, இன்னொருவர் பிரிவுக்கு வாடுதல் என இணைந்து வாழ்வது பல்வேறு கூறுகளைக் கொண்டது.

    சங்கப் பாடல் ஒன்றில், குட்டை ஒன்றில் ஆண், பெண் மான் தண்ணீர் அருந்துவதுப் போல ஒருக் காட்சி. தண்ணீரின் அளவு மிகக் குறைவு, இரண்டில் ஒரு மானுக்கு மட்டுமே போதுமானது. ஆண் மான் அருந்தட்டும் என்று பெண்மான் தண்ணீர் குடிப்பதுப் போல பாவனை செய்கிறது. தனது இணை அருந்தட்டும் என்று ஆண் மானும் பாவனை செய்கிறது. இரண்டு மான்களும் தண்ணீர் குடிக்காமல் தாகத்தோடு நின்றாலும், ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள பற்றுதல் அங்கு புலப்படுத்தப்படுகிறது. இப்படியும் நடந்திருக்குமா என்று வியப்பை ஏற்படுத்திய பாடல்.

    ஆனால் சமீபத்தில் கேள்விப்பட்ட நிகழ்வு சங்கக் கால சம்பவம் உண்மையாகவே இருக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. சென்னையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீசிய கடும் புயலில் பல மரங்கள் வீழ்ந்தன. எனது நண்பர் வசிக்கும் பகுதியில் மரமொன்றில் ஆண், பெண் என இரண்டு நாரைகள் வசித்து வந்தன. மரம் விழுந்ததில் ஜோடியில் ஒரு நாரை இறந்துவிட்டது. இன்னொன்று அதன் பிரிவைத் தாங்காது அதே கிளையில் நகராது இரைத் தேடாது சோகமாய் வீற்றிருந்து சில நாட்களில் தன் உயிரை மாய்த்துக் கொண்டது.

    விலங்குகளும் பறவைகளும் தத்தம் இணையிடம் அன்பும் பரிவும் காட்டும்போது ஆறறிவுக் கொண்ட மனிதன் வெளிப்படுத்துவது இன்னும் கூடுதலானதாகத் தானே இருக்கவேண்டும். அதைத்தானே ஒவ்வொரு மனிதரும் விரும்புவர். பறவைகள், விலங்குகள் போல மனித வாழ்வில் உறவுகள் எளிமையானது, நடைமுறையில் பல சிக்கல்கள் உள்ளன. ஒருகாலத்தில் ஆண்கள் வேலைக்கு சென்று பொருள் ஈட்டுவதும் பெண்கள் வீட்டினை நிர்வாகிப்பதும் என தங்களுக்குள் வேலையை பிரித்துக் கொண்டனர். பிரித்துக் கொண்டனர் என்பதைவிட பெண்கள்மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது என்று சொல்லலாம்.

    ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு’ என்று சமூகம் கேட்டது. ஆக அத்தகைய சூழலில், பெண்கள் வாய்மூடி மவுனியாக அடிமைவாழ்வு வாழ்ந்ததால் எத்தகைய பூசலுமின்றி குடும்ப வாழ்க்கை அமைதியாக செல்வதுபோல காட்சியளித்தது. ஆனால், இன்று காலம் மாறிவிட்டது. பெண்கள் படிப்பில் வெகுதூரம் முன்னேறி விட்டார்கள். அவர்கள் தொடாத துறை இல்லையென்று சொல்லக் கூடிய வகையில், விண்வெளிக்குச் செல்வதாகட்டும், விமானம் ஓட்டுவதாகட்டும், மிகப்பெரிய கார்பரேட் கம்பெனிகளை நிர்வாகிப்பதாகட்டும் ஆண்களுக்கு எந்தவகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்று நிருபித்து வருகிறார்கள்.



    அதுமட்டுமின்றி, தாரளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் நமது தேவைகளையும் விருப்பங்களையும் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு தலைமுறையாக ஆணும் பெண்ணும் பொருளட்ட வேலைக்கு செல்வது அத்தியாவசியமாகிவிட்டது. குடும்பத்தை சீராகவும் சிறப்பாகவும் நடத்திட கூடுதல் வருவாய் பெருமளவில் உதவுகிறது. குழந்தைகளுக்கு நல்ல கல்வி வழங்கவும் ஏதுவாகிறது.

