search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105618"

    தனிநபர் கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், பின்வரும் விஷயங்களைப் படித்துவிட்டு முடிவெடுங்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கழுத்தை நெரிக்கும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க, ‘பெர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடனை நாடுவது பலரின் வழக்கம். உங்களுக்கும்கூட அந்த எண்ணம் இருக்கலாம். தனிநபர் கடன் பெறத் தயாராகிக்கொண்டிருக்கலாம். ஆனால்... அதற்கு முன் ஒரு நிமிடம்!

    தனிநபர் கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், பின்வரும் விஷயங்களைப் படித்துவிட்டு முடிவெடுங்கள்.

    * கடன் கேட்டு வங்கிப் படியேறுவதற்கு முன்பாக உங்கள் பொருளாதாரத் தகுதியை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். வங்கி நிபந்தனைகளின்படி நம்மால் முறையாக கடனை திரும்பச் செலுத்தமுடியுமா என்று பாருங்கள். அதற்காக, இலவசமாகக் கிடைக்கும் கடன் அறிக்கையை வாங்கிப் படித்து அறிந்துகொள்ளுங்கள்.

    * கடனை திருப்பிச் செலுத்தும் தகுதி இல்லாதவரையோ, சரியான வருமானம் இன்றி இருப்பவரையோ வங்கிகள் வரவேற்பது இல்லை. கடன் பெறுவதற்கான நமது தகுதியான ‘கிரெடிட் ஸ்கோர்’, அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். இந்த ஸ்கோர் திருப்திகரமாக இல்லாதபோது, கடன் மறுக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

    * வட்டி விகிதமும், கால அளவும் உத்தரவாதமுள்ள வீட்டுக்கடன் உள்ளிட்டவை போன்று தனிநபர் கடன்களை வங்கிகள் கருதுவது கிடையாது. இதனை ஒரு பாதுகாப்பற்ற கடனாகவே வங்கிகள் வைத்திருக்கின்றன. வங்கிக் கடன் புள்ளி விவரங்கள்படி தனிநபர் கடன்கள்தான் அதிக வாராக்கடன்களாக உயர்ந்துள்ளன. எனவே இக்கடனுக்கு 11 முதல் 16 சதவீதம் வரை வட்டி நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.

    * நீண்ட கால கடனா, குறுகிய காலக் கடனா என்பது உங்கள் தவணைத் தொகையைத் தீர்மானிக்கும் முக்கியக்காரணியாக உள்ளது. நல்ல கிரெடிட் ஸ்கோர், குறைந்த வட்டியை பெற்றுத் தரும்.

    * கடன் தொகையைப் பொறுத்து வங்கிகள் விதிக்கும் கட்டணங்கள் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணங்களையும், ஒருமுறையும், அதற்கு மேலும் விதிக்கக்கூடிய கட்டணங்களையும் கடன் வாங்குவதற்கு முன்பு கட்டாயம் நீங்கள் கவனித்தாக வேண்டும். இல்லையென்றால் கடன்தொகையில் ஒரு சிறு தொகையை நீங்கள் இழக்க வேண்டி வரும்.

    * தவணைக்காலம் தவறித் தாமதமாகப் பணம் கட்டுபவர்கள், அபராதம் செலுத்த நேரிடலாம். அது ஏற்கனவே நமக்கு உள்ள பண நெருக்கடியை மேலும் கூடுதலாக்கும். நம் வங்கிக் கணக்கில் மாதாந்திர தவணைத் தொகையை தானாக பிடித்தம் செய்கிற மாதிரி அமைத்துக்கொள்ளலாம். தவணை நாளில் நம் வங்கிக் கணக்கில் போதுமான தொகை இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்வதும் முக்கியம்.