    இப்பொழுது சிக்கல் எங்குத் தொடங்குகிறது என்றால், ஆணும் பெண்ணும் வேலைக்கு செல்லும்போது வீட்டு வேலைகளை யார் செய்வது என்பது கேள்வி. பெரும்பான்மையான ஆண்களைப் பொறுத்தவரை பெண்கள்தான் முழுமையான பொறுப்பு என்னும் மோசமான மனநிலையில் இன்னும் உள்ளனர். பெண்களும், அலுவலகத்தில் வேலை செய்வதுடன் வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் தாங்கள் தான் செய்யவேண்டும் என்கிற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். பனிச்சுமைகள் காரணமாக மன அழுத்தங்கள் கூடும்போது இல்லறத்தில் பிணக்குகள் ஏற்படுகின்றன. மனவிலக்குகளுக்கு அடித்தளமிடுகின்றன.

    குழந்தையாக இருக்கும்போதே, இருபாலருக்கும் ஒருவரையொருவர் சமமாக நடத்தவும், சார்ந்து வாழ்தலின் மகத்துவத்தையும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு சொல்லித்தரவேண்டும். ஆண் குழந்தையென்றால் வீரத்திற்கு அடையாளமாகவும், ஆதிக்க சக்தியாகவும், பெண்ணென்றால் பணிந்து போகவும், அடிமையாகவும் சித்தரிப்பதை குழந்தையாக இருக்கும்போதே தவிர்க்கப்பட வேண்டும். பெண் என்பவரும் சக மனிதர், சுயமாக சிந்திப்பதற்கும் தனது விருப்பம்போல வாழ்க்கை அமைத்துக்கொள்ள அவருக்கும் உரிமையுள்ளது என்பதை வளரும் பருவத்திலேயே ஆண் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.

    வீட்டு வேலைகள், குழந்தைகள் வளர்ப்பது, சமையல், வீட்டை சுத்தப்படுத்துவது, குடும்பத்தை பாராமரிப்பது, என்பவை ஆண் பெண் இருவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். அவரவர் நேர வசதிக்கு தகுந்தாற்போல மாறிமாறி செய்ய வேண்டும். இப்படி செய்யும்போது தம்பதியினரிடம் பிணக்குகள் குறைந்து இல்லறம் மகிழ்ச்சியுறும். ஊடலில் தோற்றவரே வென்றார் என்று வள்ளுவர் கூறி இருக்கிறார். விட்டுக்கொடுப்பவர் என்றும் கெட்டுப்போனதில்லை. வாழ்க்கை துணையிடம் வெற்றி தோல்வியை எதிர்பார்க்கலாமா? அரவணைத்து, அனுசரித்து செல்வதில் தானே தலைமுறைக்கும், இன்பம் கூடும். நமக்கும் மகிழ்ச்சி அளிக்கும். குடும்ப வெற்றிக்கும்வழி வகுக்கும். இது குடும்பத்தாருக்கு முன்னோர் காட்டியவழி.

    ‘மனைவி’, ‘இல்லத்தரசி’ போன்ற சொற்கள் பெண்களை மேலோட்டமாக போற்றக்கூடிய வகைகளாகத் தோன்றினாலும் ஆழ்ந்து நோக்கினால், அவர்களை அடிமைப்படுத்தும் சொற்களே. வாழ்வில், இன்பத்திலும் துன்பத்திலும், ஏற்றத்திலும் இறக்கத்திலும் இணைந்து செயல்படும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் இணையர் ஆவார்கள். ‘இணையர்’ என்ற சொல்லே பொருத்தமானதாகும். வள்ளுவர் கூற்றின்படி, ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’. அறமென்பது ஆண்கள் சார்ந்தது அல்ல இருவருக்கும் பொதுவானது என்பதை உலகத் தம்பதியினர் நாளான இன்று நினைவில் நிறுத்தி, நமது இல்லறத்தை இன்பமாய் பேணுவோம்.

    முனைவர் த சிவக்குமார், கல்வியாளர்
    ×