    இவையெல்லாம் தாண்டி, அவசரத் தேவைக்காகத் தனிநபர் கடனை பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் இருக்கிறீர்களா? வங்கி அதிகாரியை அணுகி முறையாக அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள். கடன் பெற்றபின், தவணை தவறாமல் பணத்தைத் திரும்பச் செலுத்துவதில் உறுதியாக இருங்கள். தப்பித்துவிடலாம்!
    வீடு, மனை உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற சொத்துக்கள் வாங்கும்போது பொதுவாக கடைப்பிடிக்க வேண்டிய சட்ட ரீதியான நடைமுறைகள் பற்றி பார்க்கலாம்.
    நகர்ப்புறங்களில் வீடு, மனை உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற சொத்துக்கள் வாங்கும்போது பொதுவாக கடைப்பிடிக்க வேண்டிய சட்ட ரீதியான பல்வேறு நடைமுறைகள் பற்றி ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் விரிவாக குறிப்பிட்டுள்ளார்கள். அந்த நிலையில் தற்போதைய காலகட்டத்தில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் குறித்த சில தகவல்களை இங்கே காணலாம்.

    1. குறிப்பிட்ட தனி நபர் அல்லது ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை கருத்தில் கொண்டாலும், சொத்து வாங்கும்போது அதற்கான மூலப்பத்திரங்கள் அவசியமானது. ஆனால், அதற்கு பதிலாக பத்திரப் பதிவு அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட நகல் பத்திரம் அளிக்கப்படுவதன் பின்னணியில். குறிப்பிட்ட நிலம் அல்லது வீட்டை வங்கியில் அடமானமாக வைத்து கடன் வாங்கி, அதற்கு ஈடாக மூலப்பத்திரம் தரப்பட்டிருக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது, கடன் பெற்று சில வருடங்கள் கழித்து மூலப்பத்திரம் தொலைந்துவிட்டது என்பதன் அடிப்படையில் பத்திரப்பதிவு அலுவலகத்திலிருந்து வாங்கப்பட்ட நகல் பத்திரத்தைக் காட்டியும் சொத்து விற்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது.

    2. ‘டபுள் டாக்குமெண்டு’ உள்ளிட்ட போலி ஆவணங்கள் மூலம் ஏமாற்ற முயற்சிப்பவர்களும் உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், ஆவணங்களில் இருக்கும் ஒரு சில குளறுபடிகள் காரணமாகவும் வில்லங்கம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது, மூலப்பத்திரத்தில் சர்வே எண் ஆங்கிலத்திலும், பத்திரத்தில் தமிழிலும் குறிப்பிடப்பட்டிருக்கலாம். அதாவது, சர்வே எண் 4-எ என்று தமிழிலும், 4-கி என்று ஆங்கிலத்திலும் இருப்பது சிக்கல்களை உண்டாக்கும்.

    3. குறிப்பிட்ட இடம் அல்லது மனையை சுற்றிலும் நான்கு எல்லைகளில் உள்ள சர்வே எண்கள் வேறொன்றாகவும், மனையின் சர்வே எண் வேறொன்றாகவும் குறிப்பிட்டு விற்பனை செய்யப்பட்ட சம்பவங்களும் உள்ளன.



    4. அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கிறது மேலும், மறு விற்பனை என்ற முறையில் ரீசேல் செய்யப்பட்டு கைமாறும் இடமாக இருப்பதால், தாராளமாக வாங்கலாம் என்று நம்பிக்கைக்குரிய விதத்தில் சொத்து பற்றிய சட்ட அடிப்படை அறியாமல் பலரும் ஆலோசனை கூறியதன் அடிப்படையில் மனை அல்லது வீடு வாங்கி சிக்கலுக்கு உள்ளானதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

    5. புதிய மனைப்பிரிவு அல்லது மறு விற்பனையில் வரும் இடம் அல்லது மனையை வாங்க முடிவு செய்யும் பட்சத்தில் முதலில் சம்பந்தப்பட்ட நபர் அல்லது நிறுவனத்தின் தன்மை, இதற்கு முன்பு அவர்கள் மேற்கொண்ட வீட்டுமனை திட்டங்கள், பயன் பெற்றவர்கள், மற்ற நிறுவனத்திற்கும் அவர்களுக்கும் உள்ள விலையின் வித்தியாசம் போன்ற விஷயங்களை உன்னிப்பாக கவனிக்கவேண்டும். மேலும், ஆவணங்களின் நம்பகத்தன்மை பற்றி வழக்கறிஞர் வழிகாட்டல், சம்பந்தப்பட்டவர்களை சந்திப்பது போன்றவற்றை கச்சிதமாக செய்யவேண்டும்.

    6. நிலத்தை மனையாக பிரித்து விற்பது உரிமையாளரா அல்லது நில உரிமையாளரிடமிருந்து அதிகாரம் பெற்றவரா என்பதை கவனிப்பதோடு, பவர் பத்திர உரிமை மூலம் மனை விற்பனை என்றால் அது பதிவு செய்யப்பட்டு நடைமுறையில் இருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட இடம் அல்லது மனைக்கு, முன்னதாக வேறு நபர்களுக்கு அதிகாரம் அளிகப்பட்டிருந்தால் அவை முறையாக ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். அத்துடன், பவர் தந்தவர் மற்றும் பவர் வாங்கியவர் ஆகியோர் தற்போது உயிருடன் இல்லையென்றால் பவருக்கான அதிகாரம் செல்லாது. பவர் வாங்கியவர் சார்பாக வேறொருவர் விற்பனை செய்ய முயலும்போது அதற்குரிய ஆவணங்கள், பதிவு செய்யப்பட்ட விவரங்கள் ஆகியவற்றை பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

    7. பவர் பத்திரத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் 2009-ல் நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்பு கொடுக்கப்பட்ட அதிகாரப் பத்திர விவரங்களை வில்லங்கச் சான்றிதழ் மூலமாகத் தெரிந்துகொள்ள முடியாது. மேலும், பதிவு செய்யப்படாத அடமானப் பத்திரமாக சொத்து கைமாற்றப்பட்டிருந்தாலும் வில்லங்கச் சான்றிதழில் அது வராது.

    8. வீடு அல்லது மனை சம்பந்தப்பட்ட சொத்து பரிமாற்றங்களுக்கு வில்லங்கச் சான்றிதழ் அதிகபட்சம் முப்பது வருடங்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டு விற்க முயற்சிக்கப்படும் நிலையில், மூலப்பத்திரம் பதிந்த ஆண்டிலிருந்து சம்பந்தப்பட்ட சொத்து குறித்த விவரங்களை அறிந்து கொள்ளவேண்டும். மேலும், மூலப்பத்திரம் பதிவு செய்யப்பட்ட அலுவலகம், நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் இரண்டு இடங்களிலும் சம்பந்தப்பட்ட இடம் குறித்த வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்து தெரிந்துகொள்வது முக்கியம்.

    9. பொதுவாக, கைகள் மூலம் எழுதப்பட்டு பதிந்த ஆவணங்களை கணினி வழியாக மாற்றம் செய்யும்போது அவற்றில் ஏதேனும் விவரங்கள் பிழையாக இருப்பது அல்லது விடுபட்டிருப்பது போன்ற விஷயங்களையும் கவனித்துக்கொள்ளவேண்டும்.
    குடும்பம் என்பது அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்து தங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தலும், அன்பு, பாசம், சோகம், துயரம் இவற்றை பங்குப்போட்டுக் கொள்ளுதலும், இணக்கமாக வாழுதலும் தான்.
    சமீபத்தில் ஒரு துணுக்கு படித்தேன். நீங்கள் கூட்டுக் குடும்பமா? அல்லது தனி குடித்தனமா? என்ற கேள்விக்கு ஒரு கணவர் கூறும் பதில் ‘கூட்டு குடும்பம்தான்! நான், எனது மனைவி மற்றும் என் குழந்தையுடன் கூட்டாக வசிக்கிறோம்’ என்று வேடிக்கையாக சொல்கிறார்.

    இது சிரிப்புக்காக என்றாலும் நாம் கூட்டுக் குடும்பமாக வாழ்வதையே மறந்து விட்டோம் என்பதை நினைக்கும்போது நெஞ்சம் சற்று கனக்கத்தான் செய்கிறது.

    சமீபகாலங்களில் மணவிலக்குகள் அதிகரித்துள்ளன. குடும்பநல நீதிமன்றங்களில் வழக்குகள் குவிகின்றன. மனம் பொருந்தாதவர்கள் நித்தம் நித்தம் சித்ரவதை அடைவதைவிட பிரிந்துச் செல்வது சிறந்தது. அது அவர்களது உரிமை. ஆனால், 90 சதவீதத்தினர் மிக அற்பக் காரியங்களுக்காக பிரிய முயல்வது வருத்தத்தை அளிக்கிறது.

    தனது பெற்றோர் வீட்டுக்கு போவதா அல்லது சினிமாவுக்கு செல்வதா என்கிற பிரச்சினையின் தொடர்ச்சி சண்டையில் முடிந்து கணவனும் மனைவியும் விலக்குக் கேட்க நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக வழக்கறிஞர் நண்பர் ஒருவர் கூறினார்.

    இந்த கூட்டுக் குடும்ப வாழ்வினைத் துறந்ததால் நாம் தொலைத்தது அன்பு, பாசம், அரவணைப்பு, அறிவுரைகள், வழிக்காட்டுதல் இன்னும் ஏராளம் உண்டு. இதில் பெருநஷ்டம் அடைந்தது குழந்தைகள்.

    நண்பர் ஒருவரின் மகன், மகள் இருவரும் 90-களில் அமெரிக்கா சென்றவர்கள். நண்பரும் அவரது மனைவியும் சென்னையில் வாழ்கின்றனர். மக்களுக்கு திருமணமாகி பேரக் குழந்தைகள் என்று குடும்பம் பெருகினாலும், இங்கு சென்னையில் தாத்தாவும் பாட்டியும் தனிமையில் வாழ்கின்றனர்.

    சில காலங்கள் முன்புவரை இவர்கள் ஒரு ஆண்டு செல்வார்கள், பிறகு அவர்கள் வருவார்கள். காலம் செல்லசெல்ல அவர்கள் வருவதும் குறைந்தது. இவர்கள் செல்வதற்கும் உடல் ஒத்துழைக்கவில்லை. பேரக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிட்டனர். தாத்தா பாட்டி அன்பு என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்துவிட்டார்கள்.

    இவர்களுக்கு எல்லாம் இருந்தும் ஒன்றுமே இல்லாத மனநிலை. ஒருவேளை அன்றைக்கு தம்மக்களை அமெரிக்கா செல்லவேண்டும் என்று கட்டாயப்படுத்தி தங்கள் விருப்பத்தை அவர்கள் மீது திணித்தது தவறோ என்று அவர்களை நினைக்க வைத்தது.



    இங்கு இந்தியாவிலேயே வாழ்பவர்கள் நிலை மட்டும் போற்றத்தக்க வகையில் உள்ளதா? என்றால், அதுவும் இல்லை.

    பெரியப்பா பிள்ளைகள், சித்தப்பா பிள்ளைகள், அத்தை மகள், மாமன் மகன் என்று உற்றார், உறவினரோடு விளையாடி மகிழ்ந்த காலம் போய், இன்று பெற்றவர்கள் முகத்தை மட்டும், அதுவும் அரிதாக, பார்த்து வளரும் குழந்தைகளை தான் அதிகம் பார்க்கின்றோம். இதில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் சூழ்நிலை அமைந்தால், குழந்தைகள் ‘திரைக்கடலில்’ மூழ்கி விடுகிறார்கள். அது தொலைக்காட்சி திரையாகவும் இருக்கலாம் அல்லது கைபேசிகளின் திரையாகவும் இருக்கலாம்.

    சமீபத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆராய்ச்சி முடிவுப்படி புத்தகங்கள் படிப்பதின் மூலமாகவும், கதைகள் கேட்டு வளர்வதின் மூலமாகவும் ஒரு குழந்தைக்கு கிடைக்கும் அறிவுத்திறன் தொலைக்காட்சி, வலைக்காட்சி இவைகளைப் பார்ப்பதின் மூலம் கிடைப்பதில்லை என்பதே.

    பாட்டி வடை சுட்ட கதை, தொப்பிக்காரன் குரங்குகளிடம் தொப்பி தொலைத்தக் கதை, ராஜா-ராணி கதைகள், தெனாலிராமன் கதைகள் என்று நாம் நமது தாத்தா பாட்டிகளிடம் கற்ற கதைகளை நமது அடுத்த தலைமுறைக்கு சொல்லத் தவறிவிட்டோமா? என்கிற தவிப்பு உள்ளது.

    கதை மூலம் கற்பிப்பது குழந்தைகளின் மனதில் ஆழமாக பதியும். அவர்களது கற்பனைத் திறனை விரிவடையச் செய்யும். மூளைக்கு சிறந்த பயிற்சியாக அமையும். அது மட்டுமின்றி கதைகள் வாயிலாக நன்னெறியையும், தன்னம்பிக்கையும் ஊட்ட முடியும். இன்று பாடங்களில் முதல் மதிப்பெண் வாங்குபவர்கள் கூட ஒரு சிறு தோல்வி வந்தால் துவண்டு விடுகிறார்கள். மனமுடைந்து தற்கொலை வரை செல்வதற்கு காரணம் தன்னம்பிக்கை குறைவதும், எதிர்மறையான எண்ணங்கள் எழுவதும்தான். தத்தம் உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள உறவுகள் அருகாமையில் இல்லாமால் போவதும் முக்கியக்காரணம்.

    தாத்தா பாட்டிகள் கதை மட்டும் சொல்பவர்கள் அல்ல. நமது பண்பாடு, நாகரிகம், அடையாளம் மற்றும் உயர்ந்த எண்ணங்கள் என்று எல்லாவற்றையும் கற்றுத் தருபவர்கள். அதுவும் உணர்வுடன் கற்றுத்தருபவர்கள். தங்கள் பேரன், பேத்திகளுக்கு கதைகள் சொல்வதின் மூலமாக பெரும் மகிழ்ச்சியும், சாதனை உணர்வும் தாத்தா பாட்டிகளுக்கு கிடைக்கும்.

    குடும்பம் என்பது கணவன், மனைவி குழுந்தைகள் கொண்ட வெறும் தொகுப்பு அல்ல. அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்து தங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தலும், அன்பு, பாசம், சோகம், துயரம் இவற்றை பங்குப்போட்டுக் கொள்ளுதலும், இணக்கமாக வாழுதலும் தான்.

    இன்றைய பொருள் தேடும் உலகில் பெற்றோருக்கும் நேரமின்மை; அதிக மதிப்பெண்கள் தேடி குழந்தைகளும் ஓட்டத்துக்கு இடையில் குடும்ப உறவை பலப்படுத்த ஒரே வழி இருக்கிறது. ஒவ்வொரு நாளும், அரைமணி நேரம் ஒதுக்கி, அன்றைக்கு நடந்த செய்திகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளையாவது அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடவேண்டும்.

    ஒவ்வொருவரும் தங்கள் நேரத்தை தொழில், குடும்பம், சமூகம், தனக்கு என்று பகுத்து திட்டமிட்டு பயன்படுத்தினால் குடும்பம் ஏற்றம் பெறும், நாடு செழிக்கும், மனிதகுலம் தழைக்கும். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகமா கட்டும்.

    இன்று (மே 15-ந்தேதி) உலக குடும்ப தினம்.

    கமலேஷ் சுப்பிரமணியன், எழுத்தாளர்
    ×